jaga flash news

Wednesday 23 July 2014

ஈசானிய மூலை

வாஸ்து என்னும் விஞ்ஞானம்

  ஆதிகாலத்தில் நம்முனிவர்கள் கண்டறிந்த வாஸ்து சாஸ்திரமும் நம்காலத்தில் விஞ்ஞான அடிப்படையிலான சக்தி அலைகளின்  அடிப்படையில் செயல்படும் வாஸ்து சாஸ்திரமும் வெவ்வேறல்ல.இரண்டும் ஒன்றேதான்.அவற்றின் அணுகு முறைகள் தான் மாறுபடுகின்றன.ஆனால் செயல்பாடு ஒன்றே,காலத்தின்போக்கால் வாழ்க்கை முறையில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படினும் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம் எக்காலத்திலும் ஒன்றேதான்.

                                      
  மனிதன் வாழும் இல்லத்தின் அமைப்பு,அளவு மாறிக்கொண்டே இருக்கலாம்.ஆனால் மனிதன் வாழ்க்கைத்தத்துவத்தில் எந்த மாற்றமும் இல்லை. மனிதன் பிறக்கிறான்,வளர்கிறான்,குடும்ப வாழ்க்கை இன்பம் காண்கிறான்.குழந்தைகள் பிறக்கின்றன,அவர்கள் வளர்கிறார்கள்,இப்படியாக இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் எந்த       மாற்றமும் இல்லை. ஆதிகாலந்தொட்டு, நாகரிக வளர்ச்சி அடைந்துள்ள இந்தக்காலம் வரை இந்த வாழ்க்கையைப் பயணம் தொடர்ந்துகொண்டேயுள்ளது.
  அமைப்பு என்றால் வாஸ்து சாஸ்திர விதிகளின்படி உருவாகும் அமைப்பாகும்.வாஸ்து சாஸ்திரப்படி ஈசானியம் திறந்தும் நைரிதிமூடியும் இருக்கவேண்டும்.இந்த அமைப்பால் ஏராளமான அளவு காஸ்மிக் சக்தி கட்டிடத்திற்குள் நுழைந்து.அதிக அளவு உயிர்ச் சக்தியாக மாறி அவற்றை மனிதனின் செயல்களுக்கு ஏற்ப கிரகிக்கும் வண்ணம் அமைகிறது.ஈசானியம் திறந்திருக்கும் அமைப்பால் எடை குறைவு ஏற்பட்டு,நைரிதி மூடி இருப்பதால் எடை மிகுதி ஏற்பட்டு சமஎடையின் பலனைத் துய்க்குமபடிச் செய்கிறது.

    பூமியின் அமைப்பால் உண்டாகும் இயற்கை நியதி,எனவே இயற்கையோடு இயைந்து இயற்கையின் பயனை எளிதில் துய்க்கும் வண்ணம் கட்டிடத்தை வடிவமைப்பதே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.வாஸ்து என்பது பஞ்ச பூதங்களின் ஆளுகைக்குட்பட்ட இயற்கைக் கோள்களின் நிலை தாக்கல் ஒவ்வொன்றுக்கும் இடையிலான சக்தி அலைகளின்வேகம்,அடர்த்தி ஆகியவற்றுடன் மனிதன் வாழும் நெறி முறைகளை உணர்த்தும் ஆக்க பூர்வமான விஞ்ஞானமாகும்.

   சூரியக்குடும்பத்தினின்று பெரும் சக்தி அலைகளைக் கிரகித்து மனிதன் உயிர் வாழ்கிறான்.சூரியனின் காஸ்மிக் அலைகளை நேரிடையாக மனிதனால் கிரகிக்க இயலாது.இதற்குப் பாலமாக அமைவது பூமியாகும்.அதாவது பூமியும்,அதன் மேலுள்ள கட்டிடங்களும் அவற்றின் நிலை தன்மைக்கு ஏற்ப சக்தி அலைகளைப்பெற்று உயிர் சக்தியாக மாற்றிக்கொடுத்து மனிதனை வாழவைக்கிறது.ஒவ்வொரு மனையும் மிகச்சிறிய பூமியாகச் செயல்படுகிறது.மனை மற்றும் கட்டிடங்கள் ஜடப்பொருள்களால் ஆனது.ஆனால் கட்டிடத்திற்குள் சக்தி அலைகளின் ஆதிக்கம் இருந்துகொண்டேயுள்ளது.கட்டிடத்தின் அமைப்புக்கு ஏற்ப இந்த அலைகளின் தன்மை அடர்த்தி மாறுபடுகிறது.

எப்போதும் நகர்ந்து கொண்டேயுள்ள இந்த சக்தி அலைகளை, மனிதனின் தேவைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் மாற்றி அமைக்கும் வண்ணம் கட்டிடம் இருக்கவேண்டும்.இதுதான் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.அதாவது கட்டிடத்தின் வடிவமைப்பு அதிக சக்தியை உள்ளே பெற்று உயிர்ச் சக்தியாக மாற்றி,மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ப விகிதத்தில் பெறச் செய்யவேண்டும்.
  • அதிகமான சக்தியை உள்ளே பெறவேண்டும்.
  • பெறப்படும் சக்தி முழுமையாக உயிர் சக்தியாக மாற்றப்படவேண்டும்.
  • மாற்றப்படும் உயிர்ச்சக்தி மனிதன் வெவ்வேறு செயல்களுக்கு ஏற்ற        அளவில்   அந்தந்த இடத்தில் கிடைக்கச்செய்யவேண்டும்.  

இந்த அடிப்படையில் கட்டப்படும் கட்டிடங்கள் நல்ல வாஸ்து பலம் பெற்று,அதில் இருப்போர் எல்லா வகையான நன்மைகளும் பெற்று மன மகிழ்ச்சி, குடும்பவளர்ச்சி பெற்று வாழ்வார்கள்.

ஈசானிய மூலை

   ஈசானிய மூலை வழியாக சூரிய சக்தி மனைகளில் நுழைகிறது. ஈசானிய மூலை வளர்ந்து இருக்க தண்ணீர்தொட்டியை இங்கு அமைக்கவேண்டும்.இந்த அமைப்பால் சூரிய சக்தியின் இழுப்புப் பரப்பு அதிகரித்து சக்தியின் அளவை வெகுவாகக் கூடுதலாக்கிறது.இந்த அதிகப் படியான சக்தியால் வீட்டில் உள்ளோர் உடல்நலம்,மனவளம் பெற்று வாழ்வர்.

ஈசானியம் மூடல்

       ஈசானிய மூலையில் அறை அமைத்து,அந்த அறையின் வடக்கு,கிழக்கு பாகத்தில் கதவு வைக்காவிட்டால்,அந்த அமைப்பு ஈசானியம் மூடுதலைப் போன்றதாகும்.மனையின் ஈசானிய மூலையில் கிழக்கு,வடக்கு சுவர்களை ஒட்டி அறை அமைத்தால் அதுவும் ஈசானிய மூடுதலைப் போன்றதுதான்.மூடப்பட்ட ஈசானியத்தில் சக்தியின் நுழைவு பெரிதும் பாதிக்கப்பட்டுக் குறைகிறது,இதனால் மாற்றப்படும் உயிர் சக்தியின் அளவும் அதற்கு ஏற்ப குறைகிறது.மனிதனின் தேவை அளவுக்குக் குறைந்தால்,உடல்நலம் குறைகிறது.மேலும் இந்த சக்தியின் அளவு மிகவும் குறைவாக இருந்தால்,வீட்டிற்குள் பரவும் சக்தியின் அடர்த்தி பெரிதும் குறைந்து,வாஸ்து பலம் குறைந்து,அங்கு எல்லாத்துன்பங்களும் உண்டாகின்றன.அதாவது ஈசானியத்தை மூடுதல்,குரல் வளையை அடைத்துக்கொண்டு உண்பதைபோன்றதாகும்.

ஈசானியப் படுக்கை அறை

                                     

ஈசானியத்தில் படுக்கைஅறை அமைக்கக்கூடாது,வீட்டில் உருமாற்றம் அடையும் உயிர் சக்தி ஈசானிய மூலையை அடையும்போது மிகவும் அடர்த்தி குறைந்த நிலையில் இருக்கிறது.இதைப் படுக்கைஅறையாகப் பயன்படுத்தும்போது,நல்ல வலிமையான அணுக்களை உற்பத்தி செய்யப்போதுமான சக்தி அடர்த்தி இல்லாததால்,அதனால் உருவாகும் குழந்தைகள் முழுவளர்ச்சி அடையாத நிலையில் பிறக்கிறார்கள். மனவளர்ச்சி குறைவோ அல்லது உடல் வளர்ச்சி குறைவோ உள்ள குழந்தைகள் தான் பிறப்பார்கள். எனவே எக்காரணம் கொண்டும் ஈசானிய மூலையில்  படுக்கை அறை அமைக்கக்கூடாது.

ஈசானியத்தில் சமையலறை

                                         

   ஈசானியத்தில் சமையலறை அமைக்கக்கூடாது.வீட்டில் பெண்கள் பெரும்பாலான நேரம் சமயலறையில் இருக்கிறார்கள்.குறைந்த அளவில் உள்ள உயிர்சக்தியால் பெண்களின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப் படுகிறது.வீட்டில ஆக்கினேயத்தில் மிக அதிக அளவில் உள்ள வெப்பசக்தியானது.ஈசானிய மூலையில் வெளிப்பக்க அளவில் தான்  உள்ளது.எனவே சமையல் செய்யும்போது அதிகமான அளவு எரிபொருள் செலவாகிறது.மேலும் இந்த வெப்ப அளவின் தன்மையால் வீட்டிற்குள் இழுக்கப்படும் சக்தி அலைகள் பாதிக்கப்பட்டு உயிர்சக்தியின் அளவு பெரிதளவு குறைகிறது.இதனால் வீட்டின் வாஸ்து பலம் குறைகிறது.

ஈசானிய மூலையில் உயரமான கட்டிடங்கள்                          
         
ஈசானிய மூலையில் உயரமான கட்டிடங்கள் கட்டக்கூடாது.ஈசானிய மூலையில் உயரமான கட்டிடம் இருந்தால், அது ஈசானியம் மூடுதலைப் போன்றதாகும்.எனவே உயிர்சக்தியின் உற்பத்தி மிகவும் குறைந்தால்,வாஸ்து பலம் குறைந்து தீயபலனைக் கொடுக்கும்

No comments:

Post a Comment