jaga flash news

Friday 30 July 2021

புத்தகம் வாசித்தவன்

#ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது,
ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் #மகாத்மா...

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் #ஜவஹர்லால் நேரு...

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் #பெட்ரண்ட்_ரஸல்...

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் #ஆல்பர்ட்_ஐன்ஸ்டீன்...

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் #நெல்சன்_மண்டேலா...

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி #லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்...

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் #சார்லிசாப்லின்..

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் #வின்ஸ்டன்_சர்ச்சில்...

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் #மார்டின்_லூதர்கிங்...

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் #பகத்சிங்...

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
#ஆபிரகாம்_லிங்கன்...

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி
– #ஜூலியஸ்_சீசர்...

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– #டெஸ்கார்டஸ்...

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– #இங்கர்சால்...

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– #பிரான்சிஸ்_பேக்கன்...

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– #லெனின்...

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– #ஆஸ்கார்_வைல்ட்...

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– #சிக்மண்ட்_ஃப்ராய்ட்...

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– #மாசேதுங்...

வாசிக்கும் பழக்கம் ஓர் #மனிதனை முழு மனிதனாக மாற்றிவிடும்...

உலகில் வாழ்ந்து மறைந்த #மாமனிதர்கள் பலரும் நூல்கள் வழியாகத் தான் வாழ்வின் #வெளிச்சத்தை நோக்கி பயணித்தனர்...

#புத்தகம் மடையனை #மனிதனாக்கும்
இதை நான் கூறுவது அனுபவத்தில்
உண்மையும் தான் ~

1 comment:

  1. அய்யா..வெ.சாமி அவர்களே.. ! மிக மிக உண்மை. ஆனாலும் ரசிக்கிறேன். சிந்திக்கிறேன். கேட்க விரும்புகிறேன்..தாங்களும் ஒரு புத்தகப் புளுவோ என..?

    ReplyDelete