jaga flash news

Friday 30 October 2015

மூட நம்பிக்கையை பற்றி தெரிந்ததும் தெரியாததும்..!

1.உங்கள் வீட்டில் நீங்கள் தூங்கும் போது , கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்.

2.சித்தப்பா, பெரிப்பா, மாமனார் வீட்டில் தூங்கும் போது தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்.

3.வெளியூருக்கு செல்லும் போதும், வெளியூரில் தங்கும் போதும் மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்.

4.கல்யாணம் ஆகாதவர்கள், நான்கு முழம் வேட்டி தான் கட்ட வேண்டும்.

5.திருமணம் ஆனவர்கள் தான் எட்டு முழம் வேட்டி உடுத்தவேண்டும்.

6.பிரும்மச்சாரியும், திருமணம் ஆனவர்களும் எக்காரணத்தைகொண்டும், சாயம் பூசிய, கலர் வேட்டிகள் கட்டக்கூடாது.

7.கிரிவலத்தின் போது , நாம் வெறும் காலுடன் நடந்து செல்ல வேண்டும். அப்போது தான் நமக்கு முழு பலன் கிடைக்கும்.

8.ஆலயத்தில் அங்க பிரதட்சிணம் செய்யும் போது யாரிடமும் பேசக்கூடாது. வேகவேகமாக செய்தால் பாவம் வரும்.

ஆகவே பேசாமல் மெதுவாக,நடக்க வேண்டும்.

9.பிள்ளையாருக்கு – ஒரு தடவை ,சூரியனுக்கு – இரண்டு தடவை, சிவனுக்கு – மூன்று தடவை, விஷ்ணுவிற்கு – நான்கு தடவை, அம்மனுக்கு – ஐந்து தடவை, அரச மரத்துக்கு – ஏழு தடவை சுற்றி வந்து வணங்க வேண்டும் ..

10.பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ள வேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது.

11.திருமணம் ஆனவர்கள், தங்கள் உடம்பில் சந்தனத்தை பூசிக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், அதாவது பிரம்மச்சாரியாக இருக்கும் போது சந்தனத்தை உடம்பில் இட்டுக்கொள்ளகூடாது

No comments:

Post a Comment