jaga flash news

Sunday 13 October 2013

குரு பகவானின் வக்கிர சஞ்சார பலன்:

குரு பகவானின் வக்கிர சஞ்சார பலன்:
jupiter
குரு பகவான் 2013  மே மாதம் முதல்  மிதுன ராசியில் சஞ்சரித்து வருகிறார். தற்போது வருகிற 7.11.13 அன்று மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் அதே ராசியில் புனர்பூசம் (3) நட்சத்திரத்தில்  வக்கிர கதிக்குப் போகிறார். அதே வக்கிர நிலையில் ஏறத்தாழ 4 மாத காலம் அதாவது 6.3.14 வரை சஞ்சரிக்கிறார். இந்தப் பயணம் பின்னோக்கி இருக்கும் ஆனால், இந்தப் பயணம் மிதுன ராசிக்குள்ளேயே அமைந்து விடும். ஆனாலும் குருபகவானின் செயல்பாட்டில் மாறுதல் இருக்கும். இனி பலன்களைப் பார்க்கலாம். ஒரு கிரகம் வக்கிர கதிக்குப் போகும்போது, நன்மைகள் நிகழ வாய்ப்பில்லை. ஆனால், தீமைகளும் நிகழாது.மெதுவாக ஹால்ட்டாகிவிடும். ஓடிக்கொண்டிருந்த வண்டிக்கு எரிசக்தி தீர்ந்து போனதுபோலாகிவிடும். பலனடைந்துகொண்டிருந்த ராசிகளுக்கு ஒரு விதத்தில் நஷ்டமும், கெடுபலன் நடந்துகொண்டிருப்பவர்களுக்கு ஒரு நிம்மதியும் ஏற்படும் நேரம் என்றுகூடச் சொல்லலாம்.இந்த வக்கிரகதிக் காலத்தில் சில ராசிக்காரர்கள் இதுவரை பட்ட அவதியிலிருந்து  மீள்வதோடு ,  நற்பலன்களையும் அடையப் போகிறார்கள். இதுவரை நற்பலன் பெற்ற சிலர், மீண்டும் நற்பலனடைய6.3.14ல் குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடையும் வரை காத்திருக்க வேண்டும். சில முக்கிய நிகழ்ச்சிகளை ஒத்திப்போட்டுக்கொள்ளலாம். குரு தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்து,  அனைவரும் குரு பகவானின் நல்லருளைப் பெற வாழ்த்துகிறோம். இனி ஒவ்வொரு ராசிக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம் :
இந்த வக்கிரகதிக் காலம் உங்களுக்கு நற்பலன்கள் நிகழும்.இந்த வக்கிரகதிக் காலத்தில் குரு பகவான் உங்களுக்கு கெடு பலன்களைத் தர மாட்டார். உங்கள் ஆற்றல் மேம்படும். இதுவரை தடைப்பட்டிருந்த விஷயங்கள் அனைத்தும் தொடர்ந்து நடக்க வழியுண்டு மனதில் துணிச்சல் பிறக்கும். காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும் உங்களுடைய நீண்ட கால முயற்சிகள் யாவும் வெற்றியடையும் ஆரோக்கியம் சிறக்கும் நீங்கள் எதிர்பார்த்தவை யாவும் சாதமாக நிகழ யோகமுண்டு நீங்கள் எதிர்பார்க்காத மகிழ்ச்சி ஏற்படும் உங்களுடைய நீண்டகாலத் திட்டங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் இந்த சமயத்தில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசிடமிருந்து எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும் அரசியல்வாதிகளுக்கு இது நல்ல நேரம் பொறுப்பான பதவி கிடைக்கும் சிலருக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பார்க்காத தொகை வந்து சேரும் யோகம் உண்டாகும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். தடைகள் முறியடிக்கப்படும். தீயோர் சேர்க்கையால அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியிலிருந்து விடுபடுவர். புதிய தொழில் அனுகூலத்தைக் கொடுக்கும். சேமிப்பும் அதிகரிக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளினால் தொடர்ந்து பெருமை கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான சகல வசதிகளையும் பெருவீர்.தடைப்பட்ட திருமணப் பேச்சு வார்த்தை தொடரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு , மனை வாங்க நினைப்பவர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் கடந்த காலத்தைவிட சிறப்பை அடையலாம். உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். வேலையில் ஆர்வம் பிறக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
உங்களுக்கு புதிய ஆற்றலும் துணிச்சலும் பிறக்கும். உங்களிடம் இருந்து வந்த மனக் குழப்பம் அதிகரிக்கும். பகைவர்களின் சதி இப்போது எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் கணவன்-மனைவியிடையே அன்பு பெருகும். வாழ்க்கைத் துணையிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் கலைஞர்கள் சிறப்படைவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்கள் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்கும். விவசாயத்தில் தேவையான பலன் பெறலாம். மொத்ததில் இந்த வக்கிர காலம் உங்களுக்கு நற்பலன்களே இகுந்து காணப்படும்.
பரிகாரம்.
சிவாலயங்களில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் நெய்தீபம் ஏற்றி,அர்ச்சனை செய்துவந்தால் துன்பங்கள் தீரும்.
ரிஷபம்:
இந்த வக்கிரகதிக் காலத்தில் நீங்கள் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது குருப் பெயர்ச்சிப் ப்லன்களில் 50./.நற்பலன்களை இதுவரை அனுபவித்திருபீர்கள். இப்போது இது ஒரு இடைப்பட்ட காலம். இதுவரை அனுபவித்த பலன்களைவிட அதிகமாக எதுவும் இப்போது அடைய முடியாது. ஆனால், புதிதாக தொல்லைகளை சந்திக்க நேரும் சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்படலாம் மருத்துவ செலவுகள் ஏற்படும் தேவையற்ற தொல்லைகளைச் சந்திக்க நேரும் உங்கள் முயற்சிகள் வெற்றீயடைய முடியாமல் போகும் உங்கள் குடும்பத்தில் குழப்பங்களும் சச்சரவுகளும் உண்டாவதால் குடும்ப அமைதி கெடும் திருமணப் பேச்சுவார்த்தைகளில் தடை உண்டாகும் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குறையும் பிரயாணங்கள் பயனுள்ளதாக அமையாது கோர்ட் வழக்குகள் தொல்லை கொடுக்கும் வீண் செலவுகள் ஏற்பட்டு பண விரயம் ஏற்படும் .பொதுவாக இந்த வக்கிர கதிக் காலத்தில் பொருளாதார வீழ்ச்சி பெருமளவில் இருக்காது. சமாளிக்கும் கட்டுப்பாட்டு நிலையில்தான் இருக்கும். யாருடனும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரலாம். அரசு ஊழியர்களுக்கு சிற்சில ப்ரச்சினைகள் தோன்றும். எதிரிகளின் சதியை முறியடிக்கும் வல்லமையும் உங்களிடம் காணப்படும்.
பண விஷயங்களில் கண்ணும் கருத்துமாக செயல்படுவது அவசியம். பெரிய தொகையினைக் கையாள்பவர்கள் கவனத்துடன் செயல்படுவது உத்தமம். பிறருக்கு வாக்கு கொடுத்துவிட்டு, அந்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு அதிக முயற்சியினை மேற்கொள்வீர்கள். பொருளாதாரத்தில் திடீர் சிகக்ல்கள் ஏற்படும். எதிரிகள் தலை ஹூக்க முயற்சிப்பார்கள். எதையும் சற்று சிரத்தை எடுத்து முடிக்க வேண்டியிருக்கும்.
வக்கிர நிலையில் இருந்தபடி , பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-மிடம் , மனைவி அல்லது கணவரின் ஸ்தானமான 7-மிடம் மற்றும் பாக்கிய ஸ்தானமான 9-மிடம் ஆகிய இடங்களைப் பார்ப்பதால், குரு பகவான், வக்கிர கதியில் இருக்கும்போது இந்தவகைகளில் நன்மை தருவதில்லை. மீண்டும் நற்பலன் உண்டாக மார்ச் 2014 வரை காத்திருக்க வேண்டும்
பரிகாரம்:
சிவாலயங்களில், பிரதோஷங்களில் கலந்துகொண்டு தட்சிணாமூர்த்தியை வணங்கி வந்தால், வேண்டியது கிடைக்கும்.
மிதுனம்:
இந்த வக்கிரநிலை உங்களுக்கு சற்று ஆறுதல் தரும். குருப் பெயர்ச்சிக் காலத்தில் இது ஒரு நல்ல காலமாகும். குறிப்பிடும்படியாக முன்னேற்றம் எதுவும் ஏற்படாவிட்டாலும், புதிய தொல்லை எதுவும் வராது. ஏற்கெனவே இருந்து வரும் தொல்லைகளிலிருந்து வரும் மனக்கவலை மட்டுமே இருக்கும்.
தொழிலில் மாற்றங்கள் உண்டாகும். எதிலும் சரியான முடிவுகள் மேற்கொள்வதில் சற்று மனக் குழப்பங்கள் ஏற்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் சிரமம் இருக்கும்.பணம் வரவேண்டிய இடங்களிலிருந்து வருவதில் தாமதம் ஏற்படும். ஆனாலும் அனைத்து பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய மனோதிடமும் உங்களுக்கு உண்டாகும். தொழிலாளர் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருந்தாலும், அனைத்தையும் சமாளித்து, முன்னேற்றப் பாதையில் தொழிலை நடத்திச் செல்வீர்கள். லாப விகிதத்தையும் தொய்வுறாமல் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிரச்சினகளுக்கிடையே ஒரு சிறப்பைக் காண்பீர்கள். வேலையில் முன்னேற்றமும் இருக்கும். வேலைப்பளு குறையவும் வாய்ப்புண்டு.
எடுத்த காரியங்களை ஒரு வைராக்கியத்துடன் முடிப்பீர்கள். தேவையான பணப் புழக்கம் இருக்கும். மதிப்பு மரியாதை இருக்கும். பொருளாதார வளம் கை கொடுக்கும் நிலை இருக்கும். அதனால் தேவையானவற்றை வாங்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் இருக்கும். கணவன்-மனைவி உறவு பரிமளிக்கும். மனக் கசப்புகள் மறையும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். உத்தியோகத்தில் சிறப்பு காண்பர். வேலையில் முன்னேற்றம் இருக்கும். வேலைப்பளு குறையும். தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. கோரிக்கைகள் நிறைவேறும்.
வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்வர். வருமானம் சீராக இருக்கும். தொழிலில் லாபம் குறையாது. முன்பிருந்தபடி இருக்கும். அதிக அலைச்சல் இருக்கும். ஊர் வ்ட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். அரசின் உதவி கிடைக்க வாய்ப்புண்டு.
சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுற நேரும். சிலர் அடுத்தவரின் பொல்லாப்புக்கு ஆளாக நேரும். எனவே யாரிடமும் சற்று கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளினால், சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பிடிவாதங்களையும் கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருநாலும், வாழ்க்கைத்துணையுடன் வீண் வாக்குவாதத்தில் இறங்காமல் இருப்பது நல்லது. கையில் பணப் புழக்கம் இருக்கும். அதனால், வாழ்க்கை வசதிக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனதில் வாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், வாழ்க்கையில் ஏறுமுகமும் இருக்கும்.
பரிகாரம்:
குலதெய்வ வழிபாட்டை விடாமல் தொடர்ந்து செய்து வரவும்.
