jaga flash news

Friday 25 September 2020

இறந்தவர்களுக்கு சாமி கும்பிடும் முறை...

இறந்தவர் தாய் தந்தை என்றால் படம் வைத்து தினமும் ஊதுபத்தி மட்டும் ஏற்றி கும்பிட வேண்டும்... ஆனால் முதலில் சாமி படத்திற்கு விளக்கு ஏற்ற வேண்டும்... பிறகு பித்ரு படம்... தாத்தா படம் வீட்டில் இருந்து தந்தை வழிபட்டிருப்பார்... தாய் தந்தை இருவரும் இறந்த பின்பு, இருவர் படம் வைத்து விட்டு... நமக்கு நிறைய இறந்தவர் படம் இருப்பது போல் தோன்றினால் தாத்தாவின் படத்தை எடுத்து விடுவது நம் விருப்பம்...

தாய் சுமங்கலியாக இறந்தால், கண்டிப்பாக வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில், விளக்கேற்றி கும்பிட வேண்டும்... சாமி படத்திற்கு 6 மணிக்கு ஏற்றி 7 மணிக்கு குளிர வைத்த பின்பு இறந்தவர் படத்திற்கு ஏற்ற வேண்டும்... (ஒரே நேரத்தில் இரு (சாமி- பித்ரு) விளக்கும் ஏற்ற கூடாது)

இறந்தவர் ஆன்மா கிட்டத்தட்ட ஒரு 120-200 வருடத்திற்கு மறுபிறவி எடுக்காது.. ஆனால் தெவிசம் செய்யும் போது நம் தாத்தாவின் அப்பா, பாட்டன் பெயரையும் சொல்வோம்... ஒருவேளை அந்த பாட்டன், 200 வருடத்திற்குள் மறுபிறவி எடுத்து விட்டால்.. கொள்ளுப்பேரன் செய்யும் தர்ப்பணம் பலனை மறுபிறவி எடுத்த அவரிடம், பித்ரு அதிபதி சூரியன் சேர்ப்பார்... நமக்கேன் அந்த கவலை... அதனால் புண்ணியம் அடையப்போவது அந்த கொள்ளுப்பேரன்...

ஆகையால் இறந்தவுடன் பந்தம் அறுந்து விட்டது என்பது மிகப்பெரிய தவறு... திதி பார்த்து தெவிசம் செய்யவில்லை என்றால், அந்த ஆன்மாவின் பசி அடங்காது.... அந்த பாவத்தை இந்த ஆண் அடுத்த பிறவியில் சுமக்க வேண்டும்...

தினமும் ஒருவேளை ஊதுபத்தி ஏற்றி கும்பிடுவது, அமாவாசை அன்று முறையாக செய்வது, சுமங்கலி பித்ருவுக்கு வெள்ளிக்கிழமை மாலை விளக்கேற்றி கும்பிடுவது,
திதி பார்த்து தெவிசம் செய்வது...
அன்று பசுவுக்கு, பிராமணருக்கு, ஏழைக்கு தானம் செய்தல் நம் கடமை... இதில் எதுவும் தவறக்கூடாது...

"ஷ்ரார்தம் (தெவிசம்) செய்யாதவன், எப்பேற்பட்ட பூஜையை செய்தாலும், நான் ஒருபோதும் ஏற்பதில்லை"....

சொன்னவர் யார் தெரியுமா?
சாட்சாத் பகவான் மஹாவிஷ்ணு...

உலகிற்கு அப்படி நடந்தும் காட்டினார்...
காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கோவிலில் பகவான் ஸ்ரீராமர் தன் தந்தை தசரதரருக்கும், ஜடாயு பறவைக்கும் தெவிசம் கொடுத்துள்ளார்...

குழந்தை வரம் வேண்டுவோர், பித்ரு தோஷம் நீக்குவோர் அமாவாசை அன்று தங்கி பூஜை செய்யும் கோவில் அது

No comments:

Post a Comment