jaga flash news

Monday 13 May 2024

குப்பை முதல் உணவு வரை.. வீட்டில் இந்த தவறுகளை செய்தால்.. தீராத பண கஷ்டம் வருமாம்.. வாஸ்து சொல்லும் விஷயங்கள் என்ன?


குப்பை முதல் உணவு வரை.. வீட்டில் இந்த தவறுகளை செய்தால்.. தீராத பண கஷ்டம் வருமாம்.. வாஸ்து சொல்லும் விஷயங்கள் என்ன?

வாஸ்து சாஸ்திரத்தின்படி வீடுகளில் இந்தெந்த தவறுகள் செய்தால் பண கஷ்டம் கடுமையாக இருக்கும் என்பதை வாஸ்து சாஸ்திர வல்லுநர்கள் கணித்து கூறியுள்ளனர். அதன்படி வீட்டில் என்னென்ன செய்யவேண்டும்? எதெல்லாம் செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.

vastu tips
1/6
வீட்டில் வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது மிகவும் முக்கியம். வீட்டுக்குள் என்னென்ன பொருட்கள் இருக்கவேண்டும் என்பது வரை வாஸ்து சாஸ்திரம் பார்த்தே செய்யவேண்டும், இல்லையென்றால் அதனால் வரும் பிரச்சனைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதன்படி வீட்டில் வாஸ்து சாஸ்திரத்தில் செய்யும் சின்ன சின்ன தவறுகள் பண சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். அந்தவகையில் வீட்டில், வாஸ்து சாஸ்திரத்தின்படி செய்யக்கூட சில தவறுகள் எவை எவை என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

vastu tips
2/6
காலி வாளிகள்: வீட்டின் குளியல் அறையில் காலி வாளிகள் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் அது வீட்டில் உள்ளவர்களிடையே எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தி பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுத்தும். இதனால் காலி வாளிகளாக வைக்காமல் அதனை தண்ணீர் நீரைப்பியோ அல்லது கவிழ்த்தி வைப்பது நல்லது.
vastu tips
3/6
வீடு சுத்தம்: வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வதில் மிகவும் கவனம் வேண்டும். கரணம், ஹிந்தி மத நம்பிக்கையின்படி தூய்மையான இடங்களில் லட்சுமி தேவி இருக்கிறார் என்பது நம்பிக்கை. லட்சுமி தேவி இருக்கும் இடத்தில் பண கஷ்டம் இருக்கவே இருக்காது. இதனால் வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்வது நல்லது.

vastu tips
4/6
உணவு பழக்கம்: படுக்கையறையில் படுத்துக்கொண்டே ஹாய்யாக உணவு சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கும். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின்படி பெட்டில் படுத்துக்கொண்டு உணவு சாப்பிடுவது வீட்டில் இருக்கும் லட்சுமி தேவியை கோவப்படுத்தும் என்பது நம்பிக்கை. இதனால் வீட்டில் பண கஷ்டம் மிகவும் கடுமையாக இருக்கும்.
vastu tips
5/6
குப்பை தொட்டி: குப்பை தொட்டிகளை எங்கே வைப்பது என்பது மிகவும் முக்கியம், பலரும் எங்கே வைப்பது என்பதை பற்றி ஐடியா இல்லாமல் கிடைத்த இடத்தில் வைத்துவிடுவார்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி குப்பை தொட்டிகளை வீட்டுக்கு வெளியிலே அல்லது விட்டு வாசலிலே வைக்கக்கூடாது. அப்படி செய்தல் அது வீட்டில் பண கஷ்டத்தை அதிகப்படுத்தும்.
vastu tips
6/6
பாத்திரம் கழுவுதல்: இரவில் சாப்பிட்டபின், பாத்திரங்களை அப்படி வைத்துவிட்டு மறுநாள் காலையில் பாத்திரம் கழுவுவது பலரின் பழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்னவென்றால் இரவு சாப்பிட்டபின், கையேடு பாத்திரங்களை கழுவு வைப்பது நல்லது. அவ்வாறு செய்யவில்லை என்றால் பண கஷ்டம் உங்களை பாடாய்படுத்தும்.
 

No comments:

Post a Comment