jaga flash news

Tuesday 23 May 2017

குழந்தைகள்:

குழந்தைகள்:
உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்ல. 
அவர்கள், வாழ்கை தனக்கென்று வேண்டிய குழந்தைகள்.
அவர்கள் உங்கள்மூலமாக வந்திருக்கிறார்கள்: உங்களிடமிருந்து அல்ல.
அவர்கள் உங்களுடன் இருந்தாலும், உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல.
உங்கள் அன்பை அவர்களுக்கத் தரலாம், "உங்கள் எண்ணங்களை அல்ல".
அவர்களுக்கென்று தனி சிந்தனைகள் உண்டு.
அவர்களின் உடல்களுக்குதான் நீங்கள் பாதுகாப்பு தரமுடியும். ஆன்மாக்களுக்கல்ல.
அவர்களின் ஆன்மாக்கள் நாளைய வீட்டில் வாழ்பவை, அங்கே நீங்கள் செல்ல முடியாது, உங்கள் கனவிலும் கூட.
அவர்களைப் போலிருக்க நீங்கள் முயற்சி செய்யலாம், ஆனால், அவர்களை உங்களைப்போல் ஆக்கி விடாதீர்கள்.
வாழ்க்கை பின்திரும்பிச் செல்லாது; நேற்றுடன் ஒத்துப்போகாது.
நீங்கள் விலகல். உங்களிடமிருந்து எய்யப்பட்ட உயிருள்ள அம்புகளே குழந்தைகள்.
எல்லையின்மை என்னும் பாதையில், ஒரு குறியிடத்தை வில்லாளி காண்கிறான். உங்களை அவன் வளைக்கின்றான் அவன் சக்தியால், அவன் அம்பு நெடுந்தூரம் விரைந்து செல்ல.
வில்லாளியின் கரங்களில் உங்கள் வளைவு, மகிழ்ச்சிக்காக இருக்கட்டும்.
அவன், பாய்ந்துசெல்லும் அம்பை மட்டும் நேசிப்பதில்லை, நிலையாக நிற்கும் வில்லையும்தான் நேசிக்கிறான்

2 comments: