jaga flash news

Sunday 17 May 2020

அஸ்வகந்தா மருத்துவ பலன்கள்

அஸ்வகந்தா அதிகம் நம் வாழ்க்கையில் பயன்படுத்த மறந்து இருப்பது அதே நேரத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டியது.அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவ குணங்கள் கொண்டது.வட மொழியில் அஸ்வகந்தா தமிழகத்தில் இதன் பெயர் அமுக்கிரா கிழங்கு.இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகை உண்டு.சீமை அமுக்கிரா கிழங்கே சிறந்தது என்று பாரம்பரியம் பரிந்துரைக்கிறது.மூலிகை வயாக்ரா என்று இதற்கு இன்னொரு பெயரும் உண்டு .

பழமையான மூலிகையான அஸ்வகந்தாவை நம்முடைய முன்னோர்கள் ஆயுர்வேத முறையில் ஞாபகமறதியை சரி செய்ய பயன்படுத்தி வந்தனர்.இதில் இயற்கையாகவே நினைவு திறனை அதிகரிக்கும் பண்பு உள்ளது.நம்முடைய உடலுக்கு தேவையான வேதி பொருட்கள் புரதங்கள்,அமினோஅமிலங்கள் இதில் நிரம்பியுள்ளதால் இது நமக்கு நல் ஆற்றலை தருகிறது.


 
ஆண்மையை அதிகரிப்பது மட்டுமல்ல,அஸ்வகந்தா நம் மூளையின் நேர்மறை செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.மூளையில் ஏற்படும் அழற்சி,வயோதிகம் போன்றவற்றை கட்டுப்படுத்தும்.நமது உடலில் உள்ள Free radicals ஐ வெளியேற்றி உடலை ஊக்கமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இது உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும். உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளை அஸ்வகந்தா சீர் செய்யும்.

இதன் உறுப்புகளில் இருந்து நமக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.மேலும் இதில் உள்ள வித்தனாய்டு மற்றும் சோம்னிட்டால் சத்துக்கள் நம்முடைய மனஅழுத்தத்தை குறைத்து நம்மை தேவையற்ற சிந்தனையில் இருந்து தடுக்கிறது. எனவே இதனை நம் வீட்டிலே வளர்ப்பது மிகவும் அவசியமானது.இதனை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.


 
அஸ்வகந்தா வேரில் உள்ள சத்துக்கள் நம்முடைய இதயத்திற்கு சத்து மருந்தாக பயன்படும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.மேலும் கண்களின் ஆரோக்கியத்திற்கும் கண் பார்வை மேம்படவும் உதவி புரிகிறது.உடலில் தேங்கும் கெட்ட கொலட்ராலை குறைத்து,இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

அஸ்வகந்தா இலைகளை அரைத்து அதன் சாறை நம்முடைய காயங்களுக்கு மேல் தடவினால்  விரைவில் குணமாகும். அதே போல் இதன் வேர் சாறை நம்முடைய உடம்பில் அடிபட்டோ வேறு காரணத்தாலோ ஏற்பட்டிருக்கும் வீக்கங்கள் மேல் தடவினால் அந்த வீக்கம் விரைவில் கரையும். 

அஷ்வகந்தா பொடியை அன்றாடம் உண்டு வந்தால் நமது நரம்பு மண்டலமும் வலுவாகிவிடும்.மேலும் மலட்டுத்தன்மையும் நீங்கும்.காலையில் அஸ்வகந்தா வேரின் பவுடரை சிறிதளவு நெய் அலலது தேன் கலந்து சாப்பிட்டு வருவது சரியாய் இருக்கும்.


 
ஆண், பெண் இரு பாலருக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படும் அஸ்வகந்தா உச்சி முதல் பாதம் வரை பல நன்மைகளை செய்யக்கூடியது.
அஷ்வகந்தாவிற்கு கெட்ட கிருமிகளை முற்றிலும் அழிக்கும் குணம் உள்ளது.அதனால் இது சிறுநீரக இரைப்பை-குடல் மற்றும் சுவாச தொற்றுகளை குணப்படுத்துகிறது.
புற்று நோய் செல்களையும், புற்றுநோய் கட்டிகளையும் அழிக்கும் தன்மை உள்ள இது உடலை கீமோதெரபியின் பக்க விளைவுகளிலிருந்தும் காக்கிறது.
தொடர்ந்து 4 வாரங்கள் அஸ்வகந்தாவை உட்கொண்டுவந்தால் நீரழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் அதிகமாகி இருக்கும் சர்க்கரை அளவு குறையும்.
அஸ்வகந்தா தைராய்டு சுரப்பை அதிகப்படுத்துகிறது இதன் மூலம் ஹைப்போ தைராய்டு பிரச்சனையை சரி செய்து கொள்ளலாம்.
சரி எப்படி இதை உண்ண வேண்டும்:-

பாரம்பரியம முறைப்படி அஷ்வகந்தா பொடியினை வெதுவெதுப்பான பசும்பால் மற்றும் சுத்தமான மலைத்தேனுடன் கலந்து இரவு உறங்கும் முன் உட்கொள்கிறார்கள்.பொதுவாக கால் அல்லது அரை தேக்கரண்டி அளவு பொடியை ஒரு நாளிற்கு ஒன்று அல்லது இரண்டு முறை என்ற அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.தேனிற்கு பதிலாக நாட்டு சர்க்கரையையும் சேர்த்துக்கொள்ளலாம்,

பொதுவாக அஷ்வகந்தாவை டீயில் கலந்து உட்கொள்வது பரவலாக பின்பற்றப்படுகிறது.

சித்த மருந்து கடைகளில் அஸ்வகந்தா லேகியம் எளிதாக கிடைக்கும்.பவுடராகவும் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்துங்கள் அதன் மூலம் தாம்பத்திய உறவில் இருக்கும் சிக்கல்களை தவிருங்கள்.அழகான வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் அஸ்வகந்தா அருமையான செழுமையான மூலிகை இதை உட்கொள்பவர்களுக்கு உடல் பலம் உயர்ந்து கொண்டே இருக்கும் என்றால் அது மிகையல

No comments:

Post a Comment