jaga flash news

Tuesday 5 April 2016

வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்

வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்

வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்

வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவில் கலந்து கொடுக்கும் வசிய மருந்து என இருக்கிறது...கொல்லிமலை மூலிகைகள் ,அரசு ஆலமர ஒட்டுண்ணி தாவரங்கள் மூலமாக வசிய மை அக்காலத்தில் தயாரிப்பார்கள்..இது பெரும்பாலும் பிரிந்திருக்கும் கணவன் மனைவியை ஒன்று சேர்ப்பதற்கும்,காதலை சேர்த்து வைக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது..ஆனால் பெரும்பாலும் கள்ளக் காதலுக்குத்தான் அதிக முக்கியத்துவம்..அழகான பக்கத்து வீட்டு பெண்ணை மயக்கணும் எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை என வரும் காமுகர்கள் தான் இந்த வசிய மருந்து வைத்தியர்களின் குறியாக இருந்திருக்கிறது...ஆனால் வசிய மை பொய்யில்லை..சில வைத்தியர்கள் போலியாக தயாரிக்கப்பட்ட வசிய மை,வசிய மருந்தை பணத்திற்காக விற்று விடுவார்கள்..

வசிய மை,வசிய மருந்து தயாரிப்பது பற்றி சித்தர்கள் பல நூல்களில் தெளிவாக எழுதி இருக்கின்றனர்..அவர்கள் சொன்ன மூலிகைகள்,சேர்க்கப்படும் பொருட்கள் தான் மறைபொருளாக இருக்கின்றன...

ஜோசியர்கள் பலரும் இதை அராய்ந்து இருக்கின்ரனர்..நிறைய பேர் இதை கொடுத்துக்கொண்டும் இருக்கின்றனர்..நானும் இதை பத்தி தெரிஞ்சிக்க நிறைய நூல்களையும் படித்தேன்..நிறைய பேரை சந்திச்சும் இருக்கேன்...தர்மபுரி பக்கம் ஒரு கிராமத்தில் ஒரு பெரியவர் இந்த மை கொடுப்பதாக சொல்லி வந்தனர்..ஒரு நண்பர் மூலமாக வாங்கி பார்த்ததில் அதில் சேர்த்தப்பட்ட சரக்கு மலிவானதாக இருந்தது..சேலம் பக்கமுள்ள கிராமங்களில் வசிய மருந்து சுலபமாக கிடைக்கும் என்றார்கள் அதிலும் நிறைய போலி...வசிய மை என்பது மயக்ககூடிய அல்லது அதிக வாசனை திரவியம் கலந்த திரவமாகவே இருக்கிறது..இது சரியல்ல..

பொதுவாக நெற்றியில் சன்ப்தனம்,குங்குமம் வைத்தாலே அது வசீகரமாக இருக்கும்...சந்தனம் என்பொஅது குரு...குங்குமம் என்பது செவ்வாய்...இது நம் மேல் ஒரு மரியாதையையும்,ஒரு நம்பிக்கையையும் நம்மை பார்ப்பவர்களிடத்தில் உண்டாக்கும்..இதனால்தான்...கோயில் பூசாரிகள்,அர்ச்சகர்கள்,ஆன்மீகவாதிகள்,சாமியார்கள்,ஜோசியர்கள் இதை நெற்றியில் திலகமாக இட்டுக்கொள்கின்றனர்...பெண்கள் நெற்றியில் குங்குமம் சிவப்பு நிறத்தில் இட்டுக்கொள்ளும்போது அவள் முகத்தை மட்டும் பார்த்து பேசும் கவன ஈர்ப்பை ஆன்களுக்கு உண்டாக்குகிறது..மரியாதையை,நல்லெண்ணத்தையும் உண்டாக்கும்...சிவப்பு எதிர்மறை எண்ணத்தை எதிராளிக்கு உண்டாக்காது..அதாவது கெட்ட எண்ணத்தை பார்ப்பவர்களிடத்தில் அவ்வளவு சீக்கிரம் உண்டாக்காது...இப்பல்லாம் துளியூண்டு ஸ்டிக்கர் பொட்டு வெச்சிக்கிறாங்க..அதெல்லாம் கணக்குல வராது..

நாயுறுவி வேரை வெள்ளிக்கிழமையில் பிடுங்கி பல் விளக்கினா பெண்கள் வசியம் ஆவாங்க என கவனகர் கனகசுப்புரத்தினம் ஒரு நூலில் எழுதியிருக்கார்...நாயுறுவி வேரை அரைச்சும்,அரச மரத்தில் கிளைகளில் ஒட்டுண்ணியாக சில தாவரங்கள் முளைத்திருக்கும் அவற்றை குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பறித்து,அரைத்து ,இன்னும் சில மூலிகைகளையும் கலந்துதான் வசிய மை,வசிய மருந்து தயாரிக்கப்படுகிறது...ஆலமரம் போல அரசமரம் போல இன்னும் சில மரங்களில் ஒட்டுண்ணிகள் முளைத்திருக்கும்..அவற்றை பிடுங்கி அரைத்துஉருண்டையாக உருட்டி காய வைத்து பிரிந்து இருக்கும் கணவன் ,மனைவிக்கு ரசம் இல்லாத உணவில் கலந்து கொடுத்தால் கனவன் அல்லது மனைவி மீது ஏக்கம் உண்டாகி ஒன்று சேர்வார்கள்....இதை சத்தியமங்கலம் காடுகளில் இந்த மூலிகைகளை பறித்து மருந்து தயாரித்து வந்த பர்கூர் மாதன் என்பவர் மூலம் அறிந்தேன்..அவர் மூலம் சிலருக்கும் கொடுத்தேன்..ஓரளவு பலனும் இருந்தது...அடிக்கடி அவரை பார்க்க முடிவதில்லை...

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. வசியம். மந்திரம் பற்றி இன்னும் தெளிவாக உங்கள் முகநூலில் எதிர்பார்க்கிறேன். R வேறு டாட் கம் தாங்கள் வெளியிட்டிருந்தால் தெரியப்படுத்துங்கள்.

    ReplyDelete
  4. பெண் வசியமருந்துவேண்டும்

    ReplyDelete
  5. கணவன் மனைவி ஒற்றுமைக்கு பக்கவிளைவு பின்விளைவு இல்லாத மூலிகை சத்துக்களில் தயாரிக்கப்பட்ட வசிய மருந்து கிடைக்கும் யாரை வசப்படுத்த வேண்டுமோ அவருக்கும் எதிர்ப்பவர் வசமாகிடவும், தண்ணீரில் கலந்து சாப்பிடகொடுத்து தானும் சாப்பிட்டு வர நன்மைகள் ஏற்படும்.!! ஸ்ரீமகாவித்யா யோக ஞானபீடம். கோவை!

    ReplyDelete