jaga flash news

Tuesday 12 April 2016

காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி?

காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி?
காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.
காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.
தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும்.
பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும்.
ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.
ஜாக்கிரதையாகக் கையாளா விட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்.

1 comment:

  1. இன்னும், ஒரு அழகான வழி, வாயை மூடிக்கொண்டு, மூக்கை சிறிது நேரம் மூச்சுவிட முடியாதபடி இறுகப் பிடித்துக் கொண்டிருங்கள். பூச்சு தானாகவே வெளியே வந்து விடும். அதுமட்டுமல்ல, காதுக்குள் வாய்வு தொந்தரவால் அடைப்பு இருந்தாலும், இதுபோன்றே செய்யுங்கள், டப் என்ற சத்தத்துடன் அடைப்பு நீங்கிவிடும்.சற்று வலிக்கும் என்பதற்காக, வாயையும், மூக்கையும் திறக்கக்கூடாது. முயன்று பாருங்கள். காது மெல்லிய ஜவ்வு போன்றது. அதற்குள், எதையுமே விடக்கூடாது. மீறினால் ஜவ்வு கிழிந்துவிடும். கேட்கும் ஒலி திறனற்றுப் போய்விடும்.

    ReplyDelete