jaga flash news

Sunday 30 July 2017

*அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு*

*அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு*
* வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு
போடுவது மட்டுமே*
அதிர வைக்கும்
பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்
பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக
இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு
உருவாக்க பட்டது தான்.
முடி வெட்டுவதில்
இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும்
சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி
உள்ளன.
வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள்
மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள்
கூட அதில் அடங்கி இருக்கும்.
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம்
அடங்கி இருக்கிறது.
இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு
தெரியுமா? என்பது நமக்கு தெரியாது.
பொதுவாக வெற்றிலை பாக்கு
சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில்
கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும்
சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும்
வலுப்படுத்துகிறது.
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான
காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும்
சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம்,
பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான
விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய்
வருகிறது. என்று சொல்கிறார்கள் இது
முற்றிலும் சரியான காரணமாகும்.
இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில்
அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து
நிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) உடம்பிற்கு வருகிறது.
இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம்
உதவி செய்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க
கூடியது.
சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை
போக்கவல்லது.
வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை
நீக்கி விடும்.
இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல்
என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று
தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.
இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம்,
கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள
கிருமிகளை மட்டுபடுத்துகிறது.
ஜீரண சக்தியை அதிகரிக்கவும்
செய்கிறது.
ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால்
இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.
அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு
முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.
தாம்பூலம்
போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக
மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு
சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக
மாறி விடுகிறது.
நமது முன்னோர்களின் தாம்பூலத்தில்
புகையிலை கிடையாது.
புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட
தீய பழக்கமாகும்.
இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய
அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு
ஆகும்.
சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின்
காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி
விடுகிறது.
பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே
மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.
ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு
முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு
சீக்கிரம் ஏற்படாது
இதற்கு காரணம்
அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு
குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக
கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.
தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட
நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க
பட்டிருக்கிறது.
காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும்
தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.
காரணம் மதிய நேரம் வந்து வெப்பம்
அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது
பாதுகாக்கும்.
அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து
அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில்
உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.
இரவில் வெற்றிலையை அதிகமாக
எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம்
தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க
வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.
இதை மீறும்
போது தான் சிக்கல் வருகிறது.
வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
நல்ல செய்திகளை அனைவரும் பகிரலாமே.....
Note:ஒருத்தருக்குமட்டும் பகிராமல் பலரும் பயன் பெரும் வண்ணம் பகிருங்கள்.டேட்டா இல்லை கமியா டேட்டா இருக்குனுட்டு பகிராமல் இருந்துவிடாதீர்கள்.
*நன்றி*

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மருத்துவம் என்றதும் எனக்கு ஒரு சில பாடல்கள் என் ஞாபகத்திற்கு வருகிறது.

    சிறுபஞ்சமூலம்.

    Authorship : காரியாசான் என்ற சமணப்புலவர்.
    இவரை மாக் காரியாசான் என்று பாயிரச் செய்யுள் *மா* எனும் அடைமொழி கொடுத்து சிறப்பிக்கிறது.

    இந்தநூல் பெயர்க் காரணம், பஞ்சம் என்றால் ஐந்து பொருள். தமிழ் மருத்துவத்தில் உடல்நோய்களைத் தீர்ப்பதற்கு, *கண்டங்கத்தரி, சிறுவழுதுணை,சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து மருந்தாக்குவது போல, 5 விஷயங்கள் மூலம் நீதியைப் போதித்து, இந்நூல் ஒழுக்கக்கேட்டுக்கு மருந்தாகிறது, என்று அனைத்துபாடல்களுமே (100) நீதியைப் புகட்டுவதாக அமையும்.

    அதில் ஒரு பாடல் எடுத்துவிடுகிறேன்.

    பாடல்: 37.

    Portrayal :

    மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும், உகிர்வனப்பும் காதின் வனப்பும் செயிர்தீரந்த பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த சொல்லின் வனப்பே வனப்பு.