கடகம்:
இந்த வக்கிர கதிக் காலம் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும்.இந்தக் காலத்தில், குரு பகவானின் பலம் சற்று குறைந்து காணப்ப்டும். அதனால், குருவின் கெடு பலன்கள் உங்களை ஒன்றும் செய்யாது. மாறாக நன்மைகள்தான் கிடைக்கும். இதுவரை நீங்கள் இழந்தவற்றைத் திரும்பப் பெற முடியும். குறிப்பாக புதிய பதவியும் சம்பள உயர்வும் கிடைக்கும். வேலையில் திருப்தி காணலாம். வியாபாரம் சிறப்பாக இருக்கும். எடுத்த காரியத்தை எல்லாம் சிறப்பாக செய்து முடிக்கலாம். மதிப்பு ம்ரியாதை சிறப்பாக இருக்கும்.
தடைப்பட்ட திருமணங்கள் கைகூடி வரும். ஆரோக்கியம் சிறக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். திட்டங்கள் நிறைவேறும் . கனவுகள் நினைவாகும் நேரம் இது. மகிழ்ச்சியான செய்திகள் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து வந்து சேரும் . வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வீர்கள் உங்கள் வியாபாரம் வளரும். வருமானம் பெருகும் நீங்கள் புது வியாபாரத்தையும் தொடங்க முடியும் கூட்டுத் தொழிலும் கைகொடுக்கும் சொந்தமாக வீடு கட்டுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள் கடன்களை அடைப்பீர்கள் அரசு உதவி கிடைக்கும்.. அரசியல்வாதிகளுக்கு பொறுப்பான பதவிகள் கிடைக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
வியாபாரத்தில் போதிய வருவாயைக் காணலாம். அலைச்சல்கள் இருக்கும். ஆனாலும் உழைப்புக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். எதிரிகளின் இடையூறுகளை எளிதில் முறியடிக்கலாம். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். வேலைப் பளு குறையும். சம்பள உயர்வு , பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளீன் ஆதரவும் விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். கணவன்-மனைவியிடையே அன்பு நீடிக்கும். பூசல்கள் மறையும். சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை தொடங்கலாம். புதிய நிலம், வீடு வாங்க அனுகூலம் பிறக்கும். சிலரது வீடுகளில் பொருள் திருட்டுப் போக வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்கவும்.
கலஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர் மாணவர்கள் முன்னேற்றம் காண்பர் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். செச். இப்படியாக இந்த குரு வக்கிர கலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
பரிகாரம்:
வியாழக் கிழமைகளில் கொண்டக்கடலை மாலையிட்டு, தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சிம்மம்:
இந்த வக்கிரகதியில் நீங்கள் இரண்டும் கலந்த பலனை அனுபவிப்பீர்கள். 55./. பலனை எதிர்பார்க்கலாம். இதுவரை அனுபவித்த நற்பலன் குறைய வாய்ப்பில்லை. ஆனால் புதிதாக நற்பலன் வர வாய்ப்பில்லை. மேலும் நன்மைகள் பெற 2014 மார்ச் வரை காத்திருக்க வேண்டும்.
பண வரவுகள் வருவது தாமதமாகும். அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும். பிள்ளைகளினால், சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். புது முயற்சியில் இறங்கும்போது ஆலோசனை பெறுவது அவசியம். மூத்த சகோதர்களிடம் பொறுமையுடனும் அணுசரணையுடனும் நடப்பது நல்லது.
உங்கள் முயற்சிகளில் தடை வரலாம். ஆனால் உங்கள் முன்னேற்றம் தடைப்படாது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சிற்சில தடைகளைச் சந்திக்கலாம். ஆனாலும் பொறுமையும் தீவிர முயற்சியும் நல்ல அனுகூலத்தைக் கொடுக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களின் பதவி உயர்வுக்கு கால தாமதம் ஆகும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் அரசு உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு, தொழில் தடை ஏற்படும். சிலருக்கு வேலை இழக்கும் அபாயம் ஏற்பட நேரலாம். அப்படிப்பட்டவர்களுக்கு சுய தொழில் கை கொடுக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஆனால், பாராட்டு, விருது போன்றவை கிடைக்காது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கினாலும், போட்டி, பந்தயங்கள் கை கொடுக்காது.
உங்கள் முயற்சிகளில் தடை வரும். பகைவர்களின் வகையில் தொல்ல வரும் அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. எனவே வரவு செலவுக் கணக்கை சரியாக வத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் வரலாம். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகவும். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர்ப் பயணம் ஏற்படலாம். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டுப் போகலாம். இப்படியாக இந்த வக்கிர கதிக் காலத்தில் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. மீண்டும் முன்பிருந்த குருவின் சாதக பலன்களை அடைய , மார்ச் 2014 வரை காத்திருக்க வேண்டும்.
பரிகாரம்:
வியாழக் கிழமைகளில் சிவாலயத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
கன்னி:
இந்த வக்கிர நிலை உங்களுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். குருப் பெயர்ச்சியின் மொத்த காலத்திலும் இதுதான் உங்களுக்கு மிகவும் யோகமான நேரம். பெரிய ஏற்றம் இல்லையென்றாலும், தொழில் சம்பந்தமாகவோ, பண விஷயமாகவோ, புதிதாக பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை. இப்போது குருவின் பலம் சற்று குறைந்து காணப்படும். இதனால், அவரின் கெடு பலன்கள் உங்களை எள்ளளவும் அண்டாது. மாறாக மகிழ்ச்சிதான் உண்டாகும். இந்த வக்கிர கதிக் காலத்தில் நீங்கள் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல, சந்தோஷமான செய்தி வரும் உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். உடல் பலம் கூடும். திருமணம் கைகூடும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் புதிய முயற்சிகள் வெற்றியடையும் புதிய தொழில் தொடங்குவீர்கள். செய்துகொண்டிருக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருமானம் பெருகும் நிலம், வீடு, வாகனம் வாங்குவீர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள் உங்களுடைய பெயரும் புகழும் கூடும் கணவன்-மனைவிக்கிடையே நல்லுறவு மலரும் உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் அவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் கையில் நல்ல பணப் புழக்கம் இருக்கும் நேரம் இது. தேவைகள் பூர்த்தியாகும். உங்களுக்கு மிகவும் நல்ல காலம். பொருளாதாரச் சிக்கல்கள் விலகும். வாராக் கடன்கள் எளிதில் வசூலாகும். மகான்களின் ஆசியும் ,ஆன்றோர்களின் ஆதரவும் கிடைக்கும். அரசுப் பணிகளில் பதவி உயர்வை எதிர்பார்த்துக் காத்திருந்த சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.
எதிரிகள் சரணடையும் நிலை உண்டாகும். தடைப்பட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. மதிப்பு ம்ரியாதை சிறப்பாக இருக்கும். வீட்டில் நிலவிய பூசல்கள் மறையும் . புதிய சொத்து, வீடு, மனை வாங்க யோகம் உண்டு. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கை கூடும். உத்தியோகம் பார்ப்பவர்கள்முன்னேற்றமான பலனை எதிர்பார்க்கலாம். வேலையில் பளு குறையும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள் உயர்வுக்கு தடையேதும் இல்லை.. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். போலீஸ் ,ராணுவத்தில் உள்ளவர்கள் முன்னேற்றம் காண்பர்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் காண்பர். மாணவர்களின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உடல்நலம் சிறப்படையும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இப்படியாக இந்த வக்கிர கதிக்காலம் உங்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியின் பொற்காலமாக அமையும்.
பரிகாரம்:
சனிக் கிழமைகளில் சனீஸ்வரனுக்கு நெய் விளக்கேற்றியும், வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்திக்கு மஞ்சள் மலர் மாலை சாற்றியும் வழிபட்டால் நிம்மதி வரும்.
துலாம்:
இந்த வக்கிர கதி சமயத்தில் உங்களுக்கு நற்பலன்கள் நிகழ வாய்ப்பில்லை. இந்த சமயத்தில் உங்கள் வாழ்க்கையில் பலவித இடையூறுகள் தோன்றும். உங்கள் முயற்சிகள் தோல்வியடையும். பலவித தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். தேவையற்ற குழப்பங்கள், தராறுகள் சண்டை சச்சரவுகள் ஏற்படும். உங்கள் ஆரோக்கியம் சீர்கெடும். சிலருக்கு அலுவலகத்தில் பிரச்சினைகள் உண்டாகும். நீங்கள் அடிக்கடி, விடுப்பில் செல்ல நேர்வதால், உங்கள் வேலையை இழக்கும் அபாயம் தோன்றும். உங்கள் வியாபாரம் மந்தமாகும். வருமானம் குறையும்.குறைந்த வருமானத்துக்கு அதிக வேலை செய்ய வேண்டியிருக்கும். பயணங்கள் சாதகமாக இருக்காது பயணங்களில் உங்கள் பொருள்களைத் தொலைக்க நேரும். வண்டி வாகனங்களுக்கும் ,வீட்டிற்கும் ரிப்பேர் செலவை மேற்கொள்ளவேண்டியிருக்கும்.
பண விரயம் ஏற்படலாம். பொருள் விரயமும் வீண் மனக் குழப்பமும் ஏற்படலாம். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் வருமானம் இருக்கும். செலவுகளும் அதிகமாக இருக்கும். சிக்கனம் தேவை. நினைத்த காரியத்தை செய்து முடிக்க சிரத்தை அவசியம். வீண் விவாதங்கள் தோல்வியைத் தரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூட சிற்சில தடை வரலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வியாபாரம் சீராக நடக்கும். போதிய வருமானத்தைக் கொடுக்கும். எதிலும் அதிக முதலீடு செய்யவேண்டாம். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்காது. எதிரிகள் தொல்லை இருக்கத்தான் செய்யும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனக்கவலை ஏற்படுத்தும். கோர்ட் வழக்குகளால் தொல்லை ஏற்படும். தங்களிடம் நெருங்கிப் பழகியவர் தங்களைவிட்டுப் பிரிய நேரலாம். தகப்பனாரின் உடல்நிலையில் சற்று கவனம் செலுத்துவது அவசியம். அவரின் போக்கில் சற்று மாற்றங்கள் தென்படும். இந்த வக்கிர கதிக் காலத்தில் நீங்கள் நற்பலன்களை அடைய வழியில்லை நற்பலன்களை மீண்டும் அடைய ,நீங்கள் 2014 மார்ச் வரை காத்திருக்கவேண்டும்
பரிகாரம்.:
சனிக்கிழமைகளில் அருகம்புல் மாலை சாற்றி, நெய் விளக்கேற்றி, ஆனைமுகனை வழிபடவும்.
விருச்சிகம்:
இந்த வக்கிர கதியில் உங்களுக்கு நன்மைகள் நிகழ நிறைய வாய்ப்புண்டு. உங்கள் நிதி நிலைமை உயரும்.வருமனம் அதிகரிக்கும். உங்கள் வருமானம் இரு மடங்காகும். இந்த காலக் கட்டத்தில், உங்களுடைய முன்னேற்றம் ஜெட் வேகத்தில் இருக்கும். மனைவியுடனான உறவு மிகவும் இணக்கமாக இருக்கும். . இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த தொல்லைகளின் தீவிரம் குறைவது மட்டுமின்றி, உங்களுக்கு நிகழப் போகும் நன்மைகள இருமடங்காகும். உங்களுடைய முயற்சிகள் வெற்றியடையும். உங்களுடைய ஆரோக்கியம் சிறக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். எல்லா வழிகளிலும் நன்மைகள் நிகழும். பல திசைகளிலிருந்தும் நற்செய்திகள் வந்து சேரும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகி வெற்றியடையும். நீங்கள் புதிய வியாபாரம் தொடங்கி பரிமளிக்க முடியும். உங்களுடைய வெளிநாட்டு வியாபாரம் செழித்தோங்கும். உங்களுடைய பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும். இந்த சமயத்தில் பிரச்சினைகள் ஒவ்வொன்றுக்கும் தீர்வு காணும் முறையை யோசித்து செயல்படுவது நல்லது.
பிரிந்துசென்ற நணப்ர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து ஒன்று சேருவார்கள். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. மனைவியின் சொல்லுக்கு அதிக மதிப்பளிப்பீர்கள். கணவன்/மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் அகலும். கடன்களின் தாக்கம் குறையும். நணப்ர்கள் உதவி செய்ய முன் வருவார்கள்.
பரிகாரம்:’
வியாழக் கிழமைகளிலும் சனிக் கிழமைகளிலும் மாமிசம் உண்ண வேண்டாம். தட்சிணாமுர்த்தியை கொண்டக்கடலை மாலையிட்டு வியாழக் கிழமைகளைலும், சனீஸ்வரனை எள்தீபம் ஏற்றி, சனிக்கிழமைகளிலும் வணங்கி வரவும்.
தனுசு:
இதுவரை நீங்கள் குருப் பெயற்சியின் மூலம் கிடைக்கும் 70./. பலன்களை அனுபவித்து வந்திருக்கிறீர்கள். ஆனால் இப்போது ,இது ஒரு தடைப்பட்ட காலம். இந்த வக்கிரகதியில் நீங்கள் இதுவரை அனுபவித்து வந்த உயரிய நிலையில் மாற்றம் ஏற்படும் இதுவரை பெற்ற நற்பலன்களை இப்போது எதிர்பார்க்க முடியாது . ஆகவே மொத்தத்தில், மார்ச் 2014 வரை, அதாவது குரு வக்கிர நிவர்த்தி அடையும்வரை நற்பலன்கள் உண்டாக வழியில்லை முயற்சிகள் உங்களுக்கு வெற்றியளிக்காது வியாபாரம் மந்த நிலை அடையும் வருமானம் குறையும் உங்கள் வாழ்க்கைத்துணை உங்களுடன் கருத்து வேறுபாடு கொள்வார் இதன்மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது திருமணப் பேச்சுவார்த்தைகளை நிறுத்திவைப்பது நல்லது
உடல்நலனில் சற்று கவனம் தேவைப்படும். உடல் அசதியும் மனச் சோர்வும் உண்டாகும். வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்பவர்கள் எடுத்துச் செல்லவேண்டிய ஆவணங்களைச் சரிபார்த்தபின் பயணங்களை மேற்கொள்வது நல்லது. வெளிநாட்டுப் பயணங்களினால், சிக்கல்கள் உண்டாகும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்க சற்று தாமதமாகும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் இப்போது வெற்றியளிக்காது வீடு, நிலம் வாங்கும் முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நலல்து நண்பர்களினால் உங்கள் சேமிப்பு கரையும். 2014 மார்ச்சுக்குப் பிறகு, மீண்டும் நற்பலன்கள் ஏற்படும் வாய்ப்புண்டாகும்
பரிகாரம்:
முருகனை வணங்கி, அனுமாருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடவும். வாழ்வில் சிறக்கலாம்.
மகரம்:
இதுவரை நீங்கள் அனுபவித்து வரும் துயரங்களின் தீவிரம் மட்டுப்படும் இந்தக் காலத்தில் குருபகவானின் பலம் சற்றுக் குறைந்து காணப்படும். இதனால், அவரின் கெடுபலன்கள் உங்களை எள்ளளவும் அண்டாது. மாறாக நன்மைகள்தான் நடக்கும். அவர் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சீயைத் தருவார். பொருளாதார வளத்தைத் தருவார். தொழில் அபிவிருத்தி அடையும். தொழிலில் புதிய நண்பர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். தங்களின் செல்வநிலை உயர்ந்து பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்கும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் சிறந்து வருமானம் அதிகரிக்கும் உங்கள் இல்லறத்துணையுடன் நல்லுறவு மிளிரும் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும் உங்கள் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு உண்டாகும் உங்கள் ஆரோக்கியம் சிறக்கும்
பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் கூடும். உங்கள் முயற்சியில் இருந்த தடைகள் விலகும். காரிய அனுகூலம் ஏற்படும். மதிப்பு மரியாதை கூடும். வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவியிடையே அன்பு பெருகும். விருந்து விழா என்று சென்று வருவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். உத்தியோகம் பார்ப்பவர்கள் சிறப்பான நிலையில் காணப்படுவர். வேலைப்பளு குறையும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் அணுசரணை கிடைக்கும். விரும்பிய இட மாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தீயோர் சேர்க்கையும் எதிரிகளின் தொல்லையும் அவ்வப்போது தலை தூக்கும். புதிய வியாபாரம் தொடங்குவதில் தடை ஏற்படும். இருப்பதை சிறப்பாக நடத்த முயற்சி எடுங்கள். பெண்கள் விஷயத்தில் பிரச்சினை வரலாம். கலைஞர்கள் சிறப்புறுவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து, பாராட்டும் மதிப்பும் பெறுவர். மாணவர்கள் முன்னேற்றம் காண்பர். கோர்ட் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இப்படியாக இந்த வக்கிரகதிக் காலம் உங்களுக்கு சிறப்பான காலமாகும். .
பரிகாரம்:
வில்வ மரத்தின் கீழ் உள்ள லிங்கத்தை வணங்கி, வில்வ பூஜை செய்து வந்தால், துன்பம் விலகும்.
கும்பம்:
இந்த வக்ரகதிக்காலம் உங்களுககு நற்பலன்களை நிகழ வாய்ப்பில்லை. சோதனைகள் உண்டாகும். தொல்லைகள் நீங்க, நீங்கள் மார்ச் 2014ல் குரு வக்ர நிவர்த்தியாகும்வரை காத்திருக்கவேண்டும்.
உடல்நலனில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டு விலகும். கொடுக்கல் வாங்கலில் சற்று மந்த நிலை காணப்படும். பெரிய தொகைகள் கையாள்வதிலும் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதிலும் கவனமாக இருப்பது நல்லது. புது முயற்சிகளில் சற்று தொய்வு ஏற்படும் . இந்த சமயத்தில் நீங்கள் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. உங்கள் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் தோன்றும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். உங்களுடைய பிள்ளைகள் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு முன்னேற்றமடைய முடியாமல் போகும். அதுபற்றி, உங்களுடைய மனக் கவலைகள் அதிகரிக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள வெற்றியடையாது. குருவின் வக்கிர நிவர்த்தி மார்ச் மாதம் ஏற்படும்போதுதான் திரும்பப் பேச்சுவார்த்தைகள முழுமையடையும். கோர்ட் கேஸ்கள் தொல்லை கொடுக்கும். உங்கள் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரும். எதிரிகளின் தொல்லை எல்லை மீறும். கணவன்-மனைவி உறவில் விரிசல் தோன்றும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். உங்கள் நிதி நிலைமை சீராக இருக்காது. குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய இயலாது. வெளிநாட்டு வர்த்தகம் தொல்லை தரும். உங்களுடைய நற்பெயருக்கு களங்கம் உண்டாகும். முக்கியமான விஷயங்களில் அவசரம் காட்டாமல், மார்ச் மாதம் வக்கிர நிவர்த்தியாகும்வரை தள்ளிப்போடவும்.
பரிகாரம்:
ஆஞ்சநேயருக்கு வடை மாலை வெற்றிலை மாலையுடன் சாத்தி, நெய் விளக்கேற்றி தேங்காய்ப் பழம் .வெற்றிலை பாக்குடன் அர்ச்சனை செய்து வரவும்.
மீனம்:
பொதுவாக இந்த வக்ர கதி காலம் உங்களுக்கு ஒரு தீர்வைத் தந்துவிடாது. இதுவரை அனுபவித்துவந்த தொல்லைகள் குறைந்து காணப்படும். ஆனால் நற்பலன்கள் நிகழ வாய்ப்பில்லை உங்கள் வருமானத்துக்கான வழிகளை எப்படியாவது சமாளிப்பீர்கள் செலவுகளுக்கு ஈடுகொடுக்க வருமானத்துக்கான விஷயத்தில் தள்ளாட்டம் ஏற்படும் சிலர் மேற்படிப்புக்காகவும், வேலைக்காகவும் வெளிநாடு செல்வர் இதன் மூலம் குடும்பத்தைப் பிரிய நேரும் பயணங்களில் பொருள்களை இழக்க நேரும் தாயின் உடல்நலம் பாதிக்கப்படும் மருத்துவ செலவுகள் ஏற்படும் தாயின் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் , சிலர் பழைய வணடியை வாங்கி அதற்கு ரிப்பேர் செலவு செய்தே களைத்துப் போவார்கள் உறவினர்கள் உங்கள வீட்டுக்கு வந்து செல்வார்கள் ஆனால், அதன்மூலம் செலவுகள் அதிகரிக்கும் மகிழ்ச்சி ஏறப்ட வழியில்லை சிலர் நகைகளை அடகு வைக்கவோ , அவற்றை விற்கவோ கூடும் கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்பபை எதிர்பார்கக் முடியாது பிள்ளைகளின் நடவடிக்கைகளின் மூலமும் கோர்ட் வழக்குகளை சந்திக்க நேரிடும் பிள்ளைகளின் கல்வியிலும் உயர்வைக் காண்பது சிரமம்
உடல் வலிமையும் உற்சாகமும் சற்று குறையும். முன் கோபத்தையும் பிடிவாதங்களையும் தவிர்ப்பது நல்லது. புத்திரர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். நீண்ட அலைச்சல்களுக்குப் பின் கொடுத்த கடன்கள் வசூலாகும்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் மஞ்சள் மலர் மாலையுடன், கொண்டக் கடலையை ஊற வைத்து மாலையாக தட்சிணாமூர்த்திக்கு அணிவித்து வழிபட்டால் துன்பம் தீரும்.


குரு பகவான் 2013  மே மாதம் முதல்  மிதுன ராசியில் சஞ்சரித்து வருகிறார். தற்போது வருகிற 7.11.13 அன்று மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் அதே ராசியில் புனர்பூசம் (3) நட்சத்திரத்தில்  வக்கிர கதிக்குப் போகிறார். அதே வக்கிர நிலையில் ஏறத்தாழ 4 மாத காலம் அதாவது 6.3.14 வரை சஞ்சரிக்கிறார். இந்தப் பயணம் பின்னோக்கி இருக்கும் ஆனால், இந்தப் பயணம் மிதுன ராசிக்குள்ளேயே அமைந்து விடும். ஆனாலும் குருபகவானின் செயல்பாட்டில் மாறுதல் இருக்கும். இனி பலன்களைப் பார்க்கலாம். ஒரு கிரகம் வக்கிர கதிக்குப் போகும்போது, நன்மைகள் நிகழ வாய்ப்பில்லை. ஆனால், தீமைகளும் நிகழாது.மெதுவாக ஹால்ட்டாகிவிடும். ஓடிக்கொண்டிருந்த வண்டிக்கு எரிசக்தி தீர்ந்து போனதுபோலாகிவிடும். பலனடைந்துகொண்டிருந்த ராசிகளுக்கு ஒரு விதத்தில் நஷ்டமும், கெடுபலன் நடந்துகொண்டிருப்பவர்களுக்கு ஒரு நிம்மதியும் ஏற்படும் நேரம் என்றுகூடச் சொல்லலாம்.இந்த வக்கிரகதிக் காலத்தில் சில ராசிக்காரர்கள் இதுவரை பட்ட அவதியிலிருந்து  மீள்வதோடு ,  நற்பலன்களையும் அடையப் போகிறார்கள். இதுவரை நற்பலன் பெற்ற சிலர், மீண்டும் நற்பலனடைய6.3.14ல் குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடையும் வரை காத்திருக்க வேண்டும். சில முக்கிய நிகழ்ச்சிகளை ஒத்திப்போட்டுக்கொள்ளலாம். குரு தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்து,  அனைவரும் குரு பகவானின் நல்லருளைப் பெற வாழ்த்துகிறோம். இனி ஒவ்வொரு ராசிக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம் :
இந்த வக்கிரகதிக் காலம் உங்களுக்கு நற்பலன்கள் நிகழும்.இந்த வக்கிரகதிக் காலத்தில் குரு பகவான் உங்களுக்கு கெடு பலன்களைத் தர மாட்டார். உங்கள் ஆற்றல் மேம்படும். இதுவரை தடைப்பட்டிருந்த விஷயங்கள் அனைத்தும் தொடர்ந்து நடக்க வழியுண்டு மனதில் துணிச்சல் பிறக்கும். காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும் உங்களுடைய நீண்ட கால முயற்சிகள் யாவும் வெற்றியடையும் ஆரோக்கியம் சிறக்கும் நீங்கள் எதிர்பார்த்தவை யாவும் சாதமாக நிகழ யோகமுண்டு நீங்கள் எதிர்பார்க்காத மகிழ்ச்சி ஏற்படும் உங்களுடைய நீண்டகாலத் திட்டங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் இந்த சமயத்தில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசிடமிருந்து எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும் அரசியல்வாதிகளுக்கு இது நல்ல நேரம் பொறுப்பான பதவி கிடைக்கும் சிலருக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பார்க்காத தொகை வந்து சேரும் யோகம் உண்டாகும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். தடைகள் முறியடிக்கப்படும். தீயோர் சேர்க்கையால அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியிலிருந்து விடுபடுவர். புதிய தொழில் அனுகூலத்தைக் கொடுக்கும். சேமிப்பும் அதிகரிக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளினால் தொடர்ந்து பெருமை கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான சகல வசதிகளையும் பெருவீர்.தடைப்பட்ட திருமணப் பேச்சு வார்த்தை தொடரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு , மனை வாங்க நினைப்பவர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் கடந்த காலத்தைவிட சிறப்பை அடையலாம். உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். வேலையில் ஆர்வம் பிறக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
உங்களுக்கு புதிய ஆற்றலும் துணிச்சலும் பிறக்கும். உங்களிடம் இருந்து வந்த மனக் குழப்பம் அதிகரிக்கும். பகைவர்களின் சதி இப்போது எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் கணவன்-மனைவியிடையே அன்பு பெருகும். வாழ்க்கைத் துணையிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் கலைஞர்கள் சிறப்படைவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்கள் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்கும். விவசாயத்தில் தேவையான பலன் பெறலாம். மொத்ததில் இந்த வக்கிர காலம் உங்களுக்கு நற்பலன்களே இகுந்து காணப்படும்.
பரிகாரம்.
சிவாலயங்களில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் நெய்தீபம் ஏற்றி,அர்ச்சனை செய்துவந்தால் துன்பங்கள் தீரும்.
கன்னி:
இந்த வக்கிர நிலை உங்களுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். குருப் பெயர்ச்சியின் மொத்த காலத்திலும் இதுதான் உங்களுக்கு மிகவும் யோகமான நேரம். பெரிய ஏற்றம் இல்லையென்றாலும், தொழில் சம்பந்தமாகவோ, பண விஷயமாகவோ, புதிதாக பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை. இப்போது குருவின் பலம் சற்று குறைந்து காணப்படும். இதனால், அவரின் கெடு பலன்கள் உங்களை எள்ளளவும் அண்டாது. மாறாக மகிழ்ச்சிதான் உண்டாகும். இந்த வக்கிர கதிக் காலத்தில் நீங்கள் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல, சந்தோஷமான செய்தி வரும் உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். உடல் பலம் கூடும். திருமணம் கைகூடும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் புதிய முயற்சிகள் வெற்றியடையும் புதிய தொழில் தொடங்குவீர்கள். செய்துகொண்டிருக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருமானம் பெருகும் நிலம், வீடு, வாகனம் வாங்குவீர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள் உங்களுடைய பெயரும் புகழும் கூடும் கணவன்-மனைவிக்கிடையே நல்லுறவு மலரும் உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் அவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் கையில் நல்ல பணப் புழக்கம் இருக்கும் நேரம் இது. தேவைகள் பூர்த்தியாகும். உங்களுக்கு மிகவும் நல்ல காலம். பொருளாதாரச் சிக்கல்கள் விலகும். வாராக் கடன்கள் எளிதில் வசூலாகும். மகான்களின் ஆசியும் ,ஆன்றோர்களின் ஆதரவும் கிடைக்கும். அரசுப் பணிகளில் பதவி உயர்வை எதிர்பார்த்துக் காத்திருந்த சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.
எதிரிகள் சரணடையும் நிலை உண்டாகும். தடைப்பட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. மதிப்பு ம்ரியாதை சிறப்பாக இருக்கும். வீட்டில் நிலவிய பூசல்கள் மறையும் . புதிய சொத்து, வீடு, மனை வாங்க யோகம் உண்டு. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கை கூடும். உத்தியோகம் பார்ப்பவர்கள்முன்னேற்றமான பலனை எதிர்பார்க்கலாம். வேலையில் பளு குறையும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள் உயர்வுக்கு தடையேதும் இல்லை.. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். போலீஸ் ,ராணுவத்தில் உள்ளவர்கள் முன்னேற்றம் காண்பர்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் காண்பர். மாணவர்களின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உடல்நலம் சிறப்படையும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இப்படியாக இந்த வக்கிர கதிக்காலம் உங்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியின் பொற்காலமாக அமையும்.
பரிகாரம்:
சனிக் கிழமைகளில் சனீஸ்வரனுக்கு நெய் விளக்கேற்றியும், வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்திக்கு மஞ்சள் மலர் மாலை சாற்றியும் வழிபட்டால் நிம்மதி வரும்.
விருச்சிகம்:
இந்த வக்கிர கதியில் உங்களுக்கு நன்மைகள் நிகழ நிறைய வாய்ப்புண்டு. உங்கள் நிதி நிலைமை உயரும்.வருமனம் அதிகரிக்கும். உங்கள் வருமானம் இரு மடங்காகும். இந்த காலக் கட்டத்தில், உங்களுடைய முன்னேற்றம் ஜெட் வேகத்தில் இருக்கும். மனைவியுடனான உறவு மிகவும் இணக்கமாக இருக்கும். . இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த தொல்லைகளின் தீவிரம் குறைவது மட்டுமின்றி, உங்களுக்கு நிகழப் போகும் நன்மைகள இருமடங்காகும். உங்களுடைய முயற்சிகள் வெற்றியடையும். உங்களுடைய ஆரோக்கியம் சிறக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். எல்லா வழிகளிலும் நன்மைகள் நிகழும். பல திசைகளிலிருந்தும் நற்செய்திகள் வந்து சேரும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகி வெற்றியடையும். நீங்கள் புதிய வியாபாரம் தொடங்கி பரிமளிக்க முடியும். உங்களுடைய வெளிநாட்டு வியாபாரம் செழித்தோங்கும். உங்களுடைய பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும். இந்த சமயத்தில் பிரச்சினைகள் ஒவ்வொன்றுக்கும் தீர்வு காணும் முறையை யோசித்து செயல்படுவது நல்லது.
பிரிந்துசென்ற நணப்ர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து ஒன்று சேருவார்கள். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. மனைவியின் சொல்லுக்கு அதிக மதிப்பளிப்பீர்கள். கணவன்/மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் அகலும். கடன்களின் தாக்கம் குறையும். நணப்ர்கள் உதவி செய்ய முன் வருவார்கள்.
பரிகாரம்:’
வியாழக் கிழமைகளிலும் சனிக் கிழமைகளிலும் மாமிசம் உண்ண வேண்டாம். தட்சிணாமுர்த்தியை கொண்டக்கடலை மாலையிட்டு வியாழக் கிழமைகளைலும், சனீஸ்வரனை எள்தீபம் ஏற்றி, சனிக்கிழமைகளிலும் வணங்கி வரவும்.
பொதுவாக இந்த வக்ர கதி காலம் உங்களுக்கு ஒரு தீர்வைத் தந்துவிடாது. இதுவரை அனுபவித்துவந்த தொல்லைகள் குறைந்து காணப்படும். ஆனால் நற்பலன்கள் நிகழ வாய்ப்பில்லை உங்கள் வருமானத்துக்கான வழிகளை எப்படியாவது சமாளிப்பீர்கள் செலவுகளுக்கு ஈடுகொடுக்க வருமானத்துக்கான விஷயத்தில் தள்ளாட்டம் ஏற்படும் சிலர் மேற்படிப்புக்காகவும், வேலைக்காகவும் வெளிநாடு செல்வர் இதன் மூலம் குடும்பத்தைப் பிரிய நேரும் பயணங்களில் பொருள்களை இழக்க நேரும் தாயின் உடல்நலம் பாதிக்கப்படும் மருத்துவ செலவுகள் ஏற்படும் தாயின் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் , சிலர் பழைய வணடியை வாங்கி அதற்கு ரிப்பேர் செலவு செய்தே களைத்துப் போவார்கள் உறவினர்கள் உங்கள வீட்டுக்கு வந்து செல்வார்கள் ஆனால், அதன்மூலம் செலவுகள் அதிகரிக்கும் மகிழ்ச்சி ஏறப்ட வழியில்லை சிலர் நகைகளை அடகு வைக்கவோ , அவற்றை விற்கவோ கூடும் கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்பபை எதிர்பார்கக் முடியாது பிள்ளைகளின் நடவடிக்கைகளின் மூலமும் கோர்ட் வழக்குகளை சந்திக்க நேரிடும் பிள்ளைகளின் கல்வியிலும் உயர்வைக் காண்பது சிரமம்
உடல் வலிமையும் உற்சாகமும் சற்று குறையும். முன் கோபத்தையும் பிடிவாதங்களையும் தவிர்ப்பது நல்லது. புத்திரர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். நீண்ட அலைச்சல்களுக்குப் பின் கொடுத்த கடன்கள் வசூலாகும்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் மஞ்சள் மலர் மாலையுடன், கொண்டக் கடலையை ஊற வைத்து மாலையாக தட்சிணாமூர்த்திக்கு அணிவித்து வழிபட்டால் துன்பம் தீரும்.

No comments:

Post a Comment