jaga flash news

Saturday, 8 March 2025

பங்குனி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்

இந்த பங்குனி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இந்த பங்குனி மாதம் முழுவதுமாக அமர்ந்திருக்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திடீர் வெளியூர் பயணங்கள் உண்டாகும். பிள்ளைகள் போக வேண்டும் என நினைத்த இடங்களுக்குச் சென்று வருவீர்கள். ராசிநாதனாகிய செவ்வாய் 11 ஆம் இடத்தில் அமருவதால் திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டாகும். விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.

செவ்வாய் சனி பகவானுடன் சேர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. மேஷ ராசிக்காரர்கள் அபிராமி அந்தாதி கேட்பது நல்ல பலன்களைத் தரும், 49, 50, 75 ஆவது பாட்டை படிப்பது நல்ல பலன்களைத் தரும். பிள்ளைகள் விஷயங்களில் கோபதாபம் இல்லாமல் நடந்துகொள்வது நல்லது. பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பது நல்லது. எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பதட்டங்கள் முழுமையாக குறையும்.

வழக்கு போன்ற விஷயங்களில் ஜெயிக்கும் யோகம் உண்டு. திடீர் யோகங்கள், அதிர்ஷ்டம் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் முதுகு தொடர்பான பிரச்சனைகள், சளி பிரச்சனைகள் ஏற்படும். உள்ளூர், வெளியூர், தொலைதூரப் பயணங்கள், குடும்பத்தில் நல்ல காரியங்கள், அனுகூலங்கள், சுப விரைய பிராப்தம், வீடு கட்டுவது போன்றவற்றை செய்வீர்கள்.

உத்தியோகத்தில் அற்புதமான ஏற்றத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் மேன்மையைக் காண்பீர்கள். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இதுவரை இருந்து வந்த அனைத்து பதட்டங்களில் இருந்தும் விடுதலை அடைவீர்கள். பெரிய மகான்களை சந்திப்பது, குருமார்களை சந்திப்பது, தெய்வ காரியத்தில் ஈடுபடுவது, தொழிலில் தள்ளிக் கொண்டு போன காரியங்ளை செய்து முடிப்பீர்கள்.

பங்குனி மாதம்

பங்குனி மாதம் பிறந்தாச்சு. மாதங்களில் அற்புதமான மாதமாக பங்குனி மாதம் குறிப்பிடப்படுகிறது. அதாவது, சூரிய பகவான் தனது குருநாதர், பிரகஸ்பதியாகிய, குருவாகிய மீனத்தில் வந்து அமர்ந்து இதுவரை தான் கற்ற பாடங்களை எல்லாம் தனது குருநாதரிடம் சொல்லி மதிப்பெண்கள் பெற்று தேர்விலே தேர்ச்சி அடையக்கூடிய மாதம் இந்த மாதம் பங்குனி மாதம்.



அதனால் தான், பரவலாக தேர்வு நடைபெறும் மாதமாக இயற்கையாகவே இந்த மாதம் இருக்கிறது. இதுவரை சம்பாதித்த சம்பாத்தியம், அதற்கான வருமான வரிகள், செலவுகள், சேமிப்பு என்ன என்று கணக்குப் பார்க்கும் மாதமாக இந்தப் பங்குனி மாதம் அமைந்திருக்கிறது. 12 ஆவது மாதமாகிய பங்குனி மாதத்தில் கடைசி நட்சத்திரமாக வரக்கூடிய பங்குனி உத்திரப் பெருவிழா இந்த சிறப்பு மாதத்தில் தான் கொண்டாடப்படும்.


விஷேசமான மாதமாகிய இந்த பங்குனி மாதத்தில்தான் ராமநவமி கொண்டாடப்படும். வழிபாட்டு மாதம், வைபவ மாதம், கல்யாண மாதம், தெய்வ திருமணங்கள் கூடிவரும் மாதம், தெய்வ மாதம் என்று அழைக்கப்படுகிறது பங்குனி மாதம். ராமர் சீதா தேவியை மணந்த மாதம், இலைகள் உதிர்ந்து பச்சை இலைகள் துளிர்க்கும் மாதம், ஸ்ரீ தேவேந்திரன் இந்திராணியை மணந்து கொண்ட மாதம், சந்திரன் 27 நட்சத்திரங்களை மணந்து கொண்ட மாதம், திருமாலின் திருமார்பில் ஸ்ரீ மகாலட்சுமி இடம்பிடித்த அற்புதமான மாதமாக இந்த பங்குனி மாதம் திகழ்கிறது.


Wednesday, 5 March 2025

செப்பு மோதிரம் ஆண்களுக்கு நல்லதா?

செப்பு மோதிரம் ஆண்களுக்கு நல்லதா?
செப்பு மோதிரங்கள் அவற்றின் வயதான எதிர்ப்பு விளைவுகளுக்கு நன்கு அறியப்பட்டவை, மேலும் அவை மக்களிடையே இன்னும் பிரபலமாகின்றன. தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலின் நச்சுத்தன்மையை அதிகரிக்காமல் தடுக்கிறது. தாமிரம் மீள் இழைகள் மற்றும் கொலாஜனின் அடர்த்தியை பலப்படுத்துகிறது, இது தோல், முடி மற்றும் குடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

பெரியோர்களின் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

*பெரியோர்களின் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?..* 
            ***************
     
*ஆசீர்வாதம் என்றால் என்ன?*

 *ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். அவர்களின் ஆசி கூடுதல் சிறப்பு என்று கூறுவார்கள்*.

*காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?*

*காலைத் தொட்டு வணங்குவதில் கலாச்சார அடிப்படையும் உண்டு, விஞ்ஞான அடிப்படையும் உண்டு*. 

*கலாச்சாரம் என்று பார்த்தால், மனிதர்கள் தம் மனதில் உள்ள மரியாதை உணர்வினை வெளிப்படுத்தும் முறை என்று சொல்லலாம்*. 

 *பெரியவர்கள், குறிப்பாக தாய், தந்தையரின் காலில் விழுவது எதற்கென்றால், நாம் இவ்வுலகில் பிறப்பதற்கே முழு மூலக்காரணமாக இருந்தவர்கள் அவர்கள் தான் என்பதற்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாதத்தை தொட்டு வணங்குகிறோம்*.

*பெரியோர்கள், வயதானவர்களின் காலில் விழுந்து ஆசி பெறும் போது நம்மிடம் சக்தி அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆசீர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி நமக்கு பெரும் பலத்தை கொடுக்கிறது*. 

 *நம் பாதங்களில் மிகவும் அதிகமான சக்தி ஓட்டம் நடக்கிறது என்று விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்து இருக்கிறார்கள். அதை பயன்படுத்தி கொள்வதற்காக உருவாக்கப்பட்டது தான் காலில் விழும் பழக்கம்.*

 *ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும் போது, அவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறுகிறோம் எனில், அவர்களின் சக்தி நமக்கும் கிடைக்கிறது. காலை தொடுதலின் மூலம் இந்த சக்தி பரிமாற்றம் நடக்கிறது*. 

 *மேலும் ஆசி வழங்கும் போது சொல்லும் வார்த்தைகளில் அதிக சக்தி இருக்கிறது. மனப்பூர்வமாக ஒருவர் ஆசி வழங்கும் போது அதன் சக்தி அளவிட முடியாதது. பல பாவங்களையும், தோஷங்களையும் கூட அது போக்குகிறது என்பது நம்பிக்கை.*

*ஷாஷ்டாங்க நமஸ்காரம்* :

*கோவிலுக்கு சென்றால் தரையில் விழுந்து கடவுளை சாஷ்டாங்க நமஸ்காரம் செய் என்று சொல்வார்கள். அது ஏன்? என்று நீங்கள் யோசித்தது உண்டா?*

 *கோவிலில் கடவுள், சக்தி ரூபமாக விளங்குகிறார். அங்கிருக்கும் சக்தியை பெற்று கொள்ளும் தன்மையானது அனைவரின் உடலுக்கும் இருப்பதில்லை. ஏனென்றால் நமது மனமும், உடலும், அறிவும் சரிவர ஒத்துழைக்காததே இதற்கு காரணம்*.

 *மனக்குழப்பத்தில் இருக்கும் போது தான் அதிகப்படியானோர் கோவிலுக்கு வருகின்றனர். அவ்வாறு மனம் குழப்பத்தில் இருக்கும் போது, மனமும், அறிவும் நேர்மறை ஆற்றலையும் சக்தியையும் பெறும் தன்மையை இழக்கிறது*.

 *அவ்வாறு, ஏற்கும் தன்மை இல்லாத பட்சத்தில் உங்கள் உடலுக்கும், கோவிலில் இருக்கும் சக்திக்கும் ஒரு தொடர்பை உருவாக்க வேண்டும். அதாவது, கோவிலின் தரையில் அமர வேண்டும் அல்லது உடல் தரையில் படும்படி ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்*.

 *ஆண்கள் என்றால் தங்கள் உடல் தரையில் படும்படியாக வணங்க வேண்டும்*. 

 *பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். அதாவது தலை, கைகள் இரண்டு, முழங்கால் இரண்டு என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாகும்*.

 *இவ்வாறு வணங்குவதன் மூலம் நமது உடல் வழியாக கோவிலில் இருக்கும் நேர்மறை ஆற்றலும், சக்தியும் நம் உடலுக்குள் சென்று விடும்*.

 *ஆசீர்வாதம் பெறுவது மட்டுமல்ல. ஆசீர்வாதம் செய்வதும் உங்களுக்கு சக்தியை கொடுக்கும். நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சொல்வதில் தான் விஷயம் இருக்கிறது*.

*என்ன சொல்லி வாழ்த்த வேண்டும்?*

 *நம்மிடம் ஒருவர் ஆசி கேட்கும் போது மனப்பூர்வமாக எந்தவொரு நல்ல சொல்லையும் கூறி வாழ்த்தலாம்*.

 *பெண்களுக்கு - (தீர்க்க சுமங்கலி பவ) தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தலாம்*.

*ஆண்களுக்கு - (தீர்க்காயுஷ்மான் பவ) நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் அல்லது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்தலாம்.*

 *மணமக்களுக்கு - பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தலாம்*.

*இப்படிப்பட்ட நல்ல வார்த்தைகளை கூறும் போதும், கேட்கும் போதும் சக்தி அதிகரித்து, நல்லதே நடக்கும். பெரியோர்களிடம் ஆசி பெற்றே மார்க்கண்டேயன், ஆஞ்சநேயர் போன்றோர் இன்னும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என ஆன்றோர்கள் கூறுகின்றனர்.*

Tuesday, 4 March 2025

அசுவினி நட்சத்திரம் வேண்டும் மற்றும் வேண்டாதது

அசுவினி நட்சத்திரம்
நெல்லி சாப்பிடலாம்
ரோஹினி,அஸ்தம்,பரணி,பூராடம்,இவர்களை அருகில் வைக்கலாம்,அனுஷம்,கேட்டை,திருவோணம் எதுவும் சொல்ல கூடாது,கத்திரி, அறுவா, சாவி,கரண்டி பயன் படுத்த கூடாது, கூடாது,தேங்காய்,இளநீர் குறைத்து விடவும்,கோட்டை என்ற ஊர் ஆகாது ,டீ ஆகாது,ஆடு தலை ஆகாது,திருப்பதி, மைசூர் கூடாது,பூலங்குழல்,மாம்பழம், கோலா புட்டு,கொழு கட்டை,கூடாது,கப்பல்,இரயில்,விமானம்,படகு,கூடாது,

அஞ்சனக்கல் சுர்மா கல்

பூமியில் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பொருட்களில் நிறைய சக்திகள் இருக்கின்றன. அதை அறிந்து சரியான முறையில் பயன்படுத்தினால் பல நன்மைகளை நாம் அடையலாம். அப்படிப்பட்ட பொருள்களில் ஒன்றுதான் அஞ்சனக்கல் ஆகும்.

அஞ்சனக்கல்லை பற்றி, ‘போகர் 12000’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்லை அக்காலத்திலேயே சித்தர்கள் பயன்படுத்தி பலனடைந்துள்ளனர். அஞ்சனக்கல்லை, ‘சுர்மா கல்’ என்றும் அழைப்பார்கள். இந்தக் கல் பஞ்சாப், ஆந்திரா, தென் தமிழகத்திலும் கிடைக்கிறது. இவை இலகுவாக உடையும் தன்மையை உடையது. ஆனால், தண்ணீரில் கரையாது.

இதை ஆறு வகைகளாகப் பிரிக்கலாம். அவை: சவ்வீராஞ்சனம், ரசாஞ்சானம், ஸ்ரோதாஞ்சனம், நீலாஞ்சனம், ரத்தாஞ்சானம், புஷ்பாஞ்சனம் ஆகியவையாகும். இதில் நீலாஞ்சனக்கல் சுலபமாகக் கிடைக்கக்கூடியது. மருத்துவத்தில் வெளிப்பூச்சுக்கு அதிகம் பயன்படுகிறது. ஜன்னி, மேகம், நாவறட்சி, இரத்த பாதிப்பு, கண் வலி போன்ற நோய்களை குணமாக்க இது பயன்படுத்தப்படுகிறது. அஞ்சனக்கல் புருவ மத்தியில் உள்ள மூன்றாவது கண் என்று சொல்லப்படும் ஆக்ஞா சக்கரத்தை திறப்பதற்கு வெகுவாகப் பயன்படுத்


இஸ்லாமியர்கள் இந்த சுர்மா கல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள். கண்களிலும், புருவத்திலும் ஆண்கள், பெண்கள் இருவருமே இதை பயன்படுத்துகிறார்கள். அழகுக்காக மட்டுமில்லாமல், இந்த அஞ்சனக்கல்லை பயன்படுத்துவது கண்களுக்கு குளிர்ச்சியை கொடுப்பதாகும். அதுமட்டுமின்றி, வசீகரத்தை ஏற்படுத்தக்கூடியது. இமைகளும், புருவங்களும் நீளமாக வளர்வது மட்டுமில்லாமல், கருமையாகவும் இருக்கும்.

தாரை என்றால் என்ன?தாரை வகைகள்

தாரை என்றால் என்ன?
உங்கள் நட்சத்திரமும் அதன் அதிபதி கிரகம்

1. அஸ்வினி – மகம் - மூலம் - கேதுவின் நட்சத்திரங்கள்

2. பரணி – பூரம் – பூராடம் - சுக்கிரன் நட்சத்திரங்கள்

3. கார்த்திகை – உத்திரம் - உத்திராடம் - சூரியன் நட்சத்திரங்கள்

4. ரோகிணி - அஸ்தம் - திருவோணம் - சந்திரன் நட்சத்திரங்கள்

5. மிருகசீரிடம் – சித்திரை - அவிட்டம் - செவ்வாய் நட்சத்திரங்கள்

6. திருவாதிரை – சுவாதி - சதயம் - ராகு நட்சத்திரங்கள்

7. புனர்பூசம் – விசாகம் - பூரட்டாதி - குரு நட்சத்திரங்கள்

8. பூசம் – அனுசம் - உத்திரட்டாதி - சனி நட்சத்திரங்கள்

9. ஆயில்யம் – கேட்டை - ரேவதி - புதன் நட்சத்திரங்கள்

இப்போது முற்றிலும் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றும் விதமான தகவல்களை அறிந்துகொள்ளப் போகிறீர்கள்.

