jaga flash news

Wednesday, 18 June 2025

அசைவம் சாப்பிட்டு கோயிலுக்கு ஏன் போகக்கூடாது தெரியுமா?


அசைவம் சாப்பிட்டு கோயிலுக்கு ஏன் போகக்கூடாது தெரியுமா? பூஜை செய்யலாமா? ஆன்மீகம் சொல்லும் உண்மை என்ன

  
சென்னை: அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு போகக்கூடாது என்று சொல்கிறார்களே என்ன காரணம் தெரியுமா? அசைவ உணவுகளை சாப்பிட்டுவிட்டு வீட்டிலுள்ள பூஜைகளை செய்யலாமா? அசைவம் சாப்பிட்டுவிட்டு திடீரென கோவிலுக்கு போக வேண்டி நேர்ந்தால் என்ன செய்வது? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.


நம்முடைய உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உதாரணத்துக்கு தயிர் அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு தூக்கம் வருவது போல தோன்றும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவது போல தோன்றும்..



மந்தத்தன்மை
அதுபோல அசைவ உணவுகளை சாப்பிடும்போது, அது மந்தநிலையை ஏற்படுத்திவிடும். உடல் மட்டுமல்ல, மனமும் சுத்தமாக இருக்க வேண்டும்.. கோயிலுக்கு செல்லும்போதும் மனம், உடம்பு சுத்தமாக இரக்க வேண்டும். மனதளவில் மந்தத்தன்மையை வைத்துக் கொண்டு, கோயிலுக்குள் சென்றால், அங்குள்ள சக்திகளை உணர முடியாது..


ஏனென்றால், அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலை குறைத்துவிடுமாம். எனவேதான், எளிய உணவுகளை அதாவது விரைந்து ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு போக சொல்வார்கள்.

இரக்க குணம்
இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. இரக்க குணம் நிறைந்த இடத்தில் நிச்சயம் பக்தி இருக்கும். பக்தி உள்ள இடத்தில் கடவுளும் இருப்பார் என்பதால் அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்ல கூடாது என்கிறார்கள்.

ஒருவேளை அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்கு பிறகு குளித்துவிட்டு கோயிலுக்கு செல்வது நல்லது. முனீஸ்வரன், சுடலை மாடன் போன்ற அசைவ உணவு படையல்களை ஏற்கின்ற கிராம தெய்வங்கள், காவல் தெய்வங்கள் இருக்கும் கோயில்களுக்கு அசைவ உணவு சாப்பிட்டு செல்வதால் எந்த ஒரு பாதகங்களும் இல்லை.

பூஜையறை விளக்குகள்
ஆனால், அசைவம் சாப்பிட்டுவிட்டு வீட்டின் பூஜையறை விளக்குகளையும் ஏற்றக் கூடாது.. மறுநாள் குளித்து, வீட்டை சுத்தம் செய்துவிட்டுதான் விளக்கு ஏற்ற வேண்டும்.. அசைவம் சாப்பிட்டுவிட்டு பக்தி புத்தகங்களைகூட படிக்க கூடாது என்பார்கள்.

அதுபோலவே, ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.. ஒருவேளை பெண்கள் ருத்ராட்சம் அணிந்திருந்தாலும், சமைக்கும் நேரங்களில் தவிர்த்துவிட்டு, பூஜை நேரங்களில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.


Sunday, 15 June 2025

தனுசு ராசியில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன்

தனுசு ராசியில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை இருந்தால், அது ஒருவருடைய ஜாதகத்தில் பலவிதமான பலன்களைத் தரலாம். இது பொதுவாக ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, வெற்றி, மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, இந்த சேர்க்கை கல்வி, கலை, மற்றும் சமூக வாழ்க்கையில் சிறந்து விளங்க உதவும். 
இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால், ஒரு நபர் புத்திசாலியாகவும், ஆற்றல் மிக்கவராகவும், சமூகத்தில் பிரபலமாகவும் இருப்பார். இவர்கள் தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பார்கள். கலை மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் இருக்கும். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல சாதனைகளைச் செய்வார்கள். 
சூரியன்:
சூரியன் ஒருவரின் ஆளுமை, தலைமைப் பண்பு, மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது. தனுசு ராசியில் சூரியன் இருப்பது, ஒருவரை தைரியமானவராகவும், தன்னம்பிக்கை உள்ளவராகவும் ஆக்கும்.
புதன்:
புதன் ஒருவரின் அறிவு, தொடர்பு, மற்றும் பேச்சுத் திறனைக் குறிக்கிறது. தனுசு ராசியில் புதன் இருப்பது, ஒருவரை புத்திசாலியாகவும், நல்ல பேச்சாளராகவும் ஆக்கும்.
சுக்கிரன்:
சுக்கிரன் ஒருவரின் காதல், அழகு, மற்றும் கலைத் திறனைக் குறிக்கிறது. தனுசு ராசியில் சுக்கிரன் இருப்பது, ஒருவரை கலைகளில் ஆர்வம் உள்ளவராகவும், சமூகத்தில் பிரபலமாகவும் ஆக்கும்.
இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால், ஒரு நபர் தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வெற்றியையும் அடைவார்.