jaga flash news

Monday 13 September 2021

உங்களுக்கு குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கா..?

உண்மையில் சிறுநீர் என்பது ஆரோக்கியமானது என்கிறனர் ஆய்வாளர்கள். அதாவது நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் உள்ளன. இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே உள்ளது.
 குளிக்கும் போது சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டு. அவ்வாறு செய்வது உண்மையில் நல்ல விஷயம் என்கிறார்கள் மருத்துவர்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும்.. எப்படி..?
1/ 7
குளிக்கும் போது சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டு. அவ்வாறு செய்வது உண்மையில் நல்ல விஷயம் என்கிறார்கள் மருத்துவர்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும்.. எப்படி..?

 உண்மையில் சிறுநீர் என்பது ஆரோக்கியமானது என்கிறனர் ஆய்வாளர்கள். அதாவது நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் உள்ளன. இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே உள்ளது. எனவே உடலில் படும்படி சிறுநீர் கழிப்பதால் எந்த தொற்றும் ஏற்படாது.
2/ 7
உண்மையில் சிறுநீர் என்பது ஆரோக்கியமானது என்கிறனர் ஆய்வாளர்கள். அதாவது நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் உள்ளன. இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே உள்ளது. எனவே உடலில் படும்படி சிறுநீர் கழிப்பதால் எந்த தொற்றும் ஏற்படாது.

 அதேசமயம் சிறுநீர் சருமத்திற்கும் நல்லது. அதாவது சருமப் பாதுகாப்பிற்காக காஸ்மெடிக்ஸ் பொருட்களிலும் யூரியா சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே இயற்கையான சிறுநீரில் இது இருப்பது மிகவும் நல்லது. சிலர் சரும அழகுக்கு சிறுநீரை குடிப்பதும் நிகழ்கிறது.
3/ 7
அதேசமயம் சிறுநீர் சருமத்திற்கும் நல்லது. அதாவது சருமப் பாதுகாப்பிற்காக காஸ்மெடிக்ஸ் பொருட்களிலும் யூரியா சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே இயற்கையான சிறுநீரில் இது இருப்பது மிகவும் நல்லது. சிலர் சரும அழகுக்கு சிறுநீரை குடிப்பதும் நிகழ்கிறது.

 அத்லெட்டுகளும் தங்கள் பாதங்களில் உள்ள பூஞ்சைகளை அகற்ற யூரின் தெரப்பி என்ற முறையில் சிறுநீரில் பாதங்களை முக்கி சுத்தம் செய்கின்றனர். ஆனால் இதற்கு எந்தவித ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை.
4/ 7
அத்லெட்டுகளும் தங்கள் பாதங்களில் உள்ள பூஞ்சைகளை அகற்ற யூரின் தெரப்பி என்ற முறையில் சிறுநீரில் பாதங்களை முக்கி சுத்தம் செய்கின்றனர். ஆனால் இதற்கு எந்தவித ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை.

 சுற்றுசூழல்படி பார்க்கும் போது, குளிக்கும்போதே சிறுநீர் கழிப்பதால் தண்ணீர் மிச்சமாகிறது. அதைக் கழுவ ஃபிளஷ் செய்ய கூடுதல் நீரும் தேவைப்படாது. உலக நாடுகளில் தண்ணீர் தட்டுப்பாட்டின் போது இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துவார்கள்.
5/ 7
சுற்றுசூழல்படி பார்க்கும் போது, குளிக்கும்போதே சிறுநீர் கழிப்பதால் தண்ணீர் மிச்சமாகிறது. அதைக் கழுவ ஃபிளஷ் செய்ய கூடுதல் நீரும் தேவைப்படாது. உலக நாடுகளில் தண்ணீர் தட்டுப்பாட்டின் போது இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துவார்கள்.

 எனவே குளிக்கும்போது சிறுநீர் மட்டுமல்ல உடல் வெளியிடும் மற்ற திரவங்களான வியர்வை, சளி, மாதவிடாய் இரத்தம் ஏன் மலம் கூட கழிக்கலாம் என்கிறது ஹெல்த் லைன் இதழ்.
6/ 7
எனவே குளிக்கும்போது சிறுநீர் மட்டுமல்ல உடல் வெளியிடும் மற்ற திரவங்களான வியர்வை, சளி, மாதவிடாய் இரத்தம் ஏன் மலம் கூட கழிக்கலாம் என்கிறது ஹெல்த் லைன் இதழ்.

 இதில் முக்கிய விஷயம் அவற்றை செய்யும்போது மற்றவர்களும் அந்த பாத்ரூமை பயன்படுத்துகிறார்கள் எனில் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். எனவே இனி குளித்துக் கொண்டிருக்கும்போது சிறுநீர் வந்தால் தயங்காமல் கழிக்கலாம்.
7/ 7
இதில் முக்கிய விஷயம் அவற்றை செய்யும்போது மற்றவர்களும் அந்த பாத்ரூமை பயன்படுத்துகிறார்கள் எனில் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். எனவே இனி குளித்துக் கொண்டிருக்கும்போது சிறுநீர் வந்தால் தயங்காமல் கழிக்கலாம்.




3 comments:

  1. அய்யா..வெ.சாமி அவர்களே..! சிறுநீர் என்றதும்... ஒரு மருத்துவம் சொல்கிறேன்...

    உடம்பு இளைக்க & தலை முடி கருக்க ...!


    அளக நல்நுதலாய் ஓர் அதிசயம்
    களவு காயம் கலந்த இந்நீரில்
    மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
    இளகும் மேனி இருளும் கபாலமே.

    விளக்கம் :

    அழகிய கூந்தலும், ஒளி பொருந்திய நல்ல நெற்றியையும் உடைய பெண்ணே!
    உனக்கோர் வியக்கத் தக்க, ஆச்சரிய மான சேதியைச் சொல்லுகிறேன், கேட்டுக்கொள்.

    களவு காயட் கலந்த இந்நீரில் − உடலில் மறைவாக இருக்கும் இடத்தில் உள்ள இந்தச் "சிறுநீரோடு, மிளகு, நெல்லிக்காய், மஞ்சள்(கஸ்தூரி மஞ்சள்), வேப்பங் கொழுந்து அல்லது வேப்பம் பருப்பு, இவற்றை ஒன்றாகக் கலந்து, இடித்துப் பொடி செய்து, சேர்த்து உட்கொண்டால் ....

    இளகும் மேனி இருளும் கபாலமே − உடம்பு இளைக்கும், தலைமுடி கருக்கும் என்பதை அறிவாயாக.

    களவு − மறைந்திருத்தல்
    கயம் − உடம்பு
    இளகும் − இளைக்கும்

    அனைவரும் பயனடைய விரும்புகிறேன்.

    Siva Jansikannan

    ReplyDelete
  2. தலை முடி கருக்க ...!

    நூறு மிளகு நுகரும் சிவத்தின்நீர்
    மாறும் இதற்கு மருந்துஇல்லை மாந்தர்கள்
    தேறில் இதனைத் தெளிஉச்சி கப்பிடின்
    மாறும் இதற்கு மறுமயிர் ஆமே.

    விளக்கம் :

    சிவநீர் எனப்படும் இச்சிறுநீரை ... நூறு மிளகு அளவு உட்கொள்ள வேண்டும். இப்படி உட்கொண்டு வந்தால், உடலுக்கு நன்மை செய்யும். இதைப் போன்ற மருந்து வேறு எதுவும் இல்லை.

    மக்கள் இதன் சிறப்பை உணர்ந்து, இதைத் தலையிலே தேய்த்துக் கொண்டால், தலைமயிர் வெளுத்திருப் பது நிறம் மாறும். தலைமுடி கருமை நிறம் அடையப் பெறும்.

    நுகருதல் − முகத்தல். இங்கே பருகுதல்
    தேறில் − உணர்ந்தறிதல்
    கப்பிடின் − அப்புதல் (தலையில் தேய்த்தல்)

    நூறு மிளகு என்பது ... ஆரம்பத்தில் ..முதல்நாள் ... ஒரு மிளகு அளவு
    இரண்டாம் நாள் ... இரண்டு துளி அளவு
    மூன்றாம் நாள் ... மூன்று துளி அளவு என்று ... நூறு துளிகள் வரை கூட்டிக் கொண்டே போக வேண்டும்.

    Siva Jansikannan

    ReplyDelete
  3. நரை திரை இல்லை ..!

    கரை அருகே நின்ற கானல் உவரி
    வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
    நுரைதிரை நீக்கி நுகர வல்லார்க்கு
    நரைதிரை மாறும் நமனும் இங்கில்லையே.

    விளக்கம் :

    கரை அருகே நின்ற கானல் உவரி − உயிரணு ஊறும் கரைப்பக்கம் இருந்து வரும் சிறு நீர்த்தாரை…

    வரைவரை என்பர் மதியிலா மாந்தர் − இதை வெளியே வழிய விட்டுவிட வேண்டும் என்பவர்கள் … அறிவற்ற மூட மதியினர்.

    இந்தச் சிறுநீரை ….

    நுரை − நுரைத்து முதலில் வருவதையும் …

    திரை − தளர்ந்து முடிவில் வருவதையும் …
    விலக்கி விட்டு, இடையில் வருவதைப் பருகியிருப்பவர்களுக்கு …. முதுமையும், மூப்பும் மாற …. என்றும் இளமையோடு, எம பயம் இல்லாது இருக்கலாம்.

    வரைதல் − வெளியிடுதல்
    நரை − முதுமை
    திரை − மூப்பு
    நமன் − எமன்

    வாழ்க வளமுடன் ...!

    Siva Jansikannan

    ReplyDelete