    Stuff :சுருக்கமாக.

    மனிதன் சாதாரணமாக மயங்கும் அழகுகளை வர்ணித்து, பின் அவற்றைவிட நூலுக்கேற்ற சொல்லழகே சிறந்தது என்கிறார்.

    இந்த சிறுபஞ்சமூலம் என்பது, பதிணென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.





    ReplyDelete
  3. இதுபோல ஏலாதி நீதி நூல்களில் ஒன்று பதினெண்கீழ்க்கணக்கு நூல்.

    Authorship : கணிமேதாவியார் (சமண சமயத்தைச் சேர்ந்தவர்.

    ஏலாதியில் 81 பாடல்கள் உள்ளன.

    அதில் ஒன்று.

    Portrayal :

    இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில்வனப்பும் நடைவனப்பும் நாணின் வனப்பும் − புடைசால் கழுத்தின் வனப்பும் வனப்பல்ல− எண்ணோ(டு) எழுத்தின் வனப்பே வனப்பு.

    Stuff :

    இடையின் அழகோ, தோளின் அழகோ (R) ஈடு இல்லாத வேறு அழகுகளோ, நடை அழகோ, நாணத்தினால் ஏற்படும் அழகோ, கழுத்தின் அழகோ உண்மையான அழகு ஆகாது. எண்ணும், எழுத்தும் சேர்ந்த அதாவது கல்வியினால் ஏற்படும் அழகே அழகு என்பது பொருள்.

    இதை எதற்காக பகிர்ந்தேன் என்றால்,

    ஏலாதி, ஏலத்தை முதலாகக் கொண்ட இலவங்கம், சிறு நாவற் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களை பயன்படுத்திச் செய்யப்பட்ட *ஏலாதி என்னும் மருந்து* ஒன்றின் பெயரை வைத்து, ஏற்பட்டது.

    ஆறு நீதிகளைக் கூறி மக்களின் *ஒழுக்கக் குறைவுக்கு* மருந்தாவதால், இந்நூலுக்கு *ஏலாதி* என்ற பெயர் ஏற்பட்டது.

    இந்த பாடல் எத்தனையாவது பாடல் என்பது என் ஞாபகத்திற்கு வரவில்லை. மன்னிக்கவும்.

    ReplyDelete
  4. அய்யா! முக்கியமான ஒரு பாடலை விட்டுவிட்டேன். அதையும் கோர்த்துக் கொள்கிறேன்.

    திரிகடுகம்: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

    *திரிகடுகம்* என்பது 3 பொருட்களைக் குறிக்கும். அதாவது, சுக்கு, மிளகு, திப்பிலி.

    இம்மூன்றும், நம் உடலுக்கு நன்மை செய்வதுபோல், இப்பாடல் ஒவ்வொன்றும், மூன்று நீதிகள், அதாவது, மனிதனின் அறியாமையையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மைபெற உதவும் என்ற கருத்து அமைந்தமையால், இதனைத் *திரிகடுகம்* என்கிறோம்.

    Authorship: நல்லாதனார் என்னும் புலவர்.

    இது 101 வெண்பாக்களைக் கொண்டது.

    ஒவ்வொரு பாடலும், இம்மூன்றும் (R) இம்மூவர் என்றே வரும்.

    Morality : பாடல் : 6

    முந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு தந்தையும், தாயும் வழிபட்டு வந்த ஒழுக்கம் பெருநெறி
    சேந்தல் இம்மூன்றும் விழுப்ப நெறி தூராவாறு.

    Stuff :

    பிறர் தன்னை உயர்த்திப் பேசும்பொழுது, இது தகாது என்று நாணுதலும், தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும், மேகத்தைப்போல் கைம்மாறு கருதாமல் உதவி செய்தலும் சிறந்த செல்வமாகும்.

    ReplyDelete
  5. திரிகடுகம் பாடல் 56ஆவது பாடல் என்பதனைக் கருத்தில் கொள்க.


    ReplyDelete
  6. ஏலாதி பாடல் : 73.
    (இடைவனப்பும், தோள்வனப்பும் என்ற பாடல்.)

    ReplyDelete