jaga flash news

Sunday 22 September 2013

தாராபலன் பார்த்தல்....3,5,7, வது நட்சத்திரங்கள் மரண தாரை எனப்படும்...

ராமர் பின்பற்றிய ஜோதிடம்;

ஒருவர் பிறந்த நட்சத்திரமும் அதிலிருந்து எண்ணி வரும் 3,5,7, வது நட்சத்திரங்கள் மரண தாரை எனப்படும்..இந்த எண்ணிக்கையில் வரும் நட்சத்திர நாளில் செய்யும் காரியங்கள் தோல்வியை தரும்...பிறந்த நட்சத்திரத்திலிருந்து எண்ணி வரும் 2,4,6,8,9 வது நட்சத்திர நாளில் செய்யும் காரியங்கள் .வெற்றியை தரும்.திருமணமாக இருந்தாலும் ,தொழில் ஆரம்பிப்பதாக இருந்தாலும் இந்த கணக்கு அவசியம்..ராமனே போருக்கு போகும் முன் தன் பிறந்த நட்சத்திரமான புனர்பூசம் ல் இருந்து 6 வது நட்சத்திரமான உத்திரம் வரும் நாளில்தான் ராவணன் மீது போர் தொடுத்தாராம்..இதன் பெயர் தாராபலன் பார்த்தல்..எனப்படும்.

ஒரு ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் அதாவது ஒரே கட்டத்தில் இருந்தால் அவர் அமாவாசையில் பிறந்தவர்..சூரியனுக்கு ஏழாவது கட்டத்தில் சந்திரன் இருப்பின் பெள்ர்ணமியில் பிறந்தவர்..சூரியனில் இருந்து 7வது கட்டத்துக்குள் எங்கு சந்திரன் இருந்தாலும் வளர்பிறையில் பிறந்தவர்..7 கட்டத்துக்கு மேல் எங்கு சந்திரன் இருந்தாலும் தேய்பிறையில் பிறந்தவர்..ஒரு ஜாதக கட்டத்தை வைத்து இவற்றை துல்லியமாக சொல்லமுடியும்எனும்போது ,அதனால் உண்டாகும் பலன்களும் தெளிவாக சொல்ல முடியும்...

மற்ற கிரகங்களையும் இவ்வாறு குழந்தை பிறக்கும்போது இந்த நிலையில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இப்படி இருந்தது என பல ஆயிரம் வருடங்களாக கணித்து சொல்லி வருகின்றனர் ஜோதிடர்கள்..பிறக்கும்போது கிரகங்கள் வானில் உலவும் இடம்தான் கட்டத்தில் அமைக்கிறோம்..அதன்மூலம் அடுத்தடுத்த ஆண்டுகளில் கிரகங்களின் நகர்வை கொண்டு அவனுக்கு உண்டாகும் நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து சொல்கிறோம்...!!


கும்பம் ராசியில் சூரியன் வரும்போது அதாவது மாசி மாதத்தில் வளர்பிறையில் உங்கள் குலதெய்வத்தை வணங்குங்கள்..! நல்ல ஆசிர்வாதமும், அதிக சக்தியும், மனதிடமும் கிடைக்கும்...!!!
அவன் எனக்கு எதிரி அவன் வீட்டில் பச்சத்தண்ணீர் கூட வாங்கி குடிக்க மாட்டேன் என கிராமப்பகுதிகளில் சொல்வது சாதாரணம்..ஒரு வீட்டில் இருக்கும் மனிதர்களின் மின்காந்த அலைகள் அவ்வீட்டில் உள்ள நீரிலும் பதிவாகி இருக்கும்..அந்நீரை குடிக்கும் மனிதர்களின் உடம்பிலும் பரவிவிடும்..என நம் முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர்.கெட்ட எண்ணம் உடையவர்கள்,சமூக விரோதிகள்,வாஸ்து தோசம் உள்ள வீட்டிலும் அன்னம், தன்ணீர் புழங்ககூடாது..என்பது தமிழர்கள் பழக்கம்..சான்றோர்கள்,மகான்கள்,ஊருக்காக நாட்டுக்காக உழைக்கும் நல்லோர்களிடம் தண்ணீர் வாங்கி குடித்தாலும் அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும்..நல்லது நடக்கும்..


No comments:

Post a Comment