jaga flash news

Wednesday 31 December 2014

புனர்பூ தோஷம் என்றால் என்ன ?

புனர்பூ என்றால் என்ன ? 
சந்திரன் , சனி - இரண்டுக்கும் சம்பந்தம் இருக்கிறதா ? என்று பாருங்கள். இரண்டும் ஒரே வீட்டில் சேர்ந்து இருந்தால் , அல்லது ஒருவருக்கொருவர் சம சப்தம பார்வை கொண்டு இருந்தால் ... ( அதாங்க -  சந்திரனில் இருந்து ஏழாம் வீட்டில் சனி இருந்தால் ) , அல்லது இரண்டும் பரிவர்த்தனை ஆகி இருந்தால்... அல்லது இரண்டு  கிரகமும் இருக்கும் நட்சத்திரங்கள் பரிவர்த்தனை ஆகி இருந்தால்...  ( அதாவது - பூசம் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்து , அனுஷம் நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது போலே... )

இந்த மாதிரி அமைப்பு இருப்பவர்கள் புனர்பூ தோஷத்தால் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள் என்பது பொருள். 


நீங்கள் பார்த்து இருக்கலாம் இருவீட்டிலும் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருப்பார்கள் நடத்திக்கொண்டு இருக்கும் போது திடிர் என்று திருமண பேச்சு முறிந்து விடும். சில பேருக்கு நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்திருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் திருமணம் நிச்சயதார்த்துடன் முடிந்துவிடும். சில பேருக்கு இந்த விசயத்தில் பெரிய பிரச்சினையை உருவாகி கோர்ட் கேஷ் என்று அழைந்துக்கொண்டுருப்பார்கள். இது எல்லாம் புனர்பூ தோஷத்தால் உருவாகிறது. சனியும் சந்திரனும் சேர்ந்து செய்கிற வேலை புனர்பூ தோஷம் உருவாகிறது. சனியும் சந்திரனும் ஒன்றாக சேர்ந்து இருந்தால் அல்லது சனியின் பார்வையில் சந்திரன் இருப்பது அல்லது இருவரும் ஒரு அதிபதி நட்சத்திரத்தில் பயணிப்பது இதனால் புனர்பூ தோஷம் உருவாகிறது. இதனால் பல பிரச்சினையை சந்திக்கிறார்கள் கடந்த வாரம் ஒரு வாடிக்கையாளரின் பையனுக்கு திருமண ஏற்பாட்டில் பிரச்சினை ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் சென்று வந்தார்கள் கடைசியில் இரண்டு லட்சம் அபராதம் கட்டிவிட்டு பிரச்சினையை முடித்து இருக்கிறார்கள். 
எதனால் இந்த தோஷம் ஏற்படுகிறது? 
என்ன வழக்கம் போல பூர்ம ஜென்மத்தில் பிரச்சினையால் வந்தது என்று சொல்லவேண்டியது  நமது வேலை. செல்போன் வந்த பிறகு இந்த தோஷம் நல்ல வேலை செய்கிறது நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு இருவரும் செல் நெம்பரை பரிமாறிக்கொண்டு பேசிக்கொள்வது. இந்த காலத்தில் இது சகசம் என்றாலும் இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை சண்டையாக மாற்றுவது இந்த புனர்பு தோஷத்தின் வேலை. இருவரும் சண்டையிட்டுக்கொண்டு நிச்சயதார்த்தவுடன் நின்றுவிடுகிறது. பரிகாரம் சோதிடத்தை பார்த்தாலே நாம் பரிகாரத்தை சொல்லிவிடவேண்டியது நமது கடமையாக இருப்பதால் நமது கடமையை சொல்லிவிடுவோம். குலதெய்வ வழிபாடு நல்லது செய்யும் அல்லது ராமேஸ்வரம் சென்று தரிசித்துவிட்டு வருவது நன்மை செய்யும். நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் செல்போனில் பேசும் போது கொஞ்சம் பொறுமையாக பேசவும் வாழ்க்கையில் நிறைய பேசவேண்டியிருப்பதால் திருமணத்திற்க்கு பிறகு பேசிக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்து குறைவாக பேசவும்.இதில் கூட பிரச்சினை எழுவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது பேசவே மாட்டேகிறார் என்னை பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன் அதனால் திருமணம் வேண்டாம் என்று சொல்வார்கள் அதனால் பேசுங்கள் பேசும்போது தவறியும் உண்மையை பேசிவிடாதீர்கள். உண்மையை பேசினால் எப்படி மாப்பு இப்படி திறந்த புத்தகமாக இருக்கிறீர்கள் என்று உங்களை விட்டுச்செல்ல உங்கள் வருங்கால துணைவர் முடிவு செய்வார். இந்த தோஷத்தை முடிந்தளவு தவிர்ப்பதற்க்கு இந்த வழி ஒன்று தான் உங்களுக்கு வழி செய்யும். புனர்பூ தோஷம் இருப்பவர்களுக்கு திருமண விஷயத்தில் என்ன நடக்கும் ? 

(1 ) திருமணம் காலதாமதமாவது 
(2 ) திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் தொடங்கி, நிச்சயத்திலும், திருமணத்திலுமே தடைகள் ஏற்படுவது,
(3 ) திருமண நிச்சயம் முறிந்து போவது,
(4 ) நிச்சயிக்கப்பட்ட திருமணத் தேதி தள்ளி வைக்கப்படுவது,
(5 ) மணப்பெண்ணோ மாப்பிள்ளையோ மாறிப் போவது,
(6 ) திருமணத்துக்கு போகும் வழியில் காலதாமதமாகிப் போவது
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 

பரிகாரம்  :

இந்த அமைப்பு இருப்பவர்கள் - திருமணஞ்சேரி  சென்று முறைப்படி பரிகார பூஜை செய்து கொள்வது நல்லது . வசதி இருப்பவர்கள் , யாராவது ஏழை , எளியவர்களுக்கு திருமணம் நடைபெற உதவி செய்யலாம்.

குலதெய்வத்திற்கு - முடிகாணிக்கை, படையல் செலுத்தி வழிபாடு செய்யலாம். 

தொடர்ச்சியாக மூன்று பௌர்ணமி தினங்களில் விரதம் இருந்து - திருவண்ணாமலை கிரிவலம் சென்று , மும்மூன்று முறையாக ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் , உடனடியாக பொருத்தமான வரன் அமையும். 

களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் வீடும் , குடும்ப ஸ்தானம் எனப்படும் இரண்டாம் வீடும் பாதிக்கப் பட்டிருந்தாலும், திருமணம் தள்ளிப் போகும். அவர்களுக்கும், மேற்கூறிய பரிகார முறை பொருந்தும்.

அனுபவத்தில், தெரிந்தோ தெரியாமலோ - யாருக்கேனும் திருமணம் நடைபெறும்போது குளறுபடி செய்தால் , விவாகரத்து செய்ய துணை நின்றால் - அவர்கள் சந்ததிக்கு , இந்த அமைப்பு ஏற்படுகிறது. ஒருவேளை, பூர்வ ஜென்ம தொடர்பாகவும் இருக்கலாம். 


No comments:

Post a Comment