jaga flash news

Thursday 10 October 2013

எப்போது திருமணம் செய்ய கூடாது?

எப்போது திருமணம் செய்ய கூடாது?




ஜாஜகத்தில் திருமண திசை வரணும், கோட்ச்சாரம் என்று சொல்லக்கூடிய கிரக மாறுதல் சாதகமாக இருக்கணும்.  குறிப்பாக குரு பகவான்.  இவர் நல்ல இடத்திருக்கு வரும் போதுதான் நல்லதே நடக்கும்.  அதனால் தான் குரு பலம் வியாழநோக்கம் என்றெல்லாம் ஜோதிடர் சொல்வது.  

ஒகே.... சாதகமான இடத்தில் குரு இல்லை.  அதாவது குரு 1 , 3 , 4 , 6 , 8 , 10 ம் இடங்களில் கோட்ச்சார நிலையில் இருக்கும் போது திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்வது சாஸ்த்திரப்படி தவறு.  

ஜோதிடர் இப்படி சொன்னதும் ராகவன் என்ன கேட்டு இருப்பார்.  பரிகாரம் ஏதும் இருந்தால் சொல்லுங்களேன்.  இப்படிதானே கேட்டு இருப்பார்.  
இப்படித்தான் ராகவனும் கேட்டார்.  ஜோதிடர் திருமண தேதியை முடிவு செய்யும் முன்,  குரு பகவானுக்கு போன் பண்ணி,  ஹலோ குரு பகவான்... நான் தான் ஜோதிடர் சர்மா பேசுறேன்.  




முன்னே சொன்ன மாதிரி குரு  1 , 3 , 4 , 6 , 8 , 10 ம் இடங்களில் கோட்ச்சார நிலையில் இருக்கும் போது திருமணம் எய்ய முடியாது என்பதல்ல.  முடியும்... திருமணம் செய்ய முடியும்.  

ஆனால்... ஆனால்.... அவ்வாறு திருமணம் செய்தால் விளைவு பின் வருமாறு இருக்கும்.  

குரு 1 இல்

கணவன் மனைவி இருவருக்கும் இடையே இணக்கம் குறையும். பொதுவா  கணவன் மனைவி உறவு என்பது என்ன?  

அன்பு காட்டனும், அரவணைத்து கொல்லனும், விட்டு கொடுக்கணும், பகிர்ந்து கொல்லனும், ஆனால் இங்கேதான் முதல்ல விழும் ஆப்பு. 

உண்மையா சொல்லப்போனா ஈகோ இல்லாத உறவு என்றால் கணவன் மனைவி உறவு தான்.   நான் ரொம்ப அழகா இருக்கேன்.  நான் ரொம்ப படிச்சு இருக்கேன்.  நான் யார் தெரியுமா.. எனக்கு கொம்பு முளைச்சு இருக்கு,  இப்படி எல்லாம் சிந்திக்காத உறவு.

ஆனா...  ராசியில் குரு இருக்கும் போது திருமணம் செய்தால், யுத்த பூமி மாதிரி இருக்கும் உறவு.  அதோடு வளமான வம்ச விருத்தி இருக்காது.   பிறக்கும் குழந்தைகள் அறிவற்ற குழந்தையாக... இருக்கும்.  

குரு 3 இல் 

கோடி கொடியா செல்வம் குவிந்து இருந்தாலும் மனசுல நிம்மதி இருக்காது.  இழக்க கூடாததை இழந்த மாதிரி, நடக்க கூடாதது நடந்த மாதிரி மனசு தவிக்கும்.

அது மட்டுமா?

அன்பு கொண்ட உள்ளங்கள் குற்றம் காண்பதில்லை என்பது பொய்யாகும்.  ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி கொண்டிருப்பார்கள்.  கோட்டு போடாத வக்கீல் மாதிரி குறுக்கே குறுக்கே பேசிகிட்டு இருக்கும்.

குரு 4 இல்

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்ற மாதிரி,  கட்டையோ நெட்டையோ, கருப்போ சிகப்போ, சின்னம் சிறிசுகள் கொஞ்சி விளையாடனும்.  அதுதான் புது மன தம்பதியர்க்கு அழகு.

ஆனால்... இங்கேதான் வில்லங்கம் வரும். சுகம் குறையும்.  இன்னும் ஒரு முறை சொல்றேன்... சுகம் குறையும்.  அதாவது கட்டில் சுகம் கசக்கும்.

குரு 6 இல்

வாரம் தோறும் வைத்தியரை பார்க்க வேண்டிய கட்டாயம் வரும்.  உடல் நலம் கெடும்.  6 இல் குரு இருக்கும் போது திருமணம் ஆகி,  அப்போது குழந்தை கருவாகி பிறந்தால்,  அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிள்ளை எதிரியாகத்தான் இருக்கும்.

செத்தால்  கொல்லி போடாத பிள்ளைன்னு சொல்வாங்களே கேள்வி பட்டதுண்டா...  அது இப்போதான் அரங்கேறும்.

குரு 8 இல்

இருவரியில் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கும்.  ஆணுக்கு குரு எட்டில் இருந்தால் பெண் கட்டுபடாது.  பெண்ணுக்கு குரு எட்டில் இருந்தால் ஆண் சொல் பேச்சை கேட்கவே மாட்டார்.  இஷ்டம்னா இரு இல்லைனா உன் அப்பன் வீட்டுக்கு போய்க்கோனு சொல்லுவார்.

மொத்தத்தில் வசந்த காலம் போய், கசந்த காலம் தான் மிஞ்சும்.

குரு 10 இல்

கருத்து வேறுபாடு, வருமான குறைவு, கர்ப்ப சிதைவு, போன்றவை உருவாக காரணமாக அமைந்து விடும்.  அதனால் குரு 2 , 5 , 7 , 9 , 11 ம் இடங்களில் சஞ்சாரம் செய்யும் போது திருமணம் செய்யலாம்.  12 ம் இடம் கூட தவறு இல்லை.  சுப விரைய செலவு செய்யும் இடம் என்பதால் நல்லதே.  

No comments:

Post a Comment