jaga flash news

Monday, 7 July 2025

வீட்டிற்கு நிறைய எறும்பு வருதா?



வீட்டிற்கு நிறைய எறும்பு வருதா? உங்கள் வீட்டில் நடக்கப்போகும் சகுனம் இதுதான்
 
வீட்டில் அடிக்கடி எறும்பு வந்தால் அதற்கான காரணம் தெரிந்துவிட்டு விரட்டுவதா இல்லையா என்பதை சரியாக யோசித்து செய்யுங்கள்.

வீட்டில் எறும்புகள் வருவதன் சகுனம்
வீட்டில் எறும்புகள் தோன்றுவது சாதாரணமானதுதான், ஆனால் அதன் பின்னால் சில மறைந்த நம்பிக்கைகள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது. இது நல்லதும், கெட்டதுமான பல அறிகுறிகளை சுட்டிக்காட்டுகிறது.


எறும்புகள் சில நேரங்களில் சுவர்களிலும், சில நேரங்களில் தரையிலும் ஊர்ந்து செல்லும் காட்சிகள் எங்களை அசௌகரியப்படுத்தலாம்.

வீட்டிற்கு நிறைய எறும்பு வருதா? உங்கள் வீட்டில் நடக்கப்போகும் சகுனம் இதுதான் | Ants In The House Mean In Terms Of Omen Vastu



இதனால், பலரும் அவற்றை விரட்ட வீட்டு வைத்தியம் அல்லது இயற்கை முறைகள் பயன்படுத்துவார்கள். ஆனால், வீட்டில் எறும்புகள் இருப்பது வெறும் தொல்லை மட்டுமல்ல; இது நல்லதையும், கெட்டதையும் குறிக்கும் அறிகுறியாக பார்க்கப்படுகிறது

சிவப்பு எறும்புகள் – நிதி சிக்கலின் எச்சரிக்கை
வீட்டில் அதிகமாக சிவப்பு எறும்புகள் தோன்றினால், அது செலவுகள் அதிகரிக்க, கடன் தேவைப்பட வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. இது உங்கள் நிதி நிலையை பாதிக்கும் சின்னம் எனக் கருதப்படுகிறது.

வீட்டிற்கு நிறைய எறும்பு வருதா? உங்கள் வீட்டில் நடக்கப்போகும் சகுனம் இதுதான் | Ants In The House Mean In Terms Of Omen Vastu

கருப்பு எறும்புகள் – செல்வம், மகிழ்ச்சி, வளர்ச்சி
கருப்பு எறும்புகள் தோன்றுதல், உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள், வளர்ச்சி வாய்ப்புகள் வரப்போகின்றன என்பதைக் குறிக்கும். மகிழ்ச்சி, செழிப்பு, சமூக மரியாதை அதிகரிக்கும். கருப்பு எறும்புகளை விரட்டாமல், மாவு கொடுத்தால், அவை தானாக விலகும் என நம்பப்படுகிறது.

வீட்டிற்கு நிறைய எறும்பு வருதா? உங்கள் வீட்டில் நடக்கப்போகும் சகுனம் இதுதான் | Ants In The House Mean In Terms Of Omen Vastu

பண வரவுக்கான சின்னங்கள்
அரிசியில் கருப்பு எறும்புகள் தோன்றினால், பண வரவு, பதவி உயர்வு, வணிக வாய்ப்பு ஏற்படும். தங்கத்தில் இருந்து எறும்புகள் வெளிவருவது, செல்வம் விரைவில் பெருகும் எனக் கருதப்படுகிறது.

வீட்டிற்கு நிறைய எறும்பு வருதா? உங்கள் வீட்டில் நடக்கப்போகும் சகுனம் இதுதான் | Ants In The House Mean In Terms Of Omen Vastu

திசைகளும் அவசியம்
வடக்கு / தெற்கு திசையில் இருந்து எறும்புகள் வருவது – குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். கிழக்கு திசை – எதிர்மறை செய்திகள். மேற்கு திசை – தேவையற்ற பயணங்கள் ஏற்படலாம். அறையின் கூரை பகுதியில் எறும்புகள் இருப்பது – பண ஆதாயம் பெருகும் அடையாளம்.

இந்த நம்பிக்கைகள் பழைய பாரம்பரியங்களிலும் வாஸ்து நம்பிக்கைகளிலும் அடிபடையுடன் கூறப்பட்டவை. எறும்புகளின் இயக்கத்தையும், வரையறைகளையும் கவனித்தால், வாழ்க்கையின் சில மாற்றங்களை முன்கூட்டியே உணர முடியும் என்பதே இந்த பதிவின் விளக்கம்.


Wednesday, 2 July 2025

மக்கா சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
சோளம், நம்மில் பலருக்கும் இதை பிடிக்கும்.. ஆனால் இதனை டூர் அல்லது பீச் பக்கம் சென்றால் மட்டுமே சாப்பிடுகிறவம். அதிக சத்துக்கள் நிறைந்த சோளத்தை நம் அன்றாட டயட்டில் எடுத்துக்கொள்வது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் சோளத்தில் உள்ள சத்துக்கள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.


சோளத்தை சாப்பிடுவதால் நம் உடலுக்கு புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின், ஆன்டிஆக்சிடன்ட் என பல சத்துக்கள் கிடைக்கிறது.


சோளத்தில் நார்ச்சத்து உள்ளதால் உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஏற்ற உணவாகும். மேலும் இதய ஆரோக்கியம், சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளுதல் போன்ற நன்மைகள் சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும். இருப்பினும் அதனை அளவாக எடுத்துக்கொள்வது நல்லது. அளவு மீறினால் நல்ல சத்துக்கள் தீயவையாக மாறிவிடும்.

தினந்தோறும் நம் டயட்டில் சோளத்தை எடுத்துக்கொள்ளலாம். மேலும் நீரிழவு நோய் உள்ளவர்களும் சோளத்தை தாராளமாக சாப்பிடலாம். அதேபோல் கண் சார்ந்த பிரச்னை, வயது சார்ந்த பிரச்சனைகள் வராமல் காக்கும்.
சோளத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் உள்ளவர்கள் தங்களது டயட்டில் சோளத்தை எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனைகளை தீர்த்து குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

சோளத்தில் வைட்டமின் சி உள்ளதால் நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடல் ஆரோக்யத்திற்கு வழிவகுக்கும்.
சோளத்தை வேகவைத்தும், வயதானவர்கள் சூப்பாகவும் நம் அன்றாட டயட்டில் எடுத்துக்கொள்வது உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடியதாக அமையும்.


கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. அதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க இவை உதவி செய்கிறது.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வைத் தடுக்கும். கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ்  போன்றவற்றை எதிர்த்துப் போராடும். மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் உதவும்.
 
இரத்த சோகை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள்  கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம்.

கொண்டைக்கடலையை அவித்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு உறுதியை கொடுக்கும். கொண்டைக்கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும்  ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.
 
வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக் கடலையை தவிர்ப்பது நல்லது. இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு கெடுதலை உண்டாக்கும். எனவே இதனை அளவோடு பயன்படுத்துவது நல்லது

Tuesday, 1 July 2025

செரிமான சக்தியை அதிகப்படுத்தும் சூப்பர் உணவுகள்..


செரிமான சக்தியை அதிகப்படுத்தும் சூப்பர் உணவுகள்.. 

இன்றைய காலகட்டத்தில் நம் மக்கள் ஃபாஸ்ட் ஃபுட்களுக்கு மிகவும் அடிமையாகிவிட்டனர் என்றே சொல்லலாம். ஆரோக்கியமான உணவை தேடி தேடி சாப்பிடுவதை தவிர்த்து உடலுக்கு கேடுவிளைவிக்கும் ஃபாஸ்ட் ஃபுட்களை தேடி சாப்பிட்டு வரும். இவை உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அளித்து வயிறு சம்மந்தமான பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஃபாஸ்ட் ஃபுட் தவிர்த்து நம் சாப்பிடும் அன்றாட உணவில் இருந்து செரிமான சக்தியையும், நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்யலாம். எந்தெந்த உணவுகளை நாம் எடுத்துக்கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 
சூரியகாந்தி விதை: சூரியகாந்தி விதை சாப்பிடுவதால் லிகினான்கள், செல்லுலோஸ் நம் உடலுக்கு கிடைக்கும். இவை நம் செரிமான சக்தியை அதிகப்படுத்தி வயிறு சம்மந்தமான பிரச்னைகள் தீர உதவும்.
பூண்டு: உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடியது பூண்டு. உணவுக்கு சுவையை அதிகரிக்கச் செய்ய உதவும் பூண்டு, குடல் ஆரோக்கியத்துக்கும் பெரிதும் உதவுகிறது. பூண்டை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதுடன், உடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளர்ச்சிக்கு உதவுகரித்து.

கொண்டைக்கடலை: ப்ரோடீன் சத்து அதிகமுள்ள பொருள் கொண்டைக்கடலை. அதுமட்டுமில்லாமல் நார்ச்சத்தும் இதில் அதிகமாக உள்ளதால் செரிமான சக்தியை அதிகப்படுத்துவதோடு குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. தினமும் நம் டயட்டில் வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்துக்கொள்வது நல்லது.

ஆப்பிள்: உடலுக்கு பல நன்மைகள் தரும் ஆப்பிளை தினந்தோறும் சாப்பிடுவதால் குடல் நுண்ணுயிர்கள் வளர்ச்சியை அதிகப்படுத்தி செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.


உருளைக்கிழங்கு: அதிக மாவுசத்து கொண்ட பொருள் உருளைக்கிழங்கு. இது நம் குடலில் உள்ள பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

வாழைப்பழம்: நம் அனைவருக்கும் தெரிந்ததே, வாழைப்பழம் செரிமான சக்தியை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. செரிமான சக்தியை மேம்படுத்துவதோடு குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தினமும் உங்கள் டயட்டில் வாழைப்பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது.


Monday, 30 June 2025

செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : வீட்டில் எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா? |


செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : வீட்டில் எந்த திசையில் நடவேண்டும்விளம்பரம்

வாஸ்து படி, வீட்டில் கற்றாழை செடியை வைத்திருப்பது மிகவும் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது.இந்த செடியை நடும் போது சில விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.

கற்றாழைச் செடியை சரியான திசையில் நடுவது லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை எப்போதும் கொண்டு வரும்.

செல்வம் பெருகும். இந்த செடி வீட்டில் இருந்தால், குடும்பம் முழுவதும் செழிப்புடன் இருக்கும். அவர்களின் புகழும், கௌரவமும் அதிகரிக்கும்.


கற்றாழை எந்த திசையில் நட வேண்டும்?
வீட்டில் கற்றாழை செடியை நடும் போது திசை மிகவும் முக்ககியம். அதற்கு நாம் குறிப்பாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

அப்போதுதான் லட்சுமி தேவியின் அருளைப் பெற முடியும். இதற்கு கற்றாழை செடியை எப்போதும் கிழக்கு திசையில்தான் நட வேண்டும். இந்த திசையில் ஒரு கற்றாழை வைப்பது மன அமைதியைத் தருகிறது.

செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : வீட்டில் எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா? | Which Direction Plant A Aloe Vera Increase Wealth

வீட்டை வடக்கு அல்லது கிழக்கு திசையில் உயர்த்தினால் நேர்மறை ஆற்றல் கிடைக்கும். உடல்நலக் கோளாறுகள் நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை நீங்கள் விரும்பினால், மேற்கு திசையில் கற்றாழை செடியை நடலாம்.


இந்த செடியை நடுவதற்கு மேற்கு திசை மிகவும் உகந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர் . இது வாழ்க்கையில் வெற்றி மற்றும் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகளை வழங்குவதாக நம்பப்படுகிறது.

மேலும் கற்றாழை செடியை தென்கிழக்கு மூலையில் வைத்தால் வருமானம் அதிகரிக்கும். மேற்கு திசையில் வைத்தால் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.


 
நேர்மறை ஆற்றல்

கற்றாழை செடியை சரியான திசையில் வைப்பது வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. எதிர்மறை ஆற்றல் அகற்றப்படுகிறது.

நீங்கள் நிதி பிரச்சனைகள் மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டிருந்தால், வீட்டில் ஒரு கற்றாழை செடியை சரியான திசையில் வைக்கவும்.

செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : வீட்டில் எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா? | Which Direction Plant A Aloe Vera Increase Wealth

இது வீட்டில் வளர்க்க எளிதான மற்றும் சிறந்த தாவரங்களில் ஒன்றாகும். வீட்டின் பால்கனியில் வைத்தால், எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழைய முடியாது.


கற்றாழை செடி வளர மிகவும் எளிதானது. கற்றாழை செடி ஒன்றை நட்டால் போது அது அந்த இடம் முழுவதும் வளர்ச்சி அடையும். அதனால்தான் பானையில் ஒரே ஒரு கற்றாழை செடியாவது இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வீட்டில் வைத்திருப்பது உடல் நலத்திற்கு நல்லது. உடல்நலக் குறைவால் அவதிப்படுபவர்கள் கற்றாழையை படுக்கையறையில் வைக்கலாம்.


 


இந்த திசையில் கற்றாழை வைக்க கூடாது
வடமேற்கு திசையில் வைத்தால் பல பிரச்சனைகள் ஏற்படும். வாஸ்து படி இந்த திசை நிதி பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அசுப பலன்களைத் தரும். இதனால் அந்த திசையை தவிர்ப்பது நல்லது.


 செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : வீட்டில் எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா? | Which Direction Plant A Aloe Vera Increase Wealth


Thursday, 26 June 2025

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன?


சாப்பிட்டவுடன் சுடசுட காபி குடிக்க பிடிக்குமா? இதேபோல் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!

பலருக்கும் சாப்பிட்டவுடன் சுடசுட டீ அல்லது காபி குடிக்க பிடிக்கும். சிலருக்கு குளுகுளு ஜூஸ் குடிக்க ரொம்ப பிடிக்கவும். ஆனால் இவ்வாறு செய்வது நம் ஜீரண மண்டலத்தை பெரிதும் பாதிக்கும் என்பதை தெரியாமல் இந்த பழக்கத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் இதேபோல் சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத பழங்கள் என்னென்ன


குளியல்: சாப்பிட்டவுடன் குளிப்பதை ஒருபோதும் செய்யாதீர்கள். சாப்பிட்டு முடித்தவுடன் உடல், வயிறில் உள்ள உணவை ஜீரணம் செய்யும் வேலையில் இறங்கிவிடம். அப்போது நாம் குளிப்பதால் ஜீரணம் செய்யும் வேலையை தடுத்தி நிறுத்துவது போல் ஆகிவிடும். சாப்பிட பின் 2 மணிநேரம் கழித்து குளிப்பது நல்லது என கூறுகின்றனர்.


