jaga flash news

Monday 5 October 2015

அனுஷத்தின் மகிமை

அனுஷத்தின் மகிமை
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் அக்கறையுள்ளவர்கள். . இருப்பதுண்டு. நற்குணங்கள் நிறைந்தவர்கள். தாய்-தந்தையை மதிப்பவர்கள். முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவர்கள்.தங்கள் லட்சியத்தை அடையும் வரை உழைத்துக் கொண்டே இருப்பார்கள்
.
அனுஷ நட்சத்திரத்தில் சூரிய பகவான் வீற்றிருக்கும்போது, விண்வெளி மண்டலத்தில், லட்சுமி காந்தக் கதிர்கள் தோன்றுகின்றன. சந்திர மூர்த்தி, அனுஷத்தில் இருக்கும்போது அதாவது அனுஷ நட்சத்திர நாளில், வேதலட்சுமி கேந்த்ரக் கதிர்கள் எழுகின்றன.
அனுஷ நட்சத்திரத்தில் சூரிய பகவான் உலா வரும் நாளில், அதாவது அனுஷத்தில் சூரிய மூர்த்தி நிலை கொள்கையில், பாஸ்கர சக்திகள் நிறைந்த இடங்களில், சூரியக் கதிர்கள் மூல மூர்த்தியின் மேல் படுகின்ற தலங்களில், காந்த சக்திகள் நிறைந்த நாகலிங்கப் புஷ்பத்தால் சுவாமியை அர்ச்சித்து, வில்வ தளத்தால் மஹாலட்சுமியைத் தோத்தரித்துத் தாமரை இலைகளில் சர்க்கரைப் பொங்கல் தானம் அளிப்பது இல்லத்தில் பலகாலமாக இருந்து வரும் கடன் கஷ்டங்களால் உருவாகி உள்ள எழும் சோக நிலை மாறிட உதவும்.
சந்திரன் அனுஷத்தில் உறையும் அதாவது அனுஷ நட்சத்திர நாளில், சந்திர மூர்த்தியை வில்வமும் தாமரையும் கலந்த புஷ்பங்களால் அர்ச்சிப்பதும், அனுஷத்தில் சூரியன் இருக்கும்போது சூரிய மூர்த்தியை நாகலிங்கப் புஷ்பமும் துளசியும் கலந்த புஷ்பங்களால் அர்ச்சிப்பதும் பல விதமான வறுமைத் துன்பங்களைப் போக்க உதவுவதாகும் இவ்விதகாரணங்களால் அனுஷத்தில் பிறந்தவர் புண்ணியவான்களாக இருக்கலாம்

No comments:

Post a Comment