jaga flash news

Sunday 13 August 2017

“செல்வசெழிப்புடன் என்றும் இருக்க ரகசியங்கள்”

“செல்வசெழிப்புடன் என்றும் இருக்க ரகசியங்கள்”
வெறும் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது.
வடக்கு பார்த்து சாப்பிடக்கூடாது.
மாலை ஐந்து மணிக்கு மேல் தயிர் சாப்பிடக்கூடாது.
நெல்லிக்காய் ,அகத்திக்கீரை மாலை ஐந்து மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது.
வியாழன், வெள்ளி, சனி, முடி வெட்டுதல் நகம் வெட்டுதல் கூடாது.
திங்கள் கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரை தண்ணீர் முதல் கொண்டு ஏதும் சாப்பிடக்கூடாது.
சனிக்கிழமை காலை ஆறுமணி முதல் ஏழு மணிக்குள் சுத்தமான நல்லெண்ணெய்யை ஆண்கள் இடது காலிலும் பெண்கள் வலது காலிலும் தடவினால் பணம் வந்துகொண்டே இருக்கும்.
வியாபாரம் தொழில் செய்யும் இடத்தில் ஐந்து முக ருத்ராட்சம் வைத்து பூஜித்தால் வியாபாரம் தொழில் அமோகமாக நடக்கும்.
வீட்டில் மல்லிகை செடி வில்வம் துளசி வளர்க்க பெரும் செல்வம் ஏற்படும்.
தினமும் மல்லிகை பூவை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் சேரும்.
வீட்டின் வாசற்படியில் நற்பவி என்று எழுதிவைத்தால் நன்மைகள் வந்து சேரும்.
மயில் தோகையை வீட்டில் வைக்க பற்பல நன்மைகள் உண்டாகும்.
வீட்டில் பப்பாளி மரம் கறிவேப்பிலை மரம் வளர்க்க கூடாது ,
பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை ஆண்களையும் பாதிப்படைய செய்யும்.
முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது.
ஏகாதசி நாள் அன்று விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

1 comment:

  1. பயனுள்ள தகவலுக்கு நன்றி.

    ReplyDelete