jaga flash news

Saturday, 29 July 2023

வாஸ்து சாஸ்திரத்தின் படி, சாப்பிடும் அறைக்கும், சாப்பிடும் திசைக்கும் சில ஐதீகங்கள் உள்ளன.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் சாப்பாட்டு அறை மேற்கு திசையில் இருக்க வேண்டும். மேற்கு திசை சாப்பிடுவதற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது.

2. சூரியன் உதிக்கும் கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் கல்வியும் நீண்ட ஆயுளும் கிடைக்கும்
3.நீங்கள் வடக்கு திசையில் அமர்ந்து சாப்பிட்டால், அது உங்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் வடக்கு திசையில் அமர்ந்து சாப்பிட்டால் நோய் தீராது என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
4.வடக்கு திசையை விட தெற்கு திசை சிறந்ததாக கருதப்படுகிறது. தெற்கு பார்த்து சாப்பிட்டால் நித்திய புகழ் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.

5. வாஸ்து படி மேற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வம் பெருகும்.எனவே இந்த திசை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறதுநீங்கள் வடக்கு திசையில் அமர்ந்து சாப்பிட்டால், அது உங்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் வடக்கு திசையில் அமர்ந்து சாப்பிட்டால் நோய் தீராது என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
6.செல்வத்தின் அதிபதி மேற்கு திசை மகாலட்சுமி அம்சம். தெற்கு என்பது மனிதனின் திசை. வடக்கு திசை சிவனாகவும், கிழக்கு திசை இந்திரனாகவும் கருதப்படுகிறது
7.அதே சமயம் உறவினர்கள் வீட்டிற்கு வரும்போது மேற்கு திசையில் அமர்ந்து சாப்பிடக் கூடாது. நீங்கள் மேற்கு திசையில் அமர்ந்து சாப்பிட்டால், அவர்களுடனான உங்கள் உறவு மோசமடையக்கூடும்.

நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம்

நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் (ஞாயிறு) - சிவன்

ரோகிணி, அஸ்தம், திருவோணம் - சந்திரன் (திங்கள்) - சக்தி

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்

திருவாதிரை, சுவாதி, சதயம் - ராகு - காளி, துர்க்கை

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு (வியாழன்) - தட்சிணாமூர்த்தி

பூசம், அனுஷம், உத்திரட்டாதி - சனி - சாஸ்தா

ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு

மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர்

பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் (வெள்ளி) - மகாலட்சுமி

Monday, 17 July 2023

கனவுகளும் பலன்களும்

நம்முடைய மறைந்த முன்னோர்கள் தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா என யாராவது ஒருவர் கனவில் வந்து எதையாவது சொல்ல முயற்சி செய்வார்கள். செத்துப்போனவர்கள் கனவில் வருவது நல்லதா? கெட்டதா? ஏதேனும் பிரச்சினை வருமா? என்றெல்லாம் பலரும் யோசிப்பார்கள். கனவில் இறந்து போனவர்கள் வந்தால் என்ன பலன் நடைபெறும் என்று பார்க்கலாம்.


கனவுகளும் பலன்களும்: கனவுகளை உளவியல் ரீதியாக முதன்முதலில் அணுகி விளக்கம் கொடுத்தவர் சிக்மண்ட் ஃபிராய்ட். அதற்கு பின் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. கனவுகள் என்பவை நாம் நடக்கவேண்டுமென்று நினைப்பது மட்டுமல்ல, நாம் செய்யத் தவறியதாகவும், அதை அறியாமலும் கூட இருக்கலாம். கனவுகள் நமக்கு அவற்றை நினைவுபடுத்தலாம். சுருக்கமாக கனவுகள் ஒரு சம்பவத்தின், ஆசையின், உணர்வின் விளைவாகவும் இருக்கலாம், காரணமாகவும் இருக்கலாம். பகலில் கனவு பலிக்காது அதே நேரத்தில் அதிகாலையில் காணும் கனவு நிச்சயம் பலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிலருக்கு தினம் தினம் புதிது புதிதாக கனவு வரும். சிலருக்கு பெரும்பாலும் கெட்ட கெட்ட கனவுகள், அகோரமான பயங்கரமான கனவுகளும் வந்து அச்சுறுத்தும். என்ன மாதிரியான கனவுகள் வந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.


நல்ல கனவு: விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும். ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு. திருமணமாகாதவர்கள் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும். ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும். இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.


பண வருமானம் வரும்: உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும். தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும். திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும். சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும். மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் தேடி வரும். மலத்தை கனவில் கண்டால் பண வரவு வரும். மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.


ஜாக்பாட் அடிக்கும்: தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும். நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும். இறந்தவர் கனவில் வந்தாலே இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும். இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் பெயரும், புகழும் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

நல்ல செய்தி தேடி வரும்: பொதுவாகவே இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும் மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று பொருள். இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் நன்மைகள் அதிகரிக்குமாம். இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதை போல கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்று பொருள்.


வரக்கூடாத கெட்ட கனவுகள்: சவபெட்டியை கனவில் கண்டால் நமக்கு நெருங்கியவர்கள் இறக்க போகிறார்கள் என்று அர்த்தம். இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது. பசுமாடு விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு நோய்கள் தாக்கும். நோய் பிடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார். அடிபட்டு ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும். முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும். நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும். குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும்,செல்வாக்கு சரியும். சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும். முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் வறுமை பீடிக்கும். ஒருவேளை கெட்ட கனவுகள் வந்தால் நாம் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் உறங்கி விட வேண்டும். அரை மணி நேரம் கழித்து மீண்டும் எழுந்து வழக்கமான வேலையை பார்க்கத் தொடங்கலாம்.

 

Friday, 14 July 2023

மேல்நிலை Vs ஆழ்நிலை

மேல்நிலை  Vs  ஆழ்நிலை
-------------------------------------------

தினமும் பசும்பால் அருந்தினால் உடல் மிகவும் வலிமை பெறும்- அப்படியானால் பூனை ஏன் இன்னும் வலிமை பெறவில்லை?
😂

தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறைந்து அழகாக இருக்கும்- அப்படியென்றால் யானை ஏன் எடை குறையவில்லை?
🤣

 தினமும் 2 மணி நேரம் நீச்சலடித்தால் உடல் மெலிந்து ஸ்லிம்மாகும்- அப்படியென்றால் திமிங்கிலம் ஏன் ஸ்லிம் ஆகவில்லை?
🤔

கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டால், உடம்பில் கொழுப்பு அதிகமாகி அவதிப்படுவீர்கள் - அப்படி என்றால், புல்லை மட்டும் சாப்பிடும் ஆட்டின் உடம்புக்குள் அவ்வளவு கொழுப்பு எங்கிருந்து வந்தது?
😥

தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்தால் சகல செல்வங்களும் தேடிவரும் - அப்படியென்றால் நியூஸ்பேப்பர் போடுபவர் BMW காரில் அல்லவா சுற்றவேண்டும்?
😆

எனவே நீங்க நீங்களாகவே இருந்து, தினமும் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே கவலைப்படாமல் இருங்கள்... 
💪💪
அதுதான் நல்லது...
நலம் பெறுக
👌👌
நன்றாக சிரித்து பிறரையும் சிரிக்க வையுங்கள்... அது போதும் 😍🥰

0o0o0o0o0o0o 0o0o0o0o0o0o 0o0o0o0o0o0o

1. தினமும் பசும்பால் அருந்தினால் உடல் மிகவும் வலிமை பெறும்- அப்படியானால்  பூனை ஏன் இன்னும் வலிமை பெறவில்லை?

வலிமை என்பது உருவின் அளவில் இல்லை. உருவின் தரத்தில் இருக்கின்றது.

2. தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறைந்து அழகாக இருக்கும்- அப்படியென்றால் யானை ஏன் எடை குறையவில்லை?

அழகும் ஆரோக்கியமும் உங்கள் எடையில் இல்லை. எடையின் தன்மை(body mass composition)யில் உள்ளது. பல நேரங்களில் உடல் இளைப்பு என்பது ஏமாற்று வேலை.

3.தினமும் 2 மணி நேரம் நீச்சலடித்தால் உடல் மெலிந்து ஸ்லிம்மாகும்- அப்படியென்றால் திமிங்கிலம் ஏன் ஸ்லிம் ஆகவில்லை?

பூமி சுற்றிச் சுழன்று கொண்டேயிருந்தாலும், சிதையாமல் இருப்பதற்குக் காரணம் அதன் திண்மை. திண்மையாதல் வேறு உடல் இளைத்தல் என்பது வேறு. நீச்சலடித்தால் உடல் இறுகும் என்பதே மெய்.

4. கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டால், உடம்பில் கொழுப்பு அதிகமாகி அவதிப்படுவீர்கள் - அப்படி என்றால், புல்லை மட்டும் சாப்பிடும் ஆட்டின் உடம்புக்குள் அவ்வளவு கொழுப்பு எங்கிருந்து வந்தது?

புல்லைத் தின்றாலும் அதிலிருக்கும் சத்துகள் செரிக்கப்பட்டு, செல்லுலோசுகள் குளுகோசாகி, உபரி குளுகோசு கொழுப்பாகும். ஆனால், ஒப்பீட்டளவில் அதிகமாக உண்ணப்பட வேண்டும். எல்லாமே ஒப்பீடுதான்.

5. தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்தால் சகல செல்வங்களும் தேடிவரும் - அப்படியென்றால் நியூஸ்பேப்பர் போடுபவர் BMW காரில் அல்லவா சுற்றவேண்டும்?

BMW கார் வைத்திருப்பவன் நியூசு பேப்பர் போடுபவனுக்கும் முன்னமே எழுபவனாக இருக்கலாம். செல்வம் என்பது, காரில் மட்டுமே இல்லை. மன நலத்திலும் உடல்நலத்திலும் நாளைக் கடந்து செல்லும் இன்புறு அனுபவத்திலும் கூட‌ உள்ளது.

Tuesday, 20 June 2023

சாணக்கிய நீதி படி இந்த 6 விஷயங்களை பாலோ பண்றவங்களுக்கு வாழ்க்கையில் பணக்கஷ்டமே வராதாம்...!

 சாணக்கியரின் கூற்றுப்படி, பணம் மற்றும் பதவியால் மட்டுமே யாரும் வெற்றி பெறுவதில்லை. சமுதாயத்தில் முன்மாதிரியாகவும், மரியாதைக்குரியவர்களாக இருப்பவர்கள் மட்டுமே வெற்றிகரமானவர்களாக மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள். அந்த வகையில் சாணக்கியர் ஒரு சிறந்த அறிஞர், அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர். 
 சாணக்கியரின் இந்த கொள்கைகளை கண்டிப்பாக கடைபிடிப்பவர் வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களுக்கும் தீர்வு பெறுவார் என்பது நம்பிக்கை. இன்றைய அவசர உலகத்தில் பணம் ஒரு நல்ல வாழ்க்கைக்கு இன்றியமையாதது. சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் பணத்தைப் பற்றிய சில விஷயங்களைக் குறிப்பிடுகிறார். 
இவற்றை ஒருவர் தன் வாழ்வில் கடைப்பிடித்தால், அவர்கள் வாழ்க்கையில் பணத்திற்கு கஷ்டம் இருக்காது. சாணக்கிய நீதியைப் பின்பற்றி உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தலாம். இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், பணத்தில் எந்த பிரச்சனையும் வராது. 

Saturday, 10 June 2023

தொட்டால் சிணுங்கி செடி


ஆரோக்கியம்
தொட்டால் சிணுங்கி செடியை வீட்டில் வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..!
By Neve Thitha- October 28, 2022
thotta chinungi plant benefits in tamil
தொட்டால் சிணுங்கி செடியில் உள்ள நன்மைகள்..!
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் மிகவும் புதுமையான மற்றும் சுவாரசியமான ஒரு தகவல் பற்றித்தான் பார்க்க போகின்றோம். அப்படி என்ன தகவல் என்றால் ஒரு தாவரத்தில் உள்ள சக்தி மற்றும் பயன்கள் பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அது என்ன தாவரம் என்றால் தொட்டால் சிணுங்கி செடித்தான்.


நாம் அனைவரும் சிறுவயதில் இந்த தொட்டால் சிணுங்கி செடியை தொட்டு தொட்டு விளையாடிருப்போம். அப்படி விளையாடும் பொழுது இந்த செடியில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அதனை பற்றி இந்த பதிவில் விரிவாக கூறப்பட்டுள்ளது இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

தொட்டால் சிணுங்கி செடியின் வேறுபெயர்கள்:
இந்த தொட்டால் சிணுங்கி செடியின் வேறுபெயர்கள் தொட்டால் சுருங்கி, தொட்டால் வாடி, வசிய மூலிகை, மாய மூலிகை, ஈர்ப்பு மூலிகை, மந்திர மூலிகை போன்ற பெயர்களினால் அழைக்கப்படுகிறது.


தொட்டால் சிணுங்கி செடியில் உள்ள நன்மைகள்:
thotta sinungi plant in tamil
பொதுவாக கிராமப்புறத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு அருகில் இந்த தொட்டால் சிணுங்கி செடியை பார்க்கலாம். இதன் பெயருக்கு ஏற்ப இதனை தொட்டீர்கள் என்றால் அதனுடைய இலைகள் சுருங்கி விடும். இதற்கு காரணம் அதனுடைய தண்டுப்பகுதியில் உள்ள ஒரு விதமான அமிலம் தான்.


இந்த தொட்டால் சிணுங்கி செடியை நமது வீட்டில் வளர்த்தால் மிகுந்த நன்மைகளை இந்த செடியிலிருந்து நாம் பெறலாம். இதில் உள்ள காந்த சக்தி நமது வீட்டிற்கும் நமக்கும் மிகுந்த நன்மைகளை அளிக்கிறது.

பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 03.30 – 05.30 மணி வரை உள்ள நேரத்தில் தொட்டால் சிணுங்கி செடியின் மீது நமது இரண்டு கைகளையும் வைத்து தினமும் தொட்டு வருவதால் நமது உடலில் உள்ள காந்த ஆற்றல் அதிகரிக்கும்.

அப்படி இந்த காந்த ஆற்றல் அதிகரிப்பதால் நமக்கு வருங்காலத்தை கணித்து கூறக்கூடிய ஆற்றல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த செடியை வீட்டில் வளர்ப்பதால் வீட்டில் நிலவுகின்ற சண்டைகள் இல்லாமல் இருக்கும்இந்த தொட்டால் சிணுங்கி செடியை கசாயம்போல் செய்து பருகி வருவதால் நமது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றது. முதலில் இந்த தொட்டால் சிணுங்கி கசாயம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
தொட்டால் சிணுங்கி – 1 கைப்பிடி அளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 6
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தண்ணீர் 1/4 லிட்டர்
முதலில் நாம் எடுத்துவைத்திருக்கும் 1 கைப்பிடி அளவு தொட்டால் சிணுங்கியை நன்கு பொடிப்பொடியாக நறுக்கி அதனை நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருந்த தொட்டால் சிணுங்கியை சேர்த்து அதனுடன் 1/4 லி தண்ணீரை சேர்த்து கொள்ளவும். அதில் 1 டீஸ்பூன் சீரகம், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் நாம் எடுத்துவைத்திருந்த மிளகை நன்கு பொடியாக்கி சேர்த்து கொள்ளவும். இதனை நன்கு கொதிக்கவைத்து பிறகு வடிக்கட்டி பருக வேண்டும்.

இந்த தொட்டால் சிணுங்கி கஷாயத்தை வாரம் இருமுறை பருகுவதால் நமது உடலில் உள்ள அனைத்து வலிகளும் நீங்கும். தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த கஷாயத்தை குடிப்பது நல்ல தீர்வை தரும். மேலும் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த கஷாயம் ஒரு சிறந்த மருந்தாகும்.

Thursday, 1 June 2023

இந்த நாளில் நகம் வெட்டாதீங்க..! லட்சுமி தேவியின் கோபத்தால் வீட்டில் வறுமை அதிகரிக்குமாம்

வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்புடையது. எனவே தான் நாம் செய்யும் ஒவ்வொரு புதிய செயலையும் நாள் கிழமை பார்த்து செய்யுமாறு கூறுகின்றனர். நாம் அன்றாடம் செய்யும் வேலைகளை, சில தினங்களில் செய்யக்கூடாது என கூறப்படுகிறது. அதில், நகம் வெட்டுதல், தலைக்கு குளித்தல், முடி வெட்டுதல், அசைவம் சமைக்க கூடாது என அனைத்தும் அடங்கும்.

இந்த வேலைகளை ஒரு குறிப்பிட்ட நாட்களில் செய்தால் லட்சுமி தேவியின் கோபத்தால் வீட்டில் வறுமை அதிகரிக்கும் மற்றும் அவர் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஜோதிட சாஸ்த்திரம் கூறுகிறது. இந்த வேலைகளை செய்ய எந்த நாள் சிறந்தது என இந்த தொகுப்பில் காணலாம்
சனிக்கிழமை : ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபர் சனிக்கிழமையன்று தனது நகங்களை வெட்டினால், அது அவரது ஆயுளைக் குறைக்கிறது மற்றும் அவரது வீட்டில் வறுமையை அதிகரிக்கிறது என்று நம்பப்படுகிறது.

செவ்வாய் கிழமை : ஜோதிட சாஸ்திரத்தின்படி, செவ்வாய்கிழமையன்று ஒருவர் நகங்களை வெட்டினால், அந்த நபர் தனது சகோதரனுடன் பிரிந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர்களின் தைரியம் மற்றும் வீரம் குறையலாம். இது தவிர, நபர் நகங்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
வியாழன் கிழமை : ஜோதிட சாஸ்திரத்தின்படி, வியாழன் அன்று ஒருவர் நகங்களைக் கடித்தால், அந்த நபரின் கல்வி மற்றும் அறிவாற்றல் குறைவதோடு, வயிறு தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, மாலை அல்லது இரவில் நகங்களை வெட்டக்கூடாது. இப்படி செய்வதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகும். நம்பிக்கையின் படி, மாலை நேரம் லட்சுமி தேவியின் வருகை செய்யும் நேரம். இந்த நேரத்தில், அவள் கோபமடைந்து உங்கள் வீட்டை விட்டு வெளியேறுவார் என கூறப்படுகிறது. இதனால் வீட்டில் வறுமை ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மாலையில் நகங்களை வெட்டக்கூடாது, ஏனென்றால் இந்த நேரத்தில் நகங்கள் மிகவும் கடினமாகிவிடும்.
ஜோதிட சாஸ்திரப்படி மேலே குறிப்பிட்ட மூன்று நாட்களைத் தவிர வாரத்தின் மற்ற நாட்களில் வேண்டுமானாலும் நகங்களை வெட்டலாம். நகங்களை வெட்ட சிறந்த நேரம் குளித்த பிறகு என கூறப்படுகிறது. குளித்த பிறகு, நகங்கள் மென்மையாக மாறும், இது வெட்டுவதில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது.

Tuesday, 30 May 2023

எந்த நாளில் எந்த பொருட்களை வாங்கினால் அதிர்ஷ்டம் கொட்டும்-ன்னு தெரியுமா?

ஞாயிறு ஞாயிற்றுக் கிழமை சூரிய பகவானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் சிவப்பு நிற பொருட்கள், தங்கம், கோதுமை, மருந்துகள், கத்திரிக்கோல், கண் தொடர்பான பொருட்களை வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் இந்நாளால் இரும்பு மற்றும் இரும்பினால் ஆன பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதோடு மரப் பொருட்கள், வாகனத்தின் பாகங்கள் போன்வற்றையும் வாங்கக்கூடாது. திங்கள் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் அரிசி, பாத்திரங்கள், தங்கம், மருந்துகள், பால் மற்றும் பாலால் தயாரிக்கப்பட்ட இனிப்பு பொருட்களை வாங்கலாம். ஆனால் இந்நாளில் போனா, பென்சில், கலை தொடர்பான பொருட்கள், இசை தொடர்பான பொருட்கள், விளையாட்டு பொருட்கள், மொபைல் போன்றவற்றை வாங்கக்கூடாது. ADVERTISEMENT செவ்வாய் செவ்வாய் கிழமை அனுமனுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்த செவ்வாய்க்கிழமை அன்று தங்கம், சமையலறை பொருட்கள், சிவப்பு நிற பொருட்களை வாங்குவது நல்லது. சொத்துக்களை வாங்க நினைத்தால், அதை செவ்வாய் கிழமைகளில் வாங்குவது மங்களகரமானதாக இருக்கும். ஆனால் இந்நாளில் காலணிகளை வாங்காதீர்கள். அதோடு இரும்பு தொடர்பான பொருட்கள், பர்னிச்சர் மற்றும் மொபைல் போன்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். புதன் புதன்கிழமை விநாயகர் மற்றும் சரஸ்வதி தேவிக்கு உரிய நாளாகும். இந்த புதன் கிழமைகளில் பணம் தொடர்பான வேலைகளை செய்வது நல்லது. புதிய தொழில் மற்றும் படிப்பைத் தொடங்க சிறந்த நாள். இந்நாளில் பேனா, பென்சில், கலைப்பொருட்கள், வாகனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவது அதிர்ஷ்டமானது. ஆனால் இந்நாளில் அரிசி, மருந்துகள், பாத்திரங்கள், மீன் தொட்டி போன்றவற்றை வாங்கக்கூடாது. மேலும் கடன் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வியாழன் வியாழக்கிழமை பகவான் விஷ்ணுவிற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குவது மிகவும் நல்லது. அதேப் போல் இந்நாளில் சொத்துக்களை வாங்குவது நன்மை பயக்கும். ஆனால் இந்நாளில் கண்ணாடி, மஸ்காரா போன்றவற்றை வாங்கக்கூடாது. அதேப் போல் கூர்மையான பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் நீர் தொடர்பான ஷோபீஸ்களை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். வெள்ளி வெள்ளிக்கிழமை செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கு உரிய நாளாகும். இந்நாளில் பணம் வைக்கும் பைகள், பெல்ட்டுகள், காலணிகள் போன்ற தோல் பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவது நல்லது. மேலும் இந்நாளில் அலங்கார பொருட்களை வாங்குவது மங்களகரமானது. ஆனால் இந்நாளில் சமையலறை மற்றும் பூஜை பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் வாகனத்தின் பாகங்களை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
சனி சனிக்கிழமை சூரிய பகவானின் மகனான சனி பகவானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் வாகனங்கள், இயந்திரங்கள், ஹார்டுபேர், பர்னிச்சர், கருவிகள், கார்பெட் மற்றும் திரைசீலைகள் போன்வற்றை வாங்குவது மங்களகரமானதாகும். சனி பகவானின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என்று விரும்பினால், சனிக்கிழமைகளில் கடுகு எண்ணெய், உப்பு மற்றும் தோல் பொருட்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அதுமடுமின்றி, இரும்பு பொருட்கள், கத்தி, கத்தரிக்கோல், தானியங்கள், மசாலா பொருட்கள் போன்றவற்றை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

Friday, 26 May 2023

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.

1. வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாதங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாசங்கள்(3)

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

வருடங்கள் மொத்தம் அறுபது அவை:

1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.

அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

1.உத்தராயணம்
(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).

2.தக்ஷிணாயணம்
(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).

இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.
ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்:

1.வஸந்தருது
(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது
(ஆனி,ஆடி)
3.வர்ஷருது
(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது
(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது
(மார்கழி,தை)
6.சிசிரருது
(மாசி,பங்குனி)

இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.
தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும் :

1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).
பக்ஷங்கள் இரண்டு வகைப்படும் :
1.ஸுக்ல பக்ஷம்
(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்
(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)

சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.

க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.

இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.
திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும் :

1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.

வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும் :

1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்

நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்:

1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.

கிரகங்கள் ஒன்பது ஆகும்:

1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)

இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:

இராசிகள் பண்ணிரெண்டு ஆகும் ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.
நட்சத்திரங்கள் , இராசி , இராசிஅதிபதி.
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புன
ர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு
சோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் குணம் எந்த தெய்வத்தின் குணத்தை ஒத்துள்ளது என கண்டறிந்து, அந்த தெய்வத்தை அதிதேவதையாக கூறியுள்ளனர். 

ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு கிரகத்திற்கு அதிதேவதை.

சூரியன் - சிவன், சந்திரன் - பார்வதி
பரமனும், பார்வதியும் படியளப்பவர்கள் என்ற வழக்கு உண்டு. அதுபோலவே அனைத்திற்கும் மூலகாரணாய் சூரியன் இருக்கிறான். அவன் கொடைக்கு நிகரில்லை. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அவன் உதவியின்றி பிராணன் கிடைப்பதில்லை. ஆகவே சூரியன் சிவனானார்.
பரமன் மனைவி பார்வதி, சந்திரனுக்கு அதிதேவதை. பூமியை தாயைப் போல் குளிரூட்டும் கிரகம். சூரியனிடத்தில் வெப்பத்தை பெற்று குளிர்ந்த ஒளியாய் தந்து நீர் நிலைகளை பொங்க வைக்கும்.
இந்த இரண்டுகிரகங்களின் நிலை சாதகத்தில் - நல்ல முறையில் இருந்தால், ஒரு ஜாதகர் தன் இன பந்துக்களுடன் இனிதே வாழ்வான் என்பது உறுதி.
செவ்வாய் :சுப்ரமண்யர்
ஜாதகத்தில் வீரத்திற்கு இன்றியமையாதது செவ்வாய் பலம். இரும்பு கிரகம். உடல் பலத்திற்கு இன்றியமையாதது செவ்வாயின் நிலை.
வீரத்தில் சிறந்த தெய்வம் முருகன். சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சி தெய்வமும் இல்லை என்பது பழமொழி. அசுரர்களை தேவர்களுக்காக வதம் செய்த தெய்வம் முருகன். ஆதலால் செவ்வாய்க்கு அதிதேவதை சுப்பிரமணியர்.
புதன் :விஷ்ணு
ஒரே நேரத்தில் இருவேறு குணத்தைக் கொண்ட கிரகம். தற்சுழற்சி குறைவானது. தெய்வத்தில் இரு நிறம் கொண்ட தெய்வம் விஷ்ணு. அதுபோலவே ஒருபுறம் கடும் வெப்பமும் மறுபுறம் கடும் குளிரும் கொண்டது. எந்த கிரகத்தின் நேர்கோட்டில் 10 பாகைக்குள் உள்ளதோ அதன் குணத்தை பிரதிபலிக்க வல்லது. நியாயம் தவறாமல் கடமையை செய்வதற்கு இன்றியமையாதது இதன் நிலை.
குரு : பிரம்மா, தட்சிணாமூர்த்தி (குரு)
ஜாதகத்தில் கல்வி, கேள்வி, கீர்த்திக்கு வழிவகுக்கும் கிரகம். தற்சுழற்சி அதிகம் உள்ளது. இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடமே விருத்தியாகும். ஆசிரியர் போன்ற குணத்தை உடையது.
சுக்ரன் : லக்ஷ்மி, இந்திரன்
ஒரு ஜாதகத்தில மற்ற கிரகங்கள் நிலை கெட்டிருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வல்ல கிரகம் சுக்ரன். களத்திர காரகன். லக்ஷ்மியை போல் ஐஸ்வர்யத்தை கொடுக்கக் கூடிய கிரகம். ராஜயோகத்தையும், சுகபோக வாழ்க்கையையும், மனைவி வழி சொத்து சேர்க்கையையும் மனைவியின் குண நலத்தையும் கொடுக்கும். 8ம் இடத்திற்கு உரிய கிரகம். இந்திரன் குணத்தைக் கொண்டது. மழைக்கு காரணமான குளிர்ந்த கிரகம்.
சனி : எமன், சாஸ்தா
உஷ்ணத்தை பிரதிபலிக்கும் கிரகம். ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். சனி 0 பாகையில் குளிர்ச்சியை கொடுக்கும். அதனால் சாஸ்தாவிற்கு நிகராக சொல்லப்பட்து. ஆனால் பார்வை உக்கிரமானது. கொடுப்பதிலும், அழிப்பதிலும் சனிக்கு நிகர் சனியே வேறு கிரகம் இல்லை (ஆயுள் காரகன்).
ராகு: காளி, துர்கை
கருமாரியின் நிழல் கிரகம். சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் இதன் 0 பாகையில் சாதகத்தில் வரும்போது பலன் தருவது அரிது. கருமை நிறம் உடையது. ராகு, கேதுக்கு இடையில் மற்ற கிரகங்கள் உடைபட்டு விட்டால் கால சர்ப்ப யோகம், தோஷம் என்று கூறுவதுண்டு. சாதகனின் பிற்பட்ட காலங்களிலேயே பலன் கொடுக்கும். இளம் வயதில் அவதிகளை சந்திக்க நேரும். துஷ்ட குணத்துடன் கொடுக்க வல்ல கிரகம்.
கேது :விநாயகர், சண்டிகேஸ்வரர்

ஞானத்தை கொடுக்கும் கிரகம். ஒரு ஜாதகன் பிறக்கும்போது 0 பாகை ஜன்மத்திலிருந்தால் அந்த ஜாதகனுக்கு சித்தியையும் முக்தியையும் கொடுக்கும். நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாமலிருந்து பணி செய்வதில் வல்லமையைத் தரும். சோம்பல் சேர்ந்த திடீர் மாற்றத்தை தரவல்ல கிரகம். (நிழல் கிரகம்).

உடலுக்கு ஒன்பது வாசல் :

மனிதர்களுக்கு ஒன்பது வாசல் உள்ளது அவை ஒவ்வொன்றையும் கிரகம் ஆட்சி செய்கின்றது அவையானவன

1,சூரியன்-இடக்கண்
2,சுக்கிரன்-வலக்கண்வாசல்
3,சந்திரன்-வாய் வாசல்
4,புதன்-இடமூக்கு வாசல்
5,செவ்வாய்-வலமூக்கு வாசல்
6,வியாழன்-வலக் காதுவாசல்
7,சனி-இடக்காது வாசல்
8,இராகு-மலவாசல்
9,கேது-சிறுநீர் வாசல் ஆகும்

இவற்றுள் அடைக்கப்பட்ட வாயில் ஆகிய கொப்பூழை குளிகன் அல்லது மாந்தி ஆட்சி செய்கிறது! உயிர் பிரியும்போது எந்தத் திசை,எந்தப் புத்தி நடக்கிறதோ அதற்குரிய வாயில் வழியாக உயிர் பிரியும்!

நவரத்தினங்கள்:
1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.

பூதங்கள் ஐந்து வகைப்படும் :

1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)

மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும் :

1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.
வீடு பேறுகள் பதினாறு வகைப்படும்:
1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்..

புராணங்கள் பதினெட்டு வகைபடும்,

1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம்
14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம் 
16.மார்க்கண்டேய புராணம் 
17.பிரம்மாண்ட புராணம் 
18.பவிஷ்ய புராணம்.

இதிகாசங்கள் முன்று வகைப்படும்.:

1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.

Thursday, 25 May 2023

மொய் பணத்துடன் கூடுதலாக 1 ரூபாய் கொடுப்பது எதற்காக தெரியுமா? பலருக்கும் தெரியாத சுவாரஸ்சிய தகவல்!!



மொய் பணத்துடன் கூடுதலாக 1 ரூபாய் கொடுப்பது எதற்காக தெரியுமா? பலருக்கும் தெரியாத சுவாரஸ்சிய தகவல்!!

திருமண நிகழ்வு நிறைவடைந்த பின்னர் மொய் பணம் கொடுக்கும் போது 101 ரூபாய், 201 ரூபாய் என்று கூடுதலாக 1 ரூபாய் கொடுப்பதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான காரணம் உள்ளது. 

Why a 1 rupee coin added to a shagun envelope
திருமணம், கிரகபிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போதும் பணத்தை மொய்யாக கொடுக்கிறோம். அப்போது கூடுதலாக 1 ரூபாய் வைத்து கொடுப்போம். உதாரணமாக 51, 101, 501, 1001 என மொய் செய்வோம். அதுமட்டுமின்றி நன்கொடையாகக் கொடுக்கப்படும் பணத்தில் கூட ஏன் ஒரு ரூபாய் கூடுதலாக வைக்கப்படுகிறது என்பதற்குப் பின்னால் நம் முன்னோரின் ஆழ்ந்த சிந்தனை இருக்கிறது. இந்த பாரம்பரியத்தின் பின்னால் உள்ள காரணத்தை அறிந்து கொள்வோம்.  


Why a 1 rupee coin added to a shagun envelope
நாம் 50 அல்லது 100 ரூபாயை தசமங்களாகக் கொடுக்கும்போது, ​​இந்த எண்கள் பல இலக்கங்களால் வகுக்கப்படும். அதாவது அவை பிரிக்கப்படலாம். மேலும் 51 அல்லது 101 போன்ற 1 ரூபாய் கூடுதலாக வைக்கப்படும் போது இந்த எண் பிரிக்க முடியாததாகிவிடும். அதாவது எந்த இலக்கத்தாலும் வகுபடாது. இதன் உளவியல் அம்சம் என்னவெனில், மொய்யில் கொடுத்த காசு போல, நம் உறவு என்றும் நிலைத்திருக்கும், பிரிந்து விடக்கூடாது என்பது தான். அடடா! உறவை பிரிக்கக் கூடாது என மொய்யில் கூட இவ்வளவு நுணுக்கங்களை முன்னோர் யோசித்திருக்கிறார்களே..

Why a 1 rupee coin added to a shagun envelope
விழாக்களில் 51 அல்லது 101 ரூபாயை கொடுப்பதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் இருக்கிறது. இதன்படி, 50 அல்லது 100 ரூபாயின் கடைசி இலக்கம் பூஜ்ஜியமாகும். ஆனால் அதனுடன் 1 ரூபாய் சேர்ந்தால் அது 51 மற்றும் 101 ஆக மாறும், இதன் கடைசி இலக்கமான 1 என்பது ஒற்றுமையின் சின்னமாகும். உறவுகளில் எப்போதும் ஒற்றுமை இருக்க வேண்டுமே தவிர வெறுமையாக இருக்க கூடாது என்பதே அதன் காரணம். பூஜ்ஜியம் என்பது இறுதிக் குறிகாட்டி. அதே சமயம் 1 தொடக்கக் குறிகாட்டியாகும். தொடர்ச்சியை குறிக்கவே மொய்யில் ரூ. 101 என கொடுக்கிறோம்..


Why a 1 rupee coin added to a shagun envelope
சுப நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் மொய் பணம், ஒருவகை முதலீடு. நமக்கு தெரிந்தவர்களுக்கோ, உறவினர்களுக்கோ ஏதேனும் சுபநிகழ்ச்சிகள் வரும்போது, நமது சக்திக்கேற்ப, அவர்களுக்குப் பரிசாகவோ, பணமாகவோ வழங்குகிறோம். அதே நமது குடும்பத்தில் ஒரு சுபநிகழ்ச்சி வரும் போது, ​​இந்த அன்பளிப்புகளும், பணமும் நமக்கே திருப்பித் தரப்படுகிறது, அது அந்த நேரத்தில் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வழியில் பார்க்கும்போது, ​​​​பரிசு வழங்குவதும் ஒரு வகையான முதலீடாகும்.  



Why a 1 rupee coin added to a shagun envelope
நாணயம் பூமியில் இருந்து உருவான உலோகம், செல்வத்தின் கடவுளான லட்சுமியின் உருவகம். எனவே, நாணயங்களை ரூபாய் நோட்டுகளுடன் கொடுக்கிறார்கள். நாம் கொடுக்கும் மொய் காசு பூஜ்ஜியமாகிவிடாமல் தடுக்கும் பொருட்டு 1 ரூபாய் சேர்த்து கொடுக்கப்படுகிறது. இது வளர்ச்சிக்கான விதையாக செயல்படுகிறது. அதனால் தான் இந்தியர்கள் ஒத்தப்படை எண்களில் மொய் பணம் வழங்குகிறார்கள்.