இங்கே தாரை என்னும் விஷயத்தையும், உங்களுக்கு அனுசரணையான, ஆதரவான நட்சத்திரங்கள் எதுவென்றும் அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் பார்க்கலாம்.
தாரை என்றால் என்ன? தாரை என்றால் கொடுப்பது என்று பொருள்.

தாரைவார்த்து கொடுப்பது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதாவது தம்மிடம் இருப்பதை அப்படியே அள்ளிக்கொடுப்பது என்று பொருள்.

அது நன்மையோ அல்லது தீமையோ தயவுதாட்சண்யம் பார்க்காது அப்படியே வாரிக் கொடுத்துவிடும்.

ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில்இருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ண வரும் எண் 1,2,3,4,5,6,7,8, 9 வரை உள்ள எங்களுக்கு பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது , 9க்கு மேல் வந்தால் 9ல் வகுக்க வரும்மீதியை கொண்டு பலன்களை காண வேண்டும்.

என்னென்ன தாரைகள் உள்ளது

1 வது தாரை - ஜென்ம தாரை உங்கள் ஜென்ம நட்சத்திரம்

2 வது தாரை - சம்பத்து தாரை உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரம்

3 வது தாரை - விபத்து தாரை - மூன்றாவது நட்சத்திரம்

4 வது தாரை- ஷேம தாரை - நான்காவது நட்சத்திரம்

5 வது தாரை- பிரத்தியக்கு தாரை - 5 வது நட்சத்திரம்

6 வது தாரை - சாதக தாரை - 6 வது நட்சத்திரம்

7 வது தாரை- வதை தாரை -7 வது நட்சத்திரம்

8 வது தாரை- மைத்ர தாரை - 8 வது நட்சத்திரம்

9 வது தாரை- அதி மைத்ர தாரை - 9 வது நட்சத்திரம்.
இதை எப்படி அறிந்துகொள்வது?

உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து தாரை நட்சத்திரங்கள் எவை:

1. அஸ்வினி : இதற்கான சம்பத்து நட்சத்திரங்கள் பரணி, பூரம், பூராடம்.

2. பரணி : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் கார்த்திகை, உத்திரம்,உத்திராடம்.

3. கார்த்திகை : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் ரோகிணி, அஸ்தம், திருவோணம்.

4. ரோகிணி : இதன் சம்பத்து நட்சத்திரம் மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம்

5. மிருகசீரிடம் : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி,சதயம்

6. திருவாதிரை:இதன் சம்பத்து நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

7. புனர்பூசம் : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் பூசம், அனுசம்,உத்திரட்டாதி

8. பூசம் : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் ஆயில்யம்,கேட்டை,ரேவதி

9. ஆயில்யம் : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் மகம், மூலம்,அசுவினி

10. மகம் : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் பூரம்,பூராடம்,பரணி

11. பூரம் : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் உத்திரம், உத்திராடம்,கார்த்திகை

12. உத்திரம் : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் அஸ்தம்,திருவோணம்,ரோகிணி

13. அஸ்தம் : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் சித்திரை,அவிட்டம், மிருகசீரிடம்

14. சித்திரை : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் சுவாதி,சதயம்,திருவாதிரை

15. சுவாதி : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் விசாகம், பூரட்டாதி, புனர்பூசம்

16. விசாகம் : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் அனுசம்,உத்திரட்டாதி, பூசம்

17. அனுசம் : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் கேட்டை,ரேவதி,ஆயில்யம்

18. கேட்டை : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் மூலம், அசுவினி,மகம்

19. மூலம் : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் பூராடம்,பரணி,பூரம்

20. பூராடம் : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் உத்திராடம், கார்த்திகை, உத்திரம்

21. உத்திராடம்:இதன் சம்பத்து நட்சத்திரங்கள் திருவோணம்,ரோகிணி, அஸ்தம்

22. திருவோணம் : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை.

23. அவிட்டம் : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் சதயம்,திருவாதிரை,சுவாதி

24. சதயம் : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் பூரட்டாதி, புணர்பூசம், விசாகம்

25. பூரட்டாதி : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் உத்திரட்டாதி, பூசம், அனுசம்

26. உத்திரட்டாதி :இதன் சம்பத்து நட்சத்திரங்கள் ரேவதி,ஆயில்யம்,கேட்டை

27. ரேவதி : இதன் சம்பத்து நட்சத்திரங்கள் அசுவினி,மகம்,மூலம்
தாரை வகைகள்

இப்போது உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து நட்சத்திரங்களை அறிந்துகொண்டீர்கள் உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து நட்சத்திரங்கள் எந்த நாளில் இருக்கிறதோ.அந்த நாளே உங்களுக்கு உகந்த பொன்னாள். தொட்டதெல்லாம் துலங்கும் என்பார்களே. இந்த நாட்களில் நீங்கள் எடுக்கும் எந்தக் காரியமும் ஜெயத்தில்தான் முடியும். ஜெயத்தையே தந்தருளும்.

இதைப் பயன்படுத்தி வெற்றியை உங்கள் வசப்படுத்துங்கள்.

உங்கள் நட்சத்திரம் எதுவோ அதன் இணை நட்சத்திரங்களையும் உங்கள் நட்சத்திரமாக கருதவேண்டும்.

1. ஜென்ம தாரை – மனக்குழப்பம் தொழில்துவங்க நல்லது இல்லை

2. சம்பத் தாரை – தனவரவு, நற்காரியங்கள் செய்யலாம்.

3. விபத் தாரை – தவிர்க்க வேண்டியநாள்.பயணங்கள் தவிர்ப்பது நல்லது

4. ஷேம தாரை – நன்மை தரக்கூடியது என்று அறியவும்.

5. பிரத்யக் தாரை – வீண் அலைச்சல், மன குழப்பம், கவன சிதறல் தரும்என்று பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றது.

6. சாதக தாரை – புதிய முயற்சி, செயல்களுக்குசாதகமானது.எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்.

7. வதை தாரை – கடுமையான தீமை தரக்கூடியது,வாக்கு தர்க்கங்கள்தவிர்க்கவும்.

8. மைத்ர தாரை – மைத்ரம் – புதிய முயற்சி, செயல்களுக்கு ஏற்றதுஎடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்.

9. பரம மைத்ர தாரை – அதி நட்பு – அனைத்து சுப செயல்களுக்கு உகந்த நாள் என்று கணக்கில் கொள்ளவும்.
1. ஜென்ம நட்சத்திரம் என்பது உங்களின் பிறப்பின் நோக்கம் எதுவோ அதைச் செய்யும். இது ஜென்ம தாரையாகும் ( தாரை என்றால் தருவது.. நம்மை வந்து சேர்வது என்று பொருள்). ஆண்கள் ஜென்ம தாரை நாளில், ஜென்ம நட்சத்திர நாளில், திருமணம் செய்யக்கூடாது. பெண்களுக்கு வளைகாப்பு நடத்தக்கூடாது, இருவருக்கும் பொதுவாக சில தகவல்கள்.எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது. நகம் வெட்டக்கூடாது. முடி திருத்தம் செய்யக்கூடாது. தாம்பத்தியம் கூடாது. இவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும். உங்கள் ஜென்ம, அனுஜென்ம,திரிஜென்ம நட்சத்திரங்களில் சந்திரன் பயணிக்கும் போது உங்களுக்குள் நடக்கும் மாற்றங்களை இதுவரை உணர்ந்திருக்க மாட்டீர்கள்.இனி கவனியுங்கள்.அந்த நாட்களில் படபடப்பு, பதட்டம், சட்டென்று உணர்ச்சிவசப்படுதல், சுள்ளென்ற கோபம் உருவாகுதல், எரிந்து விழுதல், அலைச்சல் அதிகரித்தல், தாகம்அதிகமாகுதல், அதிக சிறுநீர் வெளிப்பாடு, மாலை நேரத்தில் அமைதி திரும்புதல்., மகிழ்ச்சி வெளிப்படுதல். இது போன்றவை அன்றைய தினம் உண்டாகும்.

2. சம்பத்து தாரை என்னும் இரண்டாவது நட்சத்திரமே உங்களுக்கு பலவித நன்மைகளைத் தரும். அதாவது உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமே உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து தரும். அந்த நட்சத்திரக்காரர்களே உங்களுக்கு பல வகைகளிலும் உதவிகரமாக இருப்பார்கள். இரண்டாவது நட்சத்திரம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்கும். பணவரவு, திருமணம், புத்திர பாக்கியம் உருவாகுதல், எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைப்பது, நல்ல வேலை கிடைப்பது, மனம் மகிழும் சம்பவங்கள் நடப்பது இவையனைத்தும் இந்த “சம்பத்து தாரை”? நட்சத்திரத்தின் வேலை!
3. மூன்றாவது நட்சத்திரம் நீங்கள் வேதனைகளை, துன்பங்களை அனுபவிப்பதற்குக் காரணமாக அமைகிறது. உதாரணமாக ஒரு சிக்கலில் சிக்கி மன நிம்மதி தொலைத்தால்.அந்த நிகழ்வு எப்போது, எந்த நட்சத்திர நாளில் நடந்தது என்று என்பதைக் கவனியுங்கள். நிச்சயமாக அது மூன்றாவது நட்சத்திரமாகத்தான் இருக்கும். ’நான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்தேன். ஆனால் எங்கிருந்தோ வந்து இப்படி சிக்கலில் மாட்டிவிட்டுட்டானே’ என உங்களைப் புலம்ப வைத்தால் அது நிச்சயம் மூன்றாவது நட்சத்திரமாகவோ மூன்றாவது நட்சத்திரக்கார்களாலோதான் நடந்திருக்கும். அதாவது விபத்து தாரையாகத்தான் இருக்கும். விபத்து என்றால் அடிபட்டு காயம் ஏற்படுதல் மட்டுமல்ல.எதிர்பாராத துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தாலும் அதுவும் விபத்துதான். பயணங்களில் ஏற்படும் விபத்தும் இந்த மூன்றாவது நட்சத்திர நாட்களில்தான் நடக்கும். ஆகவே, இந்த “விபத்து தாரை” நட்சத்திர நாளையும் நட்சத்திரக்காரர்களையும் தவிர்த்து விடுங்கள்.

4. நான்காவது நட்சத்திரம் வீடு, வாகனம், ஆபரணம் வாங்கும் எண்ணம் வருகிறதா? அல்லது அது தொடர்பான தகவல்கள் உங்களை வந்து சேர்கிறதா? நிச்சயமாக அது உங்கள் நட்சத்திரத்திற்கு நான்காவது நட்சத்திரமாகத்தான் இருக்கும்.நான்காவது நட்சத்திர நாளாக இருக்கும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகளை தொடர்வதற்கும், ஆதாயம் தரக்கூடிய பயணங்களை மேற்கொள்ளவும் நான்காவது நட்சத்திர நாளாகத்தான் அமைந்திருக்கும். இப்படி சொத்து சுகம் சேர்வதற்கும் ஆனந்த வாழ்வுக்கும் காரணம் இந்த நான்காவது நட்சத்திரம் “க்ஷேம தாரை” என்னும் சுகபோக தாரை நட்சத்திரமாகும்.

5. 5வது நட்சத்திரம் மிகுந்த எதிர்பார்ப்போடு.. நிச்சயமாக நமக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கும், என்று ஒரு காரியத்தில் முழுவீச்சாக செய்து வருகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்த காரியம் முடிந்தவுடன் அந்த நபர் “ரொம்ப நன்றி சார், நீங்க மட்டும் இல்லேன்னா இது நடந்திருக்காது. வாழ்நாள் முழுசும் மறக்க மாட்டேன்” என்று நன்றியை மட்டுமே பரிசாகத் தருகிறாரா? நிச்சயமாக அது உங்கள் நட்சத்திரத்திற்கு ஐந்தாவது நட்சத்திரமாகத்தான் இருக்கும், அதாவது அந்த காரியத்தை நீங்கள் தொடங்கியது அந்த நட்சத்திர நாளில்தான்! அந்த 5வது நட்சத்திரம் “பிரத்தியக்கு தாரை” என்னும் பிறருக்கு நன்மையை தரும் தாரை! ஆனாலும் உங்களுக்குப் புண்ணியங்கள் சேரும். ’புண்ணியம் சேருவது இருக்கட்டும் சார்! பணம் கிடைக்கவில்லையே’ என விரக்தியாக கேட்பது புரிகிறது. என்ன செய்வது..? இது பணம் சம்பந்தப்பட்ட விஷயமில்லை. புண்ணியம் தரக்கூடிய காரியங்கள். ஒரு காரியம் தொடங்கும்போது, நாள், நட்சத்திரம் பார்க்கச் சொல்வது இதற்காகத்தான். இனியாவது நாள் நட்சத்திரம் பார்த்து தொடங்குங்கள். நன்மைகள் கிடைக்கும்.

6. ஆறாவது நட்சத்திரம் உங்களுக்கு எதிரான விஷயத்தை உங்களுக்கு சாதகமாக மாற்ற வேண்டுமா? வழக்கு போட்டு வெற்றி அடைய வேண்டுமா? நல்ல நிறுவனத்தில் வேலை வேண்டுமா? வியாபார அனுகூலம் கிடைக்க வேண்டுமா? தொழில் வியாபாரம் தொடங்க வேண்டுமா? மொத்தத்தில் எடுத்த காரியம் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் நட்சத்திரத்திற்கு ஆறாவது நட்சத்திரமான “சாதக தாரை” நட்சத்திரத்தில் செய்தால் முழுமையான வெற்றி உறுதி. நூறு சதவீத வெற்றி நிச்சயம்!
7. 7வது நட்சத்திரம் நம்பிக்கையோடு குறுகிய காலத்தில் திருப்பி தந்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு ஒரு கடன் வாங்குகிறீர்கள்.ஆனால் ஏதோ சிக்கல். அந்தக் கடனை அடைக்க முடியவில்லை, பணப்புழக்கம் இருந்தாலும் அந்தக் கடனை அடைக்க முடியவில்லை. ஏன்?

