jaga flash news

Wednesday 5 October 2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊர்கள் மற்றும் பெயர் கராரணகள்.

1)உக்கடம்= புக்கிடம்(பாலகாட்டு காணவாய்க்கு புகும் இடம்)
2) காரைமரம் நிறைந்த நீர் மடை காரமடை
கரடி இறங்கும் மடை கரடிமடை
அற்று வெள்ளத்தில் முதலை வந்தால் முதலைமடை
ஈட்டிமரம் நிறை மடை எட்டிமடை

3) கோவை கோட்டை இருந்த இடம் கோட்டை மேடு & கோட்டை ஈஸ்வரன் கோவில்
4) பாலகாட்டு கணவாய்க்கு மாற்றுவழி கணுவாய்
5) சின்ன நீர் தடாகம்+ பெரிய நீர
தடாகம் உள்ள ஊர் தடாகம்
6) அனுமனுக்கு வாவி தோண்டி சுப்பிரமணியர் கோவில் அனுவாவி சுப்பிரமணிய கோவில்
7) சிங்க பெருமாள் மற்றும் உலகளந்த பெருமாள் அக்ரகாரம் நிறைந்த ஊர் சிங்காநல்லூர்
8)வெள்ளம் நிறைந்த கிணறு உள்ள பகுதி வெள்ளகிணறு
9) பாலைமரம் நிறைந்த மலை பாலமலை
10) மருதமரம் நிறைந்த மலை மருதமலை
11) மதுரை போல் பழமையான விருத்தீஸ்வரர் அலயம் கொணடது வடமதுரை
12) வள்ளி மலை போல் வடக்கு வள்ளி தேவானை கோயில் உள்ள இடம் வடவள்ளி
13) சோழன் வல்லவன் கட்டிய குளம் வல்லன்குளம்
14) வடஇந்தியர் எழைகளுக்கு உணவு அளித்த இடம் லங்கர்கானா(இன்று பூமார்கெட்)
15) இடிந்த கரை கண்மாய்/ஓடை உள்ள ஊர் இடிகரை
16) வீரகேரளன் எனும் சேரமன்னன் எற்படுத்திய ஊர் வீரகேரளம்
17) குறுஞ்சி நிலத்து ஊர்+குளம் குறுச்சி& குறுச்சி குளம்
18)கரிகாலன்பட்டிஸ்வரர் பேரூர்
இப்போது பேரூர்
19) வெள்ளியங்கிரி ஆண்டவர் பூண்டி இப்போது பூண்டி
20) ஓன்பது (நவ) ஊர் + புதூர் நவாவூர்புதூர்
21)ஒக்கலிக மக்கள் வாழ்ந்த வழிபாடு நடத்திய பகுதி நஞ்சுடாபுரம், நஞ்சே கவுண்டர் பூதூர், காசி நஞ்சே கவுண்டர் பூதூர்
22) உடையான் பாளையம்
உடையார்மக்கள் வாழ்ந்த வழிபாடு நடத்திய பகுதி
23) கவுண்டர் உரித்தான பாளைய ஜமீன் கவன்டம்
மக்கள் வாழ்ந்த வழிபாடு நடத்திய
பகுதி
24) நாயகர்
பாளைய ஜமீன் நாக்கன்பாளயங்கள்
25) பாண்டிய மன்னர்கள் காலத்தில் வந்த ஊர் வீரபாண்டி, வீரபாண்டிபுதூர்
26) கிராமத்தே மணியத்துக்கு கொடுத்து பாளைய நிலம் மணியகாரபாளைய
27) வெட்டுவ / வெட்டைகார கடவுள்
மக்கள் வாழ்ந்த வழிபாடு நடத்திய
ஊர் வெட்டைகார பூதூர்
28) எல்லா மக்களும் உபயோகிக்க குளம் சர்கார் சாமகுளம், ஆக்கிரகாரத்து சாமகுளம்
29) தேக்கு மரம் நிறைந்த ஊர் தேக்கம் பட்டி
30) நெய்யல் ஆற்றின் ஆலமரம் துறை ஆலந்துறை
31) கல் நிறைந்த ஆற்றின் ஊர் கல்லார்
32)நெல்லிமரம் நிறைந்த பவானி நதியின் துறை நெல்லிதுறை
33) அத்திமரம் நிறை பவானி நதி கடவு அத்திகடவு
34) ஓடம் ஒதுங்கும் துறை ஒடான் துறை

No comments:

Post a Comment