jaga flash news

Wednesday 5 August 2015

கடவுளே நமக்கு துணை!

கடவுளே நமக்கு துணை!
¤ உடல் உடை இரண்டையும் விட மேலானது உள்ளம்.உடலையும், உடையையும் எவ்வளவு தூய்மையாக வைத்திருந்தாலும் உள்ளத்தூய்மை இல்லாவிட்டால் சிறிதும் பயனில்லை.
¤ தவறு செய்யும்போது உள்ளத்தில் அழுக்கு சேர்ந்து விடுகிறது.செய்யும் செயல்களில் தவறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
¤ நல்ல நோக்கத்துடன் செயல்புரியும்போது தவறு நேர்ந்தால் அதற்காக வருத்தப்படத் தேவையில்லை. அதை திருத்திக் கொண்டால் போதும்.
¤ நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்ற கர்வம் சிறிதும் கூடாது.கடவுளின் துணையால் தான் எதையும் சாதிக்க முடியும் என்று உணர்த்தவே தடுமாற்றம் குறை போன்றவை குறுக்கிடுகின்றன.
¤ எந்தப் பணியையும் கடவுளை வேண்டிக் கொண்டு செய்ய வேண்டும்.அது அந்தப்பணியில் ஏற்படும் தவறுகளைக் களைந்து விடும்.
¤ காஞ்சி மஹா பெரியவர்.

No comments:

Post a Comment