jaga flash news

Saturday 10 December 2016

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்'

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்'
இதை சொன்னவர் திருமூலர்.
சரி.. முதல் வரி தெரியும், 
மற்ற வரிகள் என்ன...?
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே...! என்கிறார் திருமூலர்.
ஒன்றே குலம் அதாவது உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என ஒன்றும் கிடையாது.... எல்லோரும் ஒரே குலம். கடவுள் ஒருவன் தான். நிறைய கடவுள்களெல்லாம் கிடையாது. நல்லதே நினைக்க வேண்டுமாம் இது நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும் சேர்த்து தான் சொல்கிறார். அதாவது, அப்படி எல்லோருமே எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பே கிடையாது. இதை வெட்கப் படாமல், நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை என்று சொன்னவர் உங்களுடைய சித்தத்தில் எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள் அதாவது ஒன்றே குலம் என்பதன் மூலம் உடல் அளவில் எல்லோரும் ஒன்று என்றார். ஒருவனே தேவன் என்பதன் மூலம் மனதளவிலும் மனிதர்களுக்கு இடையில் எந்தப் பிரிவும் கூடாது என்றார்.
ஓம் நமச்சிவாய.
திருச்சிற்றம்பலம்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Who is author this poem?
    Please replay me i want to know 😔😔😔

    ReplyDelete