jaga flash news

Sunday 13 August 2017

!!**வாழ்க்கையின் உண்மை**!!

!!**வாழ்க்கையின் உண்மை**!!
ஞானி ஒருவர் கோயில் ஒன்றில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இடையே நகைச்சுவை ஒன்றைச் சொன்னார். கூட்டத்தில் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அதே நகைச்சுவையை மறுபடியும் சொன்னார். இம்முறை கொஞ்சம் பேர் மட்டும் சிரித்தனர். அதே நகைச்சுவையை இடையிடையே சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் யாருமே சிரிக்காமல் அமைதியாய் இருந்தனர். ஞானி சொன்னார், திரும்பத் திரும்ப கேட்ட ஒரு நகைச்சுவைக்கே சிரிக்க முடியாத உங்களால், என்றோ நடந்து முடிந்த துயர சம்பவங்களை மட்டும் நினைத்து, எப்படி திரும்பத் திரும்ப அழ முடிகிறது ? ஒரே விஷயத்திற்காக எப்படிப் பல காலம் பகையும் வன்மமும் கொள்ள முடிகிறது?
"அந்த இடமே ஆழ்ந்த அமைதியானது"..
"கூட்டத்தினர் யோசிக்கத் தொடங்கினர்"..

1 comment:

  1. சிந்தனைத் துளிகள் மிகவும் அருமை.

    ReplyDelete