jaga flash news

Friday 12 June 2020

ஸ்ரீமத் பகவத்கீதை


 

ஸ்ரீமத் பகவத்கீதையை முதல் முறை படிக்கும் பொழுது தோன்றுவது – இது நமக்கில்லை, யாரோ போர்வீரனுக்கு, அல்லது சன்யாசிக்கு, அல்லது யோகம் பயிலும் மாணவனுக்கு, அல்லது நீயே எல்லாம் என்று வணங்கும் பக்தனுக்கு என்று தோன்றும்.  அன்றாட வாழ்க்கைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. என்பதே பெரும்பாலோர் நினைப்பது.

ஆனால், வயதான பிறகு படித்துக் கொள்ளலாம், வேதாந்தம் தானே என்று நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி. இது பள்ளி நாட்களிலேயே தெரிந்து கொள்ள வேண்டிய பல அறிவுரைகளை உள்ளடக்கியது.

முதன் முதல் பள்ளிக்கு குழந்தையை அனுப்பும் பெற்றோர் சொல்லும் பயப்படாதே என்ற உபதேசம் – முரட்டு சிறுவர்களோ, சிறுமியோ, உன்னை படுத்தினால் பயப்படாதே, டீச்சரிடம் சொல்லு என்று சொல்லுகிறோமே-அத்துடன் யோசி, உனக்கு சரியென்று தோன்றினால் மட்டுமே செய் என்று கீதை உபதேசிக்கிறது.

எடுத்த காரியத்தை பாதியில் விடாதே, செய்வதை திருந்தச் செய் என்ற உபதேசம் அனைவருக்குமே.

குருவை அடைந்து, மரியாதையுடன் கற்றுக் கொள், கற்றதை மனனம் செய்து உருவேற்றிக் கொள் என்பது எல்லா மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும், தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்ள  முனையும் மற்றவர்களுக்கும் உரிய உபதேசம்.,

சந்தேகப்பிராணியாக இருக்காதே, எதிலுமே சாதிக்க மாட்டாய் என்ற அறிவுரை.,  எது உன் வழி என்பதை தெரிந்து கொள்- அந்த பாடத்தை படி,  உன் மனதுகுகந்த தொழிலை செய் என்று நாம் சொல்ல ஆரம்பித்திருக்கிறோமே, அதையே தான் கீதாசாரியனும் சொல்லியிருக்கிறார்.

மன வலிமை பெற உடல் வலிமையும் தேவை என்பதை வலியுறுத்த யோக சாதனைகள்.

பொதுவாக வாய் மொழியாக பேசுவதிலிருந்து எது நாகரீகம் என்பதையும், ,

நம்பினோர் கைவிடப் படார் என்ற உறுதி மொழியும் நாம் அன்றாட வாழ்க்கையில்  ,மனதில் கொள்ள வேண்டிய வழிமுறைகளே என்பது புரியும். .

ஸ்ரீ ஆதி சங்கராசார்யருடையது தான் முதன் முதல் பகவத் கீதைக்கு உரை என்று நமக்கு கிடைத்துள்ளது என்கிறார்கள். அவருடைய விளக்கங்கள் மூலம் – அவருடைய வார்த்தைகளிலேயே இந்த மாபெரும் காவ்யத்தை நாம் அறிந்து கொள்வோம்.

யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தனுர்தர: |

தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர்  த்ருவா நீதிர்மதிர்மம  ||

यत्र योगेश्वर: कृष्णो यत्र पार्थो धनुर्धर: | तत्र श्रीर् विजयो भूतिर् ध्रुवा नीतिर् मतिर्मम ||

இந்த ஸ்லோகத்துடன் கீதையை முடிக்கிறார்.  எந்த இடத்தில்  யோகேஸ்வரனான க்ருஷ்ணன் இருக்கிறானோ, உடன் கையில் வில்லுடன் பார்த்தன் இருக்கிறானோ, அங்கு லக்ஷ்மி தேவி தானே வாஸம் செய்வாள்.  விஜயா-வெற்றியும்  நிறைந்த செல்வ செழிப்பும், அழியாத நீதியும் என்றும் ஓங்கி விளங்கும்.

 

ஜானகி க்ருஷ்ணன்

***********

 

 

 

தியான ஸ்லோகங்கள்:

ஓம் பார்தாய ப்ரதிபோதிதாம் பகவதா நாராயணேன ஸ்வயம் |

வ்யாஸேன க்ரதிதாம் புராண முனினா மத்யே மஹாபாரதம் |

அத்வைதாம்ருத வர்ஷிணீம் பகவதீமஷ்டா தஶாத்யாயினீம் |

அம்ப த்வாம் அனுஸந்ததாமி பகவத்கீதே பவத்வேஷிணீம் ||

ऊँ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयम् |

व्यासेन ग्रथितां पुराण मुनिना मध्ये महाभारतम् |

अद्वैतामृत वर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीम् |

अम्ब त्वामनुसन्दधामि भगवत्गीते भवद्वेषिणीम् || -1

நமோஸ்து தே வ்யாஸ விஶால புத்தே புல்லாரவிந்தாயத பத்ர நேத்ர ||

யேன த்வயா பாரத தைல பூர்ண: ப்ரஜ்வாலிதோ ஞானமய ப்ரதீப: ||

नमोस्तु ते व्यास विशाल बुद्धे फुल्लारविन्दायत पत्र नेत्र |

येन त्वया भारत तैल पूर्ण: प्रज्वालितो ज्ञानमय प्रदीप: ||-2

ப்ரபன்ன பாரிஜாதாய தோத்ர வேத்ரைக பாணயே |

ஞான முத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருத  துஹே நம: ||

प्रपन्न पारिजाताय तोत्र वेत्रैक पाणये | ज्ञान मुद्राय कृष्णाय गीतामृत दुहे नम: || -3

ஸர்வோபனிஷதோ காவோ, தோக்தா கோபால நந்தன: |

பார்தோ வத்ஸ: ஸுதீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் ||

सर्वोपनिषदो गावो, दोग्धा गोपाल नन्दन: | पार्थो वत्स: सुधीर्भोक्ता दुग्धम् गीतामृतं महत् ||-4

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் |

தேவகீ பரமா நந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||

वसुदेवसुतं देवं कंस् चाणूर मर्दनं | देवकी परमानन्दं कृष्णं वन्दे जगत्गुरुम् || -5

பீஷ்மத்ரோண தடா ,ஜயத்ரத ஜலா ,காந்தார நீலோத்பலா |

ஶல்யக்ராஹவதீ க்ருபேண வஹனீ , கர்ணேன வேலாகுலா||

அஶ்வத்தாம விகர்ண கோர மகரா துர்யோதனாவர்தினீ ,

ஸோத்தீர்ணா கலு பாண்டவைர் ரண நதீ, கைவர்தகே கேஶவே ||

भीष्मद्रोणतटा जयद्रथ जला गान्धार नीलोत्पला |

शल्यग्राहवती कृपेण वहनी कर्णेन वेलाकुला |

अश्वत्थाम विकर्ण घोर मकरा दुर्योधनावर्तिनी |

सोत्तीर्णा खलु पाण्डवैर्रणनदी कैवर्तके केशवे ||-6

பாராஶார்ய வச: ஸரோஜமமலம்  கீதார்த கந்தோத்கடம் | நானாக்யானக கேஸரம் ஹரிகதா ஸம்போதனா போதிதம் ||

லோகே ஸஜ்ஜன ஷட்பதைரஹரஹ: பேபீயமானம் முதா |

பூயாத் பாரத பங்கஜம் கலிமல ப்ரத்வம்ஸி ந: ஶ்ரேயஸே ||

पाराशर्य वच: सरोजममलं कीतार्थ गन्धोत्कटम् |

नानाख्यानक केसरं हरिकथा सम्बोधना बोधितम |

लोके सज्जन षत्पदैरहरह: पेपीयमानं मुदा |

भूयाद्भारत पङकजं कलिमल प्रध्वंसि नस्श्रेयसे || -7

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம் |

யத் க்ருபா தமஹம் வந்தே பரமாநந்த மாதவம் ||

मूकं करोति वाचालं पङगुम् लङगयते गिरिम् | यत्कृपा तमहं वन्दे परमानन्द माधवम् ||

யம் ப்ரஹ்மா வருணேந்த்ர ருத்ர மருத: ஸ்துன்வந்தி திவ்யை: ஸ்தவை: | வேதை: ஸாங்கபத க்ரமோபனிஷதை: காயந்தி யம் ஸாமகா: | த்யானாவஸ்திதேன மனஸா பஶ்யந்தி யம் யோகினோ | யஸயாந்தம் ந விது: ஸுராஸுர கணா: தேவாய தஸ்மை நம: ||

यं ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुत: स्तुन्वन्ति दिव्यै: स्तवै: |

वेदै: साङगपद क्रमोपनिषदै: गायन्ति यं सामगा: |

ध्यानावस्थितेन मनसा  पश्यन्ति यं योगिनो |

यस्यान्तं न विदु: सुरासुर गणा: देवाय तस्मै नम: ||

இதி த்யானம் – इति ध्यानम् ||

 

ஸ்ரீமத் பகவத் கீதை

அத்யாயம்-1 அர்ஜுன விஷாத  யோகம்

 

துரியோதனன் முதலிய நூற்றுவரின் தந்தை த்ருதராஷ்டிரன். குரு குலத்து அரசன். அதனாலேயே அவன் வம்சத்தினர் கௌரவர்கள் என்று அறியப் பட்டார்கள்.   அவருடைய இளைய சகோதரன் பாண்டு. பாண்டுவின் மக்கள் ஐவர் பாண்டவர்கள்.  சகோதர்களுக்கிடையே நடந்த பூசல் வளர்ந்து யுத்தம் என்று முடிவாகி விட்டது.

வேதவியாசர் எழுதிய பாரதத்தின் நடுவில் வரும் பகவத் கீதை ஒரு உபதேச நூல்.   யுத்தகளத்தின் நடுவில் ஸ்ரீ க்ருஷ்ணரால், அர்ஜுனனுக்குச் சொல்லப் படுகிறது. அதன் பிண்ணனியை முதல் அத்தியாயத்தில் காண்கிறோம். என்னதான் தந்தையாக மகனின் முடிவை, அவன் அரசனாக எடுத்த முடிவை ஏற்றுக் கொண்டாலும் த்ருதராஷ்டிரனின் மனம் தம்பி மகன் மற்றும் குலத்தின் மற்ற வாரிசுகளுக்காகவும் வருந்துகிறது. சஞ்சயன் கண் தெரியாத   பேரரசருக்கு உற்ற துனைவன்.  அவருக்கு நடப்பதை நடந்தபடி சொல்ல என்றே வியாசர்  அருள் செய்திருக்கிறார். அரண்மனையில் அரசனுக்கு அருகில் இருந்தபடியே யுத்தகளத்தில் நடப்பதை சஞ்சயன் காண்கிறான் – உடனுக்குடன் அரசருக்குத் தெரிவிக்கிறான்.

கீதையின் ஆரம்பம் பேரரசர் த்ருதராஷ்டிரன் சஞ்சயனிடம் கேட்கிறார்.

யுத்தம் என்று முடிவு செய்து விட்டார்கள்.  இரு தரப்பினரும் யுத்த வெறி கொண்டு யுத்த களத்தில் வந்து சேர்ந்து விட்டார்கள். ஒரு தரப்பில் என் மக்கள்,   எதிரில் பண்டவர்கள் –  இரு பக்கத்தினரும் என்ன செய்கிறார்கள், சஞ்சயா?

சஞ்சயன் பதில் சொல்கிறார். அரசே, தங்கள் மகன் துரியோதனன் பாண்டவர்களின் படை அணி வகுத்திருப்பதைப் பார்த்து விட்டு ஆசாரியர் த்ரோணரிடம் வருகிறான்.

அவரைப் பார்த்து,  ஆசிரியரே,  எதிர் அணியை பார்த்தீர்களா?     த்ருபதன் மகன் உங்கள் மாணவன்  தானே? – அணி வகுத்திருக்கிறான் பாருங்கள்.  அந்த அணியில் சூரர்கள்  நிறைய – பீமன், அர்ஜுனன் – இவ்விருவருக்கும் இணையான பல வீர்கள். மஹா ரதிகள் – என்ற முதன்மை வீர்கள், விராடன், த்ருபதன் , த்ருஷ்ட கேது,  மற்றும் பலர். அனைவருமே நல்ல வீரர்கள்.   நம் தரப்பில் யர் யார் – சொல்லவா ?   தாங்கள், பீஷ்மர், கர்ணன், மற்றும் பலர். அனைவருமே சிறந்த வீரர்கள். எனக்காக உயிரையே கொடுக்கத் தயங்க மாட்டர்கள்.

(இந்த இடத்தில் விதி அவன் வார்த்தையில் விளையாடியதாக சொல்வார்கள்.  எனக்காக உயிரைக் கொடுப்பார்கள் என்று சொல்ல வந்தவன் – எனக்காக உயிரை விட்டவர்கள் என்று பொருள் படும்படி – த்யக்த ஜீவிதா: – உயிரை விட்டவர்கள் என்று சொல்லி விடுகிறான்.)

பீஷ்மரின் தலைமையில் கூடிய நமது தரப்பில் வீர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது, பீமன் தலைமையில் அவர்கள் எண்ணிக்கை அதன் எதிரில் ஒன்றுமேயில்லை. எனவே ஆசிரியரே, வீரர்களே எந்த நிலையிலும் பீஷ்மரை காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

அவன் மகிழ்ச்சியை மேலும் கூட்டுவது போல  அதே சமயத்தில் குரு வம்சத்தின் பிதாமஹர் எனும் குல மூத்தவர், பீஷ்மர் சங்கத்தை எடுத்து ஊதினார்.  சிம்ஹ நாதம் போன்று ஒலித்த அந்த நாதத்தைத் தொடர்ந்து மற்றும் பலரின் சங்க நாதங்கள் ஒலிக்கத் தொடங்கின.   பேரி எனும் வாத்யங்கள் முழங்கின. பணவான், கோமுகம் எனும் வாத்யங்களும் ஒலித்தன- ஒரே சமயத்தில் எழுந்த இரைச்சல்.

அதே சமயம் பாண்டவ  வீரர்களும், க்ருஷ்ணரும் வெண் புரவிகளில் வருகிறார்கள்.  ஹ்ருஷீகேசன் -ஸ்ரீ க்ருஷ்ணர் பாஞ்சஜன்யம் என்பதையும், தனஞ்ஜயன் – அர்ஜுனன் அதே போல தன் தேவதத்தம் எனும் சங்கத்தையும் எடுத்து சங்க நாதம் செய்கிறான்.  ஒவ்வொருவரும் அவரவர் சங்கத்தை ஊதுகிறார்கள், பீமன் தன்னுடைய சங்கம் பௌன்ட்ரம் என்பதை ஊதுகிறான். , யுதிஷ்டிர் அனந்த விஜயம், நகுல சஹதேவர்கள், சுகோஷ, மணி புஷ்பகம் என்ற பெயர்களுடைய சங்கங்களை ஊதுகிறார்கள்.

காசி ராஜா, சிகண்டி, த்ருஷ்டத்யும்னன், விராடன் மற்றும் அவர்கள் தர்ப்பில் உள்ள பெரும் வீர்கள் அனைவரும் தயார் என்பது போல தங்கள் சங்கங்களை ஊதுகிறார்கள். ஏக காலத்தில் எழுந்த ஒலி, தார்தராஷ்டிர்கள்- உங்கள் மைந்தர்களை நிலை குலைய செய்து விட்டது போலத் தோன்றுகிறது அரசே.  கௌரவர்களின் தரப்பு வீரர்களை பார்த்தவாறு, தன் ரத சாரதியான க்ருஷ்ணரிடம், அர்ஜுனன் ஏதோ சொல்கிறான்.  அவனுடைய கொடியில் கபி-குரங்கு தெரிகிறது. (ஆஞ்சனேயர் கொடியில் அமர்ந்தாக பொருள்)

அர்ஜுனன்  சொல்கிறான்:-

யுத்தகளத்தின் நடுவில் நின்று எதிர் தரப்பினரை பார்த்த அர்ஜுனன் மனம் தடுமாறுகிறது – என்ன செய்யத் துணிந்தோம் – நம் பாட்டனாரும், சகோதர்களும், மாமன், மருமகன் போன்ற உறவினர்களும், குரு நாதர்களும்  எதிர்  தரப்பில்– இவர்களையா கொல்லத்துணிந்து போர்  செய்யப் போகிறோம்  – க்ருஷ்ணா , வேண்டாம் – என்னால் முடியாது என்று  கண்ணீர் மல்க வேண்டியபடி தேர் தட்டில் அமர்ந்து விட்டான்.

யுத்தகளத்தில் தன் படை வீரர்கள் எண்ணிக்கையில் எதிரி சேனையை விட அதிகமாக இருப்பதைக் கண்டு இறுமாப்பு கொள்கிறான் துரியோதனன்.   அதே காட்சியைக் காணும் பாண்டவ வீரன் பார்த்தனோ பதறுகிறான்.

மனித மனத்தின் இரு எல்லைகள் இதுவே. ஒரே விஷயத்தை அல்லது செயலை பார்க்கும் இருவரின் கண்ணோட்டம் எவ்வாறு வேறு படுகிறது. இதுவே கீதை பிறக்க காரணமாக இருந்த குருக்ஷேத்ர யுத்த களம்.

பீஷ்மர் சங்க நாதம் செய்து ஆரம்பித்து வைக்கிறார். மற்ற அனைவரும் தாங்களும் தயார் என்பது போல சங்கங்களை ஊதுகிறார்கள்.   அர்ஜுனன்  ரதத்தை நடுவில் நிறுத்து, நான் யார் யார் , துரியோதனுக்காக யுத்தம் செய்ய வந்துள்ளார்கள் என்பதைப் பார்க்கிறேன் என்றான்.  ரத சாரதியாக வந்துள்ள க்ருஷ்ணனும் அவ்வாறே செய்கிறான்.

சஞ்ஜயன் அரசருக்கு விவரிக்கிறான். அரசே, சாரதியும் அவ்வாறே பீஷ்ம துரோணர்  மற்றும் கௌரவ சேனை நடுவில் ரதத்தை நிறுத்தினான்.   சுற்றிலும் இருப்பவர்கள் அனைவரும் உறவினர்களே – பாட்டனார், ஆசிரியர்கள், மாமன்  மச்சான் உறவு முறை கொண்டவர்கள்,  சகோதரர்கள், நண்பர்கள், மகன், பேரன் என்று குலத்தின் இளையவர்கள், பெண் கொடுத்த சம்பந்திகள்,  அனைவருமே என் நலனில் கருத்துடையவர்கள்.  என் சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டவர்கள்.

இவர்கள் பேராசை, இந்த இழிந்த செயலைச் செய்யத் தூண்டுகிறது என்றால் நாமும் அதைச் செய்ய வேண்டுமா?

குலம், அழியும். ஒரு குலம் அழிவதால் ஏற்படும் தோஷம், மித்ர துரோகம் என்பதை விடக் கொடியது. அண்டியவனை அழித்தல், நம்பினவனை கைவிடுதல் போன்ற பாபங்கள் இதற்கு எதிரில் ஒன்றுமேயில்லை எனும் அளவு கொடியது.  நாம் இந்த பாபத்திலிருந்து எப்படி விடு படுவோம். என்ன செய்வோம்?  ஜனார்தனா ! குலமே அழியும் என்று அறிந்த பின் இந்த செயலை நாம் ஏன் செய்ய வேண்டும்.

குலம் அழிந்தால் குல தர்மம் அழியும். அதர்மம் தலை விரித்தாடும்.

இதனால் துன்பப்படப் போவது  நம் குலப் பெண்களே.  பாதுகாப்பின்றி பெண்கள் என்ன செய்வார்கள்? பெண்களின் நிலை பரிதாபமாகும்.  இவர்களை அதர்மமாக பயன்படுத்தினால்  குலம் என்று முழுதுமாக இருக்குமா? வாரிசுகள் எப்படி வளரும்?  குடும்பம் என்ற ஒழுங்கை குலைத்து அழிப்பவனும், நரகத்துக்கே போவான்.  இப்படி முறையற்ற ஒரு நிலையை அடைந்தவர்களும் என்ன செய்வார்கள்?  அவர்களும் நிரந்தரமாக நரகத்துக்கு சமமான வாழ்வையே வாழ்வார்கள்.

காலம் காலமாக வந்த மனித தர்மம் அழியும். பித்ருக்களுக்கு – முன்னோர்களுக்கு பிண்டம் போடுவது நிற்கும். (நீரளிப்பது) நிற்கும்.  அவர்கள் தவிப்பார்கள். ஜாதி தர்மாவது, குல தர்மமாவது, எதுவுமே இருக்காது.

(வ்ருஷ்ணி வம்சத்தில் வந்தவனே – வார்ஷ்ணேயா! கோகுலத்தில் பெண்களை கம்ச ராஜா வருத்தியதை நீ அறிவாய். தனக்கோ, தன் குழந்தைகளுக்கோ, மற்றவர்களுக்கோ எதுவும் மீதி வைக்காமல் கோகுலத்து  பெண்கள் மதுரா அரசனான கம்சனுக்கே  கோகுலத்து பசுக்கள் மூலம் கிடைத்த பால் முதலான அனைத்தையும் கொடுக்க வேண்டியிருந்தது.  கம்சனிடம் இருந்த பயத்தால் அவர்கள் தொடர்ந்து பால் தயிர், வெண்ணெய் முதலியவைகளை  மதுரா கொண்டு சென்றனர்.  அதைத் தடுக்கவே. வெண்ணெய் உண்பவனாக மற்ற கோகுலத்து சிறுவர், சிறுமியர்களையும் கூட்டி வெண்ணெயை அபகரித்தாய்.

கோகுலத்துப் பெண்களை கம்சனின் அரச குலத்தோர், சிறுமை செய்வதை தடுத்தவன் நீ.  அந்த வகையில் பெண்கள் உரிமை என்பதை முதன் முதலில் பேசியவனும் நீயே. எனவே குலம் அழிந்து போவதால் பெண்கள் துன்பமடைய பொறுப்பாயா)

 

அஹோ – (அலறுகிறான்)  – பெரும் பழிச் செயலை செய்வோமா? ராஜ்ய சுகம் அவ்வளவு பெரிதா? என்ன பேராசை?  தன் மக்களை அழித்து அரசனாவோமா?

இப்படி பலவும் எண்ணிய அர்ஜுனன்  என்  தேகம் நடுங்குகிறது.  இவர்களைக் கொன்று நான் வெற்றியைக் கொண்டாடுவேனா? என்னால் முடியாது  என்று சொல்லியபடி  ரத தட்டில் அமர்ந்து விட்டான்.

எனக்கு வெற்றி வேண்டாம். நாம் இந்த வெற்றியை எப்படி கொண்டாடுவோம்.  நாம் பெற்ற வெற்றியை பகிர்ந்து மகிழ்ச்சி கொள்ளும் உறவினர்கள், நண்பர்கள், சம்பந்திகள், இளையவர்கள் அனைவரும்  எதிர் தர்ப்பில். இவர்களைக் கொன்று நான் எதை சாதிக்கப் போகிறேன். இதனால் என் குலமே அழியும்..  பிழைத்தவர்கள் மத்தியில் என்ன பேச்சு இருக்கும். என்னை தூற்றுவார்கள். வேண்டாம்.  யாராவது அம்பெய்தி என்னை கொன்று விட்டால், நான் மகிழ்வேன்.

இவ்வாறு சொன்னவன், தன் வில்லை கீழே வத்து விட்டு ரதத் தட்டில் அமர்ந்து விட்டான்.

(இது வரை   உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்யா எனப்படும் பகுதியில், யோக சாஸ்திரத்தில் க்ருஷ்ண அர்ஜுன சம்வாதம் -சம்பாஷனை –  எனும் முதலாவது அத்யாயம்)

 

 

ஸ்ரீமத் பகவத் கீதை-அத்யாயம் 2– சாங்க்ய யோகம்

சஞ்சயன்:

அரசே, இப்படி தன் மக்கள், என்று கருணையால் கண்களில் நீர் பெருக மனம் வாடும் அர்ஜுனனைப் பார்த்து மதுசூதனன் ஏதோ சொல்கிறான்.   இருவரும் பேசுவதை கேட்டு, அட்சரம் பிறளாமல் அரசரிடம் தெரிவிக்கிறான்.

(சஞ்சயன் த்ருதராஷ்ட்ர ராஜாவுக்கு நடந்ததை நடந்த படி சொல்லும் தகுதியை பெற வியாசர் அருளால் அதற்கான விசேஷ கண் பார்வையை பெற்றவர்.)

அர்ஜுனன்:

எப்படி நான் பீஷ்மர் பேரில் அம்பை விடுவேன்?  துரோணர் எனக்கு வில் வித்தயை கற்பித்தவர். அவர் மேல் தான் எப்படி என் அம்பை செலுத்துவேன்?    இவர்கள் என் மதிப்புக்குரியவர்கள் க்ருஷ்ணா –  இப்படி  என் குரு, பாட்டனார்  இவர்களைக் கொன்று நான் என்ன நன்மையை அடைவேன்?   இவர்கள் அடிபட்டு ரத்தம் சொட்ட இருக்கும் பொழுது நான் நிம்மதியாக சாப்பிடவா முடியும்? இதில் யார் ஜயிப்போம், யார் தோற்போம் என்றும் தெரியாது. எவரின்றி நாம் வாழவே விரும்ப மாட்டோமோ அவர்கள் தான் யுத்த களத்தில் எதிரில் நிற்கிறார்கள். என் மனம் நடுங்குகிறது, செய்வதறியாது தவிக்கிறேன். க்ருஷ்ணா! நீ தான் சொல், நான் என்ன செய்ய? இதில் எதில் நன்மை, உன் சிஷ்யனாக இருந்து கேட்கிறேன்.  எனக்கு கட்டளை இடு.

இப்படித்தான் ராஜ்யம் பெற வேண்டுமா? என் மனமே வருந்தி தவிக்க, எனக்கு துளிக் கூட சம்மதமில்லாமல்   ஒரு செயலைச் செய்து, எதிரிகள் இல்லாமல் தேவ ராஜ்யமே கிடைத்தால் கூட நான் எப்படி மகிழ்ந்து இருப்பேன்.

சஞ்ஜயன்:

அரசே! இப்படி சொன்னவன், நான் சண்டை போட மாட்டேன் என்று சொல்லி விட்டு, மௌனமாக இருந்து விட்டான்.  அவனைப் பார்த்து, பாட்டனார் முதல் சகலரும் எதிரி தரப்பில் உள்ளது தெரிந்தது தானே, கண் எதிரில் காணும் போது தடுமாறுவது சகஜம் தான் என்று நினைத்தோ, சற்றே சிரித்தபடி, இரு சேனைகளுக்கும் இடையில் நின்றபடி ஹ்ரிஷீகேசன்  பதில் சொல்கிறார்.

ஸ்ரீ பகவான் சொல்கிறார்:

 

குழம்பிய மனதுடன்  அமர்ந்துவிட்ட அர்ஜுனுக்கு கண்ணன்  சமாதானம் செய்கிறார்.  வேண்டாத விஷயங்களை நினைத்து, தேவையற்ற வருத்தம் அடைகிறாய்.   பெரிய அறிவாளி போல வேறு பேசுகிறாய்.

சங்கர பாஷ்யம் : இந்த குழப்பம் துரோணருக்கும், பீஷ்மருக்கும் கூட வர வேண்டிய குழப்பம் தானே. அவர்களும் தான் உன் குருவும், பாட்டனாரும் ஆவர்.  எடுத்து வளர்த்த குழந்தைகளை எதிர்த்து நிற்கிறோமே என்று அவர்கள் வருந்தவில்லை.    ஏன் தெரியுமா? இருவருமே ஆத்ம ஞானம் அடைந்து  ப்ரும்ம தன்மையை அடைந்து விட்டவர்கள். உலகியலில் உள்ள இன்ப துன்பங்களை கடந்து விட்டவர்கள்.

நீ இந்த சமயம் பின் வாங்குவது உன் குலத்திற்கும் அழகல்ல, யுத்தத்தில் மரணமடைந்து பெறும் ஸ்வர்கமும் கிடைக்காது, உனக்கு புகழும் தராது. உயிருடன் இருப்பவன்,  மரணமடைந்தவன் என்று,  விஷயம் அறிந்தவர்கள் கவலைப் படுவதில்லை.

இதற்கு முன் நான் இருந்தேனா ? நீ தான் இருந்தாயா, அல்லது இந்த வீரர்கள், தலைவர்கள் இருந்தார்களா? நாம் அனைவருமே இன்னும் வரும்காலத்திலும் இருப்போமா?

பிறந்த அனைவரும், குழந்தை பருவம், இளமை, முதுமை என்று மாறுவது போலவே அடுத்த நிலையாக உடலைத் துறந்து செல்வதும் இயற்கையே. குழந்தையாக இருந்த உடலா தற்சமயம் உள்ளது ?

நடுக்கும் குளிர், வாட்டும் கோடைக் காலம், இவை சரீரத்தை பாதிக்கின்றன.  சுக துக்கங்கள் மனதை வருத்துகின்றன. வருவதும் மறைவதுமாக இருக்கும் இது போன்ற இரு எதிர் நிலைகள், இவைகள் நிரந்தரமல்ல.  போகிற போக்கில் நம் மேல் படும் தொடு உணர்வே – அதற்கு மேல் அவை நிரந்தரமல்ல.   இந்த உணர்வை இயல்பு என்று எண்ணி அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் இருப்பதே நன்று.  இவ்விரண்டு விதமான தன்மைகளிலும் சமமாக இருப்பவன் – அதாவது துக்கம் என்று ஒரேயடியாக வருந்தாமலும், சுகம் என்பதில் ஒரேயடியாக திளைக்காமலும் இருப்பவன்- அமரத்வம் அடைகிறான்.

அது எப்படி சாத்யம் என்பதை விளக்குகிறார் ஸ்ரீ சங்கரர் தன் பாஷ்யத்தில்.    உண்மையில் இவைகள் – குளிர், அல்லது வெப்பம் எனும் உணர்வுகள் மற்றொன்றின் வெளிப்பாடே – நமது மனம் உணர்ந்து நாம் அனுபவிப்பது. ஒருவருக்கு குளிர் மற்றொருவருக்கு அதே அளவு பாதிக்காமல் இருக்கலாம். வெப்பம் என்று உணர்வதை மற்றொருவர் சுகமாக நினைக்கலாம்.  எனவே இதன் அடிப்படை வேறு.

சுகம், துக்கம் என்று நீ அனுபவிப்பதும் அவ்வாறே.  இதுவும் எல்லோருக்கும் ஒரே விதமாக இருப்பதில்லை.  அவரவர் மனப் பான்மையை, சந்தர்பத்தை பொறுத்து சுகம் என்றோ, துக்கம் என்றோ அனுபவிக்கிறார்கள்.

இதற்கு உதாரணமாக கயிற்றில் பாம்பை காண்பதை சொல்கிறார்கள். இருட்டில் கயிறு பாம்பாக தோற்றமளிக்கிறது. அதைக் கண்டு ஏற்படும் பயம் உண்மை. அதுவே வெளிச்சத்தில் கயிறு என்று தெரிந்தவுடன் வரும் மன அமைதியும் உண்மையே.  கயிறு இருக்கிறது. அதைக் கண்டு மிரண்ட பாம்பு இல்லை. ஆனால் பாம்பு என்ற நினைவு இருந்தவரை அனுபவித்த பயம் உண்மையே.  எனவே நமது அறிவு ஒரு எல்லைகுட்பட்டதே. உண்மை தெரிந்து ஆஹா , வெறும் கயிறு, இதைப் பார்த்தா பயந்தோம்  என்ற அறிவு-  ஞானம்  வரும்போது சாதாரண மனிதன் அடையும் நிம்மதியை, உலகையே வெறும் தோற்றமே எனக் காணும் பேறு பெற்ற ஞானிகள் , அடைகிறார்கள். அவர்களே அமரத்வத்தை அடைகிறார்கள்.)

नासतो विद्यते भाव: नाभावो विद्यते सत: | उभयोरपि   दृष्टोऽन्तरनयो:  तत्व दर्शिभि: ||

இது சற்று கடினமான அர்த்தம் கொண்ட ஸ்லோகம்.  நம் அறிவுக்கு புலனாவது ஒன்று. அதன் இயல்பான நிலை ஒன்று.  இரண்டையும் அறிந்தவர்கள் தத்வ தர்சிகள் – அதாவது உண்மையான ஞானத்தை அடைந்தவர்கள்.

இவையனைத்தயும் படைத்தும், செலுத்தியும் வருவது- ஒரு சக்தி – ப்ரும்மம் -அது அழியாதது என்று அறிவாய்.

குழம்பாதே,  உலகில் பிறந்த உயிரினங்கள் ஒரு நாள் மறையத்தான் வேண்டும். இது தான் இயற்கை என்பதை அறியாதவனா நீ.  நீ அழிக்கப் போவது உடலையே. அதனுள் உறையும் ஆத்மா அழிவில்லாதது. அதனால் தயக்கம் எதுவுமின்றி போர் செய். எழுந்திரு.

அழிப்பவன்  தான் அழித்து விட்டதாக சொல்வதும் அவன் உடலையே, ,  அழிபவனும் உடலைத் தான் விடுகிறான்.,   ஆத்மா விடுதலை அடைகிறது. காலம் அதை அழிக்காது  அடிபட்டாலும் உடல் வலி அதற்கு இல்லை. ஆத்மா அழியாதது – பிறவியற்றது, என்றும் உள்ளது எனும் பொழுது  எவரும் கொலை செய்வதும் இல்லை, கொலை செய்யப்படுபவனும் இல்லை.

குழந்தை பருவம், யௌவனம், முதுமை என்று மாறும் உடல், காலம் வரும் பொழுது இந்த உடலையே தியாகம் செய்து விடுகிறது.  பழைய நைந்த ஆடைகளை மனிதன் களைவது போல நைந்த  உடலை துறந்து  விட்டு புது  உடலை கண்டடைகிறது.  நீ கொல்லப் போவதாக நினைத்து கலங்குகிறாயே அது அந்த ஜீவனின் உடலையே – அதன் ஆத்மா விடுதலை பெற்று விடுகிறது. பரமாத்மாவுடன் இரண்டற கலந்து விடுகிறது.   பரமாத்மாவின் அம்சமே ஜீவன்களில் ஆத்மாவாக உள்ளது.

அக்னியோ, வாயுவோ, அல்லது மற்ற இயற்கை சீற்றங்களோ அதை வாட்டாது. கத்தி முதலான ஆயுதங்களால் பாதிக்கப்படாது.  உடலில் படும் காயங்கள் ஆத்மாவை பாதிக்காது.

அதனால் ஜீவன்களின் பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. நாம் செய்யக் கூடியதும் எதுவும் இல்லை. இதை உணர்ந்து க்ஷத்திரியனாக, யுத்தம் செய்ய வந்தாய், அதைச் செய்.

பிறக்கும் முன் என்னவாக இருந்தோம்? தெரியாது, இறந்த பின் என்னவாக ஆவோம் – அதுவும் தெரியாது. இடைப் பட்ட இந்த நிகழ் காலத்தையே நாம் அறிகிறோம்.

ஏதோ எண்ணி கலங்கி செய்ய வேண்டியதை செய்யாமல்  விட்டால் உன் கடமையை மறந்தவனாகிறாய். க்ஷத்திரியனாக  உனது கடமை – அதை செய்து தான் ஆகவேண்டும்.   மிஞ்சிப் போனால் என்ன  நடக்கப் போகிறது ? ஜயித்தால் ராஜ்யத்தை  திரும்ப பெறுவாய் – தோற்றால் யுத்தத்தில்  உயிரை விட்டு வீர சுவர்கம் அடைவாய்.  யுத்தம் செய்து மரணம் அடைவது க்ஷத்திரியர்களுக்கு உகந்ததே.  பற்றின்றி உன் கடமையை செய்,  நமக்கு விதிக்கப் பட்ட கடமையை  செய்வது வரை  தான் நமது பொறுப்பு – பலன் என்ன என்று முன் கூட்டியே எதிர் பார்த்தால் , அது கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்  – அதுவும் யுத்தம் செய்யும்போது வெற்றி தோல்வி இரு சாராருக்கும் பொதுவே.

இவ்வளவு தூரம் வந்து விட்டு யுத்தம் செய்ய மறுத்தால் கோழை என்று தூற்றுவார்கள்.   மரணத்தை விட கொடியது அது.  மதிப்போடு வாழ்ந்தவனுக்கு இந்த இகழ்ச்சி பொறுக்க முடியாது.  பயந்து ஓடி விட்டான் என்பர். தேவையா இந்த கெட்ட பெயர்? யோசித்துப் பார்.

சுகம், துக்கம், லாபம் நஷ்டம் என்ற கணக்கெல்லாம் வேண்டாம். யுத்தம் செய்ய வந்தாய், அதை முழு மனதோடு செய்.

இது வரை சொன்னது சாங்க்யம் எனும் யோக முறையில் பர தத்வத்தை புரிந்து கொள்வது.  அதுவே புத்தி யோகம் –  .   புத்தி அல்லது ஞானம்.

மனதில் சஞ்சலம் வரும்.  அதில் கட்டுபடாதே. பயப்படாதே.  உழைப்பு தான் மன குழப்பத்தை தீர்க்கும்.  புத்தி யோகம்  அதாவது செய்யும் செயலில் ஈடுபாடு- மோக்ஷத்துக்கு வழி காட்டும். இதில் நஷ்டம் எதுவுமில்லை.   முதல் காரியமாக பயம் போகும், மனதில் தெளிவு உண்டாகும்.  குரு நந்தனா!  யோக சாதனையே பரமானந்தத்தைத் தரும்.   பலவிதமான வழிகள், கொள்கைகள்,  மோக்ஷத்துக்கு வழி காட்டுவதாக சொல்லும். அவை நம்பத் தகுந்ததல்ல.

பதவிக்கும், அதிகாரத்துக்கும் ஆசைப் பட்டு இனிமையான வார்த்தைகளால், வேதமே ஆனாலும் அதன் உட்பொருளை அறியாமல் கண் முன் தெரியும் இந்த உலகமே உண்மை என்பர்.  சுக துக்கங்கள் வினைப் பயனே –  வினை அல்லது ஒருவனின் கர்மாவே பலன் அளிக்க வல்லது.  நல் வினையின் பயன் ஸ்வர்கமே என்பர். இது அவர்களின் அறிவின் எல்லை என்று கொள்ளலாம்.   இவர்களுக்கு சாதனையில் மனம் செல்லாது.

அறிவு என்றும் உடன் இருப்பது. திருட்டு போகாது. எதிர் காற்று வந்து அடித்துக் கொண்டு போகாது. (இந்த கஷ்டங்கள் விவசாயிகள் அனுபவிப்பது- விளைந்த பயிரை முழுவதுமாக அறுவடை செய்யும் முன் இந்த இடையூறுகளை அனுபவிக்கிறார்கள்)

வேதம் மூன்று குணங்களைப் பற்றி பேசுகிறது. ப்ரும்ம ஞானம் இந்த மூன்றையும் விடச் சொல்கிறது. (மூன்று குணங்கள்- சத்வ, ரஜஸ், தமஸ் என்பவை) உடல் சம்பந்தமான அனுபவங்களை தாண்டி வா. அவைகள் க்ஷண நேர அனுபவங்களே – ஒரே நிலையில் மனதைக் கட்டுப் படுத்தி என்றும் உண்மையாக, நேர்மையாக இரு.

அடுத்த ஸ்லோகமும் கடினமானதாகத் தோன்றியது.  காஞ்சி மஹா ஸ்வாமிகளின் விளக்கம் தெளிவாக புரிய வைத்தது.

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது அல்லது மிகப் பெரிய நீர் நிலை, அதில் தளும்ப நீர்.  அதன் அருகில், சிறு குளம்- ‘உதபானே ‘என்பதற்கு குறைவான நீர் கொள்ளும் ஒரு பாத்திரம்- குளமாகவும் இருக்கலாம் அல்லது கையில் வைத்திருக்கும் குடம் நீராகவும் இருக்கலாம்.

சுற்றிலும் நீர் நிறைந்துள்ள இடத்தில் கையிலுள்ள குடம் நீருக்கு என்ன மதிப்பு? அல்லது பயன்.  குடிக்கலாம் என்று கொண்டாலும், அதே நீர் தான் இதிலும்.   அந்த அளவே வேத சாஸ்திர விற்பன்னர்களின் அறிவு ப்ரும்ம ஞானத்தின் முன்.

यावानर्थ उदपाने सर्वथ: सम्प्लुतोदके | तावान् सर्वेषु वेदेषु  ब्राह्मणस्य विजानत: ||

யாவானர்த்த உதபானே சர்வத: ஸம்ப்லுதோதகே |

தாவான் சர்வேஷு வேதேஷு ப்ராம்மணஸ்ய விஜானத: ||

ச.பா: வெள்ளம் பெருக்கெடுத்து வரும் பொழுது, நீருக்காக அதன் அருகில் குளம், கிணறு வெட்டுவோம் என்று முனைய மாட்டார்கள். ராஜ்யத்தையே வெற்றி கொள்ள புறப்படும் அரசன், ஒரு துண்டு நிலத்துக்கு ஆசைப் பட மாட்டான்.  அதே போல ப்ரும்ம ஞானம் பெற விரும்பும் சாதகன், சாதனையின் நடுவில் பெறும் சிறு நன்மைகளை பொருட்படுத்தக் கூடாது,

வேதம் படித்தவனும் அந்த கல்வியில் கரை கண்டவனே. அவர்கள் கர்ம காண்டமான – யாக யக்ஞங்களை வலியுறுத்துகிறார்கள்.  ஸ்வர்கம் அடையலாம் என்பது இதன் பலன் – பலனை எண்ணியே இந்த யாக யக்ஞங்களை செய்கிறார்கள்.  அதுவும் அத்யாவசியமான செயலே. அது பல வழிகளில் ஒரு வழியே.  அதன் மூலமும் என்னை அடையலாம் என்கிறார்.

ச,பா:  செயல்களின் பலன் அவித்யை அல்லது அறியாமையை அகற்றும் அவ்வளவே.    ஒருமுறை செய்த செயலின் நினைவு, எதிர்பார்ப்பு, அதில் கிடைத்த பலன் , தவறுகள், திருத்த வேண்டியவை எவை என்ற   விவரங்களே அனுபவம் என்பது.  ஒவ்வொருமுறையும் இந்த அனுபவம் செயலை இன்னும் மேம்படுத்திச் செய்ய  உதவும்.

அடுத்த ஸ்லோகம் பலனையே எண்ணி செயல்களைச் செய்யாதே.

 

कर्मण्येवाधिकारस्ते  मा फलेषु कदाचन | मा कर्म फलहेतुर्भू: मा ते सन्गोऽस्त्वकर्मणे ||

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன  |

மா கர்மபலஹேதுர்பூ: மா தே சங்கோஸ்து அகர்மணே ||

சாதாரணமாக நாம் விரும்பும் செயல்களைச் செய்யும் பொழுதே,  அதைச் செய்வது வரை தான் ஒருவன் தன் மனம் விரும்பியபடி செய்யலாம்.  அதன் முடிவு எப்படி வரும் என்பதை ஓரளவுக்கு மேல் அனுமானிக்க முடியாது.  அதிகமான பலனை எதிர்பார்த்து கிடைக்கவில்லையெனில் ஏமாற்றமும், மன சோர்வும் தான் மிஞ்சும்.  அதற்காக செய்யவே வேண்டாம் என்று விடவும் முடியாது.

மனமார்ந்த நம்பிக்கையுடனும், நல்லெண்ணத்துடனும் விதி முறைகளை அனுசரித்து நேர்மையாக உன் கடமையைச் செய். தனஞ்ஜயா!  வெற்றியா தோல்வியா என்ற கவலை இல்லாமல் யோகத்தில் இருந்து செய். இந்த இரண்டையும் வெற்றி அல்லது தோல்வி- சமமாக பார்ப்பது யோகம் -devotion- அல்லது ஈடுபாடு எனப்படும்.

தொலை நோக்கோடு பார்.  புத்தியை பயன்படுத்தி எது தேவை எது தேவையில்லை என்பதை உணர்ந்து கொள்.

 

உயிரினங்கள் பிழைத்திருக்கவும், கவலையின்றி வாழவும் வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு யாக யக்ஞங்கள் செய்யப் படுகின்றன. இதனால் மனித குலம் பெறும் நன்மையும் அளவில்லாதது.

இந்த ஸ்வர்கம் எனும் ஆசை கூட இல்லாமல் நீ உன் கடமையைச் செய்.  எந்த சபலத்துக்கும் நீ காரணமாக இருக்காதே. கடமையை செய்யாமல் இருக்கவே வேண்டாம்.

செயல் நன்மையாக முடிந்ததா, தவறா  என்று யோசிக்காதே. இந்த இரண்டும் பாதிக்காத மன நிலை தான் யோகியுடையது.  தனஞ்ஜயா!   கடமையை செய்யும் வரை தான் உனக்கு அதனுடன் உள்ள தொடர்பு. அதனால் யோகியாக செயல் படு.

யோகம் என்பது என்ன?  செய்வன திருந்தச் செய் – அவ்வளவே.  ஞானத்தை அடைந்தவன் வினைப் பயன் என்ற ஒன்றை நம்புவதில்லை.  அவர்களுடைய நாட்டம் பரப்ரும்மத்தை அறிவதே.  பிறவி எனும் பெருங்கடலை கடப்பதேயாகும்.

இதுவரை நீ அறிந்ததிலும், செயல்களிலும் அலுப்பு தட்டும் பொழுது அடுத்து என்ன என்று யோசிப்பாய்.  இன்னமும் நாம் அறியாதது உள்ளது என்று உணர்வாய். ஆத்ம விசாரம் – தான் யார்? நான் என்பது என்ன என்று யோசிக்கத் துவங்குவாய். ஆழ்ந்து ஆராயத் தொடங்குவாய்.  வாழ்வில் இது நாள் வரை செய்த எதுவும் முழு திருப்தியை தராத நிலையில் என்ன செய்தால் மன சாந்தி கிடைக்கும் என்ற எண்ணம் வரும். திடமான மனதுடன் சாதனை செய்யும் யோகிகள் போல ஆவாய்.  தியானத்தில் மனம் அமைதி அடையும்.

அர்ஜுனன் வினவுகிறான்.

திடமான மனதுடையவர் யாவர்? அவர்கள் மொழி என்ன?  தியானத்தில் மனதொன்றி இருப்பது எப்படி சாத்யம்? அதன் பொருட்டு என்ன விதிகள், நியமங்கள் உள்ளன?  ஸ்தித தீ: -அசையாத மனதுடையவர் என்று சொல்லப்படும் சாதகன் அந்த சமமான மன நிலையை எப்படி அடைகிறான்? அதனால் அவர் பெறுவது என்ன?

பகவான் பதில் சொல்கிறார்.

தனக்கென்று எந்த ஆசையும் இன்றி, அனைத்தையும் துறந்தவன்.  தன்னிடம் இருப்பதிலேயே திருப்தி அடைபவன்.  அவனே ஸ்தித ப்ரக்ஞன்.

துக்கம் என்று அவன் மனம் வருந்தாது.   சுகம் என்று துள்ளி குதிக்கவும் மாட்டான்.   ஆசை, பயம், க்ரோதம் போன்றவை அவனை அலைக்கழிக்க விட மாட்டான்.   அவனே திட மனத்தினன்- ஸ்தித தீ:

அனைவரிடமும் ஒரே விதமான சினேக பாவத்துடன் இருப்பவன். அந்தந்த நேரங்களின் சுபமோ, சுபம் அல்லாததோ அப்படியே ஏற்றுக் கொள்வான்.  யாரையும் வெறுக்க மாட்டான். எவரையும் அளவுக்கு அதிகமாக நேசிக்கவும் மாட்டான்.

ஆமை தன் அங்கங்களை சுருக்கிக் கொள்வது போல தன் புலன்களை அடக்கிக் கொள்வான்.

ஆகாரத்தை விட்டு, விரதம் இருக்கும் மனிதர்கள் கூட அந்த ஆகாரத்தின் வாசனையை மறக்க முடியாது, மறப்பதும் இல்லை. விரதம் முடிந்தவுடன் அதே, முன் சுவைத்த   ருசியான உணவுகளைத் தான் தேடுவார்கள்.  ப்ரும்ம ஞானம் அடைந்த பெரியவர்கள், அந்த வாசனையையும் துறந்தவர்கள்.

புலன்கள் அனுபவிப்பதை துறப்பது என்பது எளிதல்ல. கௌந்தேயா! முயன்று தோற்றவர்களே அதிகம்.  உலக விஷயங்களில் பற்று அதிக சக்தியுடன் மனிதனை மாற்றக் கூடியது. அதை வெல்வது என்பது மிக் கடினம்.

(ப்ரும்ம ஞானம் என்பது அஹம் ப்ரும்மாஸ்மி – அந்த ப்ரும்மும் நானே என்ற மனப் பக்குவத்தை அடைந்தவர்கள். உலக ஆசையை அறவே விட்டவர்கள்.  அவர்களால் என்ன லாபம்?  அந்த மனப் பக்குவத்தை அடைந்தவர்கள், மற்ற சாதாரண ஜனங்கள் போலவே தோற்றத்தில் இருந்தாலும் உலக நன்மைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக இருப்பர்.  இது பற்றியும் பின்னால் விவரமாக சொல்கிறார் பகவான்.)

இதையும் என்னிடத்தில் நம்பிக்கை வைத்தவன் சாதிக்கிறான்.  மன அடக்கம் உள்ளவனே புலன்களையும் அடக்குகிறான். அவன் புத்தி தான் ஸ்திரமானது என்கிறோம்.

அதில் என்ன தப்பு என்று கேட்கிறாயா? உலகில் பிறந்தவர்கள் கண் பார்ப்பதையும், காதுகள் கேட்பதையும், வாய் ருசியை விரும்புவதையும் ஏன் மறுக்க வேண்டும்?

இது ஒருமுறை அனுபவித்தால் அடங்காது. மேலும் மேலும் ஆசையை வளர்க்கும்.  கிடைக்காத பொழுது கோபத்தைக் கிளறும். கோபம் தாபத்தை கொடுக்கும். புத்தி அதே நிலையில் இருந்தாலும் மேற்கொண்டு அறிவு வளர்ச்சியோ, சாதனைகளோ செய்ய முடியாது. அதனால் தான் நிம்மதி வேண்டுமானால், ஆசையை அடக்கு என்று சொல்கிறோம்.

சாந்தமாக இருந்து சிந்திப்பவன் புத்தி நல்ல வேலை செய்யும். அவனால் பல காரியங்களை உலக நன்மைக்காக செய்ய முடியும். அதுவே தன்னிஷ்டப்படி நடப்பவன், தன் சுகங்களையே பெரிதாக நினைப்பவன் செய்ய நினைத்தாலும் நற்காரியங்களை செய்ய விடாமல், காற்று வீசும் போக்கில் செல்லும் ஓடம் போல ஆவான்.

அடுத்த ஸ்லோகமும் கடினமானது.

या निशा सर्व बूतानाम् तस्याम् जाग्रति सम्यमि | यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुने: ||

யா நிசா சர்வ பூதானாம் தஸ்யாம் ஜாக்ரதி ஸம்யமீ |

யஸ்யாம் ஜாக்ரதி பூதானி சா நிசா பஸ்யதோ முனே: ||

உயிரினங்கள் அனைத்தும் உறங்கும் இரவு, தன்னை உணர்ந்த முனிவனுக்கு பகல்.  அவை விழித்திருக்கும் நேரம் அவனுக்கு இரவு.

ச.பா: இரவு இயல்பாகவே தாமஸம் என்னும் அறியாமை. அதனால் பொருள்களை சரிவர புரிந்து கொள்ள முடியாமல் போகிறது.  அறிவு உள்ளவன், அந்த இருட்டிலும் கண்டு கொள்கிறான்.  மிகப் பெரிய உண்மை- பர ப்ரும்மம் என்பது இருட்டுக்கு உதாரணமாக சொல்லப் படுகிறது. இது சாதாரணமாக இருளில்- அறியாமையில் மூழ்கி இருப்பவர்களுக்குத் தெரியாது.  ஆனால் ப்ரும்ம ஞானி அறிகிறான் அதாவது விழித்திருக்கிறான்- எனவே அது அவனுக்கு பகல். .

அறியாமையில் மூழ்கி இருப்பவன் இருளில் இருப்பவன். அதே நேரம் மெய்யறிவு அடைந்தவன் அந்த இருளில் வாடுவதில்லை.  உலக இயலில், பொருள் ஈட்டுவதிலும், சிற்றின்பங்களிலும் ஈடுபடுபவன், விழித்திருப்பதாக வைத்துக் கொண்டால் அதில் நாட்டம் இல்லாத மெய்யறிவுடையவன் இருளில் இருக்கிறான்.

அது எப்படி என்றால், மேலும் மேலும் நீர் வந்து நிரம்பிக் கொண்டிருக்கும் சமுத்திரம் அசைவற்று அவைகளை ஏற்றுக் கொள்கிறது. அதே போல காமங்கள்-ஆசைகள் மற்றும் தேவைகள் அந்த ஞானியிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவது இல்லை. அவனிடம் அடங்கி விடுகிறது. சாதாரண மனிதர்கள் அதில் வசமாக மாட்டிக் கொள்கிறார்கள். தான் என்ற அகங்காரம் இன்றி உலகில் இயல்பாக நடந்து கொண்டிருக்கும் சாதகன் தான் மெய்யறிவை பெற்று சாந்தமாக இருக்கிறான்.

பார்த்தா!   இது தான் ப்ரும்ம ஞானம் அதாவது மெய்யறிவு, அதை அடைந்தவன் எப்பொழும் ஆனந்தமாக இருப்பான். துன்பம் அவனை அணுகாது.  வாழ்வின் இறுதி காலத்திலும் ப்ரும்ம நிர்வாணம் எனும் நிலையை அடைகிறான்.

(இது வரை ப்ரும்ம வித்யா எனப்படும் உபனிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், க்ருஷ்ண அர்ஜுன சம்வாதம் -சம்பாஷனை – என்பதில் சாங்க்ய யோகம் எனும் இரண்டாவது அத்யாயம்)

 

ஸ்ரீமத் பகவத் கீதை

அத்யாயம்-3  கர்ம யோகம்

 

பரமார்தம் என்றால் என்ன – க்ருஷ்ணா !  விவரமாக சொல்லு- அதை அறிய நான் என்ன செய்ய வேண்டும்? நீயே என் குரு – உபதேசம் செய் எனவும்,

ஸ்ரீ க்ருஷ்ணர் விவரமாக சொல்கிறார்.   உன்னையே உணர்ந்து கொள் – அதற்கான தகுதியை பெற புலன்களை அடக்குவதே முதல் படி.  உலகில் பிறவி எடுத்தவன் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உண்டு – அதை சரிவர செய்ய வேண்டும்.  அதிலும்  பலனை  நினைக்காமல் செய்வதே நன்மை தரும் – அதன் பின் சாதகனாக ஒருவன் எப்படி இருப்பான் என்பதை விவரிக்கிறார்.

ஆசை, பயம், கோபம், இவற்றை விட வேண்டும். புலன்களை அடக்கி மனதை ஸ்திரமாக கட்டுக்குள்  வைத்திருப்பான் – என்று  “ஸ்தித தீ: “  என்று சாதகணை வர்ணிக்கிறார்.

பயப்படாதே, எடுத்த காரியத்தில் பின் வாங்காதே – என்பது தான் இரண்டாவது அத்தியாயத்தின் சாரம்.

அத்யாயம் -3

சாஸ்திரங்களிலும் மற்றும் வழக்கில் உள்ளதுமான  பல கடமைகளைப் பற்றி இந்த அத்தியாயத்தில் சொல்லப் படுகிறது. ஒவ்வொருவருக்கும் இந்த சமூகத்தில் ஒரு கடமை உள்ளது   கடமையை ஏன் செய்ய வேண்டும் ? மனிதனின் வாழ்வின் தேவைகள்  பல  – அதை நிறைவேற்ற உழைக்க வேண்டியது பொதுவானது.  அது தவிர, தன் நலன், சமூக நலன், தேசத்தின் நலன்,  தெய்வ , முன்னோர்கள் – இவர்களுக்கு செய்ய வேண்டியவை இவைகளும் கடமைகளே.  இது தவிர ஆத்யாத்மிகமாக , யோக சாதனைகள் செய்வதும் , அறிவை வளர்த்துக் கொள்வதும்  ஒரு சிலரேனும் ஏற்று செய்ய வேண்டியுள்ளது.  அதன் பொருட்டு  சாமான்ய கடமைகளை விட்டு  தவம் செய்வது, சன்யாசம் மேற்கொள்வது போன்றவைகளும் அவசியமாகிறது. இரண்டுமே யோகம் – முனைந்து செய்யப் படுவதே.  இவையே, கர்ம யோகம் என்றும், ஞான அல்லது சன்யாச யோகம் என்றும்  சொல்லப்படுகின்றன.

இந்த இடத்தில் அர்ஜுனன் தன் சந்தேகத்தை கேட்கிறான்.

இந்த இரண்டில் எது உயர்ந்தது?   தனக்கு விதிக்கப்பட்ட செயலை விடாமல் செய்யும் கர்ம யோகமா,  அல்லது தன்  அறிவின் மேம்பாட்டுக்காக  ஏற்றுக் கொள்ளும் சன்யாஸமா?  ஏதோ ஒன்றை நான் ஏற்று நடக்க வேண்டும் என்று தீர்மானமாக சொல் – என் மனம் குழம்பி இருக்கும் நிலையில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஸ்ரீ க்ருஷ்ணர் சொல்கிறார் .

என்னைப் பொறுத்தவரை , இந்த உலகில் இரண்டு விதமாகவும் பகவானை அல்லது பரப்ரும்மத்தை அடையலாம்.  ஒன்று சாங்க்யம் என்ற ஞானம் மற்றொன்று கர்மம் அல்லது செயல், கடமையைச் செய்தல் – இரண்டுமே நல்ல வழிகளே.  ஞான மார்கத்தில் செல்பவர்கள் சாங்கயம் என்ற சாதனைகளைச் செய்து ஞானம் பெறட்டும். யோகிகள் கடமையைச் செய்து அதே ஞானத்தை அடைந்து  தன்னையறிவார்கள்.  தன்னையறிவது, என்பது தான் ப்ரும்ம நிலை.  தத்வமஸி  என்ற வேத வாக்யம்.

சங்கர பாஷ்யம்: ஞானம்  கடமையை செய்வதை விட உயர்ந்தது, என்று அர்ஜுனன் நினைப்பது போல இந்த கேள்வி உள்ளது.  சன்யாசிகளுக்குத் தான் ஞான யோகம் என்பதும் பொதுவான எண்ணம்.  ஆனால் பகவான் அப்படியல்ல எங்கிறார். இரண்டு வித்தியாசமான மனோ பாவம் கொண்ட மனிதர்களுக்கு இரண்டு விதமாக வழிகள் உள்ளதாகச் சொல்கிறார். அர்ஜுனனை கடமையைச் செய் என்றும், யுத்தம் செய் என்றும் வற்புறுத்திச் சொன்னவர், அதற்கு  எதிராக ஒன்றைச் சொல்வதால்  அர்ஜுனன் விளக்கம் கேட்கிறான்.  இரண்டு எதிரெதிரான வழிகள், ஒரு மனிதனால் இரண்டையும் கை கொள்ள முடியாது என்பது தெளிவு. நான் எதைத் தேர்ந்தெடுப்பது?  வழிகள் வெவ்வேறானதால் சென்றடையும் இலக்கும் வேறு என்றாகிறது.  கடமையைச் செய்து, அனுபவம் பெற்று ஞானம் அடைந்து பெறும் நன்மையை, ஞானம் பெற சாதனைகள் செய்தும் அடையலாம்,. முதலாவது சுற்று வழி, இரண்டாவது நேர் வழி. ஆனால் முதலாவது எளிது, இரண்டாவது கடினம்.

இதை அடுத்த ஸ்லோகத்தில் பகவான் சொல்கிறார்.

எந்த கடமையையும் செய்யவே ஆரம்பிக்காமலும்,  நான் சன்யாசி என்று மட்டும்  சொல்லிக் கொள்வதாலும், ஒருவன் சித்தியை அடைய முடியாது.

ச.பா: கர்மா என்று இங்கு சொல்லப் படுவது வேத சாஸ்திரங்களில் சொல்லப் பட்ட யாகம் முதலானவை. முன் பிறவியில் செய்த பாபங்களைத் தொலைக்கவும், மனதை தூய்மையாக்கிக் கொள்ளவும் இவைகளைச் செய் என்று வேத சாஸ்திரங்கள் வகுத்துள்ள நெறிகளே இவை. மனம் தூய்மையானால்  தெளிவான புரிதலும், அதைத் தொடர்ந்து நல்ல குணங்களும், அறிவும் வரும்.

இந்த கர்மாக்கள் சன்யாசிக்கு இல்லை. அதனால் சன்யாசி நைஷ்கர்ம்யன் – கர்மா என்ற பந்தம் இல்லாதவன் என்கிறார்கள்.  அதைத் தான் ‘கர்மணாமனாரம்பாத் ‘ எந்த செயலையும் செய்யவே ஆரம்பிக்காமல், நான் கர்ம             பந்தத்தை தொலைத்து விட்டேன் என்பது அபத்தம் என்கிறார்.

ஒரு க்ஷண நேரம் கூட ஏதாவது செய்யாமல் மனிதன், மற்ற உயிரனங்கள்  இருப்பதில்லை. அவனவன், அதனதன் இயல்பு படி ஏதோ செய்து கொண்டேயிருப்பதை அறிவோம்.

கர்மேந்திரியங்கள்- அவயவங்கள், கண் முதலானவை இவற்றை அடக்கி விட்டு மனதால் நினைத்துக் கொண்டே இருந்தால் அவன் செய்வது மித்யாசாரம்- ஏமாற்று வேலை எங்கிறார்.உண்மையாக செய்பவன் முதலில் மனதை அடக்க வேண்டும்.

உலகில் வாழவே, ஏதோ செய்து தான் ஆக வேண்டும். ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட தனக்கு முடிந்தை செய்வதே நன்று.  யாக யக்ஞங்கள் செய்வது ஒரு பக்கம்- அதை வேத சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் செய்வார்கள். மற்றபடி சாதாரண மக்கள் செய்ய வேண்டியதும் சில உண்டு. ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதி யக்ஞங்களை செய்து தேவதைகளை திருப்தி செய்யுங்கள். அவர்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். பரஸ்பரம் உதவி செய்து கொண்டு இஷ்ட காமங்களை அனுபவியுங்கள் என்றார்.  யாக யக்ஞங்கள் மூலம் தேவதைகள் மகிழ்ச்சியடைவார்கள். மழை பொழிவது, கால் நடைகள் பெருகுவது, பயிர் செழிப்பது  போன்ற செயல்கள் தேவதைகள் அருளால் நடப்பது. இவைகளைப் பெற்றுக் கொண்டு தன் பங்கு செயலை- யாகத்தில் தேவதைகளை அழைத்து ஹவிஸ் என்பதைத் தருவதும், அதை அக்னி கொண்டு அவர்களிடம் சேர்ப்பிக்கும் என்பதும் யாகத்தில் ஹோமம் செய்வதன் பொருள். – செய்யாமல் விடுபவனை திருடன் என்கிறார்.

யாகத்தில் தேவதைகளுக்கு ஹவிஸ், மற்ற ஜீவன்களுக்கு அன்ன தானம் முதலியவை செய்து மீந்ததைத் தான்  கர்த்தாவான வேத வித்துக்கள் உண்பார்கள். அதனால் அவர்கள் தூய்மையாகிறார்கள். அதுவே, தன் பொருட்டு மட்டும் சமைத்து உண்பவன், பாபத்தை உண்பவனாகிறான்.

அடுத்து உலகமே ஒரு சக்கரமாகவும், அது சுழலுவதையும் விளக்குகிறார்.

अन्नाद्भ्वन्ति भूतानि  पर्जन्यादन्नसम्भव: |   यज्ज्ञाद्भवति पर्जन्यो यज्ज्ञ कर्मसमुद्भव: |

कर्म ब्रह्मोद्भवम् विद्धि  ब्रह्माक्षर समुद्भवम् | तस्माद्सर्वगतम् ब्रह्म नित्यम् यञ्जे प्रतिष्टितम् ||

அன்னம் – உணவே ஜீவன்களை வாழ வைக்கிறது.  அன்னம் மழையினால் பெறப் படுகிறது. மழை வர யக்ஞங்கள் செய்யப் படுகின்றன- யக்ஞம் கர்மத்தை அடிப்படையாக கொண்டுள்ளது -கர்மா ப்ரும்மத்தில்,  ப்ரும்ம அக்ஷர சம்பவம்  – இந்த சக்கரம் இடைவிடாது சுழன்று கொண்டே இருக்கிறது.

இந்த சக்கரம்   சுழன்று கொண்டே இருக்கும்.  வேத வித்துக்களான அறிஞர்கள் மட்டுமன்றி, அனைவருமே இந்த சுழற்சியை பாதுகாக்கின்றனர்.  ஆத்மாவை அறிந்தவன், தனக்குள்ளேயே வாழ்பவன். அவனுக்குத் தான் செயல் என்று எதுவுமில்லை. அப்படி இருப்பவன் சன்யாசி அல்லது சாங்க்யன். எந்த செயலிலும் அவனுக்கு நாட்டமில்லை, பெறும் பலனும் இல்லை. எதைச் செய்யாமல் விடினும் நஷ்டமுமில்லை. நீ இன்னும் அந்த நிலையை எட்டவில்லை. அதனால் பற்றின்றி உன் செயலை செய். பற்றின்றி செயல்களைச் செய்தும் நல்ல கதியை அடையலாம்.  அப்படி சித்தி அடைந்தவர்கள் ஜனகர் போன்றவர்கள்.  ராஜரிஷி என்று அழைக்கப்படுபவர். தன் கடமையை விடாமல் செய்து மேன்மையடைந்தவர்கள் அவரைப் போன்றே வேறு சிலரும் உண்டு.

ச.பா:  ஜனகர் ஏன் தன் கடமையை விடாமல் செய்தார், ப்ரும்மத்வம் எனும் மேல் படியை அடைய முயற்சிக்கவில்லை என்பதற்கு, சாந்தோக்ய உபனிஷதிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார் ஸ்ரீ சங்கரர்.

ஜனகர் போன்ற அறிஞர்,  நான்காவது வர்ணமான சன்யாசத்தை மேற்கொள்ள முடியாது. (பால்யம், யௌவனம், க்ருஹஸ்தம், சன்யாசம் என்ற நான்கு). க்ஷத்ரியர்களுக்கு அதற்கான ஒப்புதல் கிடையாது. ப்ராரப்த கர்மா-முன் வினை தான் ஒரு ஜீவனின் பிறப்பை நிச்சயிக்கிறது.  அவருடைய முன் வினை காரணமாக ,க்ஷத்திரியனாக பிறந்தவர்  அதே முன்வினையில் செய்த நற்காரியங்களின் பலனாகவோ, சாதனைகளாலோ ஞானத்துடன் பிறந்தவர்.  செய்யும் செயலை திருந்தச் செய்து தன் கடமையை செய்யும் பொழுதே அந்தராத்மா சுத்தமாக. ஆத்ம விசாரமும் செய்து வந்திருந்தவர். கடமையை அவர் விட்டால், மற்ற பிரஜைகளும் அவரை பின்பற்றுவர்.  அதனால் அவர் ப்ரும்மத்வம் என்ற அமரத்வம் அடையா விட்டாலும்  மோக்ஷம் அடைவதில் தடங்கல் எதுவுமில்லை.

அர்ஜுனா! நீயும் க்ஷத்ரியன் – அதனால் எந்த காரணம் கொண்டும் ப்ரஜா ரக்ஷணம் என்ற செயலை விட முடியாது.

அரசனாக, அல்லது  எதோ ஒரு துறையில் ஸ்ரேஷ்டனாக – முன்னிலையில் இருப்பவன் எதையெல்லாம் செய்கிறானோ, அதைப் பார்த்து சாதாரண ஜனங்கள் பின் பற்றுவார்கள். அவன் இது ப்ரமாணம்- இது நம்பத்தகுந்தது என்றால் அவர்களும் நம்புவார்கள்.

பார்த்தா! எனக்கு மூவுலகிலும்  ஆக வேண்டிய காரியம் எதுவுமில்லை.  இது வரை கிடைக்கப் பெறாததை இனி பெற வேண்டும் என்ற ஆசையும் இல்லை. ஆனாலும் நான் கர்ம மார்கத்தில் தான் இருக்கிறேன், செயல்களை செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

நான் எதுவும் செய்யாமல் விட்டால், உலகத்தார் என்னைப் பார்த்து பின்பற்றுவார்கள். உலகமே அழியும்.  உலகம் நிர்மூலமாக நானே காரணமாவேன்.

ஒரு விஷயத்தில் பற்று வைத்து உண்மையாக அதை நல்ல முறையில் செய்ய முயலும் சாதாரண மனிதனைப் போலவே சாதகனாக ஞான மார்கத்தில் உள்ளவனும் அந்த செயலைச் செய்ய வேண்டும். ஆனால் அவன் எதை எண்ணி செய்கிறானோ அந்த பற்றுதல், சுய நலம்  இல்லாமல் செய்ய வேண்டும். அதனால் என்ன லாபம் என்றால், உலகத்தில் நன்மை பெருகும்.

இப்படி ஒரு முனைப்போடு செய்து காட்டினால், அதை பின் பற்றும் மற்றவர்கள் அதன் மதிப்பை உணர்வார்கள்.  இதில் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதும் தேவையில்லை.  கடமையை செய்வார்கள் என்பதே பெரிய பலன்.  இயல்பாக செய்யும் செயல்களையும் கூட அக்ஞானி தான் செய்தேன் என்று சொல்லிக் கொள்வான்.  தத்வம் அறிந்தவர்கள், குணங்கள் (சத்வ, ரஜஸ், தமஸ்),   குணங்கள், செயலை ஊக்குவிக்கின்றன, ஏதோ தானே செய்தாகச் சொல்கிறான் என்று அதை பொருட்படுத்துவதும் இல்லை.

இயல்பாக பிறவியில் வரும் குணம் சத்வமோ, ராஜஸமோ, தாமஸமோ அதற்கேற்ப அவனவன் செயல் இருக்கும். முற்றும் அறிந்தவனுக்கு அதன் பலா பலன் அல்லது உயர்வு, தாழ்வு தெரியும்.  மற்றவர்களுக்குத் தெரியாது.

என்னிடத்தில் உன் செயல்களை முழுவதுமாக ஒப்படைத்து விடு.   நான் சேதனன், பரம் பொருள் என்னை ஆட்டுவிக்கிறது, என்ற அத்யாத்ம எண்ணத்துடன், யுத்தத்தைச் செய். எந்த பயமும், தயக்கமும் வேண்டாம்.

இது தான் என்னுடைய கொள்கை. இதை அறிந்து பின் பற்றுபவர்களும் நல்ல கதியை அடைவார்கள்.  சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவார்கள். அதுவன்றி, இதில் குற்றம் காண்பவர்கள், என் கொள்கையை ஏற்காதவர்கள், ஞானமும் பெறாமல், மூடனாக, அழிவார்கள்.

ஞானியானாலும் பிறந்த பிறப்புக்கு ஏற்றவாறு செயல்களைச் செய்கிறான். அவனை நிர்பந்தித்து என்ன பயன்?  தன் போக்கில் இயற்கையை அடைகிறான்.

ச.பா: பிறப்பிலேயே அதனதன் இயல்பு தீர்மானிக்கப் பட்டு விடுகிறது, அதன்படி தான் நடக்கும் என்றால், மனித முயற்சி என்பதும், சாதனைகளும் என்ன பலன் தரும்? இந்த கேள்விக்கு அடுத்த ஸ்லோகத்தில் பகவான் பதில் சொல்கிறார்.

விருப்பும், வெறுப்பும் புலன்கள் மூலமே உணரப் படுகின்றன, செயல்களில் வெளிப்படுகின்றன,    இவை தான் முதல் எதிரி, இதை அடக்க பழக வேண்டும்.

ச.பா: இந்த இரண்டு இடையூறுகளையும் அடக்கியவனே, அடுத்து என்ன என்று அறிய முயலுவான். அந்த சமயம் குரு உபதேசமும், சுய கட்டுப்பாடும் அவனை உயர்த்தும்.  விருப்பும், வெறுப்பும் அதைச் சார்ந்த கோபமும், லோபமும் ஒவ்வொன்றாக கழண்டு போக அவனுக்கு உபதேசத்தின் பலன் மனதில் உறைக்கும்.  நடுவழியில் எதிர்படும் திருடன் போல  நன்மையை நோக்கிச் செல்லும் மனிதனின் சாதனையில் இந்த இரண்டு குணங்களும் எதிரில் வரும். அதைத் தவிர்த்து மேற் கொண்டு செல்ல  மனோதிடம் வேண்டும்.  இந்த மனோ திடம் வரும் வரை இயல்பான ஆசை, மற்ற உலகியல் ஈர்ப்புகள், தர்மம் என்பதை தவறாக புரிந்து கொள்வது,  எதையோ பின்பற்றி,  தன்  தர்மத்தை விடுவது போன்ற இடையூறுகள் வரும்.

தனக்கு விதிக்கப் பட்ட கடமையை செய்வது தான் தர்மம். பர தர்மம்  – மற்றவர்கள் நன்மையை பெறுகிறார்களே, நாமும் அதை பின் பற்றுவோம் என்று வழி  மாறிச் சென்றால் நன்மையைத் தராது. தன் கடமையை செய்து அதில் மரணமே வந்தாலும் நல்லது, மற்றவனின் தர்மத்தை அனுசரிப்பது அதை விட அதிக துன்பம் தரும்.

அர்ஜுனன் கேட்கிறான்:  பாபம் செய் என்று தூண்டுவது யார்? அல்லது எது? பலமாக இழுத்து பாப காரியத்தில் ஈடுபடுத்துகிறதே ஏதோ ஒரு சக்தி, அது என்ன?

ஸ்ரீ  க்ருஷ்ண பகவான் பதில் சொல்கிறார்: இதோ, காமம்  அதாவது ஆசை, என்ற ஒன்று க்ரோதம் – ஆத்திரம் என்ற ஒன்று- இவை போதாதா மனிதனை பாபம் செய்யத் தூண்ட?  இரண்டுமே ரஜோ குணத்தில் பிறந்தவை.  இவைகளுக்கு தீனி போட்டு கட்டுப் படியாகாது – திருப்தியே அடையாத குணங்கள். பெரும் தீமையே உருவானவை. முதல் எதிரி இவை தான்.

ச.பா: உலகில் எல்லா தீமைகளுக்கும் காரணம் ஆசை தான். ஆசை நிறைவேறவில்லையெனில் கோபமாக, க்ரோதமாக மாறுகிறது. வாஸ்தவத்தில் ரஜோ குணம் செயலில் ஈடுபடத்  தேவையே. ஆசையின்றி ஒரு செயலும் துவங்கப் பட மாட்டாது.  அதிகமாகும் பொழுது ஆசையே விபரீதமாகிறது.

புகை மண்டி இருக்கும் இடத்தில் அக்னி இருப்பது முதலில் தெரியாது.  அருகில் செல்லச் செல்ல புகை விலகி அக்னி கண்ணுக்குத் தெரியும்.  அதே போல புழுதி படிந்த கண்ணாடி அதன் குணம் தெரியாமல் புழுதி மறைக்கும் – சுத்தம் செய்தால் கண்ணாடி நம்மை ப்ரதி பலிக்கும். கருவை காக்கும் கருப்பை இயற்கை அளித்த பாதுகாப்பு. இவைகளை முதன் முறை காணும் பொழுது தென்படவில்லை.

இதம் ஆவ்ருதம்- இது சூழப் பட்டுள்ளது – இந்த ‘இதம்’ என்ற சொல் குறிப்பது என்ன?

அறிவுள்ளவன் இதை புரிந்து கொள்வான்- தன்னை ஆட்டுவிப்பது ஆசையே என்பதை. சாதாரண மனிதர்கள் உணர மாட்டார்கள்.  ஆசைப் பட்டு ஒரு பொருள் கிடைத்தவுடன் அடையும் மகிழ்ச்சியே பொதுவாக அனைவரும் அறிவோம். அடுத்த கட்டமாக பேராசை தான் கெடுதல் என்று சொல்வோம். ஆனால், ஆசையை கட்டுப் படுத்த நினைக்கும் சாதகனுக்கு ஆரம்பத்திலேயே இதன் தன்மை  தெரிந்து விடும்.

ஆசை மறைத்திருப்பது அறிவை.  ஞானம் சுலபமாக அடைய முடியாதது.  பிறவியிலேயே ஓரளவு ஞானம் உள்ளவர்கள்  உடனே தன்னை சுதாகரித்துக் கொள்வர்.

இதன் அடிப்படையாக அல்லது இருப்பிடமாக உள்ளவை புலன்கள், மனம், புத்தி.  புகை போல சூழ்ந்துள்ளவை. எனவே, பரத குலத்து வீரனே, முதலில் இந்த இந்திரியங்களை கட்டுபடுத்து.  இவைகள் தான் ஞானம், அதற்கு மேல் விக்ஞானம் என்பதை நாசம் செய்யும் இடர்.

இந்திரியங்கள் அதாவது புலன்கள் ஐந்தும், கேட்பது போன்ற உணர்வுகள், பௌதிகமான உடலை விட நுணுக்கமானவை.  உடல் இயங்குவதை விட வேகமாகவும் பரவலாகவும்  இயங்கக் கூடியவை.  இதை விட அதிக நுணுக்கமானது மனம்.  எண்ணம், நினைவாற்றல், விருப்பு வெறுப்புகள் மனதின் கட்டுப் பாட்டில் உள்ளன.  மனதில் சந்தேகங்கள், தவறுகள், ஆசைகள்  ஏற்படலாம். மனதையும் ஆட்டி வைப்பது புத்தி. புத்தி தீர்மானமாக ஒரு வழியைச் சொல்லும். புத்தியைக் காட்டிலும் அதிக வல்லமையுடையது மனிதனது சரீரத்திலேயே உறையும் பரம் பொருளின் அம்சமான ஆத்மா.

இவ்வாறாக, வரிசையாக புத்தியின் தன்மையை உணர்ந்து, ஆத்ம சக்தியை உணர்ந்து கொள்.  பிறகு எதிரியான ஆசைகள் போன்றவைகளை முறியடிப்பாய்.

(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தையில் யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் கர்ம யோகம் என்ற மூன்றாவது அத்யாயம்).

 

ஸ்ரீமத் பகவத் கீதை

 

அத்யாயம்-3  கர்ம யோகம்

 

பரமார்தம் என்றால் என்ன – க்ருஷ்ணா !  விவரமாக சொல்லு- அதை அறிய நான் என்ன செய்ய வேண்டும்? நீயே என் குரு – உபதேசம் செய் எனவும்,

ஸ்ரீ க்ருஷ்ணர் விவரமாக சொல்கிறார்.   உன்னையே உணர்ந்து கொள் – அதற்கான தகுதியை பெற புலன்களை அடக்குவதே முதல் படி.  உலகில் பிறவி எடுத்தவன் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உண்டு – அதை சரிவர செய்ய வேண்டும்.  அதிலும்  பலனை  நினைக்காமல் செய்வதே நன்மை தரும் – அதன் பின் சாதகனாக ஒருவன் எப்படி இருப்பான் என்பதை விவரிக்கிறார்.

ஆசை, பயம், கோபம், இவற்றை விட வேண்டும். புலன்களை அடக்கி மனதை ஸ்திரமாக கட்டுக்குள்  வைத்திருப்பான் – என்று  “ஸ்தித தீ: “  என்று சாதகணை வர்ணிக்கிறார்.

பயப்படாதே, எடுத்த காரியத்தில் பின் வாங்காதே – என்பது தான் இரண்டாவது அத்தியாயத்தின் சாரம்.

அத்யாயம் -3

சாஸ்திரங்களிலும் மற்றும் வழக்கில் உள்ளதுமான  பல கடமைகளைப் பற்றி இந்த அத்தியாயத்தில் சொல்லப் படுகிறது. ஒவ்வொருவருக்கும் இந்த சமூகத்தில் ஒரு கடமை உள்ளது   கடமையை ஏன் செய்ய வேண்டும் ? மனிதனின் வாழ்வின் தேவைகள்  பல  – அதை நிறைவேற்ற உழைக்க வேண்டியது பொதுவானது.  அது தவிர, தன் நலன், சமூக நலன், தேசத்தின் நலன்,  தெய்வ , முன்னோர்கள் – இவர்களுக்கு செய்ய வேண்டியவை இவைகளும் கடமைகளே.  இது தவிர ஆத்யாத்மிகமாக , யோக சாதனைகள் செய்வதும் , அறிவை வளர்த்துக் கொள்வதும்  ஒரு சிலரேனும் ஏற்று செய்ய வேண்டியுள்ளது.  அதன் பொருட்டு  சாமான்ய கடமைகளை விட்டு  தவம் செய்வது, சன்யாசம் மேற்கொள்வது போன்றவைகளும் அவசியமாகிறது. இரண்டுமே யோகம் – முனைந்து செய்யப் படுவதே.  இவையே, கர்ம யோகம் என்றும், ஞான அல்லது சன்யாச யோகம் என்றும்  சொல்லப்படுகின்றன.

இந்த இடத்தில் அர்ஜுனன் தன் சந்தேகத்தை கேட்கிறான்.

இந்த இரண்டில் எது உயர்ந்தது?   தனக்கு விதிக்கப்பட்ட செயலை விடாமல் செய்யும் கர்ம யோகமா,  அல்லது தன்  அறிவின் மேம்பாட்டுக்காக  ஏற்றுக் கொள்ளும் சன்யாஸமா?  ஏதோ ஒன்றை நான் ஏற்று நடக்க வேண்டும் என்று தீர்மானமாக சொல் – என் மனம் குழம்பி இருக்கும் நிலையில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஸ்ரீ க்ருஷ்ணர் சொல்கிறார் .

என்னைப் பொறுத்தவரை , இந்த உலகில் இரண்டு விதமாகவும் பகவானை அல்லது பரப்ரும்மத்தை அடையலாம்.  ஒன்று சாங்க்யம் என்ற ஞானம் மற்றொன்று கர்மம் அல்லது செயல், கடமையைச் செய்தல் – இரண்டுமே நல்ல வழிகளே.  ஞான மார்கத்தில் செல்பவர்கள் சாங்கயம் என்ற சாதனைகளைச் செய்து ஞானம் பெறட்டும். யோகிகள் கடமையைச் செய்து அதே ஞானத்தை அடைந்து  தன்னையறிவார்கள்.  தன்னையறிவது, என்பது தான் ப்ரும்ம நிலை.  தத்வமஸி  என்ற வேத வாக்யம்.

சங்கர பாஷ்யம்: ஞானம்  கடமையை செய்வதை விட உயர்ந்தது, என்று அர்ஜுனன் நினைப்பது போல இந்த கேள்வி உள்ளது.  சன்யாசிகளுக்குத் தான் ஞான யோகம் என்பதும் பொதுவான எண்ணம்.  ஆனால் பகவான் அப்படியல்ல எங்கிறார். இரண்டு வித்தியாசமான மனோ பாவம் கொண்ட மனிதர்களுக்கு இரண்டு விதமாக வழிகள் உள்ளதாகச் சொல்கிறார். அர்ஜுனனை கடமையைச் செய் என்றும், யுத்தம் செய் என்றும் வற்புறுத்திச் சொன்னவர், அதற்கு  எதிராக ஒன்றைச் சொல்வதால்  அர்ஜுனன் விளக்கம் கேட்கிறான்.  இரண்டு எதிரெதிரான வழிகள், ஒரு மனிதனால் இரண்டையும் கை கொள்ள முடியாது என்பது தெளிவு. நான் எதைத் தேர்ந்தெடுப்பது?  வழிகள் வெவ்வேறானதால் சென்றடையும் இலக்கும் வேறு என்றாகிறது.  கடமையைச் செய்து, அனுபவம் பெற்று ஞானம் அடைந்து பெறும் நன்மையை, ஞானம் பெற சாதனைகள் செய்தும் அடையலாம்,. முதலாவது சுற்று வழி, இரண்டாவது நேர் வழி. ஆனால் முதலாவது எளிது, இரண்டாவது கடினம்.

இதை அடுத்த ஸ்லோகத்தில் பகவான் சொல்கிறார்.

எந்த கடமையையும் செய்யவே ஆரம்பிக்காமலும்,  நான் சன்யாசி என்று மட்டும்  சொல்லிக் கொள்வதாலும், ஒருவன் சித்தியை அடைய முடியாது.

ச.பா: கர்மா என்று இங்கு சொல்லப் படுவது வேத சாஸ்திரங்களில் சொல்லப் பட்ட யாகம் முதலானவை. முன் பிறவியில் செய்த பாபங்களைத் தொலைக்கவும், மனதை தூய்மையாக்கிக் கொள்ளவும் இவைகளைச் செய் என்று வேத சாஸ்திரங்கள் வகுத்துள்ள நெறிகளே இவை. மனம் தூய்மையானால்  தெளிவான புரிதலும், அதைத் தொடர்ந்து நல்ல குணங்களும், அறிவும் வரும்.

இந்த கர்மாக்கள் சன்யாசிக்கு இல்லை. அதனால் சன்யாசி நைஷ்கர்ம்யன் – கர்மா என்ற பந்தம் இல்லாதவன் என்கிறார்கள்.  அதைத் தான் ‘கர்மணாமனாரம்பாத் ‘ எந்த செயலையும் செய்யவே ஆரம்பிக்காமல், நான் கர்ம             பந்தத்தை தொலைத்து விட்டேன் என்பது அபத்தம் என்கிறார்.

ஒரு க்ஷண நேரம் கூட ஏதாவது செய்யாமல் மனிதன், மற்ற உயிரனங்கள்  இருப்பதில்லை. அவனவன், அதனதன் இயல்பு படி ஏதோ செய்து கொண்டேயிருப்பதை அறிவோம்.

கர்மேந்திரியங்கள்- அவயவங்கள், கண் முதலானவை இவற்றை அடக்கி விட்டு மனதால் நினைத்துக் கொண்டே இருந்தால் அவன் செய்வது மித்யாசாரம்- ஏமாற்று வேலை எங்கிறார்.உண்மையாக செய்பவன் முதலில் மனதை அடக்க வேண்டும்.

உலகில் வாழவே, ஏதோ செய்து தான் ஆக வேண்டும். ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட தனக்கு முடிந்தை செய்வதே நன்று.  யாக யக்ஞங்கள் செய்வது ஒரு பக்கம்- அதை வேத சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் செய்வார்கள். மற்றபடி சாதாரண மக்கள் செய்ய வேண்டியதும் சில உண்டு. ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதி யக்ஞங்களை செய்து தேவதைகளை திருப்தி செய்யுங்கள். அவர்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். பரஸ்பரம் உதவி செய்து கொண்டு இஷ்ட காமங்களை அனுபவியுங்கள் என்றார்.  யாக யக்ஞங்கள் மூலம் தேவதைகள் மகிழ்ச்சியடைவார்கள். மழை பொழிவது, கால் நடைகள் பெருகுவது, பயிர் செழிப்பது  போன்ற செயல்கள் தேவதைகள் அருளால் நடப்பது. இவைகளைப் பெற்றுக் கொண்டு தன் பங்கு செயலை- யாகத்தில் தேவதைகளை அழைத்து ஹவிஸ் என்பதைத் தருவதும், அதை அக்னி கொண்டு அவர்களிடம் சேர்ப்பிக்கும் என்பதும் யாகத்தில் ஹோமம் செய்வதன் பொருள். – செய்யாமல் விடுபவனை திருடன் என்கிறார்.

யாகத்தில் தேவதைகளுக்கு ஹவிஸ், மற்ற ஜீவன்களுக்கு அன்ன தானம் முதலியவை செய்து மீந்ததைத் தான்  கர்த்தாவான வேத வித்துக்கள் உண்பார்கள். அதனால் அவர்கள் தூய்மையாகிறார்கள். அதுவே, தன் பொருட்டு மட்டும் சமைத்து உண்பவன், பாபத்தை உண்பவனாகிறான்.

அடுத்து உலகமே ஒரு சக்கரமாகவும், அது சுழலுவதையும் விளக்குகிறார்.

अन्नाद्भ्वन्ति भूतानि  पर्जन्यादन्नसम्भव: |   यज्ज्ञाद्भवति पर्जन्यो यज्ज्ञ कर्मसमुद्भव: |

कर्म ब्रह्मोद्भवम् विद्धि  ब्रह्माक्षर समुद्भवम् | तस्माद्सर्वगतम् ब्रह्म नित्यम् यञ्जे प्रतिष्टितम् ||

அன்னம் – உணவே ஜீவன்களை வாழ வைக்கிறது.  அன்னம் மழையினால் பெறப் படுகிறது. மழை வர யக்ஞங்கள் செய்யப் படுகின்றன- யக்ஞம் கர்மத்தை அடிப்படையாக கொண்டுள்ளது -கர்மா ப்ரும்மத்தில்,  ப்ரும்ம அக்ஷர சம்பவம்  – இந்த சக்கரம் இடைவிடாது சுழன்று கொண்டே இருக்கிறது.

இந்த சக்கரம்   சுழன்று கொண்டே இருக்கும்.  வேத வித்துக்களான அறிஞர்கள் மட்டுமன்றி, அனைவருமே இந்த சுழற்சியை பாதுகாக்கின்றனர்.  ஆத்மாவை அறிந்தவன், தனக்குள்ளேயே வாழ்பவன். அவனுக்குத் தான் செயல் என்று எதுவுமில்லை. அப்படி இருப்பவன் சன்யாசி அல்லது சாங்க்யன். எந்த செயலிலும் அவனுக்கு நாட்டமில்லை, பெறும் பலனும் இல்லை. எதைச் செய்யாமல் விடினும் நஷ்டமுமில்லை. நீ இன்னும் அந்த நிலையை எட்டவில்லை. அதனால் பற்றின்றி உன் செயலை செய். பற்றின்றி செயல்களைச் செய்தும் நல்ல கதியை அடையலாம்.  அப்படி சித்தி அடைந்தவர்கள் ஜனகர் போன்றவர்கள்.  ராஜரிஷி என்று அழைக்கப்படுபவர். தன் கடமையை விடாமல் செய்து மேன்மையடைந்தவர்கள் அவரைப் போன்றே வேறு சிலரும் உண்டு.

ச.பா:  ஜனகர் ஏன் தன் கடமையை விடாமல் செய்தார், ப்ரும்மத்வம் எனும் மேல் படியை அடைய முயற்சிக்கவில்லை என்பதற்கு, சாந்தோக்ய உபனிஷதிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார் ஸ்ரீ சங்கரர்.

ஜனகர் போன்ற அறிஞர்,  நான்காவது வர்ணமான சன்யாசத்தை மேற்கொள்ள முடியாது. (பால்யம், யௌவனம், க்ருஹஸ்தம், சன்யாசம் என்ற நான்கு). க்ஷத்ரியர்களுக்கு அதற்கான ஒப்புதல் கிடையாது. ப்ராரப்த கர்மா-முன் வினை தான் ஒரு ஜீவனின் பிறப்பை நிச்சயிக்கிறது.  அவருடைய முன் வினை காரணமாக ,க்ஷத்திரியனாக பிறந்தவர்  அதே முன்வினையில் செய்த நற்காரியங்களின் பலனாகவோ, சாதனைகளாலோ ஞானத்துடன் பிறந்தவர்.  செய்யும் செயலை திருந்தச் செய்து தன் கடமையை செய்யும் பொழுதே அந்தராத்மா சுத்தமாக. ஆத்ம விசாரமும் செய்து வந்திருந்தவர். கடமையை அவர் விட்டால், மற்ற பிரஜைகளும் அவரை பின்பற்றுவர்.  அதனால் அவர் ப்ரும்மத்வம் என்ற அமரத்வம் அடையா விட்டாலும்  மோக்ஷம் அடைவதில் தடங்கல் எதுவுமில்லை.

அர்ஜுனா! நீயும் க்ஷத்ரியன் – அதனால் எந்த காரணம் கொண்டும் ப்ரஜா ரக்ஷணம் என்ற செயலை விட முடியாது.

அரசனாக, அல்லது  எதோ ஒரு துறையில் ஸ்ரேஷ்டனாக – முன்னிலையில் இருப்பவன் எதையெல்லாம் செய்கிறானோ, அதைப் பார்த்து சாதாரண ஜனங்கள் பின் பற்றுவார்கள். அவன் இது ப்ரமாணம்- இது நம்பத்தகுந்தது என்றால் அவர்களும் நம்புவார்கள்.

பார்த்தா! எனக்கு மூவுலகிலும்  ஆக வேண்டிய காரியம் எதுவுமில்லை.  இது வரை கிடைக்கப் பெறாததை இனி பெற வேண்டும் என்ற ஆசையும் இல்லை. ஆனாலும் நான் கர்ம மார்கத்தில் தான் இருக்கிறேன், செயல்களை செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

நான் எதுவும் செய்யாமல் விட்டால், உலகத்தார் என்னைப் பார்த்து பின்பற்றுவார்கள். உலகமே அழியும்.  உலகம் நிர்மூலமாக நானே காரணமாவேன்.

ஒரு விஷயத்தில் பற்று வைத்து உண்மையாக அதை நல்ல முறையில் செய்ய முயலும் சாதாரண மனிதனைப் போலவே சாதகனாக ஞான மார்கத்தில் உள்ளவனும் அந்த செயலைச் செய்ய வேண்டும். ஆனால் அவன் எதை எண்ணி செய்கிறானோ அந்த பற்றுதல், சுய நலம்  இல்லாமல் செய்ய வேண்டும். அதனால் என்ன லாபம் என்றால், உலகத்தில் நன்மை பெருகும்.

இப்படி ஒரு முனைப்போடு செய்து காட்டினால், அதை பின் பற்றும் மற்றவர்கள் அதன் மதிப்பை உணர்வார்கள்.  இதில் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதும் தேவையில்லை.  கடமையை செய்வார்கள் என்பதே பெரிய பலன்.  இயல்பாக செய்யும் செயல்களையும் கூட அக்ஞானி தான் செய்தேன் என்று சொல்லிக் கொள்வான்.  தத்வம் அறிந்தவர்கள், குணங்கள் (சத்வ, ரஜஸ், தமஸ்),   குணங்கள், செயலை ஊக்குவிக்கின்றன, ஏதோ தானே செய்தாகச் சொல்கிறான் என்று அதை பொருட்படுத்துவதும் இல்லை.

இயல்பாக பிறவியில் வரும் குணம் சத்வமோ, ராஜஸமோ, தாமஸமோ அதற்கேற்ப அவனவன் செயல் இருக்கும். முற்றும் அறிந்தவனுக்கு அதன் பலா பலன் அல்லது உயர்வு, தாழ்வு தெரியும்.  மற்றவர்களுக்குத் தெரியாது.

என்னிடத்தில் உன் செயல்களை முழுவதுமாக ஒப்படைத்து விடு.   நான் சேதனன், பரம் பொருள் என்னை ஆட்டுவிக்கிறது, என்ற அத்யாத்ம எண்ணத்துடன், யுத்தத்தைச் செய். எந்த பயமும், தயக்கமும் வேண்டாம்.

இது தான் என்னுடைய கொள்கை. இதை அறிந்து பின் பற்றுபவர்களும் நல்ல கதியை அடைவார்கள்.  சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவார்கள். அதுவன்றி, இதில் குற்றம் காண்பவர்கள், என் கொள்கையை ஏற்காதவர்கள், ஞானமும் பெறாமல், மூடனாக, அழிவார்கள்.

ஞானியானாலும் பிறந்த பிறப்புக்கு ஏற்றவாறு செயல்களைச் செய்கிறான். அவனை நிர்பந்தித்து என்ன பயன்?  தன் போக்கில் இயற்கையை அடைகிறான்.

ச.பா: பிறப்பிலேயே அதனதன் இயல்பு தீர்மானிக்கப் பட்டு விடுகிறது, அதன்படி தான் நடக்கும் என்றால், மனித முயற்சி என்பதும், சாதனைகளும் என்ன பலன் தரும்? இந்த கேள்விக்கு அடுத்த ஸ்லோகத்தில் பகவான் பதில் சொல்கிறார்.

விருப்பும், வெறுப்பும் புலன்கள் மூலமே உணரப் படுகின்றன, செயல்களில் வெளிப்படுகின்றன,    இவை தான் முதல் எதிரி, இதை அடக்க பழக வேண்டும்.

ச.பா: இந்த இரண்டு இடையூறுகளையும் அடக்கியவனே, அடுத்து என்ன என்று அறிய முயலுவான். அந்த சமயம் குரு உபதேசமும், சுய கட்டுப்பாடும் அவனை உயர்த்தும்.  விருப்பும், வெறுப்பும் அதைச் சார்ந்த கோபமும், லோபமும் ஒவ்வொன்றாக கழண்டு போக அவனுக்கு உபதேசத்தின் பலன் மனதில் உறைக்கும்.  நடுவழியில் எதிர்படும் திருடன் போல  நன்மையை நோக்கிச் செல்லும் மனிதனின் சாதனையில் இந்த இரண்டு குணங்களும் எதிரில் வரும். அதைத் தவிர்த்து மேற் கொண்டு செல்ல  மனோதிடம் வேண்டும்.  இந்த மனோ திடம் வரும் வரை இயல்பான ஆசை, மற்ற உலகியல் ஈர்ப்புகள், தர்மம் என்பதை தவறாக புரிந்து கொள்வது,  எதையோ பின்பற்றி,  தன்  தர்மத்தை விடுவது போன்ற இடையூறுகள் வரும்.

தனக்கு விதிக்கப் பட்ட கடமையை செய்வது தான் தர்மம். பர தர்மம்  – மற்றவர்கள் நன்மையை பெறுகிறார்களே, நாமும் அதை பின் பற்றுவோம் என்று வழி  மாறிச் சென்றால் நன்மையைத் தராது. தன் கடமையை செய்து அதில் மரணமே வந்தாலும் நல்லது, மற்றவனின் தர்மத்தை அனுசரிப்பது அதை விட அதிக துன்பம் தரும்.

அர்ஜுனன் கேட்கிறான்:  பாபம் செய் என்று தூண்டுவது யார்? அல்லது எது? பலமாக இழுத்து பாப காரியத்தில் ஈடுபடுத்துகிறதே ஏதோ ஒரு சக்தி, அது என்ன?

ஸ்ரீ  க்ருஷ்ண பகவான் பதில் சொல்கிறார்: இதோ, காமம்  அதாவது ஆசை, என்ற ஒன்று க்ரோதம் – ஆத்திரம் என்ற ஒன்று- இவை போதாதா மனிதனை பாபம் செய்யத் தூண்ட?  இரண்டுமே ரஜோ குணத்தில் பிறந்தவை.  இவைகளுக்கு தீனி போட்டு கட்டுப் படியாகாது – திருப்தியே அடையாத குணங்கள். பெரும் தீமையே உருவானவை. முதல் எதிரி இவை தான்.

ச.பா: உலகில் எல்லா தீமைகளுக்கும் காரணம் ஆசை தான். ஆசை நிறைவேறவில்லையெனில் கோபமாக, க்ரோதமாக மாறுகிறது. வாஸ்தவத்தில் ரஜோ குணம் செயலில் ஈடுபடத்  தேவையே. ஆசையின்றி ஒரு செயலும் துவங்கப் பட மாட்டாது.  அதிகமாகும் பொழுது ஆசையே விபரீதமாகிறது.

புகை மண்டி இருக்கும் இடத்தில் அக்னி இருப்பது முதலில் தெரியாது.  அருகில் செல்லச் செல்ல புகை விலகி அக்னி கண்ணுக்குத் தெரியும்.  அதே போல புழுதி படிந்த கண்ணாடி அதன் குணம் தெரியாமல் புழுதி மறைக்கும் – சுத்தம் செய்தால் கண்ணாடி நம்மை ப்ரதி பலிக்கும். கருவை காக்கும் கருப்பை இயற்கை அளித்த பாதுகாப்பு. இவைகளை முதன் முறை காணும் பொழுது தென்படவில்லை.

இதம் ஆவ்ருதம்- இது சூழப் பட்டுள்ளது – இந்த ‘இதம்’ என்ற சொல் குறிப்பது என்ன?

அறிவுள்ளவன் இதை புரிந்து கொள்வான்- தன்னை ஆட்டுவிப்பது ஆசையே என்பதை. சாதாரண மனிதர்கள் உணர மாட்டார்கள்.  ஆசைப் பட்டு ஒரு பொருள் கிடைத்தவுடன் அடையும் மகிழ்ச்சியே பொதுவாக அனைவரும் அறிவோம். அடுத்த கட்டமாக பேராசை தான் கெடுதல் என்று சொல்வோம். ஆனால், ஆசையை கட்டுப் படுத்த நினைக்கும் சாதகனுக்கு ஆரம்பத்திலேயே இதன் தன்மை  தெரிந்து விடும்.

ஆசை மறைத்திருப்பது அறிவை.  ஞானம் சுலபமாக அடைய முடியாதது.  பிறவியிலேயே ஓரளவு ஞானம் உள்ளவர்கள்  உடனே தன்னை சுதாகரித்துக் கொள்வர்.

இதன் அடிப்படையாக அல்லது இருப்பிடமாக உள்ளவை புலன்கள், மனம், புத்தி.  புகை போல சூழ்ந்துள்ளவை. எனவே, பரத குலத்து வீரனே, முதலில் இந்த இந்திரியங்களை கட்டுபடுத்து.  இவைகள் தான் ஞானம், அதற்கு மேல் விக்ஞானம் என்பதை நாசம் செய்யும் இடர்.

இந்திரியங்கள் அதாவது புலன்கள் ஐந்தும், கேட்பது போன்ற உணர்வுகள், பௌதிகமான உடலை விட நுணுக்கமானவை.  உடல் இயங்குவதை விட வேகமாகவும் பரவலாகவும்  இயங்கக் கூடியவை.  இதை விட அதிக நுணுக்கமானது மனம்.  எண்ணம், நினைவாற்றல், விருப்பு வெறுப்புகள் மனதின் கட்டுப் பாட்டில் உள்ளன.  மனதில் சந்தேகங்கள், தவறுகள், ஆசைகள்  ஏற்படலாம். மனதையும் ஆட்டி வைப்பது புத்தி. புத்தி தீர்மானமாக ஒரு வழியைச் சொல்லும். புத்தியைக் காட்டிலும் அதிக வல்லமையுடையது மனிதனது சரீரத்திலேயே உறையும் பரம் பொருளின் அம்சமான ஆத்மா.

இவ்வாறாக, வரிசையாக புத்தியின் தன்மையை உணர்ந்து, ஆத்ம சக்தியை உணர்ந்து கொள்.  பிறகு எதிரியான ஆசைகள் போன்றவைகளை முறியடிப்பாய்.

(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தையில் யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் கர்ம யோகம் என்ற மூன்றாவது அத்யாயம்).

 

அத்யாயம் -4  ஞான கர்ம சன்யாச யோகம்

ஸ்ரீ பகவான்  தொடர்ந்தார் :-

இந்த யோகம் என்று இதுவரை நான் சொன்னதை ராஜ ரிஷிகள் அறிவார்கள்.  பரம்பரையாக வந்த ஞானம் இது. முதன் முதலில் நான் விவஸ்வான் என்னும் பெயர் பெற்ற சூரியனுக்கு உபதேசித்தேன். அவர் மனுவுக்கு சொன்னார்.  மனு இக்ஷ்வாகு அரசனுக்கு சொன்னார்.  காலக்ரமத்தில் பல யோக முறைகள் அழிந்து விட்டன.  அதையே  முன் விவஸ்வானுக்கு சொன்னபடி இன்று உனக்கு சொல்கிறேன். நீ என் பக்தன், சகா – நன்பன் என்பதால்.  உத்தமமான இந்த யோகம்  பரம ரகஸ்யமாக  காப்பாற்றப் பட்டு வந்துஇருக்கிறது. -1

அர்ஜுனனுக்கு சந்தேகம்.  கேட்கும் அனைவருக்குமே வரக் கூடியது தான்.நீ பிறந்து வளர்ந்தது வேறு யுகத்தில்,  விவஸ்வான் இருந்து கேட்டதாகச் சொல்கிறாய்.  அவருடைய காலம் வேறு – இது எப்படி சாத்தியம்? -2

(நான் அறிந்தவரை நீ வசுதேவரின் மகனாக சமீபத்தில் வந்தவன். விவஸ்வானுடைய காலமோ சிருஷ்டி ஆரம்பத்தில் என்று கேட்டிருக்கிறோம்.  வாசுதேவனாக அவதரித்தவன் பர ப்ரும்மமே என்பதை அறியாத நிலையில் வரும் சந்தேகமே )

ஸ்ரீ பகவான் பொறுமையாக பதில் சொல்கிறார்.

பல ஜன்மங்கள், பிறவிகள் கடந்து விட்டன அர்ஜுனா! எனக்கும், உனக்கும் தான்.   அவை அனைத்தையும் நான் அறிவேன்.  ஆனால் நீ அறிய மாட்டாய். -3

நான் அஜன் – அதாவது பிறவி அற்றவன்.  அழிவில்லாத பரமாத்மா.  ஜீவன் களின் ஈஸ்வரன்.  இந்த உருவை நானே ஏற்றுக் கொண்டு என் மாயா சக்தியால்,  சம்பவாமி – தோன்றுகிறேன். -4

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத |

அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம். ||

பரித்ராணாய சாதூனாம் வினாஸாய ச துஷ்க்ருதாம் |

தர்ம ஸம்ஸ்தாபனாய ஸ்ம்பவாமி யுகே யுகே||

यदा यदा हि धर्मस्य ग्लानिर् भवति भारत | अभ्युथ्थानम् अधर्मस्य तदात्मानम् श्रुजाम्यहम् ||

परित्राणाय साधूनाम् विनाशाय च दुश्क्रुथाम् | ध्र्म सम्स्थापनाय सम्भवामि युगे युगे ||

இந்த இரண்டு ஸ்லோகங்களும் ப்ரசித்தமானது.

தர்மத்திற்கு புறம்பாக உலகில் ஜனங்களின் நடத்தையோ, அல்லது தீய செயல்கள் அதிகமாகி கஷ்டங்கள் அதிகமானாலோ, நான் அவதரிக்கிறேன். (என்னை நானே சிருஷ்டி செய்து கொள்கிறேன்)

தீய செயல்கள் செய்பவரும் உலகில் பிறந்தவர்களே. அவர்களால் அவதிப் படுபவர்கள் சாதுக்களே. அவர்கள்   தர்ம வழியில் நடப்பவர்கள்.   அவர்களை காக்க நான் வருவேன்.  யுகம் யுகமாக  நான் அவதரித்து தர்மத்தை ஸ்தாபனம் செய்கிறேன்.

இப்படி நான் அவதரிப்பதை  புரிந்துகொண்டவர்கள் – என் மாயை அது என்பதை அறிவார்கள்.  இவ்வாறு ,  என் செயல்களையும், என்னையும் தெளிவாக தெரிந்து கொண்டவர்கள்  இந்த ஜன்மத்தில் மரணம் அடைந்தபின் திரும்ப பிறப்பதில்லை.  மறுபிறவி எனும் பந்தத்தில் இருந்து  விடுபடுகிறார்கள்.

ஆசை, பயம், க்ரோதம்  இவைகளை விட்டவர்கள் என் நினைவாகவே இருந்து, என்னையே உபாசித்து வருபவர்கள் பலர். தவம் செய்வதிலும், ஞானம் பெறவுமே காலத்தை செலவழித்தவர்கள்.  இந்த ஞானமும், தவமும் அவர்களை பரிசுத்தமாக ஆக்கி விடுகிறது.  எனக்கு சமமாக ஆகி விடுகிறார்கள்.

(ஞானம் பெறுவது தான் மோக்ஷம் பெற வழி.  ப்ரும்மத்தை உணர்வது தான் சாதகனின் தவம்.   யோக சாதனைகளைச் செய்து நானே ப்ரும்மம்- அஹம் ப்ரும்மாஸ்மி   என்ற நிலையை அடைகிறார்கள். )

ஏதோ சிலருக்குத் தான் உன் அருள் கிடைக்குமா?   அதற்கு பதிலாக அடுத்த ஸ்லோகம்.

யோ யதா பஜந்தே மாம் தான்ஸ் ததைவ பஜாம்யஹம் |

மம வர்த்மானு வர்த்தந்தே  மனுஷ்யா: பார்த சர்வஸ: ||

ये यथा भजन्ते माम् तान्स्तथैव भजाम्यहम् | मम वर्त्मानुवर्तन्ते मनुष्या: पार्थ सर्वश: ||

பார்த்தா!    என்னை யார் எப்படி நினைக்கிறார்களோ, அவர்களுக்கு அதே விதத்த்தில்  தென்படுவேன்.   நான் செய்வதை மனிதர்கள் அப்படியே அனுசரிக்கிறார்கள்.   வேண்டுபவர்களுக்கு தேவையானதை நான் தருகிறேன்.

தேவதைகளை திருப்தி செய்தால் தேவையானதை பெறலாம் என்று ஜனங்கள் யாகம் செய்கிறார்கள்.  மனித உலகில் கர்ம பலன் சீக்கிரமே கிடைத்து விடும் என்பது நடைமுறை.

(முன்னால் பரஸ்பரம் உதவி செய்து கொண்டு க்ஷேமத்தை அடைவீர்கள் என்று ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் சொன்னார் என்று பார்த்தோம்)

நான்கு வர்ணங்கள் என்று ஏற்பாடு செய்தும் நானே அதை தவிர்த்ததும் நானே.   பிறவி குணம், செயல் இவைகளின் அடிப்படையில் நான் இந்த பாகுபாட்டை செய்தேன்.  அவ்யயன் -நான் – எனக்குத் தோற்றமோ, முடிவோ கிடையாது.  தேவைகளும் இல்லை.   மற்ற உலகங்களில் இல்லாத இந்த  வர்ண பிரிவினை , மனிதனின் இயல்பின் அடிப்படையில்  அமைப்பது அவசியம் ஆயிற்று.

கர்மா அல்லது வினைப் பயன் என்னை பாதிக்காது. வினையின் பலனில் எனக்கு அக்கறையும் இல்லை.  இதை உணர்ந்தவர்கள் என்னை அறிந்தவர்கள். எனவே அவர்களும் வினைப் பயனால் பாதிக்கப் படுவதில்லை..

இப்படி என்னை அறிந்தவர்களும் யாகம் முதலான கர்மாக்களை விடாமல் செய்தனர். மோக்ஷத்தை விரும்பி செய்தனர்.  நீயும் அந்த பெரியவர்களையே பின் பற்றி உன் கடமையைச் செய்.

எது கர்மா- (கடமை) எது அகர்மா  (எந்த செயல் பயனற்றது) என்பதை தீர்மானிக்க முடியவில்லை.  பல அறிஞர்களும் ஆராய்ந்து தெ3ளிவாக எதுவும் சொல்லவில்லை.

அதனால் எது கர்மா அல்லது கடமை. எது தேவையற்றது.  செய்யக் கூடாதது எது ? இவை அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த கர்மா என்பது பல விதமாக விளக்கப்பட்டிருக்கின்றன.

கடமையை செய்யும் பொழுதே, தேவையற்றதை அறிந்து விலக்குபவனை புத்திசாலி எனலாம்.

(ஓருவருக்கு அவசியமாக தோன்றும் செயல் மற்றவருக்கு தேவையே இல்லாமல் இருக்கலாம். இதை நாம் பொதுவாக உலகில் பார்க்கிறோம். அவரவர் அளவில் அந்த செயலின் நன்மையோ தீமையோ அனுபவிக்கிறார். அதன் பொருட்டு வருந்துவதோ, மகிழ்வதோ அந்த ஒருவரின் செயல். லாபமோ நஷ்டமோ. அவரது தனிப்பட்ட அனுபவம்.    அப்படி இருக்க எதை குறிப்பிட்டு நல்ல செயல் என்றும் தீய செயல் என்றும் பெயரிட்டு அழைப்பது.  இந்த விவாதம் முடிவில்லாதது.)

அடுத்த ஸ்லோகத்தில் ஓரளவு பதில் சொல்கிறார்.

எவனுடைய செயலில் சுய நலம் இல்லையோ, ஆசைகளோ பெரிய எதிர்பார்ப்புகளோ இல்லையோ,   தனது அறிவால் , சாதனையால், மேம்பட்டு கடமையை கடமைக்காக மட்டுமே செய்கிறானோ, அவன்  ஞானி, பண்டிதன் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

அவன் நித்ய திருப்தன், எப்பொழும் திருப்தியாக இருப்பான். பந்தங்கள் எதுவும் இல்லாமல், செயல்களை செய்யும் பொழுதே அதன் பலனில் பற்றில்லாமல் செய்வதால், எதுவுமே செய்யாதவன் போல கவலையற்று இருப்பான்.

(அலட்டிக் கொள்ளாமல் அனாயாஸமாக பெரும் செயல்களைச் செய்பவன் பொதுவாக போற்றப்படுகிறான்)

இந்த நிலையை அடைந்த ஞானி தன் உடலைக் காக்க அவசியமானதை மட்டுமே செய்வான்.  ஏனெனில் ஞானி என்பவன் நித்ய திருப்தன்-  தன்னிடம் உள்ளதில் எப்பொழும் திருப்தியாக, ஆனந்தமாக இருப்பவன் – புதிதாக எந்த தேவையும் இல்லாதவன். எந்த கட்டுப்பாடும் இல்லாததால் தேவைகளும் இல்லை.  அவன் தன்  உடலை பாதுகாக்க வேண்டி செய்யும் தேவையான குறைந்த பக்ஷ செயல்களால் பாதிக்கப்படுவதில்லை.

( சங்கர பாஷ்யம்:  கேள்வி -1

இந்த பதிலால் என்ன  பெறுகிறோம்.  சரீரத்தால், உடலால் செய்யும் செயல்கள் ஞானியை பாதிப்பதில்லை – செயல்கள் அதன் விளைவை ஏற்படுத்தியே தீரும் என்ற சாஸ்திர வாக்கியங்கள் என்னாகும்?

  1. உடல் உழைப்பு மட்டும் – சாரீரம் கேவலம் – என்றால் எந்த செயலையும் – அது தர்மமோ, அதர்மமோ – செய்யலாமா? உடல் தானே செய்கிறது என்பது எந்த விதத்தில் சரியானது?
  2. அவன் செயலால் ஏற்படும் தீமையோ, நன்மையோ, அவனை மட்டுமா, மற்றவர்களையும் தானே பாதிக்கும்.

ச.பா: விளக்கம்.  உயிர் வாழ்வதற்கு தேவையான குறைந்த பக்ஷ செயல்கள் –

நான் செய்கிறேன் என்ற எண்ணம் இல்லாமல் மனம், சொல், உடல் இவைகளால் மற்ற செயல்களை செய்தும், தனக்காக செய்வது உடலைப் பேணுவது மட்டுமே. என்று இருப்பவன்- ஞானி.

முன்னமே சொன்னபடி அவன் செயல்கள் சமூகத்துக்கு தேவையும் ஆகும்.  சன்யாசி என்று வீட்டை தியாகம் செய்த பின், தான்  உண்ணவும் உடுக்கவும் , தங்கவும் ஏதோ செய்து தானே ஆக வேண்டும்.  அதைத் தான் சாரீரம் கேவலம் – என்று சொல்கிறார்.

22)  கிடைத்ததில் திருப்திடைவது மட்டுமில்லாமல் இந்த வரை கிடைத்ததே என்று மகிழ்கிறான் ஞானி.  விருப்பு வெறுப்பு இல்லாமல், பேராசையோ, பொறாமையோ இன்றி,  செயல்களால் கிடைக்கும் பலன் எவ்வாறு இருந்தாலும், வெற்றியோ, தோல்வியோ, அதற்காக அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து செய்பவன், அதனால் அவனை வினைப் பயன் என்பது வாட்டாது.

23)  ஞானி யாகம் முதலிய கர்மாக்களைச் செய்யும் பொழுதும் பற்றின்றி செய்கிறான். அவன் மனம், வாக்கு, காயம் என்று மூன்றும் ஒருமித்து, ஞானத்திலேயே அமைகிறது.  அதனாலும் வினைப் பயன் அவனை அண்டாது.

24)  ப்ரும்மார்ப்பணம் ப்ரும்மாக்னௌ ப்ரும்மஹவிர் ப்ரும்மணா ஹுதம் | ப்ரும்மைவ தேன கந்தவ்யம் ப்ரும்ம கர்ம சமாதினா ||

ब्रम्हार्पणम्  ब्रह्माग्नौ ब्रम्ह हविर् ब्रम्मणा हुतम् | ब्रह्मैव तेन गन्तव्यम् ब्रह्म कर्म समाधिना ||

ஞானியானவன் தானே ப்ரும்மமும் என்பதை  உணர்ந்தவன். அவன் செய்வதும் (யாகம் முதலான கர்மாவும்)  ப்ரும்மத்துக்கே அர்ப்பணம். ப்ரும்மமே அக்னி,  அதில் போடப்பட்ட ஹவிஸ், (பொருட்கள்) முதலானவைகளும் ப்ரும்மமே.  செய்யும் கர்த்தாவும் ப்ரும்மாவே. அவன் அடைந்திருப்பதும் ப்ரும்ம கர்ம சமாதி என்ற நிலை. அவனது லட்சியமும் ப்ரும்மத்தை அடைவதே.

ச.பா: முன் சொன்ன ஸ்லோகங்களில்  ஞானியை வினைப் பயன் அண்டாது  என்றவர் ஞானி என்பவன் யார் என்பதை விளக்கும் வகையில் ப்ரும்ம ஞானம் அடைந்தவன் செய்யும் செயல்கள் தான் அவனை பாதிக்காது என்று சொல்கிறார்.

சாதாரண ஜனங்கள் ஹோமத்தில் இடுவது வெள்ளி என்றோ, முத்து என்றோ (வெண்மை நிறம் காரணமாக) நினைப்பது உண்மையில் கடவுள் சிருஷ்டியில் ஒன்றே, அதன் அடிப்படை ப்ரும்ம தத்வமே.  ஏனெனில் நிலம் நீர்,வாயு, அக்னி, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களும்  ப்ரும்மமே.

யாகம், ஹோமம் முதலானவை என்று மட்டுமல்ல விக்ரஹத்தில் ஆவாஹனம் செய்து பூஜிப்பது, தெய்வ காரியங்கள் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவை அனைத்துமே இந்த ஸ்லோகத்தால்  பர ப்ரும்மம் , பரமாத்மா பரதத்வம் என்ற  வார்த்தைகளால் வர்ணிக்கப் படுபவையே.

24) இதன் அடுத்த நிலையே ஆத்ம சமர்ப்பணம் என்றும் தான் என்றும் நான் என்றும் நினைப்பதை தியாகம் செய்வதே –

சிலர் யாக ஹோமாதிகளில் தெய்வத்துக்கு சமர்ப்பணம் என்ற எண்ணத்துடன் செய்கின்றனர். மற்றும் சிலர் தான் என்ற உணர்வையே ஆஹுதியாக ப்ரும்மாக்னியில் சமர்ப்பிக்கின்றனர்.

(ப்ரும்மம், ப்ரும்ம ஞானம், புத்தி, பரமானந்தம் என்பவை நம் அறிவுக்கு எட்டும் விதமாக விவரமாக பல அறிஞர்களால் பலவிதமாக நிரூபிக்கப் பட்டுள்ளன.  ஸ்ரீ சங்கரே பல மேற்கோள்களை காட்டியிருக்கிறார்.

பலவிதமான தளைகளுடன் உள்ள ஆத்மா, எந்த வித தளையும் இல்லாத பரப்ரும்மத்தின் ஒரு அம்சமேயாகும்.

காஞ்சி பெரியவர் ஸ்ரீ பரமாசார்யர்கள் குறிப்பிடும் பொழுது இந்த நிலை லட்சத்தில் கோடியில் ஒருவருக்குத் தான் கை கூடும்- ஆனால் அந்த ஒரு ஞானி மூலம் லோகமே க்ஷேமத்தை அடையும் என்பார். )

25) யாக கர்மாக்களைச் செய்பவர்கள் பொதுவாக தெய்வ காரியமாக நினைத்து பொருட்களை தியாகம் செய்கின்றனர்.    ப்ரும்ம ஞானம் அடைய விரும்புபவர் தன் நான் என்ற எண்ணத்தையே தியாகம் செய்கின்றனர்.

சங்கர .பாஷ்யம்:  ப்ரும்மத்தை அறிவது எளிதல்ல. இது அல்ல , இது அல்ல என்று விலக்கி விலக்கி ஒரு சித்தாந்தம் – நேதி நேதி  ( नेति, नेति – न इति ) என்றே சொல்லி கடைசியில் கண்டு கொள்வது. இதற்கான சாஸ்திர அறிவும், அனுபவ அறிவும் , குரு அருளும் உள்ளவர்களே உணர முடியும்.  உபனிஷத்துக்கள் பல கதைகள் மூலமாக சொல்கின்றன.

26)  செவி முதலான புலன் களை (ஐந்து- மற்றவை கண், நாசி, வாய், தோல்) ஸம்யமம் – அடக்கம் என்ற குணத்தால் ஜயிக்கிறார் – சப்தம் முதலான – புலன் களின் வேலையான ஒலியை கேட்டல், பார்த்தல், நுகர்தல், வாய் –   ருசியை அறிதல், தொடு உணர்ச்சி   இந்த செயல்களை கட்டுப்படுத்துவதன் மூலம் ஜயிக்கிறார்.

27) இந்த புலன் களின் செயலையும், ப்ராணன் என்ற உயிரின் ஓட்டத்தையுமே (உடலின் இயக்கமான ப்ராண வாயு சுருங்குவதும், விரிவதுமான செயல்) ஆத்ம சம்யமம்- தன்னடக்கம் – இதுவும் ஒரு யோக சாதனையே. – மனதை தன் வசத்தில் வைத்திருத்தல் – என்பதே அக்னியாக அதில் ஆஹுதி செய்கின்றனர் கரைத்து விடுகின்றனர். இதற்கு அவனுடைய ஞானம் அல்லது அறிவு,  விளக்குத் திரி எரிய உதவும் எண்ணெய் போல உதவியாக இருக்கிறது.

 

(தன்னடக்கம், மனதை தன் வசத்தில் வைத்திருத்தல் என்பது யோக சாதனையின் பலனாக பெறக் கூடியது. இந்த சாதகன் தன் புலன்களை அடக்குவதோடு, ப்ராணனையும்  சமன்வயப் படுத்திக் கொள்கிறான். மூச்சை அடக்கி ப்ராணாயாமம் செய்து சித்திகளை அடைகிறான்)

28)  யாகம் செய்வோர் பல வகையினர்.  வசதியற்றவர்களுக்கு  பொருள் தானம் செய்வோர் சிலர்.  தவம் செய்பவர், ப்ராணாயாம், ப்ரத்யாஹாரம் என்ற யோக சாதனைகளைச் செய்பவர்,  சாஸ்திரங்களைப் படித்து அதன் படி கர்மாக்களைச் செய்பவர் சிலர்.

இது தவிர ஸ்வாத்யாயம் – தன்னை அறிதல் என்ற ஞானத்தை அறிய செய்யும் யாகம். இந்த யாகத்தை செய்பவர் விரதங்களை, யாகத்தின் கட்டுப் பாடுகளை அறிந்து முழுமையாக அனுசரிப்பர்.

எந்த செயலானாலும், ஈடுபாட்டுடன் செய்வது ஒரு யாகமே என்பது பொருள்.

29) ப்ராணாயாமம் செய்வதில் பல வகை. சிலர் ப்ராணனை பூரகம் – உள் இழுத்து நிரப்புதல் என்ற முறையிலும்,  சிலர் ரேசகம் – முற்றிலும் வெளியேற்றி வெற்றிடமாக்குதல் என்ற முறையிலும், சிலர் கும்பகம் என்ற முறையில் ஒரு பக்க நாசி துவாரத்தை மூடி,  மற்ற நாசித் துவாரம் வழியாக  வெளிக் காற்றை உள்ளே செலுத்தி , முடிந்தவரை உள்ளேயே  நிறுத்திக்  கொண்டு பின் மற்றொரு நாசி த்வாரம் வழியாக வெளியேற்றுதல் –

30) மற்றும் சிலர் ஆகார நியமங்களை அனுசரிக்கின்றனர். ப்ராணாயமம் செய்கின்றனர்/ இவர்கள் எல்லோருமே யாக நியமங்களை அறிந்து செய்தவர்கள், அதனால் தூய்மை அடைந்தவர்கள்.

31)  யாகத்தில் செலவிட்டது போக மிச்சத்தை தான் அனுபவிப்பவர்கள்.  இவர்கள் பழமையான ப்ரும்ம பதத்தை அடைகின்றனர்.   இடையிடையில் ப்ரஸாதம் – யாகத்தில் அர்ப்பணம் செய்த மீதி உணவு முதலியவை – இது தான் அம்ருதம் என்று உட்கொள்கின்றனர்.

32) இவ்வாறு பலவிதமாக யாக யக்ஞங்கள் ப்ரும்மா அறிவித்தார்.  இவை எல்லாமே கர்மா எனும் வகையைச் சேர்ந்தது.   வேதத்தில் சொல்லப்பட்டவையே.  இந்த செயல்களே சம்சார பந்தத்தை விட்டு வெளி வர, தன்னை அறிய உதவும்.

33)  தானம் முதலானவைகளை விட ஞானம் சிறந்து. எதைச் செய்தாலும் அது முடிவில் ஞானத்தில் கொண்டு சேர்க்கும்.

34) நல்ல குருவை நாடி, அவருக்கு பணிவிடை செய்து, பணிந்து குறைவின்றி அவரிடம் பாடம் கேள்.  தத்வ தரிசிகளான ஞானிகள் உனக்கு உபதேசம் செய்வார்கள்.

தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஸ்னேன சேவயா |

உபதேக்‌ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வ தரிசின: ||

तद्विध्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया | उपदेक्ष्यन्ति ते ज्ञानम् ज्ञानिन:  तत्व दर्शिन: ||

(இது ஒரு நல்ல ஸ்லோகம். மாணவர் ஆசிரியரிடம் எப்படி பாடம் கேட்க வேண்டும் – என்பதை விளக்கும். எந்த காலத்துக்கும், எந்த கலையை கற்கவும் பொதுவானது)

35) பேரறிஞர்களிடம் உடனிருந்து கல்வி கற்பதில் பல நன்மைகள்.  எதைக் கற்றால் உன் மனக் குழப்பம் தீருமோ அதை அறிவாய்.  அதன் பின் நீ உலகை காண்பதே மாறும். ஜீவன்கள் அனைத்தும் உன் அந்தராத்மாவில் உறையும் பர ப்ரும்மே -என்று உணர்வாய். அதன் பின் என்னைத் தெரிந்து கொள்வாய்.

ச.பா:   அவர்கள் உபதேசிப்பதை சிரத்தையாக கேட்டு. அதில் உன் மனதில் தோன்றும் வினாக்களை வெளிப் படுத்தி உடனுக்குடன் தெளிவு படுத்திக் கொள்ளலாம். முடிவில்          நீயே  அது –    ப்ரும்மா முதல் புல் பூண்டு வரை உன்னில் உறையும் ஆத்ம   தத்வமே, – பரமாத்மாவே – அந்த பரமாத்மாவும் தானே என்று அறிவாய் –  அதன் பின் என்னையும் அறிவாய் – அனைத்தும் வாசுதேவனான நானே – என்பதை தெரிந்து கொள்வாய்.

36) இந்த ஞானம் உன்னை எல்லா விதமான பாப எண்ணங்களில் இருந்தும் காக்கும். பாப செயல்களின் பலன் என்று நீ நினைப்பதில் இருந்தும் விடுவிக்கும்.  படகில் ஏறி பெரிய கடலைக் கடப்பது போல சம்சார சாகரத்தை கடந்து செல்வாய்.

37) விறகு முதலான எரியக் கூடிய பொருட்களை அக்னி எரித்து அழிப்பது போல ஞானம் என்ற அக்னி உன் வினைப் பயன்களை எரித்து அழித்து விடும்.

ச.பா:  வினைப் பயன்கள் – முன்வினை, இப்பிறவியில் செய்பவை இன்னும் அறியாமையால் செய்யக் கூடியவை அனைத்தையுமே ஞானம் என்ற அக்னி  அழித்து சாம்பலாக்கி விடும்.

38) ஞானத்துக்கு சமமான பவித்ரமானது மற்றொன்று இல்லை. இதை நீ செய்யும் சாதனைகள் மூலமாக உணர்ந்து கொள்வாய்.

39) இந்த ஞானம் யாருக்கு கிடைக்கும்? – சிரத்தையுள்ளவன் அடைவான்.  இந்த ஞானம் பெறுவதே குறிக்கோளாக  புலனடக்கம் முதலான சாதனைகளைச் செய்பவன் அடைவான்.   அப்படி ஞானம் அடைந்து விட்டான் என்பது அவன் அடையும் பெரும் அமைதியில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

ச.பா: – குரு க்ருபையாலும், தன் முயற்சியாலும் ஞானம் அடைந்தவன் அமைதியாகி விடுவான். அதன் பின் குருவுக்கு பணிவிடை போன்ற செயல்களின் தேவை கூட இருப்பதில்லை. மோக்ஷம் அடைகிறான்.

(ஞானியானவன் மற்ற உயிர்களிடம் அன்பாகவும், மனிதர்களுக்கு வழி காட்டியாகவும் இருக்க வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு உள்ளதே,

அவனுக்கு செயல்கள் தேவையில்லை என்றால் அவன் ஞானத்தால் உலகுக்கு என்ன நன்மை? இந்த கேள்விக்கு வரும் அத்யாயங்களில் பதில் சொல்கிறார். )

40) நம்பிக்கை இல்லாதவன், அறியாமையில் மூழ்கி இருப்பவன், எதிலும் சந்தேகம் கொள்பவன், அழிவான். அவனுக்கு இந்த உலகிலும் நன்மை இல்லை, பரலோகத்திலும் இடம் இல்லை.

41) உன் செயல்களை யோகத்தில் ஈடுபடுத்து.  உனக்கு வரும் சந்தேகங்களை ஞானம்- அறிவினால் தெளிவாக்கிக் கொள்.  இவ்வாறு ஆத்மாவை அறிந்து கொண்டவனை வினைகள், வினைப் பயன்கள் தொடராது என்பது நிச்சயம்.

42)   உன் மனதில் எழும் இந்த சஞ்சலமும், குழப்பமும் அறியாமையால் வருவதே.  ஞானம் எனும் வாளினால் இந்த சந்தேகங்களை வெட்டி வீழ்த்தி எழுந்திரு.  யோக மார்கத்தை கை கொள்வாய்.  வீரனாக எழுவாய் பாரதா.

ச.பா: ஆத்மன: என்ற சொல்லால் இதுவரை சொன்ன ஆத்ம ஞானம், தான் என்ற அறிவு என்பதையே குறிப்பிடுகிறார்.

 

(இதுவரை ஸ்ரீமத் பகவத்கீதா என்ற உபனிஷத்தில், ஸ்ரீ க்ருஷ்ணனுக்கும் அர்ஜு னனுக்கும் இடையிலான சம்பாஷணையில் ஞான, கர்ம, சன்யாச யோகம் என்ற நாலாவது அத்தியாயம்)

 

அத்யாயம் -5  கர்ம சன்யாச யோகம்

 

சங்கர பாஷ்யம்: கேள்வியும் பதிலும்.

சென்ற அத்யாயத்தில் ஸ்ரீ பகவான் விவரமாக  ஞானமே  உயர்ந்தது என்றும், மோக்ஷம் பெற ஞானமே வழி என்றும் நிறையவே சொன்னார். திடீரென்று நினைத்து கொண்டவர் போல கேள்வி கேட்கும் அர்ஜுனனின் தற்கால நிலையை நினைத்தவர் போல -போர் முனையில் நிற்பவன், மனம் குழம்பி இருப்பவன் – இவனிடத்தில் மன அடக்கமோ, துறவோ  சொல்லி பயனில்லை என்பது போல அடுத்த விஷயமாக குருவின் அவசியமும், செயல் என்பதன் அவசியமும் பற்றிச் சொல்கிறார்.    கர்ம யோகி ஆகச் சொல்கிறார்.  செயலில் ஈடுபாடும், துறவும்  இரு வேறு நிலைகள்.

எனவே இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே அர்ஜுனனின் கேள்வி,

, முதன் முதல் யோகம் பற்றி அறிபவன், இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்   இரண்டில் எது நல்லது என்று தெரிந்தால் தானே தொடர்ந்து அந்தந்த யோக மார்கத்தில் முன்னேற முடியும்.

  1. அர்ஜுனன் கேட்கிறான்:

ஸன்யாசம் என்றும், கர்மா- செயல் என்றும் சொன்னாய், பின் யோகம் என்றும் சொல்கிறாய். இவற்றில் எது நல்லது. தீர்மானமாகச் சொல்லு. எதை அனுசரிப்பதால் எனக்கு நன்மை ?

ஈடுபாட்டுடன் கடமையை செய்யவா, அல்லது புலனடக்கி துறவு கொள்வதா? இரண்டும் வெவ்வேறு வழிகள்.

  1. ஸ்ரீ பகவான் சொல்கிறார்:

ஸன்யாசம், கடமையைச் செய்தல் இரண்டுமே நல்லதே – இரண்டு வழியிலும் மோக்ஷத்தை அடையலாம்.  ஆனால் கடமையை விட்டு துறவு கொள்வதை விட ஈடுபாட்டுடன் செயலை, கடமையை செய்வதே உயர்ந்தது.

ச.பா:  சன்யாசம், கர்ம யோகம் இரண்டும் வெவ்வேறு மன நிலையில் , சூழ் நிலையில் உள்ள மனிதர்களுக்காக ஏற்பட்டது. உண்மையில் இரு முனைகளில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள்- இந்த இரண்டு கொள்கைகளும் அவ்வாறே தனித் தனியாகவே நடைமுறையில் சாத்தியமாகும்.  எனவே அவற்றின் லட்சியமும், முடிவும் வெவ்வேறாகவே இருக்க முடியும். இரு வழியும் மோக்ஷத்தை தரும் என்பது எப்படி சரியாகும்.

  1. ஸ்ரீ பகவான் சொல்கிறார்.

சாங்க்யம் ஞானம் = கர்ம யோகம் –  இரண்டும் வெவ்வேறு என்று பண்டிதர்கள், அறிஞர்கள் சொல்வதில்லை.   சிலரே,  சிறுவர்கள் போல  இந்த பேத உணர்வை கொண்டுள்ளார்கள்.  யோக முறைகள் இரண்டிலும் ஒரு யோகத்தில் சிறப்பாக  பயின்று முழுமையாக அறிந்தவன் இரு வகை யோகங்களின் பலனையும் அடைகிறான். அல்லது இரண்டின் முடிவான நிலையை அடைகிறான்.  செல்லும் வழி தான் வேறு. லட்சிய சித்தி ஒன்றே.

ச.பா:   இது வரை ஞான யோகம் என்று சொல்லி வந்தவர் இப்பொழுது சாங்க்யம் என்ற சொல்லை பயன் படுத்துகிறார்.

என்ன வித்தியாசம்?

அர்ஜுனன் பொதுவான சன்யாசம், கடமை என்று பேசினான்.  பகவான் சொல்லும் பொழுது அதன் சிறப்புகளை விளக்கும் சாங்க்யம், யோக என்ற சொற்களைச் சொல்கிறார். சாங்க்யம்- ஞானம் என்றும் யோக என்பது கர்ம யோகம் – செயல்-கடமை என்றும் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு பதில் சொல்வது போலவே, பகவான் தொடர்கிறார்.

சாங்க்யம் என்பதில் அடையும் பலனை  யோக முறையிலும் அடையலாம்.  இரண்டும் ஒரே பலனைப் பெற இரு வழிகள் என்று அறிவதே அறிவுடையவன் செயல்.

ச.பா:   சாங்க்யர்கள் என்பவர்கள் உலகைத் துறந்தவர்கள். ஞானம் பெறுவதே அவர்கள் குறிக்கோள்.  சாங்க்யம் என்பது கணக்கு என்று பொருளுடையது.  ஆராய்ச்சி செய்பவர்கள் என்றும் சொல்லலாம்.  அவர்கள் தன் ஆராய்ச்சியில் வெற்றி பெறுவது என்பதே மோக்ஷம்.  இந்த நிலையை கடமையைச் செய்து, யாக யக்ஞங்களைச் செய்யும் கர்ம யோகியும் அடைகிறான்.

(அது ஒரு சுற்று வழி என்று வேண்டுமானால் சொல்லலாம்.  தொடர்ந்து செய்வதால் பெறும் அனுபவம், அதன் கஷ்ட நஷ்டங்களை அறிந்து முன்னேற வேண்டும்.   செயலில் இருந்து அதன் பல நெளிவு, சுளிவுகளை அறிந்து கொள்கிறான் – அனுபவம் தந்த பாடம் – அதே காரியமாக ஆராய்ந்து தெரிந்து கொள்வதற்கு சற்றும் இளைத்ததல்ல என்று நாம் நடை முறையில் பார்க்கிறோம்).

  1. சன்யாசம் என்பது சுலபமல்ல. சாதனைகள் செய்த முனிவர்கள் அறிவார்கள். யாக காரியங்களை வேதம் சொல்லும் முறையில் இடைவிடாது செய்து பக்குவப் பட்டவர்கள் தியாகம் என்பதை அனுபவ பூர்வமாக செய்கிறார்கள்.  அவர்கள் கூட பலகாலம் முயன்ற பிறகே சன்யாசம் என்பதை முழுமையாக அறிகிறார்கள்.

ச.பா:  ந்யாசம் என்பது ப்ரும்மமே – அதில் சம் – முழுமையாக மனம் ஒன்றுவது.  ஈஸ்வர தியானமாக யாகங்கள் செய்பவர்கள் நாளா வட்டத்தில் எந்த விருப்பமும் இல்லாமல் யாகம் யாகத்திற்காகவே என்ற உணர்வோடு செய்கிறார்கள்.  மனனம் – இடைவிடாது சிந்திப்பவர்கள் என்பதால் முனி எனப் படுபவர்கள்- உயர்ந்த ஞானமாகிய ப்ரும்ம வித்தையை தியானம் செய்து அதே நினைவாக மனனம்  செய்து உணர்வது  பரப்ரும்ம தத்வம்.

சன்-நியாசம் என்பது ப்ரும்மமே என்பது ஸ்ருதி என்ற வேத வாக்யம்.  அனைத்துக்கும் அப்பாற்பட்ட , அனைத்துக்கும் காரணமான பரப்ரும்மம் என்றும் பரமாத்மா என்றும் அழைக்கப்படும் பரம் பொருள். சன்யாசத்தின் பயன் இந்த அறிவே.

யோக சாதனையை செய்யும் முனிவன் உண்மையான பக்தியுடன், ஈடுபாட்டுடன்  கடமையை செய்து ப்ரும்மத்தை அறிகிறான். எனவே கர்ம யோகம் சிறந்தது என்றேன் – என்று பகவான் சொல்கிறார்.

  1. இவ்வகையில் யோக சித்தி அடைந்தவர்கள் சுத்தமான ஆத்மாக்கள். புலனடக்கம் கொண்டவர்கள். எல்லா                      உயிரினங்களிலும் தன்னையே  காணும் அளவுக்கு சித்தி பெற்றவர்கள்.  இவர்கள் செயலில்- கர்மாவில் உழன்றாலும் களங்கம் இவர்களை அண்டாது. வினைப் பயன் தொடராது.

ச.பா: யோகி  தன்னை அறிந்து கொள்வதோடு, உலகில் புல் பூண்டு முதல் ப்ரும்மா வரை ஒரே பரப்ரும்மத்தின் அம்சமே என்பதை மனப் பூர்வமாக நம்புகிறான். உலகில் மற்றோருக்கு உதவும் வழிகாட்டியாக இருப்பான்.

7.&8 எதுவுமே செய்ய மாட்டேன் என்று என்று ஒருவன் இருக்க முடியுமா? அதே தான் ஞானம் அடைந்தவனும் உலகில் இருக்கும் வரை, பஸ்யன்- பார்த்துக் கொண்டும்,  ஸ்ருண்வன் – கேட்டுக் கொண்டும், ஸப்ருஸன், தொடுதலும் , ஜிக்ரண் – முகர்ந்தும், அஸ்னன் – உண்பதும்,  கச்சன். நடந்து போய்க் கொண்டும்,   ஸ்வஸன், மூச்சு விட்டுக் கொண்டும், ஸ்வபன்- தூங்கியும், ப்ரலபன்- ஏதேதோ  பேசியும், விஸ்ருஜன்- விட்டும், க்ருஹ்ணன்- பிடித்தும், கண் இமைகளை மூடியும், திறந்தும் – இந்த செயல்களை செய்யத் தான் வேண்டும்.  இவை இந்திரியங்களின் செயல்பாடுகள். ஆனால் சாதாரண மக்கள் இவைகளையே பெரிதாக நினைக்கும் பொழுது, ஞானி, இது இவைகளின் நியமிக்கப் பட்ட செயல்- செய்கின்றன என்று தான் ஒதுங்கி நின்று கவனிப்பான்.

ச.பா:  கானல் நீரைக் கண்டவன், மறுமுறை அதனருகில் நீர் அருந்த செல்ல மாட்டான். அது போலவே  யோகிகள் இந்த புலன்கள் பற்றி அறிந்த பின் அதன் செயலில் மயங்க  மாட்டார்கள்..

  1. இது போல கர்ம மார்கத்தில் செல்பவர்கள், சுற்றம், முதலிய எந்த தளையிலும் கட்டுப் படாமல், தாமரை இலைத் தண்ணீரைப் போல ஒதுங்கியே இருப்பர். பாபம் இவர்கள் மேல் படியாது.
  2. உடலால், வாக்கினால், மனதால் நினைத்து செய்யும் செயல்களை இவர்களும் செய்வார்கள், ஆனால் தனித்தே இருப்பர். பார்த்தும், கேட்டும், புலன்களை பயன் படுத்துவதும் தன் ஆத்மாவை பரிசுத்தம் செய்யும் விதமாகவே இருக்கும்.
  3. இப்படி யோகிகள் செயல்களை செய்யும் பொழுதும் பலனை எண்ணாமல் செய்வதால் சாந்தமாக இருப்பார்கள். அதுவே மற்ற சாதாரண ஜனங்கள் பலனைப் பற்றியே எண்ணிச் செய்வதால் கட்டுப் படுகிறார்கள்.

ச.பா:  ஈஸ்வரார்ப்பணம் என்று எண்ணி செய்வதற்கும், நான் செய்கிறேன் என்று செய்வதற்குமான வித்தியாசம் இதுவே.         செயலில் நேர்மை, புதியன தெரிந்து கொள்வது,  அப்படி பெறும் அறிவையே பெரிதாக நினைப்பது இவை உயர்ந்த குணங்கள். இதைச் செய்வதால் பெறும் லாபத்தையே எண்ணி இருப்பவன் கட்டுப் படுகிறான்.

(பலே சக்தோ நிபத்யதே –   பலனில் கண் வைத்தால் கட்டுப்படுவாய் என்பது ஒரு நல்ல உபதேசம். இதையே தமிழில் பேராசை பெரு நஷ்டம் என்றனர். )

  1. மனம் தான் ஆசைக்கும் மற்ற லௌகிகமான பற்றுதல்களுக்கும் காரணம். மனதை அடக்கியவனே உண்மையில் பற்றைத் துறந்தவன். அவன் தன் உடலால் தானும் எதுவும் செய்வது இல்லை மற்றவர்களையும் செய்ய விடுவதில்லை.

ச.பா:  உண்மையான துறவி மனதளவிலும் சன்யாசம்- துறவை ஏற்க வேண்டும். அவன் செய்யும் செயல்கள் , மற்றவர்களைக் கொண்டு செய்விக்கும் செயல்கள்  அவனளவில் சுக துக்கங்களுக்கு காரணமாகாது.

  1. சிருஷ்டி செய்யும் பொழுதே, இப்படி ஒருவன் செய்பவன், இது இவன் கடமை என்று பகவான் திட்டமிட்டு செய்யவில்லை. வினைப் பயன், என்பதும் அதனால் ஏற்படும் சுக துக்கங்கள் முதலிலேயே தீர்மானிக்கப் பட்டதுமல்ல.   இயற்கையில் செயலுக்கும், பலனுக்கும் உள்ள சம்பந்தம் அதனதன் இயல்பே.
  2. ப்ரபுவான பகவான் யாரையும் பாபியாக, குற்றம் செய்தவனாக பிறக்கச் செய்வதில்லை. அல்லது யாருக்கும் பாபம் பிறப்பினால் வருவதல்ல. ஒருவனுடைய சுக்ருதம் – நல்ல செயல் என்பதும் உடன் பிறப்பதல்ல. அக்ஞானம்- அறியாமை  என்பதில் மூழ்கி இருக்கும் ஜீவன்கள் – அதனாலேயே மோஹத்தை அடைகிறார்கள்.

ச.பா:  நீ சுகமாக இரு, நீ கஷ்டத்தை அனுபவி என்று திட்டமிட்டு சிருஷ்டியை பகவான் செய்வதில்லை.  அக்ஞானம்- அறியாமை கண்களை மறைக்கிறது.  அதனால் ஒரு தவறு, அதன் மேல் மற்றொன்று என்று தொடர்ந்து செய்து மோக வசம் சிக்குகின்றன ஜீவன்கள்.

  1. ஒரு சிலர் அறிவினால், தங்கள் அறியாமையை போக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஆதித்யன் இருளை ஒழித்து ஒளியைத் தருவது போல ஞானம்- அறிவு ப்ரகாசத்தை கொடுக்கிறது.
  2. இப்படி புத்தியுடையவர்கள் ஒன்றேயான பரம் பொருளை கண்டு கொள்கிறார்கள். மனப் பூர்வமாக நம்புகிறார்கள்.  மாற்று எண்ணம் இன்றி அதனிடம் பணிகிறார்கள் (நிஷ்டா: -ஸ்திரமாக இருத்தல்) அதுவே தியானமாக, ததாத்மா , தானும் அதே ஆத்மா என்ற உணர்வோடு இருந்து, ஞான ஒளியினால் பரிசுத்தமாகி மறு பிறவியற்ற நிலையை அடைகிறார்கள்.

(எப்படி இது சாத்தியம்.   ஜீவன்களைச் சூழ்ந்த அறியாமை அவர்களுக்கும் தானே.  இது அக்ஞானம்  இது அறிவு என்று எப்படி தெரிந்து கொள்வார்கள். அவர்கள் ஞானம்- அறிவை கண்டு கொண்டவர்கள் என்பதை மற்றவர்கள் எப்படி அறிவார்கள்?)

இதற்கு பதில் சொல்வது போல அடுத்த ஸ்லோகம்:

18) கல்வியில் சிறந்த அறிஞர்கள், வினயம் உடைய பெரியவர்கள், ப்ராம்மணனோ, பசுவோ, யானையோ, திரியும் நாயோ, அந்த நாயையே தின்னும் வேடன் போன்றவர்களோ, அவர்கள் பார்வையில் ஒன்றே. அவர்களே பண்டிதர்கள்.

19) இவர்களுடனே இருந்து பழகுபவர்கள் கூட இந்த தன்மையை உணர முடியாது.  எல்லோரிடமும் சகஜமாக நடந்து கொள்வதில் நட்பும் அன்பும் வெளிப்படும்.  ப்ரும்மம் களங்கமற்றது.  அந்த ப்ரும்மா என்ற பாவத்திலேயே இருப்பவர்கள்.

20) வெளிப்படையாக மற்றவர்கள் காண்பது சுகம் என்று துள்ளி குதிக்காமலும், துக்கம் என்று வீழ்ந்து விடாமல் இருப்பதுமான பண்பு.  எதிலும் தங்கள்  ஸ்திர புத்தியை இழக்காமல்,  கலங்காத தன்மையுடன்  இருப்பதற்கு காரணம் அந்த ப்ரும்மத்தில் கலந்திருப்பதே.

  1. சாதாரண ஜனங்கள் உலகியலில் அடையும் மகிழ்ச்சியை இவர்கள் ப்ரும்மத்தை தேடுவதில் அடைகிறார்கள். ப்ரும்ம ஞானம் என்பதே பேரானந்தம். இந்த சாதனையில் ஈடுபடும் யோகிகள் உலகியல் வாழ்க்கையில், நாட்டம் இல்லாமல் அதைக் கடந்து சென்று, இந்த பேரானந்தத்தை பெற்ற பின் அதன் (உலகியல் இன்பங்கள்) தேவையே இல்லாமல் ஆகி விடுகிறது.

ச.பா: அந்த:கரணம் அதாவது ஆத்மா.  ஸப்தம் முதலான புலனால் அறிந்து கொள்வதையும் அதன் மூலம் பெறும் உணர்வையும் அந்த:கரணம் – மனசாட்சி அல்லது ஆத்மா அனுபவிப்பதில்லை. அதைத் தாண்டி தன் லட்சியமான ப்ரும்மானந்தத்தை தேடுபவன் சாதகன் – அவனுக்கு இந்த சுகங்கள் பொருட்டல்ல.

22.ஸ்பர்ஸம் முதலான புலன்களால் பெறும் சுகம் முடிவில் துக்கத்தையே கொடுக்கும்.  ஆரம்பத்தில் சுகமாகவும், போகப் போக  வேறு விதமாகவும் ஆகும். எனவே புத்திமான்களான பெரியவர்கள் இதில் லயிப்பதில்லை.

  1. தன் அத்யாத்ம தேடலுக்கு ஊறு விளைவிக்கும் இந்த உணர்ச்சிகளை ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டு கை விட்டவன் சம்சாரத்தில் சாரம் இல்லை என்கிறான். அத்யாத்ம வழியில் செல்பவன் தன்னடக்கம் கொள்கிறான். இந்த உலகிலேயே, தன் வாழ் நாளிலேயே காமம், க்ரோதம் இவைகளை அடக்கியவன் தான் யோகி அவன் தான் சுகி- சுகமாக இருப்பவன்.
  2. தன்னுள் ஆத்மாவைத் தேடி கண்டு கொண்ட பின் ப்ரும்ம ஜோதி என்பதை காண முடிகிறது. இதற்கு அடுத்த நிலை ப்ரும்மமே ஆவது. ப்ரும்ம நிர்வாணம் என்பது இதுவே.
  3. இந்த நிலையை ரிஷிகள் தவம் செய்து அடைந்துள்ளனர். மாசில்லாத மனதுடன், சுகம் துக்கம் போன்ற இரட்டைகளிலிருந்து விடுபடுகிறார்கள். பாரபக்ஷம் இல்லாமல் ஜீவன் கள் அனைத்தையும் நேசிக்க இவர்களால் முடிகிறது.

26, ஆசை, கோபம் இல்லாமல் இருப்பதால் இந்த யதி-ரிஷிகள், தங்களைச் சுற்றி இருக்கும் பொதுவான விஷயங்களிலேயே பேரானந்தம் அனுபவிக்கிறார்கள்.

அடுத்து தியானம் செய்வது எப்படி என்பதை விளக்குகிறார்.

  1. & 28) புற உலகை நினைக்காமல், புருவங்களூக்கு இடையில் பார்வையை இறுத்தி, ப்ராணன், அபானங்களை சமமாக இருக்கச் செய்து, நாசி துவாரங்களின் வழியே மூச்சை முறையாக செலுத்தி, சீராக மூச்சை விட்டு, ஐந்து இந்திரியங்கள், மனம், புத்தி இவற்றின் செயலை கட்டுப்படுத்தி, வேறு எதையும் எண்ணாமல், இடையில் தோன்றும் காமம், க்ரோதம் முதலியவைகளுக்கு இடம் கொடுக்காமல், ஒரே தியானமாக சாதனை செய்ய வேண்டும். இப்படி செய்பவன் எப்பொழுதும் சுதந்திரனாக இருக்கிறான். நாளடைவில் (பர வாசு தேவனான) என்னை யார் என்று அறிகிறான்.

29) போக்தாரம் யக்ஞ தபசாம் சர்வலோக மஹேஸ்வரம் | சுஹ்ருதம் சர்வ பூதானாம் க்ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி ||

भोक्तारम् यज्ञ तपसाम् सर्व लोक महेश्वरम् | सुह्रुदम् सर्व भूतानाम्  ज्ञात्वा माम् शान्तिमृच्छति ||

சர்வ லோக மஹேஸ்வரன் நானே.  யக்ஞம் தவம் இவைகளின் உட்பொருளும் நானே.  யாகங்களில்  ஹோமம் செய்யப்படும் பொருள்கள் என்னையே வந்தடைகின்றன.  எல்லா உயிர்களுக்கும் நண்பன் நானே.  இவ்வாறு என்னை அறியும் யோகிகளும் தவம் செய்யும் ரிஷிகளும்  நிறைவான மன சாந்தியை அடைகிறார்கள்.

 

(இது வரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையில் ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷணையில், கர்ம சன்யாச யோகம் என்ற ஐந்தாவது அத்தியாயம்).

 

அத்யாயம்-6 ஆத்ம சம்யம யோகம்

 

முன் அத்யாயத்தில் சொன்ன தியான யோகம் மேலும் விவரமாக சொல்லப் படுகிறது.

சங்கர  பாஷ்யம் : த்யானம் செய்வதன் மூலம் தன்னை அறிவது என்பது ஒரு வழி. க்ருஹஸ்தன் – இல்லறத்தான் தன் கடமைகளை செய்வதன் மூலமே நல்ல கதியை அடைகிறான் என்று சொன்ன பின் அவனுக்கு தியானம் எதற்கு? என்ற கேள்வி:

கடமையை செய்பவன் அதன் மூலமே உயர் கதியை அடைவான் என்பதில்  மாற்றமில்லை.  அதற்கு மேலும் இல்லறத்தான் ஒருவன்  தன்னை மேம்படுத்திக் கொள்ள தியானம் உதவும். தியானத்தால் உடலும் உள்ளமும் உறுதியாகும் என்பது  அதன் பலன்.

தொடர்ந்து  அக்னிஹோத்ரம் முதலான கடமைகளை முறையாக செய்து வரும் பொழுது அதன் பலனில் பற்று விடுபடுகிறது என்று பார்த்தோம்.   வேத மந்திரங்களும்  சாஸ்திரங்களும்  சொல்லும் பல பல செயல்களை அப்படியே ஏற்று செய்யும் க்ருஹஸ்தர்கள்,  அதற்கான பலனை பெற வேண்டும்.  பகவான்  அதை மறுக்கவில்லை. அடுத்த வகுப்புக்கு செல்லும் மாணவன் போல சித்த சுத்திக்கு தியானம் என்று சங்கர பாஷ்யம் சொல்கிறது.

(செய்யும் தொழிலே தெய்வம் என்று பாரதியார் சொன்னது கடமையைச் செய் என்று பகவான் சொன்னதும் ஒன்றே.     அந்த முறையில் இல்லறத்தான் அற வாழ்க்கையை மேற்கொண்டு நல்லறம் நடத்தி வரும் பொழுது அவனும் ஞானியும் ஒன்று என்றார்.  இந்த கருத்தையே நமது புராணங்களும், இதிகாசங்களும் கூட வலியுறுத்துகின்றன. இப்பொழுது தியானம் என்பது பற்றி விவரிக்கிறார்.  )

முதல் ஸ்லோகம் இதையே சொல்கிறது.   எந்த செயலும் செய்யாமல் இருப்பவனோ, அக்னி ஹோத்ரம் முதலிய தெய்வ காரியங்களை செய்யாமல் சன்யாசி என்று சொல்லிக் கொள்பவனோ  கர்ம யோகி என்றோ சன்யாசியோ ஆக மாட்டார்கள்.

பற்றின்றி செய் என்றால், அதனால் என்ன பயன், நான் செய்யாமலே இருக்கிறேன், அதனால் எதிலும் எனக்கு பற்றில்லை என்று  வாதம் செய்பவன்,

சன்யாசிக்கு அக்னி காரியம் இல்லை- நான் அந்த அக்னி காரியம் முதலான பந்தங்களை விட்டு விட்டேன் அதனால் நான் சன்யாசி, என்பவனோ,

உண்மையில் சன்யாசியுமல்ல, கர்ம யோகியுமல்ல.

  1. சன்யாசம் என்று எதை சொல்கிறோமோ அதுவே யோகம். பாண்டவா, இதை எண்ணி செய்கிறேன், எனக்கு இந்த பலனைக் கொடு என்று சங்கல்பம் செய்து தான் வேத பாராயணமோ, பூஜையோ, யாகம் முதலிய செயல்களோ- செய்யப் படுகின்றன. உலக க்ஷேமத்திற்காக எனும் பொழுதும் சங்கல்பம் உண்டு.   செயல் தான் தியான யோகத்திற்கு முதல் படி.
  2. யோகம் என்பதை தெரிந்து கொள்ளவே கடமை அல்லது செயல்- கர்மாவை தெரிந்துகொள்ள வேண்டும். சாதனை என்ற படிகளில் ஏற கர்ம யோகம் காரணமாக இருக்கும். அதுவே அந்த யோக நிலையை எட்டி விட்டவனுக்கு அடக்கம் காரணமாக சொல்லப் படுகிறது.
  3. யோக நிலையை எட்டி விட்டவன் என்பவன் யார்? என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார். புலன் அடக்கியவன், எந்த செயலையும் சுய நலமாக செய்யாதவன், சங்கல்பம்- தேவை எதுவும் இல்லாதவன் யோக நிலையில் ஏறி விட்டவன் எனப்படுகிறான்.

ச.பா:  தான் எதுவாக இருக்க வேண்டும் என்று மனதில் நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான். அதை அனுசரித்து அவன் செயல்கள் இருக்கும் என்று  உபநிஷத்.

(உலகியல் படி யோசித்து பார்த்தாலும் இதுவே சரி.  உபநிஷத் வாக்கியம் அதிக பொருத்தமாக தெரிகிறது.)

ச.பா: கேள்வி:

சங்கல்பமே இல்லை என்றால் ஏன் செயலை செய்கிறான்.  எண்ணங்களே இல்லையென்றால், அடுத்து  என்ன செய்வது என்று ஏன் யோசிக்கிறான்.  ஒரு பொருளில் ஈடுபாடு தான் அதை பெற வழிகளைத் தேடும், அதை அடைய முயற்சிகளைச் செய்யும். எந்த பொருளும் தேவை இல்லாதவன் வாழ் நாளில் என்ன சாதிப்பான்?

மிக விரிவாக இதற்கு சமாதானம் தரப் பட்டுள்ளது.

  1. இது ஒரு நல்ல ஸ்லோகம். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்.

உத்தரேதாத்மனா ஆத்மானம் -நாத்மானமவசாதயேத் | ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மன: ||

उद्ध्रेदात्मनात्मानम्  नात्मानमवसादयेत् | आत्मैवात्मनो बन्धुरात्मैव रिपुरात्मन: ||

தன்னைத் தானே தான் உயர்த்திக் கொள்ள வேண்டும் தான் எதை சாதிக்க நினைக்கிறானோ, அந்த வழியில் முன்னேற  தடைகளை களைந்து செல்ல உத்ஸாகம் வரும். தன்னை குறையுள்ளவனாக நினைத்து கலங்க கூடாது. தானே தான் தனக்கு நண்பன்.  பந்து. தானே தனக்கு எதிரியாவதும் உண்டு.

ச.பா: கடலில் மூழ்கியவன் கரையேற முயல்வது போல மனிதன் சம்சார கடலைக் கடக்க தானாகவே உகந்த வழியை தேந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

  1. இப்படி தானே நண்பன், பந்து-உறவினன் என்று சொன்னபின் அந்த நண்பன் அல்லது உறவினன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார். சம்சாரக் கடலைக் கடக்க உதவும் நண்பன்வெளியாளாக இருந்தாலும் சரி தானேயானாலும், தன் ஆத்மாவை தானே ஜயித்தவனாக இருக்க வேண்டும். தன்னையறிந்த யோகி. அப்படியின்றி தன்னையறியாதவன் தான் தனக்கே எதிரி.

(தானே தனக்கு உதவி என்றாலும், தன்னையறியாதவரை குரு என்று ஒருவரை நாடி, யோக சாதனைகளைக் கற்றுக் கொள்வதே நல்லது.  அறியாமல்  தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்வதைத் தவிர தனியாக இருந்து பெறும் நண்மை எதுவும் இல்லை.)

  1. பனி, வெய்யில் என்று அந்தந்த பருவ காலத்தில் அதிக குளிரோ, உஷ்ணமோ உடலை வாட்டுவதைப் போல சுக துக்கங்கள் மனிதனை வாட்டுகின்றன. அதைவிட அதிகமாக மனதை, மற்றவர்கள் செய்யும்மான, அவமானங்கள் அலைக்கழிக்கின்றன.  மான- மதிப்பை பெறும் பொழுது மகிழ்ச்சியும், அவமானத்தால் வருத்தமும் தவிர்க்கமுடியாத உணர்வுகள்.

இந்த உடலை பாதிக்கும் சீதோஷ்ணமோ, மனதை பாதிக்கும் மான அவமானங்களோ யோகி எனும் நிலையை அடைந்த  சாதகனை வருத்தாது.  அப்படி உள்ள  சாதகனே

ஜிதாத்மா- தன்னையறிந்தவன் – தன் ஆத்ம சக்தியை உணர்ந்தவன் -அமைதியாக இருப்பான்.   ப்ரசாந்தாத்மா.  ஏனெனில், அவனிடத்தில் பரமாத்மா உள் உறைகிறார்.

(இது ஒரு அழகான ஸ்லோகம்.  நடு நடுவில்   பகவான், தான் யார் என்பதை கோடி காட்டி தெரிவிக்கும் விதமாக இப்படி ஒரு வார்த்தையால் விளக்கி விடுகிறார். ஏதோ சொல்கிறார் என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே  ஜிதாத்மா – பரமாத்மா என்ற சொற்கள் அமைந்திருப்பது அழகு.

தியானம் பற்றி சொல்ல வந்தவர்,  தானே தனக்கு எல்லாம் என்று எண்ணி இறுமாந்து இருக்க விடாமல், தன்னையறிந்தவனுக்குத் தான் அது – தானே தனக்கு பந்து என்றார். அப்படி தன்னையறிந்தவன் என்ன உயர்வு என்ற கேள்விக்கு பதிலாக அவனிடத்தில் பரமாத்மாவாக (தானே) உறைகிறா(றே)ன் என்கிறார்.

  1. அப்படி தனியாக இருக்கும் தகுதி பெற்ற சாதகன், ஞானம், அறிவதிலும், மேன்மேலும் தன் அறிவை வ்ருத்தி செய்து கொள்வதிலும் கவனமாக இருப்பான். அவன் தனிமையில் இருந்தாலும், புலன் அடக்கியவன் . அவனுக்கு காஞ்சனம் எனும் தங்கமோ, ஓட்டாஞ்சில்லோ ஒன்றுதான்.
  2. சினேகிதன், நண்பன் (சுஹ்ருத்- மனதுக்குகந்த நண்பன் என்றும் மித்ரன்- நண்பன் என்றும் பொருள்) உதாசீனம் செய்பவன், மதிப்பவன், நடு நிலையாக இருப்பவன், விரோதம் பாராட்டுபவன், பந்து, உறவினன், சாதுவோ, பாபியோ, எல்லோரிடமும் சமமாக இருப்பவன்- அப்படிப் பட்டவன் தான் சிறப்பிக்கப் படுகிறான்.
  3. சன்யாசி என்றும் யோகி என்றும் சிறப்பித்துச் சொல்லும் சாதகன் தனிமையில் தன் சாதனையை செய்கிறான். குறைந்த பக்ஷ வாழ்வாதாரங்களேபோதும் என்று தன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு வாழ்கிறான்.

11.சுத்தமான இடத்தில் அதிக உயரமும் இல்லாமல், தாழ்வாகவும் இல்லாமல் தனக்கு உகந்த திடமான ஆசனத்தில், துணியோ, மான் முதலிய மிருகங்களின் தோலோ, வெறும் குசம் எனும் புல்லோ விரிப்பாகக் கொண்டு, தியானம் செய்ய வேண்டும்.

  1. மனதை ஒருமுகப் படுத்தி, புத்தி அலைபாயாமல், வசதியாக அமர்ந்து தியானத்தை ஆத்ம சுத்திக்காக செய்ய வேண்டும்.
  2. உடல் நேர்க் கோட்டில் இருக்கும்படி நிமிர்ந்து உட்கார்ந்து கழுத்தின் மேல் தன் தலை நேராக இருக்க, சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தாமல், தன் நாசி நுனியையே பார்த்தபடி அசையாமல்
  3. சாந்தமான ஆத்மா, பயம் இன்றி, ப்ரும்மசாரி விரதம் மேற்கொண்டவனாக, என்னிடத்தில் மனதை வைத்தவனாக, என்னையே தியானம் செய்தபடி அமர்ந்து யோக சாதனையை செய்ய வேண்டும்.
  4. இப்படி மனப் பூர்வமாக என்னையே நினைத்து, யோக சாதனையை விடாமல், செய்பவன் என்னையே அடைகிறான்.
  5. அதிகமாக உண்பவனுக்கும் யோகம் கை வராது. பட்டினி கிடப்பவனும் யோக சாதனையை முனைப்புடன் செய்ய முடியாது. கனவுலகிலேயே இருப்பவனோ, தூக்கத்தையே விட்டவனோகூட யோக சாதனையில் வெற்றி பெற முடியாது.

 

  1. யோக சாதனையே கஷ்டமானது தான். சுலபமாகதேர்ச்சி பெற முடியாது. ஆகவே, அளவாக உண்டு, அளவாக உறங்கி. உடலை அளவுக்கதிகமாக போஷிக்கவும் வேண்டாம், வருத்தவும் வேண்டாம். இப்படி சாதனையை செய்பவனுக்கு யோகம் துன்பத்தை விலக்கி  மகிழ்ச்சியையே அளிக்கும்.
  2. யோகி சாதனையை செய்யும் நிலையை, காற்று இல்லாத இடத்தில் விளக்கு ஒரே நிலையில் ஆடாது அசையாது எரிவதைப் போல என்று உவமானம் சொல்கிறார்.
  3. இப்படி யோக சாதனையை முறையாக செய்தால் மனம் ஆழ்ந்து சிந்திக்கும் தன்மையைப் பெறும். இயல்பான பார்வை முதலானவைகளே கூர்மையாகும். தன்னுள் உறையும் ஆத்மசக்தியை உணர்ந்து மகிழ்ச்சி கொள்வான்.  பேரானந்தம்   என்பது இதுவே.
  4. & 21. எண்ணங்கள் சீராக இருக்கும். தன் ஆத்மாவை அறிந்ததால் மனம் விருப்பு வெறுப்புகள் அற்று எப்பொழும் மகிழ்ச்சியான நிலை எய்தும்.   பேரானந்தம் கை கூடிய பின் வேறு தேவைகள் ஏது ? செயலிலும், வாக்கிலும் உறுதியாக இருக்க இயலும். பெரிய இழப்புகளோ, துக்கமோ அசைக்க முடியாது.

22 & 23.24.  உலகியலின் அல்ப சந்தோஷங்களைத் துறந்து – யோகம்- என்ற சொல்லின் பொருள் இணைத்தல்- இங்கு அதுவே விடுவித்துக் கொண்டு என்ற பொருளில் உலகியலில் நாட்டம் கொள்ளாமல், பேரின்பத்தோடு இணையச் சொல்லப் படுகிறது.

  1. சஞ்சலமான மனதின் கட்டுப்பாட்டில் இருந்து விலக விலக, புத்தியை தன் பக்கமாக ஆத்ம விசாரம் செய்ய பயன்படுத்துவது எளிது. மெள்ள மெள்ள இந்த மாற்றம் நிகழும். புத்தியால் த்ருதி – உறுதி – (அனுமனின் குணங்களில் ஒன்று) இழுத்து பிடித்து தன் வசம் ஆக்கிக்  கொண்ட பின், பிற சிந்தனைகள் தானே விட்டுப் போகும்.
  2. இவ்வளவு சிரமப் பட்டு அடைந்த ஸ்திரமான மன நிலையை காப்பாற்றிக் கொள்ளவும் வேண்டும். அதனால் சாதனைகளை விடாமல் செய்தபடி மனதை எங்கும் அலைய விடாமல் தன் வசத்திலேயே வைத்திருக்க வேண்டும்.
  3. ப்ர சாந்தம் – அத்யந்த சாந்தமான மனதை அடைந்தவனை, யோக மார்கத்திலேயே இருப்பவனை, அந்த யோகி தற்சமயம் சாந்த ரஜஸ் – ரஜஸ் என்ற குணத்திலிருந்து விடுபட்டவன். (ரஜோ குணம் துடிப்பான செயல்களுக்கு ஆதாரம் என்பதோடு காம, க்ரோதங்களுக்கும் காரணம்) அதனால் காமக் குரோதங்கள் அடங்கி விலகி விட்டன. அகல்மஷம் – மாசுகள் இல்லாதவன்,ப்ரும்ம பூதம்- தானே ப்ரும்மம் என்று உணர்ந்தவன். – இப்படிப் பட்டவனை, எல்லா உத்தமமான சுகங்களும் தேடி வரும்.
  4. ப்ரும்ம ஞானம் அடைந்தவன் கவலையின்றி சதா ஆனந்தமாகவே இருப்பான்.
  5. எல்லா உயிர்களிலும் தன்னைக் காண்பான். தன்னில் மற்ற உயிர்கள் அனைத்தும் உள்ளன என அறிவான். அனைத்தையும் சமமாகநினைப்பான்.
  6. யோ மாம் பஸ்யதி சர்வத்ர, சர்வம் ச மயி பஸ்யதி |

தஸ்யாஹம் ந ப்ரணஸ்யாமி, ஸ ச மே ந ப்ரணஸ்யதி ||

यो माम् पश्यति सर्वत्र सर्वम् च मयि पश्यति | तस्याहम् न प्रणस्यामि स च मे न प्रणस्यति ||

இது போல எவன் என்னையே எங்கும் காண்கிறானோ, உலகனைத்திலும் என்னைக் காண்கிறானோ,  அவனுக்கு நான் என்றும் உடனிருப்பேன். அவனும் என் மீதான அன்பை அல்லது நம்பிக்கையை விட மாட்டான்.  அழிவின்றி இந்த பந்தம் தொடரும்.

  1. எல்லா பூத- பிறப்பையடைந்த ஜீவன்களிலும் என்னையே காண்பவன், எந்த இடத்தில் வசித்தாலும் என்னிடத்தில் இருக்கிறான்.
  2. அர்ஜுனா! காணும் உயிர்கள் அனைத்தையும், தன்னுடன் ஒப்பிட்டுதன்னைப் போலவே இருப்பதாக கண்டு கொள்பவன் – அடுத்தவர்களின் சுகமோ, துக்கமோ, தானும் அதே போல உணருபவன் யாரோ, அந்த யோகி சிறந்தவன்.

இதுவரை கேட்டு வந்த அர்ஜுனுக்கு சந்தேகம் வருகிறது.

33.மது சூதனா! இது வரை நீ விவரித்த யோகம் – நடை முறையில் சாத்யமா? மனதை அடக்குவது மிக கஷ்டமான செயல் அல்லவா?  ஸ்திரமாக இருப்பது எப்படி?

  1. க்ருஷ்ணா! சஞ்சலம் கொண்ட மனதை கட்டுபடுத்துவது காற்றை அடக்குவது போல – அடங்குமா? முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.

ஸ்ரீ பகவான் பதில்  சொல்கிறார்.

சந்தேகமில்லாமல் இது கஷ்டமான செயலே.  மனதைக் கட்டுப்படுத்துவது சுலபமல்ல.  மஹாபாஹோ என்று அர்ஜுனனை அழைத்து (பலசாலியே, உன்னால் முடியாதா என்பது போல ) பயிற்சியாலும், வைராக்யத்தாலும் மனம்  அடங்கும்.   முயன்று பார்.

(பயிற்சி என்பது ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப நினைத்தும், செய்தும் அதில் திறமையை வளர்த்துக் கொள்ளுதலாகும். இதில் வைராக்யம் என்பது அப்படி செய்யும் பொழுது அலுப்போ சலிப்போ வந்தாலும் தன் பயிற்சியை விடாது செய்யத் தேவையான மன திடம்)

  1. விடா முயற்சியின்றி யோகம் வராது. வழக்கமான சில செயல்களை விடுவதால் அன்றாட தேவைகளுக்கு உழைக்க முடியாமல் போகலாம். அந்த சமயம் தேவைகளை குறைத்துக் கொள்ள பழக வேண்டும். இப்படி சிரமப் பட்டு தான் தன் இலக்கை அடைய முடியும். இப்படி உழைப்பவனுக்கு சுலபமாக யோகசித்தி அமையும் என்பதே என் கருத்து.
  2. 37. அர்ஜுனுனக்கு சந்தேகம் : இப்படி சிரமப் பட்டு தியாகங்கள் செய்தும், சித்தி கிடைக்கவில்லை, என்றால் என்ன செய்வது. அந்த சாதகன் பாதி கிணற்றைக் கடந்தவன் போல அழிவானா (சின்னாப்ரமிவ – வானம் இடிந்து விழுந்து போல என்று பதத்தின் பொருள்- தமிழில் இதற்கான பழமொழி இது)  இதுவரை கடை பிடித்த சாஸ்திர சம்மதமான செயல்களிலும் இனி இடம் இல்லை. யோகம் சலித்து விட்டது.  உலகில் என்ன செய்வான்? காலமும் கடந்து, யோகம் சித்தி என்று எண்ணி செலவழித்த உடல் உழைப்பும் வீண் என்றால் வாழ்க்கையே வீண் தானா?
  3. க்ருஷ்ணா! நீ தான் இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்கவும் வேண்டும். நான் வேறு யாரிடம் போவேன்.
  4. ஸ்ரீ க்ருஷ்ண பகவான் பதில் சொல்கிறார்.

பார்தா! (அர்ஜுனனின் பெயர்) – இந்த உலகிலும் சரி, மறு உலகிலும் சரி அவனுக்கு துன்பமே வராது.  நல்ல செயலைச் செய்பவன் என்றுமே கஷ்டப் பட மாட்டான்.

நல்ல இடத்தில் பிறப்பான்.  புண்யம் செய்து நற்கதி அடைந்தவர்கள்  நட்பு கிடைக்கும். நீண்ட காலம் நல்ல படியாக வாழ்வான்.

(‘ந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்கதிம் கச்சதி’ – न हि कल्याणकृत् कस्श्चित् दुर्गतिम् तात गच्छति || – நன்மை தரும் செயல்களைச் செய்பவன் என்றும் துன்பத்தையடைய மாட்டான்)

 

இது ஒரு நல்ல ஸ்லோகம்.  தனக்குரிய அந்தஸ்தை பெறவில்லை என்பதற்காக செய்து வரும் நற்செயல்களில் கவனம் குறைவது இயல்பு. அப்படிப் பட்டவர்களை உத்ஸாகப் படுத்தும் )

அல்லது புத்திமான்கள் நிறைந்த குடும்பத்தில் பிறப்பான். இம்மாதிரி பிறப்பு அமைவதும் அரிதே.  அந்த சூழ்நிலையில் முன் பிறப்பின் விட்ட குறையாக அவனது ஆர்வம் சாதனையில் செல்லும்.  முன் பிறவியில் செய்த பயிற்சிகள் கை கொடுக்கும்.  அவனே அறியாமல் விட்ட  இடத்திலிருந்து தொடருவது போல அவனது சாதனைகள் எளிதாக இருக்கும்.

ச.பா:  பிறப்பிலேயே அமைந்த அதீத அறிவும், திறனும் சரியான வழி நடத்தல் இல்லையெனில் அதர்மமாக கூட போகும் வாய்ப்பு உள்ளது. அந்த சமயம், ப்ரும்மம் என்ற சொல் காதில் விழுந்தாலே போதும், பழைய சாதனையின் பலம் அவன் அதர்மத்தில் செல்லாமல்  நல்வழிப் படுத்தும்.

அவனது தேடல் ப்ரும்ம வித்தையாகவே இருப்பதால், முந்தைய பல பிறவிகளில் செய்த முயற்சிகள் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். எனவே மிகச் சிறந்த சாதகனாக உயர்வான்.

ஏதோ ஒரு பலனைக் கருதியோ, கருதாமலோ தவம் செய்பவன் சிறந்தவன்.  ஞானம் தான் பெரிது என்பவன் ஒரு படி மேல்.  கர்ம  மார்கி-  அல்லது யாகாதி காரியங்களை நியமத்துடன் செய்பவன்  அதை விட மேல்.  அதையும் விட யோகி சிறந்தவன் என்பது என் கருத்து. எனவே, அர்ஜுனா! யோகி ஆவாய்.

அதிலும் யோகியானவன் எவன் என்னிடம் சிரத்தையுடன் பூஜித்து,என்னிடத்திலேயே முழுமையாக நம்பிக்கையுடன் இருக்கிறானோ, அவன் மிகச் சிறந்த யோகி என்று நான் ஏற்கிறேன்.

(இதுவரை  உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தை என்ற யோக சாஸ்திரத்தில், க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில், ஆத்ம சம்யம யோகம் என்ற ஆறாவது அத்தியாயம் )

 

அத்யாயம் 7 – ஞான விக்ஞான யோகம்

ஸ்ரீ பகவான் க்ருஷ்ணர் தானே பேசிக் கொள்வது போல அர்ஜுனன் எதுவும் கேட்காமலே

தொடர்ந்து சொல்லலானார்.

1.என்னிடம் ஈடுபாடு கொண்டவர்கள், யோக மார்கத்தில் முயற்சியுடையார், என்னையே நம்பி இருப்பவர், அவர்கள் என்னை எப்படி, எந்த விதமாக அறிகிறார்கள் என்று சொல்கிறேன், கேள்,

  1. அதைப் பற்றி முழுவதுமாக இப்பொழுது உனக்கு சொல்லப் போகிறேன். இதைக் கேட்டபின் உன் சந்தேகங்கள் தீரும். அதன் பின் நீ அறிய வேண்டியது எதுவும் இருக்காது.
  2. பல்லாயிரக் கணக்கான மனிதர்களில் ஒரு சிலரே என்னை அறிய முயற்சிக்கின்றனர். அவர்களிலும் ஒரு சிலரே என்னை உணர்ந்து கொள்கிறார்கள்.
  3. பூமிராபோரனலோவாயு: கம் மனோ புத்திரேவ ச | அஹங்காரம் இதீயம் மே பின்னா ப்ரக்ருதிரஷ்டதா || (1)

भूमिरापोऽनलोवायु: खं मनो बुद्धिरेव च | अहंकारं इतीयं मे भिन्ना प्रकृतिरष्टदा ||

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம் என்ற எட்டும் என் ப்ருக்ருதியே.

பஞ்ச தன்மாத்ரங்கள் என்ற இந்த பஞ்ச பூதங்கள்,  எண்ணங்களைக் கொண்ட மனது, அறிவு- புத்தி, அஹங்காரம் தான் எனும் உணர்வு.

இவை எட்டும் நானே, அல்லது என்னிலிருந்து தோன்றியவையே.

  1. இதைத்தவிர இன்னொன்று உண்டு. மஹா பாஹோ! அதுவும் என் ப்ரக்ருதியே-இயல்பே.

இதனால் உலகில் உயிர்த் தத்துவம் தோன்றியது, வளர்ந்து நிலைத்து இருக்கிறது.

  1. இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் தாயின் கருவிலிருந்து வெளிப்படுவதே என்று அறிந்திருப்பாய். அதன் மூலம்-அடிப்படை நானே. அதன் வளர்ச்சியும், இருப்பும், பின் அழிவதும் என் செயலே.

 

  1. என்னிலிருந்து மாறுபட்ட பொருள் எதுவுமே அண்ட சராசரங்களிலும் இல்லை. உயர் மணிகளை உள் இருந்து இணைத்து மாலையாக்கும் நூல் அல்லது கயிறு போன்று இந்த சராசரங்களை ஒன்றாக இருக்கும்படி கட்டி வைத்திருக்கிறேன்.

 

  1. கௌந்தேயா, மேலும் கேள்: நானே

தண்ணிரில் சுவையாக இருப்பவன் , சந்திர  சூரியர்களின் ஒளியாக இருப்பவன், வேத மந்திரங்களில் பிரணவமாக, ஆகாயத்தில் ஒலியாக, மனிதர்களில் சக்தியாக,

  1. பூமியில் உள்ள புண்யமான வாசனையாக, நெருப்பில் (விபாவசு) – உஷ்ணமாக, ஒளியாக, உயிர்களில் ஜீவனாக, தவம் செய்பவர்களின் தவமாக,
  2. அழியாத, பரம்பரையான அனைத்திற்கும் தாவர, ஜங்கம – எனும் அசையும் அசையா பொருட்களின் பீஜம் – விதையாக, நான் இருக்கிறேன் என்று அறிந்து கொள். பார்த்தா! புத்திமான் என்பவர்களின் புத்தியாக, தேஜஸ்வி- ஆற்றலுடையவனின் ஆற்றலாக,
  3. பலசாலி என்பவனின் பலமாக, இதிலும் ஆசையோ, ஈடுபாடோ அன்றி இருப்பவன், தர்ம சம்மதமான ஜீவன்களின் காமமாக, இவை தவிர,
  4. பரதர்ஷப, (பரத வம்சத்து அரசர்களுள் காளைக்கு சமமான வீரனே) உலகில் சாத்விகமான பாவங்கள், ராஜஸ, தாமஸ எனும் குணங்கள், இவை என்னிடமிருந்தே பிறந்தவை. என்னிடமிருந்து தோன்றியவை என்பதால் நான் அதனிலும் இருப்பதாக எண்ணாதே. அவை தான் என்னிடம் அடங்கும். நான் குணங்களுக்கு அப்பாற்பட்டவனே.

 

  1. இந்த உலகை இயக்குவதே இந்த மூன்று குணங்களும் தான். இந்த முக்குணங்களும் தெய்வீகமானவை. அறியாதவர்கள் உலகம் தன்னாலேயே இயங்கும் – இயற்கையில் உள்ள பரிணாம வளர்ச்சியே என்பர்.    இந்த பரணாம வளர்ச்சிக்கும் ஆதாரமான  பர தத்வம் நான் என்பதை உணர்ந்து கொள்.  அவர்கள் அறிவை மறைப்பதும் மாயையே.  என்னையே நம்பி வணங்குபவர்கள் தான் இந்த மாயயை  கடந்து செல்வர்.

 

(மம மாயா துரத்யயா – என் மாயை – அதை சாதாரணமாக கடக்க இயலாது. இதையே  தேவி மாஹாத்ம்யம்-

 

ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஸா | பலாதாக்ருஷ்ய மோஹாய – மஹா மாயா ப்ரயச்சதி || ஞானியேயானாலும்  பகவதியான இந்த தேவி.   பலவந்தமாக அவர்களின் மனதை அபகரித்து  தன் மாயையிடம்  கொடுத்து விடுவாள்)

ज्ञानिनामपि चेतांसि देवी भगवती सा | बलादाकृष्य मोहाय महा माया प्रयच्छति ||

 

  1. அதில் என்ன கஷ்டம், உன்னை நம்பி பயனை அடையலாமே என்றால், அதற்கு பதில் சொல்வது போல பகவான் தொடருகிறார்.

அது அவ்வளவு சுலபமல்ல.   அதமன் எனும் படியான பிறவிகள் என்னை வணங்குவதில்லை.  அவர்கள்  மூடர்களாய் அசுரத் தன்மையை அடைந்து விடுகிறார்கள். யார் இவ்வாறு இருப்பவர்கள் என்று பார்த்தால் துஷ்க்ருதின: – தவறான. பிறருக்குத் துன்பம் விளைவிப்பதான செயல்களை செய்தவர்கள்,     ஓரளவு ஞானம் உள்ளவர்களும், என்னை அறிவதில்லை.  மாயை அவர்கள் ஞானத்தை அபகரித்து விடுகிறது .

 

  1. சுக்ருதின: – நற்செயல்களை செய்தவர்களும் நான்கு விதமாக என்னை நினைக்கிறார்கள்.

 

சதுர்விதா பஜந்தே மாம் சுக்ருதினோ அர்ஜுனா |  ஆர்த்தொ, ஜிக்ஞாசுர்  அர்தார்தி,  ஞானி. சைவ பரந்தப||

 

चतुर्विदा भजन्ते मां सुकृतिनोऽर्जुन | आर्तो जिग्ज्ञासुरथार्ति ज्ञानी चैव परंतप ||

 

  1. மிகுந்த கஷ்டத்தில் இருப்பவன், புதிதாக அறிந்து கொள்ள விரும்புபவன், கல்வியறிவு பெற விரும்புபவன், கலையோ, தொழிலோ கற்றுத் தேற விரும்புபவன், செல்வம் வேண்டுபவன்,  கடைசியாக ஞானம் பெற சாதனை செய்பவன்.

16&17.   இந்த நால் வகையினருமே  உதாரா: – நல்லவர்களே.  ஏதோ ஒரு விதத்தில்  என்னை ஏற்றுக் கோண்டவர்கள்.  ஆனாலும், . இவர்களில் ஞானி எனக்கு அதிக நெருக்கமானவன்.   ஞானியின் சாதனையும், பக்தியும் எனக்கு பிடித்தமானவை.  ஞானி நானே என்பதும் காரணம்.

 

  1. பல பிறவிகளின் முடிவில் ஜனங்கள் என்னை அறிகிறார்கள். அவர்களிலும் எல்லாம் வாசுதேவனே என்ற எண்ணம், நம்பிக்கை ஒரு சிலருக்கே அமைகிறது.

(தான் யார் என்று தன்னை வெளிப் படுத்திக் கொள்வதாக அமைந்த மற்றொரு இடம்.)

  1. அந்தந்த சமயங்களுக்கு ஏற்றாற் போல ஜனங்களின் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் மாறுகின்றன. வெவ்வேறுதேவதைகளை வணங்கி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள விழைகிறார்கள். அதற்கான சடங்கு சம்பிரதாயங்களை நியமமாக செய்வார்கள்.

20)&21) ஆனால் அவர்கள் அறியாதது, –  யார் யார் எந்த விதமாக நம்பிக்கையுடன் எந்த தெய்வத்தை வணங்குகிறார்களோ, அதற்கான சிரத்தையை நான் அளிக்கிறேன் என்பது.   சிரத்தையுடன் செய்வதால், அதற்கான பலனை அடைகிறார்கள்.  அந்த பலன் என்பதும் என் அருளாலேயே சித்திக்கிறது.

22) இந்த நடவடிக்கைகளும், அதனால் பெறும் பலனும் ஒரு நாள் முடியும்.  அதை நாடியவர்கள் அல்பமான புத்தியும், ஆசையும்  தானே வேண்டினார்கள்.  தேவதைகளை வேண்டி அதற்குண்டான பலன் பெற்றார்கள். என்னிடம் பக்தியுடையவர்கள் என்னையே அடைவார்கள்.

23)  கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ இருந்தவன், அவதாரம் எடுத்து கூடவே இருக்கும் பொழுது என்னை அறியாமல் புத்தியற்றவர்கள், விமர்சிக்கிறார்கள்.    என்னுடைய பரத் தன்மையை எப்படி அறிவார்கள்.  நான் அவ்யயன் அழிவற்றவன் என்பதும்  இந்த  அவதாரம்  என் சங்கல்பமே என்பதும் ஞானிகளே அறிவார்கள்.

24) கண்ணெதிரில் காணும் பொழுதும் ஏன் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்?  என்ற கேள்விக்கு பதிலாக,  அனைவருக்கும் நான் தென் படுவதில்லை.   மூடர்கள். அறிவில்லாதவர்கள்.  இவர்கள் எதிரில் நான் என் யோக மாயையால்  என் பர தத்வத்தை மறைத்துக் கொள்கிறேன்.

25) அர்ஜுனா! நடந்ததும், நடப்பதும், நடக்கப் போவதையும் நான் அறிவேன்.  என்னை அறிந்தவர்கள் எவருமில்லை.

26) அசை, துவேஷம் நிரம்பியிருக்க, சுக துக்கங்கள் போன்ற இரட்டைகள், தொடர்ந்து அலைக்கழிக்க இது தவிர மோஹம்-  இந்த குணங்கள் கண்களை மறைக்க ஜீவன்கள் என்னை மறக்கிறார்கள்.  திரும்பத் திரும்ப பிறப்பதும், மறைவதுமாக இருப்பதும் அதனால் தான். .

27) ஒரு சிலர் சாதனையால் அடைந்த ஞானம் கை கொடுக்க, நல் வினைகளாலும், மனத் திண்மையாலும், சுகம் துக்கம் போன்ற இடையூறுகளைக் கடந்து, முன் செய்த தீவினைப் பயன் தீர, பக்தியுடன் என்னை பஜிக்கிறார்கள்.

(யேஷாம் அந்த கதம் பாபம் – சிறிது சிறிதாக கரைத்து முடிவில் தீர்ந்தது எனும் கருத்து. பஹூனாம் ஜன்மனாம் அந்தே என்றாரே முன்னால்.  அதன் படி ஒவ்வொரு பிறவியிலும் நல் வினை செய்து கடந்த கால தீவினையை கழித்துக் கொண்டே வர  ஞானம்  வந்து இணைந்து கொள்கிறது.   தீவினையின் பலன் இனி இல்லை என்பதால். )

28) முதுமை, மரணம் இவற்றிலிருந்து விடுபட சிலர் என்னை பஜிக்கிறார்கள்.   அதன் பலனாக ,  அவர்கள், ப்ரும்மம் என்பதையும், தன் ஆத்மா, பரமாத்மா  என்பவைகளையும். அத்யாத்மா,  கர்மா- கடமை என்பதன் முழு பரிமாணத்தையும் அறிந்து கொள்வார்கள்.

அவர்கள் என்னை  (ஸ) அதி பூதம், (ஸ) அதி தைவம். (ஸ)அதி யக்ஞம் – பௌதிக உலகில் இருக்கும் என்னையும், தெய்வீகமாக என் நிலையையும், யாக கர்மாவில் என் ரூபத்தையும் தெரிந்து கொள்கிறார்கள்.  உடலைத் துறந்து செல்லும் அந்திம காலத்திலும் என்னை அதே போல நினைவில் இருத்திக் கொள்கிறார்கள்.

(ஸ என்ற பகுதி உடன் எனும் பொருளில் வரும்.  பௌதிகத்துடன் கூடிய எனலாம்.)

(இது வரை, உபநிஷதான் ஸ்ரீமத் பகவத் கீதையில், ப்ரும்ம வித்தையின், யோக சாஸ்த்ரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில், ஞான விக்ஞான யோகம் என்ற ஏழாவது அத்தியாயம்)

 

அத்யாயம் -8 அக்ஷர ப்ரும்ம யோகம்

சென்ற அத்யாயத்தில் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் நிறைய விஷயங்கள் சொன்னார்.   அர்ஜுனனுக்கு சந்தேகமும் நிறையவே – சரமாரியாக கேட்கிறான்.

கிம் தத் ப்ரம்ம ?  கிம் அத்யாத்மம் ? கிம் கர்ம?  அதிபூதம் ச கிம்?  அதிதைவம் கிமுச்யதே ? அதி யக்ஞம் கதம்? ப்ரயாணகாலே ச கதம் க்ஞேயோ (அ) ஸி?

किं तद्ब्रह्न ? किं अध्यात्मं ?किं कर्म ?अधिभूतं च किं? अधि दैवं किमुच्यते ?

अधि यज्ञं कथं ? प्रयाण काले च कथं ज्ञेयोऽसि ?

ஏழு கேள்விகள்.  பகவானும் சளைக்காமல் அதே போல பதில் சொல்கிறார்.

1.அக்ஷரம் பரம் ப்ரும்ம  2.  ஸ்வபாவம்  என்ற இயல்பு தான் அத்யாத்மம்  3.  பூத -பாவோத்பவ கரோ – உயிர்கள் தோன்ற காரணமாக இருக்கும் பீஜம் அல்லது விதை – முளைப்பது முதல், உலகில் நடக்கும் யாக யக்ஞாதி செயல்கள் கர்மம் என்பதில் அடங்கும்.

  1. அதி பூதம் என்பது பௌதிகமான உடல் அழியக் கூடியது. 5. புருஷன்- ஆத்மா என்பது அழியாதது. அது தான் அதி தைவம் .6. மனித உடலில் அதி யக்ஞம் என்பது நானே. 7. மரணத் தறுவாயில் என்னை எப்படி அறிவது என்பதையும் சொல்கிறேன்.

சங்கர  பாஷ்யம்:   அதி பூதம் என்ற உடல் அழியக் கூடிய வஸ்துக்களால் ஆனது.  சிருஷ்டியில் அனைத்து உயிரினங்களும் இதில் அடங்கும்.

புருஷ – என்ற சொல் – அதன் பொருள் படி – நிரப்பும் ஒரு வஸ்து –  எது ஒன்று உலகை நிறைவாக செய்கிறதோ – (ப்ரு என்ற தாது – நிரப்புதல்) பௌதிகமாக உண்டான உடலை நிரப்பும் வஸ்து- ஆத்மா – ஹிரண்ய கர்ப எனப்படும், சூரிய ஒளியில் இருப்பவன், பரமாத்மா, ஒவ்வொரு உயிருக்கும் சக்தியை அளிப்பவன்.  புலன்கள் வேலை செய்வதும் இதன் தூண்டுதலால்,  அனைத்து ஜீவன்களிலும் உயிரை உடலில்  நிலை  நிறுத்தி காப்பவன்,   யாக புருஷன் எனப்படும் விஷ்ணு.  வெளி உலகில் யாக கர்மாக்கள் என்றால், உடல் இயங்குவதே ஒரு யாகம், அதன் கர்த்தாவும் விஷ்ணுவே- அதாவது நானே.

  1. தன் இறுதி காலத்தில், மரணத் தறுவாயில் என்னை நினைத்து உயிரை விடுபவன் என்னை அடைகிறான். இறுதி காலத்தில் எதைநினைத்து. எந்த மனோ பாவத்துடன் இறக்கிறானோ அதை, அந்த பாவத்தை மறு பிறவியில் அடைகிறான்.
  2. அதனால் அர்ஜுனா! எப்பொழுதும் என் நினைவாகவே இரு. இறுதிக் காலம் எப்பொழுது வரும் என்பது தெரியாது. அதனால் சதா சர்வ காலமும் மனதில் என் நினைவாகவே இரு. என்னிடம் உன் மனம், புத்தி இவைகளைசமர்ப்பித்து விடு.  என்னையே வந்தடைவாய்.
  3. அது எப்படி முடியும்? எப்பொழுதும் நினைக்க முடியுமா? மற்ற எண்ணங்கள் வராதா? என்ற கேள்விக்கு பதில் சொல்வது போல அடுத்த ஸ்லோகம்.
  4. அர்ஜுனா! யோக சாதனைகளை ஒரே முனைப்புடன் செய்து பழகிக் கொள். மனதை அலைபாய விடாமல் கட்டுப்படுத்து.  திரும்பத் திரும்ப நினைத்து மனதில்  உருவேற்றிக் கொள்.  திவ்யமான  பரப்ரும்மத்தை அடைவாய்.

ச.பா:  தியானம் என்பது அதுவே.  பயிற்சி – ஒரே குறிக்கோளுடன் திரும்பத் திரும்ப செய்து மனதில் இருத்திக் கொள்வதே யோகம்.  யோகியானவன்  குருவிடம் கற்றதை, சாஸ்திரங்களில் படித்துத் தெரிந்து கொண்டதை  இடை விடாமல் மனனம் செய்து வருவான். தன் யோக சக்தியால்,  அழிவில்லாத பெரும் சக்தியும்,   சூரியனின் ஆதிக்கத்துக்குள் வரும் பேரண்டத்தின்   மூல  புருஷணுமான (என்னை) அடைகிறான்.

9.&10.  புருஷன் என்ற சொல் முன்பு சொன்னதையே மேலும் விவரிக்கிறார்.

கவிம் புராணமனுசாஸிதாரம் அணோரணீயாம்சம்  அனுஸ்மரேத் ய:|

சர்வஸ்ய தாதாரமசிந்த்ய ரூபம் ஆதித்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத் ||

ப்ரயாண காலே மனஸாசலேன  பக்த்யா யுக்தோ யோக பலேன சைவ |

ப்ருவோர்மத்யே ப்ராணமாவேஸ்ய ஸம்யக் ஸ தம் பரம் புருஷமுபைதி திவ்யம்||

कविं पुराणमनुशासितारं अणोरणीयांशं  अनुस्मरेद्य: | सर्वस्य दातारमचिन्त्य रूपं  आदित्य वर्णं तमस: परस्तात् ||

प्रयाण काले मनसाचलेन भक्त्या युक्तो योग बलेन चैव | भ्रुवोर्मध्ये  प्राणमावेश्य संयक् स तं परं पुरुषमुपैति दिव्यम् ||

கவி- இந்த பதத்திற்கு பல பொருள்கள் உண்டு. இந்த இடத்தில் குரு.   கட்டளையிடுபவன்- உலகில்  அசையும்  அசையா பொருட்கள் அனைத்தும் எங்கு எப்படி எந்த உருவத்தில் இருக்க வேண்டும் என்பது வரை ஆணையிட்டு நடத்துபவன்,  அணுவிலும், அணுவாக இருப்பவன்,  நினைத்து பார்க்க முடியாத அத்புதமான ரூபம், வேண்டிய அனைத்தையும் தருபவன், ஆதித்யன் போன்ற நிறம்,  இருட்டு அல்லது அறியாமை நெருங்க முடியாதா பெரும் ஜோதி.

இவனை அருகில் இருப்பது போல எண்ணி, தன் வாழ்வின் இறுதி காலத்தில் நினைக்க வேண்டும்.  பக்தியுடன், யோக பலமும் சேர,   புருவங்களின் இடையில் ப்ராணனை  நிறுத்தி, (யோகம்)  நல்ல முறையில் கற்றதை நினைவு கூர்ந்து ப்ராணத் தியாகம் செய்பவன் அந்த பர புருஷனை சென்றடைகிறான்.

  1. எந்த அக்ஷரத்தை – ஓம் எனும் ப்ரணவாக்ஷரம் –அல்லது அழிவில்லாத பரம் பொருள், வேதம் அறிந்தவர்கள் ஓதிக் கொண்டே இருக்கிறார்களோ, ஆசைகளை அடக்கி தவம் செய்த யதிகள் எதனுள் ஐக்கியமாகிறார்களோ, எதை விரும்பி ப்ரும்மசர்யம் – ப்ரும்மத்தை அடைய சாதனைகள் செய்கிறார்களோ- அந்த பதவியை சுருக்கமாக சொல்கிறேன் கேள்.

12 &13.  புலன் களின் வாயிலை அடைத்து- புலன் களை கட்டுப்படுத்தி, ஹ்ருதயத்தில் மனதை நிறுத்தி,   உச்சந் தலையில் ப்ராணனைக் கொண்டு சென்று,  யோக தாரணை என்பதை செய்து கொண்டு,  என்னை மனதில் நினைத்தபடி, ப்ரும்மமேயான  ஓம் எனும் ஒரு அக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டு,  பிராணனை விடுபவன் பர கதியை அடைகிறான்.

  1. நித்யம் சாதனைகள் செய்து யோகியானவன், மாற்று கருத்து எதுவுமின்றி, என்னை நம்புபவன், என்னையே சகலமும் என்று நினைத்திருப்பவன் யாரானாலும் அவனுக்கு நான் சுலபமாக காணக் கிடைப்பேன்.
  2. என்னை அடைந்தவன், நிலையற்ற, துக்கம் நிறைந்த இந்த உலகில் மறு முறை பிறவி எடுக்க மாட்டான். அவன் மஹாத்மா எனப்படுபவன். எந்த துக்கமும் அவனை அண்டாது.   உயர்ந்த நிலையான  சம்சித்தியை அடைவான்.

 

  1. ப்ரும்மா முதலான உலகில் அனைத்தும் மாறிக் கொண்டே இருக்கின்றன. பிறப்பும் இறப்பும் ஒரு சுழற்சியாக தொடர்ந்து வருவது. என்னை அடைந்தவன் இந்த சுழலிலிருந்து விடுபடுகிறான்.

 

17..  ஆயிரம் யுகங்கள் பகலும், ஆயிரம் யுகங்கள் இரவுமாக ப்ரும்மாவின் ஒரு நாள்.  அவரது இரவின் முடிவில் யுகாந்தம்  – ஒரு யுகம் முடிவடையும்.

கணிதம் அறிந்தவர்களின் கணக்கு இது. இதை எப்படி கணக்கிடுவது.

 

  1. இரவில் மறைந்திருக்கும் அனைத்தும் பகலில் தென்படும். மறுபடியும் இரவில் மறைந்து பகலில் வெளிப்படும். இதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

 

அவ்யக்தாத் வ்யக்த்ய: சர்வா: ப்ரபவந்த்யஹராகமே |

ராத்ரியாகமே ப்ரலீயந்தே த த்ரைவ (அ)வ்யக்த சஞ்ஞகே ||

अव्यक्तात् व्यक्तय: सर्वा: प्रभवन्त्यहरागमे | रात्र्यागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्त सज्ञके ||

 

சங்கர  பாஷ்யம்:

ப்ரும்மா – ப்ரஜாபதி.   சிருஷ்டிகர்த்தா எனப்படுபவர்.   அவருடைய இரவில்  அவர் தூங்கும் நேரம், மறைந்திருக்கும் சராசரம், அசையும் அசையா பொருட்கள், பகலானதும் தெளிவாக வெளி வரும்

அனைத்தும் என்றால்,

சாஸ்திரங்கள், பந்தம் என்றும் விடுதலை என்றும் சம்சாரத்தை சொல்வதன் பொருள் இதன் மூலம் மறுக்கப்படுகிறதே-  அனைத்தும் ப்ரும்மாவின் நித்ரையுடன் மறையும், அனைத்தும் அவரது விழிப்புடன் அதே போல தோன்றும் என்றால்,  சம்சார பந்தம் என்பது என்ன?  உலகில் இருக்கும்வரை செய்த நல்வினை, தீவினை  இவைகளுக்கு எந்தவித பலாபலனும் இல்லை என்றாகிறதே – இந்த கேள்விக்கு பதில் சொல்வது போல  அடுத்த ஸ்லோகம்:

 

  1. இது தான் சக்கரம் சுழலுவது போல சுழன்று கொண்டேயிருக்கும் – பலவிதமான உயிரினங்கள், தாவரங்கள், ஒட்டு மொத்தமாக மறைவதும் பின் தோன்றுவதுமாக இருக்கின்றன.

 

ச. பா: இதில் அந்த ஜீவன்களின் விருப்பமோ, வெறுப்போ பொருட்டல்ல.  இது ஒரு நியதி.  இதிலிருந்தும் யோகி விடுபடுகிறான் என்பது தாத்பர்யம்.

 

20.. இந்த சுழற்சியில் அகப்படாமல், சனாதனமான ஒரு பரம்பொருள் உண்டு.  அவ்யக்தமோ, வ்யக்தமோ,  பாதிக்கப் படாமல் மற்ற அனைத்தும் அழியும் பொழுதும் தான் அழிவதில்லை.

 

  1. புலன் களுக்கு புலப்படாத அந்த பரம் பொருளைத் தான் அக்ஷர என்கிறார்கள். க்ஷர – குறையக் கூடியது, அக்ஷர – என்றும் நிறைவானது. அழிவற்றது –  எதை அடைந்தபின் திரும்பி வருவதில்லையோ அந்த ஒளி மயமான இடம் தான் என்னுடையது.

 

22)  மாற்று எண்ணமில்லாத பக்தியால் அந்த பர தத்வத்தை, புருஷன் என்றும் பரம் பொருள் என்றும் போற்றப் படும் பரமாத்மாவை உணரலாம்.  அண்ட சராசரங்களும் அதனுள் அடக்கம்.  இவற்றை உருவாக்கியதும் அதுவே.

23 & 25) யோகிகள் ப்ராணத்யாகம் செய்வதற்கும் சில வரை முறைகள் உள்ளன. அது பற்றி சொல்கிறேன் கேள்.

உத்தராயணம் என்பது ஆறுமாதங்கள்,  அந்த சமயம் பகல் நேரம் அதிகம்.  அதில் சுக்ல பக்ஷம், பகல் நேரம் உயிரை விடுபவன், ப்ரும்ம லோகத்தை அடைகிறான் என்று ப்ரும்மத்தைப் பற்றி அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

புகை மண்டி இருப்பது போல் சூரிய ஒளி குறைந்த சமயம், இரவு நேரம் அதிகமாக இருக்கும் தக்ஷிணாயணம். அதில், க்ருஷ்ண பக்ஷம், இரவு நேரத்தில்,  சந்திரனின் ஒளியில் உயிர் துறப்பவன்  திரும்பி வருகிறான், மறு பிறவியை அடைகிறான்.

  1. சுக்ல பக்ஷம் அதாவது வளர்பிறை, க்ருஷ்ணபக்ஷம் – தேய்பிறை என்பது சந்திரனின் கதியை வைத்து உருவான கால அளவுகள். சாஸ்வதமானது. மாற்றமில்லாத இயற்கையின் நியதி. இதன் வளர் பிறையில் மறைந்தவன் திரும்பி வருவதில்லை, தேய்பிறையில் சென்றவன் திரும்பி பூமியில் பிறக்கிறான். தியானம் செய்து யோகியானவர்கள் இந்த உண்மையை அறிவார்கள்.  அர்ஜுனா! தியானம் செய். யோகியாவதே உனக்கு நன்மை.

ச.பா: இவற்றை தேவ யானம், பிதுர் யானம் என்றும் அழைப்பர்.  யானம்- வாகனம்.  தேவ யானத்தில் செல்பவன் தெய்வ லோகமான  ப்ரும்ம லோகத்தையும்,  பிதுர் யானத்தில் செல்பவன் பித்ருக்கள்- முன்னோர்கள்  உலகம் – சென்றடைகிறார்கள்.  தேவ லோகம் போகும் வழி ப்ரகாசமாக – ஞான மார்கம் ப்ரகாசமாக உருவகப் படுத்தப் படுகிறது – இருக்க பிதுர் மார்கம் – ஒளியின்றி காணப்படும். காரணம் இங்கு ஞானம் ப்ரதானமாக இல்லை.

  1. வேதங்களில், யாக கர்மாக்களில், தானம் முதலான நல்ல காரியங்களில், புண்யம் என்று எதைச் சொல்கிறோமோ, அவற்றை, தியானம் செய்து யோகியானவனும் அடைகிறான்.

வேதத்தை முறையாக கற்றுத் தேர்ந்தவன், யாக கர்மாக்களை சாஸ்திர விதிப்படி சிரத்தையாக செய்பவன், பாத்திரம் அறிந்து தானம் செய்பவன் இவர்கள்  உலகில் சிறந்தவர்களாக கருதப் படுகிறார்கள். தியானம் செய்து தன்னையே உயர்த்திக் கொண்டு ப்ரும்ம ஞானம் அடைந்தவனும் இவர்களுக்கு தாழ்ந்தவனல்ல.

(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதை என்ற ப்ரும்ம வித்யையில், யோக சாஸ்திரம் என்ற பகுதியில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் அக்ஷர ப்ரும்ம யோகம் என்ற எட்டாவது அத்யாயம்.)

 

 

அத்யாயம் -9  ராஜ வித்யா ராஜ குஹ்யோ

ராஜ வித்தை- வித்தைகளுக்குள் சிறந்த வித்தை. மிக ரகசியமானதும் கூட

சென்ற அத்தியாயத்தில் தாரணா- என்ற சாதனை வலியுறுத்தப் பட்டது.  அதாவது கற்றதைத்திரும்பத் திரும்ப நினைத்து உருவேற்றிக் கொள்ளுதல்.  அப்யாஸ யோகேன – பயிற்சி செய்து என்று பகவான் குறிப்பிட்டது தான் தாரணா, மனனம் என்றும் சொல்லப் படுவது. ப்ரும்மத்தை அறிவதற்கான உடல் பயிற்சி,  புருவங்களுக்கு இடையில் ப்ராணனை நிறுத்தி – என்பது போன்ற விஷயங்கள் சொல்லப் பட்டன.  இதை நாடி –(நரம்பு) வித்யா என்றும் சொல்வர்.

இப்பொழுது பகவான் சொல்கிறார்.

இதோ உனக்கு புதிதாக ஒன்று சொல்கிறேன்.  அசூயை இல்லாதவனே! அர்ஜுனனை இந்த பெயரால் அழைக்கிறார்.

ஞானம், விக்ஞானம் இரண்டும் கலந்தது – அசுபம்- கெடுதல் எதுவும் உன்னை அண்டாமல் காக்கும் அறிவு இது தான்.  ராஜ வித்தை – வித்யைகளுக்குள் – கல்வி, கலைகளுக்குள் தலையானது.  இதை அறிந்தவர் மிகச் சிலரே.  அதனால் ரகசியமாக உள்ளது.   எளிதில் புரிந்துகொண்டு நீ சுலபமாக செயலில் கொண்டு வர முடியும்.

ச.பா:  ப்ரும்ம ஞானம் தான் சிறந்த ஞானம் – வி ஞானம்- விசேஷமான அறிவு.  ரகசியம் – புடம் போடுவது – தங்கத்தை புடம் போடுவதால் அதன் உண்மையான  ப்ரகாசம்  வெளிப் படுவது போல இதை அறிந்தவனின் காம க்ரோத எனும்  பலவீனங்களை  புடமிட்டு – நெருப்பில் இடுவது போல – சுத்தம் செய்து  மனதை தூய்மையாக்கி  ப்ரும்ம ஞானம் தங்க இடம் தயார் செய்வது செய்து விடும். கர்ம வினை அகன்று விடுவதால் ப்ரத்யக்ஷமாக காணுவது போல தெளிவாக புரிந்து கொள்வாய்.  சுகம் என்ற ஒன்றை நீ உணருவது போல உணர்ந்து கொள்வாய். புலன் களால் அனுபவிப்பதில் சுகம் இருந்தாலும் சில சமயம் அதர்மம் இருக்கலாம். ஆனால் ப்ரும்மானந்தத்தில் அந்த பயம் இல்லை.  மிகுந்த சிரமப்பட்டு கற்க வேண்டுமா என்றால், அதுவும் இல்லை.  பலவிதமான கற்களின் இடையில் மாணிக்கம் கிடந்தால் உடனே  தெரிவது போல தெளிவாக விளங்கிக் கொள்வாய்.  சாதாரணமான ஒரு கலையை அறியவே மிகுந்த ப்ரயத்னங்கள் தேவைப் படும் பொழுது இதை சுலபமாக கற்க முடியுமா?  ப்ரும்ம வித்தை என்பது கடினமில்லையா?   சுலபமாக கற்றால் அதன் மதிப்பும் அதே அளவில் அழிந்து விடுவதில்லையா?   நுணுக்கமாக கற்றுக் கொள்ள உழைப்பும் அதிகம் தேவை என்று தானே சொல்வார்கள். அப்படியிருக்க, அழிவில்லாத ப்ரும்ம வித்தை அவ்வளவு சுலபாக கைகூடுமா?  பகவான் சொல்கிறார்- ஆத்மாவை அறிந்து கொள்வது என்றும் நிலைத்து நிற்கும். எப்பாடு பட்டாயினும் கற்க வேண்டியதே. மேலும்,

  1. இது ஒரு கோட்பாடு -இந்த விஷயத்தில் ஈடுபாடு இல்லாமலோ, நம்பாமலோ இருப்பவர்கள் என்னையும் அறிவதில்லை, பிறவிக் கடலை கடப்பதுமில்லை.
  2. என்னால் உருவாக்கப் பட்டதே இந்த உலகம் அனைத்தும். அது என் பரதத்வம். உயிரினங்கள், அண்ட சராசரங்கள் என்னில் அடக்கம். ஆனால் அவைகளில் என்னைக் காண முடியாது.

ச.பா:  முன்னமே சொல்லியபடி ஜீவன்களின் உள்ளுறையும் ஆத்மா நானே.   ஆத்மா தனித்தே இருக்கும். உலகியலின் தாக்கம் அதற்கு கிடையாது.

  1. பஞ்ச பூதங்களும் என்னுள் அடங்கும். ஆனால் அவைகளுல் நான் இல்லை. இது என் தெய்வீகமான யோகம். (இந்த   இடத்தில் யோகம் – தொடர்பு என்ற பொருளில் வருகிறது) அசையும், அசையா பொருட்களை உண்டாக்கி அவை இயங்கும்படி செய்வது நான் தான். நான் காரணம் மட்டுமே.

ச.பா: ப்ரும்மா முதலான ஜீவ ஜந்துக்கள், என்னிடம்  இருந்து தோன்றினாலும் நான் அவைகளுக்கு இருப்பிடம் இல்லை.   இது தான் தெய்வீகமான ரகசியம். அவைகளிடம் எனக்குத் தொடர்பும் இல்லை.  ஆனால், உலகில் இயக்கம் – உயிரினங்கள், மற்றும் தாவரங்கள், சிருஷ்டியின் அனைத்து வகைகளும் தோன்றியது முதல் முடிவு வரை என் மூலமே நடைபெறுகிறது.

  1. அது எப்படி சாத்யம் என்பதை உதாஹரணம் மூலம் விளக்குகிறார். எப்படி ஆகாயத்தில் இருக்கும் வாயு, உலகம் முழுவதும் வியாபித்து இருக்கிறதோ, அது போல நானும் உலகம் முழுவதிலும் வியாபித்து இருப்பதால், எல்லா பிறவிகளும் என்னிடம் அடங்குகின்றன.
  2. கல்ப முடிவில் உலகம் அதன் அனைத்து உயிருள்ளவை, மற்றவை உட்பட, என்னுள் அடங்கி நானாகவே ஆகின்றன. மறுபடியும் அடுத்த கல்ப ஆரம்பத்தில் அவைகளை நான் விடுவிக்கிறேன்.
  3. என் ப்ரக்ருதி – என் இயல்பு – நான் ஏற்றுக் கொண்டுள்ள பொறுப்பு. என்னிடத்தில் ஒடுங்கிய அனைத்து ஜீவ ராசிகளையும் விடுவிக்கிறேன்.  ஒரு கல்பம் முடிந்து அடுத்த கல்பம் துவங்கும் சமயம் புதிதாக அதே ஜீவ ராசிகள் தோன்றுவது இதனால் தான்.  அந்த ஜீவ ராசிகள் தன்னிச்சையாக எதையும் செய்யும் நிலையிலும் இருப்பதில்லை. எனவே, இதை என் பொறுப்பு என்று ஏற்றுக் கொண்டுள்ளேன்.
  4. இவ்வாறு செய்யும் பொழுது தானும் கர்மா- வினை என்பதன் சாதக பாதகங்களை அனுபவிக்கத்தானே வேண்டும் என்ற கேள்விக்கு பதிலாக அடுத்த ஸ்லோகத்தில்,

தனஞ்சயா!  இந்த செயல்கள் என்னை கட்டுப் படுத்துவதில்லை.  பற்றின்றி செய்வதால் வெளிப் பார்வைக்கு நான் செய்வது போல இருந்தாலும், அதன் பலாபலன்களில் என் பங்கு எதுவுமில்லை.

  1. என் தலைமையில் உலகம் மாறி மாறி சுழல்கிறது. சராசரங்கள் இடம் பெயருவதும், வளர்ந்து, மறைவதும் தொடர்ந்து கொண்டே இருப்பதும் என் சங்கல்பத்தாலேயே.

ச.பா:  நான் சாக்ஷி மாத்திரமே.  ஜீவராசிகள், சுகம் என்றும் துக்கம் என்றும் அனுபவிப்பது அவர்களின் உள்ளுணர்வே. மனம், புத்தி இவைகளால் உணர்ந்து அனுபவிக்கிறார்கள். எந்த விதமான பந்தமும் தனக்கு இல்லையென்றால், மறுபடி மறுபடி சிருஷ்டி எதற்கு?  ஈஸ்வரன்- தலைவன் என்று ஒருவர் இருந்து இந்த செயலை செய்வதன் – நாடக பாத்திரங்கள் போல ஜீவ ராசிகளை உலவ விடுவதில் என்ன லாபம் ?

இதற்கு பதில் சொல்வது போல அடுத்த ஸ்லோகம்

ச.பா: நான் ஆதியும் அந்தமும் அற்றவன், மாசில்லாத பரம் பொருள் தான். உலகை வியாபித்து உள்ளவன். ஞானிகள் என்னை வணங்கி ஆராதிக்கின்றனர் என்றாலும் நான் ஸ்வதந்திரமானவன்.

  1. ஆகாயம் போல் நான் வியாபித்து உள்ளேன். என்னை அறியாதவர்கள் நான் அவதாரம் எடுத்து வந்தால் மனிதனோடு மனிதனாக நினைத்து அவமரியாதை செய்கின்றனர். என் பரதத்வத்தை உணராத மூடர்கள். இவ்வாறு என்னை தூஷிப்பதாலேயே துர்கதியை அடைகிறார்கள்.

11.அவர்களின் நம்பிக்கையும் மோகமே- நிலையானதல்ல. அதனால் செய்யும் செயல்களும்  நேர்மையானவையாக இருப்பதில்லை. அறிவின்மையால் ஞானம் என்பது எது என்று தெரியாமல் எதையோ அறிவு என்று நம்புகிறார்கள். ராக்ஷஸர்கள், அசுரர்கள் எனப் பிறவி பெறுகிறார்கள்.  இயல்பான நல்ல குணங்கள் எதுவும் பெறாமல் வீணாகிறார்கள்.

  1. அதுவே அறிவுள்ள சிலர் என் உண்மை நிலையை அறிவார்கள். பார்த்தா! அவர்கள் மகாத்மாக்கள். என் ஈஸ்வரத் தன்மையை புரிந்து கொண்டவர்கள். மாற்று எண்ணம் இன்றி என்னை முழுமுதற் கடவுளாக என்னை வணங்கி  வழிபடுவர்.  நான் அழிவற்றவன், ஆதியும் அந்தமும் இல்லாத பரம் பொருள் என்று அறிவார்கள்.
  2. எப்பொழும் என் நினைவாக இருப்பர். பாடல்களைப் பாடுவர். யாக காரியங்களை எனக்கு அர்ப்பணமாக செய்வர். அன்புடன் வணங்கி தியானம் செய்வார்கள்.
  3. மற்றும் சிலர், யாக, யக்ஞங்கள் செய்து என்னை உபாசிக்கின்றனர். தனிப்பட்ட தெய்வ வழிபாடுகள் என்று சிலர், பலர் சேர்ந்து பஜனையாக சிலர், விஷ்ணுவாக அல்லது பரப்ரும்மாக நினைத்து என்று பலவிதமாக வணங்குவர்.

ச.பா: பலவிதமாக வணங்குகிறார்கள் என்றால், ஒரே தெய்வமாக உன்னை ஏற்றுக் கொண்டதாக ஆகுமா?

இந்த கேள்விக்கு பதிலாக அடுத்த சில ஸ்லோகங்கள்;

  1. நானே க்ருது, நானே யக்ஞம், ஸ்வதா வும் நானே, ஔஷதமும் நானே, மந்த்ரமும், ஆஜ்யமும் நானே, அக்னியும் அக்னியில் செய்யப்பட்ட அஹுதியும் நானே.

க்ருது – அக்னியில் ஹோமம் செய்வது, யாகம் – ஸ்ம்ரிதிகளில் சொல்லப் பட்ட விதிகளுடன் கூடிய யாகம், ஸ்வதா -பொதுவான ஆகாராதிகள், ஔஷதம் – மருந்து, மந்திரம் உச்சரிப்பதும்,  உச்சரித்துக் கொண்டே அக்னியில் போடப் படுவது ஆஜ்யம்,  யாகத்தீயும் அதில் போடப் பட்ட-ஆஹுதியான வஸ்துவும் –  இவையனைத்தும் யாக சம்பந்தமானவையே.

  1. உலகம் முழுவதற்கும் தந்தை நானே, நானே தாயார், சிருஷ்டி கர்த்தா என்றும் பிதாமஹர் – பாட்டனார், என்றும் அழைக்கப் படும் ப்ரும்மாவும் நானே. பவித்திரமான வேத மந்திரங்களும், ஓங்காரமும், ருக், சாம, யஜுர் வேதங்களும் நானே.
  2. அடைய வேண்டிய இலக்கும் நானே. பர்த்தா – போஷிப்பவனும் நானே. ப்ரபு:- தலைவனும், ஜீவ ராசிகளின் செயலுக்கு சாக்ஷியும் நானே.  இருக்கும் இடமும், புகலிடமும், ஆபத்துக்கு உதவும் நண்பனும் நானே.
  3. ஆற்றல் உடையவன், எடுத்த காரியத்தை முடிக்க உதவுபவன்- ப்ரலய: ப்ரலயமாக வந்து அழிப்பவனும் நானே. ஸ்திரமாக இருப்பவன், செல்வங்களின் கருவூலம், பீஜம் -விதைகள், (தாவரங்கள், உயிரினங்கள்மற்றும் அனைத்து உருவங்களும் தோன்றக் காரணமானவன்),அழிவற்றவன்.
  4. அர்ஜுனா! ஆதித்யனாக இருந்து ஒளியும், வெப்பமும் தருபவன், நானே மழையாக நின்று நீரைப் பொழிபவன், இழுத்து நிறுத்துபவனும் நானே, இறுகி இருப்பதை வெளிக் கொணருபவனும் நானே.  அம்ருதமும் நானே, ம்ருத்யுவும் நானே. சத் அஸத் – நல்லது, பொல்லாதது என்பதும் நானே.

ச.பா:   நிக்ருஹ்ணாமி உத்ஸ்ருஜாமி ச  – என்பதற்கு விளக்கம். ஒளி தருவதும், வெப்பம் அளிப்பதும் சூரியனே ஆனாலும் வெவ்வேறு கதிர்கள்.  சில நாட்கள் அதிக வெப்பமும், சில நாட்களில் குறைவாக இருப்பதும் அந்த கதிர்கள் என்னால்  இயக்கப் படுவதால் அல்லது என் வசத்தில் இருப்பதால் தான். அதே போல மழை சில மாதங்களில் மட்டும் பெய்வதும்.

இதுவரை ஒரே தெய்வமா என்ற வினாவிற்கு தான் யார் என்ற விளக்கங்கள்.

  1. மூன்று வேதங்களையும் அறிந்தவர்கள் யாகங்கள் மூலமாகவே என்னை துதிக்கிறார்கள். ஸ்வர்கத்தை அடைவது தான் அவர்களது குறிக்கோள். புண்ய பலனாக, ஸ்வர்கம் சென்று திவ்யமான போகங்களை அனுபவிக்கிறார்கள்.

ச.பா: இந்திரன் நூறு யாகங்களை செய்து இந்திர பதவியை அடைந்தான் என்பது தெரிந்திருக்கும்.  இவர்கள் ஆசையும் அதுவே.

  1. அங்கு சென்று இந்திரனுக்கு சமமான சுகங்களை அனுபவித்து விட்டு புண்யம் தீர்ந்தவுடன் திரும்ப பூமியில் பிறக்கிறார்கள். இவ்வாறாக த்ரயீ எனும் வேத மார்கங்களை அனுசரித்தவர்களும் தாங்கள் விரும்பிய பலனை பெறுகிறார்கள்.
  2. அநன்யா:ஸ்சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே| தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக க்ஷேமம் வஹாம்யஹம் ||

மாற்று எண்ணமின்றி என்னையே நம்பி வணங்குபவர்களின் யோக க்ஷேமங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.  அவர்கள் என்றும் என் பக்தர்களே.

  1. மற்ற தெய்வங்களை பக்தியுடன் துதிப்பவர்களும் அவர்கள் அறியாமலே என்னையே துதிக்கிறார்கள். கௌந்தேய! (அர்ஜுனனின் பெயர்) அறியாமை தான் காரணம்.
  2. யாக யக்ஞங்கள் போற்றும் தெய்வமும் நானே, அதில் செய்யப்படும் தானம் மற்றும் ஹோம திரவியங்களை ஏற்பவனும் நானே, என்பது தெரியாமல் செய்கிறார்கள் சிலர்.
  3. தேவதைகளை வணங்கி வேண்டுபவர்கள் தேவ லோகம் செல்கிறார்கள். பித்ருக்களை – முன்னோர்களை வேண்டுபவர்கள் பித்ரு லோகம் செல்கிறார்கள். பஞ்ச பூதங்களை  வணங்குபவர்கள்,  உலகியல் சுகங்களை நாடி பெறுகிறார்கள். என்னை வணங்குபவனும் என்னையே அடைகிறான்.
  4. என்னை பூஜிக்க சிரமப் பட வேண்டாம், பத்ரம்-இலை, புஷ்பம், பூ, பலம்- பழங்கள், தோயம்- தண்ணீர் – இவைகளில் எதை பக்தியுடன் அளித்தாலும் நான் திருப்தியாக ஏற்றுக் கொள்கிறேன்.

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி |

ததஹம் பக்த்யுபஹ்ருதமஸ்னாமி ப்ரயதாத்மன: ||

  1. அவ்வளவு ஏன்? நீ செய்யும் செயல்களை, உண்ணும் உணவை, தியாகம் செய்வதையும் (யாக கர்மாக்களில்) தானம் செய்வதையும், தவம்செய்வதானால் அதையும் எனக்கு அர்ப்பணம் செய்து விடு.
  2. இச்செயல்களின் பலனான சுபமோ, அசுபமோ உன்னை அண்டாது. – (இவைகளும் உன் இலக்கை அடைய தடைகளே- ) சன்யாச யோகம் – துறவியின் சம நிலை இதுவே. அதன் பின் விடுபட்டவனாகஎன்னை அடைவாய்.
  3. சகல ஜீவ ராசிகளும் எனக்கு ஒன்றே. அனைவரையும்நான் சமமாகவே பார்க்கிறேன். எனக்கு த்வேஷி என்றும் ப்ரியன் என்றும் பாகுபாடு கிடையாது. என்னை பக்தியுடன் வணங்குபவன் உள்ளத்தில் நான் இருப்பேன். அது போலவே அவனும் என் உள்ளத்தில் இருப்பான்.
  4. துராசாரன் எனப் படுபவன் கூட என்னை வணங்கினால் தன் துஷ்டத்தனத்தை விட்டு நேர்மையாவான். அவனும் சாது நல்லவன் என்று எண்ணப்படுவான்.

31.நாளடைவில் தர்மாத்மாவாக நல்ல செயல்களைச் செய்து மன சாந்தி பெறுவான்.  கௌந்தேயா! நினைவில் வைத்துக் கொள், என் பக்தன் என்றும் நாசம் அடைய மாட்டான்.

கௌந்தேய ப்ரதி ஜானீஹி ந மே பக்த: ப்ரணஸ்யதி ||

  1. பிறப்பினால் தாழ்ந்தவர்கள் என கருதப்படும் ஜீவன் களும் (பெண்கள், வைஸ்யர், சூத்ரர் – இவர்கள் வைதீக காரியங்களில் ஈடுபட அனுமதி மறுக்கப் பட்டிருந்தது) என்னை வணங்கி நல்ல கதி அடைந்துள்ளனர்.
  2. அவ்வாறிருக்க, அறிவுள்ள ப்ராம்மணர்களும், நீதி தவறாத க்ஷத்திரியர்களும் பக்தர்களான ராஜ ரிஷிகளும், என்னை வணங்கி நல் கதியடைவதில் சந்தேகமென்ன?
  3. மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு | |மாமைவேஷ்யஸி யுக்த்வைவாத்மானம் மத்பராயண: ||

மனதில் என் நினைவுடன், என் பக்தனாக, என்னையே துதிப்பவனாக, வணங்கி , என்னையே அடைக்கலமாக எண்ணி இரு.  நீ என்னையே வந்தடைவாய்.

ச.பா:  வாசுதேவனான நானே பரப்ரும்மம்.  செய்யும் செயல்களை – க்ருஷ்ணார்ப்பணம் என்று செய்து விடு.

(இதுவரை உபநிஷதான   ஸ்ரீமத் பகவத் கீதையில், ப்ரும்ம வித்யையின் யோக சாஸ்திரம் என்பதில் ஸ்ரீ க்ருஷ்ணனும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த சம்பாஷணையில் ராஜ வித்யா, ராஜ குஹ்யோ என்ற ஒன்பதாவது அத்யாயம் )

 

அத்யாயம்-10  விபூதி யோகம்

 

இதற்கு முன் 7,9 அத்யாயங்களில் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரின் உபதேசங்கள் எதை எப்படி செய்வதால் என்ன பலன் என்ற விஷயங்கள் சொல்லப்பட்டன. 9 வரை ஒரு விதமான உபதேசம் –  செய், கடமையை செய், யோகம், அதனுடைய வகைகள், மரணத்திற்கு பின்னும் முன்னும்- எல்லாமே செயல் செயல் -செயல் தான்.  உட்காராதே, எழுந்திரு, இதை செய், அதைச் செய் என்று பெற்றவர்கள் கூறுவது போல – தஸ்மாத் யுத்யஸ்வ – ஒவ்வொரு விஷயமும் கடைசியில் இந்த வாக்கியத்தோடு முடியும்- அதனால் சண்டை போடு. உறவினர்களைக் கொல்வதா என்று குழம்பிய மனதை தெளிவுபடுத்த சொல்லிக் கொண்டே வரும் பொழுது ஏதோ கதை கேட்பது போல கேட்டு விட்டு அதோடு விட்டு விடக் கூடாது என்பது போல கடமையைச் செய் – என்றதோடு நிற்காமல், யுத்யஸ்வ – யுத்தம் செய் என்று நினைவு படுத்திக் கொண்டே வந்தார்.

முன் அத்யாயத்தில் – “மன் மனா பவ”   என்று சொன்னதன் தொடர்ச்சியாக தன்னை வெளிப் படுத்திக் கொள்கிறார்.  நீ யார், உன்னால் எப்படி காப்பாற்ற முடியும்? என்ற கேட்டு விட்டால், என்பது போல தன் ஸ்வரூபத்தை விவரிக்கிறார்.

மறுபடியும் சொல்கிறேன், உன் நன்மைக்காக என்று தொடங்குகிறார்.

1-3.  என் சக்தி அல்லது ப்ரபாவம் என்ன என்பதை தேவர்களோ, மஹரிஷிகளோ கூட முழுமையாக அறிய மாட்டார்கள்.  நான் தான் தேவர்களுக்கும், மஹரிஷிகளுக்கும் முதன்மையானவன்.

நான் ஆதியோ அந்தமோ இல்லாதவன். அதனால் பிறப்பும் இறப்பும் இல்லை.  உலகின் நாயகன் –  இவ்வாறு என்னை அறிபவன் தான் அறிவுடையவன். மனிதர்களுள் இந்த அறிவுடையவர்களே, பாபம் அகல, முக்தி அடைகிறார்கள்.

4-5. பல விதமான குணங்கள்- புத்தி,ஞானம், மோகமின்றி இருத்தல், பொறுமை, சத்யம், அடக்கம், வணங்கி இருத்தல்,

சுகம், துக்க, நிறைவாக இருத்தல், இல்லாமை, பயம், பயமின்றி இருத்தல்,

அஹிம்சை, அனைவரையும் சமமாக எண்ணி நடத்துதல், மனதில் சந்தோஷம், தவம், தானம், புகழ், இகழ்,

இவையனைத்தும் உலகில் உள்ளோர்களை ஆட்டிப் படைக்கும்  உணர்வுகள்.  இவையனைத்தும் என்னிடமிருந்தே தோன்றுவதே.

  1. சப்த ரிஷிகள், மனு புதல்வர்களான நால்வர் – இவர்கள் என் மானஸ புத்திரர்கள். இவர்கள் தான் உலகில் பிரஜைகள் தோன்றக் காரணமானவர்கள்.
  2. என் விபூதியையும், யோக சாதனைகளையும் அறிந்தவர்கள், அசைக்க முடியாத யோக பலம் பெற்றவர்கள் ஆவார்கள்.

ச.பா:  ப்ருகு  முதல் வசிஷ்டர் வரையிலான ஏழு ரிஷிகள்  தான் பரம்பரையான ஆசிரியர்கள்.  இவர்கள் மூலம் தான் வேதங்கள், பரம்பரையான சாஸ்திரங்கள்  கற்பிக்கப் பட்டன.  மனுவின் வழியில் தான் அரச குலம் வந்தது. அவர்கள் தான் தலைவர்கள். நேரடியாக பகவானிடமே உபதேசம் பெற்றவர்கள். பகவான் விஷ்ணுவின் அம்சமாகவே கருதப் படுபவர்கள்.  அந்த அளவு ஞானமும், ஆற்றலும் பெற்றவர்கள்.   தற்கால மனித பிறவிகள் அவர்கள் வழித் தோன்றல்களே.  மனித இனத்தின்  புத்தியும், செயல் திறனும் அவர்களிடமிருந்து வந்ததே.|

  1. பர ப்ரும்மமே வாசுதேவனான நான் – ஸ்ருஷ்டி கர்த்தா நான்- அளவற்ற பிரபாவம் உடையவன்- என்னிடமிருந்தே அனைத்தும் உற்பத்தியாகி பெருகி தொடர்ந்து வருகின்றன என்பதை அறிந்து ஞானிகள் துதிக்கிறார்கள்.
  2. இவர்கள் என்னைப் பற்றிய செய்திகளை உலகில் கதைகளாக, பாடல்களாக, ஆடல்களாக பரப்புகின்றனர். இவர்களுக்கு என்னைத் தவிர வேறு சிந்தனையே இல்லை. இதிலேயே சந்தோஷம் திருப்தி இவர்களுக்கு.
  3. இப்படி என் சிந்தனையாகவே உள்ள பக்தர்களுக்கு நானே புத்தி யோகம் அருளுகிறேன்.
  4. இவர்களுக்கு அக்ஞானம் என்பதே இல்லையா என்றால், பகவான் சொல்கிறார், உண்டு. சில சமயங்களில் அந்த அறியாமை வெளிப்படும் பொழுது நான் ஞான தீபத்தால் அந்த அக்ஞான இருட்டை போக்கி விடுவேன்.

ச.பா: அறியாமை வெளிப் படுவது என்பது எப்படித் தெரியும்?  நான் அவர்கள் அந்த:கரணம் என்ற ஆழ் மனதிலேயெ உறைகிறேன். அதனால் அவர்கள் சித்தம் செல்லும் வழி தெரிந்து விடும்.  அவர்களின் பக்தியே எண்ணெய்,  தியானமே திரியாக அந்த ஞான தீபம் எரியும்.  முன் சொன்னபடியே, தியானமும், ஒரு முனைப்பாடும் அவர்கள் புலன்களை வெல்ல உதவியிருக்கும்.

அர்ஜுனன் தன் சந்தேகத்தை சொல்கிறான்:

க்ருஷ்ணா! வசிஷ்டர் முதலான ரிஷிகள், நீதான் பர ப்ரும்மம்,  மிகச் சிறந்த ஆற்றலும் பெருந்தன்மையும் உடையவன். , மாசில்லாதவன், சாஸ்வதமான ஆதி புருஷன், விபு, என்றெல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  தேவரிஷி  நாரதரும்,  அஸித், தேவலன், வியாசன்  போன்ற பெரியவர்களும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  இப்பொழுது நீயும் சொல்கிறாய். அதனால் இவையெல்லாம் உண்மையாக இருக்கும் என்று நம்புகிறேன்.  ஆனால் உள்ளபடி உன்னை தேவர்களோ, தானவர்களோ அறிந்ததாகத் தெரியவில்லை. உன்னை உள்ளபடி நீயேதான் அறிவாய்.

புருஷோத்தமா! ஜகத்பதே! தேவ தேவா!   இந்த உலகை ஸ்ருஷ்டித்து, காப்பவனும் நீயே.

உன்னுடைய விபூதியை நீயே தான் எனக்கு விளக்க வேண்டும்.  உலகில் உன்னைக் காண முடியுமா? எந்த ரூபத்தில் நான் காண்பேன்?  உலகம் முழுவதும் வியாபித்துள்ளேன் என்றாய்? எப்படி? சதா நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறேன், எப்படி உன்னை கண்டு கொள்வேன்,  எந்தெந்த  இடத்தில்  எப்படியெப்படி  இருப்பாய் ?

நீ சிறந்த யோகி என்று தெரிந்து கொண்டேன், உன்னை நினைத்து தியானம் செய்ய விரும்புகிறேன். எந்த விதமான ரூபத்தில் நான் தியானம் செய்ய வேண்டும் என்று சொல்.

உன்னுடைய யோக சாதனகளையும், விபூதியையும் பற்றி இன்னும் நிறைய சொல்லு. (விபூதி என்பது ஐஸ்வர்யம் என்று பதத்தின் பொருள். பதவி அல்லது தகுதி என்று எடுத்துக் கொள்வோம்)  கேட்கவே அம்ருதமாக இருக்கிறது. கேட்க கேட்க திகட்டாமல் அம்ருதம் உண்டது போலவே உணருகிறேன்.

ஸ்ரீ பகவான் சொல்கிறார்:

சொல்கிறேன், கேள்.  முக்கியமானவற்றை சொல்கிறேன். என் விபூதிகள் அனந்தமானவை.  சொல்லச் சொல்ல விரியும்.

குடாகேசா!  ஜீவராசிகளின் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக வசிக்கிறேன்.  அனைத்து சரா சரங்களிலும் ஆதியும், அந்தமும், மத்தியிலுமாக இருப்பது நானே.

ஆதித்யர்களில் நான் விஷ்ணு.  க்ரகங்களில் ஓளியைத்தரும் ரவி-சூரியன். மருத் என்ற தேவதைகளுள் நான் மரீசி.  நக்ஷத்திரங்களுள் நான் சந்திரன்.

வேதங்களில் நான் சாம வேதம். தேவர்களில் இந்திரன். இந்திரியங்களில் மனம். ஜீவராசிகளில் சேதனா எனும் அறிவு.

ருத்ரர்களுள் சங்கரன். யக்ஷ ராக்ஷஸர்களுள் குபேரன். அஷ்ட வசுக்களில் நான் பாவகன் என்ற அக்னி. உயர்ந்த மலைகளில் நான் மேரு.

புரோஹிதர்களில் முக்யமான ப்ருஹஸ்பதி நானே. சேனைத் தலைவர்களில் நான் ஸ்கந்தன். நீர் நிலைகளில் சாகரன்.

மஹர்ஷிகளில் ப்ருகு. எழுத்துக்களில் ஏகாக்ஷரமான ப்ரணவம். யக்ஞங்களில் ஜபமாக அசையாத மலைகளில் ஹிமாலயமாக,

மரங்களில் அஸ்வத்த என்ற அரச மரம்.   தேவ ரிஷிகளில் நாரதர்.  கந்தர்வர்களில் சித்ர ரதன்.  சித்தர்களில் கபிலன் என்ற முனிவன்.

குதிரைகளில் உச்சைஸ்ரவஸம் –   யானைகளில் நான் ஐராவதம். இவை இரண்டும்  அம்ருத மதன சமயத்தில் பாற்கடலில் தோன்றின. மனிதர்களுள் நான் அரசன்.  (நராதிபன்)

ஆயுதங்களில் நான் வஜ்ரம். பசுக்களில் காமதேனு. கந்தர்பன் என்ற மன்மதன் நானே. சர்ப்பங்களில் வாசுகி.

நாகங்களில் அனந்தன்.  நீர்  சம்பந்தமானவைகளில் வருணன். பித்ருக்களில் அர்யமா  (அர்யமா என்பவர் பித்ரு லோகத்தின் அரசன்)

தைத்யர்களில் நான் ப்ரஹ்லாதன்.  ஓயாமல் நகர்ந்து கொண்டேயிருப்பதில் நான் நேரம்.  மிருகங்களில் நான் சிங்கம் (ம்ருகேந்த்ரன்)  பக்ஷிகளில் வைனதேயன்.

பரிசுத்தம் செய்யும் வஸ்துக்களில் நான் பவனன் என்ற வாயு. சஸ்திரம் தரித்தவர்களில் நான் ராமன். நீர் வாழ் ஜந்துக்களில் நான் மகரன்.  ஓடி வரும் நதிகளில் நான் ஜாஹ்னவி -கங்கை.

ஸ்ருஷ்டியின் ஆதி, மத்யம், அந்தம் நானே. வித்தைகளில் அத்யாத்ம வித்யா. விவாதங்கள் என்பதில் நான் வாதம். (பேச்சு பொதுவானது. ஏதோ ஒரு விஷயத்தில் உண்மையை கண்டு பிடிக்க ஆதாரங்களுடன் பேசுவது விவாதம்.)

அக்ஷரங்களில் நான் அகாரம். சமாஸம் என்பதில் நான் த்வந்த ( ஸம்ஸ்க்ருத இலக்கணத்தில் சமாசம் என்று ஒரு பிரிவு. அதில் நான்கு வகையுண்டு.)

என்றும் மாறாத அளவுகளில் க்ஷணம் என்பது காலத்தின் மிக குறைந்த பக்ஷ அளவீடு.  உலகத்தின் முகமாக – ப்ரதானமாக இருக்கும் தாதா – ப்ரும்மா.

அபஹரிக்கும் பொருட்களில் நான் ம்ருத்யு.  செல்வத்தை அபஹரிப்பவனும், அளிப்பவனும் நானே.  பெண்களில், கீர்த்தி, ஸ்ரீ, வாக் என்ற மூன்று பெண்களும் நானே.  ஸ்ம்ருதி என்ற நினைவாற்றல், மேதா என்ற சாமர்த்யம்,(ஆற்றல்) த்ருதி: எனும் த்ருடமான கொள்கை பிடிப்பு, க்ஷமா- பொறுமை.  இந்த குணங்களும் நானே.

ஸாம வேதத்தில் ப்ருஹத் சாமா என்பதாகவும், சந்தஸ் எனும் காவ்ய அமைப்பில், காயத்ரி சந்தஸாகவும், மாதங்களில் மார்கசீர்ஷம் என்ற மார்கழியாகவும், ருதுக்களில் பூக்களை மலரச் செய்யும் வசந்தமாகவும் இருக்கிறேன்.

ஏமாற்று வித்தைகளில்   த்யூதம்- சூதாட்டம் .  தேஜஸ்வி என்பவர்களின் தேஜஸ்.  உழைப்பும் நானே, வெற்றியும் நானே.  சாத்வீகமானவைகளின் சத்வ குணமும் நானே.

வ்ருஷ்னீ என்ற சமுகத்தில் நான் வாசுதேவன். பாண்டவர்களில் தனஞ்ஜயன். முனிவர்களில் வ்யாஸன். கவிகளில் உசனஸ் என்ற கவி (கவி என்ற சொல் வேதங்களில்  முனிவன் என்ற பொருளில் பயன்பட்டதாம்.   அதிகம் கேள்விப் படாத உசனஸ் என்பவரைப் பற்றி ஏன் சொன்னார்  என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகள் செய்துள்ளனர். தமிழின் தொல்காப்பியர் இவர் வழி வந்தவராக சொல்லப் படுகிறது.)

தண்டனைகள் என்பதில் நான் தண்டம் – தடி – அடிக்க பயன்படுவது. ஜயித்து ஆள வேண்டும் என்று விரும்புபவர்களில் நீதி என்ற சாஸ்திரமாவேன்.  ரகசியமாக சாதனைகள் செய்பவர்களின் மௌனம். ஞானிகளில் ஞானம்.

எந்த பொருளானாலும் அதன் கருப் பொருளாக இருப்பது நானே. சராசரங்களிலும் நான் இல்லாதது என்று ஒரு பொருள் இல்லவே இல்லை.

என் விபூதிகளுக்கு முடிவே கிடையாது. உத்தேசமாக ஒரு சிலவற்றை சொன்னேன்.  சொல்லி விளக்க முடியாத அளவு விஸ்தாரமானது என்ற வரை தெரிந்து கொள்.

சிறந்தது, சத்வமானது, லக்ஷ்மீகரமானது.  தீர்வானது, என்று கண்டால் அதில் என் தேஜஸின் ஒரு அம்சம் இருப்பதாக தெரிந்து கொள்.

அல்லது இப்படி தெரிந்து என்ன ஆகப் போகிறது. அர்ஜுனா!  நான் ஒருவனே அனைத்திலும் வியாபித்து இருப்பவன் – என் அம்சமே ஜகத் – உலகமாக உருப் பெற்று  நிலைத்துள்ளது.

(இதுவரை உப நிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தையின் யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷணையில் விபூதி யோகம் என்ற பத்தாவது அத்யாயம்.)

 

அத்யாயம் -11 விஸ்வரூப தர்ஸனம்

என் ஒரு அம்சமே உலகம் முழுவதும் வியாபித்து காக்கிறது, என்று பகவான் சொன்னதை அடுத்து அர்ஜுனன் அந்த ரூபத்தை நான் காண வேண்டுமே என்று தன் விருப்பத்தை தெரிவிக்கிறான்.

