jaga flash news

Thursday 19 September 2013

தலைமுறைக்கே லாபம் அளிக்கும் மகாளய பட்சம்!

தலைமுறைக்கே லாபம் அளிக்கும் மகாளய பட்சம்!
Temple images
மகாளய பட்சம்-விளக்கம்:

மகாளயம் என்றால் கூட்டமாக வருதல்.  மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். பட்சம் என்றால் 15 நாட்கள். மறைந்த  முன்னோர் 15நாட்கள் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம். இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது.

மகாளய பட்ச காலத்தில் என்ன செய்வது?

மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒட்டுமொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும். நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர், தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை. அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.

தலைமுறைக்கே லாபம்

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.

முதல்நாள்    பிரதமை       பணம் சேரும்
2ம் நாள்         துவிதியை    ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
3ம் நாள்         திரிதியை      நினைத்தது நிறைவேறுதல்
4ம் நாள்         சதுர்த்தி          பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5ம் நாள்         பஞ்சமி           வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
6ம் நாள்         சஷ்டி              புகழ் கிடைத்தல்
7ம்நாள்          சப்தமி             சிறந்த பதவிகளை அடைதல்
8ம் நாள்         அஷ்டமி         சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
9ம்நாள்           நவமி              சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற, மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
10ம் நாள்        தசமி              நீண்டநாள் ஆசை நிறைவேறுதல்
11ம்நாள்         ஏகாதசி         படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
12ம் நாள்        துவாதசி       தங்கநகை சேர்தல்
13ம்நாள்        திரயோதசி    பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
14ம்நாள்         சதுர்த்தசி      பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
15ம் நாள்        மகாளய        முன் சொன்ன அத்தனை பலன்களும் அமாவாசை    நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.

எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்.

No comments:

Post a Comment