jaga flash news

Thursday 12 May 2016

பூண்டு மற்றும் தேன் ஓர் சிறந்த மருத்துவப் பொருளாக திகழ்ந்து வருகிறது.

பண்டையக் காலத்தில் இருந்து பூண்டு மற்றும் தேன் ஓர் சிறந்த மருத்துவப் பொருளாக திகழ்ந்து வருகிறது. எகிப்து, இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பல உடல்நலப் பாதிப்புகளுக்கு பூண்டு மற்றும் தேனை மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர்.
இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிகப்படியாக இவற்றை மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளதாக பல வரலாற்று கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது. அருமருந்தாக திகழும் இந்த இரண்டின் கலவையும் சிறந்த நோய் தீர்க்கும் மருந்து என கூறப்படுகிறது…..

தேவையான பொருட்கள்

தனித்தனியாக உரித்து எடுக்கப்பட்ட பூண்டு விழுதுகள் 20. தூய்மையான தேன் ஓர் ஜாடி அளவு (பூண்டு நன்கு மூழ்கும் அளவிற்கு)
செய்முறை
பூண்டு விழுதுகளை அந்த ஜாடியில் போட்டு, அதன் மேல் பூண்டுகள் அனைத்தும் நன்கு மூழ்கும் அளவிற்கு தூய்மையான தேனை ஊற்றி ஊற வைக்கவும். ஒரு வாரக் காலம் இதை ஊற விடுங்கள். (ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வந்தால் ஒரு வருடம் வரை இது கெடாமல் இருக்கும் தன்மையுடையது)
நன்மைகள்
சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்கவும், இவைக்கான சிறந்த மருந்தாகவும் இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது.
garlic-honey
உட்கொள்ளும் முறை
தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதுமானது. ஒரு நாளுக்கு ஐந்தில் இருந்து ஆறுமுறை இதை அரை டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம்.
உட்கொள்ளும் நேரம்
உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். எனவே தான் காலையில் எழுந்ததும் உட்கொள்ள கூறப்படுகிறது. பிறகு நற்பகல், மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம்.

பூண்டு

பண்டைய காலம் முதலே பூண்டு வெறும் உணவாக இன்றி, மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தி வரப்படுகிறது. எகிப்தில் இருந்து நமது தமிழ் கலாச்சாரம் வரை பூண்டை ஓர் மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தியுள்ளனர்.
பண்டைய கிரேக்கம்
பண்டைய கிரேக்கத்தில் விளையாட்டு மற்றும் போர் வீரர்களின் உடற்திறனை மேம்படுத்து பூண்டை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பூண்டு இதயம் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்கவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
தேன்
உடல் எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது தேன். உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருகலாம்.

2 comments:

  1. பூண்டு, அன்றாட உணவில், நாம் சேர்த்துக் கொண்டாலே நோய் கிட்ட நெருங்காது. சிலர் சுவைக்காக, 2, 3 பூண்டு பல் சேர்ப்பார்கள் அவ்வாறில்லாமல், கொஞ்சம் கூடுதலாக சமையலில் சேர்த்துக் கொண்டால் நலம். ஒரு வாரம், அதிக பூண்டுகளை, உரித்துப் போட்டு, ஒரு வெந்தயக்களி. அடுத்த வாரம், அதிகப் பூண்டுபோட்டு,உழுந்தங்களி,அதற்
    கடுத்த வாரம், பாலில் அதிகப் பூண்டுகள் உரித்துப் போட்டு, வேகவைத்து, மசித்து, அந்த பாலை அதிகாலை காப்பிக்குப் பதிலாக அருந்தலாம். இன்னும் கீரையில் அதிகம் பூண்டுசேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு உணவில், பூண்டுகள் சேர்த்துக் கொண்டாலே, இருதய நோய் உள்ளவர்கள், ஆங்கில மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் ஒன்று கவனிக்க படவேண்டிய விஷயம், இருதய நோய் உள்ளவர்கள், கார்ப்பு, புளிப்பு, உப்பு இம்மூன்றின் அளவை மிகக் குறைவாக
    உணவில் சேர்த்து, பூண்டு அதிகம் சேர்த்துக் கொண்டால் மட்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்காது. இந்தப் பூண்டை வாரம் ஒரு முறை, அதிகம் உரித்துப்போட்டு, உளுந்தங்
    கஞ்சி வைத்தும் சாப்பிடலாம். உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காது. எந்த உணவானாலும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

    ReplyDelete
  2. தேன், 5மாத குழந்தையிலிருந்தே கொடுக்கலாம். இரும்புச்சத்து அதிகம்.
    இருமல் உள்ளவர்கள், ஒரு டீஸ்பூன் தேனை தினசரி அதிகாலையில் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு, இட்லிக்கு, சட்டினி வைத்துக் கொடுப்பதற்குப் பதிலாக தேனைத் தொட்டுக் கொடுக்கலாம். ஆனால் சுத்தமானத் தேனாக இருக்க வேண்டும். வீட்டில் தேன்கூடு வைத்து தேனி வளர்பவர்களிடம், நாம் நேரில் போய் வாங்கினால், கலப்படம் இல்லாமல் கிடைக்கும். உங்கள் குரல் இனிமையாக இருக்க வேண்டும் என்றால் தேன் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு சில மருந்துகள் கொடுக்கும்போது, தேனில் குழப்பி கொடுக்க, சளி குணமாகும். இவ்வாறு பண்டைய காலத்தில் தேன் இல்லாத வீடே கிடையாது என்றுகூட சொல்லலாம்.

    ReplyDelete