அர்ஜுனன் கேள்வி:  எனக்காக எனக்கு அனுக்ரஹம் செய்ய என்றே அரிதான  அத்யாத்ம  விஷயங்களை விளக்கிச் சொன்னாய் க்ருஷ்ணா! என் மோகம் விலகியது. உன் வாயாலேயே உன் பெருமையை கேட்கும் பேறு பெற்றேன்.  அழிவற்றவன் நீ. உலகின் ஜீவராசிகளுக்கு உன்னுடைய கருணையும் அளவற்றது.

அவ்வாறு  நீ உன் சுய ரூபத்தை சொல்லக் கேட்டபின் அந்த ரூபத்தை காணவும் என் மனம் விழைகிறது. புருஷோத்தமா! அது முடியுமா? யோகேஸ்வரா,  ப்ரபோ!  எனக்கு அந்த திவ்ய ரூபத்தைக் காட்டு.

ஸ்ரீ பகவான் சொல்கிறார்:

பாரேன். என் திவ்யமான  ரூபங்களையும், நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக, பல வண்ணங்களிலும், உருவங்களிலும் இருப்பதை காணுவாய்.

ஆதித்யர்களை, வசுக்களை, ருத்ரர்களை, அஸ்வினி குமார்களை, மருத் கணங்களை,  இது வரை காணாத பல ரூபங்களை, ஆச்சர்யம் அளிக்கும் விஷயங்களை காண்பாய்.  இருந்த இடத்தில் இருந்தபடியே உலகம் முழுவதையும் சரா சரங்களையும் இன்னும் என்ன வேண்டுமோ அனைத்தையும் என் உடலில் காண்பாய்.

ஆனால்,

தெய்வீகமான என் யோக ரூபத்தை இந்த மனித கண்களால் காண இயலாது.  தெய்வீகமான கண்கள் தருகிறேன்.  பார்.

தான் கேட்டதையும் கண்டதையும்  உடனுக்குடன்  அரசனான திருதராஷ்ட்ரனுக்கு தெரிவித்துக் கொண்டிருந்த சஞ்சயன், சொல்கிறான்

(இதுவரை பகவான் சொன்னார் என்றும் அர்ஜுனன் கேள்விகள் நமக்கு சொல்லவே என்பது போல ஒரு மன நிலையில் இருந்தோம். சஞ்சயன் வந்தான்- அரசனுக்குத் தான் முதல் காட்சி என்பது போல அவனது வர்ணனைகள் மூலமே திவ்ய ரூபத்தைக் காணப் போகிறோம்)

ராஜன்! பரம யோகேஸ்வரன் ஸ்ரீ க்ருஷ்ணன். தன் தெய்வீகமான ரூபத்தை பார்த்தனுக்கு காட்டுகிறான்.

சஞ்சயன் பிரமிப்பு அகலாத குரலில், ஆஹா,  எத்தனை முகங்கள், வாய்கள், கண்கள், எவ்வளவு அத்புதமான காட்சி.  எவ்வளவு திவ்யமான ஆபரணங்கள். அனேக திவ்ய ஆயுதங்கள்.

இது ஒரு நல்ல ஸ்லோகம்:

திவி சூர்ய சஹஸ்ரஸ்ய பவேத் யுகபதுத்திதா |

யதி பா: சத்ருஸீ ஸா ஸ்யாத் பாஸஸ் தஸ்ய மஹாத்மன: ||

दिवि सूर्य सहस्रस्य भवेद्युगपदुथिता | यदि   भा: सदृशी सा स्यात् भासस्तस्य महात्मन: ||

ஆகாயத்தில் திடுமென ஆயிரம் சூரியர்கள் ஒரே நேரத்தில் தங்கள் தன் முழு ஓளியுடன் உதித்தால் எப்படி இருக்கும். இந்த மகானின் தேஜஸ் அதற்கு இணையாக உள்ளது.

அங்கு ஓரிடத்தில் இருந்து உலகம் முழுவதும் வியாபித்த, பல விதமாகவும்,  தனித் தனியாகவும் தேவ தேவனின் சரீரத்தில் பாண்டவனான அர்ஜுனன் கண்டான்.

நிற்க முடியவில்லை. மயிர் கூச்செரிய ஆச்சர்யத்துடன் கூப்பிய கரங்களுடன் தலை வணங்கி அர்ஜுனன் துதிக்கலானான்.

தேவ தேவா, உன் சரீரத்தில் அனைத்தையும் காணுகிறேன். ஜீவராசிகளின் விசேஷமான கூட்டங்கள்.  இதோ ப்ரும்மா, கமலாஸனத்தில், ரிஷிகள், திவ்யமான நாகங்கள்.

சங்கர பாஷ்யம்: முதலில் சிருஷ்டிக்கு காரணமான ப்ரும்மா,  கமலாஸனத்தில், கையில் கலசத்துடன் –  பூமியின் நடு பாகத்தில், மேருவே விதைகள் நிரம்பிய கலசமாக -பூமியே கமலம் என்ற தாமரை – வசிஷ்டர் முதலான ரிஷிகள், வாசுகி போன்ற நாகங்கள் சூழ)

கணக்கில்லாத புஜங்கள், வயிறு, வாய், கண்கள் இவற்றுடன் அனந்தமான ரூபத்தைக் காண்கிறேன்.  ஆதியோ, மத்யமோ, முடிவோ தெரியவில்லை. விஸ்வேஸ்வரா, உன் விஸ்வரூபம் இது.

கிரீடம், கதை, சக்ரம் இவைகளை காண்கிறேன். உன் தேஜஸ் அண்டாண்டங்களையே ஒளி மயமாக ஆக்கி இருப்பதைக் காண்கிறேன். அந்த ஒளி வெள்ளத்தில் உன்னை காண முடியாமல் கண் கூசுகிறது. கொழுந்து விட்டெரியும் நெருப்போ, சூரிய ப்ரகாசமோ, அதனுள் அளவில்லாத உன் தேஜஸை காண்கிறேன்.

இந்த காட்சி எனக்கு உன் யோக சக்தியை உணரச் செய்கிறது.

உலகில்அறிய வேண்டிய பொருள் நீயே, குறைவற்றவன்- அக்ஷரன், இந்த உலகின் ஆதாரம் நீயே. அழிவற்றவன் நீ. சாஸ்வதமான தர்மத்தை காப்பாற்றுபவன். என்றும் வாழ்ந்திருக்கும் புருஷோத்தமன் நீதான் என்று தெரிந்து கொண்டேன்.

ஆதி, மத்யம், அந்தம் இல்லாதவன், அளவில்லா பராக்ரமம்  உடையவன்.  பராக்ரமம் மிக்க நீண்ட புஜங்கள், சந்திரனும் சூரியனும் கண்களாக,  வாயில் ஒளிப் பிழம்பாக  ஹுதாஸனன் என்ற அக்னி, உலகமே உன் தேஜஸால் ப்ரகாசமாகத் தெரிகிறது.

வானமும் பூமியும் ஒன்றாக ஆகும் படி இணைந்து உன் உருவம் வளர்ந்து பூமியை வியாபித்து, திசைகள் எல்லாம் பரவி இருக்க உன் உருவம் அத்புதமாக இருக்கிறது. மூவுலகத்தாரும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

தேவர்கள் கூட்டம் தள்ளி நின்று பார்த்துகொண்டிருக்க, சிலர் பயந்து கைகூப்பி நிற்க, மஹர்ஷி சித்தர்கள் கூட்டம் சற்றே தைரியம் வந்தவர்களாக, கை கூப்பி துதிக்கிறார்கள்.

ருத்ர, ஆதித்ய, வசுக்கள் மற்றும் சாதுக்கள், அஸ்வினௌ, (இருவர்) மருத் என்ற கூட்டம், உஷ்மபா என்ற பித்ரு தேவதைகள், கந்தர்வர்கள், (ஹா ஹா  ஹூஹூ போன்றவர்கள்) யக்ஷ,(குபேரன் போன்றோர்)  அசுர, (விரோசனன் போன்றோர்) சித்தர்கள்  (கபிலர் போன்றோர்) கூட்டம் என்ன நடக்கிறது என்று புரியாத பாவனையுடன் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த ரூபம் கண்டவரை கலக்குகிறது. என்னையும் தான். பெரிய உருவம், கணக்கில்லாத கண்களும் முகமும், புஜங்களும் , பெரிய பற்களும், உதரமும் ஒருவன் தானா என்ற ஐயமும் எழுகிறது.

என் மனம் தடுமாறுகிறது, பூமிக்கும் வானத்துக்குமாக எழுந்து நிற்கும் பல வண்ணங்கள் மிளிர, பெரிய முகத்தில் விசாலமான கண்களும், பயங்கரமான பற்களும், காலானல – ப்ரலய காலத்தீ போல ஜ்வலிக்கும் முகங்கள்  (வாய்) – இந்த ஒளியில் என்ன திசை என்று தெரியவில்லை.  ஜகன்னிவாஸா! தேவேஸ! ப்ரஸீத கருணை செய்வாய்.

இது என்ன காட்சி. த்ருதராஷ்ட்ரனுடைய புத்திரர்கள், அவர்களைச் சார்ந்த அரசர்களுடன் கூட , பீஷ்மரும், த்ரோணரும், சூத புத்ரனான கர்ணனும், நம் பக்கத்து அரசர்கள் மற்றோரும் சேர்ந்து வேக வேகமாக உன் வாயில் வந்து விழுகிறார்கள். சிலர் வாய் உள்ளே நுழையும் முன் கடைவாய் வழியாக தொங்கியபடி தலை எது, உடல் எது- நசுக்கப் பட்டவர்களாக  தெரிகிறார்கள்.

வேகமாக ப்ரவகித்து ஓடும் நதி நீர், கடலை நோக்கியே செல்லுவது போல  இங்கு மனிதனாக வீரன் என்று பெயர் பெற்ற அரசர்கள், தகிக்கும் உன் வாய்க்குள் வந்து விழுகிறார்கள்.

எரிந்து கொண்டிருக்கும் விளக்கை தானே நாடி வந்து விழுந்து நாசம் அடையும் விட்டில் பூச்சிகளைப் போல வேக வேகமாக வந்து நாசமாகிறார்கள். அருகில் வரும் பூச்சியை இழுத்துக் கொள்ளும் ஜந்துவைப் போல உன் நாக்குகள் அவர்களை இழுத்து விழுங்குகின்றன.

இந்த உக்ர ரூபம் எதற்கு? எனக்கு புரியவில்லையே. தேவ தேவனே, ப்ரசீத, கருணை செய் –  முழு முதற் கடவுள் நீ தானே- உன் மன ஓட்டம் என்னால் அறியக் கூடுமா – நீயே எனக்கு புரியும்படி சொல்லு.

ஸ்ரீ பகவான் சொல்கிறார்.

நான் காலரூபன். லோகம் முடிவடையும் பொருட்டு வந்துள்ளவன். உலகை சுருட்டி எடுத்துச் செல்ல வந்தவன். இந்த யுத்த பூமியில் யோத்தா என்று சண்டையிட வந்தவர்களில் உன்னைத் தவிர வேறு எவரும் மிஞ்சப் போவதில்லை.

அதனால், எழுந்திரு.  எதிரிகளை வென்று, ராஜ்யத்தை அடைந்து புகழ் பெறுவாய்.  சவ்ய சாசின்! (அர்ஜுனனின் பெயர்) நிமித்தம் தான் நீ, என்னால் முன்னாலேயே இவர்கள் காலம் இது வரை தான் என்று உறுதி செய்யப் பட்டு விட்டது.

த்ரோணர், பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன் மற்றும் யுத்தம் செய்ய வந்துள்ள வீரர்கள் என்னால் ஹதம் செய்யப் பட்டு விட்டார்கள்.  பெயரளவுக்கு தான் யுத்தம்.  அவர்களை நீ சுலபமாக வெற்றி பெறுவாய்.

சஞ்சயன் சொல்கிறான்.

அரசே, இதைக் கேட்டு அர்ஜுன ன் நடு நடுங்கி விட்டான். கை கூப்பி வணங்கி குரல் தழ தழக்க பயந்த படி திரும்பவும் வணங்கி ஏதோ  சொல்கிறான்.

அர்ஜுனன்:  ஹ்ருஷீகேஸ! உன் புகழை உலகத்தார் மகிழ்ந்து பாடுவது ஏற்றதே. ராக்ஷஸர்கள் கூட்டம் திசைக்கொன்றாக பறந்து விட்டது.   விஷயம் அறிந்த சித்தர்களும் மற்றவர்களும் வணங்குகிறார்கள்.

ஏன் வணங்க மாட்டார்கள்?  மஹாத்மன்! ப்ரும்மாவுக்கும் முந்தைய ஆதி புருஷன் நீ.  ஜகன்னிவாஸ –  ஜகமெல்லாம் உன்னுள் அடக்கம். தேவ தேவன், முடிவில்லாத, அக்ஷரன். சத் அஸத் இவைகளுக்கும் அப்பாற்பட்டவன்.

ஆதி தேவனான புருஷன், முழு முதற் கடவுள், விஸ்வம் எனும் உலகங்கள் அனைத்துக்கும் ஆதாரம். நீ அறியாதது எதுவும் இல்லை. அநந்த ரூபனே, நீயே வடிவமைத்ததே இந்த உலகங்கள். பரந்தாமா!

வாயு, யமன், அக்னி, வர்ணன், சந்திரன், ப்ரஜாபதி அனைத்தும் நீயே. பாட்டனுக்கு பாட்டனும் நீயே. பல்லாயிரம் நமஸ்காரங்கள்.  திரும்பத் திரும்ப நமஸ்காரங்கள்.

முன்னும் பின்னும், சுற்றிலும் என்று உன் தோற்றத்துக்கு வணக்கங்கள்.  சர்வமும் நீயே, அளவில்லாத விக்ரமம் உடைய நீ வேண்டியதை அடைவதில் சந்தேகமென்ன.

சகா, நண்பன் என்று யோசியாமல் சொன்ன வார்த்தைகளை மன்னிப்பாய். ஹே யாதவா, ஹே க்ருஷ்ணா, நண்பனே என்று பல முறை உன் மகிமை  தெரியாமல் அருகாமை காரணமாக அன்பினால் சாதாரணமாக எண்ணி அழைத்தேனே, அது என் பிழை.

(இதையே ஆண்டாளும் தன் பாசுரத்தில் – அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்னை சிறு பேரழைத்தனையும் சீறி யருளாதே என்கிறாள்)

அலட்சியமாக பேசியிருந்தாலோ, விளையாடும் பொழுதும், கூடியிருந்து உண்ணும் பொழுதும், ஒரு முறையோ, பல முறையோ அனைத்தையும் மறந்து மன்னிக்க வேண்டுகிறேன்.

உலகத்தின் தந்தை ஸ்தானத்தில் உள்ளவன். சரா சரத்திலும் பூஜிக்கத் தகுந்தவன். சிறந்த குரு. உன்னைத் தவிர இந்த தகுதி வேறு யாருக்கு உண்டு.

அதனால் உன் கால் தொட்டு வணங்குகிறேன்.  வணங்க வேண்டிய ஈஸ்வரன்  நீயே என்று உணர்ந்து கொண்டேன். அதனால் மகனிடம் தந்தை போலும், பிரியமான நண்பனிடம் நண்பன் போலும், அன்புடையவனிடம் அதே போல அன்பு வைத்தவன் போலவும் என்னை பொறுத்தருள்க.

முன் காணாத  ரூபம், இதைக் கண்டு மகிழ்ந்தேன். பயமும் கூட. மனம் நடுங்கி விட்டது.  பழைய ரூபத்தையே காட்டு,  தேவேஸ, ப்ரசீத.

கிரீடம் அணிந்து  நான்கு புஜங்களிலும் கதையும் சக்கரமும்,  ஆயிரம் கைகளுடன்  என் எதிரில் வர வேண்டும், விஸ்வமூர்தே.

ஸ்ரீ பகவான் சொல்கிறார்.

நானே விரும்பி இந்த ரூபத்தை உனக்கு காட்டினேன். ஒளி மயமான உலகங்கள் அனைத்தையும் என் யோக பலத்தால் காணச் செய்தேன்.  உன்னையன்றி வேறு எவரும் கண்டிராத காட்சி இது.

வேத அத்யயனங்களை  முழுமையாக செய்தவர்களும் கண்டிலர். தானம் செய்து உயர்ந்தவர்களும் கண்டிலர். கர்ம மார்கத்தை கிரமமாக அனுஷ்டித்தவர்களோ,  உக்ரமான தவம் மேற்கொண்டவர்களோ கூட இந்த ரூபத்தைக் கண்டதில்லை. நீ ஒருவன் தான் என் அருளால் காண முடிந்திருக்கிறது.

(வேத மார்கத்தை அனுஷ்டிப்பதால் பலன் இல்லையென்றோ மற்ற தானம் தவம் முதலானவை பயனில்லை என்றோ பொருள் இல்லை. இந்த ரூபம்- விஸ்வரூபமான இந்த ரூபம் கண்டதில்லை.

மயா ப்ரஸன்னேன தர்ஸிதம் – நானே மனம் உவந்து உனக்கு கொடுத்த காட்சி இது.  மற்ற சாதகர்களுக்கு கொடுத்த காட்சியோ, அனுபவமோ வேறு பட்டிருக்கலாம். )

இந்த பயங்கரமான ரூபத்தைப் பார்த்ததால் என்னிடம்  நீ பயப்படவோ தயங்கவோ  வேண்டாம்.  பழையபடி என் உற்ற தோழனாக அன்புடன் இரு.

சஞ்சயன் சொல்கிறான்:  இப்படி சொல்லி விட்டு, வாசுதேவன் தன் பழைய ரூபத்தையே எடுத்துக் கொண்டான். மஹாத்மா அவன்.  சௌம்யமான தன் பழைய உருவில் வந்து பயந்து போன          அர்ஜுன னை சமாதானப் படுத்துகிறான்.

அர்ஜுனனும் சமாதானம் அடைந்து அப்படி, இந்த மனித உருவம் திரும்ப காணக் கிடைத்ததே என்று தன் மகிழ்ச்சியைத் தெரியப் படுத்தினான்.  என் பழைய புத்தியும், இயல்பும் திரும்பப் பெற்றேன் என்றான்.

ஸ்ரீ க்ருஷ்ணர் சொன்னார்.

மிக அரிதான இந்த காட்சியை தேவர்களும் காண விரும்புவார்கள். முன்னே சொன்னபடி, வேத ஞானமோ, தவம், தானமோ செய்து கரை கண்டவர்கள் கூட நீ இப்பொழுது பெற்ற காட்சியைக் காண முடியாது.  என்னிடம் அபரிமிதமான பக்தி, நம்பிக்கையை வைத்தவர்கள் அன்றி, எனக்கு நெருக்கமானவர்கள் யாரும் இல்லை.  என்னை அறியவோ, காணவோ, என்  தத்வத்தை புரிந்து கொள்ளவோ , என்னிடமே ஐக்யமாகவோ, பக்தி தான் சாதனம்.

அடுத்து வரும் ஸ்லோகம் கீதையின் சாரமாக கருதப் படுகிறது.

மத்கர்மக்ருத் மத்பரமோ மத்பக்த: சங்கவர்ஜித: | நிர்வைர: சர்வ பூதேஷு ய: ஸ மாமேதி பாண்டவ||

मत्कर्मकृत् मत्परमो मद्भक्त: संग वर्जित: | निर्वैर: सर्व भूतेषु य: स मामेति पाण्डव ||

பாண்டவா!   என் சம்பந்தமான செயல்களையே செய்பவன்,  என்னையே அனைத்தும் என்று நம்புபவன், என் பக்தனாக வேறு எந்த தொடர்பும் தேவையில்லையென்று இருப்பவன்,  உலகில் அனைத்து ஜீவராசிகளிடமும் விரோதம் இன்றி அன்புடன் பார்ப்பவன், அவன் என்னை கண்டிப்பாக வந்தடைவான்.

ச.பா:  ஒருவரிடம் வேலை பார்ப்பவன் அவரிடம் மதிப்புடையவனாக இருக்கலாம். ஆனால் அவரே தனக்கு எல்லாம் என்று நினைக்க மாட்டான்.  ஆனால் என் பக்தர்கள் என்னையே தங்கள் ஆதர்ஸமாக எண்ணுவர்.  என்னிடம் தங்களையே அர்ப்பணித்து இருப்பர்.  செல்வமோ, உற்றார், உறவினரோ, அதற்கு பின் தான்.  அதன் காரணமாக உலகம் அனைத்தும் என் சிருஷ்டி என்பதை உணர்ந்து எந்த ஜீவனிடமும் விரோதம் பாராட்ட மாட்டார்கள்.  அப்படி இருப்பவர்கள் என்னிடமே ஐக்யமாகிறார்கள்.  இதுதான் உனக்கு நான் செய்யும் உபதேசம்.

 

(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையில், ப்ரும்ம வித்யையின் யோக சாஸ்திரத்தில், க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில், விஸ்வரூப தரிசன யோகம் என்ற பதினொன்றாவது அத்யாயம்)

 

அத்யாயம்-12 பக்தி யோகம்

அர்ஜுனனின் சந்தேகம் – எது உயர்ந்தது?  பகவானிடம் பக்தியா? ப்ரும்ம ஞானம் பெற்ற ஆத்மா பரமாத்மா என்று அறிந்து கொண்ட யோகியா?

எப்பொழுதும் உன்னிடம் பக்தியுடன் உன்னை வணங்கி இருப்பவர்கள்  ஒரு பக்கம். மறு பக்கம் அவ்யயம், அக்ஷரம் என்று ப்ரும்மத்தை தேடும் யோகிகள் – இவர்களில் யார் சிறந்தவர்?

ஸ்ரீ பகவான் சொல்கிறார்.

முதலில் பக்தர்களைப் பற்றிச் சொல்கிறேன்.  என்னை ஆஸ்ரயித்து,  சிரத்தையுடன், பக்தி செய்யும் பக்தர்கள் எனக்கு உகந்தவர்கள். அதே போல அக்ஷரம், அனிர்தேஸ்யம், அவ்யக்தம் – அழியாத, இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத, குறையாத ப்ரும்மம் என்று பூஜிக்கிறார்களோ அவர்களும்.  என்னை அனைத்திலும் காணக் கூடியவர்கள், அதே சமயம் காணக் கிடைக்காத பர ப்ரும்ம ஸ்வரூபமும் நானே, ரகசியத்துள் ரகசியமாய், எதற்கும் கலங்காத (அசையாத) உறுதி படைத்தவனும், த்ருவம் என்றும் மாறாதவன் (சலனமில்லாதவன்) என்றும் அறிவர்.

முன்னமே நான் சொன்னபடியே, புலன் களை அடக்கி, ஜீவராசிகள் அனைத்தையும் சமமாக பார்க்கத் தெரிந்தவர்களாக,  (இப்படி மனதில் எண்ணி எண்ணி துவேஷம் என்பது அறவே இல்லாதவர்களாக பரிணமிக்கிறார்கள்)  உலகில் உள்ள உயிர்கள் அனைத்துக்கும்  நன்மையே நாடுபவர்களாக  இருப்பதால் சிருஷ்டி செய்த எனக்கு மகிழ்ச்சி.  அதனாலும் எனக்கு பிரியமானவர்கள்.

அவ்யக்தம் என்ற அருவமான கொள்கையை மட்டும் பின்பற்றி சாதனை செய்பவர்களுக்கு உடல் க்லேசம் அதிகம்.  சாதாரண  மனிதர்கள், உருவத்துடன் உள்ள தேவ தேவியரை சுலபமாக வழிபட முடியும்.

இப்படி கண்ணால் கண்டும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் என்னை தியானித்து அனுசரிப்பவர்கள், தங்கள் செயல்களை எனக்கு அர்ப்பணித்து விடுகிறார்கள். மாற்று எண்ணமின்றி என்னை நினைத்து தியானம் செய்தும் வழிபடுகிறார்கள். இவர்களை நான் சீக்கிரமே சம்சார பந்தத்திலிருந்து விடுவிக்கிறேன்.

அதனால் என்னை வழிபடு. மனதையும் புத்தியையும் என்பால் செலுத்து. என் அருகிலேயே இருப்பாய். இதற்கு மேல் என்ன வேண்டும்?  சந்தேகமே வேண்டாம்.

புத்தியை ஓரிடத்தில் நிலைத்து நிறுத்தி யோக சாதனையை செய்ய முடியவில்லையெனில் பயிற்சி செய்,  பயிற்சியும் ஒரு யோகமே. செய்ய முடியாது என்று மலைப்பாக தெரியும் செயல்களையும் இடைவிடாத பயிற்சியினால் செய்து விட முடியும். உன் மனதில் அதற்கான விருப்பம்- வேண்டும்.

(என்னை அடைவது உன் குறிக்கோளானால் அது விஷயமாகவே உன் தேடல்கள் அமையும். சரியான வழியை கண்டு கொள்வாய். முயற்சிகள் செய்வாய். )

அப்படி திரும்பத் திரும்ப தியானம் முதலியவற்றை செய்ய முடியாவிடில் என் சம்பந்தமான செயல்களைச் செய்.  தேவ பூஜைகள், யாக யக்ஞங்கள் அதற்காகவே சொல்லப் பட்டுள்ளன.  எனக்காக செய்யும் செயல்களும் சித்தியை அளிக்கும்.

அதுவும் செய்ய முடியவில்லையா, செய்யும் செயல்களை எனக்கு அர்ப்பணித்து விடு. பலனை எதிர்பாராமல் உன் கடமைகளில் சிரத்தையுடன் ஈடுபடு.

வரிசைக் கிரமமாக பார்த்தால்  அப்யாசம் -பயிற்சி என்பதை விட ஞானம் சிறந்தது. ஞானம் லயிக்க வேண்டுமே – அதை விட த்யானம் சிறந்தது.  தியானத்தை விட செய்யும் கர்ம பலனைத் தியாகம் செய்வது சிறந்தது. தியாகமே மற்ற எல்லாவற்றையும் விட சிறந்தது.  ஏனெனில் தியாகத்தில் தான் மன சாந்தி  உள்ளது.

என் பக்தர்கள் அல்லது என்னை அனுசரிப்பவர்கள் எனக்கு பிரியமாக ஆகிறார்கள் என்று சொன்னதை மேலும் விளக்கமாக சொல்கிறார். அதற்கான தகுதியாக சில குணங்களை  அவர்களிடம் எதிர்பார்க்கிறார்.  அவையாவன:

அத்வேஷ்டா – த்வேஷம் இல்லாதவன்,  சர்வ பூதானாம் மைத்ர:- ஜீவராசிகள் அனைத்திடமும் நட்பு-  கருணை, தான் என்ற எண்ணமோ, அஹங்காரமோ இல்லாதவன், துக்கமோ, சுகமோ சமமாக நினைப்பவன், பொறுமையுடையவன், திருப்தியுடன் எப்பொழுதும் யோக சாதனைகளைச் செய்பவன்,  எதையும் செய்து பார்க்கும் துணிவு உடையவன், தன் கொள்கையில் மாறாத பிடிப்புடையவன்,  என்னிடம் அர்ப்பித்த மனமும், புத்தியும், நம்பிக்கையும் உள்ள பக்தன் – அவன் எனக்கு பிரியமானவன்.

கோபம், பயம்,  உத்வேகம் இவற்றை தன் கட்டுக்குள் வைத்திருப்பவன், தேவைகள் அதிகம் இல்லாமலும், தன்னைப் பொறுத்தவரை சுத்தமாக, ஒழுக்கம் நிரம்பியவனாக, தயை யுடையவன், கவலையில்லாதவன், தானாகவே ஆடம்பரத்தை தவிர்த்து வாழ்பவன், எனக்கு பிரியமானவன்.

த்வேஷம் இல்லாதவன், எதையும் விரும்பி கிடைக்கவில்லையென்றாலும் வருந்தாதவன்,  நல்லது, கெட்டது என்ற பாகுபாடு இல்லாதவன், என்னிடம் பக்தியுடையவன் எனக்கு பிரியமானவன்.

சத்ரு, மித்ரன் எல்லோரிடமும் ஒரே விதமாக பழகுபவன், மானம் அவமானம் என்றும் ஒதுங்க மாட்டான், சீதோஷ்ணங்கள்  அவனை பாதிக்காது. அவனை புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் மௌனமாகவே இருப்பான், கிடைத்ததில் திருப்தியுடையவன்,  நிலையான புத்தியுடையவன், என் பக்தன், எனக்கு பிரியமானவன்.

இதுவரை நான் சொன்னதைக் கேட்டு நடப்பவர்களும் எனக்கு பிரியமானவர்களே.

(இதுவரை உப நிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையில், ப்ரும்ம வித்யையில் யோக சாஸ்த்ரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில், பக்தி யோகோ என்ற பன்னிரண்டாவது அத்யாயம்.)

அத்யாயம் -13 க்ஷேத்ர  க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்

 

பன்னிரண்டாவது அத்யாய இறுதியில் தன் பக்தன் என்பவனுக்கு வேண்டிய நல்ல குணங்களை பட்டியலிட்டுச் சொன்ன ஸ்ரீ க்ருஷ்ணன்,  அர்ஜுனனிடம் ஒரு சந்தேகத்தை கிளப்புகிறார். இவ்வளவு நல்ல குணங்கள் இருந்தால் தான் பக்தி சாத்யமா? பகவானுடைய அருள் அவர்களுக்கு மட்டும் தான் கிடைக்குமா? அதற்கான விடை இந்த அத்யாயத்தில் விவரிக்கிறார்.

கௌந்தேயா ! இந்த சரீரம் க்ஷேத்ரம் (பதத்தின் பொருள் நிலம் – இங்கு மூலப்பொருள்  base)  இதை அறிந்த ஞானி அல்லது அறிவாளி  –       க்ஷேத்ரக்ஞன்  க்ஷேத்ரத்தை அதாவது நிலத்தை அறிந்தவன். அடிப்படை என்பதை அறிந்தவன்.

சங்கர பாஷ்யம்:  இந்த க்ஷேத்ரம் என்று சொல்வதில் ஒரு விசேஷம்.  இந்த நிலம், இந்த உடல், அல்லது இந்த மூலப் பொருள்- இது அழிக்க முடியாதபடி பாதுகாக்கப் பட்டது என்றோ, அது எளிதில் தாக்கப்பட்டு அழியும் என்றோ, இது தானாகவே காலம் வந்தால் அழுகி நாசமாகும் என்றோ புரிந்து கொள்ள முடியும்.  உதாரணமாக ,  நிலத்தில் விளைந்து நமக்கு கிடைக்கும்  பொருட்கள், பழங்கள் போன்றவை அழுகி வீணாவதை கண்டிருக்கிறோம். Matter – என்ற பருப்பொருள் இதை முயன்றால் தாக்கி அழிக்கலாம்.   தாதுக்கள் நிரம்பிய வெறும் பூமி எதையும் தாங்கும் என்றும் அறிவோம்.

உடலை, பூமி, விளைநிலம், ஆதாரமாக விளங்கும் பருப்பொருள் என்று புரிந்து கொண்டவன்  அதனிடம் தோன்றிய எதுவானாலும், முற்றிலுமாகத்  தலையிருந்து கால் வரை புரிந்து கொள்ள முடியும்.

பௌதிகமாக காணும் இந்த உடல் உண்மையில் ‘தான்’ அல்ல- இயற்கை அல்லது மற்ற எவராலோ அல்லது எதாலோ ஆனது என்பதை உணர்ந்து கொள்வான். அவன் க்ஷேத்ரக்ஞன் எனப் படுகிறான்.  இந்த பூமியில் இது விளையும் என்று அறிந்து கொள்ளும் விவசாய விக்ஞானி அறிந்து கொள்வது அவனது அனுபவத்தாலும், கற்றுத் தெரிந்து கொண்டதாகவோ,  இருக்கலாம்.  விளை நிலத்தின் தன்மையை அறிந்தவன் விவசாய விக்ஞானி, பருப் பொருட்களைப் பற்றி அறிந்தவன்  பௌதிக விக்ஞானி. என்பது போல இந்த இடத்தில் சரீரம்-க்ஷேத்ரம் என்ற விஷயத்தை பகுத்து அறிந்தவனே க்ஷேத்ரக்ஞன்.

என்னை அது போன்ற க்ஷேத்ரக்ஞன் என்று பார். சாதாரண ஜனங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் தேர்ச்சி பெற்றிருக்கலாம், நான் அறிந்தது அனைத்தையுமே.  சிருஷ்டியின் அடிப்படை எது என்பதும் அதன் மூலம் உருவாவது எது என்றும் நான் அறிவேன்.

ச.பா: நான் இந்த உலகைச் சேர்ந்தவனல்ல. அதன் காரண கர்த்தா – The Supreme Lord- முழு முதற் கடவுள். அந்தந்த பிரிவும் அதில் கரை தேர்ந்த அறிவாளி- அந்த விஷயம் சம்பந்தமாக முற்றும் உணர்ந்தவன் – என்று வைத்துக் கொண்டால்-  ப்ரும்மா முதல், புல், எறும்பு வரை தனித் தனியாக  சத் என்றோ, அசத் என்றோ,  புலன்களால்  அறிய முடிவது, முடியாதது என்றோ பகுக்கப் பட்டது அல்ல.  பூமி,விளை நிலம்,பருப்பொருள் -என்பதை ஸ்தூலமாக கண்டால் நாம் அறிவது இது பூமி, இது விளை நிலம், இது ஒரு பொருள்  என்பது மட்டுமே. அதிலிருந்து பெறக்கூடியது எது என்ன, எவை என்பது உடனடியாகத் தெரியாது. அது போலத் தான் ‘க்ஷேத்ரக்ஞன்‘ஆன நானும்.  மனிதனாக அவதார காலத்தில் பார்வைக்குத் தெரிந்தாலும், நான்  ஈஸ்வரன்.

கேள்வி: ஒரே ஒரு வ்யக்தி,ஈஸ்வரன்  எல்லா க்ஷேத்ரங்களிலும் இருப்பதாகக் கொண்டால், வேறு எதுவுமே இல்லை- அவனைத் தவிர இவையனைத்தையும் ஆள்பவன் அல்லது அனுபவிப்பவன் அவன் ஒருவனே- என்றால், ஒன்று அவன் தான் சம்சாரி- அதாவது உலகில் இருப்பவன், அல்லது வேறு யாருமே உலகில் இருந்து நல்லது, கெட்டதுகளை அனுபவிக்கிறான் என்றோ, சுக துக்கங்களால் வாடுகிறான் என்றோ ஆகாது. அல்லது அப்படி மற்ற ஒன்று அல்லது ஒரு வ்யக்தி இல்லையென்றால், சம்சாரம் என்ற ஒன்று இல்லவே இல்லை.

இதன் தொடர்ச்சியாக, உலகில் வேதமும் சாஸ்திரங்களும் திரும்பத் திரும்பச்  சொல்லும் பந்தம் என்றும் அதிலிருந்து விடுதலை என்றும் அதற்கான காரண காரியங்கள், செய்ய வேண்டிய வேண்டாத செயல்கள், – எதுவுமே பொருள் உடையதாக ஆகாது.

ப்ரத்யக்ஷமாக காண்பது, புலன் களால் அறிவதும் உணர்வதும் உண்மையில்லையென்றாகும்.  முதல் கட்டமாக சுகமும், துக்கமும், வலியும் அதன் காரணமும் -இவையனைத்தும் சேர்ந்து தானே சம்சாரம்.  தர்மம் என்றும் அதர்மம் என்றும் வாழ்க்கை நெறிகள் என்றும் நமக்கு சொல்லப் பட்டவை அனைத்தும் பொருளற்றதாக ஆகும்.

இந்த தத்வம் ஆத்மாவும் ஈஸ்வரனும் ஒன்றே, மனிதனும், கடவுளும் ஒன்றே என்பதை ஏற்றுக் கொள்வதில் இந்த முரண்பாடுகள் உள்ளனவே.

பதில்: அப்படியில்லை. ஞானம் என்பதற்கும் அக் ஞானம் என்பதற்கும் இடையில் வேறு பாடு உள்ளது. இரண்டும் கொண்டு செல்லும் பாதைகள் வெவ்வேறு. அதன் பலாபலன்கள் வெவ்வேறு . முடிவு தருவது எதிர்மறையான பலன்களே.

அறியாத வரை ப்ரத்யக்ஷமாகத்  தெரியும் சரீரமே உண்மை. மற்றவர்களிடம் அன்போ, விரோதமோ அவனுக்கு பெரிய விஷயமே. இது நன்மை, இது கெடுதல் என்ற அவன் அனுபவமே பாடம்.  பிறப்பு, இறப்பு என்பது இயற்கை நடை முறையே.

இதுவே சாதகன், ப்ரும்ம ஞானம் பெற்றபின் இதன் பொருளற்றத் தன்மையை உணருகிறான்.  உடலைத் தனிதனி பருப் பொருளாக எங்கும் உள்ள ப்ரும்மாண்டத்தின் ஒரு துகலாக அறிந்த பின், (இந்த அளவு ஞானம் பெற்ற பின்,) சுக துக்கங்கள், பொருட்டல்ல, தர்ம அதர்மங்கள் என்பதும் பொருட்டல்ல, அன்பும், வெறுப்பும் அவனை விட்டு விலகும்- அந்த நிலையை எய்தியவர்கள் மிகச் சிலரே.

சாதாரண ஜனங்கள் இருட்டில் ஒரு தூணைக் கண்டு அதை யாரோ ஒரு மனிதர் என்று நினைப்பது – அதில் மனிதனின் தவறும் இல்லை. அவன் அறிவு இதனால் குறைவு படுவதும் இல்லை.  இதே போல இன்பம் என்றும் துன்பம் என்றும் நினைப்பது அவன் மனம் அல்லது புத்தியின் செயலே. அருகில் சென்ற பின் இந்த உணர்வுகள் மாறக் கூடும்.

அழிவு என்று மனிதன் நினைப்பதும் இதே போல உண்மையல்ல. க்ஷேத்ரம்- அடிப்படை என்று புரிந்தால், அதனால், அல்லது அதிலிருந்து உண்டான அனைத்தும் திரும்ப அதே இடத்தில்  தோன்றுவது புரியும்.

இந்த விஷயமாக சங்கர பாஷ்யம் பல ஆதாரங்களுடன் வாத விவாதங்கள்  அளித்துள்ளது.

அடுத்த ஸ்லோகத்தில் க்ஷேத்ரம் என்பதை மேலும் விவரிக்கிறார்.

க்ஷேத்ரம் என்று இங்கு சொல்லுவது இந்த சரீரம் – என்று. அதன் பண்புகள் என்று எதைச் சொல்வோம், எப்படி மாற்றங்கள் வரும் இதை எல்லாம் விவரமாக சொல்கிறேன் இது ரிஷிகள் பலவிதமாக பாடலாக எழுதி பாடியிருக்கிறார்கள். வேதத்தின் சந்தஸ்– இது பற்றி பேசுகிறது. பலவிதமாக ப்ரும்ம சூத்ரத்தில் விளக்கப் படுகிறது. காரணங்கள், எடுத்துக் காட்டுகள் மூலம் நிச்சயமாக சொல்லப் படுகிறது.

மஹாபூதானி (the great elements)  –  (பத்து உணர்வுகள், மற்றும் மனம் , அஹங்காரம் – ) , இவை தவிர அவ்யக்தம் என்ற மறை பொருள், –  பத்து இந்திரியங்கள்,  புத்தியுடன் சேர்த்து பதினொன்று, – புத்திக்கு காரணமே அவ்யக்தமான – வெளியில் தெரியாத ஈஸ்வர சக்தி.

ச.பா: இந்திரியங்கள் 10 என்பது, புத்தி இந்திரியங்கள் 5 – செவியின் கேட்கும் குணம், இது போல மற்ற கண், வாய்.மூக்கு – இவைகள் மூலம் புது செய்திகளை தெரிந்து கொள்வதால் – ஞானேந்திரியங்கள் எனப்படும்.  மற்ற ஐந்து கைகள், கால்கள், வாய், (பேச்சு, ருசியறிதல்)   இவைகள் செயல் இந்திரியங்கள் – இவைகள் செயலுக்கு காரணமாக இருப்பதால்-கர்மேந்திரியங்கள்,-5 இத்துடன் மனது – எண்ணங்களுக்கும், சங்கல்பங்களுக்கும் காரணம். ஐந்து இந்திரியங்கள் மூலம் பெறப்படும் சப்தம், முதலியவைகளைச் சேர்த்து 24 தத்வங்கள் சொல்லப் பட்டுள்ளன.

மேலும் ஆத்மாவின் இயல்பான உணர்வுகளான ஆசை- த்வேஷம், சுகம்-துக்கம்,  இவைகள் வெளியில் தெரிபவை. புத்தி  என்பது  மனம் மூலம்  வெளிப்படுவது – உடலும் உள்ளமும் இணைந்த நிலை, (நெருப்பு எரிவது கண்ணுக்குத் தெரிவது போல தெரிவது – எரி பொருளும், அக்னியும் போல – இரண்டும் சேர்ந்தால் தான் ஜ்வாலை  உண்டாவது போல)  த்ருதி – தைர்யம்.

ஞானம் பெற தேவையான குணங்களைச் சொல்கிறார்.

அமானித்வம்-  தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக நம்புவது- அதன் எதிர் பதம் – தன்னடக்கம்,  அதம்பித்வம்- தற்பெருமை – தன்னைப் பற்றித் தானே பெருமையடித்துக் கொள்ளாமை- அஹிம்சா- ஜீவ ஹிம்சை செய்யாமை, க்ஷாந்தி- அமைதி, ஆர்ஜவம்- நேர்மை, ஆசார்யோபாசனம்- குருவை வணங்கி மரியாதையுடன் இருத்தல், சௌசம்- உடல், மனது சுத்தம்,  ஸ்தைர்யம்- திடமான கொள்கை பிடிப்பு,  ஆத்ம வினிக்ரஹ:  தன் மன ஓட்டத்தை கட்டுப்படுத்துதல்.

வலி என்பது ஒரு உபாதை அல்லது துக்கம்.  பிறப்பே ஒரு வலி.  பிரசவம் என்பதே ஒரு துக்கம். அதே போல் மரணமும். வயதானால் ஒரு வித துன்பம், உடல் வலி. வியாதி என்றால் கேட்கவே வேண்டாம்.  இந்த துன்பங்களை அலசி ஆராய்ந்தால், எதனால் துக்கம் என்று உணருகிறோம், ஏன் இவைகளை தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்விகள் அத்யாத்ம விஷயங்கள் பற்றி அறிந்து கொள்ள தூண்டும். வைராக்யம், அஹங்காரம் அழிவது என்பது வரை கொண்டுச் செல்லும்.

ச.பா: பிறக்கும் பொழுது ஜீவன் அனுபவிப்பது வலியானாலும் பின்னால் அதனால் மகிழ்ச்சியே. அதே போலத்தான் மரணமும் – ஒருவகையில் விடுதலை என்பது துன்பம் அல்ல.

புத்ர, தார, க்ருஹம் முதலியவைகளில் அதிக அன்பும், தன்னுடையது என்ற ஈடுபாடும், பிடித்தமானது, பிடிக்காதது, என்றும் பாகுபாடுகள், இவை இல்லாமல் இருந்தாலே உலகில் அறிவை வளர்த்துக் கொள்ள தூண்டுதல் வரும்.  என்னிடம் மனம் லயிக்கும். இந்த devotion – பக்தியே ஒரு விதத்தில் ஞானம்.

ச.பா: வெட்ட வெளிகளில், மலைகள், நீர் நிலைகள் போன்ற இயற்கையின் மடியில் மன அமைதி உண்டாவதைக் கண்டிருக்கிறோம். இது போன்ற  இடங்களில் தனிமையில் தியானம் செய்வது பலனளிக்கும். அதே போல ஜனசம்சதி- ஜனங்களின் கூட்டத்தில் – பாமர ஜனங்களேயானாலும் அவர்கள் நடுவில் இருந்தாலும் மனம் வைராக்யம் கொள்ளும். ஞான மார்கத்தில் செல்லத் தூண்டும்.

(இந்த ஜனசம்ஸதி- என்பது தான் திருவிழாக்கள், ஊர் கூடி தேர் இழுத்தல், பஜனைகள் என்பவைகளின் அடிப்படை காரணமாக இருக்கலாம்.)

அத்யாத்ம ஞானம் ஒருவருக்கு சித்தியானால் அது நிரந்தரமாக இருக்கும்.  எந்த விஷயத்திலும் உண்மையைத் தேடி கண்டு கொண்டால் அதுவும் நித்யமாக இருக்கும். தரிசனம் என்பது கண்டுகொள்வது.  கலையானாலும், கை வேலையானாலும்,  கல்வியானாலும் அதன் இறுதி வரை கற்று தெரிந்து கொள்வது ஞானம்.  இதற்கு மாற்றானது எல்லாம் அக்ஞானமே.

எதையெல்லம் அறிய வேண்டும் என்பதை சொல்கிறேன், கேள்.  இதையறிந்தால்  அம்ருதம் உண்டது போல மகிழ்வாய்.  ஆதியந்தமில்லாத, என்னைப் பற்றிய ஞானம் ப்ரும்ம ஞானம். சத் – இருப்பது, அசத்- இல்லாதது – ஒரு பொருளைக் கண்டு கொள்வது, அல்லது அப்படி ஒரு பொருளை கேட்டோ, நுகர்ந்தோ, ருசித்தோ, தொடுகையாலோ – அறிந்து கொள்வது. மற்றொன்று மனதால், புத்தியால் உணர்ந்து கொள்வது. இது ஒரே விதமாக அனைவராலும் தெரிந்து கொள்வது சாத்யமில்லை. ஒவ்வொருவருடைய மன நிலை, அறிவு, அனுபவம் பொறுத்து மாறக் கூடும்.

ச.பா:  உபனிஷதுகளும் ப்ரும்ம சூத்ரமும் இது அல்ல இது அல்ல, (நேதி, நேதி) என்று அனைத்தையும் தவிர்த்து ‘எதை அடைய முடியாமல்,  வார்த்தைகள், மனதுடன் திரும்பி வருகின்றனவோ’   என்று முடித்து விட்டன. இது பற்றி வாத விவாதங்கள் நிறைய உள்ளன.  பாஷ்யக்காரர் உபனிஷத், ப்ரும்ம சூத்ரம்  இவைகளிலிருந்து மேற்கோள்களுடன் நிறைய எழுதியுள்ளார்.  முடிந்தவர்கள் படித்து புரிந்து கொள்ளலாம்.

சர்வத: பாணிபாதம்  தத்  சர்வதோ (அ) க்ஷி சிரோ முகம் |

ஸர்வத: ஸ்ருதிமன் லோகே சர்வமாவ்ருத்ய திஷ்டதி ||

सर्वत: पाणिपादम् तत् सर्वतो ऽ क्षि शिरो मुखं | सर्वत: श्रुतिमन् लोके सर्वमावृत्य तिष्टति ||

படித்தவுடன் ஏதோ riddle -விடுகதை போல தோன்றும் இந்த ஸ்லோகம். வாக்யார்தம்:

அது எங்கும் கால், கை, உடன் கூடியது.  எங்கும் கண், தலை வாய் உடையது. எங்கும் செவியும், அனைத்தையும் சுற்றி படர்ந்தும் உள்ளது.

ச.பா:  ப்ரும்மம்  என்பதை தெரிந்துகொள்ள  என்ன வழி ? உருவமா, அருவமா என்பது கூட நமக்குத் தெரியாது.  அதனால் அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று முடித்து விடக் கூடாது. எனவே ஸ்ரீ பகவான் தன் பதிலில், ப்ரும்மம் சத்யமே என்பதை நமக்கு விளக்க சில விஷயங்களைச் சொல்கிறார். அவை:1. அந்தராத்மா – (ப்ரத்யக்ஷம்) 2. ஏதோ ஒன்று நமது  புலன்களை செயல் பட வைக்கிறதே- உடலின் உள்ளேயே இருந்து கொண்டு அந்த அடிப்படைத் தத்வம் 3. நமது புத்தியை தேவையான விதத்தில் தட்டி எழுப்புகிறதே ஒரு சக்தி, இது துக்கம், இது சுகம், இது உஷ்ணம், இது சீதளம் என்ற இரட்டைகளால் ஆன உணர்வுகள், இவைகள் தெரியக் காரணம் புத்தி என்று அறிவோம், அந்த புத்தியையும் இயக்குவது 4. உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஈஸ்வரன், இறைவன் என்று நாம் அறிவது.

முதன் முதலாக நமக்கு சொல்வது அந்தராத்மாவைப் பற்றி.  ஏதோ ஒரு கொள்கை இருக்க வேண்டும் பின்னின்று இயக்கும்  ஒரு சக்தி – அதற்கு ஒரு பெயர் சூட்டியிருக்கிறார் ப்ரத்யக்ஷ சேதனா – புத்தி, உணரும் அறிவு.  பௌதிகமான உடல் இயங்க  கால்கள் நடக்கவும், கைகள் செயலைச் செய்யவும், ஒரு வண்டி நகர வேண்டுமானால், அதன் சக்கரம் சுழல வேண்டும், ஒரு ஓட்டுபவர் வேண்டும் என்பது போல நமது உடலே தான், நமது உடல் பாகங்களேயானாலும்  அது வெறும் சக்கரம் மட்டுமே, சுழல வைக்க ஒரு ஓட்டுனர் வேண்டும் – அது தான் அந்தராத்மா –

இந்த ப்ரும்மம் எங்கும் தன் கைகளையும் கால்களையும் நீட்டி வைத்துள்ளது – இதன் பொருள் கை கால் உள்ள ஜீவன் கள் அனைத்தும் நடக்கவும் மற்ற வேலை செய்யவும் பின்னின்று இயக்குகிறது. அதே போல உலகெங்கும் கண்கள், ஜீவராசிகள் பார்க்க, தலை, வாய்- உண்ண, காதுகள்- கேட்க , என்று உலகையே வியாபித்து உள்ளது.  முன் சொன்ன க்ஷேத்ரம் – உடல் ,  இப்படி கை கால்களாக, கண்களால்.செவிகளால், நாசியால், வாயினால், உணர்ந்தும், கண்டும் கேட்டும் , ருசித்தும், நுகர்ந்தும், அனுபவிப்பது தன்னிச்சையால்  அல்ல, அதை இயக்கும் ப்ரும்மத்தால் –க்ஷேத்ரக்ஞன் –  அது உருவும் அல்ல அருவும் அல்ல

உண்மையிலேயே ப்ரும்மம் எண்ணற்ற கை கால்கள் உடையதோ என்று எண்ணி விடக் கூடாது என்பது போல அடுத்த  ஸ்லோகம்.

புலன்களின் குணங்கள் உடையது. ஆனால் தனக்கென்று புலன்கள் கிடையாது. எந்த உறவும் அதன் சம்பந்தமான பாசம் பந்தம் கிடையாது.  ஆனால், அனைத்தையும் காத்து பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.  குணம் என்று தனியாக எதையும் (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற குண பேதங்கள்)  ஆனால் இந்த குணங்களின் வெளிப்பாட்டை தானும் உணர முடிவது.

ச.பா:   எல்லா உயிரினங்களும் இயங்குவது,  கை, கால்களில் இருந்து ப்ரும்மமே இயக்குவதாகச் சொன்னதை விவரிக்கிறார்.  தானே அந்தந்த உடல் உறுப்புகளிலோ, அந்த;கரணத்திலோ உள் நுழைந்து செய்வதாக பொருள் கொள்ளக் கூடாது.

ஜீவராசிகளின் உள்ளும் புறமும், அசையும், அசையாதவையும்,  தொலைவில் இருப்பதும், மிக அருகிலேயே தென்படுவதும்,  மிகவும் சூக்ஷ்மமானது என்பதால் அறிய முடியாதது.   ப்ரும்மம் எங்கும் பரவியிருப்பது. அந்த:கரணம் மட்டுமல்ல,  வெளி உறுப்புகள்,  தோல் உள்பட என்றாலும், மிக மிக சூக்ஷ்மமானது.

பலவகை உருவங்களுடன் உள்ள ஜீவராசிகளில் இருப்பதாகச் சொன்னால் அதன் உருவம் என்று ஒன்று உண்டா என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார்.  ஒன்றாக இருந்தாலும்  பல வகையான ஜீவன்களில் பலவாகத் தோற்றமளிப்பது.    ஜீவ ராசிகளைக் காப்பவன் என்று தெரிந்து கொள்.  அவைகளை மறைப்பதும் , மறுபடியும் சிருஷ்டி செய்வதும்,  ப்ரும்மமே.

ச,பா: உருவம் இல்லை. ஆகாயம் போல பரவி இருப்பது. எந்த புலனாலும் அறிய முடியாது ஆனால் வியாபித்து உள்ளது.

ஜோதிகளில் சிறந்து விளங்குவது. தமஸ் என்பதை கடந்தது.  ஞானம் அறிவு என்பதும், அந்த ஞானத்தை பயன்படுத்தி அறிய வேண்டியதும், சாதனையின்  முடிவான ஞானமும் அதாவது ‘அது’ ‘தத்’ என்பதும் அனைவரிடமும்  ஹ்ருதயத்தில் வேறூன்றி உள்ளது.

தத் என்ற ப்ரும்மம் ஹ்ருதயத்தில் விளக்கு போன்று இருப்பதே. அதை அந்தராத்மா  ஞானம் என்ற திரி, எண்ணெயிட்டு ஏற்ற வேண்டும் – ஒளியை பெற.

அடுத்த  ஸ்லோகத்தில் முடிவாக  இது தான் க்ஷேத்ரம், ஞானம், அறிய வேண்டியது முதலிய விஷயங்கள். என் பக்தன், இவைகளைத் தெரிந்துகொண்டு என்னிடமே ஐக்யமாகிறான்.

ச.பா: இத்துடன் க்ஷேத்ரம் என்பது, பொதுவான  தனிமங்கள் (great elements) என்பதிலிருந்து, திடமான ஞானம் – சத்யம் தான் ஞானம் –  இதற்கு மேல் எதுவும் இல்லை என்று, வார்த்தைகள், மனதுடன் திரும்பி வருகின்றன – என்று வேதம் சொல்லும் உரையுடன் சுருக்கமாகச் சொல்ல பட்டது.

இந்த ஞானம் பெற என்ன தகுதி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதிலாக, என் பக்தன் என்கிறார்.  பர ப்ரும்ம மான நான், வாசுதேவனாக இவ்வுலகம் உய்யவே அவதரித்து வந்துள்ளேன் என்று அறிந்து என்னிடம் பக்தி செய்பவன் யாரானாலும் சத்யத்தை அடைய முடியும். நானே பரப்ரும்மம், எங்கும் வியாபித்து உள்ளவன், முதல் குரு, உயிரினங்களில் ஆத்மாவாக இருக்கும் பரமாத்மா, வாசுதேவன்-  இந்த பதத்தின் பொருளே, எவனிடம் அனைத்தும் உள்ளதோ (வசு – செல்வம்.  பலவகைப் பட்ட செல்வங்கள், தனம், தானியம் , கலை, கல்வி, மக்கட் செல்வம், வாகனம் -மாடு, கன்றுகள், குதிரை  முதலியவை -செல்வமாக கருதப் பட்டவை. வெற்றி,  காரிய சித்தி, மோக்ஷம் அனைத்தும் செல்வங்களே- எட்டு லக்ஷ்மிகளாக உருவகப் படுத்தப் பட்டவை.  வாழ்வில் அடைய வேண்டும் என்று மனித குலம் விரும்புவது அனைத்தும் இந்த எட்டில் அடங்கும்)

पुत्रपौत्र धनं धान्यं हस्त्यश्वादिगवे रथम् 
प्रजानां भवसि माता आयुष्मन्तं करोतु 

सिद्धलक्ष्मीर्मोक्षलक्ष्मीर्जयलक्ष्मीस्सरस्वती 
श्रीलक्ष्मी र्वरलक्ष्मीश्च प्रसन्ना मम सर्वदा ॥२९॥ ஸ்ரீ சூக்தம்

என்றபடி என்னை நம்பிய என் பக்தன் இறுதியில் மோக்ஷம் அடைவான்.

இரண்டு ப்ரக்ருதிகள் சொல்லப் பட்டன – க்ஷேத்ரம் என்றும், க்ஷேத்ரக்ஞன் என்றும் – இவையிரண்டும் தான் சிருஷ்டிக்கு ஆதாரமா என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார்.

ப்ரக்ருதி – இயற்கை, புருஷன்- ஈஸ்வரன் இரண்டுமே அனாதி- எப்பொழுது தோன்றியது என்று வரையறுத்துச் சொல்ல முடியாதவை.  இதில் மாற்றங்களும், குணங்களும் ப்ரக்ருதி சார்ந்தவையே.  இதுவும் ஈஸ்வர ஸ்ருஷ்டியில் அடங்கும்.

செயல்களும், அதைச் செய்யும் கரணங்களும்- கை கால் முதலியவை, யார் செய்வது என்பதும்,  ப்ரக்ருதி- இயற்கை என்பதில் வரும்.  புருஷன் என்பது சுக துக்கங்களை அனுபவிப்பவன்.  சம்சாரம் எனும் உலக வாழ்க்கைக்கு காரணம்,  இந்த நாலும் புருஷன், க்ஷேத்ரக்ஞன், போக்த்ரு-அனுபவிப்பவன், ஜீவன்- உயிருடைய பிராணி சேர்ந்து தான்

புருஷன் என்று இங்கு சொல்லப்பட்டது பரமாத்மா என்ற பொருளில் அல்ல. புருஷன் உலக வாழ்க்கையின் சுக துக்கங்களையும், குணங்களையும்  ஏற்று அனுபவிக்கிறான்.

தள்ளியிருந்து பார்க்கும் உபத்ருஷ்டா – கண்காணிக்கும் என்று சொல்லலாம். சமயங்களில் அனுமந்தா – அனுமதியளிப்பவன்,  காக்கும் பொறுப்பை ஏற்றவன், அனுபவிப்பனும் தானே என்ற மஹேஸ்வரன்.  பரமாத்மா என்றும் இந்த உடலில் இருக்கும் பரம புருஷன்.

ச.பா: யாகங்களில் யாகம் செய்யும் கர்த்தா ஒருவர் யாக காரியங்களில் ஈடுபட்டிருக்கும் பொழுது, யாக விஷயங்களில் விவரம் அறிந்தவர், அனுபவசாலியான ஒருவர் அருகில்  அமர்ந்திருப்பார்.  அவர் யாகத்தில் நேரடியாக பங்கேற்பதில்லை. தேவையான அறிவுரை மட்டுமே வழங்குவார்.  அதே போல தானே உடலின் செயல்களில் பங்கேற்காமலும், அதே சமயம் அருகில் இருந்து கவனித்துக் கொள்டிருப்பதுமான செயலைதான் ஆத்மா செய்கிறது.   வேறு விதமாக சொல்வதானால், முதலில் உடல், அடுத்து கண் முதலான புலன்கள், அடுத்து மனம், புத்தி, அதையும் அடுத்து சூக்ஷ்மமாக இருப்பது ஆத்மா.  ஸ்தூலத்திலிருந்து கிரமமாக சூக்ஷ்மம் நோக்கி செல்கிறது இந்த வரிசை.

உள் நோக்கி பார்த்தோமானால், ஆத்மா தான் கடைசி- அதற்குப் பின் வேறு எதுவும் இல்லை என்பதால் அது தான் மிக அணுக்கமானது என்றும் ஆகிறது. யாகத்தில் உயர் அதிகாரியாக, உதவும் அனுபவஸ்தர் போல இங்கு உடல் இயக்கத்தின் உபத்ரஷ்டா- கண் காணிப்பவர் வேலையை ஆத்மா செய்கிறது. அந்தராத்மாவாக இருந்து அனுமதி அளிக்கிறது. மனமும் புத்தியும் ஏற்றுக் கொண்டாலும் சில சமயம் அந்தராத்மா ஏற்பதில்லை என்பது நாம் அறிந்ததே. அதே சமயம் எச்சரிப்பதுடன் நின்று விடுகிறது.  காக்கும் செயலை செய்யும் பொழுதும் ஆத்மா மனதின்  ஆசை போன்றவற்றை, புத்தி மூலம் ஆராயச் செய்கிறது. ஆத்மா நித்ய சைதன்ய ஸ்வரூபமான பரமாத்மாவின் அம்சமேயானதால், ஆனந்தம் என்பதையும் அனுபவிக்கிறது.

இப்படி ப்ரக்ருதி, புருஷன், சத்வ ரஜஸ் தமஸ் என்ற குணங்கள், இவைகளை உள்ளபடி தெரிந்து கொண்டவன் எங்கு இருந்தாலும், மறுபடி பிறப்பதில்லை.

ச.பா: நெருப்பில் சுடப்பட்ட விதைகள் முளைக்காதது போல ஞானாக்னியில் புடம் போடப்பட்ட சரீரம் திரும்பவும் அமைவதில்லை.

இது சம்பந்தமாக நிறைய வாத விவாதங்கள். நிறைய மேற்கோள்களுடன்  மிக விரிவான பாஷ்யம்.

ஆத்ம ஞானம் பெற பலவிதமான  வழிகள் பற்றிச் சொல்கிறார்.  சிலர் தியானம் செய்து ஆத்ம ஞானம் பெறுகின்றனர்.  மற்றும் சிலர் தானே முயற்சிகள் செய்து தன்னை அறிகின்றனர். மற்றும் சிலர்  சாங்க்யம் என்ற மார்கம்- சாஸ்திரங்களைப் படித்து – இதுவும் ஒரு யோகம்- மற்றும் சிலர் கர்ம யோகத்தினால் ஞானம் அடைகின்றனர்.

மற்றவர்களிடம் கேட்டு சிலர் அறிந்து கொள்கின்றனர். இவர்கள் ஈடுபாட்டுடன் கேட்டு, அதை மனதில் உருவேற்றிக் கொள்கிறார்கள்.  இவர்களும் பிறவிக் கடலைக் கடக்கிறார்கள்.

பரத வீரனே! எந்த உயிரினம் எங்கு தோன்றினாலும் அது க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ, என்ற இரண்டும்  இணைவதால் தான் என்பதை புரிந்து கொள்.

பரமேஸ்வரன் என்ற பரமாத்மா எல்லா உயிரினங்களிலும் சமமாகவே இருக்கிறான். உயிரினங்கள் அழியும்,.  ஆனால் இந்த பரமாத்மா அழியாது.  இதை உணர்ந்தவன் தான்  உள்ளபடி அறிந்தவன். அனைத்து ஜீவராசிகளிடமும் உள்ள ஆத்மா பரமாத்வானின் அம்சமே என்றும் ஈஸ்வரனே பரமாத்மா என்பதையும் அறிந்தவன் தனக்கே கெடுதல் செய்து கொள்ளமாட்டான்.  பரகதியை அடைகிறான்.

ச.பா: இப்படி சர்வ லோகமும் பகவானின் அம்சமே என்று உணர்ந்தவன் மற்ற ஒருவரை தாக்கி ஹிம்சை செய்தால் அதனிடம் உள்ள ஆத்மாவும் தானும் ஒன்றே என்பதால் தன்னையே தாக்கி தீங்கு செய்து கொண்டதாகத் தானே ஆகும். அதனால் அதை செய்ய மாட்டான். அஹிம்சையை அதனாலேயே பிரதானமாக சொல்கிறார்கள்.

செயல்களைச் செய்வது உடல் அதனுடைய இயல்பான வழியில். ஆத்மா அதை தடுப்பதும் இல்லை, தான் செய்வதும் இல்லை.  முன் சொன்னபடி பார்வையாளனாக அருகில் இருக்கும்.  இவ்வாறு பூத- ஜீவன்கள், ப்ரும்மா இவற்றின் தனித் தன்மைகள் இவற்றை விஸ்தாரமாக அறிந்து கொள்பவன் தானும் ப்ரும்மமாக ஆகிறான்.

கடைசியாக, மறுமுறை திரும்பிப் பார்ப்பது போல, சொல்கிறார். கௌந்தேயா! ஆதி அந்தமில்லாதது, முக்குணங்கள் இதை ஆட்டுவிப்பதில்லை, அழிவற்றது என்பதால் உடலில் இருந்தாலும் பரமாத்மா எதுவும் செய்வதுமில்லை, தான் மாசு படுவதும் இல்லை. எதையும் ஏற்றுக் கொள்வதுமில்லை.

எப்படி ஆகாயம் எங்கும் பரவியிருந்தாலும் அதன் மேல் எந்த அழுக்கும் படுவதில்லையோ,  அதே போலத் தான் ஆத்மா உயிரினங்கள் அனைத்திலும் அந்தர்யாமியாக  வியாபித்து இருந்தாலும் தான் எந்த விதத்திலும் மாசு படுவதில்லை.

ஒரு சூரியன் உலகனைத்தையும் பிரகாசமாகச் செய்வது போல க்ஷேத்ரம், க்ஷேத்ரி என்ற இந்த இரண்டும் சேர்ந்து உலகை ப்ரகாசிக்கச் செய்கிறது.

ச.பா:  பரமாத்மா ஒன்றே. அதன் அம்சமாக உலகின் செயல்கள், அதன் பௌதிக ரூபமான உடல் என்பதன் மூலம் இயங்குகிறது.  அவ்யக்தமான மூல பொருட்களிலிருந்து, அசையும் அசையா பொருட்கள் வரை, ஐம்பூதங்கள் எனப்படும் அக்னி, வாயு, பூமி, நீர், நிலம், ஆகாயம் என்ற ஐந்து தத்வங்கள் முதல், உள் ஊடுருவியிருக்கும் பரமாத்மா ஒன்றே.

ஞானக் கண் கொண்டு பார். அதாவது மனதால் அலசி ஆராய்ந்து உணர்ந்து கொள். தோன்றுவதும், இருப்பதும் அழிவதுமான இந்த உலகின் இயல்பை அறிந்து பரகதியை அடைவாய்.

இத்துடன் இந்த அத்யாயத்தை முடிக்கிறார்.

(இத்துடன் உபனிஷதான ஸ்ரீ மத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தையின் யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் என்ற  பதின் மூன்றாவது அத்தியாயம்)

 

அத்யாயம் -14 குணத்ரய விபாக யோகம்

பகவான் என்ன நினைத்தோ, திரும்ப உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன்,  உத்தமமான ஞானம். இதைத் தெரிந்து கொண்டு முனிவர்கள் இதோ என்பதற்குள் சித்தியை அடைந்து விட்டார்கள் என்று சொல்ல ஆரம்பிக்கிறார்.

அதோடு நிற்காமல், அவர்கள்   மறுபிறவி என்று திரும்ப பிறப்பதுமில்லை, ப்ரளய காலத்தில் அவதிப் படுவதுமில்லை. என் சாதர்ம்யம்- எனக்கு சமமான நிலையை அடைந்து விட்டார்கள்.

கௌந்தேயா, உலகில்  தாயின் கருவில் பிறக்கும் உயிரினங்கள்,  என்ன என்ன உண்டோ அவையனைத்துக்கும் ப்ரும்மா தான்  மஹத்யோனி என்ற கருப்பை.  நான் பீஜம்- விதையை வழங்கும் தந்தை.

சத்வ ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்கள், இவைகள்  ஈஸ்வரனின் மாயையில் பிறந்தவை. இவை ஆத்மாவை சூழ்ந்து கொண்டு புத்தியை தன் இஷ்டப்படி செயல் பட வைக்கின்றன.

இவற்றில் சத்வம் மாசில்லாதது. எனவே ப்ரகாசிக்கச் செய்கிறது.  சுகமான விஷயங்களில் புத்தியை சேர்த்து வைக்கிறது. ஞானம் பெற வகை செய்கிறது.

ரஜஸ் ஆசையில் பிறக்கிறது.   பாசம், பந்தம் என்ற கட்டுப்பாடுகள் ஆசையுடன் உடன் வருகின்றன. எனவே, மனிதனின் (ஜீவராசிகளின்) புத்தியை கர்ம மார்கத்தில் செலுத்துகின்றன.

தமஸ் என்பது அக்ஞானம். உயிரினங்கள் அனைத்தையும் மோகிக்கச் செய்கிறது. மயக்குகிறது.  தவறான அணுகுமுறை, சோம்பல், நித்ரை   இவற்றில் புத்தியை மூழ்கச் செய்து அமுக்குகிறது.

சத்வம் சுகத்தில் கொண்டு சேர்க்கும். ரஜஸ் செயல் பரமாக ஆக்கும். அறிவை மறைத்து தாமஸம் மோஹத்தில் ஆழ்த்தும்.

இதில் அதிக சக்தி வார்ய்ந்த குணம் மற்றதை வீழ்த்தி தான் முன் நிற்கும். சத்வ குணம் அதிகமானால், மற்ற இரண்டும் தலை தூக்க விடாமல் புத்தியை காக்கும். அதேபோல ரஜஸ் அதிகமானால், தாமஸத்தை அடக்குவதோடு, சத்வ குணமும் வெளிப் படாமல் அடங்கி விடும். தாமஸமும் அவ்வாறே.

எந்த குணம் அதிக சக்தியுடன் உள்ளது என்பது எப்படித் தெரியும்?

புலன்களின் செயல்பாட்டில் தெரிந்து கொள்ளலாம்.

சங்கர பாஷ்யம்:  செவி முதலான புலன்கள், ஆத்மாவின்  தன்மையை அறிவிக்கும் வாசல் எனலாம். செவியின் திறன் சிறப்பாக இருந்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவான்.  புத்தி வளரும்.  ஞானம் அடைய இது ஒரு சிறந்த வழி. அதே போல நவத்வாரே புரே – என்பது மற்ற ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்களின் சக்தியும் ஆற்றலும் விளக்கு போட்டது போல சத்வ குணம் என்பதை நாம் அறிந்து கொள்ளச் செய்யும்.

அதே போல ரஜஸ் என்ற குணம் அடிப்படையில் லோபம்,  செயல்களில் பொறுமையின்மை, ஆசை, நிலை கொள்ளாமல் அனைத்திலும் முயன்று தோற்றல் – இவை ரஜஸ் அதிகமாக இருப்பதை தெரிவிக்கும்.

ச.பா: ஆசை தான்  முதல் காரணம் மற்ற பேராசை, பொறாமை இவைகளைத் தூண்ட.

கர்மணாமசம: ஸ்ப்ருஹா – இரண்டு நிலை. ஒன்று எடுத்த காரியத்தில் ஒரே முனைப்பாக செயல் பட்டு முடிக்காமல் பாதியில் விடுதல், ஸ்ப்ருஹா – நப்பாசை.  எல்லாவற்றிலும் ஆசை. தேவையா இல்லையா என்ற எண்ணம் கூட இல்லாமல்.  இதிலும் ஒரு நன்மை – செயல் இருக்கும்.

ப்ரகாசமே இல்லாத, செயலும் இல்லாத சோம்பேறித் தனம், தவறான அணுகுமுறை. மோகம் – இவை தாமஸம்.   இதை இருள் எனச் சொல்கிறார்.

இந்த குணங்களில் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும், ப்ரளயம் என்று வரும் பொழுது அழியத்தான் அழியும். பிறந்தவை மரணிப்பது இயற்கை. ஆனால், சத்வ குணம் மேலோங்கி இருந்தால், உத்தமமான உலகங்களை அடைவான்.  ராஜஸ குணம் மேலோங்கி இருந்தாலும் உழைக்கும் வர்கத்தில் பிறப்பான்.  தாமஸ குணம் மேலோங்கி இருந்தால் மூடர்களாக பிறப்பார்கள்.

இந்த குணம் யாருக்கு எப்படி வாய்க்கிறது.

நல்ல காரியங்களை செய்து வந்தால் சத்வ குணம் தானாகவே படியும்.  செயல்கள் மட்டுமே, தனக்கான, சுய லாபத்துக்கான  உடல் உழைப்பே என்று இருப்பவர்களுக்கு ராஜஸ குணம் படியும்.  எதையும் தெரிந்து கொள்ளவும் முயலாமல், அறியாமையிலேயே ஆழ்ந்து கிடந்தால், தாமஸமான குணமே வாய்க்கும்.

நல்ல செயல்களை செய்து அனுபவஸ்தர்களாக உள்ளவர்களும் சாத்விகமான தெளிந்த அறிவைப் பெறுவார்கள்.  ராஜஸமான குணம் உள்ளவர்கள் செயல்கள் துக்கத்தை தான் கொடுக்கும்.  அக்ஞானம் தாமஸ குணத்தின் பலன்.

முன் சொன்னபடி சத்வ குணம் ஞானம் பெற உதவும்.  ரஜஸ் லோபத்தை பெருக்கும்.  ப்ரமாதம் என்ற மனதின் சம நிலை குறைவும், மோஹமும் தமஸ் எனும்  அக்ஞானமே.

சத்வ குணம் உயர்வைத் தருகிறது. ராஜஸ குணம் மத்யமமாக, தாமஸ குணம் அதோ கதியாக்கி கீழே  தள்ளி விடுகிறது.

காண்பவன், இந்த முக்குணங்களின் தன்மையை அறிந்து இதனால் பாதிக்கப் படாத பரமாத்மா என்று என்னை உணருவானேயானால்  அவன் எனக்கு சமமான தன்மையை அடைகிறான்.

உடல் வரை தான் இந்த குணங்கள் பாதிப்பது. ஆத்மாவை பாதிக்காது. சாதகன், இந்த குணங்களை கடந்து தன் சாதனையைத் தொடர்ந்து செய்வான்.  அவன் முக்தி எனும் அம்ருத தன்மையை அடைகிறான்.

அர்ஜுனன் கேள்வி: எந்த அடையாளத்தைக் கொண்டு ஒருவன் முக்குணங்களை வென்று விட்டான் என்பதை நாம் அறிந்து கொள்வோம்.

ஸ்ரீ க்ருஷ்ணர் சொல்கிறார்:  அது போன்ற ஒருவரை பார்த்தாலே தெரியும்.  ப்ரகாசமாக ஏதோ ஒன்று அவரிடம் இருக்கும். பார்த்தவரை தன் பால் இழுக்கக் கூடிய ஒரு ஒளி.

அடுத்து அவரது நடத்தை.  கடந்து போனதை எண்ணி பச்சாதாபமோ, மற்றவரிடம் இருப்பது தன்னிடம் இல்லையே என்று வருத்தமோ இருக்காது.  எதனிடமும்  த்வேஷம் – வெறுப்பு  அதிகமாக எதிலும் பற்று இன்மை இவைகளைக் கொண்டு இவன் சத்வ குணமுடையவன் என்று அறியலாம்.

நடு  நிலைமை வகிப்பான். தன் விருப்பு வெறுப்புகளை வெளியில் காட்டிக் கொள்ளாமல்,  விலையுயர்ந்த தங்கமோ, ஓட்டான்சில்லியோ அவனுக்கு சமமே.  (ஓடுகள் வீட்டுக் கூரைகளில் அடுக்கி இருக்கும். அதில் ஒன்று உடைந்தால் பயனில்லை. மண்ணை சுட்டு செய்யப்படுவதால் அதை திரும்பி பயன் படுத்த இயலாது. அதனால் மிகவும் மதிப்பில்லாத ஒரு பொருள்.  அதுவே தங்கம் சிறு துண்டானாலும் பயன் படும். முற்றிலும் எதிர் மறையான உவமானம்)    தன்னைச் சார்ந்த மக்களிடமும் இதே போல பேத பாவம் இன்றி இருப்பான்.  தீரன். புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் தன் நிலையிலிருந்து தவற மாட்டான்.

ச.பா: இப்படி இருப்பவன் சன்யாசி என்ற பெயருக்கு ஏற்றவனாகிறான்.  தன்னுள் இருந்து தன்னை ஆட்டி வைக்கும் இந்த குணங்கள் ஒரு பொருட்டல்ல. இவைகளை வென்ற பரமாத்மாவே தன்னுடைய இலக்கு என்று தெளிந்து இருப்பான்.

அவனுக்கு மரியாதையும், அவமரியாதையும் ஒன்றே. இவன் மித்ரன், இவன் விரோதி என்று இன்றி அனைவரிடமும் அன்பாகவே பழகுவான். தியாகி. முக்குணங்களையும் கடந்தவன் என்று பெயர் பெறுவான்.

என்னை ஆஸ்ரயித்தவன், என்னை பணிந்து என்னிடம் பக்தியுடன் சேவை செய்பவன், சுலபமாக இந்த நிலையைத் தாண்டி ப்ரும்மமாகவே ஆகிறான்.

அழிவற்றவது, முடிவற்றது என்று சொல்லப்படும்   ப்ரும்மத்தில் நானே இருக்கிறேன்.(அம்ருதம்- முடிவு இல்லாதது ) ப்ரும்மானந்தமான  நிலையில் இருப்பவன் நானே.  அதுவே சாஸ்வதம், தர்மம், சுகம், மற்றும் ஒன்றேயான முழு முதற் பொருள்.

(இதுவரை உபநிஷதான ஸ்ரீ மத் பகவத் கீதையில், ப்ரும்ம சூத்ரத்தின் யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன ம்பாஷனையில், குணத்ரய விபாக யோகம் என்ற பதினான்காம் அத்தியாயம்).

 

 

அத்யாயம் -14 குணத்ரய விபாக யோகம்

பகவான் என்ன நினைத்தோ, திரும்ப உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன்,  உத்தமமான ஞானம். இதைத் தெரிந்து கொண்டு முனிவர்கள் இதோ என்பதற்குள் சித்தியை அடைந்து விட்டார்கள் என்று சொல்ல ஆரம்பிக்கிறார்.

அதோடு நிற்காமல், அவர்கள்   மறுபிறவி என்று திரும்ப பிறப்பதுமில்லை, ப்ரளய காலத்தில் அவதிப் படுவதுமில்லை. என் சாதர்ம்யம்- எனக்கு சமமான நிலையை அடைந்து விட்டார்கள்.

கௌந்தேயா, உலகில்  தாயின் கருவில் பிறக்கும் உயிரினங்கள்,  என்ன என்ன உண்டோ அவையனைத்துக்கும் ப்ரும்மா தான்  மஹத்யோனி என்ற கருப்பை.  நான் பீஜம்- விதையை வழங்கும் தந்தை.

சத்வ ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்கள், இவைகள்  ஈஸ்வரனின் மாயையில் பிறந்தவை. இவை ஆத்மாவை சூழ்ந்து கொண்டு புத்தியை தன் இஷ்டப்படி செயல் பட வைக்கின்றன.

இவற்றில் சத்வம் மாசில்லாதது. எனவே ப்ரகாசிக்கச் செய்கிறது.  சுகமான விஷயங்களில் புத்தியை சேர்த்து வைக்கிறது. ஞானம் பெற வகை செய்கிறது.

ரஜஸ் ஆசையில் பிறக்கிறது.   பாசம், பந்தம் என்ற கட்டுப்பாடுகள் ஆசையுடன் உடன் வருகின்றன. எனவே, மனிதனின் (ஜீவராசிகளின்) புத்தியை கர்ம மார்கத்தில் செலுத்துகின்றன.

தமஸ் என்பது அக்ஞானம். உயிரினங்கள் அனைத்தையும் மோகிக்கச் செய்கிறது. மயக்குகிறது.  தவறான அணுகுமுறை, சோம்பல், நித்ரை   இவற்றில் புத்தியை மூழ்கச் செய்து அமுக்குகிறது.

சத்வம் சுகத்தில் கொண்டு சேர்க்கும். ரஜஸ் செயல் பரமாக ஆக்கும். அறிவை மறைத்து தாமஸம் மோஹத்தில் ஆழ்த்தும்.

இதில் அதிக சக்தி வார்ய்ந்த குணம் மற்றதை வீழ்த்தி தான் முன் நிற்கும். சத்வ குணம் அதிகமானால், மற்ற இரண்டும் தலை தூக்க விடாமல் புத்தியை காக்கும். அதேபோல ரஜஸ் அதிகமானால், தாமஸத்தை அடக்குவதோடு, சத்வ குணமும் வெளிப் படாமல் அடங்கி விடும். தாமஸமும் அவ்வாறே.

எந்த குணம் அதிக சக்தியுடன் உள்ளது என்பது எப்படித் தெரியும்?

புலன்களின் செயல்பாட்டில் தெரிந்து கொள்ளலாம்.

சங்கர பாஷ்யம்:  செவி முதலான புலன்கள், ஆத்மாவின்  தன்மையை அறிவிக்கும் வாசல் எனலாம். செவியின் திறன் சிறப்பாக இருந்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவான்.  புத்தி வளரும்.  ஞானம் அடைய இது ஒரு சிறந்த வழி. அதே போல நவத்வாரே புரே – என்பது மற்ற ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்களின் சக்தியும் ஆற்றலும் விளக்கு போட்டது போல சத்வ குணம் என்பதை நாம் அறிந்து கொள்ளச் செய்யும்.

அதே போல ரஜஸ் என்ற குணம் அடிப்படையில் லோபம்,  செயல்களில் பொறுமையின்மை, ஆசை, நிலை கொள்ளாமல் அனைத்திலும் முயன்று தோற்றல் – இவை ரஜஸ் அதிகமாக இருப்பதை தெரிவிக்கும்.

ச.பா: ஆசை தான்  முதல் காரணம் மற்ற பேராசை, பொறாமை இவைகளைத் தூண்ட.

கர்மணாமசம: ஸ்ப்ருஹா – இரண்டு நிலை. ஒன்று எடுத்த காரியத்தில் ஒரே முனைப்பாக செயல் பட்டு முடிக்காமல் பாதியில் விடுதல், ஸ்ப்ருஹா – நப்பாசை.  எல்லாவற்றிலும் ஆசை. தேவையா இல்லையா என்ற எண்ணம் கூட இல்லாமல்.  இதிலும் ஒரு நன்மை – செயல் இருக்கும்.

ப்ரகாசமே இல்லாத, செயலும் இல்லாத சோம்பேறித் தனம், தவறான அணுகுமுறை. மோகம் – இவை தாமஸம்.   இதை இருள் எனச் சொல்கிறார்.

இந்த குணங்களில் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும், ப்ரளயம் என்று வரும் பொழுது அழியத்தான் அழியும். பிறந்தவை மரணிப்பது இயற்கை. ஆனால், சத்வ குணம் மேலோங்கி இருந்தால், உத்தமமான உலகங்களை அடைவான்.  ராஜஸ குணம் மேலோங்கி இருந்தாலும் உழைக்கும் வர்கத்தில் பிறப்பான்.  தாமஸ குணம் மேலோங்கி இருந்தால் மூடர்களாக பிறப்பார்கள்.

இந்த குணம் யாருக்கு எப்படி வாய்க்கிறது.

நல்ல காரியங்களை செய்து வந்தால் சத்வ குணம் தானாகவே படியும்.  செயல்கள் மட்டுமே, தனக்கான, சுய லாபத்துக்கான  உடல் உழைப்பே என்று இருப்பவர்களுக்கு ராஜஸ குணம் படியும்.  எதையும் தெரிந்து கொள்ளவும் முயலாமல், அறியாமையிலேயே ஆழ்ந்து கிடந்தால், தாமஸமான குணமே வாய்க்கும்.

நல்ல செயல்களை செய்து அனுபவஸ்தர்களாக உள்ளவர்களும் சாத்விகமான தெளிந்த அறிவைப் பெறுவார்கள்.  ராஜஸமான குணம் உள்ளவர்கள் செயல்கள் துக்கத்தை தான் கொடுக்கும்.  அக்ஞானம் தாமஸ குணத்தின் பலன்.

முன் சொன்னபடி சத்வ குணம் ஞானம் பெற உதவும்.  ரஜஸ் லோபத்தை பெருக்கும்.  ப்ரமாதம் என்ற மனதின் சம நிலை குறைவும், மோஹமும் தமஸ் எனும்  அக்ஞானமே.

சத்வ குணம் உயர்வைத் தருகிறது. ராஜஸ குணம் மத்யமமாக, தாமஸ குணம் அதோ கதியாக்கி கீழே  தள்ளி விடுகிறது.

காண்பவன், இந்த முக்குணங்களின் தன்மையை அறிந்து இதனால் பாதிக்கப் படாத பரமாத்மா என்று என்னை உணருவானேயானால்  அவன் எனக்கு சமமான தன்மையை அடைகிறான்.

உடல் வரை தான் இந்த குணங்கள் பாதிப்பது. ஆத்மாவை பாதிக்காது. சாதகன், இந்த குணங்களை கடந்து தன் சாதனையைத் தொடர்ந்து செய்வான்.  அவன் முக்தி எனும் அம்ருத தன்மையை அடைகிறான்.

அர்ஜுனன் கேள்வி: எந்த அடையாளத்தைக் கொண்டு ஒருவன் முக்குணங்களை வென்று விட்டான் என்பதை நாம் அறிந்து கொள்வோம்.

ஸ்ரீ க்ருஷ்ணர் சொல்கிறார்:  அது போன்ற ஒருவரை பார்த்தாலே தெரியும்.  ப்ரகாசமாக ஏதோ ஒன்று அவரிடம் இருக்கும். பார்த்தவரை தன் பால் இழுக்கக் கூடிய ஒரு ஒளி.

அடுத்து அவரது நடத்தை.  கடந்து போனதை எண்ணி பச்சாதாபமோ, மற்றவரிடம் இருப்பது தன்னிடம் இல்லையே என்று வருத்தமோ இருக்காது.  எதனிடமும்  த்வேஷம் – வெறுப்பு  அதிகமாக எதிலும் பற்று இன்மை இவைகளைக் கொண்டு இவன் சத்வ குணமுடையவன் என்று அறியலாம்.

நடு  நிலைமை வகிப்பான். தன் விருப்பு வெறுப்புகளை வெளியில் காட்டிக் கொள்ளாமல்,  விலையுயர்ந்த தங்கமோ, ஓட்டான்சில்லியோ அவனுக்கு சமமே.  (ஓடுகள் வீட்டுக் கூரைகளில் அடுக்கி இருக்கும். அதில் ஒன்று உடைந்தால் பயனில்லை. மண்ணை சுட்டு செய்யப்படுவதால் அதை திரும்பி பயன் படுத்த இயலாது. அதனால் மிகவும் மதிப்பில்லாத ஒரு பொருள்.  அதுவே தங்கம் சிறு துண்டானாலும் பயன் படும். முற்றிலும் எதிர் மறையான உவமானம்)    தன்னைச் சார்ந்த மக்களிடமும் இதே போல பேத பாவம் இன்றி இருப்பான்.  தீரன். புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் தன் நிலையிலிருந்து தவற மாட்டான்.

ச.பா: இப்படி இருப்பவன் சன்யாசி என்ற பெயருக்கு ஏற்றவனாகிறான்.  தன்னுள் இருந்து தன்னை ஆட்டி வைக்கும் இந்த குணங்கள் ஒரு பொருட்டல்ல. இவைகளை வென்ற பரமாத்மாவே தன்னுடைய இலக்கு என்று தெளிந்து இருப்பான்.

அவனுக்கு மரியாதையும், அவமரியாதையும் ஒன்றே. இவன் மித்ரன், இவன் விரோதி என்று இன்றி அனைவரிடமும் அன்பாகவே பழகுவான். தியாகி. முக்குணங்களையும் கடந்தவன் என்று பெயர் பெறுவான்.

என்னை ஆஸ்ரயித்தவன், என்னை பணிந்து என்னிடம் பக்தியுடன் சேவை செய்பவன், சுலபமாக இந்த நிலையைத் தாண்டி ப்ரும்மமாகவே ஆகிறான்.

அழிவற்றவது, முடிவற்றது என்று சொல்லப்படும்   ப்ரும்மத்தில் நானே இருக்கிறேன்.(அம்ருதம்- முடிவு இல்லாதது ) ப்ரும்மானந்தமான  நிலையில் இருப்பவன் நானே.  அதுவே சாஸ்வதம், தர்மம், சுகம், மற்றும் ஒன்றேயான முழு முதற் பொருள்.

(இதுவரை உபநிஷதான ஸ்ரீ மத் பகவத் கீதையில், ப்ரும்ம சூத்ரத்தின் யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன ம்பாஷனையில், குணத்ரய விபாக யோகம் என்ற பதினான்காம் அத்தியாயம்).

 

 

அத்யாயம்-  15- புருஷோத்தம யோகம்

 

அர்ஜுனன் கேட்காமலே பகவான் மேலும் சில விஷயங்களைச் சொல்கிறார்.   செயலைச் செய்பவன்  அது நல்ல படியாக,  நினைத்தபடி முடிய வேண்டுமே என்றும், சாதகன், தனக்கு ஞானம் கிடைக்க வேண்டுமே என்றும், மற்றும் பல காரிய சித்திகளுக்காக மற்ற  ஜீவராசிகளும், மோக்ஷம் வேண்டும் என்று சிலரும் என்னைப் பணிகிறார்கள் என்று முன் சொன்ன ஒரு விஷயத்தை விரிவாக விவரிக்கிறார்.

ஸ்ரீ பகவான் சம்சாரத்தை ஒரு மரமாக உருவகித்து விளக்குகிறார்.

ஊர்த்வமூலமத: சாகம் அஸ்வத்தம் ப்ராஹுர் அவ்யயம் | சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி யஸ்தம் வேத ஸ வேதவித்||

ऊर्ध्वमूलमध:शाखमश्वत्थं प्राहुरव्ययम् |छ्न्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित् ||

பெரிய அரச மரம் தலைகீழாக இருப்பது போல கற்பனை பண்ணிக் கொள். வேர்கள் மேலே, இலை, கிளைகள் கீழ் நோக்கி பரவியிருப்பது போல ஒரு தோற்றம்.  அது தான் சம்சாரம்.

மஹத் – அழிவற்ற பேருண்மை – ப்ரும்மம் தானாக  வெளிப் படையாகத் தெரியாது –  ‘கூடஸ்த’  மறைந்திருப்பது எனப்படுவது.   எனவே,   மஹா மாயையாக இருந்து உலகை நடத்திச் செல்கிறது.

(மஹா மாயா என்பது தேவியை குறிக்கும்.

பலாதாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி – தேவி மாஹாத்ம்யம்)

தன்மாத்ரைகள் என்று புலன்கள் மூலம் அறிவது – செவி அறிவது  சப்தம், நுகருவது மணம் , கண் காண்பது -ஒளி , வாய்  நாக்கின் மூலம் அறிவது ருசி என்பன

அஹங்காரம்- ego-  இவைகள் கிளைகள்.

இலைகள் அதன் சந்தஸ் –  இலைகள் சூழ்ந்து இருந்து மரத்தை காப்பது போல கவிதை அமைய வேண்டிய விதிகள் பற்றிய இலக்கணம் – இதன் வேலை எழுதப்பட்ட கவிதையை காப்பது.  உயிரைக் காக்கும் மூச்சு போல வேத காலம் முதல் இன்று  வரை காவ்யங்களுக்கு மூச்சாக இருப்பது.

(‘சத் என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தையின் பொருள் மறைப்பது அல்லது போர்த்துவது.  ஒரு பொருளின் மேல் பரவி அதை பாதுகாப்பது. அதிலிருந்து வந்த சந்தஸ்- காவ்ய அலங்காரத்தின் ஒரு பகுதி. பாட்டுக்குத்  தாளம் போல கட்டுக்  கோப்பாக இருக்கச் செய்வது.  கேள்வியே கல்வியாக இருந்த நாட்களில் இதன் முக்கியத்வம் மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும்.  தாளம் ஒரு பாடலின் அமைப்பை உறுதியாக காப்பதால் தான் பல இடங்களில் கற்றுத் தேர்ந்தவர்களும்  ஒருங்கிணைந்து சேர்ந்து பாட முடிகிறது. அதே போல வேத பாடங்களை எங்கு யாரிடம் கற்றாலும்  ஒரு எழுத்தின் அரை மாத்திரை வரை சந்தஸ் வரையறுக்கிறது.  வேதம் மாறாமல், காலம் கடந்தும் நிற்பதற்கு காரணம் சந்தஸ் என்ற வரை முறையே.  இதை மரத்தின் இலைகளாக உருவகிக்கிறார். )

சந்தஸ் அறிந்தவன் தான்  வேத பாடத்தை தவறின்றி கற்பிக்க முடியும்.  அவன் தான் வேதவித். – வேதம் அறிந்தவன்.

  1. கீழிருந்து மேலாக அதன் கிளைகள் படருகின்றன. விஷய ப்ரவாலம் – நப்பாசைகளே அதன் துளிர்கள், முக்குணங்கள் என அவை பெருகி அடர்த்தியாக கிளைகளில் தெரிகின்றன.

மனிதனிடமிருந்து, அசையா பொருட்கள் வரை  ஸ்ருஷ்டி செய்யும் ப்ரும்மாவின் இருப்பிடம் அடிவேர்.  அதையடுத்து புத்தி,  ஜீவராசிகளின் சக்திக்கு ஏற்ப பெறும் அறிவும்,  அறிவின் பயனாக செயல்களும் அவை தான் பரவிக் கிடக்கும் கிளைகள்.  இந்த செயலை நடத்திச் செல்லும் மூன்று குணங்கள்,  சத்வ ரஜஸ், தமஸ் , இவையே ஜீவராசிகளின் பௌதிகமான உடலை அல்லது இருப்பை நிர்வஹிக்கின்றன. கிளைகளை  போஷிப்பதும் தடிக்கச் செய்வதும் இதன் வேலையே.  இதை உபாதானம் என்கின்றனர்.  கிளைகளில் தோன்றும் துளிர்கள் தன்மாத்ரைகள் எனப்படும்  ஸப்தம், (காது) ஒலி (வாய்), ஒளி,(கண்) ருசி,(நாக்கு) உணர்ச்சி என்று 5 வகைப்படும்.  இவை கண் முதலான புலன்கள்  மூலம் செயல் படுபவன.

அடி வேரை பேருண்மை அல்லது மஹா மாயை என்று சொன்னவர், அதன் அடுத்த நிலை வேர்க் கூட்டங்களை  தர்ம, அதர்மம், வாசனை என்பவைகளுக்கு காரணமாக குறிப்பிடுகிறார்.  வாசனை உணர்ச்சிகளில் விருப்பு வெறுப்புகளுக்கு காரணம்.  ஒருவரிடம் அன்புடன் இருப்பதோ, மற்றவரை தவிர்க்க முயலுவதோ, தூஷிப்பதோ,  இதன் வேலை.  இந்த வேர்க் கூட்டம் இருப்பது தெய்வீகமான – தேவர்கள் முதலானவர்களுக்கு அடுத்த நிலையாக உள்ளவை. உலகில் தர்ம அதர்ம செயல்களை ஊக்குவிப்பவை, அனுகுணமாக இதற்கு உதவுவது வாசனை – இது செயல்களினால் பெறும் பலனால் உருவாவது.

இந்த மரம் ஸ்திரமாக இருக்கும் வரை, மனித குலம் தன் செயல்களிலும், அதன் பலன்களிலுமே நாட்டம் கொண்டு இருக்கும்.

4-5) அடுத்த ஸ்லோகத்தில் இந்த மரத்தை வெட்டு என்கிறார். எதற்காக?

இதன் ரூபம் என்ன? ஆதியோ, அந்தமோ தெரியவில்லை. வழியை மறித்து, வேரூன்றி நிற்கும் இந்த அஸ்வத்த மரத்தை, த்ருடமான ஒரு சஸ்திரம் கொண்டு வெட்டி,  அதன் பின் உன் வழியை கண்டறிந்து முன் செல்.  எந்த நிலையை அடைந்த பின் எவரும் திரும்பி வந்ததில்லையோ அந்த ப்ரும்ம பதம் தான் இலக்கு.

அந்த ஆதி புருஷனையே சரணடைகிறோம்.  எதிலிருந்து உலகனைத்தும் சரா சரங்களும் உண்டானதோ, அந்த புராண புருஷனை வணங்குவோம். இங்கிருந்து தான் புராதனமான ப்ரக்ருதி என்ற ஸ்ருஷ்டி ஆரம்பித்தது.

சங்கர பாஷ்யம்:

என்ன ஏதென்று தெரியாது, எங்கிருந்து தோன்றியது தெரியாது, எப்படிப்பட்டது, தெரியாது –   இப்படி ஒரு பொருள் அதை எப்படி விளக்கிச் சொல்வது. கண்டவர்கள் உண்டா என்றால், இல்லை.  தேடித் தேடிச் சென்றவர்கள் கண்டிருந்தாலும் வந்து சொல்லவில்லை.  அஸ்வத்தமாக தெரிவது மாயையே. அதை வேரோடு, விதைகளோடு அழித்தால் தான் சாதகன் செல்ல வேண்டிய பாதை தெரியும்.

முக்குணங்களை கடந்து, மாயையில் சிக்காமல் சாதகன் செல்லும் வழியின்  இடர்களைக் களைந்து செல்ல வேண்டும்.   இடர்கள், சம்சாரத்தில் சாதாரணமானது அல்ல

என்று விளக்கவே ப்ரும்மாண்டமான அஸ்வத்தம் என்ற மரமாக மாயை உருவகப் படுத்தப் பட்டுள்ளது.

6-7) எந்த விதமான மனிதர்கள் இந்த மாயையை கடக்கிறார்கள்.  சன்யாசிகள். தன்னுடைய மனதை அடக்கி, மோகத்தில் இருந்து விடுபட்டு, சங்கத்தை தவிர்த்து, அத்யாத்ம ஞானம் அடைய வேண்டும் என்று தவம் இருப்பவர்கள்.  இவர்கள் காமத்தை ஜெயித்தவர்கள். அக் ஞானம் துளிக் கூட இல்லாமல்  அவ்யயமான- அழியாத பரம பதம்- பகவானை அடைகிறார்கள்.

முன் அத்யாயங்களில் விவரமாக சொல்லப்பட்டவையே, இந்த ஒரு ஸ்லோகத்தில் சொல்கிறார்.  அப்படி பார்த்தால், கீதை உபதேசம்  சாதாரண மனிதர்களுக்கு அல்ல, சாதகனுக்கே என்று  தோன்றுவது இயல்பு.  உலகை துறந்தவனே  தன்னை அறியமுடியும்.  ஆனால் பரப்ரும்மம் உலகில் செயல் படுவது எப்படி என்பதை , தானே அந்த ப்ரப்ரும்மம் என்பதால் தன்மையில் சொல்கிறார். (first person).   அடுத்து வரும்  ஸ்லோகங்களில். பர ப்ரும்மத்தை, பரப்ரும்மமான தன்னை வர்ணிக்கிறார்.

சூரியன் ஒளியோ, சந்திரனின்  பிரகாசமோ,  அக்னியின் ஜ்வாலையோ அதற்கு ஈடு இல்லை.   தானே பிரகாசமானது.   அந்த ஜோதி ஸ்வரூபமே தான்  நான். இந்த அறிவைத் தேடிச் சென்று கண்டவன்,  திரும்புவதில்லை. அதுவே நான்.

உலகில் என் அம்சமாகவே உயிரினங்கள், ஸ்ருஷ்டியின் சகல அசையும் அசையா பொருட்கள் உள்ளன.  மனதைச் சேர்த்து-ஆறு- இந்திரியங்கள் இயங்குவதால் இயற்கையாக இருந்து உயிரினங்களை ஆட்டுவிக்கிறது.

ச.பா:  சென்றவன் திரும்புவது தான் நியதி.   திரும்ப மாட்டான் என்பது பொருத்தமில்லையே என்று ஒரு வாதம். அதற்கு விளக்கமாக –

குளத்து நீரில் சூரியனின் ஒளி விழுந்து மற்றொரு சூரியன் போலவே காண்கிறது.  அதே போல காலி குடத்துக்குள் உள்ள வெட்டவெளி, ஆகாயத்தால் நிரம்பி இருக்கிறது. நீர் வற்றினால், இந்த பிம்பமும் மறையும். அதே போல மண் குடம் உடைந்தால் வெட்டவெளியும் இல்லை. எங்கே போய் விட்டன.  இந்த விஷயமும் பல விதமாக ஆராயப் பட்டுள்ளன.  முடிவில்லாத விவாதங்கள்.

தானும் சரீரம் எடுத்து அவதரிப்பதாகச் சொன்னாரே, அவதார காலம் முடிந்து என்ன செய்வார், எங்கு போய் சேர்வார் என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார்.

வாயு மணத்தை எடுத்துச் செல்வது போல மனதோடு ஆறு புலன்கள், என்றும், இயற்கையின் கையில் இருந்து ஆட்டி வைக்கப் படுகிறது என்றும் சொன்ன அனைத்தும் அவதார முடிவில்  அவருடைய பரப்ரும்ம ஸ்வரூபத்தில் கரைந்து விடும்.

இந்திரியங்கள் என்று எதைச் சொல்வோம். செவி, கண்,ஸ்பர்ஸனம்(தோல்) நாக்கு, நாசி, இவைகளுடன் மனதும் சேர்ந்து விஷயங்களை அனுபவிக்கிறது.

அவதாரத்தையோ, இப்படி தங்களுடன் தானுமாக இருந்து உலக சுக, துக்கங்களை அனுவித்தாரே என்றோ, அவதார கார்யம் முடிந்தவுடன் திரும்பிச் சென்றதையோ, அறிவில்லாதவர்கள் உணர மாட்டார்கள்.  ஞானம் என்ற கண் உள்ளவர்கள் மட்டுமே அறிவார்கள்.

ச.பா: ஓரளவு வருத்தத்துடனே இப்படி சொல்வதாக பாஷ்யக்காரர் சொல்கிறார். அதர்மத்தை அழிக்கவும், தர்மம் தழைக்கவும் என்று தான் இறங்கி வந்த போதும், தங்கள் சுய இன்பத்திலேயே மூழ்கி அறியாமையிலேயே கிடக்கிறார்கள், அறிவற்ற ஜனங்கள்.

யோகிகள், முனைந்து ஆத்ம ஞானம் பெறவே முயற்சிகள் செய்பவர்கள் தன்னுள்ளேயே கண்டு கொள்வார்கள். அவர்களுக்கு புரியும். மற்றவர்கள் சொல்லி, இதோ பரமாத்மாவே அவதாரம் செய்திருக்கிறாரே, போய் வணங்கு என்று சொன்னாலும் அவர்கள் கண்களுக்கு பரமாத்மா தெரியாது.  தன்னைப் போலவே ஒரு பிறவி என்று நினைப்பார்கள்.

சூரியனிடம் உள்ள தேஜஸ், உலகை ஒளி மயமாக ஆக்குகிறதே, சந்திரனிடம் உள்ள குளுமை இதமாக இருக்கிறதே, அக்னியிடம் உள்ள தேஜஸ் உதவியாக இருக்கிறதே, இவையனைத்தும் என் தேஜஸே.

பூமியில் நான் பரவி இருந்து என் ஓஜஸ் என்ற சக்தியால் அதிலுள்ள ஜீவ ராசிகள், அசையாத மரம், மலைகள் முதலியவற்றுடன் தாங்குகிறேன்.  ரஸாத்மகன், உள்ளூற ரஸமாக உள்ள சந்திரனாக இருந்து பூமியிலிருந்து தாவரங்களை வெளி வரச் செய்து( விதை முளைக்கச் செய்து) வளர்க்கிறேன்.

பிராணிகளின் உடலில் வைஸ்வானரன் என்ற அக்னியாக இருக்கிறேன்.   ப்ராணன், (உட்கொள்ளும் மூச்சு), அபானன்  (வெளியேற்றும் வாயு) என்ற ஆறு வாயுக்கள் (ப்ராண, அபான, வ்யான, உதான, சமான,ப்ரும்ம) என்பவைகளுடன் சேர்ந்து அவை உண்ணும் உணவை செரித்து உடலுக்கு பலம் சேர்க்கச் செய்கிறேன்.  உண்ணும் உணவு நான்கு வகைப் படும் அவையாவன: பற்களால் கடித்தல், நாக்கால் நக்கி உண்ணுதல், மென்று உண்ணுதல், குடித்தல் – நாம் உண்ணும் உணவு வகைகள்  அனைத்தும் இந்த நான்கில் அடங்கி விடும்.

உயிரினங்களின் ஹ்ருதயத்தில் நான் உறைகிறேன். என்னிடமிருந்தே ஸ்ம்ருதி என்ற நினைவாற்றலும், ஞானமும், மறத்தலும் தோன்றுகின்றன. வேதங்கள் மூலம் அறிய வேண்டியவன் நானே. வேதாந்தமும் நானே. வேதம் அறிந்தவனும் நானே.

உலகில் இரண்டு பொருட்கள் – ஒன்று அழியும். மற்றது அழியாமல் இருக்கும். க்ஷரம் என்ற ஒன்றும் மற்றது அக்ஷரம். உலகில் உள்ள உயிருள்ள பிராணிகள்- ஜீவன்கள், அசையா பொருட்கள் க்ஷரம் என்ற ஒரு நாள் முடிவை அடைந்தே தீரும். அக்ஷரம் என்பது கூடஸ்தோ என்ற மறை பொருள், ஆத்மா.

இது தவிர உத்தமமான மற்றொன்று பரமாத்மா என்று சொல்லப் படுபவர். அவர் தான் மூவுலகையும் சுற்றி சூழ்ந்து, தான் என்றும் இருந்து காப்பாற்றுகிறார்.  பிபர்தி- தாங்குகிறார்.  அவர் தான் ஈஸ்வரன்- தலைவன்.  அது நானே.

நான் க்ஷரம் என்ற அழியும் வஸ்து இல்லை, அக்ஷரம் என்ற அழியா பெரும் பொருள் என்ற புருஷனையும்  விட மேம்பட்டவன் என்பதால் புருஷோத்தமன் என்று என்னை அழைக்கிறார்கள்.  உலகியலிலும், வேதங்களிலும் நான் புருஷோத்தமனாகவே வர்ணிக்கப் படுகிறேன்.

இந்த விதமாக என்னை புருஷோத்தமனாக அறிபவன், பலவிதமாகவும் என்னை பஜிப்பான்.  மனப் பூர்வமாக துதிப்பான்.

பாரதா!  இது ஒரு ரகசியமான   (இங்கு ரகஸியம்- அரிதான என்ற பொருளில்) சாஸ்திரம், தத்வம்.  இதைத் தெரிந்து கொண்ட நீ புத்திமானாக  ஆவாய்.  என்னருள் என்ற பெரும் பேறு பெற்றவனாக விளங்குவாய்.

(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையில், ப்ரும்ம வித்தையில், யோக சாஸ்திரம் என்பதில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் புருஷோத்தம யோகம் என்ற பதினைந்தாவது அத்யாயம்)

அத்யாயம்-16 தைவாசுர சம்பத் விபாக யோகம்

இந்த அத்யாயத்தில் ஒரு பக்கம், தெய்வீகமான குணங்களையுடையவர்களும். எதிரிடையான அசுர குணங்கள் உடையவர்கள் என்று சிலரையும் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ பகவான் சொல்கிறார்:

முதல்  குணம் பயம் இன்றி இருத்தல்.  தூய்மயான மனம். ஞானம், யோகம், தானம், பொறுமை, யாக காரியங்களில் ஈடுபடுவது, ஸ்வாத்யாயம் என்ற கற்றதை மனதில் நிலை நிறுத்தி திரும்பத் திரும்ப உருவேற்றிக் கொள்ளல், தவம், நேர்மை

  1. அஹிம்சை, சத்யம், கோபம் கொள்ளாமை, தியாக சிந்தை, அமைதி, கஞ்சத் தனம் இன்றி தாராள மனதுடன் இருத்தல், மற்ற ஜீவன்களிடம் தயை, லோபம்- நப்பாசை இன்றி இருத்தல், ம்ருதுவாக பேசுதல், செய்கையில் நிதானம், வெட்கம்- தவறான செய்கையை செய்ய உள்ளம் கூசுதல், அனாவசிய சபலம் இல்லாமல் இருத்தல்.
  2. சக்தி. பொறுமை, திடமான கொள்கையில் பிடிப்பு, ஒழுக்கம்,- மனதளவிலும், உடல், சுற்றுப்புறங்களிலும் தூய்மையை கடை பிடித்தல்,  துரோகம் செய்யாமை, தான் என்ற கர்வமின்மை, இவையெல்லாம் நற்குடி பிறந்தவர்கள் குணங்கள், இவை தெய்வீகமானவை.

எதிரிடையான சில குணங்கள் உள்ளவர்களும் உள்ளனர். அவர்கள் அசுரர் -அரக்கர் எனப்படுவர்.

தன்னை பற்றி தானே உயர்வாக பேசுதல்,

அபிமானம் , க்ரோதம், கடுமையாக பேசுதல், அக்ஞானம், இவை   அசுர குணங்கள்.

தெய்வீக குணங்கள் விடுதலை அளிக்கும். மற்றது கட்டுப்படுத்தும். கவலைப் படாதே. நீ  நற்குடி பிறந்தவனே.

இரு விதமான ஸ்ருஷ்டி – ஒன்று தெய்வம், மற்றது ஆசுரம்.  தெய்வீகமான குணங்கள் பற்றி விஸ்தாரமாக சொல்லி விட்டேன். இப்பொழுது ஆசுரம் எனும் அரக்க குணங்கள் பற்றிச் சொல்கிறேன் கேள்.

அரக்க குணம் கொண்டவர்கள் எதையும் அறிய மாட்டார்கள்.  செயல் என்பதன் பொருளோ, சுத்தம், ஒழுங்கு இவையோ, ஆசாரம் மரபு வழிகள் என்பதோ, சத்யமோ இவர்களுக்கு தெரியாது.

ஈஸ்வரன் என்ற ஒன்று இல்லை என்பர். இயற்கையில் தோன்றும் – பரஸ்பர சம்போகத்தில் பிறவிகள் தோன்றுகின்றன. வேறு என்ன? என்பர். இப்படி ஒரு எதிர் மறையான நம்பிக்கை கொண்டவர்கள் அல்ப புத்தி, உலகை அழிக்கவே பிறந்தவர்கள்.  உக்ரமான செயலுடையவர்கள்.

தம்பமும், மதமும், தவறான கொள்கைகளுமாக ஒழுக்கமும் இன்றி தான் தோன்றியாக இருப்பர்.

காமமே எல்லாம் என்று நினைப்பர். ஆசையும், பாசமும் அலைக்கழிக்க, தவறான வழியில் பணம் சம்பாதிப்பதே குறி என்று இருப்பர்.

இதை சம்பாதித்து விட்டேன்,  என் தேவை இன்னும் உள்ளன- இன்னும் தனம், பொருள் வேண்டும் என்றும்,

இந்த சத்ருவை அழித்து விட்டேன், மற்ற சத்ருக்களையும் அழிப்பேன், நான் தான் ஈஸ்வரன், சித்தியடைந்த பலவான்,  நானே சுகி- சுகமாக இருப்பவன்.

நிறைந்த செல்வம் உடையவன் நானே.  என்னைச் சுற்றி என் நண்பர்கள், என்னைப் போல வேறு யார் இருக்க முடியும்? யாகம் செய்வேன், தானம் செய்வேன், சந்தோஷமாக அனுபவிப்பேன், என்பர். பலவிதமான கொள்கை குழப்பங்கள், மோகம் இவர்களை சூழ்ந்து இருக்கும். காமமே உயர்வு என்று இருந்து கடைசியில் நரகத்தில் வீழ்வர்.

தன் விருப்பப்படி,  தனம், கௌரவம் காரணமாக யாகங்கள் எந்த விதியையும் அனுசரிக்காமல் செய்வர். தம்பம்- வெற்று தற்பெருமை, அகங்காரம், பலம்- அதனால் வரும் தர் ப்பம்- கொழுப்பு, காமம் – அதனால் தொடரும் க்ரோதம் முதலான கெட்ட குணங்கள், என்னை தூஷிப்பதே சந்தோஷம் என்று இருப்பர்.

இவர்களை என்ன செய்வது?  மட்டமான  மனிதர்கள். திரும்பத் திரும்ப அசுர குடியிலேயே பிறக்கச் செய்வேன். என்னையடையாமலேயே பிறவி தோறும் இதே போல வாழ்ந்து மறைவர்.

காமம், க்ரோதம், லோபம் இவை தான் நரகத்தின் வாசல். இந்த மூன்றையும் விட்டவர்களே, தன் நன்மைக்கு தேவையானதை செய்வார்கள், பின் நல்ல கதியை அடைவார்கள்.

சாஸ்திரம் சொல்வதை ஏற்காமல் தன் விருப்பப்படி செயல் படுபவர்கள், எந்த சித்தியையும், சுகமோ, பரகதியோ கிடைக்கப் பெறுவதில்லை.

அதனால் சாஸ்திரம் தான் ப்ரமாணம். எதைச் செய்யலாம், செய்யக் கூடாது என்று சாஸ்திரம் சொல்வதை அனுசரித்து நட.

(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையில், ப்ரும்மவித்தையின், யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் தைவாசுர சம்பத் விபாக யோகம் என்ற பதினாறாவது அத்யாயம்)

அத்யாயம் -17 ஸ்ரத்தா த்ரய விபாகம்

 

இந்த அத்யாயத்தில் அர்ஜுனன்   சாஸ்திரங்களை அனுசரிப்பது பற்றிய தனது சந்தேகத்தைச் சொல்கிறான்.   நம்பிக்கையுடன், ஸ்ரத்தையாக  யாகங்களை,  தெய்வ காரியங்களை , தானம் முதலியவற்றை செய்தாலும் சாஸ்திரங்களை அனுசரிக்கவில்லையெனில் அச்செயலுக்கு பலன் உண்டா?  இல்லையெனில் ஏன்?   அந்த செயல்கள் சத்வமா, ரஜஸா, தமஸா என்ற மூன்றில் எதில் சேர்த்தி?

ச.பா: ஏதோ நம்மை மீறிய சக்தி இருக்கிறது என்ற எண்ணத்துடன், பெரியவர்கள், செய்வதை பார்த்து தானும் செய்ய முனைந்தால்,  அதற்கு தேவையான, வேத சாஸ்திரங்கள் அறியாதவர்கள்,  நம்பிக்கை மட்டுமே துனையாக பகவானை வழிபடுகிறார்கள். அவர்களை அறிஞர்களுடன் சேர்க்காவிட்டால் எந்த விதமான குணம் உடையவர்கள் என்று சொல்ல வேண்டும். முன்பு சொன்னது போல அந்தணர்கள் சத்வ குணம், க்ஷத்ரியர்கள் ராஜஸம் என்ற வரையறையில் இவர்களுடைய இடம் என்ன ?

பகவான் சொல்கிறார். ஸ்ரத்தையே இந்த மூன்று குணங்களில் எது என்று  காட்டி விடும். சத்வ குணம் மேலோங்கியிருந்தால் தேவர்களை வழிபடுவார்கள்.  ராஜஸமானால் யக்ஷ, ராக்ஷஸர்களை, ப்ரேத பூத கணங்களை வழிபடுபவர்கள் தாமஸம் எனலாம்.

சாஸ்திர விதியை மீறும் பொழுது அஹங்காரம்,  தம்பம் வரும். காமமும், ஆசையும் அதிகரிக்கும். தன் சரீரத்தை வறுத்தும் பொழுது நான் அந்த சரீரத்துள் உறைந்துள்ளதை மறந்தவர்களாக அசுரர்கள் போல செயல் படுவார்கள்.

முக்குணங்கள் மற்ற விதங்களிலும் வெளிப்படும். ஒருவரது ஆகாரத்தில், வழிபாடு, தவம், தானம் என்பவைகளும் மூவகைப் படும்.

வரிசையாகப் பார்ப்போம். ஆகாரம்.  ஆயுளை வளர்க்கக் கூடியது. ஆரோக்யம் தரும், உணவே சுகமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். ரஸம் நிறைந்து, திடமாகவோ, திரவமாகவோ, மனதிற்கு பிடித்த உணவு சாத்விகம்.

அதிக புளிப்பு, உப்பு, அதிகமான காரம் மற்றும் சூடு, கடக் கடக் என்று கடிக்க வேண்டியிருக்கும். உண்டபின் உடலே எரிச்சல் அடையும். இந்த விதமான ஆகாரம் துக்கத்தையும், சோகத்தையுமே தரும்.

சமைத்து யாமம் கடந்து, சரியாக வேகாமல், அதன் ருசியே மாறி, ஊசிப் போன உணவு, அதையும் ஒருவர் சாப்பிட்டு வைத்த மீதி, சுத்தமாக இல்லாத உணவு தாமஸ குணம் உடையவர்களுக்கு பிரியமாக இருக்கும்.

அடுத்து யாகம், பூஜை முதலியவை: பலனில் பற்றுதல் இல்லாமல், சாஸ்திர விதிப்படி செய்வது சத்வம்.  பூஜையோ, யாகமோ செய்ய வேண்டியது என்ற எண்ணம் மட்டுமே காரணமாக இருக்கும்.

ஏதோ ஒரு காரிய சித்திக்காக, தம்பம் காரணமாக ஆடம்பரமாக செய்வது ராஜஸம்,.

சாஸ்திரமும் இல்லை,  அன்ன தானம் போன்றவைகளும் இல்லை, தக்ஷிணை தருவதிலும் குறைவு, அத்துடன் ஸ்ரத்தையும் இன்றி ஏனோ தானோ என்று செய்வது தாமஸம்.

அடுத்து தவம். தேவ, ப்ராம்மணர்கள் அல்லது அறிவிற் சிறந்த பெரியவர்கள், இவர்களை மரியாதையுடன் வணங்குதல். தன் வரையில் சுத்தம் ஒழுக்கம் இவற்றை கடை பிடித்தல். ப்ரும்மசர்யம். அஹிம்ஸா. இவை சரீரம் சம்பந்தப் பட்ட தவம்     செய்யும் முறை.

அடுத்து வருவது ஒரு நல்ல ஸ்லோகம்.  பேசுவது பற்றி நம் பெரியவர்கள் நிறைய சொல்லியிருக்கிறார்கள். சொல் அற – ரொம்ப பேசாதே என்றார்  அருணகிரினாதர். பார்த்து பேசு. நா காக்க என்றார் வள்ளுவர்.  கீதாசாரியனின் உபதேசம் – கேட்பவனை உத்வேகம் கொள்ளும்படி பேசாதே. கேட்பவன் உன் சொல்லைக் கேட்டு வெகுண்டு எழும் படி பேசாதே. சத்யமான சொல், பிரியமானது, ஹிதமானது தான் பேசுவதற்கு ஏற்றது. தன் கல்வியை முறைப் படி கற்று தேறுதல், அதை மனனம் என்று திரும்பத் திரும்ப நினைத்து உருவேற்றிக் கொள்ளுதல் இவை வாக்கினால் செய்யும் தவம்.

அனுத்வேககரம் வாக்யம் சத்யம் ப்ரியஹிதம் ச யத் | ஸ்வாத்யப்யஸனம் சைவ வாங்மயம் தப உச்யதே ||

अनुद्वेग करम् वाक्यम् सत्यम् प्रियहितम् स यत् | स्वाध्याभ्यसनम् चैव वान्ग्मयम् तप उच्यते.||

ப்ரஸன்னமான மனம், அமைதியான தன்மை, மௌனம், தன் கட்டுப்பாடு, தூய்மையான எண்ணங்கள் இவை மனதால் செய்யும் தவம்.

ஸ்ரத்தையுடன் செய்வது சாத்விகம். இதில் பலனைப் பற்றி எண்ணம் வராது.  பகட்டுக்காக செய்வது, ஆடம்பரம் அதிகமாக செய்வது ராஜஸம். அறிவின்மையால் உடலை வருத்தி, மற்றவர்களுக்கு காட்டிக் கொள்வதற்காக மட்டுமே செய்யப்படுவது தாமஸமானது.

கொடுப்பதை மனப் பூர்வமாக கொடுப்பது சாத்விகமான தானம். பாத்திரம் அறிந்து, தேவையான காலத்தில் கொடுப்பது உத்தமம்.

ப்ரதி பலனை எதிர் பார்த்து அல்லது அதனால் வேறு எதோ ஆதாயம் என்று எண்னி, அதையும் வேண்டா வெறுப்பாக தருவது மத்யமம்.

காலமோ, தேவையோ கருத்தில் கொள்ளாமல் யாரோ ஒருவருக்கு தருவது அதமம்.

ஓம் தத் ஸத் என்பது ப்ரும்ம வாக்யம். ஓம் என்று சொல்லி  யாக, தான, தவம் போன்றவற்றைச் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம் ப்ரும்மவாதிகளுக்கு விதித்தது.

தத்  என்று சொல்லாமல் மோக்ஷம் விரும்புவோர் இவற்றை செய்வார்கள்.

நல்லது என்ற பாவம் இந்த சத் என்ற உச்சரிப்பால் பெறும் விளக்கம்.  முக்கியமான செயல்களை சத் – நல்ல என்போம்.

யக்ஞம், தவம், தானம் இவற்றின் செயலே – சத் – எனப்படும். அதைச் சார்ந்த  செயல்களும் சத் ஆகும்.

ஸ்ரத்தை இன்றி செய்யப்படும் பொழுது இவை அசத் என்று குறிக்கப் படும்.

ச.பா: இந்த அத்யாயத்தில் என்ன உபதேசம் என்பதை பின் வருமாறு சுருக்கமாக புரிந்து கொள்ளலாம்.   ஆர்வமுள்ள சிலர், சாஸ்திரங்களை அறியாதவர்கள், ஆனாலும் முழு நம்பிக்கையோடு,  சிரத்தையுடன் அவர்கள் மனதுக்கு சரி என்று தோன்றியபடி வழி படுகிறார்கள், சில நற்செயல்களைச் செய்கிறார்கள்.  அன்ன தானமோ, மற்ற உதவியோ செய்கிறார்கள்.  செய்து வரும் பொழுதே அனுபவத்தால் எது நல்லது என்று அறிந்து கொள்வார்கள்.  பழக்கம் காரணமாக  சத்வமோ,ராஜஸமோ, தாமஸமோ உணவு, தானம் கொடுக்கும் பொருட்கள், வழிபாட்டு முறைகள் மாறலாம்.  அதில் தவறுதல் ஏற்படாமல் இருக்க ஓம் தத் ஸத் என்ற சொற்களை சொல்லிச் செய்தால், பிராயச் சித்தம் போல அந்த சொற்களின் சக்தியே காப்பாற்றும்.  சாஸ்திரங்களை தெரிந்து கொள்வோமே என்று முனைவர்.  ப்ரும்ம ஞானம் பற்றி அறிவர். அதன் மூலம் நேரடியாக சத்யம்- உண்மை என்ன என்பது உணர்ந்து முடிவில் விடுதலை அடைவார்கள்.

(இதுவரை ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தையின், யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில், ஸ்ரத்தா த்ரய விபாக யோகம் என்ற பதினேஷாவது அத்யாயம்)

 

அத்யாயம் -18  மோக்ஷ சன்யாச யோகம்

 

அர்ஜுனனின் சந்தேகம்- சன்யாசம் என்பதும் தியாகம் என்பதும் ஒன்று தானா? என்ன வித்தியாசம். இது வரை பல முறை இந்த வார்த்தைகளை கேட்டிருக்கிறோம்.

ஸ்ரீ பகவான் சொல்கிறார்-    பலன் தரும் செயல்கள், யாகம் போன்றவைகளை விடுவது, செய்யும் செயல்களில் பலனை எதிர்பாராமல் செய்வது  இரண்டையுமே சன்யாசம் அல்லது தியாகம் என்ற பெயரில் சொல்கிறோம். இதைக் கூட விடக் கூடாது என்று ஒரு சாரார் சொல்வதுண்டு.  யாக காரியங்களோ, தானம்,தவம் முதலியவைகளோ  கண்டிப்பாக செய்ய வேண்டிய செயல்களே.  தியாகமும் மூன்று வகைப் படும். இவைகள் கண்டிப்பாக  செய்ய வேண்டிய செயல்களே. மனிதர்களுக்கு இவை புனிதமானவை. அதைச் செய்யும் பொழுது பலனை மட்டும் நினைத்து செய்யாதே,  விளம்பரமாக ஆரவாரமாக செய்யாதே, மனப் பூர்வமாக செய் என்று நான் சொல்கிறேன்.

கடமையை செய்யாமல் விட்டு விட்டு நான் சன்யாசி என்பது அர்த்தமற்றது.  உடல் உழைப்பு, துக்கம் என்பதால் விடுவதும் பலனைத் தராது. கடமை, நமக்கு செய்யும்  பொறுப்பு மட்டுமே என்று நினைத்து செய்ய வேண்டும். அதைத் தான் சாத்விகம் என்கிறோம்.

அறிவுடையவனுக்கு  சந்தேகம் வராது. கடமையில் இது உயர்ந்தது, இது மட்டம் என்ற பேதம் பார்க்க மாட்டான்.   மனிதனாக  பிறந்தவன் ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது இயலாது.  கடமையை செய்யும் பொழுது பலனை நினைக்காமல் இருப்பவனே தியாகி.  சில சமயம் விரும்பாத பலனாக இருக்கலாம், சில சமயம் வேண்டியது கிடைக்கலாம், மற்றும் சில சமயம் இரண்டும் சேர்ந்தும் வரலாம், இதனால் எதிர்பார்த்த பலன் கிடைத்த பொழுது மகிழ்ச்சியும், கிடைக்காத சமயம் துக்கமும் வரும். பலனை தியாகம் செய்தவன் பாதிக்கப் படாமல் இருப்பான்.

வேதாந்தம் என்பது வேதங்களில் சொல்வதை சுருக்கமாக, அல்லது முடிவாக சொல்வது – வேத அந்தம் – என்ற பதம் உப நிஷதுகளை குறிக்கும். இதையே சாங்க்யம் என்பர்.  இதில்  ஐந்து காரணங்கள் சொல்லப்படுகின்றன.  கடமை, செயல் என்பது போன்ற பல விஷயங்களும் வேதங்களை கற்றுத் தேர்ந்த பின் பல சந்தேகங்களும் விடு பட்டு விடுகின்றன.  ப்ரும்ம ஞானம் வந்து விடும். செயல்களின் முடிவு என்பது வேத அந்தம் அல்லது தன்னை அறிதல்.

அதிஷ்டானம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம் |      விவிதாஸ்ச ப்ருதக் சேஷ்டா தைவம் சாத்ர பஞ்ச்சமம் ||

अधिष्टानं तथा कर्ता करणं च पृथक्विदम् | विविधाश्च पृथक्चेष्टा दैवं चात्र पन्चमम् ||

சங்கர பாஷ்யம்:  ஆசனம்,அதாவது இருப்பு,  உடல், ஆசை, வெறுப்பு, மகிழ்ச்சி, வருத்தம், அறிவு போன்ற அனைத்தும் வெளிப்படும் ஆதாரம் (base) .

கர்த்தா- செய்பவன்- அனுபவிப்பவன்,

கரணம்-  கருவி, இங்கு மனிதனின் புலன்கள்.

தனித் தனியான அங்கங்கள்- தனித் தனியான  இதன் அவயவங்கள்

செயல்கள், மூச்சு விடுவதிலிருந்து  பன்னிரண்டு விதமான செயல்களும்.

தைவம்- ஆதியன் மற்றும் இயற்கையின் தெய்வ சக்திகள்- ஆதித்யன் கண் பார்க்க உதவுவது, வாயு மூச்சு விட,  என்பது போல ஒவ்வொரு அவயவமும் செயல் படச் செய்யும் தெய்வ சக்தி.

உடல், வாக்கு, மனம் இவற்றால் மனிதன் செய்வது அனைத்தும் நியாயமாகவோ, விபரீதமாகவோ  ஆக, இந்த ஐந்தும் தான் அதன் காரணம்.

இப்படி இருக்க,  நான் செய்கிறேன் என்று ஒருவன் அபிமானத்தால் சொன்னால், அது பேதமை.  எவனுக்கு இந்த அஹம் -நான் என்ற எண்ணம் விடுபட்டதோ ( அறிவினால் உணர்ந்து கொண்டு விட்டானோ, புத்தி தெளிவாகி விட்டதோ)   அவன் கொலையே செய்தாலும், அவன் செய்வது கொலையல்ல.

இது சம்பந்தமான விவாத, ப்ரதி வாதங்கள் பாஷ்யக்காரர் பலவிதமாக கொடுத்திருக்கிறார்.  எது வித்யா, எது அவித்யா என்ற விஷயங்கள் விவாதிக்கப் பட்டுள்ளன.

அடுத்த ஸ்லோகத்தில், செயல் பட தூண்டுவது எவை என்பது பற்றிச் சொல்கிறார்.  அறிவு, அறியும் பொருள், அறிபவன் என்ற மூன்று இவையே, கரணம், கர்ம, கர்தா என்பதன் அடிப்படை.

ச.பா: அறிவு என்பது பொது.  அறியும் பொருள் என்பதும் பொது.

அறிபவன், அனுபவிப்பவன், பங்கு கொள்பவன்  எதையும் தானாக செய்வதில்லை.  அறிவு அல்லது புத்தியால் செய்விக்கப் படுகிறான். புத்தி தான் இதைச் செய், இதை செய்யாதே என்று ஆணையிடுகிறது. முன் சொன்ன கரணம், கர்த்தா, என்ற ஐந்தும், வாக்கு, மனம், உடல் என்ற மூன்றாலும்., புலன்கள் உள்ளூற ஊடாக செயல்படுவதாலும், ஒரு செயல் நடக்கிறது.

அறிவு, செயல்,செய்பவன் என்ற மூன்றுமே முக்குணங்கள் என்று முன் சொன்ன சத்வ, ரஜஸ், தமஸ் என்ற பாகுபாட்டின் கீழ் வருகின்றன.

ஞானம் அல்லது அறிவு- சாத்விகமானது – அனைத்து ஜீவராசிகளிடமும் ஒரே பாவம்- அழியாத் தன்மை -ஆத்மாவை காண்பவன்.  பலவிதமாக பிரிந்து இருந்தாலும் ஒன்றே, என்ற அறிவே சாத்விகம்.

ஒவ்வொன்றும் தனிதனியான உருவம் உடையன, அவை பலவிதமான அடையாளங்களை, தன்மைகள் உடையன என்று நம்புபவன் ராஜஸன்.

சிறிதளவே அறிவுடைய,  ஒரே செயலில், ஈடுபடுபவன், கொள்கையோ,  காரணமோ இல்லாதவன் தாமஸன்.

அதே போல கர்ம- செயல்- விருப்பு வெறுப்பு இன்றி, பலனையே மட்டும் எண்ணாமல் செய்வது உயர்வு.

எதையோ விரும்பி, அகங்காரம் காரணமாக , மிக சிரமப் பட்டு செய்வது மத்யமம்.

ஹிம்சை, நிரந்தரமில்லாத, இதன்  விளைவு என்ன என்பதையும் யோசிக்காமல்,  மோகம் காரணமாக ஆரம்பித்து செய்வது அதமம்.

அடுத்தது கர்த்தா – செய்பவன். திடமான கொள்கை, உத்ஸாகம், தான் செய்கிறோம் என்ற அகம்பாவம் இல்லாதவன்,  அனாவசிய கூட்டம் போடாமல், விளைவு எதுவானாலும் சரி, செய்வதை சரியாக செய்கிறேன் என்ற நம்பிக்கையோடு செய்வது உத்தமம்.  அப்படிச் செய்பவன் சத்வ குணம் உள்ளவன்.

அதையே  இன்ன பலன் கிடைக்கும் என்ற விருப்பத்துடன், தானம் கொடுப்பதில் குறைவாகவோ, கொடுக்காமலோ, உடல், மனது, சுற்றுப்புற சுத்தமும் இல்லாமல், அதிக மகிழ்ச்சியோ, துக்கமோ வெளிப்படையாக தெரிய செயலைச் செய்பவன் மத்யமன், ராஜஸ குணம் உடையவன்.

பாமரனாக, சரிவர  தெரிந்து கொள்ளாமலும், வேலையில் திறமையும் இல்லாமல், தாமதமாக  செய்பவன் தாமஸ குணம் உடையவன்.

புத்தி, திடமான கொள்கை இவற்றிலும் இந்த முக்குணங்கள் வெளிப் படும்.

எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்ற பாகுபாடு அறிந்தவன் புத்திசாலி.  பந்தம்-கட்டுப்பாடு, மோக்ஷம்- விடுதலை என்பதை அறிந்தவன். அந்த புத்தி சாத்விகம்.

எதையுமே தவறாக புரிந்து கொள்வது ராஜஸம்.

அதர்மத்தையே தர்மம் என்று நினைப்பவன் தாமஸ புத்தியுடையவன்.  கற்றதை விபரீதமாக புரிந்து கொள்வது.

த்ருதி என்ற மனத்திடம் – மனம், ப்ராணன், இந்திரியங்களின் செயல்கள், யோகம், அலை பாயாத மனத் திண்மை இவை சாத்விகமான த்ருதி.

தர்ம காம அர்த்தங்களை அதன்  பொருள் அறிந்து அனுபவிப்பவன், யதேச்சையாக அதன் விளைவால் பெறும் நன்மையையும் எதிர் பார்ப்பது ராஜஸமான த்ருதி.

கனவு, பயம், காரணமின்றி வருத்தம், சஞ்சலமான மனம், அளவுக்கதிகமான உணர்ச்சிகள், கட்டுப் படுத்த முடியாத அளவு- மதம் என்பது இதுவே. இவைகளுடன் உள்ளது தாமஸமான த்ருதி.

அதே போல சுகம் என்பதும் மூன்று விதம். துக்கம் இல்லாதது சுகம்.  அனுபவித்து  அறிந்த சுகத்தை அதே போல பேணி காப்பது உத்தமம். ஆரம்பத்தில் விஷம் போல இருந்தாலும் அதன் முடிவு அம்ருதத்துக்கு இணையாக இருந்தால் அது சாத்விகமான சுகம்.

விஷய சுகம், மற்ற உலகியலான சுகங்கள், ஆரம்பத்தில் அம்ருதம் போல இருந்தாலும் அதன் விளைவு விஷமாக இருந்தால், அது ராஜஸமானது.

ஆரம்பமும் சரி, முடிவும் சரி, எந்த பலனும் தராமல், தூக்கம், சோம்பேறித் தனம் போன்றவை தாமஸமானவை.

பூமியிலும் சரி, தேவ லோகத்திலும் சரி, இயல்பிலேயே இந்த மூன்று வகையான மனப் பாங்குகள் உள்ளன.

ப்ராம்மணன். க்ஷத்திரியன், வைஸ்யன், சூத்ரன் என்ற பாகுபாடு இந்த குணங்களின் அடிப்படையிலேயே அமைக்கப் பட்டது.  அவர்கள், மனப் போக்கிற்கு ஏற்ப செயல்கள் விதிக்கப் பட்டன.

தன்னடக்கம், பொறுமை, சுத்தம், ஒழுக்கம், மன்னிக்கும் தன்மை, தன் வரையில் நேர்மை, நல்ல அறிவு, நிறைவான  செல்வம் இவை இயல்பிலேயே ப்ரும்ம கர்மம் செய்யும் அந்தணனனுக்கு அமையும்.

நல்ல வீரம், தேஜஸ், மனத் திடம், தேவையான இடத்தில் தாக்ஷிண்யம், யுத்தத்தில் புற முதுகிடாமை, தானம், தலைவன் என்ற தகுதி, க்ஷத்ரியனுக்கு இயல்பாக அமையும்.

விவசாயம், பசு கன்று, வீட்டுப் பிராணிகளை வளர்ப்பது, வியாபாரம் – இவை  வைஸ்யனுக்கு இயல்பாக அமையும். இம்மூவருக்கும் பரிசாரகம், உதவி செய்வது (அடியாளாக) சூத்ரனுக்கு இயல்பாக அமையும்.

தங்கள் தங்கள் வேலையில் ஈடுபாட்டுடன் செய்தே மனிதர்கள் சித்தியை அடைய முடியும். எந்த தொழிலும் மட்டமல்ல.  தன் செயலில் ஈடுபட்டவன் எப்படி சித்தி அடைகிறான் என்பதையும் சொல்கிறேன், கேள்.

எதிலிருந்து உலகமும், ஜீவராசிகளும், சரா சரங்களும் தோன்றினவோ,  எந்த சக்தியால் இன்றளவும்  இயங்கி கொண்டிருக்கிறதோ, அந்த ப்ரக்ருதி-இயற்கை அல்லது தெய்வம், அதை தன் செயலால் அர்ச்சித்து – செய்யும் தொழிலை உண்மையாக செய்து- மனிதர்கள் சித்தியை அடைகிறார்கள்.

செய்யும் தொழிலே தெய்வம்.

தனக்கு விதிக்கப்பட்ட தொழிலை செய்வதே நன்மை பயக்கும்.  மற்றவர்களின் தொழில் எளிதாக இருப்பதாக நினைத்தோ,  அதிக லாபம் தரும் என்றோ நினைத்து அதை தானும் அனுசரிப்பது தேவையற்றது.  தனக்கு இயல்பான செயலை செய்பவன் எந்த தீமையையும் எதிர் கொள்ள மாட்டான்.

தன்னுடன் பிறந்த செயல், அது தோஷம் உடையது என்றாலும் கூட விடக் கூடாது. அது உண்மையில் தோஷம் அல்ல. அக்னியை சூழ்ந்திருக்கும் புகை போன்றதே. அருகில் செல்லச் செல்ல புகை மறைந்து அக்னியின் ஒளி தெரியும்.

பற்றின்றி தன் குலத் தொழிலை செய்து வந்தாலே, நாளடைவில் சன்யாச நிலையை அடையலாம். தானாகவே ஜிதாத்மா, தன்னை வென்றவனாக ஆகலாம்.  குலத் தொழிலில் பெறும் அனுபவம் கர்மா எனும் செயலில் இருந்து விடுதலை அளிக்கிறது.

அப்படி சித்தியை அடையும் பொழுது, ப்ரும்மத்வம் அதாவது பரமாத்மாவை உணர்ந்து கொண்டு,  சாதனையால்  ஞானிகள் அடையும் பரம ஞானத்திற்கு சற்றும் குறைந்ததல்ல இந்த நிலை.

தெளிந்த புத்தியுடன்  திடமான மனதுடன் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு, சப்தம் முதலான விஷயங்கள்- மனச் சிதறல்களை துறந்து, ஆசை த்வேஷம் என்பவைகளையும் தள்ளி, குறைந்த அளவே உண்பவனாக, வாக்கு, மனம், உடல் இவைகளால் த்யானம், யோகம் இவைகளை செய்பவனாக, நித்யம் வைராக்யத்துடன்,

அஹங்காரம், பலம், தர்ப்பம்- தற்பெருமை, காமம், க்ரோதம், மற்றவர்களிடமிருந்து, பெறுவது அல்லது அபகரிப்பது, இவைகளை விட்டு, தான் என்ற எண்ணம் இல்லாமல், சாந்தமாக இருப்பவன் ப்ரும்மமாகவே ஆக தகுதியுடையவனாகிறான்.

அப்படி ப்ரும்மமாக ஆனவன் ப்ரஸன்னமாக இருப்பான். வருத்தமோ, தேவைகளோ இல்லாமல் இருப்பான். எல்லா உயிர்களையும் சமமாக பாவிப்பான்.  என்னிடம் விசேஷமான பக்தி தானாக அவனிடம் வந்தமையும்.

என்னிடம் கொண்ட பக்தியால் என்னை முற்றிலுமாக அறிவான்.  அறிய வேண்டிய அனைத்தும் அவனிடம் தானே வந்து சேரும். என்னில் ஐக்யமாவான்.

அதன் பின் அவன் செயல்கள் என் பரமாகவே இருக்கும். என்னருளால் சாஸ்வதமான அழிவற்ற பதத்தை அடைவான்.

எனவே, உன் மனதில் என்னை எண்ணி உன் செயல்கள் அனைத்தையும் என்னிடம் ஒப்படைத்து விடு.  புத்தி யோகத்தால் என்னை அறிந்து கொள்.  என்னையே  சரணடை. எப்பொழுதும் என்  நினைவுடன் இரு.

என்னருளால் எல்லா இடையூறுகளையும் கடந்து வெல்வாய். அப்படி செய்யாமல் உன்  அஹங்காரத்தால் தானே செய்வதாக எண்ணினால், அழிவாய்.

எந்த அஹங்காரத்தால் நான் யுத்தம் செய்ய மாட்டேன் என்று தற்சமயம் சொல்கிறாயோ, அது மாயையே.  உன்னால் செய்யாமல் இருக்க முடியாது. உன் இயல்பு, க்ஷத்ரியனாக நீ செய்ய வேண்டிய கடமை உன்னை கட்டிப் போடும்.

பிறப்பினால் கூட வந்த குலத் தொழில் – அதனால் நீ அதைச் செய்ய  பொறுப்புள்ளவனாக ஆகிறாய். மோகத்தால். செய்ய விரும்பாமல் தட்டிக் கழிக்க நினைத்தாலும் உன் இயல்பு விடாது.  உன் வசம் இல்லாமலே அதைச் செய்வாய்.

அனைத்து உயிரினங்களிலும் ஈஸ்வரன் அதனதன் ஹ்ருதயத்தில் வீற்றிருக்கிறான்.  அனைத்து ஜீவ ராசிகளையும் ஆட்டுவிக்கிறான். ஏதோ யந்திரம் சுழலுவது போல சுழலும் மாயை இது.

அந்த ப்ரும்ம ரூபத்தை, ஈஸ்வரனையே சரணடை. பாரதா! அதன் அருளால் பரம சாந்தியை அடைவாய். சாஸ்வதமான நிலையை பெறுவாய்.

பரம ரகசியம் என்று போற்றப்படும் தத்வங்களை உனக்கு விவரித்துச் சொன்னேன். நீ மனதில் அலசி ஆராய்ந்து உனக்கு எது சரியென்று படுகிறதோ அப்படியே செய்.

என் வார்த்தையை கேள். இது மிகவும் அரிதான என் உபதேசம், திரும்பச் சொல்கிறேன். என் பக்தன், எனக்கு பிரியமானவன் என்பதால் உன் நன்மைக்காக சொல்கிறேன்.

மன்மனா பவ மத் பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு | மாமைவைஷ்யஸி சத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோ(அ)ஸி மே||

मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु | मामैवेष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे ||

என்னையே மனதில் நினை. என் பக்தனாக இரு. என்னை பணிந்து வணங்கி வா.  என்னையே அடைவாய். இது சத்யம்.என் பிரியமானவன் நீ என்பதால் உனக்கு அபயம் அளிக்கிறேன். வாக்கு கொடுக்கிறேன்.

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ | அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: ||

सर्व धर्माऩ् परित्यज्य मामेकं शरणं व्रज | अहं त्वा सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुच: ||

எல்லா தர்மங்களையும் தியாகம் செய்து விட்டு என்னையே சரணடைவாய். நான் உன்னை எல்லா பாபங்களிலிருந்தும்  விடுவிக்கிறேன். வருந்தாதே.

சங்கர பாஷ்யம்:  புனிதமான தன்னையறிதல் என்ற ஞானமே மிக உயர்ந்த பேரானந்தம்.  விடுதலையை அளிக்கும் சாதனம்.  பல விதமான செயல்கள், கடமைகள் கொண்டு செல்லும் இடம் இந்த ப்ரும்ம ஞானமே. அவித்யா என்ற அறியாமையை நீக்கி இந்த அனுபவத்திற்கே கொண்டு செல்லும்.   என் செயல், நான் செய்வேன், இந்த செயலால் இந்த பயனையடைவேன் என்று மனிதன் நினைப்பது இந்த அவித்யாவின் காரணமாகவே.  இந்த அவித்யா காலம் காலமாக உள்ளதே. ஸ்ருஷ்டியின் ஆரம்பத்திலிருந்தே இந்த அவித்யாவும் தோன்றி விட்டது போலும்.  தான் யார் என்று உணர்ந்த பின்னரே இதுவும் மறையும்.  இதோ நான் சுதந்திரமானவன். எந்த செயலும் என்னைக் கட்டுப் படுத்தாது. விளைவு பற்றி நான் வருந்த மாட்டேன் என்று சொல்ல முடிந்தவன் பேரானந்தம் பெற்றவன். அவனுக்கு இனி  உலகியல் துன்பங்கள் இல்லை, மறு பிறவி இல்லை.

இந்த உபதேசத்தை என் பக்தர்களிடம் கொண்டு செல்.  எனக்கு உலகில் பிரியமானவர்கள் என் பக்தர்களே.  எனக்கு பிரியமானதை செய்பவர்கள் என்று ஒரு சிலரே என்னையே சரணம் என்று இருப்பவர்கள்.  அவர்களே என்னருளுக்கு பாத்திரமாகிறார்கள்.

சிரத்தையுடன், அசூயை இல்லாமல் யார்  கேட்கிறார்களோ, அவர்களும் நல்ல கதியை அடைவார்கள்.  புண்ய கர்மாக்களை செய்பவர்கள் பெறும் சுபமான லோகங்களை பெறுவார்கள்.

தனஞ்சயா!  உன் மனதில் தெளிவு வந்ததா? இது வரை நான் சொன்னதை ஒரு மனதோடு கேட்டு  புரிந்து கொண்டாயா?  உன் மன குழப்பம் விலகியதா?

அர்ஜுனன் பதில் சொல்கிறான். அச்யுதா! என் மனக் குழப்பம் விலகியது. மோகம் நீங்கியது. உன்னருளால் சந்தேகம் இன்றி, தீர்மானமாக உன் சொல்படியே நடப்பேன்.

கேட்டுக் கொண்டிருந்த சஞ்சயனுக்கு மகா சந்தோஷம். அரசே, வியாசருடைய அருளால் அத்புதமான இந்த சம்பாஷனையை கண்டும் கேட்டும் தன்யனானேன், சாக்ஷாத் க்ருஷ்ணன் சொல்லக் கேட்கும் பேறு பெற்றேன்.  வாசுதேவனும், பார்த்தனும் பேசிக் கொண்டது எனக்கு மயிர் கூச்செரிய செய்தது. ஆனந்தமாக கேட்டேன்.

அரசே! இந்த சம்பாஷனையை மனதில் திரும்பத் திரும்ப நினைத்து பார்த்து மகிழ்கிறேன்.  அத்புதமான அனுபவம். புண்யம் செய்தவன் நான்.  கேசவ அர்ஜுனன்  இடையில் நடந்த புண்யமான சம்பாஷனையை அறிய கொடுத்து வைத்ததே என்று மகிழ்கிறேன்.  நான் தான் கேட்டேனா என்று அதிசயிக்கிறேன். நினைக்க நினைக்க என் மனம் நிலை கொள்ளாமல் மகிழ்ச்சியில் தத்தளிக்கிறேன்.

யோகேஸ்வரன் க்ருஷ்ணன் இருக்கும் இடம். கையில் வில்லேந்தி பார்த்தன் நிற்கும் இடம்,  மகா பவித்ரமானது. அங்கு லக்ஷ்மி தேவி சாக்ஷாத்தாக வந்து வெற்றியை அளிப்பாள்.  நிறைந்த செல்வமும், பல நன்மைகளையும் அருளுவாள்- எனக்கு சந்தேகமேயில்லை. இது நிச்சயம்.

(இது வரை உபனிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின் ப்ரும்ம வித்தையின் யோக சாஸ்திரத்தில் ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் மோக்ஷ சன்யாச யோகம் என்ற பதினெட்டாவது அத்யாயம்.)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment