பூமியில் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பொருட்களில் நிறைய சக்திகள் இருக்கின்றன. அதை அறிந்து சரியான முறையில் பயன்படுத்தினால் பல நன்மைகளை நாம் அடையலாம். அப்படிப்பட்ட பொருள்களில் ஒன்றுதான் அஞ்சனக்கல் ஆகும்.
அஞ்சனக்கல்லை பற்றி, ‘போகர் 12000’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்லை அக்காலத்திலேயே சித்தர்கள் பயன்படுத்தி பலனடைந்துள்ளனர். அஞ்சனக்கல்லை, ‘சுர்மா கல்’ என்றும் அழைப்பார்கள். இந்தக் கல் பஞ்சாப், ஆந்திரா, தென் தமிழகத்திலும் கிடைக்கிறது. இவை இலகுவாக உடையும் தன்மையை உடையது. ஆனால், தண்ணீரில் கரையாது.
இதை ஆறு வகைகளாகப் பிரிக்கலாம். அவை: சவ்வீராஞ்சனம், ரசாஞ்சானம், ஸ்ரோதாஞ்சனம், நீலாஞ்சனம், ரத்தாஞ்சானம், புஷ்பாஞ்சனம் ஆகியவையாகும். இதில் நீலாஞ்சனக்கல் சுலபமாகக் கிடைக்கக்கூடியது. மருத்துவத்தில் வெளிப்பூச்சுக்கு அதிகம் பயன்படுகிறது. ஜன்னி, மேகம், நாவறட்சி, இரத்த பாதிப்பு, கண் வலி போன்ற நோய்களை குணமாக்க இது பயன்படுத்தப்படுகிறது. அஞ்சனக்கல் புருவ மத்தியில் உள்ள மூன்றாவது கண் என்று சொல்லப்படும் ஆக்ஞா சக்கரத்தை திறப்பதற்கு வெகுவாகப் பயன்படுத்
இஸ்லாமியர்கள் இந்த சுர்மா கல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள். கண்களிலும், புருவத்திலும் ஆண்கள், பெண்கள் இருவருமே இதை பயன்படுத்துகிறார்கள். அழகுக்காக மட்டுமில்லாமல், இந்த அஞ்சனக்கல்லை பயன்படுத்துவது கண்களுக்கு குளிர்ச்சியை கொடுப்பதாகும். அதுமட்டுமின்றி, வசீகரத்தை ஏற்படுத்தக்கூடியது. இமைகளும், புருவங்களும் நீளமாக வளர்வது மட்டுமில்லாமல், கருமையாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment