| உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் |
| நாம் உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் கீழ்க்காணும் நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும். |
|
அளவிற்கு
அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும்.
|
| எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. |
| பசிக்கும்போது தான் சாப்பிட வேண்டும். |
| மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. |
| உடலில் உள்ள விஷமும் முறிகிறது. |
| உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. |
| வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. |
| வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. |
| கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. |
| இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. |
| உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவவேண்டும். |
| காலில் ஈரம் உலர்வதற்கு |
| முன்பே உணவு உண்ணத்தொடங்க |
| வேண்டும். |
| உணவு உண்ணும்போது பேச க்கூடாது, |
| படிக்கக் கூடாது, |
| இடது கையை கீழே |
| ஊணக் கூடாது. |
| டி.வி பார்க்கக்கூடாது. |
| வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டுவாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. |
| காலணி அணிந்துகொண்டு உண்ணக் கூடாது. |
| சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது. |
| உணவு உண்ணு ம்போது உண்பதில் கவனமாக |
| இருக்கவேண்டும். |
| இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக்கூடாது. |
| சாப்பிடும்பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. |
| நின்றுகொண்டு சாப்பிக்கூடாது. |
| அதிக கோபத்துடன் உணவு உண்ணக்கூடாது. |
| சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக்கூடாது. |
| தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக்கூடாது. |
| இலையைத்துடை த்து வழித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் |
| தரித்திரத்தை வளர்க்கும். |
| ஒரே நேரத்தில் பல வித பழங்க ளைச் சாப்பிடக் கூடாது. |
| எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. |
| வெங்கலம், அலுமினியம் |
| மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. |
| புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். |
| வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும். |
| நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு |
| பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. |
| இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல் லிக்காய் ஆகியவற்றை சேர்க் கக் கூடாது. |
| உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் |
| சாதத்தை பரிமாறக்கூடாது. |
| அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. |
| அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். |
| உண்ணும் உணவில் |
| இறைவன் வாசம் செய்வதால் மேற்க ண்ட நடைமுறைகளை கடை பிடிப்பது சிறப்பைத்தரும். |
jaga flash news
Sunday, 16 August 2015
உணவு விதிகள்!!!!!!!!!!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment