jaga flash news

Tuesday 26 May 2020

நோய் #எதிர்ப்பு #சக்தி #அதிகரிக்க. #கொய்யா #இலைக் #குடிநீர் :

#நோய்  #எதிர்ப்பு  #சக்தி #அதிகரிக்க. #கொய்யா #இலைக்  #குடிநீர் : 

 கொய்யா மரத்தின் பழத்தை விட அதன் இலைகளுக்கு தான் மருத்துவக் குணங்கள் அதிகம் உள்ளன.  அடிக்கடி  சளிப்பிடிக்கும் நோயாளிகளும் ,  ஆஸ்துமா நோயாளிகளும் கொய்யாப் பழத்தைச் சாப்பிடக் கூடாது. மற்றவர்கள் தினம் ஒரு கொய்யாப் பழம் சாப்பிடலாம். கொய்யாப் பழம் #மலச்சிக்கலை நீக்க வல்லது. 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்புச் சுவை உடைய கொய்யா பழத்தைச்  சாப்பிடக் கூடாது. அவர்கள் துவர்ப்பு சுவை உடைய கொய்யாக் காயைச் சாப்பிட வேண்டும்.

#கொய்யா  #இலையின் #பயன்கள் :

கொய்யா மரத்தின் ஆங்கிலப் பெயர் Guava.

தாவரவியல் பெயர்:
 Psidium guajava .

#தன்மை : குளிர்ச்சி
#சுவை :  துவர்ப்பு

#கொய்யா #இலைக் #குடிநீர் :

பச்சையான 8 கொய்யா இலைகளைப் பறித்து வந்து, ஒரு பாத்திரத்திலிட்டு  அதில் 500 மி.லி நீர்விட்டு பாதியாக வற்றக் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி இளம்சூட்டில்  காலை உணவிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில்  குடிக்கவும்.
இதேபோல் குடிநீர் செய்து மாலையிலும் குடிக்கவும். இவ்வாறு 3 மாதங்கள் தொடர்ந்து  குடித்துவர #சர்க்கரைநோய் கட்டுப்படும். 

சர்க்கரை நோய்க்கு ஆங்கில மாத்திரை  சாப்பிடுபவர்கள் அந்த மாத்திரைகளை உணவிற்கு பின்பு சாப்பிட்டு, இந்த குடிநீரை உணவிற்கு முன்பு குடித்து வரலாம்.
ஆரம்பநிலை சர்க்கரை நோய்க் காரர்களுக்கு இந்த கொய்யா இலைக் குடிநீரே நல்ல பலனைத் தரும்.!

கொய்யா இலைக் குடிநீரை தினமும் காலை,மாலை குடித்துவர #கீழ்க்காணும் #நோய்கள் #குணமாகும்.

1. நீரழிவுநோய் (டைப்-2)  கட்டுப்படும்.
2. உயர் இரத்தழுத்தம் ( B.P)    சீராகும்.
3. மலச்சிக்கல் நீங்கும்.
4. மூலநோய்க் குணமாகும்
5. இரத்தமூலம் நீங்கும்
6.தீராத வயிற்றுவலி தீரும்
7.அதிக உடல் பருமன் குறையும்.
8. குறை தைராய்டு என்ற ஹைப்போ தைராய்டு சீராகும்.
9.கெட்ட கொழுப்பை (L.D.L),(T.G.L) கரைக்கும்.
10.மாத விடாய்கால அதிக இரத்தப் போக்கை நிறுத்தும்.
11. பெண்களுக்கு வெள்ளைப்படுதலை குணமாக்கும்
12. கருப்பை, சினைப்பை நீர்க்கட்டிகளை கரைக்கும்
13. கருப்பை நோய்களை நீக்கி குழந்தைப் பேறு கிடைக்க வழிவகுக்கும்
14. ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்கும்
15. விந்தணு குறைபாட்டை போக்கும்.
16.விரை வீக்கத்தைக் குணமாக்கும்.
17.பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தைக் குறைக்கும்.
18 புற்றுநோய்கள் வராமல் தடுக்கும்.
19. மஞ்சள் காமாலையைக் குணமாக்கும்.
20. கல்லீரல் நோய்களை நீக்கும்.
21. சிறுநீரை நன்கு பிரிக்கும்.
22. சிறுநீர் சம்மந்தப்பட்ட நோய்களை குணமாக்கும்.
23.நீரடைப்பு,சதையடைப்பு நீங்கும்.
24. வாந்தி நிற்கும்
25. நெஞ்சு எரிச்சல் நீங்கும்
26.வயிற்று உப்பிசம் நீங்கும்.
27.வயிறு எரிச்சல் நீங்கும்
28. வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் குணமாகும்.
29. வாய்ப்புண், தொண்டைப்புண்,வயிற்றுப் புண்கள் ஆறும்.
30. குடிபோதை வெறி தணியும்.
31. மது மீது நாட்டம் குறையும்.
32.கிருமிகளால் வரும் வயிற்றுப் போக்கை நிறுத்தும்.
33. சூட்டினால் வரும் இருமல் குணமாகும்.
34. இதய நோய்கள் குணமாகும்.
35. நன்கு பசி எடுக்கும்.
36. செரியாமை நீங்கும்.
37. அடிக்கடி ஏப்பம் வருதல் குணமாகும்.
38. தலைச்சுற்றல்,மயக்கம் சீராகும்.
39.காலரா கட்டுப்படும். (தினம் 4வேளை குடிநீர் குடிக்க வேண்டும்)
40. வயிற்றில் கெட்ட கிருமிகளை அழிக்கிறது.
41. உடல் சோர்வைப் போக்குகிறது.
42. மூளையை பலப்படுத்துகிறது.
43. தோல்நோய்களை குணமாக்குகிறது.
44. இரத்தத்தை சுத்தமாக்குகிறது.
45. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
46.தூக்கமின்மையைப் போக்குகிறது.
47. மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
48.பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணமாக்குகிறது.
49.மூட்டு எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.
50.நரம்புத் தர்ச்சியைப் போக்குகிறது.
51.கண்பார்வைத் திறனை அதிகரிக்கிறது.
52. கெட்ட பாக்டீரியா, பூஞ்சைகளை அழிக்கிறது.
53. நினைவாற்றலை அதிகரிக்கிறது.
54. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கின்றது.
55. உடலுக்குத் தேவையான  உயிர்ச் சத்துக்களும் (வைட்டமின்) தாது உப்புக்களும் நிறைந்தது.ஆகவே இளநரையைத் தடுக்கும்.
56. வைட்டமின் "C 'பற்றாக் குறையினால் வரும் #ஸ்கர்வி நோய் வராமல் தடுக்கிறது.

#வயிற்றுப்போக்கு #நிற்க:

4 கொய்யா இலைகளை  பறித்து கழுவி,  அம்மியில் வைத்து நீர்விட்டு நன்கு அரைத்து அவ்விழுதை  ஒரு தம்ளர் மோரில் கலந்து குடிக்கவும். இவ்வாறு தினம் 3 வேளை குடித்துவர வயிற்றுப்போக்கு விரைவில் குணமாகும்.

மேற்கூறிய நோய்கள் அனைத்தும் #பித்தநோயில்
 அடங்கும்.

இனி #கபம் ( சளி) நோய்களை  எவ்வாறு போக்கலாம் என்று பார்ப்போம்.!

கொய்யா இலைகள் - 5
இஞ்சி        - 5 கிராம்
ஏலக்காய்  - 2 
மிளகு        - 10 
நீர்             -    2 தம்ளர்

இவற்றை ஒரு பாத்திரத்திலிட்டு 2 தம்ளர் நீர் ஒரு தம்ளராக வற்றும் படிக் காய்ச்சி காலையில் உணவிற்கு முன்பு அல்லது உணவிற்கு பின்பு குடிக்கவும்.

இதேபோல் மாலையிலும் குடிக்க வேண்டும். இவ்வாறு தினம் 2 வேளை இக்கசாயத்தைக் குடித்து  வர சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா ஆகியன தீரும்.

#செய்முறை:
பச்சையான கொய்யா இலைகளை 5 பறித்து வந்து அதைக் கழுவி, ஒரு பாத்திரத்தில் இட்டு, அதனுடன் உங்கள் கட்டைவிரலுக்கு பாதியளவு   தோல் சீவிய இஞ்சியை தட்டிப் போட்டு, ஏலக்காய் 2 எண்ணிக்கை எடுத்து அதையும் நன்கு இடித்துப் போட்டு,10 எண்ணிக்கை முழு மிளகையும் இட்டு, 400 மி.லி நீர் விட்டு பாதியாக வற்றக் காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் உணவிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு  குடிக்கவும். வயிற்றுப்புண் உடையவர்கள் காலை உணவிற்குப் பின்பு குடிக்கவும். 

இவ்வாறு தினம் காலை, மாலை என 2 வேளை குடித்துவர 
கபம் (சளி) நோய்களும், மூட்டுவலி போன்ற வாத நோய்களும் படிப்படியாக  குணமாகும்.

#பல்நோய்கள்   #தீர:
காலையில் மூலிகைப் பற்பொடியால் பல்தேய்த்த பின்பு வெறும் வயிற்றில் 
3 இளம் கொய்யா இலைகளை வாயிலிட்டு நன்கு மென்று விழுங்கி அதன் சாற்றைக் குடித்துவர

1.பல்வலி நீங்கும்.
2. பற்களில் சொத்தை வராமல் தடுக்கும்.
3. வாய்துர்நாற்றம் நீங்கும்.
4. ஈறு வீக்கம் வற்றும்.
5. பல்லீறுகள் பலப்படும்.
6. பல்லீற்றில் இரத்தம் வடிதல் நிற்கும்.
7.வாய்ப்புண், நாக்குப்புண், தொண்டைப்புண் ஆறும்.

#முகம் #பொலிவு #பெற:

கொய்யா இலைகளை 5 பறித்து நீர் விட்டு நன்கு அரைத்து,  இதை 2 தேக்கரண்டி தயிரில் குழைத்து பசைபோல் ஆக்கி பெண்கள் முகத்திற்கு பூசி ஒருமணி நேரம் கழித்து முகம் கழுவி வர

1. முகப்பருக்கள் நீங்கும்.
2.முகத்தில் கறும்புள்ளிகள் மறையும்
3.முகச் சுருக்கம் நீங்கும்.
4. முகம் பொலிவு பெறும்.

#வெட்டுக்காயம் #ஆற:

கொய்யா இலைகளை அரைத்து வெட்டுக்காயத்தின் மீது கட்டிவர காயங்கள் விரைவில் ஆறும்.

#தலைமுடி  #உதிர்தல்  #நிற்க :

முதலில்  கூறிய கொய்யா இலைக் கசாயத்தை தயார் செய்து அதை ஆறவைத்து பெண்கள் இதை தலையில் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் ஊறவைத்து குளித்துவரவும். இவ்வாறு வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்துக் குளித்துவர

1.தலைமுடி உதிர்தல் நிற்கும்.
2.பொடுகு நீங்கும்
3. தலை அரிப்பு நீங்கும்.
4.பேன்கள் நீங்கும்
5.தலைமுடி வெடித்தல் சரியாகும்
6.தலைமுடி பலம் பெறும்.
7.முடி அடர்த்தியாக வளரும்.

#கொய்யா #இலையில் #உள்ள #சத்துக்கள்:

1. நார்ச்சத்து 
2.வைட்டமின் A, B 6, C
3.கால்சியம்
4. இரும்புச்சத்து
5.பாஸ்பரஸ்
6.சோடியம்
7.பொட்டாசியம்
8.துத்தநாகம்
9. மாங்கனீசு
10. தாமிரம்
11. ஃபோலிக் அமிலம்.
12. டானின்கள்
13.கரோட்டினாய்டுகள்
14.ஃபிளேவனாய்டுகள்
15. புற்று நோயை எதிர்க்கும் மூலப்பொருட்களான லைக்கோபீனே ( Lycopene) 
க்வெர்செடின் (Quercetin)
பாலிபினால்கள் ஆகியவை உள்ளன.ஆகவே இவை நுரையீரல் புற்று, வாய்ப்புற்று, வயிற்றுப்புற்று, பெருங்குடல் புற்று, ஆண்களின் ப்ராஸ்டேட் சுரப்பிப் புற்று, 
பெண்களின் மார்பகப்புற்று,  ஆகியவற்றைத் தடுக்கிறது.

16. வயதான தோற்றத்தை எதிர்க்கும் பண்புடைய கொலைன் என்ற சத்தும் இந்த கொய்யா இலையில் உள்ளது. ஆகவே இது ஆயுளை நீடிக்கும்.

#கீரீன் #டீயை #விட #இது #சிறந்தது:

பத்தியம் இல்லாத பக்கவிளைவுகள் அற்ற எளிதில் கிடைக்கும் இந்த கொய்யா இலையின் பயன் நமக்குத் தெரிவதில்லை. ஆனால் கிரீன் டீ யை இன்று  கிலோ 1000 ரூபாய்க்கு வாங்கிப் பயன்படுத்துகிறோம். இனிவரும் காலத்தில் இந்த கொய்யா இலை டீ பிரபலமாகும்.  அதற்கு திருமுனிவரின் இந்த கட்டுரை மிக முக்கிய காரணமாகத் திகழும்.

ஆகவே இந்த கொய்யா இலைகளை நாம் பறித்து உலர்த்தி இடித்து  கிரீன் டீ வடிவில் கொண்டு வந்தால் இந்தியாவில் நல்ல விற்பனை செய்யலாம்.

பொதுவாக கொய்யா இலையை பச்சிலையாக பறித்து நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் 100% பலன் கிடைக்குமென்று வைத்துக் கொண்டால் இதை காயவைத்து டீத் தூள் வடிவில் பயன்படுத்தும் போது 90% அளவு பலன் கிடைக்கிறது.

கிரீன் டீயை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. உணவு சாப்பிட்ட  1மணி நேரம் கழித்தே குடிக்க வேண்டும். ஆனால் இந்த கொய்யா இலை டீயை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.!
புற்றுநோயை எதிர்ப்பதில் கிரீன் டீயைவிட இந்த கொய்யா இலை சிறந்தது.
ஆரம்பநிலை புற்று நோய்களுக்கு இதை தனி மருந்தாக கொடுக்கலாம்.
நாள்பட்ட புற்று நோய்க்கு மற்ற மருந்துகளுக்கு துணை மருந்தாக கொடுக்கலாம்.

ஆகவே கொய்யாத் தோப்பு வைத்துள்ள நண்பர்கள் இந்த கொய்யா இலைகளைப் பறித்து 5 நாட்கள் நிழலில் உலர்த்தி 6 வது நாள் 1 மணிநேரம்  மதியம் வெயிலில் காயவைத்து  உடனே உரலில் இட்டு கசாய சூரணம் போல இடிக்க வேண்டும். (இடித்து பொடி செய்ய கூடாது.) கிரீன் டீ வடிவில் இருக்க வேண்டும்.
கனடா நாட்டில் 1 கிலோ கொய்யா இலைப் பொடி 1700 ரூபாய்க்கு விற்கின்றனர்.
ஆகவே நாமும் நமது நாட்டில் கொய்யா இலை குடிநீர் பொடி மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க மூலிகை தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும்.

ஒவ்வொருவரின் வீட்டுத் தோட்டத்திலும் இனி நாட்டுக் கொய்யா மரம்  வளர்க்க வேண்டும். இதன் மூலம் நமக்குத் தேவையான மருந்தை நாமே தயார் செய்ய வேண்டும். நாட்டில் தற்சார்புக் கொள்கை வளர வேண்டும்.!

     

No comments:

Post a Comment