jaga flash news

Thursday, 28 August 2025

கொத்தவரங்காய்

 கொத்தவரங்காய் மற்றும் கொத்தவரை பிசின் பல்வேறு வடிவங்களில் ஏற்றுமதி செய்யப்படுகிறது
நீங்களும் கொத்தவரங்காயை உணவாக உட்கொண்டிருக்கலாம். ஆனால், இந்தியாவுக்கு பல கோடி டாலர்களை ஈட்டித்தரும் இந்தக் காய், அமெரிக்காவுக்கு பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

கொத்தவரங்காய், இந்தியாவில் காய்கறியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தக் காய்களிலிருந்து பெறப்படும் விதைகளைக் கொண்டு கொத்தவரை பிசின் என்ற பொருள் தயாரிக்கப்படுகிறது.

பொடி வடிவில் உள்ள கொத்தவரை பிசின், பல்வேறு தொழில்களில் திரவங்களை கெட்டியாக்கும் ஸ்டெபிலைசர் (Stabilizer) மற்றும் இணைப்பு பொருளாக (Binder) பயன்படுத்தப்படுவதால் அதற்கு பெரும் தேவை உள்ளது.

புதைபடிவ எரிபொருள் (Fossil Fuel) எடுக்கும் தொழிலில் கொத்தவரை பிசின் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஷேல் வகை பாறைகளிலிருந்து ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் (Hydraulic Fracturing) என்ற செயல்முறையை பயன்படுத்தி பூமியிலிருந்து எரிவாயு மற்றும் கச்சா எண்ணெயை எடுக்க இது பயன்படுத்தப்படுகிறது.

இந்த செயல்முறையில், கொத்தவரை பிசின் உள்ளிட்ட பிற பொருட்களின் கலவை பாறைகளின் விரிசல்களில் செலுத்தப்படுகிறது, இதனால் எண்ணெய் மற்றும் எரிவாயுவை சீராக வெளியேற்ற முடியும்.


No comments:

Post a Comment