8. அடுத்து உடல்நலத்தில் சிறிய பிரச்சினை, மருத்துவர் பல பரிசோதனைகள் செய்யச் சொல்கிறார். நீங்களும் பணம் செலவு செய்து சோதனை செய்கிறீர்கள். முடிவில். ஒன்றும் பிரச்சினையில்லை சாதாரண கேஸ் டிரபிள் தான் என மருத்துவர் சொல்கிறார். நீங்களும் நிம்மதியடைகிறீர்கள். ஆனால் செலவுகளும் மன உளைச்சலும் உண்டாகிறது! ஏன்? அலுவலகத்திலோ அல்லது உறவுகளிடமோ அல்லது நண்பர்களிடமோ கிண்டல் செய்வதாக நினைத்து ஒரு வார்த்தையை விடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அது அவர்களை காயப்படுத்தி உங்களுக்கு எதிராக மாறுகிறது. எதிர்ப்பாகவே மாறிவிடுகிறது. ஏன்? மேற்கண்ட மூன்று சம்பவங்களுக்கும் காரணம்.நீங்கள் செய்த இந்த மூன்று விஷயமும் உங்கள் நட்சத்திரத்திற்கு 7வது நட்சத்திரமான “வதை தாரை” நாளில் செய்ததுதான் காரணம். வதை என்றால் மன நிம்மதி இழத்தல்,கடும் வேதனையைத் தருவது என்று அர்த்தம்.

9. 8வது நட்சத்திரம் எட்டாவதாக வரக்கூடிய “மைத்ர தாரை”யைப் பார்ப்போம். மைத்ரம் என்றால் நன்மை என பொருள். சுப காரியங்கள் தொடங்கவும், வியாபார, தொழில் ரீதியாக ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கும் அயல்நாட்டில் வேலைக்கு முயற்சி செய்யவும், வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்யவும், ஒரு காரியத்தில் லாபம் கிடைக்கவும், இரண்டாவது திருமணம், இரண்டாவது குழந்தை பாக்கியம் பெறவும் ஏற்றது... ‘மைத்ர தாரை’. இங்கே இரண்டாவது திருமணம் என்பது முதல் திருமணம் முடிவுக்கு வந்தவர்களுக்கு மட்டுமே என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதாவது, முதல் திருமணம் நடந்து, வாழ்க்கைத் துணை இறந்திருக்கலாம். அல்லது விவாகரத்து ஏற்பட்டிருக்கலாம். அல்லது இருதரப்பிலும் பேசி பிரிந்திருக்கலாம். அவர்களுக்கு, இரண்டாவது திருமணம் நடப்பதற்கான சூழல், ‘மைத்ர தாரை’யில் நிலவும்.
10. 9வது நட்சத்திரம் ஒன்பதாவதாக வரக்கூடிய “அதிமைத்ர தாரை” நட்சத்திரங்கள். இந்த அதிமைத்ர தாரை வருகின்ற நட்சத்திர நாளில் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள், தொழில் வியாபார பயணங்கள், வெளிநாட்டுப் பயணங்கள், ஆன்மிகப் பயணங்கள், மகான்கள் தரிசனம், சுப காரிய செலவுகள், அதாவது திருமணத்திற்கு நகை, ஆடை போன்றவற்றை வாங்க ஏற்ற தினங்கள்!

உங்களுக்கு மாதத்தில் 10 தினங்கள் மட்டுமே சலசலப்புகள் இருக்கும். மற்ற நாட்கள் நன்மை தருவதாக இருக்கும். உங்களுக்கு என்றால் உங்களுக்கு மட்டுமில்லை.எல்லோருக்கும்தான்!

உங்கள் நட்சத்திரத்திற்கு சம்பத்து தாரை என்பது உங்களின் இரண்டாவது நட்சத்திரம் என்று சொன்னேன். ஆக 2வது நட்சத்திரம், 11வது நட்சத்திரம் (கூட்டினால் 2 வருகிறதுதானே), 20 வது நட்சத்திரம் இந்த மூன்றுமே சம்பத்து தாரை நட்சத்திரங்கள்தான்!

க்ஷேம தாரை நட்சத்திரம் 4வது நட்சத்திரம் என்று சொன்னேன் தானே. ஆக.4வது நட்சத்திரம், 13 வது நட்சத்திரம் இந்த இரண்டு நட்சத்திர நாட்களும் க்ஷேமம் கொடுக்கும். அதாவது நன்மைகள் நடக்கும். அப்படியானால் 22 வது நட்சத்திரம்..?
இந்த 22 வது நட்சத்திரத்தை அனைவரும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். க்ஷேம தாரையாக இருந்தாலும், இது “வைநாசிக நட்சத்திரம்” ஆகும். வைநாசிகம் என்றால் முற்றிலும் கெடுதல்(சர்வ நாசம்) என்பதாகும். எனவே தவிர்க்க வேண்டும்.

அடுத்து 6வது நட்சத்திரமான “சாதக தாரை” நட்சத்திர நாட்கள். உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 6வது நட்சத்திர நாள், 15 வது நட்சத்திர நாள், 24வது நட்சத்திர நாள் இந்த மூன்றும் சாதகம் தரக்கூடிய நட்சத்திரங்கள்; சாதகம் வழங்கக்கூடிய நாட்கள். .

இதேபோல மற்ற நட்சத்திரங்களையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

உதாரணம் : உங்கள் நட்சத்திரம் அசுவினி என்றால் மகம், மூலம் இவையும் உங்கள் நட்சத்திரமாகச் செயல்படும்.

அசுவினி - ஜென்ம நட்சத்திரம்

மகம்- அனு ஜென்ம நட்சத்திரம்

மூலம்- திரி ஜென்ம நட்சத்திரம்

இப்படி உங்கள் நட்சத்திரமும் இணை நட்சத்திரங்களும் உங்களுக்கு செயல்படும்.

27 நட்சத்திரக்காரர்களும்.அவர்களின் வெற்றிநாட்களும்!
1. உங்கள் வாழ்க்கையில் 100 சதவிகிதம் என்னும் முழுமையான வெற்றியைக்கண்டிருக்கிறீர்களா? அப்படி இருந்தால், அந்த நாள் என்ன என்பது தெரிந்தால்,அந்த நாளின் நட்சத்திரம் என்ன என்று பாருங்கள்.

2. அது நிச்சயமாக உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திர நாளாகத்தான் இருக்கும்.

3. வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்தானே. பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் இருக்கிறார்களா என்ன? எடுத்த முயற்சிகள் யாவும் சிந்தாமல் சிதறாமல் வெற்றியாக, கெளரவமாக, சந்தோஷமாக கிடைக்க வேண்டும் என்பதுதானே நம் எதிர்பார்ப்பு.

4. புதியதாக ஆரம்பிக்க இருக்கும் தொழில், வியாபாரம் முழு வெற்றியடைய வேண்டும் என்றுதானே கடும் போராட்டத்துக்குத் தயாராகிறோம். 

5. புதிய கல்வி முயற்சி தடையில்லாமல் முடிக்கவேண்டும் என்பதுதானே நம் குழந்தைகள் குறித்த ஆகச்சிறந்த பெருங்கவலை. வெளிநாட்டு வேலைமுயற்சி வெற்றிபெற வேண்டும் என்பது நம்மில் பலருக்குமான கனவு அல்லவா!

6. சொத்துக்கள் வாங்க, விற்க. பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய, வியாபாரரீதியிலான பயணம் மேற்கொள்ள என நம் வாழ்வியல் தொடர்பான அத்தனைவிஷயங்களும் முழுநன்மையோடு நம்மை வந்தடைய வேண்டும் என்பதற்காகத்தானே சதாசர்வ காலமும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உழைத்துக் கொண்டிருக்கிறோம்
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றேஒன்றுதான். அதுதான் சம்பத்து தாரை.

சம்பத்துதாரை” என்னும் உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமானசம்பத்து நட்சத்திர நாளில் செய்யப்படும் அனைத்து காரியங்களும் 100சதவிகிதம் வெற்றியைத் தந்தே தீரும் என்பது சத்தியம்.

நவகிரகங்களே அவரவர் நட்சத்திரங்களுக்கு சம்பத்து நட்சத்திரமான அடுத்த நட்சத்திரங்களில் தான் பிறந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.!

உதாரணமாக சூரியனின் நட்சத்திரங்களில் ஒன்று “உத்திரம்.” ஆனால் சூரியபகவான் ஜனித்த நட்சத்திரம் உத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமான “அஸ்தம்”நட்சத்திரத்தில்.

சந்திரன் தன் நட்சத்திரமான “ரோகிணிக்கு” அடுத்த நட்சத்திரமான “மிருகசீரிடம்”நட்சத்திரத்தில் பிறந்தவர்.

இப்படி கிரகங்களே “சம்பத்து நட்சத்திரங்களை”பயன்படுத்தி அழியாப் புகழுடன் இருக்கும் போது, நாமும் அதைப் பயன்படுத்தி வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். செழிப்பான இந்த வாழ்க்கையை சீரும் சிறப்புமாக்குவோம்!

செல்வம் வளம் கொழிக்க, எடுத்த காரியங்களில் வெற்றிபெற, உங்கள் கனவுகள் நனவாக, எப்போதும் மகிழ்ச்சி பொங்க, குடும்பத்தில் அமைதியும் வளமும் நிறைவாக இருக்க, மொத்தத்தில் எல்லாமும் பெற்று நிறைவாய் வாழ இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை மனதில் கொள்ளுங்கள்!
எப்படி இறை அருளை பெறுவது?

உங்களில் ஒரு சிலருக்கு நிச்சயம் ஒரு விஷயம் தெரியும்.

உங்கள் நண்பரோ அல்லது உங்கள் அருகில் உள்ள வீட்டினரோ புதியதாக ஒரு கோயிலுக்குச் சென்று வந்ததும் அவர்களின் வாழ்க்கையில் இருந்து வந்த துயரங்கள் நீங்கி வளமான வாழ்வு அமைந்திருக்கும். நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

இது எதனால் ஏற்பட்டது?

ஒன்று அவரின் நட்சத்திரத்தின் அதிதேவதை தொடர்பான அல்லது அவரின் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமான சம்பத்துதாரை நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு உரிய ஆலயத்திற்குச் சென்று வந்திருப்பார்,

அதன் காரணமாக அவரின் வாழ்வு உயரவும், மேம்படவும் செய்திருக்கும்.

இப்படி உங்கள் நட்சத்திரத் தொடர்பான தெய்வம் எது என்பதை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். உங்கள் நட்சத்திரம் தொடர்பான தெய்வத்தை அறிந்து கொண்டு, அந்தத் தெய்வத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.

அதேபோல், சம்பத்துதாரை நட்சத்திரத்தின் தெய்வ வழிபாடு உங்கள் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து உங்கள் வாழ்வை வளமாக்கும் என்பது உண்மை.
உங்கள் நட்சத்திரத்திற்கான அதிதேவதை யார்

நீங்கள் வணங்கவேண்டிய அதிதேவதை இவர்கள்தான்!

1. அசுவினி : சரஸ்வதி

2. பரணி : துர்கை

3. கார்த்திகை : அக்னி

4. ரோகிணி : பிரம்மா

5. மிருகசீரிடம் : சந்திரன்

6. திருவாதிரை : நடராஜர்

7. புனர்பூசம் : அதிதி

8. பூசம் : பிரகஸ்பதி (குரு)

9. ஆயில்யம் : ஆதிசேஷன்

10. மகம் : பித்ருக்கள்,சுக்கிரன்

11. பூரம் : பார்வதி

12. உத்திரம் : சூரியன்

13. அஸ்தம் : சாஸ்தா

14. சித்திரை : விஷ்வகர்மா

15. சுவாதி : வாயு

16. விசாகம் : முருகன்

17. அனுசம் : ஶ்ரீலஷ்மி

18. கேட்டை : இந்திரன்

19. மூலம் : நிருதி

20. பூராடம் : வருணன்

21. உத்திராடம் : கணபதி

22. திருவோணம் : விஷ்ணு

23. அவிட்டம் : வசுக்கள்

24. சதயம் : எமன்

25. பூரட்டாதி : குபேரன்

26. உத்திரட்டாதி : காமதேனு

27. ரேவதி : சனிபகவான்

இப்போது நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் அறிந்துகொண்டீர்கள். இனியென்ன.அந்தத் தெய்வத்தை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். நினைக்க மறக்காதீர்கள். வழிபட மறக்காதீர்கள்.

உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திர தேவதை தொடர்பான ஆலயங்களுக்கு சென்று வர 100 சதவிகித வெற்றியை அடைவீர்கள் என்பதும் சத்தியம்.

பூசம் நட்சத்திரத்திற்கு அதிதேவதை குரு பகவான். இவரையும் வணங்கி , இவருக்கு சம்பத்து நட்சத்திரமான ஆயில்யத்தின் தேவதையான “ஆதிசேஷனையும்” வணங்கி வந்தால், எல்லாம் நன்மையாகும். எல்லாக் காரியமும் ஜெயமாகும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் குபேரனையும் வணங்கி, உத்திரட்டாதியின் காமதேனுவையும் வணங்க வேண்டும்.

இப்படி தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வணங்கி வாருங்கள். சகல செளபாக்கியங்களும் பெற்று, சுபிட்சத்துடன் நிம்மதியும் நிறைவுமாக வாழ்வீர்கள்.

தாரபலம் என்றால் என்ன என்பதை அறிந்திருப்பீர்கள்.

இந்த தாரபலத்தைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள், வாழ்க்கைத் துணை, தொழில் கூட்டாளி என அமைத்துக்கொள்ள எல்லாம் நன்மையாகும். எல்லாம் நன்மைக்கே!

எடுத்த காரியம் ஜெயிக்கணுமா? ‘அபிஜித்’ நேரத்தை பயன்படுத்துங்க!
நான் 28 வதாக ஒரு நட்சத்திரம் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா! அதன் பெயர் என்ன? அது எந்த ராசியில் இருக்கிறது? என பார்ப்போம்.

அந்த நட்சத்திரத்தின் பெயர் “அபிஜித்” நட்சத்திரம்.

இது மகர ராசியில் அமைந்திருக்கிறது.

இல்லையே மகரத்தில் உத்திராடம் 2,3,4, பாதங்கள்,திருவோணம் 1,2,3,4 ஆகிய பாதங்கள், அவிட்டம் 1,2 பாதங்கள் மட்டுமே இருக்கிறது என்கிறீர்கள்தானே...

இந்த அபிஜித் நட்சத்திரம் சூட்சும நட்சத்திரம் ஆகும்.

இது மகர ராசியில் உத்திராடம் 4 ஆம் பாதம், திருவோணம் 1 ம் பாதத்தில் உள்ளது,

எனவே உங்களில் யார் உத்திராடம் 4, திருவோணம் 1 என்ற நட்சத்திரப் பாதங்களில் பிறந்திருக்கிறீர்களோ அவர்கள் அபிஜித் நட்சத்திரகாரர்கள் ஆவார்கள்.

சரி என்ன செய்யும் இந்த அபிஜித்?

வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்களை சந்திக்காதவர்கள் என எவருமே இல்லை. இதில் துயரங்களைக் கண்டு துவண்டு விடுபவர்கள் பலர் உள்ளனர்.

துன்பமோ , துயரமோ எது வந்தாலும் அதன் பாதிப்பை சிறிதும் உணராதவர்கள், இந்த அபிஜித் நட்சத்திரக்காரர்கள்.

ஆக, துன்பத்தை மனம் உணராவிட்டாலே நோய் முதற்கொண்டு எந்த பாதிப்பும் நம்மை அணுகாது.

இந்த உத்திராடம், திருவோணத்தில் பிறந்த தெய்வங்களைப் பாருங்களேன்.
உத்திராடத்தில் கணபதி.

இவரை மஞ்சளிலும் பிடித்து வணங்கலாம், மண்ணிலும் பிடித்து வணங்கலாம், எதைப்பற்றியும் கவலைப்படாதவர்.

திருவோணத்தில் பிறந்தவர் மகாவிஷ்ணு. இவரையும் நீங்கள் அறிவீர்கள்.

சதா சயனத்தில் இருப்பவர், எதைப்பற்றியும் கவலைப்படாத தோற்றம், ஆனால் உள்ளுக்குள் அனைத்தையும் அசைபோட்டுக் கொண்டிருப்பவர்.

இந்த அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதைபற்றியும் கவலைபடத்தேவையில்லை,

இவர்களுக்கு அனைத்தும் தேடாமலே கிடைக்கும்.

எனவே எல்லாம் இறைவன் செயல் என்று இருந்தாலே சகல காரியங்களும் நன்மையாகவே நடந்தேறும்.

இந்த அபிஜித்தை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்.

ஏதோ ஒரு சூழ்நிலை, திடீர்த் திருமணம், வீடு குடிபோகுதல், பதவி ஏற்பு போன்ற சுப காரியங்களுக்கு பயன்படுத்தலாம்.

அந்த நாள், தோஷமுள்ள நாளாக இருந்தாலும் இந்த அபிஜித் நட்சத்திரநாள் அந்த தோஷங்களைக் களைந்துவிடும்.

ஆனால் இது மாதத்திற்கு ஒருமுறைதானே வரும். அதுவரை காத்திருக்க வேண்டுமா?

இல்லை.ஒவ்வொரு நாளும் அபிஜித் நேரம் என்ற ஒரு சுப நேரம் உண்டு.

அது எந்த நேரம் என்றால் .மதியம் 12 மணி முதல்12-30 மணிவரை உள்ள நேரமே அபிஜித் நேரம் ஆகும்.

இந்த அபிஜித் நேரத்திற்கு எந்த தோஷமும் இல்லை. எந்த தோசமும் இந்த நேரத்தை கட்டுப்படுத்தாது,

ராகுகாலம், எமகண்டம்,கரிநாள், பிரதமை, அஷ்டமி, நவமி, செவ்வாய்க்கிழமை,சனிக்கிழமை என எதுவும் இந்த அபிஜித்தை கட்டுப்படுத்தாது.

எனவே எந்தத் தயக்கமும் இல்லாமல் இந்த அபிஜித் நேரத்தையும், அபிஜித் நட்சத்திர நாளையும் பயன்படுத்தி வாழ்க்கையில் எல்லா வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழுங்கள். எடுத்த செயல்கள் யாவும் வெற்றிபெறும் என்பது உறுதி!

Saturday, 1 March 2025

கொத்தவரங்காய்


கொத்தவரங்காய் பிடிக்காதா? சாப்பிட்டு பாருங்கள்! மாரடைப்பை தடுக்கும் அருமருந்து!

  
 மக்கள் அதிகம் விரும்பி உண்ணாத கொத்தவரங்காயில் மறைந்திருக்கும் கோடி நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? உடல் எடை குறைப்பு முதல் மன அழுத்தம் வரை எத்தனை ஆரோக்கியம் காக்கும் அருமருந்து கொத்தவரங்காய்!


இதுகுறித்து உங்கள் ஜாதக யோகம் எனும் சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: மக்களால் அதிகம் உண்ணப்படாத ஒரு சில காய்கறி வகைகளில் கொத்தவரங்காயும் ஒன்று. ஆனால் இந்த கொத்தவரங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்.. அவை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.



கர்ப்பிணிகள் குழந்தை பிறக்கின்ற காலம் வரை சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் அதிகம் உணவில் சேர்த்து உண்பதால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பின் போது ஏற்படும் எத்தகைய உடல் நல குறைபாடுகளையும் போக்கும் திறன் இந்த கொத்தவரங்காய் கொண்டுள்ளது.


உடல் எடை
கொத்தவரங்காய் உணவின் அளவை குறிப்பிடும் கலோரி அளவு குறைவாக இருந்தாலும், உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் அதிகமாக கொண்டிருக்கும் உணவாக இருக்கிறது. உடல் எடையை வெகு விரைவில் குறைக்க விரும்புபவர்கள் உணவில் கொத்தவரங்காயை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இரத்தச் சோகை குணமாக
இரத்தச் சோகை உடலின் அனைத்து உறுப்புகளின் சீரான செயல்பாடுகளுக்கும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கும் உடலில் ரத்த ஓட்டம் சரியாக இருக்க வேண்டியது அவசியம். ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் குறைபாடுகளால் இரத்தச் சோகை ஏற்படுகிறது. இரத்தச் சோகை இருப்பவர்கள் கொத்தவரங்காயை அதிகம் சாப்பிடுவதால் ரத்த சோகை நீங்கி உடலை மீண்டும் ஆரோக்கியமான நிலைமைக்கு கொண்டு வருகிறது.



நார்ச்சத்து
நாம் சாப்பிடும் உணவில் நார்ச்சத்து இருப்பது மிகவும் அவசியம். நார்ச்சத்து உடம்பில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றது. மேலும் கொத்தவரங்காய் அதிகளவு புரதச்சத்துகள், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள் மற்றும் கரையக் கூடிய நார்ச்சத்துகளை கொண்டிருப்பதால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

நோய் எதிர்ப்பு திறன்
அன்றாடம் நாம் வெளியில் செல்லும் போது பல வகையான நோய் கிருமிகளின் தாக்குதல்களை நாம் எதிர்கொள்கிறோம். இத்தகைய கிருமிகளால் நமக்கு நோய்கள் ஏற்படாமல் காப்பது நமது உடலின் நோய் எதிர்ப்பு திறனாகும். கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

சரும நலம்
நமது சருமம் எனப்படும் வெளிப்புற தோல் நமது உடலை பாதுகாப்பதோடு, நமக்கு அழகிய தோற்றத்தையும் தருகிறது. கொத்தவரங்காய் சருமப் பிரச்சனைகளுக்கு மிகுந்த உதவி செய்கிறது. கொத்தவரங்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் வேதி பொருட்கள் சேதமடைந்த திசுக்களை சருமத்திலிருந்து நீக்குகின்றன. அதோடு முகத்தில் தோன்றுகின்ற கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.


மலச்சிக்கல்
ஒரு சிலருக்கு வயிற்றில் உணவை செரிப்பதற்கு இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலை சீர் கெடுவதால் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு மலச்சிக்கல் உண்டாகிறது. கொத்தவரங்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளது.

இப்படிப்பட்டவர்கள் தினமும் உணவில் கொத்தவரங்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

பற்கள் ஆரோக்கியம்
பற்கள், எலும்புகள் உடலுக்கு கால்சியம் சக்தி அவசியமாகிறது. இந்த கால்சியம் சக்தி தான் உடலின் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மைக்கு அவசியமானதாக இருக்கிறது. கொத்தவரங்காயில் கால்சியம் சக்தி உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கொத்தவரங்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.

இதய ஆரோக்கியம்
இதய நோய்கள் மற்றும் பாதிப்புகள் கொண்டவர்கள் இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்வது அவசியம் ஆகும். கொத்தவரங்காய் இதயத்திற்கு நன்மையளிக்கிறது. கொத்தவரங்காய்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது.

மன அழுத்தம்
பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் எதிலும் அவசரத்தன்மை அதிகமிருப்பதால் சிலருக்கு பதற்றம், மனஅழுத்தம், நரம்பு கோளாறுகள், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. கொத்தவரங்காயில் நரம்புகளை வலுப்படுத்தும் சத்துகள் அதிகம் உள்ளன. எனவே கொத்தவரங்காயை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடல் மற்றும் மன நலம் மேம்படும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Friday, 28 February 2025

மா இஞ்சி


கோடையின் கொடை மா இஞ்சி! புற்றுநோய் முதல் ஆஸ்துமா வரை! ஆல் கிளியர் செய்யும் மாங்காய் சுவையிலான இஞ்சி

   புளிப்பு சுவை கொண்ட மா இஞ்சி / மாங்காய் இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் கொட்டி கிடக்கின்றன.

மா இஞ்சி, பார்ப்பதற்கு இஞ்சியை போன்றே இருக்கும். சுவையோ மாம்பழம் போன்று இருக்கும். இது இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. அதே நேரம் மஞ்சளுடன் தொடர்புடையது. அதனால்தான் இது இஞ்சி போன்ற மஞ்சள் கிழங்கை போல் மெல்லியதாக இருக்கும்.

What are the health benefits of Maa Ingi


இந்த மா இஞ்சியை தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் பரவலாக பயன்படுத்துகிறார்கள். அது போல் இந்தியாவில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக மா இஞ்சி பயன்படுத்தப்படுகிறது.


இந்த மாங்காய் இஞ்சியை காய்ச்சல், தோல் நோய்கள், ஆஸ்துமா, வயிறு சம்பந்தமான வியாதிகளுக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த மா இஞ்சியை ஊறுகாய் போல், துவையல் போல் பயன்படுத்தலாம். இதில் ஆன்டி பைரிடிக் தன்மை உள்ளது. அது போல் நோய் எதிர்ப்பு தன்மையும் கொண்டிருக்கிறது.



மாங்காய் இஞ்சி: மலமிளக்கியாகவும் இது பயன்படுகிறது. மாங்காய் இஞ்சியில் வேதியியல் பொருளான ஸ்டார்ச், ஃபைபர்ஸ், பினோலிக் அமிலங்கள், எண்ணெய்கள், குர்குமினாய்டுகள் மற்றும் டிஃபுரோகுமெனோனால் அமடானுலன் மற்றும் அமடால்டிஹைட் போன்றவை உள்ளன. அது போல் மாங்காய் நறுமணமே இந்த இஞ்சி வீசும். இதற்காக இதில் பினீன், டெல்டா கேர்ன், பீட்டா ஒசைமின், மைர்சீன் போன்ற பொருட்கள் உள்ளன.


பசியை தூண்டும்: இந்த மா இஞ்சி பசியை தூண்டும். இதில் குர்குமின், டைமெத்தாக்ஸி குர்குமின், டெஸ் மெத்தாக்ஸி குர்குமின் போன்றவை உள்ளன. இது சமையலில் சேர்ப்பதால் பசியை தூண்டும். இந்த மா இஞ்சியில் மனதை அமைதிப்படுத்தும் பண்புகள் உள்ளன. நரம்பு மண்டலத்தை அமைதிப்படுகிறது. கவலை, தலைவலி, மனச்சோர்வை போக்குகிறது. இதன் வாசனையே மனதிற்கு இதமளிக்கிறது.

மாங்காய் இஞ்சியில் புற்றுநோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. மரபணு செயல்பாட்டால் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளைத் தடுக்கிறது. கீமோதெரபி போன்ற புற்றுநோய் சிகிச்சைகளுடன் சேர்த்து இதையும் பயன்படுத்தி வரலாம். அது போல் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.


உடல் சூட்டை குறைக்கும்: மா இஞ்சியில் ஆன்டி பைரிடிக் பண்பு இருப்பதால் உடலில் உள்ள அதிகபடியான சூட்டை குறைக்கிறது. காய்ச்சலை உண்டாக்கும் நோய்க் கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது. பாலியல் ஆசைகளையும் இது தூண்டும். ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க பயன்படுகிறது. விந்துகள் சேதமடையாமல் காக்கவும் இந்த மா இஞ்சி உதவுகிறது.

உடல் பருமனுக்கு தீர்வு: மூட்டு வலிக்கு அருமருந்து. நீரிழிவு மற்றும் இதயநோய் போன்ற வளர்சிதை மாற்ற கோளாறுகளுக்கு உடல் பருமன் மிக முக்கியமான காரணம். மாங்காய் இஞ்சியில் குர்குமின் இருப்பதால் இது உடல் பருமனை தடுக்கிறது. மா இஞ்சியில் சளியை தடுக்கும் தன்மை இருப்பதால் இருமலுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது. இது சுவாச பாதையில் உள்ள சளியையே குறைக்கிறது. இதனால் மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது.

மலமிளக்கி: எல்லாவற்றுக்கும் மேல் பெரும்பாலானவர்களின் முக்கிய பிரச்சினையான மலச்சிக்கலை போக்குகிறது. மா இஞ்சியில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதனால் மலத்தில் தண்ணீர் சத்தை அதிகரித்து மலம் எளிதாக வெளியேற உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் வயிறு தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கிறது. சரும நோய்களுக்கும் தீர்வை ஏற்படுத்துகிறது. இந்த மா இஞ்சி கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும். இதை வாங்கி பயன்பெறுங்கள்.



Wednesday, 26 February 2025

ஜாதகர் நோய்களின்றி இருப்பார் யார்?

நாம் தேர்வு செய்யும் முகூர்த்த நாளை, அன்றைய தினம் நேத்திரம், ஜீவன் உள்ளதா? என்று கவனித்து தான் பஞ்சாங்கத்தில் குறிப்பிடுவார்கள். சுபகாரியங்கள் செய்யும் பொழுது சுபங்கள் யாவும் விருத்தியாகி வருவதற்கு அது சக்தி மிகுந்த நாளாக இருக்க வேண்டும். மனிதனுக்கோ அல்லது விலங்கிற்கோ உடலும், உயிரும் எவ்வளவு முக்கியமோ, அது போல ஒரு நாளுக்கு சக்தியாக இருப்பது நேத்திரமும், ஜீவனும் தான். ஆம்.. நேத்திரம் – ஜீவன் என்பது ஒரு நல்ல நாளுக்கு உயிரும், உடலும் போல.
நேத்திரம்– ஜீவன் இல்லாத நாளை முகூர்த்த நாளாக தேர்வு செய்ய மாட்டார்கள். நேத்திரம் என்பது உடல். ஜீவன் என்பது உயிர். சரி இந்த நேத்திரம்– ஜீவன் என்பது எதைக் குறிக் கிறது? ஒரு மனிதனுக்கு அடையாளம் என்பது உயிரும், உடலும் தான். உயிர் இல்லாத உடலை ‘பிணம்’ என்றும், உடல் இல்லாத ஜீவனை ‘ஆவி என்றும், ‘ஆன்மா’, ‘ஆத்மா’ என்றும் கூறுவார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் உயிரை ‘லக்னம்’ என்றும், உடலை ‘சந்திரன்’ என்று குறிப்பிடுகிறார்கள். ஜோதிடத்தில் லக்னம், சந்திரன் இவற்றைக் கொண்டே அனைத்து பலன்களும் கணிக்கப்படுகிறது. இந்த உலகில் தோன்றிய எல்லா உயிர்களும் ஏதோ ஒரு லக்னத்தில், ஏதோ ஒரு நட்சத்திரத்தில் பிறந்து இருக்க வேண்டும். லக்னம், சந்திரன் இன்றி எந்த விதமான ஜாதகமும் கணிக்கப்படுவதில்லை.

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் எடுத்துக் கொள் கிறது. ஒரு லக்னத்திற்கு 2 மணி நேரம் வீதம் 12 ராசிகளுக்கு 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. ‘எண் சாண் உடலுக்கு தலையே பிரதானம்’ என்பார்கள். அதுபோல தான் 12 லக்ன பாவங்களுக்கு, லக்னமே பிரதானமாக உள்ளது. இந்த லக்னத்தைக் கொண்டு ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அனுபவிக்கும் இன்பம், துன்பம், நோய்கள், வாழ்வின் உயர்வு– தாழ்வு என சகலவிதமான பலன்களை பற்றியும் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு மனிதனும் என்ன நோக்கத்திற்காக இந்த பூமியில் பிறந்தான் என்பதைக் கூட இந்த லக்னத்தைக் கொண்டே கணிக்கிறோம்.
லக்னத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நிறையக் கூறலாம். ஆனால் நமக்குத் தேவையானதை மட்டும் இங்கே பார்க்கலாம். ஒருவரது எண்ணங்களில் எழும் அலைகள் நல்லதாக இருந்தால். அதுவே நல்ல ஆரோக்கியமான உடலைத் தரும். கெட்ட எண்ணங்கள் தோன்றி விட்டால், அதுவே பல நோய்களுக்கு வாசல் கதவை திறந்து விட்டு விடும். இதைத் தான் ‘எண்ணம் போல் வாழ்வு’ என் கிறார்கள். ஒரு மனிதன் தோற்றம், பிறந்த இடம், அந்த இடத்தின் சூழல், எந்த மாதிரியான உருவம் எடுத்து இருக்கிறார்கள் என்பதைப் பற்றி லக்னமே கூறுகிறது
ஒரு மனிதனுக்கு அறிவும், சமயோசித புத்தியும் கொடுப்பது இந்த லக்னம் தான். சிறிய காயம் ஏற்படும்போதே மருந்து சாப்பிட்டு விட வேண்டும், காய்ச்சல் லேசாக இருக்கும் போதே மருத்துவரை சந்தித்து விட வேண்டும் என்ற புத்தியைத் தருவது லக்னமே. ஒருவரது உடலில் எவ்விதமான நோய்களும் இருக்காது. ஆனால் தனக்கு ஏதோ ஒரு நோய் இருப்பது போல நினைக்க வைத்துக் கொண்டே இருப்பதற்கும் இந்த லக்னமே காரணம். எந்த நேரமும் சதா சிந்தனையில் மூழ்கி இருப்பதும், நிறைவேறாத கனவுகள் பற்றி நினைத்து உடலை வருத்திக் கொண்டும், கால நேரம் தவறி உணவு உட்கொண்டு பல நோய்களை வரவழைக்கும் தன்மைக்கும் முக்கிய காரணம் இந்த லக்னம் தான்.
ஒருவரது லக்னத்தை கொண்டே பிறந்த இடம், பிறந்த சூழல் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்பது போலவே, ஒருவரது மரணத்தின் அந்த கடைசி நிமிடங்கள், மரணம் அடையும் இடம், அதன் சூழல் பற்றியும் கூட இந்த லக்னத்தைக் கொண்டு கணித்துவிட முடியும். மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தும் எதனை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது என்றால், ஜோதிட சாஸ்திரத்தில் லக்னம் நின்ற நட்சத்திர அதிபதியும், லக்னம் நின்ற ராசி அதிபதி அதாவது லக்னாதிபதியும் கொண்டே இவை தீர்மானிக்கப்படுகிறது.

இவற்றில் முக்கியமாக காண வேண்டியவை:– லக்னம் நின்ற நட்சத்திர அதிபதியும், லக்னாதிபதியும் நட்பு கிரகமாக அமைந்து விட்டால் அந்த ஜாதகரின் எண்ணங்கள் ஈடேறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அடிக்கடி நோய்கள் வராது. உடல் பொலிவு உண்டாகும். லக்னம் நின்ற நட்சத்திர அதிபதியும் லக்னாதிபதியும் பகை, நீச்சம் பெற்ற கிரகமாக அமைந்து விட்டால், அந்த ஜாதகருக்கு நோய்களுக்கு குறை இருக்காது. சதா சர்வ காலமும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டே இருப்பார்.
லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி சந்திரன், குரு, புதன், சுக்ரன் ஆகிய கிரகங்களின் நட்சத்திரத்தில் நின்று, இந்த கிரகங்களில் ஒருவர் லக்னாதிபதியாக அமைந்து விட்டால் அந்த ஜாதகர் நோய்களின்றி இருப்பார். முதுமை காலத்தில் மட்டுமே நோய்கள் வரக்கூடும். லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி சூரியன் – செவ்வாய் கிரகங்களின் நட்சத்திரத்தில் நின்று, இவற்றில் எதாவது லக்னாதிபதியாக அமைந்தால், அந்த ஜாதகர்கள் கர்வம், ஆணவம், திமிர் கொண்ட போக்கால் நோய்களைத் தாங்களே தேடி கொள்வார்கள். பிடிவாதம்
முரட்டு குணம் போன்றவற்றால், ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றவற்றுக்கு ஆளாவார்கள்.
லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் நட்சத்திரத்தில் நின்று சனியே லக்னாதிபதியாக அமைந்து விட்டால், அந்த ஜாதகருக்கு என்னவென்றே கண்டுபிடிக்க முடியாத நோய்கள் கூட வரலாம். அந்தந்த காலகட்டத்தில் தோன்றி வரக்கூடிய புதிய நோய்கள் இவர்களைத் தாக்கும். ஜாதகத்தில் உயிராக போற்றப்படும்


ஜாதகர் நோய்களின்றி இருப்பார் யார்?

நாம் தேர்வு செய்யும் முகூர்த்த நாளை, அன்றைய தினம் நேத்திரம், ஜீவன் உள்ளதா? என்று கவனித்து தான் பஞ்சாங்கத்தில் குறிப்பிடுவார்கள். சுபகாரியங்கள் செய்யும் பொழுது சுபங்கள் யாவும் விருத்தியாகி வருவதற்கு அது சக்தி மிகுந்த நாளாக இருக்க வேண்டும். மனிதனுக்கோ அல்லது விலங்கிற்கோ உடலும், உயிரும் எவ்வளவு முக்கியமோ, அது போல ஒரு நாளுக்கு சக்தியாக இருப்பது நேத்திரமும், ஜீவனும் தான். ஆம்.. நேத்திரம் – ஜீவன் என்பது ஒரு நல்ல நாளுக்கு உயிரும், உடலும் போல.
நேத்திரம்– ஜீவன் இல்லாத நாளை முகூர்த்த நாளாக தேர்வு செய்ய மாட்டார்கள். நேத்திரம் என்பது உடல். ஜீவன் என்பது உயிர். சரி இந்த நேத்திரம்– ஜீவன் என்பது எதைக் குறிக் கிறது? ஒரு மனிதனுக்கு அடையாளம் என்பது உயிரும், உடலும் தான். உயிர் இல்லாத உடலை ‘பிணம்’ என்றும், உடல் இல்லாத ஜீவனை ‘ஆவி என்றும், ‘ஆன்மா’, ‘ஆத்மா’ என்றும் கூறுவார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் உயிரை ‘லக்னம்’ என்றும், உடலை ‘சந்திரன்’ என்று குறிப்பிடுகிறார்கள். ஜோதிடத்தில் லக்னம், சந்திரன் இவற்றைக் கொண்டே அனைத்து பலன்களும் கணிக்கப்படுகிறது. இந்த உலகில் தோன்றிய எல்லா உயிர்களும் ஏதோ ஒரு லக்னத்தில், ஏதோ ஒரு நட்சத்திரத்தில் பிறந்து இருக்க வேண்டும். லக்னம், சந்திரன் இன்றி எந்த விதமான ஜாதகமும் கணிக்கப்படுவதில்லை.

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் எடுத்துக் கொள் கிறது. ஒரு லக்னத்திற்கு 2 மணி நேரம் வீதம் 12 ராசிகளுக்கு 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. ‘எண் சாண் உடலுக்கு தலையே பிரதானம்’ என்பார்கள். அதுபோல தான் 12 லக்ன பாவங்களுக்கு, லக்னமே பிரதானமாக உள்ளது. இந்த லக்னத்தைக் கொண்டு ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அனுபவிக்கும் இன்பம், துன்பம், நோய்கள், வாழ்வின் உயர்வு– தாழ்வு என சகலவிதமான பலன்களை பற்றியும் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு மனிதனும் என்ன நோக்கத்திற்காக இந்த பூமியில் பிறந்தான் என்பதைக் கூட இந்த லக்னத்தைக் கொண்டே கணிக்கிறோம்.
லக்னத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நிறையக் கூறலாம். ஆனால் நமக்குத் தேவையானதை மட்டும் இங்கே பார்க்கலாம். ஒருவரது எண்ணங்களில் எழும் அலைகள் நல்லதாக இருந்தால். அதுவே நல்ல ஆரோக்கியமான உடலைத் தரும். கெட்ட எண்ணங்கள் தோன்றி விட்டால், அதுவே பல நோய்களுக்கு வாசல் கதவை திறந்து விட்டு விடும். இதைத் தான் ‘எண்ணம் போல் வாழ்வு’ என் கிறார்கள். ஒரு மனிதன் தோற்றம், பிறந்த இடம், அந்த இடத்தின் சூழல், எந்த மாதிரியான உருவம் எடுத்து இருக்கிறார்கள் என்பதைப் பற்றி லக்னமே கூறுகிறது
ஒரு மனிதனுக்கு அறிவும், சமயோசித புத்தியும் கொடுப்பது இந்த லக்னம் தான். சிறிய காயம் ஏற்படும்போதே மருந்து சாப்பிட்டு விட வேண்டும், காய்ச்சல் லேசாக இருக்கும் போதே மருத்துவரை சந்தித்து விட வேண்டும் என்ற புத்தியைத் தருவது லக்னமே. ஒருவரது உடலில் எவ்விதமான நோய்களும் இருக்காது. ஆனால் தனக்கு ஏதோ ஒரு நோய் இருப்பது போல நினைக்க வைத்துக் கொண்டே இருப்பதற்கும் இந்த லக்னமே காரணம். எந்த நேரமும் சதா சிந்தனையில் மூழ்கி இருப்பதும், நிறைவேறாத கனவுகள் பற்றி நினைத்து உடலை வருத்திக் கொண்டும், கால நேரம் தவறி உணவு உட்கொண்டு பல நோய்களை வரவழைக்கும் தன்மைக்கும் முக்கிய காரணம் இந்த லக்னம் தான்.
ஒருவரது லக்னத்தை கொண்டே பிறந்த இடம், பிறந்த சூழல் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்பது போலவே, ஒருவரது மரணத்தின் அந்த கடைசி நிமிடங்கள், மரணம் அடையும் இடம், அதன் சூழல் பற்றியும் கூட இந்த லக்னத்தைக் கொண்டு கணித்துவிட முடியும். மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தும் எதனை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது என்றால், ஜோதிட சாஸ்திரத்தில் லக்னம் நின்ற நட்சத்திர அதிபதியும், லக்னம் நின்ற ராசி அதிபதி அதாவது லக்னாதிபதியும் கொண்டே இவை தீர்மானிக்கப்படுகிறது.

இவற்றில் முக்கியமாக காண வேண்டியவை:– லக்னம் நின்ற நட்சத்திர அதிபதியும், லக்னாதிபதியும் நட்பு கிரகமாக அமைந்து விட்டால் அந்த ஜாதகரின் எண்ணங்கள் ஈடேறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அடிக்கடி நோய்கள் வராது. உடல் பொலிவு உண்டாகும். லக்னம் நின்ற நட்சத்திர அதிபதியும் லக்னாதிபதியும் பகை, நீச்சம் பெற்ற கிரகமாக அமைந்து விட்டால், அந்த ஜாதகருக்கு நோய்களுக்கு குறை இருக்காது. சதா சர்வ காலமும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டே இருப்பார்.
லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி சந்திரன், குரு, புதன், சுக்ரன் ஆகிய கிரகங்களின் நட்சத்திரத்தில் நின்று, இந்த கிரகங்களில் ஒருவர் லக்னாதிபதியாக அமைந்து விட்டால் அந்த ஜாதகர் நோய்களின்றி இருப்பார். முதுமை காலத்தில் மட்டுமே நோய்கள் வரக்கூடும். லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி சூரியன் – செவ்வாய் கிரகங்களின் நட்சத்திரத்தில் நின்று, இவற்றில் எதாவது லக்னாதிபதியாக அமைந்தால், அந்த ஜாதகர்கள் கர்வம், ஆணவம், திமிர் கொண்ட போக்கால் நோய்களைத் தாங்களே தேடி கொள்வார்கள். பிடிவாதம்
முரட்டு குணம் போன்றவற்றால், ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றவற்றுக்கு ஆளாவார்கள்.
லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் நட்சத்திரத்தில் நின்று சனியே லக்னாதிபதியாக அமைந்து விட்டால், அந்த ஜாதகருக்கு என்னவென்றே கண்டுபிடிக்க முடியாத நோய்கள் கூட வரலாம். அந்தந்த காலகட்டத்தில் தோன்றி வரக்கூடிய புதிய நோய்கள் இவர்களைத் தாக்கும். ஜாதகத்தில் உயிராக போற்றப்படும்


ஒரு சுபதினத்தை தேர்வு செய்வதற்கு முன் அன்றைய நாளில் நேத்திரம், ஜீவன் உள்ளதா?

ஒரு சுபதினத்தை தேர்வு செய்வதற்கு முன் அன்றைய நாளில் நேத்திரம், ஜீவன் உள்ளதா? என்று பஞ்சாங்கத்தில் கவனித்து பார்ப்பார்கள். ஏனெனில் சுபகாரியங்கள் நல்லபடியாக நடைபெற்று, அபரிவிதமான நல்ல பலன்களை அள்ளித்தர அந்த நாள் சக்தி வாய்ந்த நாளாக இருக்க வேண்டும்.

மனிதனுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதுபோல ஒரு நாளுக்கு மிகுந்த சக்தியை கொடுப்பது நேத்திரமும், ஜீவனும் தான். ஆம்! ஒரு நல்ல நாளுக்கு உயிரும், உடலுமாக இருப்பது நேத்திரம், ஜீவன் மட்டுமே!

நேத்திரம் என்றால் என்ன?

நேத்திரம் என்றால் கண்கள் என்று பொருளாகும். பாதைகள் சிக்கலாக இருந்தாலும் விழிகள் இருந்தால் சிக்கலையும் எளிமையாக கடந்து செல்ல இயலும் அல்லவா! அதுபோல தான் ஒருநாள் எவ்வளவு சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தாலும் அந்த நாளில் நாம் மேற்கொள்ள போகும் செயலுக்கு ஒரு உதவியோ அல்லது தடையை நீக்குவதற்கான ஆலோசனைகள் கிடைத்தால் அது சிக்கலை குறைப்பதற்கு உதவும் அல்லவா!

ஒருநாளின் வலிமையை நேத்திரம் மூலம் மூன்று வகைகளில் நாம் அறிந்து கொள்ளலாம்.


1. இரண்டு கண் உள்ள நாட்கள்:

இந்நாட்கள் மிகச்சிறந்த பலன்களை வழங்கும் நாட்கள்.

எந்தவொரு சுப செயலையும் இந்த நாட்களில் மேற்கொள்ளலாம்.

2. ஒரு கண் உள்ள நாட்கள்:

இந்நாட்கள் மிதமான பலன்களை வழங்கும் நாட்கள்.

இந்த நாட்களில் சுப செயல்களை மேற்கொள்ள சற்று கவனமாக இருப்பது நல்லது.

3. குருட்டு நாட்கள்:

இந்நாட்கள் ஆபத்துகள் மற்றும் தடைகள் நிறைந்த நாட்கள்.

இந்த நாட்களில் முக்கிய செயல்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பலவிதமான தடைகளை இந்நாட்களில் எதிர்கொள்ளலாம்.

ஆகவே, நாம் செய்யும் செயலுக்கு எந்த நாள் சரியாக இருக்கும் என்பதையும் நாம் இதன்மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

நேத்திரம் கணக்கிடும் முறை:

அஸ்வினி முதல் அன்றைய நட்சத்திரம் வரை உள்ள நாட்களை எண்ணி, அந்த எண்ணிக்கையை ஒன்பதால் வகுத்து மீதி வந்த எண்ணின் நிலையை பொறுத்து அந்த நாளின் வலிமையை அறிந்து கொள்ள முடியும்.

மீதியின் அடிப்படையில் வகைப்படுத்தல்:

மீதிகள் 1, 2, 3, 4 : இரண்டு கண் உடைய நாள் – சுபம்!

மீதிகள் 5, 6, 7 : ஒரு கண் உடைய நாள் – மத்தியமான சுபம்!

மீதிகள் 8, 9, 0 : குருட்டு நாள் – சுபம் தவிர்க்க வேண்டும்.

உதாரணத்திற்கு

ஒருநாள் 14வது நட்சத்திரம் ஆக இருந்தால்,

14 ÷ 9 = 1 மீதி 5

மீதி 5 என்பதால், ஒரு கண் உடைய நாள் – மத்தியமான பலன்களை கொடுக்கும்.

ஜீவன் என்றால் என்ன?

ஒருநாள் எவ்வளவு தான் சிறப்பு நிறைந்ததாக இருந்தாலும் அந்த நாள் ஜீவன் நிறைந்த நாளாக இருந்தால் நாம் செய்ய நினைக்கும் காரியங்களில் எதிர்பார்த்த அனைத்து வெற்றிகளும், லாபங்களும் கிடைக்கும்.

நேத்திரம் எப்படி மூன்று விதங்களில் பிரிக்கப்பட்டு இருக்கிறதோ அதேபோன்று தான் ஜீவனும் மூன்று விதங்களில் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது,

முழு ஜீவன் – முழு வாழ்க்கை, மிகச்சிறந்த நாள்.

அரை ஜீவன் – அரை வாழ்க்கை, மத்தியமான பலன்களை தரும் நாள்.

ஜீவன் இல்லாத நாள் – உயிரற்ற நாள், நல்ல காரியங்களை தவிர்க்க வேண்டிய நாள்.

ஜீவன் கணிதமுறைகள் :

சூரியன் இருக்கும் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஜீவன் வகைப்படுத்தப்படுகிறது.

சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு முன், பின் உள்ள நட்சத்திரம் ஜீவன் இல்லாத நட்சத்திரங்கள். ஆகையால் இந்நாட்களை தவிர்க்க வேண்டும்.

சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு 3, 4, 5, 6, 7, 8 முன், பின் உள்ள நட்சத்திரங்கள் அரை ஜீவன் உள்ள நட்சத்திரங்கள். மத்திம பலன்களை கொடுக்கும்.

சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு 9-13 முன், பின் உள்ள நட்சத்திரங்கள் ஒரு ஜீவன் உள்ள நட்சத்திரங்கள். நன்மையை தரும்.

நேத்திரமும் ஜீவனும் ஏற்படுத்தும் தாக்கங்கள்:

முழுமையாக நேத்திரமும், ஜீவனும் இருக்கும் நாள்:

ஒரு நாளில் நேத்திரம் இரண்டு கண்கள், ஜீவன் முழுவாழ்க்கையாக இருந்தால், நினைத்த செயல்கள் எதிர்பார்த்த முறையில் நடைபெறும். வெற்றிகள் கிடைக்கும்.

இந்நாளில் என்ன செய்யலாம்?

தொழில், கல்வி, திருமணம் போன்ற அனைத்து முக்கிய சுப செயல்களை மேற்கொள்ளலாம்.

நேத்திரமும், ஜீவனும் மத்தியமான நாள்:

ஒரு நாளில் நேத்திரம் ஒரு கண்ணாகவும், ஜீவன் அரைவாழ்க்கையாகவும் இருந்தால், சிறு அளவிலான வெற்றிகள் கிடைக்கும். ஆனால் அவ்வளவு எளிதாக வெற்றி கிடைக்காது. சவால்கள் மற்றும் அலைச்சல்கள் ஏற்படும்.

இந்நாளில் என்ன செய்யலாம்?

சாதாரண செயல்கள், நுண்ணறிவு செயல்களை மேற்கொள்ளலாம்.

நேத்திரமும், ஜீவனும் இல்லாத நாள்:

ஒரு நாளில் நேத்திரம் குருட்டாகவும், ஜீவன் உயிரற்றவையாகவும் இருந்தால் எதிர்பார்த்த வெற்றிகள் பெற முடியாது.

இந்நாளில் முக்கிய செயல்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பலவிதமான தடைகள் ஏற்படலாம்.

நேத்திரம் மற்றும் ஜீவன் ஆகியவை பஞ்சாங்கத்தின் முக்கிய அம்சங்களாகும். ஒரு நாளின் சிறப்புகளை, ஆபத்துகளை புரிந்து கொண்டு, சரியான நேரத்தில் சரியான செயல்களை மேற்கொள்ள இது உதவுகிறது. ஜோதிடர் ஆலோசனை பெறுவதன் மூலம், இந்த அம்சங்களை முழுமையாக பயன்படுத்தி, வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.


Tuesday, 25 February 2025

ஊமத்தங்காய் தீபம்


ஊமத்தங்காய் தீபம் ஏற்றினால் மகிழ்ச்சி, பணம், செல்வம் பெருகும்.. இன்று சிவராத்திரி இதை செய்து பாருங்க

 வீட்டில் ஏற்படும் கஷ்டமும், வறுமையும் நமக்கு மனதில் பெரும் கவலையை உண்டுபண்ணிவிடும்.. இந்த கஷ்டங்களை போக்க சில பரிகாரங்களை செய்ய சொல்கிறார்கள் பெரியவர்கள்.. அந்தவகையில், சிவபெருமானுக்கு ஊமத்தங்காய் தீபம் ஏற்றினால் அற்புத மாற்றங்கள் ஏற்படும் என்கிறார்கள்.

ஊமத்தங்காய் பெரிய இலைகளுடன், காய்களின் வெளிப்பரப்பில், முட்கள் அதிகமாக காணப்படும்.. இந்த செடியின் வேர், இலை, பூக்கள், விதை என எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. சித்தபிரம்மையையே நீக்கக்கூடிய இந்த ஊமத்தங்காய் வாத நோய்களை கட்டுப்படுத்தும். நரம்புகளைப் பலப்படுத்தும்.

Spirituality Oomathangai Dheepam Mahashivratri
இலை, காய், விதைகளில் மருத்துவ குணம்
இந்த இலைகளை விளக்கெண்ணை தடவி அடுப்பில் வதக்கி, உடம்பில் வலி, ரணங்கள் உள்ள இடங்களில் கட்டலாம். வலி, வீக்கம்.. மூட்டு வலிகள், மூட்டு வீக்கங்களுக்கும் இந்த இலையில் ஒத்தடம் தரலாம். பெண்களுக்கு பிரசவ நேரத்தில் தரப்படும் மயக்க மருந்துகளில், மூலப்பொருளாகவும், தாய்ப்பால் கட்டிக்கொண்டாலும் இந்த இலையே பயன்படுகிறது.

ஆன்மீகத்திலும் ஊமத்தங்காய்களுக்கு தனி இடம் உண்டு.. ஊமத்தை இலையால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதால் வீட்டிலுள்ள கஷ்டங்கள் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.. மேல்பகுதியில் முட்கள் நிறைந்த இந்த ஊமத்தங்காயில் தீபம் ஏற்றினால், வாழ்வில் ஏற்றமும், வளமும் பெருகும்..

நிதி சிக்கலை போக்கும்
கையில் பணமின்றி திணறுபவர்கள், கடன், பணப் பிரச்சனையில் சிக்கியுள்ளவர்கள், இந்த தீபத்தை ஏற்றினால் 3 வாரங்களில் நல்ல மாற்றத்தை காணலாம்.. நாட்டு மருந்து கடைகளில் இந்த காய்கள் கிடைக்கின்றன.

வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில், ஒரு மஞ்சள் துணியில், 1 ரூபாய் நாணயம், ஊமத்தங்காய், ஊமத்தம்பூவை வைத்து, முடிச்சு போட்டு, வீட்டின் நிலைவாசலில் கட்டி தொங்க வைத்துவிட வேண்டும். வீட்டில் தீபம் ஏற்றி ஊதுபத்தி காண்பிக்கும்போது இந்த முடிச்சுக்கும் ஊதுவத்தி காண்பிக்க வேண்டும்.

விநாயகருக்கு ஊமத்தம் பூக்கள்
ஊமத்தம் பூக்களை ஒற்றை எண்ணிக்கையில், விநாயகருக்கு வீட்டில் சூட்டி வரலாம்.. 3 வார திங்கட்கிழமை விநாயகருக்கு ஊமத்தை இலை அர்ச்சனை, ஊமத்தம் பூவைச் சூட்டி, உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டாலும், விரைவில் நல்ல மாற்றத்தை காணலாம்.

இன்று சிவராத்திரி என்பதால், ஊமத்தங்காய் பரிகாரம் செய்யலாம். சிவராத்திரியில், நிஷிதா பூஜையின் போது, மகாதேவனை நினைத்து, சிவலிங்கத்தின் மீது ஒரு ஊமத்தங்காயை அர்ப்பணிக்க வேண்டும்.. பிறகு ஸ்ரீ சிவாய நமஸ்துப்யம் மந்திரத்தை உச்சரித்து, அரைமணி நேரம் வழிபாட்டிற்கு பிறகு, அந்த ஊமத்தங்காயை ஒரு துணியில் கட்டி உங்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்துவிடலாம். இதனால் வீட்டிலுள்ள வறுமை நீங்கி உங்கள் செல்வமும் மகிழ்ச்சியும் பெருகும்.

கண்திருஷ்டிக்கு விளக்கு
அதேபோல, இந்த ஊமத்தங்காய்களின் காம்புகளை நீக்கி விட்டு, சிறிய துளை போட்டு, அதற்குள்ளிருக்கும் வீதைகளை நீக்கிவிட வேண்டும். பிறகு சிறிது வெண்கடுகு போட்டு, ஒரு சிறிய மண் அகல் விளக்கின் மீது உமத்தங்காய்களை, அதனுள் இலுப்பை எண்ணெய் மட்டுமே ஊற்றி பஞ்சு திரி போட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றிவைத்துவிட்டு சிவபெருமானை வேண்டிக் கொண்டால் போதும். தொடர்ந்து 9 ஞாயிற்றுக்கிழமை இந்த தீபத்தை ஏற்றி வந்தால், கண் திருஷ்டி, வறுமை, நிதி பற்றாக்குறை என அனைத்துமே விலகிவிடும்.


Sunday, 23 February 2025

கொட்டைப் பாக்கு.


ஒரு கொட்டைப் பாக்கை இரவில் தண்ணீரில் ஊற வைத்து... கொலஸ்ட்ரால், மலச் சிக்கலுக்கு சூப்பர் தீர்வு
கொட்டைப் பாக்கை இரவில் தண்ணீரில் ஊற வைத்து குடித்தால், கொலஸ்ட்ரால், மலச் சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் கொட்டைப் பாக்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.

kottai paakku dr nithya
தாம்பூலத்தில் சேர்க்கப்படும் முக்கியமான ஒரு பொருள் கொட்டைப் பாக்கு. இந்த கொட்டைப் பாக்கிற்கு சித்த மருத்துவத்தில் ஒரு முக்கிய இடம் இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு கொட்டைப் பாக்கை மறந்துவிட வேண்டாம்.

கொட்டைப் பாக்கை இரவில் தண்ணீரில் ஊற வைத்து குடித்தால், கொலஸ்ட்ரால், மலச் சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் என்று டாக்டர் நித்யா பரிந்துரைக்கிறார். கொட்டைப் பாக்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.

கொட்டைப் பாக்கின் மருத்துவ குணம் குறித்து “பொதுவாக சாப்பிட்ட பிறகு வழக்கத்தில் இருந்த தாம்பூலம் தரிப்பது மறைந்து வருகிறது. அந்த தாம்பூலத்தில் சேர்க்கப்படும் முக்கியமான ஒரு பொருள் கொட்டைப் பாக்கு. இந்த கொட்டைப் பாக்கிற்கு சித்த மருத்துவத்தில் ஒரு முக்கிய இடம் இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு கொட்டைப் பாக்கை மறந்துவிட வேண்டாம்.

பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான நோய்களுக்கு தரப்படும் சித்த மருந்துகளில் ஒரு முக்கிய மூலிகையாக கொட்டைப் பாக்கு இருக்கிறது.

பலரும் எடை குறைவாகத்தான் இருக்கிறேன், ரத்தத்தில் சுகர் இல்லை, ஆனால், கொலஸ்ட்ரால் இருக்கிறது என்று கூறுவார்கள். பொதுவாக துவர்ப்பு சுவை உள்ள பொருட்களுக்கு கொழுப்பை வெளியேற்றக்கூடிய ஆற்றல் இருக்கிறது. அந்த வகையில் துவர்ப்பு சக்தி உள்ள கொட்டைப் பாக்கிற்கு, உடலில் உள்ள கொழுப்பை வெளியேற்றக்கூடிய ஆற்றல் இருக்கிறது. ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்பையும் கரைக்கக்கூடியது.

இந்த கொட்டைப் பாக்கை எப்படி பயன்படுத்தலாம் என்றால், கொட்டைப் பாக்கை பவுடர் மாதிரி அரைத்து வைத்துக்கொண்டு, இதை வெந்நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துக்கொண்டு வர வேண்டும். அப்படி குடித்து வந்தால், கொலஸ்ட்ரால் பிரச்னை சரியாகும். பெண்களுக்கு தைராய்டு பிரச்னை, ஃபைப்ராய்டு யுட்ரெஸ் பிரச்னை இருந்தால், இந்த கொட்டைப் பாக்கு தண்ணீரை குடிக்கலாம்.

கொட்டைப் பாக்கை பவுடர் செய்ய முடியாது என்றால், அவர்கள் இரவில் ஒரு கொட்டைப் பாக்கை எடுத்து தூளாக நசுக்கி 300 மி.லி தண்ணீரில் ஊற வைத்துவிட வேண்டும். காலையில் அந்த தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து, இதனுடன் சோம்பு, சீரகம் கொஞ்சமாக சேர்த்து, 100 - 150 மி.லி ஆக வர வரைக்கும் நன்றாகக் கொதிக்க வைத்து, வடி கட்டி குடிக்க வேண்டும். இப்படி கொட்டைப் பாக்கை தண்ணீரை தினமும் குடித்து வந்தால் தைராய்டு பிரச்னை, மாதவிடாய் பிரச்னை ஆகியவை சரியாகும்.

நெஞ்சில் சளி இருந்தால், கபம் இருந்தால் இந்த கொட்டைப் பாக்கு பவுடரை வெந்நீரில் கலந்து குடித்தால் வெளியேற்றும். மலச்சிக்கலைத் தீர்க்கும்

Saturday, 22 February 2025

மறைவு ஸ்தானம் தரும் பலன்கள்

 
மறைவு ஸ்தானம் தரும் பலன்கள்

 கேந்திரம் 1, 4, 7, 10 ஆகிய இடங்கள், திரிகோணம் 1, 5, 9 ஆகிய இடங்கள், பணபரம் 2, 5, 8, 11 -ம் இடங்கள், ஆபோக்லீபம் 1, 3, 6, 9, 12-ம் இடங்கள், மறைவு ஸ்தானங்கள் 3, 6, 8, 12 ஆகிய இடங்கள் சொல்லப்படுகிறது. இதில் கேந்திரம், திரிகோணம் ஆகியவை மிக முக்கிய சுப ஸ்தானங்கள் ஆகும். அதே போல் மறைவு ஸ்தானங்களை ‘துர்ஸ்தானம்’ என்கிறார்கள். ஒரு மனிதனுக்கு தன்னுடைய வாழ்வில் நடக்கும் கெட்ட சம்பவங்கள் அனைத்தும் மறைவு ஸ்தானத்தில் தான் சொல்லப்படுகிறது. நம்முடைய கண்களுக்கு புலப்படாத அனைத்துமே ‘மறைவு’ என்று பொருள் கொள்ளப்படுகிறது. கண்களால் காண முடியாத அனைத்தும் பொய் என்றும், அறியப்படாத பொருள் என்றும் கருதப்படுகிறது. இவ்வாறு அறியப்படாத விஷயங்கள் அனைத்தையும் மறைவு ஸ்தானத்தில் ஆதிபத்தியங்களாக வைத்திருக்கிறார்கள்.
ஒருவரது வாழ்வில் மறைந்து இருக்கும் விஷயங்களை கூட வெளிக்காட்டி கொடுக்கும் சக்தி ஜோதிடத்திற்கு உண்டு. அவ்வாறு மறைந்து இருக்கும் விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளத் தான் மறைவு ஸ்தானம் என்பதை உருவாக்கினார்கள். ஒருவருக்கு நோய், ஆயுள், மனோபாவம் இவற்றை எல்லாம் மறைவு ஸ்தானத்தில் விரிவாக பார்க்கலாம்.மூன்றாம் பாவம் ஜாதகத்தில் உள்ள ராசி கட்டத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாவது கட்டமாக இருப்பதே மூன்றாம் பாவமாகும். இது சகோதர பாவமாக உள்ளது. இதில் ஜாதகருக்கு பின்னும் சகோதர, சகோதரிகள் இருக்கிறார்களா? என்பது பற்றியும், அந்த சகோதரர்கள் வாழ்க்கை தரம் பற்றியும், அவர்களுக்கு வரக்கூடிய நோய்கள் பற்றியும் அவர்களது மனோபாவ நிலைகளை பற்றியும் எடுத்துக் கூறலாம்.

அதே போல் ஜாதகரின் மனம், அந்த மனதின் நிலைபாடுகள் பற்றியும் பார்க்கலாம். கடல் அளவு துன்பம் வந்தாலும் அதனை தாங்கி நிற்கும் மனதைரியம் பற்றி பார்க்கலாம். இவரது மனதில் தோன்றும் ஆயிரம் ஆசைகள் மற்றும் கற்பனைகள், எண்ணங்களின் வடிவமாக தோன்றக்கூடிய கனவுகள், எதிர்பாராமல் நடக்கும் சில சம்பவங்கள் அதன் நினைவு அலைகள் பற்றி இந்த மூன்றாம் பாவம் தான் கூறுகிறது. நமது உடல் உறுப்புகளாக இருக்கும் கழுத்து பகுதி, காது மற்றும் குரல், தொண்டை, மூச்சுக் குழாய் மற்றும் உணவு குழாய் உள்ள பகுதி, நாசி இவற்றை எல்லாம் இங்குதான் காண முடிகிறது. நம்மை யாராவது நினைத்தால் உடனே நமக்கு தோன்றும் விக்கல், மனதிலும் எண்ணத்திலும் தோன்றும் கற்பனைகள் மற்றும் குண்டலினி சக்தியாக திகழும் தியான கலை போன்றவை கை கூடி வர இந்த பாவத்தையே பார்க்க வேண்டும்.

‘அக சுத்தம் ஆண்டவனின் சித்தம்' என்பார்கள். அவ்வாறு மனதை தூய்மையாக வைத்து இருக்க செய்வது இந்த பாவம் தான். மேலும் மனம், தைரியம், எண்ணம், கற்பனை, நினைவுகள், குரல் தோன்றும் இடம் இவையாவும் நம் கண்களில் காண முடியாது என்பதால், ஜோதிடத்தில் இந்த மூன்றாம் பாவத்தை மறைவு ஸ்தானமாக வைத்து இருக்கிறார்கள். இந்த மூன்றாவது ஸ்தானத்தில் நின்ற கிரகங்களின் பலன்களைப் பற்றி பார்ப்போம். * மூன்றாம் பாவத்தில் சூரியன் நின்றால், ஜாதகருக்கு சிம்ம குரல் இருக்கும். அவசியமற்ற தேவையற்ற சிந்தனைகள், கற்பனைகளை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். அசுரத்தனமான மன தைரியம் கொண்டவர். இவரது மனமும், உடலும் வேகமாக இருக்கும். இவருக்கு பின் சகோதரர் இருப்பார்.

* மூன்றாம் பாவத்தில் சந்திரன் நின்றால், ஜாதகருக்கு மெல்லிய குரல் இருக்கும். கற்பனைத் தேரில் பறந்து கொண்டே இருப்பார். சந்திரன் மூன்றில் மறைவதால், ஏதாவது நோய் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். சமயத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக் கொள்வார்கள். ஆன்மிகம், தியானம் இவற்றில் மனம் நாடும். ஜாதகருக்கு பின் சகோதரி ஒருவர் இருப்பார். * மூன்றாம் பாவத்தில் செவ்வாய் நின்றால், அந்த ஜாதகர் எப்போதும் டென்ஷனாக இருப்பார். பேச்சுகளில் அதட்டல் குரல் வெளிப்படும். மனதில் கள்ளம் கபடம் இன்றி நேர்மையாக இருப்பார்கள். இவர்களுக்கு உடல் சூடு இருக்கும். இவர்களுக்கு மனம் ஒருநிலை கொள்ளாது இருப்பதே ஒருவகை நோய் தான். நாசி பகுதியிலும், கழுத்துப் பகுதியிலும் வலிகள் வந்து போகும்.
* மூன்றாம் பாவத்தில் புதன் நின்றால், நடைமுறைக்கு சாத்தியப்படாத கற்பனையில் வாழ்வார்கள். இவர்களுக்கு மூச்சுக்குழாய் இறுகிக் கொள்வது, உணவு உண்பதில் சிரமம், அடிக்கடி தொண்டை குழி வறண்டு போவது, தொண்டை வலி போன்றவை உண்டாகும். சில சமயம் மூச்சு திணறல் மற்றும் தூசி படலத்தால் ஒவ்வாமை இருக்கும். கழுத்தில் மருக்கள், மச்சம் இருக்கும். இந்த ஜாதகர் சாந்தமான குரல் கொண்டிருப்பார். * மூன்றாம் பாவத்தில் குரு நின்றால், கழுத்து பகுதியில் சதை பற்று அதிகமாக இருக்கும். கணீர் என்ற வெண்கல குரல் இருக்கும். காதுகளில் நமைச்சல் உணர்வு இருக்கும். மன வசீகர சக்தி இருக்கும். சுவாச கோளாறுகள் வரக்கூடும். வயது ஆகும் போது சில இடங்களில் வாயுத்தொல்லை ஏற்படும்.
* மூன்றாம் பாவத்தில் சுக்ரன் நின்றால், இனிமையான குரலில் பேசும் தன்மை கொண்டவராக இருப்பார். இவர்களுக்கு நாசியில் பிரச்சினை வரக்கூடும். காதுகளிலும் நரம்புகளிலும் பிரச்சினை வரலாம். கற்பனைகள், கனவுகளுக்கு அளவு இல்லை என்றாலும், அவை எல்லைகடந்ததாக இருக்கும். முதுமை காலத்தில் சில பிரச்சினைகள் வரும். * மூன்றாம் பாவத்தில் சனி நின்றால், ஜாதகர் கழுத்து மற்றும் நாசி பகுதியில் பிரச்சினைகள் வரும். மனம் கெட்டவைகளை பற்றியே சிந்திக்கும். காது மந்தமாக கேட்கும். மூச்சு பிடிப்பு, கழுத்து பிடிப்பு இருக்கக்கூடும். அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவதால் தொண்டையில் எலும்புகள், மீன் முள் அடிக்கடி மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு. பேசுவது கூட பிறருக்கு கேட்காதபடி மந்தக்குரலாக இருக்கும்.
* மூன்றாம் பாவத்தில் ராகு நின்றால், கழுத்து நீண்டு இருக்கும். நல்ல குரல் ஓசை இருக்காது. அடிக்கடி விக்கல் வரும். உணவு குழாய் சீராய் வைத்து கொள்ள வேண்டும். மனக்குழப்பம், மனதைரியம் இல்லாமல் இருப்பதாலேயே பாதி நோய்க்கு ஆளாகி விடுவார்கள். * மூன்றாம் பாவத்தில் கேது நின்றால், மனம் கெட்டதையே நாடும். பொறாமை, சூது, வஞ்சம் என்கிற மனப்போக்கில் இருப்பார்கள். மன தைரியம் குறைந்தாலும், காரியத்தில் கண்ணாக இருப்பார்கள். உணவும், சுவாசமும் இவற்றில் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும். கழுத்து வலி, கழுத்தில் மருக்கள், மச்சம் இருக்கும். குரல் ஓசை கேட்கும்படியாக இருக்காது.
மூன்றாம் பாவம் என்னும் மறைவு ஸ்தானங்களில், நவக்கிரகங்களும் நின்றால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்த்தோம். இந்த பாவத்தில் கூட்டுக் கிரகங்கள் இருந்தால் அவற்றுக்கு ஏற்றபடி பலன்கள் மாறுபடும். மூன்றாம் பாவத்தில் எந்த கிரகமும் இல்லையென்றாலும் மூன்றாம் பாவ அதிபதி எங்கு உள்ளார் என்பதைப் பொறுத்தும், எந்த கிரகத்தோடு சேர்ந்து இருக்கிறாரோ அவற்றுக்கு ஏற்றபடியும் பலன்கள் மாறுபடும். அதாவது மூன்றாம் பாவாதிபதி மற்றும் மூன்றாம் பாவத்தை பார்க்கும் கிரகத்தை விட மூன்றாம் பாவத்தில் நின்ற கிரகமே வலிமையான கிரகமாக இருக்கும்.
மூன்றாம் பாவத்தில் சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்ரன் இந்த கிரகங்கள் நின்றால் நல்லது. இவை தவிர செவ்வாய், சனி, ராகு, கேது நிற்கக் கூடாது. மறைந்த இடத்தில் கெட்ட கிரகங்கள் நின்றால் நல்லது என்றாலும் அதன் பாதிப்புகள் துன்பத்தைத் தருவதாக அமைந்து விடும். மூன்றாம் பாவம், சுப கிரக பார்வையில் இருந்தால் சில நன்மைகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. ஜோதிட நூல்கள் மூன்றாம் பாவத்தை மறைவு ஸ்தானமாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த மூன்றாம் பாவத்திற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் இல்லை. ஏனெனில் மூன்றாம் பாவத்திற்கு எதிர் பாவமாக பாக்கிய ஸ்தானமாக 9-ம் பாவம் உள்ளது. இந்த ஒன்பதாம் பாவம் சிறப்பாக அமைந்தால், அது மூன்றாம் பாவத்தின் பிரச்சினைகளை குறைத்து விடும் என்பது ஜோதிட விதியாகும்.


பணபர ஸ்தானங்கள்



பணபர ஸ்தானங்கள்



பணபர இல்லங்கள் (ஸ்தானங்கள்) என்பது ஒரு ஜாதக கட்டத்தில் தன ஸ்தானமான 2-ஆம் இடமும், பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடமும், ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடமும் மற்றும் லாப ஸ்தானமான 11-ஆம் இடமும் ஆகும்.

பணபர ஸ்தானங்கள் (2,5,8,11 ) என்பது கேந்திர ஸ்தானங்களுக்கு (1,4,7,10) அடுத்தடுத்த ஸ்தானங்கள் ஆகும்.

"காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!

கைக்கு கை மாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே !

ஒருவர் சாதகம் பார்க்க வரும்பொழுது கூட "நான் எப்ப பணக்காரன் ஆவேன்?" என கேள்வி கேட்பவர்களே பெரும்பாலனவர்கள் உள்ளனர்.

"திரை கடலோடியும் திரவியம் தேடு " என்பது தமிழர்களின் வாழ்வியல் இலட்சியம் அகும்.



பணபர ஸ்தானம் என்பது பணம் சேர்க்கும் யுக்தி அல்லது தந்திரம் ஆகும். மற்றவர் கைகளிலும் மற்றும் பைகளிலும் உள்ள பணத்தினை தனது பைகளுக்கும் மற்றும் கைகளுக்கும் வர வைக்கும் யோகம் ஆகும்.

ஒருவரால் சேர்க்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் சாதக கட்டத்தில் பணபர ஸ்தானமான எந்த சாதக கட்டத்தில் அடங்கும் என்பதனை இப்பதிவில் விரிவாக காண்போம்.

இரண்டாம் இடம்

ஒருவன் தனது கடின உடல் உழைப்பால் சேர்க்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் முதல் பணபர ஸ்தானமான அதாவது தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் அடங்கும்.

ஒருவர் எந்த விதமான அடிப்படை இன்றி தனது உடல் உழைப்பையே மூலதனமாக கொண்டு சேர்க்கும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் இவ்வகையில் அடங்கும்.

ஐந்தாம் இடம்



ஒருவன் தனது புத்தியாலும் மற்றும் பூர்வீக வழியிலும் சேர்க்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துகள் அனைத்தும் இரண்டாம் பணபர ஸ்தானமான அதாவது பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் ஐந்தாம் இடத்தில் அடங்கும்.

ஒருவன் தான் கற்ற கல்வியாலோ அல்லது பெற்ற வித்தையாலோ சேர்க்கப்படும் பணம் இந்த ஸ்தானத்தில் சேரும்.

"கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு " என்ற பாடல் வரிப்படி தனது புத்தி மற்றும் கற்பனை உணர்வு மற்றும் இராஜதந்திரம் முதலிய வகைகளில் சேர்க்கப்படும் பணம் இந்த வகைகளில் அடங்கும்.

எட்டாம் இடம்

ஒருவருக்கு மறைமுக வழிகளிலோ அல்லது எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாடு சென்று பொருள் ஈட்டல் அனைத்தும் மூன்றாம் பணபர ஸ்தானமான ஆயுள் ஸ்தானம் என்று அழைக்கப்படும் எட்டாம் இடத்தில் அடங்கும்.



அதாவது ஒருவருக்கு லாட்டரி, ரேஸ், கமிஷன் போன்ற எதிர்பாராத அதிர்ஷ்டம் மூலமாகவும், வெளிநாடு சென்று பொருள் ஈட்டல் மற்றும் மனைவி வழியாக வந்து சேரும் செல்வம் ... இது போன்ற வகைகளில் சேர்க்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இவ்வகையில் அடங்கும்.

பதினொன்றாம் இடம்

ஒருவர் தனது தொழில் ஸ்தானமான பத்தாமிடத்திற்கு ஏற்ற வகையில் மேற்கண்ட தொழில் மூலம் ஒருவர் அடையும் லாபத்தின் வழிநின்று சேர்க்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் இவ்வகையில் அடங்கும்.

ஒருவர் தனது சாதக கட்டத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்திற்கு ஏற்ப கர்ம வினைப் படி தொழில் செய்து லாபம் சேர்ப்பது ஆகும்.






பணபரம்

ஜாதகத்தில் பணம் சம்பாதிக்கும் தன்மை, செல்வம், செழிப்பு ஆகியவற்றை பணபரம் என்கிறார்கள். ஒருவரின் வாழ்க்கையில் செல்வம் செழிப்புடன் அமையுமா அல்லது வறுமையில் கஷ்டப்பட நேரிடுமா என்பதை பணபரம் மூலம் அறியலாம். 
ஜாதகத்தில் செல்வ கேந்திரம் எனப்படும் 2, 5, 8, 11 ஆகிய இடங்களைக் கொண்டே ஒருவரின் பணபரத்தை அறியலாம். இந்த இடங்களின் அமைப்பை வைத்து, ஒருவருக்கு சுயதொழில் மூலம் செல்வம் சேர்க்கை ஏற்படுமா அல்லது வேலை மூலம் செல்வம் சேர்க்கை ஏற்படுமா என்பதை அறியலாம். 
நல்ல முகூர்த்தங்களில் ஆரம்பிக்கப்படும் செயல்கள் நல்ல பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை. தீய முகூர்த்தங்களில் ஆரம்பிக்கப்படும் செயல்கள் துன்பத்தை விளைவிக்கும் என்பது நம்பிக்கை. 

பணபரம்

பணபரம்

பணபரம் என்ற சொல் ஜோதிடத்தில் ஒருவருடைய ஜாதகப்படி ஒருவருக்கு பணம் வரும் வழிகளை ஆராய்வதற்கு பயன்படுகிறது. லக்னத்தில் இருந்து 2,5,8,11 போன்ற இடங்கள் பணபர ஸ்தானம் என்று கருதப்படுகிறது. இதில் இரண்டாமிடம் ஒருவரின் பண வருவாய் விகிதத்தினை சொல்கிறது, ஐந்தாமிடம் ஒருவர் முற்பிறவியில் செய்த நல்வினை சார்ந்து இப்பிறவியில் ஏற்படும் தனயோகத்தினை குறிப்பிடுகிறது. எட்டாமிடம் எதிர்பாராத மற்றும் மறைவான தனங்களை சுட்டி காட்டுகிறது. பதினொன்றாம் இடம் தனது தொழில் மற்றும் உத்தியோகம் மூலம் ஏற்படும் தனவரவு மற்றும் லாபத்தினை குறிக்கிறது.
பணபரம் கொண்டு ஒருவருடைய பொருளாதார நிலைமையை அறிந்து கொள்ள இயலும்.

உப ஜெய ஸ்தானம்


வாழ்வில் உச்சம்தொட வைக்கும் உப ஜெய ஸ்தானம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

lucky Rasi after age of 40 | 40 வயதிற்கு மேல் அதிஷ்டம் பெறும் ஜாதகம் என்ன என்பதை இங்கு தெரிந்துக்...மேலும் படிக்கவும்


உபஜெய ஸ்தானமான 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய சுபக்கிரகம் நிற்பது உபஜெய யோகமாகும். முன்னேற்றமும் செல்வமும் இவர்களைத் தேடி தானே வரும். சூரியனுக்கு இருபுறமும் சுபக்கிரகங்கள் இருப்பது, உபசரி யோகமாகும்.
40 வயதிற்கு மேல் உங்களுக்கு அதிர்ஷடம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படி இருக்கும் போது, உப ஜெய ஸ்தானத்தில் இருந்து ஒரு கிரகம் திசை நடத்தினால் அது நிச்சயமாக உங்களை வாழ்க்கையின் உயரத்தை நோக்கி பயணம் செய்ய வைக்கும். இதில் எந்த தசா புத்தியாக வேண்டுமென்றாலும் நடக்கலாம். கெட்டதாக இருந்தால் வாட்டி வதைக்கும். நல்லதாக இருந்தால் அள்ளி கொடுக்கும்.

உப ஜெயம் அப்படி என்றால் வெற்றிக்கு பக்க துணையாக இருக்கக்கூடிய பாவங்கள். நீங்கள் எந்த லக்னமாக வேண்டுமென்றாலும் இருங்கள். உங்களுக்கு மூன்றாம் இடம், ஆறாம் இடம், பத்தாமிடம், பதினொன்றாம் இடம் ஆகியவை உப ஜெய ஸ்தானங்கள் ஆகும்.







உப ஜெய ஸ்தானத்திலிருந்து ஒரு கிரகம் நல்ல பாவாதிபதியாக இருந்து திசை நடத்திக் கொண்டிருந்தால் உங்களுக்கு என்ன தேவையோ எல்லாமே கிடைக்கும்.

ஆனால் அவர் லக்னத்திற்கு பாவியாக இருந்தால் கொஞ்சம் அது குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கொடுப்பது குறையவே குறையாது. 40 வயதிற்கு முன்னதாகவும் இது போன்ற விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

ஆனால் 40 வயதிற்கு கண்டிப்பாக நடக்கும். இதற்கு திரி சூனியம், அஸ்தங்கம், பாதகம் என பலவை இருக்கிறது. அதை பொறுத்து கூடவோ குறையவோ கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.



பணபரம்

பணபரம்

பணபரம் என்ற சொல் ஜோதிடத்தில் ஒருவருடைய ஜாதகப்படி ஒருவருக்கு பணம் வரும் வழிகளை ஆராய்வதற்கு பயன்படுகிறது. லக்னத்தில் இருந்து 2,5,8,11 போன்ற இடங்கள் பணபர ஸ்தானம் என்று கருதப்படுகிறது. இதில் இரண்டாமிடம் ஒருவரின் பண வருவாய் விகிதத்தினை சொல்கிறது, ஐந்தாமிடம் ஒருவர் முற்பிறவியில் செய்த நல்வினை சார்ந்து இப்பிறவியில் ஏற்படும் தனயோகத்தினை குறிப்பிடுகிறது. எட்டாமிடம் எதிர்பாராத மற்றும் மறைவான தனங்களை சுட்டி காட்டுகிறது. பதினொன்றாம் இடம் தனது தொழில் மற்றும் உத்தியோகம் மூலம் ஏற்படும் தனவரவு மற்றும் லாபத்தினை குறிக்கிறது.
பணபரம் கொண்டு ஒருவருடைய பொருளாதார நிலைமையை அறிந்து கொள்ள இயலும்.

கேந்திரம்

ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் எல்லா இடங்களுமே முக்கியமானவை. ஆனால், இதில் கேந்திரம் எனப்படும் 1, 4, 7, 10-ம் இடங்கள் ஒருவரின் சுகம், வாழ்க்கைத்துணை, ஜீவனம் ஆகியவற்றைக் குறிக்கிறது. 'முதன்மை கேந்திரங்கள்' என்று இவற்றைத்தான் சொல்வார்கள். 
கேந்திரங்கள் எனப்படும் லக்னம், 4-ம் இடம், 7-ம் இடம், 9-ம் இடம் ஆகியவற்றில் அமைந்திருக்கும் கிரகங்கள், ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால், அந்த அமைப்பு, 'பஞ்ச மஹா புருஷ யோகம்' எனப்படும். 

உதாரணமாக மேஷம் லக்னம் என்று வைத்துக்கொண்டால், மேஷத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றோ அல்லது சூரியன் உச்சம் பெற்றோ இருப்பதுடன், லக்னத்துக்கு 4-ம் இடமான கடகத்தில் சந்திரன் ஆட்சியாகவும் அல்லது குரு உச்சமாகவும்; 7-ம் இடமான துலாமில் சுக்கிரன் ஆட்சியாகவும் அல்லது சனி உச்சமாகவும்; 10-ம் இடமான மகரத்தில் சனி ஆட்சியாகவும் அல்லது செவ்வாய் உச்சமாகவும் அமைந்திருந்தால், 'பஞ்ச மஹா புருஷ யோக'மாகும்.

இதில் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியோர் அவர்களின் தசா புக்திகளில் 'கேந்திர ஆதிபத்ய தோஷம்' எனும் தோஷத்தையும் கொடுப்பார்கள். 
லக்னம் எனும் முதல் பாவம் 

உடல்வாகு, நிறம், மற்றவர்களைக் கவரும் அழகு, செல்வம், உடலில் உள்ள ரத்தத்தின் தன்மை, தலைப்பகுதி ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கும். மேலும் புகழ், சுகம், சுபநிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கும் பொறுப்பேற்கும் இடமாகும். 

அடித்தளம் பலமாக அமைந்தால்தான் கட்டடமும் உறுதியாக ஆண்டாண்டு காலத்துக்கு நிலைத்திருக்க இயலும். அதேபோன்று லக்னம் பலமாக அமைந்தால்தான் அனைத்தையும் அனுபவிக்கும் யோகமும் நீண்ட ஆயுளும் கிடைக்கும். வாழ்க்கையின் வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால் மட்டும் போதாது. லக்னமும் லக்னாதிபதியும் பலமாக அமைய வேண்டும்.

சுகஸ்தானம் எனும் 4- இடம்

வசிக்கும் வீடு, வியாபாரம், தாய், தாயின் உறவு, உறவினர்களின் நிலை, உயர்கல்வி, வாகனம், வீட்டில் நடைபெறுகின்ற சுப நிகழ்ச்சிகள், புகழ், புதையல், பால், பசுக்கள், திருத்தல தரிசனம், பயணம், கனவுகள், மருந்துகள், அதிகாரம் ஆகியவற்றுக்கு 4-ம் இடம் பொறுப்பேற்கும்.

4 - ம் இடத்தையும் புதனின் பலத்தையும் அறிந்து ஒருவரின் கல்வி, மற்றும் உயர்கல்வி எப்படி அமையுமெனக் கூறி விடலாம்.

4 - ம் இடத்தையும் சுக்கிரனின் பலத்தையும் அறிந்து, ஒருவரின் வாகன யோகம், ஆபரணச் சேர்க்கை, ஆகியவற்றின் நிலையை அறியலாம்.

4 - ம் இடத்தையும் செவ்வாயின் பலத்தையும் அறிந்து ஒருவரின் அசையாத சொத்துகளான வீடு, நிலம், தோட்டம், பண்ணை வீடுகள் இவற்றை அறியலாம்.

களத்திரம் எனும் 7 - ம் இடம்

திருமணத்தைக் குறிக்கும் இடமாகும். ஆண்களுக்கு மனைவியைப் பற்றியும், பெண்களுக்கு கணவரைப் பற்றியும் அறிவிக்கும் பாவம். திருமணம் நடைபெறும் காலம், மனைவி, கணவன், ஆயுள், சுற்றுப்புறச் சூழ்நிலை, கூட்டு வியாபாரம், திருமணத்தால் ஏற்படும் சுகம், மகிழ்ச்சி, அரசாங்கத்தால் கிடைக்கும் கவுரவம், பட்டம், பதவி, சன்மானம் ஆகியவற்றுக்கு இந்த 7 -ம் இடம் பொறுப்பேற்கும். 

தவிர பஞ்சு, பருத்தி, தறி நெய்தல், கமிஷன் தொழில், தரகர் தொழில் இவற்றையும் குறிக்கும். களத்திரஸ்தானம் எனப்படும் இந்த 7-ம் இடம் வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் எடுத்துக் கூறும்.

ஜீவனம் எனும் 10 - ம் இடம்

'உத்தியோகம் புருஷ லக்ஷணம்' என்று கூறுவார்கள். பணியாற்றுதல், தொழிலால் பெறும் லாபம், புகழ், உயர் பதவி, அரசாங்க கௌரவம், புகழ், பட்டம், பதவி, அரசாளும் யோகம், தெய்வ வழிபாடு, உணவில் ஏற்படும் ஆர்வம், சுவையான உணவு கிடைத்தல் ஆகியவற்றுக்கு இந்த 10- ம் இடம் பொறுப்பேற்கும். 'தொழில் ஸ்தானம்', 'கர்ம ஸ்தானம்', 'ஜீவன ஸ்தானம்' எனப் பல பெயர்களில் இந்த இடத்தை அழைப்பார்கள். இந்த இடம்தான் ஒருவரின் ஜாதகத்தில் உயர்ந்த இடமாகும். 
ஜாதகத்தில் இடம் அமைவதை வைத்துத்தான் ஜாதகரின் வாழ்க்கையை உறுதிப்படுத்த முடியும். அரசுப்பணியா, தனியார்த்துறையா, சொந்தத்தொழிலா, கூலித்தொழிலா என்பதைத் தெளிவாகக் கூறும் இடம் இந்த 10-ம் இடம்'' என்று கூறினார்.