jaga flash news

Thursday 23 May 2024

கிராம்பு தூங்கும் போது தலையணை அடியில் இப்படி செய்தால் வீட்டில் பணம் கொட்டுமாம்!



கிராம்பு வாஸ்து: தூங்கும் போது தலையணை அடியில் இப்படி செய்தால் வீட்டில் பணம் கொட்டுமாம்!
கிராம்பு வாஸ்து: தூங்கும் போது தலையணை அடியில் இப்படி செய்தால் வீட்டில் பணம் கொட்டுமாம்!
Clove tips | வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கிராம்பு மூலம் வீட்டின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றால் நம்பமுடிகிறதா?


கிராம்பு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு சமையல் பொருளாகும். சமையலுக்கு மட்டுமின்றி நமது சில மருத்துவ பிரச்சனைகளுக்கும் அது தீர்வு கொடுக்கும். குறிப்பாக பல் எனாமல் பிரச்சனைகளுக்கு கிராம்பு ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இதே போன்று வாஸ்து சாஸ்திரங்கள் படியும் கிராம்பு சில பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

எதிர்மறை மற்றும் நேர்மறை ஆற்றலின் விளைவுகள் நம் வாழ்வில் உள்ளன. இருப்பினும், அதிகப்படியான எதிர்மறை ஆற்றல் அழிவைக் குறிக்கிறது. வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை நீக்க கிராம்புகளை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

வாஸ்து படி இரண்டு கிராம்புகளை மட்டும் தலையணைக்கு அடியில் வைத்திருந்தால் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் ஏற்ற வழி கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

இரவில் கெட்ட கனவுகள் வருகிறதா அதற்கும் கிராம்பு சிறந்த தீர்வாகும். கிராம்புகளை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் நல்ல பலன் கிடைக்கும். கனவு வராது, நல்ல தூக்கம் வரும் எனவும் நம்பப்படுகிறது.


மன அழுத்தம் காரணமாக தூங்க முடியாமல் தவித்தாலும், கிராம்பை தலையணைக்கு அடியில் வைத்து நல்ல பலன்களை பெறலாம். இதன் மூலம் வீட்டில் உள்ள பிரச்சனைகளும் நீங்கி, நிதி நிலை உயரும் எனவும் சொல்லப்படுகிறது.

கிராம்பு வாஸ்து: ஒரு சின்ன கிராம்பில் இவ்வளவு நன்மையா?
கிராம்பு வாஸ்து: ஒரு சின்ன கிராம்பில் இவ்வளவு நன்மையா?

1 comment: