jaga flash news

Wednesday 13 March 2024

Home Remedies That Will Help You Get Rid Of Jaundice



Home Remedies That Will Help You Get Rid Of Jaundice In Tamil
மஞ்சள் காமாலைனாலே பயமா இருக்குல்ல இந்த 7 உணவும் சாப்பிட்டா உங்கள ஆயுளுக்கும் நெருங்காது...
கல்லீரலில் பாதிப்பால்உண்டாகும் மஞ்சள் காமாலை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவில்லை என்றால் மிகக் கஷ்டம். அது கல்லீரலின் செயல்பாட்டையே காலி செய்துவிடும். இந்த மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் நோய்களில் இருந்து பாதுகொள்ள வேண்டுமென்றால் கீழே சொல்லப்டுகிற சில உணவுகளை உங்களுடைய அன்றாட உணவில் சேருங்கள்.

Samayam Tamil | 5 Dec 2019, 5:17 pm
    
கல்லீரலில் பாதிப்பால்உண்டாகும் மஞ்சள் காமாலை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவில்லை என்றால் மிகக் கஷ்டம். அது கல்லீரலின் செயல்பாட்டையே காலி செய்துவிடும். இந்த மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் நோய்களில் இருந்து பாதுகொள்ள வேண்டுமென்றால் கீழே சொல்லப்டுகிற சில உணவுகளை உங்களுடைய அன்றாட உணவில் சேருங்கள்.
Samayam Tamil
home remedies that will help you get rid of jaundice in tamil

மஞ்சள் காமாலைனாலே பயமா இருக்குல்ல இந்த 7 உணவும் சாப்பிட்டா உங்கள ஆயுளுக்கும் நெருங்காது...
பிடித்து கொள்ளுங்கள் சலுகைகளை தவறவிட்டுராதீங்க! பரந்த வகையிலான ஸ்மார்ட் டிவிகளில் சிறந்த விலைகளில் அனுபவிக்கவும்
செக் டீல்ஸ்
பிடித்து கொள்ளுங்கள் சலுகைகளை தவறவிட்டுராதீங்க! பரந்த வகையிலான ஸ்மார்ட் டிவிகளில் சிறந்த விலைகளில் அனுபவிக்கவும்
ஐபோன் 15 இலவசமா? போட்டியில் பங்கேற்க ஆர்வமா இருக்கா!
செக் டீல்ஸ்




​கல்லீரலும் மஞ்சள் காமாலையும்
​கல்லீரலும் மஞ்சள் காமாலையும்

மனித உடலில் உடலில் ஈரல் ஒரு பெரிய உறுப்பாகும். ஈரலின் செயல்பாடுகள் ஏராளம், ஈரல், பைல் மற்றும் கொலஸ்ட்ராலை உணவிலிருந்து தயார் செய்து நம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பிரித்து அனுப்புகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள ஃபேட் புரோட்டின் மற்றும் சர்க்கரை அளவு சீராக இருக்க விரல் பெரிதளவில் உதவி செய்கிறது. மேலும் ஈரல் உடம்பில் உள்ள அனைத்து கிருமிகளையும் நீக்கி சுத்தம் செய்யும் வேலையை மிகத் துரிதமாகச் செய்து வருகிறது.

ஆனால் ஈரலைத் தாக்கக் கூடிய பல வகையான நோய்கள் உள்ளது. குறிப்பாக ஃபைபிரசிஸ், ஹெபடைடிஸ் ஏ பி சி மற்றும் டி, மஞ்சள் காமாலை, மற்றும் ஈரல் வீக்கம். இது போன்ற கொடிய நோய்கள் ஈரலைத் தாக்கும் அபாயம் உள்ளது என நம் உடலுக்கு மிகவும் ஒரு முக்கிய உறுப்பாகும். அதைப் பாதுகாக்க மற்றும் மஞ்சள் காமாலை நோயிலிருந்து விடுபட ஒரு சில வீட்டு மருத்துவத்தை தற்போது பார்க்கலாம்.


​கரும்பு
​கரும்பு

நமது உடல் சீராக இயங்க கரும்பு பெரிய அளவில் உதவி செய்கிறது. மேலும் செரிமானம் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சினைகளையும் கரும்பு சரி செய்கிறது. தினமும் ஒரு கப் கரும்புச்சாறு அருந்துவது மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களை வேகமாகக் குணமடையச் செய்கிறது. கரும்பு சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் அது இயற்கைச் சர்க்கரை. அப்படியெல்லாம் பிடிக்காது. அப்படி உங்களுக்கு ஒருவேளை சந்தேகமிருந்தால் நீங்கள் கரும்புச்சாறெடுத்து அதில் சிறிது இஞ்சி சேர்த்தும் குடிக்கலாம்.


​தக்காளி சாறு
​தக்காளி சாறு

தக்காளியில் லைசோபீன் என்னும் காரணி இருக்கிறது. இவை ஈரலில் உண்டாகும் புண்களைச் சரி செய்கிறது மேலும் அண்ட விடாமலும் தடுக்கிறது. தினமும் ஒரு கப் தக்காளி சாற்றுடன் உப்பு மற்றும் மிளகு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை வேகமாகக் குறைந்து விடும். தக்காளியில் உள்ள அதிக அளவிலான ஆன்டி- ஆக்சிடண்ட்டுகள் கல்லீரல் நோயிலிருந்து உங்களை காப்பாற்றும்.


​முள்ளங்கி இலை
​முள்ளங்கி இலை

பலர் முள்ளங்கி இலையை அரைத்து சாறு எடுத்துக் குடித்து வருவது மஞ்சள் காமாலை நோயிலிருந்து விடுபடப் பெரிய காரணமாக அமையும் என்று கூறுகின்றனர். மேலும் முள்ளங்கி இலையில் உள்ள காரணி ஆனது பசியின்மை வயிற்றுப் பிரச்சனை போன்றவற்றிலிருந்து நிவாரணம் தருகிறது மேலும் உடலுக்கு மிகுந்த நன்மை தருகிறது. முள்ளங்கியுடன் சேர்த்து முள்ளங்கி இலைகளையும் சேர்த்து ஜூஸாக அரைத்துக் குடிக்கலாம்.


​எலுமிச்சை பழம்
​எலுமிச்சை பழம்

எலுமிச்சை பழத்தில் இயற்கையாகவே உள்ள காரணியானது மஞ்சள் காமாலையை விரட்டி அடிக்க பெரிதும் உதவுகிறது. இது நம் ஈரலில் படிந்திருக்கும் பைல் எனப்படும் கிருமியைப் போக்கப் பெரிதும் உதவுகிறது. மேலும் ஈரலில் உள்ள வெடிப்புகளைச் சரி செய்து சீராக இயங்க உதவுகிறது. எலுமிச்சை பழத்தில் உள்ள அதிக அளவிலான வைட்டமின் சி உடலுக்கு ஆற்றலைத் தருவதோடு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு கூட்டுகிறது.

​பப்பாளி இலை
பப்பாளி இலையை நன்றாக அரைத்து அதனுடன் சற்று தேன் சேர்த்து தினமும் இரண்டு வாரங்களுக்கு உண்டு வந்தால் ஈரல் பிரச்சினைகள் முற்றிலும் குறைந்து விடும் என்று கூறுகின்றனர் இது ஒரு சக்தி வாய்ந்த வீட்டு மருத்துவ முறையாகும். பப்பாளி இலையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றிய அருமை நமக்கு தெரிவதில்லை. ஆனால் அது மிகக் கொடூரமான நோயான டெங்குவையே சரிசெய்யக் கூடிய ஆற்றல் உண்டு. அதனால் பப்பாளி இலையை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

​கீரை
கீரை பொதுவாகவே அனைத்து வகையான வியாதிகளுக்கும் ஒரு தீர்வைத் தருகிறது. தினமும் நம் உணவில் கீரையைச் சேர்த்து வந்தால் ஈரல் சம்பந்தப்பட்ட நோய் முக்கியமாக மஞ்சள் காமாலை நோயிலிருந்து விடுதலை தருகிறது. கீரையில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது. தினமும் கீரையுடன் சிறிது கேரட் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு தினமும் மதிய உணவில் கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிடக் கொடுங்கள்.

​மோர்
மோரில் கொழுப்புச் சத்துக்கள் ஏதும் கிடையாது. மேலும் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. சிறிது மோரில் உப்பு மிளகு மற்றும் சீரகம் சேர்த்து மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு கப் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். மஞ்சள் காமாலைக்காக மட்டுமல்ல, தினமும் மோரை உங்களுடைய உணவில் சேர்த்து வந்தால் உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடையும்.

 

No comments:

Post a Comment