***************
*ஆசீர்வாதம் என்றால் என்ன?*
*ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். அவர்களின் ஆசி கூடுதல் சிறப்பு என்று கூறுவார்கள்*.
*காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?*
*காலைத் தொட்டு வணங்குவதில் கலாச்சார அடிப்படையும் உண்டு, விஞ்ஞான அடிப்படையும் உண்டு*.
*கலாச்சாரம் என்று பார்த்தால், மனிதர்கள் தம் மனதில் உள்ள மரியாதை உணர்வினை வெளிப்படுத்தும் முறை என்று சொல்லலாம்*.
*பெரியவர்கள், குறிப்பாக தாய், தந்தையரின் காலில் விழுவது எதற்கென்றால், நாம் இவ்வுலகில் பிறப்பதற்கே முழு மூலக்காரணமாக இருந்தவர்கள் அவர்கள் தான் என்பதற்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாதத்தை தொட்டு வணங்குகிறோம்*.
*பெரியோர்கள், வயதானவர்களின் காலில் விழுந்து ஆசி பெறும் போது நம்மிடம் சக்தி அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆசீர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி நமக்கு பெரும் பலத்தை கொடுக்கிறது*.
*நம் பாதங்களில் மிகவும் அதிகமான சக்தி ஓட்டம் நடக்கிறது என்று விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்து இருக்கிறார்கள். அதை பயன்படுத்தி கொள்வதற்காக உருவாக்கப்பட்டது தான் காலில் விழும் பழக்கம்.*
*ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும் போது, அவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறுகிறோம் எனில், அவர்களின் சக்தி நமக்கும் கிடைக்கிறது. காலை தொடுதலின் மூலம் இந்த சக்தி பரிமாற்றம் நடக்கிறது*.
*மேலும் ஆசி வழங்கும் போது சொல்லும் வார்த்தைகளில் அதிக சக்தி இருக்கிறது. மனப்பூர்வமாக ஒருவர் ஆசி வழங்கும் போது அதன் சக்தி அளவிட முடியாதது. பல பாவங்களையும், தோஷங்களையும் கூட அது போக்குகிறது என்பது நம்பிக்கை.*
*ஷாஷ்டாங்க நமஸ்காரம்* :
*கோவிலுக்கு சென்றால் தரையில் விழுந்து கடவுளை சாஷ்டாங்க நமஸ்காரம் செய் என்று சொல்வார்கள். அது ஏன்? என்று நீங்கள் யோசித்தது உண்டா?*
*கோவிலில் கடவுள், சக்தி ரூபமாக விளங்குகிறார். அங்கிருக்கும் சக்தியை பெற்று கொள்ளும் தன்மையானது அனைவரின் உடலுக்கும் இருப்பதில்லை. ஏனென்றால் நமது மனமும், உடலும், அறிவும் சரிவர ஒத்துழைக்காததே இதற்கு காரணம்*.
*மனக்குழப்பத்தில் இருக்கும் போது தான் அதிகப்படியானோர் கோவிலுக்கு வருகின்றனர். அவ்வாறு மனம் குழப்பத்தில் இருக்கும் போது, மனமும், அறிவும் நேர்மறை ஆற்றலையும் சக்தியையும் பெறும் தன்மையை இழக்கிறது*.
*அவ்வாறு, ஏற்கும் தன்மை இல்லாத பட்சத்தில் உங்கள் உடலுக்கும், கோவிலில் இருக்கும் சக்திக்கும் ஒரு தொடர்பை உருவாக்க வேண்டும். அதாவது, கோவிலின் தரையில் அமர வேண்டும் அல்லது உடல் தரையில் படும்படி ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்*.
*ஆண்கள் என்றால் தங்கள் உடல் தரையில் படும்படியாக வணங்க வேண்டும்*.
*பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். அதாவது தலை, கைகள் இரண்டு, முழங்கால் இரண்டு என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாகும்*.
*இவ்வாறு வணங்குவதன் மூலம் நமது உடல் வழியாக கோவிலில் இருக்கும் நேர்மறை ஆற்றலும், சக்தியும் நம் உடலுக்குள் சென்று விடும்*.
*ஆசீர்வாதம் பெறுவது மட்டுமல்ல. ஆசீர்வாதம் செய்வதும் உங்களுக்கு சக்தியை கொடுக்கும். நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சொல்வதில் தான் விஷயம் இருக்கிறது*.
*என்ன சொல்லி வாழ்த்த வேண்டும்?*
*நம்மிடம் ஒருவர் ஆசி கேட்கும் போது மனப்பூர்வமாக எந்தவொரு நல்ல சொல்லையும் கூறி வாழ்த்தலாம்*.
*பெண்களுக்கு - (தீர்க்க சுமங்கலி பவ) தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தலாம்*.
*ஆண்களுக்கு - (தீர்க்காயுஷ்மான் பவ) நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் அல்லது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்தலாம்.*
*மணமக்களுக்கு - பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தலாம்*.
*இப்படிப்பட்ட நல்ல வார்த்தைகளை கூறும் போதும், கேட்கும் போதும் சக்தி அதிகரித்து, நல்லதே நடக்கும். பெரியோர்களிடம் ஆசி பெற்றே மார்க்கண்டேயன், ஆஞ்சநேயர் போன்றோர் இன்னும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என ஆன்றோர்கள் கூறுகின்றனர்.*
No comments:
Post a Comment