வொர்கவுட்: அதிகம் சாப்பிட்டுவிட்டோம் அல்லது காலையில் உடற்பயிற்சி செய்ய மறந்துவிட்டோம் என்று ஏதாவதொரு காரணத்திற்காக உணவு சாப்பிட்டபின் வொர்கவுட் செய்வது உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இது தவறான யோசனை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆக கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பது நல்லது.


ஜூஸ்: சாப்பிட்டவுடன் ஃப்ரெஷ் ஜூஸ் அல்லது கூலிங்காக பெப்சி, கொக்கோகோலா போன்ற பானங்களை குடிப்பது ஜீரண சக்தியை பலவீனமாக்கும். உணவை ஜீரணம் செய்யும் அமிலங்கள் உற்பத்தி செய்வதை இது தடுப்பதாக கூறுகின்றனர். ஆகவே உணவுக்கு பின் ஜூஸ் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.


தூக்கம்: சிலருக்கு சாப்பிட்டவுடன் தூக்கம் வரும்.. உடனே தூங்க சென்றுவிடுகின்றனர். இப்படி செய்வதால் உணவு ஜீரணமாவதில் தாமதம் ஏற்பட்டு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வார காரணமாக அமைந்துவிடும்.


புகைபிடித்தல்: சிலருக்கு சாப்பிட்டவுடன் சிகிரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கும். அப்போது தான் சாப்பிட்டது போல் இருக்கும் என்றும் கூறுவர். இவ்வாறு செய்வது உணவு ஜீரணமாவதை தாமதமாக்கும். அஜீரண கோளாறு ஏற்படும். ஆகவே உணவுக்கு பின் புகைபிடித்தல் தீங்கு விளைவிக்கும்.
பால்

காபி, டீ: நம்மில் பலருக்கும் இந்த பழகும் இருக்கும். உணவுக்கு பின் சுடசுட காபி அல்லது டீ சாப்பிடுவது ஜீரணத்தை அதிகப்படுத்தும் என்று எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் டீ, காபி உணவில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. செரிமான பிரச்சனை ஏற்பட காரணமாக அமைப்பும். ஆகவே உணவுக்கு பின் டீ, காபிக்கு நோ சொல்லிவிடுங்கள்.


பிரிந்துள்ள தம்பதி ஒன்று சேர உதவும் குறுமிளகு பரிகாரம்!


பிரிந்துள்ள தம்பதி ஒன்று சேர உதவும் குறுமிளகு பரிகாரம்! கணவன் மனைவி கட்டாயம் செய்ய வேண்டியது.. செம
கணவன் மனைவி இடையே புரிதல் என்பது மிக அவசியமாகும். இந்த புரிதல் இல்லாமல்தான், சண்டை, சச்சரவு, பிளவு ஏற்பட்டு, விவாகரத்து வரை சென்றுவிடுகிறது. சிலசமயம், ஈகோ காரணமாகவே, வன்முறை சம்பவங்களும் நடந்துவிடுகின்றன. இதனால் குழந்தைகளின் எதிர்காலம்தான் வீணாகின்றன. சரியான புரிதல் இல்லாததால் பிரிந்து வாழும் தம்பதி, மீண்டும் ஒற்றுமையுடன் இணக்கமாக வாழக்கூடிய எளிய பரிகாரங்களை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.


ஒருவரது ஜாதகத்தில் இரண்டாம் இடமும், ஏழாவது இடமும் பலமிழந்து காணப்பட்டாலும், எட்டாம் இட அஷ்டம ஸ்தானம் கெட்டுப்போனாலும் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது என்பார்கள்.



முரண்பாடுகள் - பிணக்குகள்
கணவன், மனைவிக்குள் நிலவும் முரண்பாடுகளை சரிசெய்ய, உப்பு + மிளகு இரண்டும் சிறந்த பரிகாரமாக உள்ளது. பிறரை வசியம் செய்யக்கூடிய தன்மையும், அன்பால் ஈர்க்கும் சக்தியும் இந்த பொருட்களுக்கு உண்டு.


கல் உப்பு மற்றும் மிளகிற்கு எதிர்மறை எண்ணங்களை மாற்றும் சக்தி இருக்கிறது.. வீட்டில் நிலவும் எதிர்மறை ஆற்றல்களை விரட்டி, தெய்வ ஆற்றலை பரப்பக்கூடிய தன்மை கொண்டதாகும். எனவேதான், தாந்திரீகம், மாந்திரீகம் போன்றவற்றில் உப்பு, மிளகு இரண்டுமே தவிர்க்க முடியாதவையாக உள்ளது..

குறுமிளகுகள்
அந்தவகையில், தம்பதிகளுக்குள் நிலவும் பூசலை அகற்ற, ஒரு கண்ணாடி டம்ளரில் முக்கால் பாகம் தண்ணீரை கொள்ள வேண்டும். முழு மிளகாக 27 எண்ணிக்கையில் எடுத்து கொள்ள வேண்டும். அதேபோல 27 முழு கல் உப்பையும் எடுத்து கொள்ள வேண்டும்.



தங்களது இணையின் பிணக்குகள் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டி, ஒவ்வொரு கல் உப்பு, மிளகையும் தண்ணீரில் போட வேண்டும். இறுதியாக டம்ளர் தண்ணீரை ஓடும் நீரில் அல்லது சிங்க்கில் கொட்டிவிடலாம். இதனால், விரைவில் பலன் கிடைக்கும்.


பெரியவர்கள் ஆசீர்வாதம்
பிரிந்துள்ள தம்பதிகள், உறவுகளுடன் இணைந்து சிவபெருமானுக்குரிய சோமவார விரதத்தை மேற்கொள்ளலாம். முழுமையாக விரதமிருக்க முடியாவிட்டாலும், நீர், பழச்சாறு உட்கொண்டு, இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

முன்பு வீட்டிலுள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று, தொடர்ந்து 21 திங்கட்கிழமைகளில் இந்த விரதத்தை முடிக்கும்போது, தம்பதிக்குள் ஒற்றுமை ஏற்படும்.. மாங்கல்ய தோஷம், களத்திரதோஷம் இருந்தாலும் நீங்கிவிடும். இந்த விரத நாட்களில் சிவ-பார்வதிக்குரிய மந்திரங்களை ஜெபிக்கலாம்.


அர்த்தநாரீஸ்வர மந்திரம்
ஓம் ஹும் ஜும் சஹ அர்த்தநாரீஸ்வர ரூபே ஹ்ரீம் ஸ்வாஹா இந்த மந்திரத்தை சொல்வதன் மூலமும் பிணக்குகள் தீர்ந்து புரிதல் உண்டாகும். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வந்தாலும் விரைவில், தம்பதிகள் ஒன்று சேரலாம்.


அதேபோல, தினமும் அதிகாலையில் பூஜையறையில் கிழக்கு திசையில் அமர்ந்து ''ஓம் சௌம் பார்வதி தேவி நமஹ'' என்ற மந்திரத்தை 54 அல்லது 108 முறை சொல்வதாலும் பலன் கிட்டும்.

மந்திரங்கள் - ஜெபம்
''ஓம் க்லீம் ஸ்ரீ ரதி தேவி சமேத ஸ்ரீ காமதேவாய நமஹ'' என்று 3 முறை பிரார்த்திப்பதாலும் தம்பதிக்குள் சண்டைகள் விலகி ஒற்றுமை நிலவ தொடங்கும். அதேபோல, தம்பதிக்குள் ஒற்றுமை ஏற்பட தினமும் சுந்தர காண்டம் பாராயணம் செய்யலாம்.

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள ஸ்ரீவைகுண்ட நாராயணப் பெருமாள் கோவில், திருவாஞ்சியம் கோவில்களுக்கு சென்று வழிபடலாம். ரோஜா நிறத்தில் இருக்கும் சிவலிங்கத்தை வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்தால் கணவன், மனைவி ஒற்றுமை அதிகமாகும்.



Tuesday, 24 June 2025

Germany stores

Edeka : The name itself is a shortened form of "Einkaufsgenossenschaft der Kolonialwarenhändler im Halleschen Torbezirk zu Berlin," which means "Purchasing Cooperative of Colonial Goods Retailers in the Hallesches Tor district of Berlin".
Aldi means Albrecht Discount. It's a shortened form of the German "Albrecht-Diskont," combining the founders' last name, Albrecht, with the word "Diskont," meaning discount. The name reflects the store's origin as a German discount supermarket chain.
Rewe (stylized as REWE; German pronunciation: [ˈʁeːvə]) is a supermarket chain in Germany and the main brand of Rewe Group headquartered in Cologne
English, "Lidl store" refers to a discount grocery store chain that originated in Germany. Lidl is known for its focus on providing a wide range of products, including groceries and other household items, at competitive prices. The name "Lidl" is actually the surname of a former business partner of the founder, Josef Schwarz, according to CyprusScene.com, and the company was named after him. 

Saturday, 21 June 2025

அபரிமிதமான பண வரவுக்கு வாஸ்துபடி காமதேனு


அபரிமிதமான பண வரவுக்கு வாஸ்துபடி காமதேனுவை வீட்டில் வைக்க சரியான திசை...
காமதேனு படத்தை வீட்டில் எந்த இடத்தில் எந்த திசை பார்த்து வைத்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

பசுவை நாம் லட்சுமி கடாட்சம் பொருந்திய அமைப்பாகவும், பொன், பொருள் சேர்க்கை தரக்கூடிய அதிர்ஷ்டமாக பார்க்கிறோமோ அதே போல தேவலோகத்தில் அனைத்து பசுக்களின் தாயாக காமதேனு பார்க்கப்படுகிறது. காமதேனு என்பது சகல ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம், பொன், பொருள் யோகம் மற்றும் அபரிமிதமான பண வரவை தரக்கூடிய காமதேனு விளங்குகிறது. நாம் இதை கல்வி நிறுவனங்கள், ஜவுளி மற்றும் பண வரவு அதிகம் உள்ள கடைகளில் பார்த்திருப்போம். இதற்கு காமதேனு தரக்கூடிய பலன்களே முக்கிய காரணமாகும். அந்தளவிற்கு அதிர்ஷ்டம் அடிக்கும். எனவே காமதேனு படத்தை வீட்டின் எந்த இடத்தில் எந்த திசை பார்த்து வைக்க வேண்டும் என இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.




காமதேனு அமைப்பு
காமதேனு கன்றுடன் இருப்பது போன்ற அமைப்பை வாங்க முயற்சிக்கவும். அதிலும் குறிப்பாக கன்று காமதேனுவின் மடியில் பால் குடிப்பது போல் இருந்தால் கூடுதல் சிறப்பு. இப்படியான காமதேனு படம் இருந்தால் வீட்டிற்கு அள்ள அள்ள குறையாத செல்வமும் வளமும் கிடைக்கும். வீட்டில் உள்ள குழந்தைகள் நல்ல நிலையில் இருப்பார்கள். ராஜயோக வாழ்க்கை வாழ்வீர்கள். லட்சுமி கடாட்சம் பொருந்திய படமாக தேடி வாங்குங்கள்.

காமதேனு நன்மைகள்
காமதேனு படத்தை வீடு மற்றும் அலுவலகத்தில் மாட்டிக் கொள்ளலாம். வீட்டில் மகிழ்ச்சியையும் அலுவலகத்தில் தொழில் முன்னேற்றத்தையும் தரும். நாம் வைக்கும் இடத்தை பொருத்து காமதேனு செயல்படும். வீட்டில் வைத்தால் கணவன் - மனைவி உறவு, ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் சண்டை இருக்காது. பிரச்னை இருக்கும் குடும்பத்தின் வீட்டில் இந்த படத்தை மாட்டினால் பிரச்னை குறையும். சுபகாரியங்கள் தடையின்றி நல்லபடி நடக்கும்.


அலுவலகத்தில் காமதேனு படம் வைத்தால் தொழில் முன்னேற்றம் ஏற்படும், லாபம் இரட்டிப்பாகும்.
படம் உடைந்து அல்லது கீறல் இருக்க கூடாது. வீட்டில் ஏற்கெனவே இருக்கும் படம் பழசாகி விட்டால் அதை மாற்றிவிடவும்.
காமதேனு படம் வைக்கும் திசை
காமதேனுவின் தலை வீட்டிற்குள் நோக்கியவாறு வைப்பது நல்லது. வீட்டில் வடக்கு திசையில் காமதேனு படத்தை மாட்டுங்கள். வட மத்திய பகுதியில் அமைக்கவும். வட கிழக்கு திசையிலும் மாட்டிக் கொள்ளலாம். இப்படி வைத்தால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும்.

குருவின் ஆதிக்கம் பெற்றது வடக்கு பகுதி. அங்கு நாம் காமதேனு படம் வைக்கும் போது அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும். சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும்.

வட கிழக்கு திசையில் காமதேனு படம் மாட்டுவதால் பண வரவு, தெளிவான சிந்தனை, எண்ண ஓட்டம் கிடைக்கும்.
தென் மேற்கு திசையில் காமதேனு படத்தை வைக்காதீர்கள். அப்படி செய்தால் வீட்டிற்கு வரவு குறைந்து செலவு அதிகமாகும்.
தென் கிழக்கில் மாட்டினால் ஆரோக்கிய சீர்கேடு, வம்பு வழக்கு, கணவன் மனைவி உறவில் பிரச்னை ஏற்படும்.
காமதேனு படத்தை யாருக்கும் பரிசளிக்காதீர்கள். அப்படி செய்தால் உங்கள் செல்வம் குறையும்.

உங்கள் அருகிலுள்ள மலிவான வீடுகள் – உங்களுக்கு பொருந்தக்கூடிய விளம்பரங்களை பாருங்கள்
ரியல் எஸ்டேட் | தேடல் விளம்பரங்கள்
|
Sponsored
கிழக்கு தாம்பரம் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனைக்கு உள்ளன
Flats Sale
|
Sponsored
துபாயில் வில்லா விற்பனைக்கு உள்ளது (விலைகளைப் பாருங்கள்)
Villas in Dubai | Search ads
|
Sponsored
மாடுலர் கிச்சன் விலை 2025 (விருப்பங்களைப் பார்க்கவும்)
Modular Kitchen | Search ads
|
Sponsored
வடபழனியில் 2BHK பிளாட் விற்பனைக்கு உள்ளது (விலைகளைச் சரிபார்க்கவும்)
2BHK Flats For Sale in Vadapalani | Search Ads
|
Sponsored
नोएडा में बिक्री के लिए 3बीएचके फ्लैट की कीमतें आपको आश्चर्यचकित कर सकती हैं!
Flats For Sale in Noida
|
Sponsored
Most Searched
சித்திரை திருவிழா
ராகு கேது பெயர்ச்சி
தமிழ் புத்தாண்டு ராசிபலன்
பங்குனி உத்திரம்
திருமண பொருத்தம்
ரஜ்ஜு பொருத்தம்
Kamdhenu cow
Kamdhenu Vastu tips





HerZindagi
உணவு
ஸ்டைல்
ஆரோக்கியம்
பெண்கள் ஸ்பெஷல்
HZ குழுவினர்
The Daily Jagran
About Us
T&C
சமூக ஊடகத்தில் எங்களோடு இணையவும
HerZindagi

Copyright © 2025 Her Zindagi

This Website Follows The DNPA’s Code Of Conduct

For Any Feedback Or Complaint, Email To compliant_gro@jagrannewmedia.com


Close ad
Ad

காமதேனு பசு மற்றும் கன்று படத்தை வீட்டில் வைப்பதால் என்ன பலன்

காமதேனு பசு மற்றும் கன்று படத்தை வீட்டில் வைப்பதால் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும், மேலும் நேர்மறை ஆற்றல் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
பலன்கள்:
செல்வ வளம்:
காமதேனு பசு மற்றும் கன்று படத்தை வீட்டில் வைப்பது செல்வத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
மகிழ்ச்சியும் செழிப்பும்:
இந்த படத்தை வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
நேர்மறை ஆற்றல்:
காமதேனு பசு மற்றும் கன்று படத்தை வீட்டில் வைத்திருப்பது, வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
குடும்ப ஒற்றுமை:
காமதேனு கன்றுடன் இருப்பதால், குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
குழந்தை பாக்கியம்:
சிலரது நம்பிக்கையின் படி, குழந்தை பேறு இல்லாத தம்பதியினருக்கு, காமதேனு கன்றுடன் கூடிய படத்தை வீட்டில் வைத்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
காமதேனு படத்தை வைக்கும் முறை:
காமதேனு படத்தை பூஜை அறையில் வைக்கலாம் அல்லது வீட்டின் தென்கிழக்கு மூலையில் வைக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
கூடுதல் தகவல்கள்:
காமதேனு கன்றுடன் பால் குடிக்கும் படத்தை வைப்பது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.
பசு மற்றும் கன்று சிலைகளை ஒன்றாக வைப்பது நல்லது.
காமதேனு படத்தை வைத்து தினமும் வழிபடுவதும், மந்திரம் சொல்வதும் நல்லது என்று கூறப்படுகிறது.

வாலி, சுக்ரீவனை துன்புறுத்தி துரத்திய போது பலசாலியான அனுமன் ஏன் உதவவில்லை?


வாலி, சுக்ரீவனை துன்புறுத்தி துரத்திய போது பலசாலியான அனுமன் ஏன் உதவவில்லை? 

 வாலி, சுக்ரீவனைத் துன்புறுத்தி கிஷ்கிந்தையை விட்டுத் துரத்தியபோது ஆஞ்சநேயர் ஏன் சுக்ரீவனுக்கு உதவவில்லை? என்பது குறித்து ஸ்ரீராமபிரானே சொல்வதை கேளுங்கள். ஆஞ்சநேயரின் வரலாற்றை அகத்தியருக்கு சொல்லியிருக்கிறார்.

இணையத்தில் வந்தது என கூறி நானறிந்த ஆன்மீகம் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஸ்ரீராமருக்கு, அகத்தியர் விளக்கிய 


ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேகக் கொண்டாட்ட வைபவங்கள் முடிந்த பின், ஆசுவாசமாக ஸ்ரீராமபிரான்- ராவணாதியரின் பலம், தபம், வரம் முதலியவை பற்றிய சந்தேகங்களை அகத்திய மாமுனிவர் விளக்குவதாக, ஸ்ரீவால்மீகி ராமாயணத்தின் உத்தரகாண்டம் அமைந்திருக்கிறது.

ஸ்ரீராமர், ஒரு நியாயமான கேள்வியை எழுப்புகிறார்: "வாலி மிகுந்த பலசாலிதான். ராவணனையே தோற்கடித்து அவனைத் தனது கையில் இடுக்கிக்கொண்டு பல சமுத்திரங்களுக்கும் சென்று தனது நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்து, ராவணனுக்குச் சொல்ல முடியாத துன்பத்தை அளித்தான். இருப்பினும் ஆஞ்சநேயன் - வாலி, ராவணன் இவர்களையும்விட மிகப் பலம் வாய்ந்தவர். அப்படியிருந்தும் வாலி, சுக்ரீவனைத் துன்புறுத்தி கிஷ்கிந்தையை விட்டுத் துரத்தியபோது ஆஞ்சநேயர் ஏன் சுக்ரீவனுக்கு உதவவில்லை?" என்று அகத்தியரிடம் கேட்கிறார்.

அப்போதுதான் ஸ்ரீராமருக்கு, ஆஞ்சநேயரின் வரலாற்றைக் கூறுகிறார் அகத்தியர்.

"அஞ்சனாதேவிக்கு ஆஞ்சநேயர் பிறந்தபோதே, மிகுந்த பலசாலியான குழந்தையாக விளங்கினார். அஞ்சனாதேவி, குழந்தைக்கு ஆகாரம் கொண்டு வரச் சென்றிருந்தபோது, மிகவும் பசியுடன் இருந்த குழந்தை ஆஞ்சநேயன், சூரியனை ஒரு பழம் என்று நினைத்து அதைப் பறித்து உண்ண விரும்பி சூரியனை நோக்கி வானில் பாய்ந்தார்.


ஆனால் சூரியன், ஸ்ரீராமபிரானுக்கு இந்த ஆஞ்சநேயன் உதவி செய்ய வேண்டுமென்பதை உணர்ந்து, குழந்தைக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை. ஆனால், அன்றைக்குச் சூரிய கிரகணம். ராகு, சூரியனை விழுங்குவதாக ஏற்பாடு.

தனக்குப் போட்டியாக சூரியனை நெருங்கும் ஆஞ்சநேயனைப் பார்த்து வெகுண்ட ராகு, இந்திரனிடம் சென்று முறையிட்டார் (ஏனெனில், சூரியனைப் பிடிக்க விரும்பிய அனுமன், ராகுவையும் பிடிக்க முயன்றார்).

இந்திரன், ராகுவையும் அழைத்துக் கொண்டு மிகுந்த கோபத்துடன் அனுமனை அணுக, அவர் ஐராவதத்தையும் ஒரு பெரிய பழமென்று நினைத்து அதை நோக்கிப் பாய்ந்தார். இதனால் இன்னும் கோபமுற்ற இந்திரன், குழந்தை என்றும் பார்க்காமல், அனுமனைத் தனது வஜ்ராயுதத்தால் அடித்தார். அடியுண்ட அனுமன் இடது தாடை உடைபட்டு விழுந்தார். இறந்தது போலவே கிடந்தார்.

தனது மகன் இந்திரனால் தாக்கப்பட்டு உயிரிழந்ததுபோல் கிடந்ததைக் கண்டு வருந்திய வாயு பகவான், அந்தக் குழந்தையைத் தனது மடியில் கிடத்தியவாறு தனது இயக்கத்தை நிறுத்திவிட்டார். வாயுவின் இயக்கம் இல்லாததால், அனைத்து ஜீவராசிகளும் மிகவும் துன்பப்பட்டனர். இதற்கு தேவர்களும் கந்தர்வர்களும்கூட விதிவிலக்கல்ல. எனவே, அனைவரும் பிரம்மாவிடம் சென்று முறையிட அவர் அனைவரையும் அழைத்துக் கொண்டு வாயு பகவானிடம் வந்தார்.

இறந்து கிடந்த குழந்தையைக் கண்டு, பரிதாபமும் இரக்கமும் கொண்ட பிரம்மா தனது கரத்தால் அதைத் தடவிக் கொடுக்கவும், அனுமன் மீண்டு எழுந்தார். பிரம்மா அனைத்து தேவர்களையும் நோக்கி, 'இந்தக் குழந்தையால்தான், ராவணன் முதலிய அரக்கர்களால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைத் தீர்க்க முடியும். அதனால் இவனுக்கு வேண்டிய அளவு நல்ல வரமளியுங்கள். அதன்மூலம் வாயு பகவானும் திருப்தி அடைவார்' என்று சொன்னார்.

இதன்பின்னர் சூரியன், தனது ஒளியில் 100-ல் ஒரு பங்கை ஆஞ்சநேயருக்கு அருளினார். மேலும், தானே அனுமனுக்கு வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் போதித்து, கல்வியில் சிறந்தவனாகச் செய்வதாக ஒப்புக் கொண்டார்.

வருணன் - காற்றாலோ, நீராலோ அவருக்கு மரணம் ஏற்படாது என்றார். யமதர்மன், யம தண்டத்திலிருந்தும் நோய்களினின்றும் அனுமன் பாதிக்கப்பட மாட்டார் என வரமருளினார். குபேரன், அனுமன் யுத்தத்தில் சோர்வே அடைய மாட்டார் என்றார். சிவபெருமான், தனது அஸ்திரங்களினாலோ, தனது கரங்களினாலோ மரணம் ஏற்படாது என்றார்.

விஸ்வகர்மா, தன்னால் இதுவரை செய்யப்பட்ட ஆயுதங்களாலோ, இனிமேல் தான் செய்யும் ஆயுதங்களாலோ ஆஞ்சநேயர் பாதிக்கப்பட மாட்டார் என்றார். பிரம்மதேவர், ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக இருப்பார் என்றும், பிராமணர்களால் சாபம் அளிக்கப்பட மாட்டார் என்றும் அருளினார். மேலும், அனுமன் தான் விரும்பிய வடிவம் எடுக்கவும், ஒருவரிடமும் பயமோ, யுத்தத்தில் தோல்வியோ அடைய மாட்டார். நினைத்த இடத்துக்கு நினைத்த வேகத்தில் அவரால் செல்ல முடியும் என்றும் வரமளித்தார். இந்த வரங்களினால் திருப்தியுற்ற வாயு பகவான் தனது இயக்கத்தைத் தொடங்கினார்.

தனக்களிக்கப்பட்ட வரங்களால் பெருமை கொண்ட அனுமன், காட்டில் தவம், யாகம் செய்துவந்த முனிவர்களுக்கு விளையாட்டாக மிகவும் தொல்லை கொடுக்கவே, அவர்கள் அனுமனுக்குத் தனது பலம் தெரியாமல் இருக்கவும், யாராவது அதைப் பற்றி நினைவுறுத்தினால் மட்டுமே அதை அவர் உணர முடியும் என்று சொல்லி, அவர் தனது உண்மையான பலத்தைப் பற்றி அறியாதவாறு செய்துவிட்ட படியால்தான், ஆஞ்சநேயரால் தனது பலத்தை உணர்ந்து சுக்ரீவனுக்கு உதவ முடியாமல் போனது" என்று ஸ்ரீராமபிரானுக்கு விளக்குகிறார் அகத்தியர். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.


Wednesday, 18 June 2025

அசைவம் சாப்பிட்டு கோயிலுக்கு ஏன் போகக்கூடாது தெரியுமா?


அசைவம் சாப்பிட்டு கோயிலுக்கு ஏன் போகக்கூடாது தெரியுமா? பூஜை செய்யலாமா? ஆன்மீகம் சொல்லும் உண்மை என்ன

  
சென்னை: அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு போகக்கூடாது என்று சொல்கிறார்களே என்ன காரணம் தெரியுமா? அசைவ உணவுகளை சாப்பிட்டுவிட்டு வீட்டிலுள்ள பூஜைகளை செய்யலாமா? அசைவம் சாப்பிட்டுவிட்டு திடீரென கோவிலுக்கு போக வேண்டி நேர்ந்தால் என்ன செய்வது? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.


நம்முடைய உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உதாரணத்துக்கு தயிர் அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு தூக்கம் வருவது போல தோன்றும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவது போல தோன்றும்..



மந்தத்தன்மை
அதுபோல அசைவ உணவுகளை சாப்பிடும்போது, அது மந்தநிலையை ஏற்படுத்திவிடும். உடல் மட்டுமல்ல, மனமும் சுத்தமாக இருக்க வேண்டும்.. கோயிலுக்கு செல்லும்போதும் மனம், உடம்பு சுத்தமாக இரக்க வேண்டும். மனதளவில் மந்தத்தன்மையை வைத்துக் கொண்டு, கோயிலுக்குள் சென்றால், அங்குள்ள சக்திகளை உணர முடியாது..


ஏனென்றால், அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலை குறைத்துவிடுமாம். எனவேதான், எளிய உணவுகளை அதாவது விரைந்து ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு போக சொல்வார்கள்.

இரக்க குணம்
இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. இரக்க குணம் நிறைந்த இடத்தில் நிச்சயம் பக்தி இருக்கும். பக்தி உள்ள இடத்தில் கடவுளும் இருப்பார் என்பதால் அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்ல கூடாது என்கிறார்கள்.

ஒருவேளை அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்கு பிறகு குளித்துவிட்டு கோயிலுக்கு செல்வது நல்லது. முனீஸ்வரன், சுடலை மாடன் போன்ற அசைவ உணவு படையல்களை ஏற்கின்ற கிராம தெய்வங்கள், காவல் தெய்வங்கள் இருக்கும் கோயில்களுக்கு அசைவ உணவு சாப்பிட்டு செல்வதால் எந்த ஒரு பாதகங்களும் இல்லை.

பூஜையறை விளக்குகள்
ஆனால், அசைவம் சாப்பிட்டுவிட்டு வீட்டின் பூஜையறை விளக்குகளையும் ஏற்றக் கூடாது.. மறுநாள் குளித்து, வீட்டை சுத்தம் செய்துவிட்டுதான் விளக்கு ஏற்ற வேண்டும்.. அசைவம் சாப்பிட்டுவிட்டு பக்தி புத்தகங்களைகூட படிக்க கூடாது என்பார்கள்.

அதுபோலவே, ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.. ஒருவேளை பெண்கள் ருத்ராட்சம் அணிந்திருந்தாலும், சமைக்கும் நேரங்களில் தவிர்த்துவிட்டு, பூஜை நேரங்களில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.


Sunday, 15 June 2025

தனுசு ராசியில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன்

தனுசு ராசியில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை இருந்தால், அது ஒருவருடைய ஜாதகத்தில் பலவிதமான பலன்களைத் தரலாம். இது பொதுவாக ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, வெற்றி, மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, இந்த சேர்க்கை கல்வி, கலை, மற்றும் சமூக வாழ்க்கையில் சிறந்து விளங்க உதவும். 
இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால், ஒரு நபர் புத்திசாலியாகவும், ஆற்றல் மிக்கவராகவும், சமூகத்தில் பிரபலமாகவும் இருப்பார். இவர்கள் தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பார்கள். கலை மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் இருக்கும். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல சாதனைகளைச் செய்வார்கள். 
சூரியன்:
சூரியன் ஒருவரின் ஆளுமை, தலைமைப் பண்பு, மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது. தனுசு ராசியில் சூரியன் இருப்பது, ஒருவரை தைரியமானவராகவும், தன்னம்பிக்கை உள்ளவராகவும் ஆக்கும்.
புதன்:
புதன் ஒருவரின் அறிவு, தொடர்பு, மற்றும் பேச்சுத் திறனைக் குறிக்கிறது. தனுசு ராசியில் புதன் இருப்பது, ஒருவரை புத்திசாலியாகவும், நல்ல பேச்சாளராகவும் ஆக்கும்.
சுக்கிரன்:
சுக்கிரன் ஒருவரின் காதல், அழகு, மற்றும் கலைத் திறனைக் குறிக்கிறது. தனுசு ராசியில் சுக்கிரன் இருப்பது, ஒருவரை கலைகளில் ஆர்வம் உள்ளவராகவும், சமூகத்தில் பிரபலமாகவும் ஆக்கும்.
இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால், ஒரு நபர் தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வெற்றியையும் அடைவார்.

Thursday, 22 May 2025

யாரெல்லாம் வெள்ளி அணிய வேண்டும்?

இந்த 4 ராசிக்காரங்க வெள்ளி அணிவது அவர்களின் கோடீஸ்வர யோகத்தை முழிச்சிக்க வைக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அனைத்து உலோகங்களிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சனிபகவான் இரும்பை ஆள்வது போல, குருபகவான் தங்கத்தை ஆள்வது போல, சந்திரன் வெள்ளியை ஆள்கிறார். ஜோதிடத்தின்படி, சந்திரன் தண்ணீருடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது, இந்த கிரகம் குளிர்ச்சி மற்றும் நிலையற்ற தன்மையின் காரணியாகும். ராசி சக்கரத்தில் சில ராசிகள் நெருப்பு ராசிகளாகவும், சில ராசிகள் நீர் ராசிகளாகவும், சில ராசிகள் பூமி ராசிகளாகவும், சில ராசிகள் காற்று ராசிகளாகவும் அங்கீகரித்து வருகின்றன. ஆனால் ராசியில் வெள்ளி நகைகளை அணியக் கூடாத 3 ராசிகள் உள்ளன. மேஷம், தனுசு மற்றும் சிம்மம், இந்த மூன்று ராசிகளும் நெருப்பு உறுப்பு ராசிகள் என்று அழைக்கப்படுகின்றன. அவர்கள் சந்திரன் ஆளும் வெள்ளியை அணியக்கூடாது.
நெருப்பு ராசியை சேர்ந்தவர்கள் வெள்ளி நகைகளை அணிவது அவர்கள் வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும், அதேசமயம் நீர் ராசிகள் வெள்ளி அணிவது அவர்களின் அதிர்ஷ்டக்கதவை திறக்க உதவும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் வெள்ளி அணிவது அவர்களின் வாழ்க்கையில் பெரிய அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். யாரெல்லாம் வெள்ளி அணிய வேண்டும்? ஜோதிடத்தின்படி, வெள்ளி உலோகம் சந்திரன் மற்றும் சுக்கிரனுடன் ஒரு சிறப்புத் தொடர்பைக் கொண்டுள்ளது. மேலும், வெள்ளி சிவபெருமானின் கண்களிலிருந்து உருவானதாக புராணங்கள் கூறுகிறது. சிவனின் கண்களுடன் தொடர்புடைய இந்த புனித வெள்ளி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. வாஸ்து படி, வெள்ளி வைத்திருக்கும் வீடு அல்லது நபரின் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் நிறைந்திருக்கும். குறிப்பாக பெரியவர்கள் உங்களுக்குக் கொடுக்கும் வெள்ளி நகைகள் சிறப்பான அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, வெள்ளியைப் பயன்படுத்துவது நமது வாழ்க்கையில் சுக்கிரனை வலுப்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது. வீட்டில் வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது சுக்கிரனை மகிழ்ச்சியடையச் செய்கிறது மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதேபோல சுண்டு விரலில் வெள்ளி மோதிரம் அணிவது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் வெள்ளி அணிவது அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். " அதிர்ஷ்ட ராசிகள் ஜோதிடத்தில், வெள்ளி நகைகள் ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளுக்கு மிகவும் மங்களகரமானவை என்று நம்பப்படுகிறது. இந்த ராசிகள் நீர் ராசிகளாக கருதப்படுகின்றன, மேலும் வெள்ளி நீர் ராசிகளை ஆளும் உலோகமாக இருப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு வெள்ளி அணிவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் வெள்ளி அணிவதால் அடையும் நன்மைகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் வெள்ளி உலோகத்தைப் பயன்படுத்த வேண்டும் அல்லது அவர்கள் வெள்ளி நகைகளை அணிய வேண்டும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை வெள்ளி மோதிரம் அல்லது லாக்கெட் அணிவது அவர்களுக்கு சிறப்பான அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இதன் மூலம், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், வேலையில் முன்னேற்றம் ஏற்படும். " கடகம் கடக ராசிக்காரர்கள் வெள்ளி உலோகத்தை அணிவது அவர்களுக்கு சிறப்பான பலன்களைக் கொடுக்கும். என்று கூறப்படுகிறித்து. திங்கட்கிழமை வெள்ளி உலோகத்தை அணிவது சிறப்பு பலன்களைத் தரும். வெள்ளி, பித்தளை மற்றும் தங்க உலோகங்களைத் தவிர்த்து மற்ற உலோகங்களையும் அணியலாம். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்கள் எப்போதும் செம்பு அல்லது வெள்ளி நிறத்தில் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இது அவர்களுக்கு சிறப்பு நன்மைகளைத் தரும். மேலும் வெள்ளி அணிவது உள்ளுணர்வை வெளிப்படுத்த உதவுகிறது, எதிர்மறை ஆற்றலிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் உள் அனுபவங்களை சமாளிக்க உதவுகிறது. மீனம் மீன ராசிக்காரர்களுக்கு வெள்ளி சிறந்தது. உங்கள் ஜாதகத்தில் சந்திரன் அசுப நிலையில் இருந்தால், மற்றவர்களிடமிருந்து எந்த வெள்ளிப் பொருளையும் பரிசாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. உங்கள் தாயிடமிருந்து வெள்ளி மோதிரத்தை பரிசாக அணிந்தால், அதன் பலன்கள் இரட்டிப்பாகும்.

Wednesday, 21 May 2025

மத்தி மீன்கள்



மீனை வாங்கும்போது மத்தியை தூக்குங்க, மத்ததை விடுங்க.. நீரிழிவு, இதய நோயாளிக்கு உதவும் மத்தி மீன்கள்

  பல வருட காலமாக பலராலும் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட மீன்தான் இந்த மத்தி மீன்கள்.. சாளை மீன் என்று சொல்லக்கூடிய இந்த மத்தி மீனுக்கு திடீரென மவுசு எகிறி விற்பனை ஆக என்ன காரணம் தெரியுமா? மத்தி மீன்களில் உள்ள சத்துக்கள் என்னென்ன? மத்தி மீனை உணவில் சேர்ப்பதால் தீரக்கூடிய உடல் தொந்தரவுகள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.


மனித உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமான சத்துக்கள் மத்தி மீனில் உள்ளது. எனவே, இந்த மீனை உணவில் அடிக்கடி சாப்பிடுவதால், நீரிழிவு நோயின் தீவிரம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது..சர்க்கரையை உறிஞ்சி, இன்சுலின் தட்டுப்பாட்டை குறைக்க செய்கிறது.. இதனால் இதய நோய்கள் ஆபத்து குறைக்கப்படுகிறது..



மத்தி மீனின் ஸ்பெஷல்

ஒமேகா 3 கொழுப்பு அமிலம்தான், இதயத்தை காக்கக்கூடியதில் பெரும் பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் மத்தி மீனை சாப்பிடுவதால், இன்சுலின் சுரப்பை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. எனவேதான், இந்த மீனுக்கான கிரேஸ் உயர்ந்து வருகிறது. அதனால்தான், தமிழ்நாட்டை விட கேரளாவில், இந்த மீனை அதிகம் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.


மத்தி மீனில் புரோட்டீன், வைட்டமின் D, B5, ஒமேகா 3 அமிலங்கள் அதிகமாக உள்ளது.. 100 கிராம் மத்தி மீனில், புரோட்டீன் 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும், கொழுப்பு, வைட்டமின், தாதுச்சத்து அடங்கியிருக்கின்றன.. நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்களுக்கு மத்தி மீனை போன்ற சிறந்த மருந்து கிடையாது.


எலும்பு ஆரோக்கியம்

ஃபோலேட், செனிலியம், பாஸ்பரஸ், வைட்டமின் B12 சத்துக்கள் மத்தி மீனில் இருப்பதால், ரத்த ஓட்டம் அதிகரித்து, உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் சீராகும், மேலும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது. கண்பார்வை பாதிப்புகளை தடுக்கவும் மத்தி உதவுகிறது. ஒமேகா - 3 காரணமாக கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.

கால்சியம் அவசியம்



கால்சியம் பல் மற்றும் எலும்பு ஆரோக்கியம் மேம்படும். மத்தி மீனில் இருக்கும் அயோடின் தாதுசத்து முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து தான் கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாத்திரைகளை சாப்பிடுபவர்களுக்கு சருமம் பளிச்சிடும். மத்தி மீனில் இருக்கும் வைட்டமின் B 12 உடலில் இருக்கும் ஹோமோசைஸ்டீன் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்கள் பாதிப்படைவதை தடுக்கிறது.



Tuesday, 20 May 2025

எந்த ராசிகளை கண் திருஷ்டி அதிகம் பாதிக்கும்

 இந்து மத மூட நம்பிக்கைகளில் கண் திருஷ்டி ஒருவருக்கு எதிர்மறை ஆற்ரலை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. எந்த ராசிகளை கண் திருஷ்டி அதிகம் பாதிக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க..


 தீய கண் என்பது இந்திய மூடநம்பிக்கையில் ஒரு நபரின் எதிர்மறை ஆற்றல் அல்லது பொறாமை மற்றொருவருக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். சில ராசிகள் இதனால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
தீய கண் என்பது இந்திய மூடநம்பிக்கையில் ஒரு நபரின் எதிர்மறை ஆற்றல் அல்லது பொறாமை மற்றொருவருக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். சில ராசிகள் இதனால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்படுகிறது.



 இதன் மூலம் ஒரு நபருக்கு எதிர்மறை ஆற்றலால் ஈர்ப்பு, உடல்நல குறைவு, துரதிர்ஷ்டம் அல்லது விபத்துக்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்த மூடநம்பிக்கையில் கெட்ட சக்திகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதை வலியுறுத்துகிறது. தீய கண்ணால் பாதிக்கப்படக்கூடிய முதல் 5 ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
இதன் மூலம் ஒரு நபருக்கு எதிர்மறை ஆற்றலால் ஈர்ப்பு, உடல்நல குறைவு, துரதிர்ஷ்டம் அல்லது விபத்துக்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்த மூடநம்பிக்கையில் கெட்ட சக்திகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதை வலியுறுத்துகிறது. தீய கண்ணால் பாதிக்கப்படக்கூடிய முதல் 5 ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..



 கடக ராசிக்காரர்கள் அக்கறையுள்ளவர்களாகவும் உணர்திறன் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள், எனவே அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்கள் சிறப்பாக இல்லாதபோது அதை அடிக்கடி உணர்கிறார்கள். அவர்களின் கருணை சில நேரங்களில் மற்றவர்களிடம் பொறாமையைத் தூண்டும். ஒரு அடர் நீல நிற தீய கண் வசீகரம் அவர்களை அந்த எதிர்மறையிலிருந்து பாதுகாக்கவும், அவர்களின் உணர்வுகளை சமநிலையில் வைத்திருக்கவும் உதவும்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் அக்கறையுள்ளவர்களாகவும் உணர்திறன் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள், எனவே அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்கள் சிறப்பாக இல்லாதபோது அதை அடிக்கடி உணர்கிறார்கள். அவர்களின் கருணை சில நேரங்களில் மற்றவர்களிடம் பொறாமையைத் தூண்டும். ஒரு அடர் நீல நிற தீய கண் வசீகரம் அவர்களை அந்த எதிர்மறையிலிருந்து பாதுகாக்கவும், அவர்களின் உணர்வுகளை சமநிலையில் வைத்திருக்கவும் உதவும்.
advertisement

 மிதுன ராசிக்காரர்கள் சமூக மற்றும் விளையாட்டுத்தனமானவர்கள், ஆனால் அவர்களின் ஆற்றல் மிக்க மனமும் பல்துறை இயல்பும் அவர்களை தீய கண் பாதிப்புகளுக்கு ஆளாக்கக்கூடும். மஞ்சள் தீய கண் வசீகரம் மிதுன ராசிக்காரர்களுக்கு வெளிப்புற கவனச்சிதறல்களைத் தடுத்து நிறுத்தவும், சோர்விலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் உதவும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் சமூக மற்றும் விளையாட்டுத்தனமானவர்கள், ஆனால் அவர்களின் ஆற்றல் மிக்க மனமும் பல்துறை இயல்பும் அவர்களை தீய கண் பாதிப்புகளுக்கு ஆளாக்கக்கூடும். மஞ்சள் தீய கண் வசீகரம் மிதுன ராசிக்காரர்களுக்கு வெளிப்புற கவனச்சிதறல்களைத் தடுத்து நிறுத்தவும், சோர்விலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் உதவும்.



 இந்த ராசிக்காரர்கள் அக்கறையுள்ளவர்களாகவும் ஆன்மீகவாதிகளாகவும் அறியப்படுகிறார்கள், ஆனால் அவர்களின் கனவுப் பக்கம் அவர்களை சில மோசமான அதிர்வுகளுக்குத் திறக்கலாம். அவர்கள் அடர் பச்சை நிற தீய கண் வசீகரத்தைப் பயன்படுத்தலாம், இது அவர்களின் கனவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
மீனம்:
இந்த ராசிக்காரர்கள் அக்கறையுள்ளவர்களாகவும் ஆன்மீகவாதிகளாகவும் அறியப்படுகிறார்கள், ஆனால் அவர்களின் கனவுப் பக்கம் அவர்களை சில மோசமான அதிர்வுகளுக்குத் திறக்கலாம். அவர்கள் அடர் பச்சை நிற தீய கண் வசீகரத்தைப் பயன்படுத்தலாம், இது அவர்களின் கனவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
advertisement


 சிம்ம ராசிக்காரர்கள் தைரியமானவர்கள் மற்றும் வாழ்க்கை நிறைந்தவர்கள், ஆனால் சில சமயங்களில் அவர்களின் தன்னம்பிக்கை மற்றவர்களிடமிருந்து பொறாமையை ஈர்க்கக்கூடும். ஆரஞ்சு நிற தீய கண் வசீகரம் ஒரு சிம்ம ராசிக்காரரின் மனநிலையை அதிகரிக்கும் மற்றும் பொறாமைக்கு எதிராக சில பாதுகாப்பை வழங்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் தைரியமானவர்கள் மற்றும் வாழ்க்கை நிறைந்தவர்கள், ஆனால் சில சமயங்களில் அவர்களின் தன்னம்பிக்கை மற்றவர்களிடமிருந்து பொறாமையை ஈர்க்கக்கூடும். ஆரஞ்சு நிற தீய கண் வசீகரம் ஒரு சிம்ம ராசிக்காரரின் மனநிலையை அதிகரிக்கும் மற்றும் பொறாமைக்கு எதிராக சில பாதுகாப்பை வழங்கும்.


 துலாம் ராசிக்காரர்கள் இனிமையானவர்கள் மற்றும் கவர்ச்சிகரமானவர்கள், ஆனால் சமநிலை மற்றும் நல்லிணக்கத்திற்கான அவர்களின் விருப்பம் அவர்களை எதிர்மறை ஆற்றல்களுக்கு ஆளாக்குகிறது. இளஞ்சிவப்பு தீய கண் வசீகரம் துலாம் ராசிக்காரர்களின் ஒளியைக் காப்பாற்றி, அவர்களை அழகுடன் இணைத்து வைத்திருக்க உதவும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் இனிமையானவர்கள் மற்றும் கவர்ச்சிகரமானவர்கள், ஆனால் சமநிலை மற்றும் நல்லிணக்கத்திற்கான அவர்களின் விருப்பம் அவர்களை எதிர்மறை ஆற்றல்களுக்கு ஆளாக்குகிறது. இளஞ்சிவப்பு தீய கண் வசீகரம் துலாம் ராசிக்காரர்களின் ஒளியைக் காப்பாற்றி, அவர்களை அழகுடன் இணைத்து வைத்திருக்க உதவும்.


Monday, 19 May 2025

கருக் கலைப்பு பாவச் செயலாக கருத முடியாது!!!

5 ஆம் இடம்தான் பூர்வ புண்ணிய ஸ்தானம். 5ஆம் இடத்தை பாவ கிரகங்கள் சூழ்ந்திருந்தாலோ, பார்வை பெற்றிருந்தாலோ இதுபோன்ற செயல்கள் நடக்கும் என்று பழைய நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

குறிப்பாக 5ஆம் இடத்தில் சூரியனோ, சந்திரன், செவ்வாயோ அமர்ந்திருந்தால் அவர்களுக்கு அபார்ஷன் ஆகும். முதல் குழந்தையே அபார்ஷன் ஆகி பின்புதான் குழந்தை பிறக்கும்.

இதில், எத்தனை உருவாகும், எத்தனை நிற்கும், எத்தனை குழந்தை பிறக்கும் என்பது எல்லாமே புத்திர பாகம் என்பதில் சொல்லப்பட்டிருக்கிறது.

உத்திர காலாமிர்தம், பிருகத் ஜாதகம் என்றொரு சமஸ்கிருத நூலிலும் இதுபற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

ஜாதக அலங்காரம் என்ற நூலிலும் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. எந்தெந்த காலகட்டத்தில் கரு சிதைவு ஏற்படும், எந்த காரணத்தினால் ஏற்படும் என்பதையெல்லாம் கூறியுள்ளது. எந்த தசா புக்தி நடக்கும்போது நடக்கும் என்பதையும் இந்நூல் கூறுகிறது. இதுவும் விதிக்கப்பட்டதுதான்.

கர்ப உற்பத்தி என்பதும் கூட ஒரு சில தசா புக்திகளில்தான் நடைபெறுகிறது. குரு அந்தரம், குரு புக்தி, குரு ராசியையோ, லக்னத்தையோ பார்க்கும்போது அல்லது குரு 5ஆம் ஸ்தானத்தை பார்க்கும் காலக்கட்டத்தில்தான் குழந்தையே உருவாகிறது என்று சுக்ர நாடி என்ற நூல் சொல்கிறது.

குருதான் குழந்தை உருவாவதற்கு அதாவது சுக்லம், சுரோனிதம் கலப்பிற்கு முக்கியமாக அமைகிறது. கலவிக்குக் காரணம் சுக்ரன். அது குழந்தையாக உருவாவதற்கு குருவின் பார்வை முக்கியம். அதனால்தான் குரு ராசியையோ அல்லது லக்னத்தையோ பார்க்கும் போது, 5ஆம் இடம் சுக்ரன் திசையைப் பார்க்கும் போதோ அல்லது எந்த தசா அல்லது எந்த புக்தி நடந்தாலோ அந்த தசா அல்லது அந்த புக்திக்கு குருவின் அந்தரம், தசா புக்தி நடந்தால் அப்போதுதான் குழந்தை உருவாகும். அதைத் தவிர்த்து மற்ற நேரங்களில் உருவாகும் கருதான் கருக்கலைப்பிற்கு உட்படும்.

அவர்களாகவே கருக்கலைப்பு செய்து கொள்வது பற்றி?

அதுவும் அவர்களது தசாபுக்தியின் அடிப்படையிலேயே நடக்கும். அதாவது ஒரு சிலர் இரண்டு ஆண்டுகளுக்கு குழந்தை வேண்டாம் என்று தள்ளிப்போடுவது உண்டு. அப்போது அவர்களுக்கு குழந்தைக்கான தசா புக்தி நடக்காது. அதனால் இயற்கையிலேயே அவ்வாறு அமைந்துவிடும்.

அதுபோலத்தான் ஒரு சிலருக்கு அஷ்டமத்து சனி, ராகு போன்ற தசைகள் நடக்கும்போது நாங்களே குழந்தைப்பேறைத் தவிர்க்குமாறு அறிவுரை வழங்குகிறோம்.

கருக்கலைப்பு செய்து கொள்வது பாவமா?

இல்லை. கரு குழந்தையாக உருவாகாத தசா புக்தி நடக்கும்போது உருவாகும் கரு தானாகவோ அல்லது தாங்களாகவோ கலைப்பு செய்யும்படிதான் அமையும். அதை ஒரு பாவச்செயலாகக் கருத முடியாது.

என்னென்ன கிரக அமைப்பு இருக்கும்போது கருச்சிதைவு ஏற்படும் என்பதும் இருக்கிறது.

Friday, 16 May 2025

விட்டமின் பி12 குறைந்தால் உடலில் என்ன நிகழும்?



விட்டமின் பி12 குறைந்தால் உடலில் என்ன நிகழும்? சைவ உணவாளர்கள் இதை எப்படி பெறுவது?
விட்டமின் பி12, பாதிப்பு, விட்டமின் பி12-ஐக் கொண்டுள்ள உணவுப் பொருட்கள்
விட்டமின் பி12 உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. இதன் குறைபாட்டால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. பொதுவாக சைவ உணவுகளில் இந்த விட்டமின் இருப்பதில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

விட்டமின் பி12 பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னைகள் என்ன? வாழ்வில் எந்தெந்த காலகட்டத்தில் விட்டமின் பி12-ன் தேவை அதிகமாக இருக்கிறது? விட்டமின் பி12 அதிகமாக உள்ள உணவுகள் என்னென்ன?

சைவ உணவை உட்கொள்ளும் நபர்கள் எவ்வாறு தங்களுக்கான விட்டமின் பி12 வை பெற்றுக் கொள்ள இயலும்? அதற்கான பதில்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

விட்டமின் பி12, பாதிப்பு, விட்டமின் பி12-ஐக் கொண்டுள்ள உணவுப் பொருட்கள், ஆரோக்கியம், 
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
விட்டமின் பி12 என்றால் என்ன?
கோபாலமின் (Cobalamin) என்று அழைக்கப்படும் விட்டமின் பி12 என்பது விட்டமின் பி குடும்பத்தில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கியமான விட்டமின். இது அதிகமாக விலங்கு சார் உணவுகளில் மட்டுமே காணப்படுகிறது.

நீங்கள் சைவ உணவு உண்ணும் பழக்கத்தைக் கொண்டவர்களாக இருப்பீர்கள் எனில், உங்கள் உடலுக்குத் தேவையான விட்டமின் பி12-ஐ சப்ளிமெண்ட்கள் (supplements) மூலமே பெற்றுக் கொள்ள இயலும் அல்லது பி12 விட்டமினுடன் செறிவூட்டப்பட்ட உணவு உங்களுக்கு கைகொடுக்கலாம்.


விட்டமின் பி12, பாதிப்பு, விட்டமின் பி12-ஐக் கொண்டுள்ள உணவுப் பொருட்கள், ஆரோக்கியம்
விட்டமின் பி12 குறைந்தால் உடலில் என்ன நிகழும்? சைவ உணவாளர்கள் இதை எப்படி பெறுவது?
'
உடல் ஆரோக்கியத்துக்கு விட்டமின் பி12-ன் பங்கு என்ன?
"உடலில் உள்ள இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை சீராக வைக்கிறது விட்டமின் பி12. இரத்த சிவப்பு அணுக்கள் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

மேலும், உங்கள் உடலின் நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதையும் உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது விட்டமின் பி12.

இது மட்டுமின்றி, "டி.என்.ஏ. உருவாக்கத்துக்கும், சேதமடைந்த டி.என்.ஏவை சரி செய்வதற்கும் விட்டமின் பி12 அதிக அளவில் தேவைப்படுகிறது," என்று தெரிவிக்கிறார் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஊட்டச்சத்து துறையில் பணியாற்றும் மருத்துவர் 


விட்டமின் பி12, பாதிப்பு, விட்டமின் பி12-ஐக் கொண்டுள்ள உணவுப் பொருட்கள், ஆரோக்கியம், 
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,விட்டமின் பி12 பற்றாக்குறையால் இளம் வயதினர் மற்றும் கர்ப்பிணிகள் அதிக அளவில் பாதிப்பை சந்திக்கின்றனர்
எந்த வயதினருக்கு எவ்வளவு விட்டமின் பி12 தேவை?


ஆறு முதல் 18 வயதினருக்கு இந்த ஊட்டச்சத்து நாள் ஒன்றுக்கு 2.2 மைக்ரோ கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு விட்டமின் பி12-ன் தேவை அதிகமாக இருக்கலாம் என்று கூறுகிறார் மீனாட்சி.

யார் விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள்?
யார் விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்று பிபிசி தமிழிடம் விளக்கினார் மருத்துவர் மீனாட்சி.

பொதுவாகவே பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் உண்ணாமல் 'வீகன்' உணவுமுறையைப் பின்பற்றுபவர்கள் விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிப்பைச் சந்திப்பார்கள்.
லாக்டோஸ் சகிப்புத்தன்மை குறைப்பாட்டால் பாதிக்கப்படும் நபர்களும் விட்டமின் பி12 பற்றாக்குறையால் அவதிப்பட நேரிடும்.
விட்டமின் பி12 என்பது நீரில் கரையக்கூடிய (Water Soluble) விட்டமின் ஆகும். இது எளிதில் உட்கிரகித்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டது. ஆனால் சில இணை நோய்களுக்காக மருந்துகளை உட்கொள்ளும் போது விட்டமின் பி12-ஐ உட்கிரகித்துக் கொள்ளும் தன்மையில் பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாகவும் பி12 பற்றாக்குறையை சந்திக்க நேரிடும்.
இதுமட்டுமின்றி வயிற்றில் புற்றுநோய் இருக்கும் போதோ, ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தாலோ, அல்லது அல்சர் போன்ற நோய்களுக்காக மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தாலோ பி12-ஐ உட்கிரகித்துக் கொள்ளும் தன்மையில் பாதிப்பு ஏற்பட்டு, பி12 பற்றாக்குறையை சந்திக்க நேரிடும்.
அதுமட்டுமின்றி, வகை இரண்டு நீரிழிவு நோய்க்கு மருந்துகளை எடுத்துக் கொள்ளும் நபர்களும் இத்தகைய விட்டமின் பி12 பற்றாக்குறைக்கு ஆளாக நேரிடும்.
உணவுடன் சேர்த்து காபி குடிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் சிக்கல்கள்
2 மே 2025
சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடுவதால் ஆபத்தா? செய்யக் கூடாத 5 விஷயங்கள்

விட்டமின் பி12, பாதிப்பு, விட்டமின் பி12-ஐக் கொண்டுள்ள உணவுப் பொருட்கள், ஆரோக்கியம்,  
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,நாள் ஒன்றுக்கு ஒரு முட்டையை கட்டாயமாக எடுத்துக்கொண்டாலும் அவர்களுக்கு விட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படாது.
பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
"நரம்பு மண்டலம் மற்றும் இரத்த சிவப்பு அணுக்களின் சீரான வளர்ச்சிக்கு உதவும் மிக முக்கியமான ஊட்டச்சத்தாக விட்டமின் பி12 இருப்பதால், இதன் பற்றாக்குறை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்," என்று எச்சரிக்கிறார் மருத்துவர் மீனாட்சி.

"நான்கு முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் பி12 குறைபாடு மற்றவர்களைக் காட்டிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது," என்று கூறுகிறார் அவர்.

ஃப்ராண்டியர்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள, 'மெட்டர்னல் விட்டமின் பி12 ஸ்டேட்டஸ் ட்யூரிங் பிரக்னன்சி அண்ட் இட்ஸ் அசோசியேசன் வித் அவுட்கம்ஸ் ஆஃப் பிரக்னன்சி அண்ட் ஹெல்த் ஆஃப் தி ஆஃப்ஸ்ப்ரிங்' என்ற ஆய்வறிக்கையில், இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில், விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 70 முதல் 74% ஆக உள்ளது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, கர்நாடகாவில் இந்த பற்றாக்குறையால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 51% ஆகவும் இருக்கிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"பி12 பற்றாக்குறையால் இரத்த சோகையில் பெர்னிசியஸ் அனீமியா (pernicious anemia) என்ற பிரச்னை ஏற்படும்.

நரம்பியல் சார்ந்த பிரச்னைகள், சமநிலையற்ற தன்மை, தலைசுற்றல், பலவீனம் அடைதல், மூச்சுப் பிரச்னைகள் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மேலும், இதன் பற்றாக்குறை மிகவும் தீவிரமாக இருக்கும் போது, இரத்தத்தில் ஹோமோசிஸ்டெய்ன் (homocysteine) அளவு அதிகமாகும். அளவுக்கு அதிகமாக ஹோமோசிஸ்டெய்ன், ஹைப்பர்ஹோமோசிஸ்டெய்னீமியா (hyperhomocysteinemia) என்ற குறைபாடு ஏற்படும். இதனால் கார்டியோ வாஸ்குலர் என்ற இருதய நோய் ஏற்படக் கூடும்," என்றும் எச்சரிக்கை செய்கிறார் அவர்.

உணவு இல்லாமல் மருந்து மாத்திரைகள் மூலமாக பி12 பற்றாக்குறையை நிவர்த்தி செய்து கொள்ளும் மக்கள், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொள்கின்றனர். ஆனால் அப்படி செய்யக் கூடாது. தொடர்ச்சியாக பி12 சப்ளிமெண்டுகளை எடுத்துக் கொள்வது இது போன்ற அபாயங்களில் இருந்து மக்களை காப்பாற்றும், என்றும் மீனாட்சி விளக்கம் அளித்தார்.

பெண்களின் உணவுத்தேவையும் பேசப்படாத கதைகளும்
மாதவிடாய் மன அழுத்தம்: தெரிந்து கொள்ள வேண்டியவை
மாதவிடாய் நாட்களில் விடுமுறை: - பிகார் மாடலை தமிழ்நாட்டில் ஏன் பின்பற்ற முடியவில்லை?
இந்தியாவில் அவசர கருத்தடை மாத்திரைகளை மருந்தகங்களில் நேரடியாக வாங்க தடை வருமா?
விட்டமின் பி12, பாதிப்பு, விட்டமின் பி12-ஐக் கொண்டுள்ள உணவுப் பொருட்கள், ஆரோக்கியம்,  
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,லாக்டோஸ் சகிப்புத்தன்மை குறைப்பாட்டால் பாதிக்கப்படும் நபர்களும் விட்டமின் பி12 பற்றாக்குறையால் அவதிப்பட நேரிடும்
விட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகள்
காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றில் விட்டமின் பி12 கிடையாது. விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்களில் விட்டமின் பி12 அதிகமாக காணப்படுகிறது.

எந்தெந்த உணவுகளில் விட்டமின் பி12 அதிகமாக உள்ளது என்பதைப் பற்றி விளக்கிய மருத்துவர் மீனாட்சி, அதனை பின்வருமாறு பட்டியலிட்டார்.

சிலர் சைவமாக இருந்தாலும் அவர்கள் பால் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்களை சேர்க்கும் போது எத்தகைய பிரச்னையும் இல்லை.
அதேபோன்று, நாள் ஒன்றுக்கு ஒரு முட்டையை கட்டாயமாக எடுத்துக்கொண்டாலும் அவர்களுக்கு விட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படாது.
ஆனால், மாமிச உணவுகளான, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, மீன்களில், குறிப்பாக கானாங்கெளுத்தி, சாலமன், சூரை மீன்களில் விட்டமின் பி12 செறிவுடன் காணப்படுகிறது.
மாட்டிறைச்சியில் குறிப்பாக அதன் ஈரலில் விட்டமின் பி12 அதிகமாக உள்ளது. எனவே, விட்டமின் பி12 பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரும்புபவர்கள் இந்த உணவை சீராக எடுத்துக் கொள்ள வேண்டும்.
வீகன் உணவு முறையைப் பின்பற்றுபவர்கள், செரல்கள் போன்ற செறிவூட்டப்பட்ட உணவுகளை உட்கொள்ளலாம். மாட்டுப்பால் இல்லாத இதர பால் வகைகளை (non-dairy milks) உட்கொள்ளலாம். மேலும், நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செயலிழக்கப்பட்ட ஈஸ்ட்டைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஃப்ளேக்ஸை உணவாக உட்கொள்ளலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் லாரா டில்ட், பிபிசிக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார்.


Thursday, 8 May 2025

நட்சத்திரம் vs லக்கி நம்பர்

அசுவனி, 6
பரணி,10 
கார்த்திகை,20 ரோகிணி,32 மிருகசீரிடம்,22 திருவாதிரை,12 புனர்பூசம், 8
பூசம், 32
ஆயிலியம், 45
மகம்,42
 பூரம், 64
உத்திரம்,56 
அஸ்தம்,54 
சித்திரை, 79
சுவாதி,39 
விசாகம்,97 
அனுஷம்,68 
கேட்டை, 88
மூலம்,87 
பூராடம்,73 
உத்திராடம்,92 திருவோணம்,90 அவிட்டம்,85 
சதையம்,93
பூரட்டாதி,89 உத்திரட்டாதி,95 
ரேவதி16


Ashwini:6
Bharani: 10
Krittika: 20
Rohini: 32
Mrigashira: 22
Ardra:12
Punarvasu: 8
Pushya: 32
Ashlesha: 45
Magha: 42
Purva Phalguni: 64
Uttara Phalguni: 56
Hasta:54
Chitra: 79
Swati: 39
Vishakha: 97
Anuradha: 68
Jyeshtha: 88
Mula: 87
Purva Ashadha: 73
Uttara Ashadha: 92
Shravana: 90
Dhanishta: 85
Shatabhishak: 93
Purva Bhadrapada: 89
Uttara Bhadrapada: 95
Revati: 16

Tuesday, 29 April 2025

சிலந்தி வலைகள்


வீட்டில் சிலந்தி வலை இருக்கா? விரட்டி விட்டாலும் மீண்டும் வருதா? பணம் கையில் நிக்காது.. இதை பாருங்க
 வீட்டில் சிலந்தி வலை இருப்பது நல்லதா? கெட்டதா? சிலந்திகள் வீட்டிற்குள் ஆகாத பூச்சியினமானும்.. வாஸ்துபடி வீடுகளில் சிலந்தி வலை இருந்தால், பணம் நிற்காது.. சிலந்தி வலைகள் எதிர்மறை ஆற்றலை வீட்டிற்குள் ஈர்க்கக்கூடியவை.. எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அவை கரைந்து கொண்டேயிருக்கும். சிலந்திகள் வீட்டிற்குள் இருப்பதால் வேறு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? சிலந்திகளை அகற்ற என்ன செய்யலாம்?


சிலந்தி வலைகள் எப்போதுமே நல்ல விஷயமாக கருதப்படுவதில்லை.. வீட்டில் எதிர்மறை ஆற்றலை, நெகட்டிவ் எனர்ஜியை அதிகப்படுத்திவிடும்.. ஒற்றுமையாக இருக்கும்போதுகூட, பிரிவினைக்குள் ஆளாக நேரிடும்..




நிதிநிலை பற்றாக்குறை
தேவையில்லாமல், பணம் கரைந்து கொண்டேயிருக்கும்.. காரணமே இல்லாமல் கோபப்படுவது, சோம்பல், குழப்பம், பதட்டம் அனைத்துமே ஏற்படும். அதாவது, வீட்டிற்குள் சிலந்தி வலைஇருந்தால், நிதிநிலை பற்றாக்குறை, செலவுகள், வீண் விரயம் ஏற்படும்.. படுக்கை அறையில் சிலந்தி வலைகள் இருந்தால், அது தம்பதியிடையே பிணக்கத்தை தரும்.


பூஜை அறையில் சிலந்தி வலை இருந்தால், குடும்பத்தில் தீரா கஷ்டங்கள் ஏற்படும். சமையலறையில் சிலந்தி வலை பின்னப்பட்டிருந்தால், குடும்பத்தில் யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்படலாம். எனவே, சுத்தம் செய்து, சிலந்தி வலைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

சிலந்தி வலைகள்


அப்படி சுத்தம் செய்தும் மீண்டும் மீண்டும் சிலந்திகள் வீட்டிற்குள் வந்தால், புதினா எண்ணெய் பயன்படுத்தலாம்.. காரணம், சிலந்திகளுக்கு புதினா வாசனை பிடிக்காது. சில துளிகள் புதினா எண்ணெயை நீரில் கலந்து, ஜன்னல்கள், கதவுகள், மற்றும் சிலந்தி வலை பின்னும் இடங்களில் தெளித்துவிடலாம்.


Thursday, 24 April 2025

முடவாட்டுக்கால் சூப்...


முடவாட்டுக்கால் சூப்பை குடிங்க! கம்பை தூக்கி போட்டுட்டு நடங்க! சூப் செய்வது எப்படி?
முடவாட்டுக்கால் சூப்பை எப்படி தயார் செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் அந்த முடவாட்டுக்காலில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதையும் பார்க்கலாம். முட்டி வலியால் அவதிப்படுவோருக்கு இது ஒரு வரப்பிரசாதம்.


mudavattukaal
இந்த சூப்பை குடித்தால் வயதானாலும் முட்டி வலி வராது என்கிறார்கள். இந்த முடவாட்டுக்கால் 4000 வியாதிகளை குணப்படுத்தும் என சொல்கிறார்கள். இதை சைவ ஆட்டுக்கால் என்றும் சொல்கிறார்கள்.


இது குடித்தால் ஆட்டுக்கால் போன்ற சுவையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கிழங்கு பாறைகளுக்கு இடுக்கே வளரக் கூடியது. இது மலைப் பகுதிகளிலும் குளிர்பிரதேசங்களிலும் மட்டுமே வளரக் கூடியது.


தமிழகத்தில் எங்கு
இந்த கிழங்கு தமிழகத்தில் கொல்லிமலையிலும் சேரவராயன் மலையிலும் கிடைக்கிறது. இதற்கு வேர்கள் கிடையாது. இந்த கிழங்குகள் செம்பு, தங்கம், இரும்பு, கால்சியம், பாறைகளில் இருக்கும் சிலிக்காவை உறிஞ்சும் தன்மை கொண்டது. வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை விரட்ட சித்தர்கள் இதை 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தனர்.



300 ரூபாய்
இந்த கிழங்கு ஒரு கிலோ 300 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை 6 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம் என்கிறார்கள். ஆனால் பிரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃபேன் காற்றில் வைக்கக் கூடாதாம். குழந்தைகளின் வாத நோய்க்கு இது அருமருந்து. கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்றவற்றை குணப்படுத்தும். முடக்குவாதம் வந்து முடங்கியவர்கள் இந்த கிழங்கின் சூப் வைத்துக் குடிக்கலாம்.


மூட்டு வலி
மூட்டு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, கெண்டைக்கால் வலி, தசை பிடிப்பு உள்ளிட்டவைகளுக்கு இந்த கிழக்கு அற்புதமான மருந்து. கர்ப்பப்பை சுருங்குதல், சிறுநீரகம் சுருங்குதல், உள்ளுறுப்பு சுருங்குதல், புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு நல்ல மருந்து என்கிறார்கள். முடவாட்டுக்கால் கிழங்கை போட்டு குழந்தையை குளிக்க வைத்தால் வாத நோய் நீங்கும்.

சுடுநீரில் போட்டு குளிக்கணும்
இந்த கிழங்கில் உள்ள முடி போன்ற தோலை எடுத்து சுடுநீரில் போட்டு குளித்து வந்தால் தோல் அலர்ஜி, தேம்பல், அரிப்பு போன்றவை நீங்கும். ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் மக்கள் இந்த முடவாட்டுக்கால் சூப்பை வாங்கி குடிக்கிறார்கள். அருவிக்கு சென்றுவிட்டு வருவோர் இந்த சூப்பை குடித்தால் புத்துணர்ச்சி பெறுகிறார்கள் என்கிறார்கள்.


கொடைக்கானல்
அது போல் கொடைக்கானலில் பூம்பாறையிலிருந்தும் இந்த முடவாட்டுக்கால் பல்வேறு இடங்களில் விற்கப்படுகிறது. இந்த முடவாட்டுக்காலை எப்படி சூப் வைக்கலாம் என்பதை பார்க்கலாம்.

தோல் சீவி
முடவாட்டுக்காலின் தோலை சீவி நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த முடவாட்டுக்காலை வெட்டினால் அதிலிருந்து திரவம் வரும். அப்படியென்றால் அது ஃபிரஷ்ஷாக இருக்கிறது என்று அர்த்தம். தோல் நீக்கிய முடவாட்டுக்காலை துண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

20 நிமிடங்கள்
அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, மிளகு , சீரகம், கருவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கனமான பாத்திரத்தில் இந்த விழுதை சேர்த்து தேவையான அளவுக்கு தண்ணீர் விட்டு, உப்பு போட்டு 20 நிமிடங்களாவது கொதிக்க வைக்க வேண்டும்.

கரம் மசாலா
பிறகு அந்த சூப்பில் சிறிது கரம் மசாலைா போட்டு கொதி வந்ததும் அடுப்பை அணைந்துவிட்டு வடிக்கட்டிக் கொள்ளவும். வடிகட்டியதில் கொத்தமல்லி தழை தூவி, தேவைப்பட்டால் மிளகுத் தூளையும் சேர்த்து சூடாக குடிக்கலாம். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்து வரலாம் என்கிறார்கள். இந்த கிழங்கு சென்னையில் கூட விற்பனைக்கு வந்துள்ளது.


மேலும் இதை ஏற்காடு, கொடைக்கானல் வியாபாரிகளிடம் இருந்து ஆன்லைனில் கூட வாங்கிக் கொள்ளலாம். இந்த சூப் குடித்ததும் ஒரு மணி நேரத்திற்கு எதையும் சாப்பிடக் கூடாது. மேலும் இதை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது என்கிறார்கள்.


Sunday, 20 April 2025

பாம்புகள் பால் குடிக்குமா?


பாம்புகள் பால் குடிக்குமா? புற்றுக்கு பால் வைப்பது ஏன்? இந்த சம்பவத்திற்கு பின்னால் இருக்கும் நம்பிக்கையையும் உண்மையையும் அறிவியல் காரணங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.


இதுகுறித்து சமூகவலைதளத்தில் யுவி என்பவர் செய்திருந்த பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ் சினிமாவில் பாம்பு புற்றிலிருந்து வந்து பால் குடிக்கின்றன காட்சியை வைத்து இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள் என்று நான் கருதுகிறேன்.


பாம்புகளின் சட்டையை பார்த்துள்ளீர்களா? பாம்புகள் தோல் உரிக்காவிட்டால் என்னவாகும்?
"பாம்புகளின் சட்டையை பார்த்துள்ளீர்களா? பாம்புகள் தோல் உரிக்காவிட்டால் என்னவாகும்?"
பாம்பு பால் குடிக்குமா என்ற கேள்விக்கு அறிவியல் காரணத்தை அறியும் முன் இந்து சமயத்தோடு இந்த கேள்வி தொடர்புடையதால் முதலில் இந்து சமயத்திலிருந்து பதிலை தொடங்குகிறேன்.


இந்து சமய புராணத்தின்படி நம்பப்படும் காரணங்கள்
சிவன் மற்றும் பாம்பு மற்றும் பால் தொடர்பான ஒரு இந்து புராணம் இருப்பதாக நான் நம்புகிறேன். இந்து மதத்தில் பால் மிகவும் புனிதமானதாகவும் தூய்மையானதாகவும் கருதப்படுகிறது.

நம்முடைய ஆத்மா எல்லா கர்மங்களிலிருந்தும் விடுபட்டுள்ளது. சிவனுக்கு நம் ஆத்மாவை வெவ்வேறு காலத்திலிருந்து விடுவித்து, நித்தியத்தை (மோக்ஷத்தை) வழங்குவதற்கான அதன் பிரதிநிதித்துவம்.



இரண்டாவது காரணம், தேவர்கள் அமிர்தத்தை பால் பெருங்கடலில் இருந்து துடைக்க விரும்பியபோது, வாசுகி கயிற்றைக் கசக்கினார்.

மற்றொரு காரணம்
பால் இறைவன் சிவனிடமிருந்து வருகிறது.
வேத காலத்தில், மக்கள் சிவலிங்கத்தை வணங்கத் தொடங்கியபோது. பால் வழங்குவதன் மூலம், சிவன் பாம்புகளைச் சுற்றிலும் வாழ்கிறார் என்றும் பால் அந்த பாம்புகளால் நுகரப்படும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.

பாம்புகளுக்கு பால் வழங்கினால் இறைவன் சிவன் மகிழ்ச்சி அடைவான் என்பது ஒரு புதிய கோட்பாடாக மாறியதுடன், புராணம் நாகபஞ்சாமியில் பாம்புகளுக்கு பால் கொடுக்கும் ஒரு மரபுவழி சடங்காக மாறியது.


நாக பஞ்சமி
இந்த கேள்விக்கு பின்னால் உள்ள முக்கிய காரணம் இதுதான். நாக பஞ்சமிக்கு முன்பு பாம்பு மந்திரவாதிகள் அல்லது பாம்பாட்டிகள் பொதுவாக தங்கள் பாம்புகளுக்கு தண்ணீர் மற்றும் உணவைக் கொடுப்பதில்லை.

எனவே, அந்த குறிப்பிட்ட நாளில், பாம்புகளுக்கு பாலை வைக்கின்றனர். பல நாள் நீர் அருந்தாமல் பாம்புக்கு கடுமையாக நீரிழப்பு ஏற்பட்டு இருக்கும். கடுமையாக நீரிழப்பு ஏற்பட்டால் அது நல்லதல்ல.

பாம்பு பாலைக் கண்டதும் நீரிழப்பை தவிர்க்க ஒருவேளை பாம்பு பாலை குடிக்கலாம். அடிப்படையில், அவர்களுக்கு பால் குடிப்பதைத் தவிர வேறு வழியில்லை, ஏனென்றால் அது உயிர் வாழும் வேண்டும். பின்னர், பாம்பு அதை ஜீரணித்துவிட்டால், அது மீண்டும் பாலை குடிக்காது.

அறிவியல் ரீதியான காரணங்கள்
பால் என்பது பாலூட்டிகளால் தங்கள் சந்ததியினருக்கு உணவளிக்க பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது பாலூட்டியின் வரையறுக்கும் பண்பு.
பாம்புகள் ஊர்வன. அவர்களுக்கு பால் சுரப்பிகள் இல்லை. அவைகளால் பாலை உற்பத்தி செய்ய முடியாது.

எனவே பால் குடிப்பதற்கு பரிணாம ரீதியாக சுட்டிக்காட்டப்படவில்லை. பாம்புகள் அனைத்து மாமிச உண்ணிகள். அவை மற்ற உயிரினங்களை சார்ந்து மட்டுமே வாழ முடியும்.

அவற்றின் உணவு வகையான எலிகள், பூச்சிகள், முட்டைகள், தவளைகள், தேரைகள் மற்றும் நத்தைகள் வரை இருக்கும்.

பாம்பு ஒருபோதும் உணவு, தண்ணீருக்கு பதிலாக பால் குடிப்பதில்லை. பாம்புகள் பால் குடிக்கும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை. இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Wednesday, 9 April 2025

சாணக்ய நீதி: கணவன் - மனைவி உறவில் வயது வித்தியாசம் எவ்வளவு இருக்க வேண்டும்?



சாணக்ய நீதி: கணவன் - மனைவி உறவில் வயது வித்தியாசம் எவ்வளவு இருக்க வேண்டும்?



சாணக்கியர் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவைக் கொண்டவர். பலரும் வாழ்க்கையில் சாணக்கியரின் நெறிமுறைகளை பின்பற்றுகின்றனர். அப்படி கணவன் மனைவிக்குள் எவ்வளவு வயது வித்தியாசம் இருக்க வேண்டும், எது வாழ்க்கைக்கு சிறந்தது என்பது பற்றி அவர் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்


குடும்பத்தில் முக்கிய உறவு என்றால் அது திருமண பந்தம் தான். பலரும் தங்கள் வாழ்க்கையில் கணவன் - மனைவி உறவு நீடிக்க என்ன செய்ய வேண்டும் என கருத்து கேட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் டைவர்ஸ் கலாச்சாரமும் அதிகரித்து வருகிறது. இப்படி ஒரு சூழலில் இந்த பிரச்சனைகளுக்கு வயது வித்தியாசம் காரணமாக இருக்கலாமா என்ற பேச்சுக்களும் எழுந்து வருகிறது. குடும்பம் என்றாலே கணவன் - மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் இருக்க தான் செய்யும். ஆனால் சிலர் வீடுகளில் அது அதிகமாக இருப்பதால் என்ன செய்வதென தெரியாமல் இருப்பார்கள்.


சாணக்கியர், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு கணவன் மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருக்கக்கூடாது என்றும், இருவருக்கும் இடையே பெரிய வயது வித்தியாசம் இருந்தால், திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும் எனவ்ம் தெரிவித்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையிலான உறவு மிகவும் புனிதமானது என்றும், இந்த பந்தத்தைப் பேணுவதற்கு, கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கணவன் - மனைவி இடையே அன்பும் நல்லிணக்கமும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.






அறிவியல் ரீதியாக, இந்திய சமுதாயத்தில், கணவன் - மனைவியின் வயதில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் இடைவெளி ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆண் குழந்தைகளை விட பெண்ணின் வயது குறைவாக இருக்க வேண்டும் என்று சமூகமும் கூறுகிறது. அதுதான் இந்திய திருமண கட்டமைப்பில் உருவாக்கி வைத்துள்ளது. ஆனால், சில நேரங்களில் இந்த இடைவெளி 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருக்கும்.

Thursday, 3 April 2025

70 வயதை கடந்தாச்சா? இந்த 3 விட்டமின் உணவுகள் முக்கியம்


70 வயதை கடந்தாச்சா? இந்த 3 விட்டமின் டி உணவுகள் முக்கியம்:
70 வயதை கடந்தபின்பு அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்த உணவுகள்
 

எலும்பு உறுதி 

70 வயதுக்கு மேல் எலும்புகள் பலவீனமாகும். அப்போது எலும்பு முறிவு, தேய்மானம், வலி போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஹீல் யுவர் ஹார்ட் யூடியூப் பக்கத்தில் டாக்டர் ராமசாமி கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

70 வயதுக்கு மேல் உடலில் வைட்டமின் டி குறைபாடு இருக்கும். அப்படி இருக்கும்போது நாம் நீண்ட நேரம் வெயிலில் இருக்க வேண்டும். 

அதேபோல பால், முட்டை போன்றவற்றை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். விட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்வது அவசியம்.

தினமும் ஒரு துண்டு சீஸ் சாப்பிடுவது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். பாலாடைக்கட்டியில் கால்சியம் மட்டுமின்றி, வைட்டமின் டி நிறைந்துள்ளது.

கீரையில் புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உங்கள் எலும்புகளை வலுவாக்கும். உங்கள் தினசரி கால்சியம் தேவையில் நான்கில் ஒரு பங்கை ஈடுகட்ட ஒரு நாளைக்கு ஒரு கப் கீரை சாப்பிட்டால் போதும்.



Sunday, 30 March 2025

வெற்றிலை...


சுகரை கட்டுப்படுத்தும் வெற்றிலை...
ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதற்கு வெற்றிலையின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. மனஅழுத்தம் போக்குவது முதல் நீரிழிவு நோய் தடுப்பது வரை வெற்றிலையின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

வெற்றிலையை நம்மில் பலரும் பூஜைக்கு மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால், வெற்றிலையில் எவ்வளவு நன்மைகள் உள்ளன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதற்கு வெற்றிலையின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. மனஅழுத்தம் போக்குவது முதல் நீரிழிவு நோய் தடுப்பது வரை வெற்றிலையின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

100 கிராம் வெற்றிலையில் 1.3 மைக்ரோகிராம் அயோடின் உள்ளது. 4.6 மைக்ரோகிராம் பொட்டாசியம், 2.9 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ, 13 மைக்ரோகிராம் வைட்டமின் பி1, 0.89 மைக்ரோகிராம் நிக்கோடினிக் அமிலம் ஆகியவை உள்ளது.

வெற்றிலையில் வைட்டமின்கள் சி, பீட்டா கரோட்டின், தாது பொருட்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் உட்பட பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மேலும், வெற்றிலையில் நார்ச்சத்தும் புரதமும் அதிகளவில் உள்ளன. வெற்றிலை என்றாலே நோயெதிர்ப்பு சக்திதான் என்கிறார் மருத்துவர் சாலை மருதமலை முருகன்.

வெற்றிலை, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது உடலில் உள்ள அமில அளவைக் குறைக்கிறது. வயிறு தொடர்பான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது மலச்சிக்கலைப்போக்க உதவுகிறது. வெற்றிலையை நசுக்கி, ஓரிரவு தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். காலையில் எழுந்தவுடன், தண்ணீரை வடித்து வெறும் வயிற்றில் பருகவேண்டும்.

வெற்றிலையின் சிறப்புத்தன்மை அதன் காரம்தான். அதனை உட்கொள்ளுவதால் வயிற்றில் கார அமிலத்தன்மை சீர்படுத்துவதில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமான குறைபாடுகள், ஜீரண மண்டலம் தொடர்பான பிரச்னைகளில் வெற்றிலையில் உள்ள கார அமிலத்தை சரி செய்யக்கூடிய வேதிப்பொருட்கள் ஆண்டி அல்சருக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. கல்லீரல் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு தன்மையை வெற்றிலை மேம்படுத்துகிறடு என்கிறார் மருத்துவர் சாலை மருதமலை முருகன்.

வெற்றிலையில் இருக்கும் மருத்துவப் பயன்பாடு மட்டும் 250-க்கும் மேல் உள்ளது. மருத்துவ குறைபாடுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது வெற்றிலை. பாரம்பரிய முறைப்படி குழந்தைகளுக்கு சலி, இருமல் மூச்சுநிற்றல் போன்ற பிரச்னை இருந்தால் வெற்றிலையை நல்லெண்ணெய்யில் தடவி விளக்கில் வாட்டி நெஞ்சுப்பகுதியில் நீவி விடுவார்கள். அப்படி செய்யும்போது, இருமல், சளி போன்ற நோய்கள் ஓடிவிடும். குழந்தைகளுக்கு செரிமான பிரச்னை, வயிற்று வலிக்கு வெற்றிலைச் சாறு உடன் 5 மில்லி தேன் கலந்து கொடுக்கும்போது சரியாகிறது என்கிறார் மருத்துவர் சாலை மருதமலை முருகன்.


Friday, 21 March 2025

6 சேர்க்கையால்...

 6  சேர்க்கையால்...
6 கிரக சேர்க்கையால் உலகளவில் ஏற்படப்போகும் மாற்றங்கள்! - விளக்குகிறார் ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த்
சனி, ராகு சேர்க்கை அதனுடைய ராசியில் ஏற்படும்போது சனீஸ்வரர் தனது வீட்டைவிட்டு வெளியேறுவார். திரும்ப தனது வீட்டிற்கு வர 25 வருடங்கள் ஆகும். அதேபோல் ராகுவிற்கு முழு பலமும் கும்ப ராசியில் உண்டு. சனியும் ராகும் வீடு மாறும்போது இடையே சந்தித்துக்கொள்வார்கள். அதற்கு சங்கர்ஷனம் என்று பெயர்.
ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் வாழ்க்கையும் தனித்து இருப்பதுதான் மனிதர்களுக்குண்டான சிறப்பு. ஒவ்வொருவரின் வாழ்க்கைமுறை மற்றும் தனிப்பட்ட உறவுகள் குறித்த அம்சங்கள் ஜோதிடத்தில் காரகங்கள் என குறிப்பிடப்படுகிறது. இந்த காரகங்களை பொருத்து வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறும். அப்படி பல காரகங்கள் ஒன்றாக இணைந்து வரக்கூடியதுதான் கிரகச் சேர்க்கை என்று சொல்லப்படுகிறது. அதாவது, சில கிரகங்கள் ஒரே கோணத்தில் வரும்போது அவற்றிற்கான பலன்களும் விளைவுகளும் மாறிக்கொண்டே போகும். அப்படி கடந்த 2019ஆம் ஆண்டு பல கிரக சேர்க்கை ஒரே ராசியில் நடைபெற்றது. அப்போது உலகளவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அதன்பிறகு இந்த ஆண்டு மீன ராசியில் 6 கிரக சேர்க்கை நடக்கவிருக்கிறது. தற்போது நடக்கவுள்ள இந்த கிரக சேர்க்கையால் உலகளவில் பல்வேறு தாக்கங்கள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்படும்? அதிலிருந்து விடுபட என்ன செய்யவேண்டும் 

எந்தெந்த கிரகங்கள் எந்த ராசியில் எப்படி சேரப்போகிறது?
இது உலகில் பல பெரும் மாற்றங்களின் துவக்கமாக இருக்கப்போகிறது. 2019ஆம் ஆண்டு இறுதியில் இதேபோல் பல கிரக சேர்க்கைகள் தனுசு ராசியில் ஏற்பட்டது. அதற்கு பின்பு உலகத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளை நாம் அனைவருமே நன்கு அறிவோம். ஒரு கிரக சேர்க்கை ஏற்பட்டால் ஏதேனும் ஒரு வகையில் உலகில் மாற்றங்கள் துவங்கும். எனவே அதற்கேற்ப நாம் முன்னமே தயாராகிவிட்டால் நம் வாழ்க்கையில் பெரும் பாதிப்புகள் வராமல் தடுக்கலாம். 29.03.2025 அன்று சூரிய கிரகணம் வரவிருக்கிறது. ஏற்கனவே மீன ராசியில் ராகு நிலைபெற்றிருக்கிறார். ராகு என்றாலே பேராசைத்தன்மையை குறிக்கக்கூடியது. ஸ்வர்பானு என்று சொல்லக்கூடிய அசுரன் பாதி உடலை இழந்து தலையுடன் இருக்கிறான். எந்த அளவில் நிறுத்தவேண்டும் என்பதை புரிந்துகொள்ள அதற்கு வயிறு இல்லாததால் தலையை பொருத்தவரை எல்லாவற்றையும் உட்கொள்ள வேண்டுமென ஆசைப்படும். உதாரணத்திற்கு, ஒருவர் ஜாதகத்தில் செவ்வாயும் ராகுவும் சேர்க்கையில் இருந்தால் நிலம் சார்ந்தவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். நிலத்தில் முதலீடு செய்துவிடுவர். ஆனால் எவ்வாறு வெளியேறவேண்டுமென்ற வித்தை தெரியாது. அதேபோல் சனியும் ராகுவும் சேர்ந்தால் உலகத்திற்காக உழைத்துக்கொண்டே இருப்பார், ஆனால் தன்னைப்பற்றி சிந்திக்க நேரம் இருக்காது. அதுபோல் செவ்வாய் ராகு சேர்க்கை இருக்கக்கூடியவர்தான் எலான் மஸ்க். அவர் பொருளாதார தேடலில் சென்றுவிட்டார். ஆனால் பெருந்தலைவர் காமராஜர் தனக்கென்று எதையும் செய்யாமல் மக்களுக்காக செய்தார்.





மீனம் என்ற ராசி கடலை குறிக்கக்கூடியது. கால புருஷ தத்துவத்தில் 12ஆம் இடம் மீனம். இது காலை குறிக்கக்கூடியது. அதாவது பாதத்தை குறிக்கும். உடலின் முழு எடையையும் அது தாங்கக்கூடியது. கால புருஷ தத்துவத்தில் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய 3 ராசிகளை நீர் ராசிகள் என்று சொல்கிறோம். அதில் கடகம் என்றால் ஒரு ஆற்றையோ, குளத்தையோ அல்லது தாய்மையையோ குறிக்கும். இதில் குரு உச்சமடைந்து விடுவார். அதுவே விருச்சிகம் தேங்கிய நீர்நிலையை குறிக்கும். அதுவே மீனம் என்று சொன்னால் பெரும்கடலை குறிக்கும். சமீபகாலமாக கடலிலிருந்து விசித்திரமான உயிரினங்கள் வெளியே வருவது குறித்து நாம் செய்திகளில் பார்க்கிறோம். எனவே இயற்கை ஏதோ ஒரு செய்தியை உணர்த்துகிறது. மீனம் என்பது குரு மட்டும் ஆட்சி செய்யக்கூடிய வீடு கிடையாது. கேதுவின் தன்மை அதில் உண்டு. ஆனால் தனுசு என்பது குருவின் ஆளுகைக்கு மட்டும் உட்பட்ட ஒரு வீடு. நீர் ராசிகளை பொருத்தவரை அவர்கள் மிகவும் சென்டிமென்ட்டாக இருப்பார்கள். மீன ராசியில் சுக்கிரன் உச்சம்பெற்று, புதன் நீச்சமடைகிறது. புதன் என்பது வங்கிகள், பொருளாதாரம், லாஜிஸ்டிக், பங்குச்சந்தை போன்றவற்றை குறிக்கும். சுக்கிரன் என்று சொன்னால் அது வசதி, மனைவி மற்றும் வெள்ளியை குறிக்கும். ராகுவும், சனியும் உடலில் வாத நோயையும் காற்றின் தத்துவத்தையும் குறிக்கக்கூடியவர்கள். வருகிற கிரகண காலத்தில் சனி, ராகு, சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகியோர் ஒன்றாக வரப்போகிறார்கள். கூடவே உபகிரகம் என்று சொல்லக்கூடிய சனீஸ்வரரின் மகனான மாந்தியும் வரப்போகிறார். இப்படி 7 கிரக சேர்க்கைகள் நடக்கப்போகிறது. இதில் உபகிரகமானது மற்ற 6 கிரகங்களின் பலத்தில் 75 சதவீதத்தை எடுத்துவிடக்கூடியது. இதற்கு சமுத்திர மந்தனம் என்று பெயர். ஏற்கனவே 1991இல் மகரத்திலும் 2002இல் ரிஷபத்திலும் இதுபோன்றதொரு சேர்க்கை இருந்தது. அப்படியிருக்கையில் இப்போது மட்டும் ஏன் பயப்படவேண்டுமென எல்லாரும் கேட்பார்கள். சனி, ராகு சேர்க்கை அதனுடைய ராசியில் ஏற்படும்போது சனீஸ்வரர் தனது வீட்டைவிட்டு வெளியேறுவார். திரும்ப தனது வீட்டிற்கு வர 25 வருடங்கள் ஆகும். அதேபோல் ராகுவிற்கு முழு பலமும் கும்ப ராசியில் உண்டு. சனியும் ராகுவும் வீடு மாறும்போது இடையே சந்தித்துக்கொள்வார்கள். அதற்கு சங்கர்ஷனம் என்று பெயர். இது மார்ச் 15ஆம் தேதிமுதல் துவங்குகிறது. அப்போதே சூழல் மாற துவங்கிவிட்டது என்பதை எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும்.



கிரக சேர்க்கையால் உயரும் தங்கம் விலை மற்றும் ஷேர் மார்க்கெட் முதலீட்டில் கவனம் தேவை

6 கிரக சேர்க்கை தங்கம் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
உலக ஜாகத்தை எடுத்துக்கொண்டால் குருவும், சூரியனும்தான் தங்கத்தின் விலையை தீர்மானிப்பதாக சொல்வார்கள். எப்போதெல்லாம் சூரியனும் குருவும், சனீஸ்வரராலோ அல்லது கேதுவாலோ பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் தங்கத்தின் விலையில் பெரும் ஏற்றம் ஏற்படும். தற்போது 6 கிரகங்களுடன் உபகிரகமும் சேர்ந்து 29ஆம் தேதிமுதல் ஏழாக இருக்கப்போகிறது. இதுபோன்ற சூழலில் புதன் வக்கிரமடைகிறது. இந்த சூழலில் பங்குச்சந்தை முதலீட்டில் மிகுதியான கவனம் தேவை. 2019ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட கிரக சேர்க்கை எங்கே என்று பார்க்கவேண்டும். தனுசில் ஏற்பட்டதால் 9ஆம் இடமான அதை வழிகாட்டுதல் என்று சொல்வார்கள். அதன் நேரெதிர் ராசியான மிதுனத்தில் பாதிப்பை உண்டாக்கியது. அது காற்று ராசி என்பதால், காற்று செல்லக்கூடிய தொண்டையில் ஏற்பட்ட பாதிப்பானது உலகெங்கும் செல்லக்கூடிய விமான பயணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படி கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை மறக்கமுடியாது.


இப்போது மீனத்திற்கு நேரெதிர் ராசியான கன்னி ராசியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது கடன் துறை, வங்கி, என்.வி.எஃப்.சி, பேங்கிங் செக்டார் போன்றவற்றை குறிக்கும். அதேபோல் இது விவசாயத்தையும் குறிக்கும் என்பதால் உணவுப்பொருட்களிலும் கவனம் செலுத்தவேண்டும். கன்னி ராசி என்றால் கால புருஷ தத்துவத்தில் 6ஆம் வீடான வயிற்றை குறிக்கக்கூடியது. புதன் என்றால் வேலையையும் குறிக்கும். எனவே பங்குச்சந்தையில் மிகுதியான கவனம் தேவை. அரசாங்கம் சொல்லக்கூடியதைக் கேட்டு அதில் மட்டுமே முதலீடு செய்யவேண்டும். போலியான விளம்பரங்களை நம்பி எதிலும் தவறான முதலீடு செய்துவிட வேண்டாம். க்ரிப்டோகரன்சியை நம்பி பணத்தை இழக்கவேண்டாம். தங்கத்தின் விலை தற்போது ஏறிக்கொண்டே போனாலும் அக்டோபருக்கு பிறகு இதே விலையேற்றம் இருக்குமா என்று சொல்வது சிரமம்தான். எனவே கடனை வாங்கி எதிலும் முதலீடு செய்யவேண்டாம். ஏனென்றால் குருவானது 2026ஆம் ஆண்டு கடகத்தை கடந்தபின் தங்கத்தின் மதிப்பு இதுபோன்று இருக்குமா என்றும் சொல்லமுடியாது. எனவே புதிய முதலீடுகளை செய்யவேண்டாம். 90 நாட்கள் நிலம் சார்ந்தவற்றில் முதலீடு செய்வது நல்லதல்ல. வேலையில் இருப்பவர்கள் வார்த்தைகளை விட்டு வேலையை விட்டுவிட வேண்டாம். வேலையிடத்தில் பொறுமையாக இருக்கவேண்டும். அப்படி வேலையை விட்டால் அதன்பிறகு வரக்கூடிய 5, 6 மாதங்களுக்கு முன்கூட்டியே தயார் செய்துகொள்ளுங்கள். இது உலகம் முழுவதும் பொருந்தும். அடுத்து குரு மிதுனத்தில் பிரவேசம் செய்து திருவாதிரையில் இருப்பார். திருவாதிரை ராகுவின் நட்சத்திரம் என்பதால் உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு வேலை மாற்றங்களில் சிரமம் இருக்கும்.


கிரக சேர்க்கை அபாயங்களிலிருந்து தப்பிக்க ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுதல் - பெற்றோரை வழிபடல்

6 கிரக சேர்க்கைகளால் எந்த ராசிகள் கவனமாக இருக்கவேண்டும்?
சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு உடல்நலனில் கவனம் தேவை. முழு உடல் பரிசோதனை வேண்டுமானால் செய்துகொள்ளலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு உண்ணவேண்டும். அடுத்து கணவன் - மனைவி விவாதத்தில் அதிகம் ஈடுபட வேண்டாம். அமைதியாக கடந்து சென்றுவிடுவது நல்லது. துலாம் ராசிக்காரர்களுக்கு மருத்துவரீதியாக கவனம் தேவை. உணவு உண்ணுவதிலும் மிகுதியான கவனம் இருக்கவேண்டும். அதேபோல் கன்னி ராசிக்காரர்கள் பிசினஸ் பார்ட்னர்களிடம் சண்டை போடவேண்டாம். புதிய பார்ட்னர்ஷிப்பில் இறங்க நினைப்பவர்களுக்கு யோசனை தேவை. மனைவியுடன் பேசும்போது வார்த்தையில் கவனம் தேவை. விருச்சிக ராசிக்காரர்கள் குழந்தைகளின் நலனில் சற்று கூடுதல் கவனத்தை செலுத்தவும். தனுசு ராசிக்காரர்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மருத்துவரை சென்று பார்க்கவேண்டும். வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்ளவும். ஹவுஸ் லோன் போட நினைத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் வார்த்தையை விடவேண்டாம். வண்டியை கவனமுடன் ஓட்டவும். மகர ராசிக்கார்கள் அதிகம் போன் பேசவேண்டாம். சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட வேண்டாம். கும்ப ராசிக்காரர்கள் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை தவிர்த்துவிடவும். மீன ராசிக்காரர்களுக்கு பரிவர்த்தனை யோகம் இருப்பதால் பயப்படவேண்டாம். எனவே ஆலய வழிபாட்டில் கவனம் செலுத்தி உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டும். மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை இடங்களில் சண்டை சச்சரவுகள் வேண்டாம். யாராவது தவறாக பேசினால்கூட அமைதியாக கையாளவும். தூக்கத்திற்கு நேரம் செலவு செய்யுங்கள். கால் பாதம் போன்ற பகுதிகளின் ஆரோக்கியத்திற்கு மருத்துவரை அணுகி அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளவும். தனுசு ராசிக்காரர்கள் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது கவனமாக இருக்கவும். கருத்து வேறுபாடுகள் வேண்டாம். மிதுன ராசிக்காரர்கள் இருக்கிற வேலையில் பயங்கர அழுத்தம் இருந்தாலும் 90 நாட்கள் வேலையை விட்டுவிட வேண்டாம். கடக ராசிக்காரர்கள் மிக மிக கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் இது. பெற்றோரின் ஆசி கட்டாயம் தேவை. எனவே அவ்வப்போது பெற்றோர்களை நினைத்து பிரார்த்தனைகளை செய்யவும். ஆரோக்கியத்திலும் முதலீடுகளிலும் கவனம் செலுத்தவும். இதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியவர்கள் கடகம், கன்னி மற்றும் சிம்மம். கும்பமும் மீனமும் ஓரளவு கவனமுடன் இருக்கவேண்டும்.

கிரக சேர்க்கையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும்?
எந்தவொரு காலகட்டத்திலும் பெற்றோரை மதிப்பவர்கள், எங்கே கிரகங்கள் இருந்தாலுமே அனுக்கிரகத்திலே தப்பித்துவிடுவார்கள். உலக ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் நாம் இருக்கும் இடத்தின் ஜாதகம்தான் 90% பேசும், தனிப்பட்ட ஜாதகம் என்பது 10% தான். இது உலகெங்குமே கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம். எனவே அசாத்தியமான காரியத்தையும் சாதிக்கக்கூடிய ஆஞ்சநேயருக்கு, வடைமாலை சாற்றி வணங்குவது மிகமிக நல்லது. இதை செய்ய முடியாவிட்டால் தாய், தந்தை மற்றும் குருவின் பாதங்களை மனதார நினைத்து வணங்கலாம். இதை தினமும் செய்தாலே பெரிய தாக்கங்கள் நம்மை ஒன்றும் செய்யாது.