jaga flash news

Monday 28 September 2020

மகாபாரத போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்க வேண்டிய போர்வீரன் பார்பரிகா பற்றிய அறியாத கதை



மகாபாரத போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்க வேண்டிய போர்வீரன் பார்பரிகா பற்றிய அறியாத கதை

மகாபாரதம் பற்றிய சிறு குறிப்பு: நாம் அனைவரும் மகாபஹரதப் போர் பற்றி அறிந்து இருப்போம்.கிமு 9 ஆம் நூற்றாண்டில் குருக்ஷேத்திர ராஜ்ஜியத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான வம்சப் போராட்டம் மற்றும் உள்நாட்டுப் போரைப் பற்றிய ஒரு சமஸ்கிருத காவியம் ஆகும்.மேலும் பகவத்-கீதையின் உரை, ஏராளமான துணைப்பிரிவுகள் மற்றும் இறையியல், ஒழுக்கநெறிகள் ஆகியவை இதற்குள் அடங்கும்.

    

மகாபாரதம் பற்றிய சிறு குறிப்பு: நாம் அனைவரும் மகாபஹரதப் போர் பற்றி அறிந்து இருப்போம்.

கிமு 9 ஆம் நூற்றாண்டில் குருக்ஷேத்திர ராஜ்ஜியத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான வம்சப் போராட்டம் மற்றும் உள்நாட்டுப் போரைப் பற்றிய ஒரு சமஸ்கிருத காவியம் ஆகும்.

மேலும் பகவத்-கீதையின் உரை, ஏராளமான துணைப்பிரிவுகள் மற்றும் இறையியல், ஒழுக்கநெறிகள் ஆகியவை இதற்குள் அடங்கும்.


கடோர்கஜனின் மகன்

மகாபாரதத்தின் போர் இந்து புராணங்களின் மிக நீண்ட காவியமாக கருதப்படுகிறது. இந்த நினைவுச்சின்ன போரில் முக்கிய பங்களிப்பைக் கொண்ட ஏராளமான கதாபாத்திரங்கள் இக்காவியத்தில் உள்ளன.

கதையில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகித்த பல ஹீரோக்களும் இதில் உள்ளனர். அபரிமிதமான சக்தியால் ஆசீர்வதிக்கப்பட்ட அத்தகைய ஒரு போர்வீரன், விரும்பினால் குருக்ஷேத்திரத்தின் மிக நீண்ட போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்க முடியும்.

மகாபாரதத்தில் நீங்கள் அறியாத பல அற்புதமான கதாபாத்திரங்களின் கதைகள்..

அவர்தான் பார்பரிகா அல்லது கதுஷ்யம்ஜி பாலியாதேவ் அல்லது ஷியாம் பீமாவின் பேரன் (பாண்டவ சகோதரர்களில் இரண்டாவது), மற்றும் கட்டோட்காச்சாவின் மகன்.

கட்டோட்காச்சா பீமா மற்றும் ஹிடிம்பியின் மகன். அவரது குழந்தை பருவத்திலேயே, பார்பரிகா மிகவும் தைரியமான போர்வீரனாக திகழ்ந்தார். அவர் தனது தாயிடமிருந்து போர் கலையை கற்றுக்கொண்டார்.

1 நிமிடத்தில் போர் முடியும்

மகாபாரதப் போர் தொடங்குவதற்கு முன்பு, கிருஷ்ணர் சில சிறந்த வீரர்களிடம் ஒரு கேள்வி கேட்டார், அக்கேள்வி போர் முடிவடைய எவ்வளவு காலம் என்பதாகும்.

அதற்கு பீஷ்மர், போரை முடிக்க 20 நாட்கள் ஆகும் என்று பதிலளித்தார்.

இதேபோல், துரோணாச்சார்யா 25 நாட்களும், கர்ணன் 24 நாட்களும், அர்ஜுனன் 28 நாட்களும் என்று பதிலளித்தார்கள்.

ஆனால் போர்வீரர்களில் ஒருவரான பார்பரிகா, போரை முடிக்க தனக்கு 1 நிமிடம் மட்டுமே போதுமானது என்று கூறி அனைவரையும் ஆச்சரியபடுத்தினார் .

மகா விஷ்ணுவின் எந்த அவதாரத்திற்கு பின் தான் சரத சடங்குமுறை தோன்றியது தெரியுமா? - வாமன அவதாரமும் சடங்குகளும்
சிவபெருமானின் தீவிர பக்தன் பார்பரிகா

அவரின் பதிலில் வியப்படைந்த கிருஷ்ணர், அது எப்படி சாத்தியமாகும் என அவரிடமேயே மீண்டும் கேள்வி கேட்டார். அப்போது சிவபெருமானால் தனக்கு வரமாக அளிக்கப்பட்ட மூன்று அம்புகளின் ரகசியத்தை பற்றி அவர் கூறினார். இந்த அம்புகளை கொண்டு ஒரு நிமிடத்தில் மகாபாரத போரை முடிவிடுவதாக பார்பரிகா கூறினார்.

பார்பரிகா சிவபெருமானின் தீவிர பக்தன் ஆவார். கடுமையான தவத்தை மேற்கொண்டு சிவபெருமானிடம் இருந்து சக்திவாய்ந்த வரத்தையும் பெற்றார் .

அவ்வரம் என்ன வேனில் மந்திர சக்தி அடங்கிய மூன்று அம்புககள் ஆகும். தான் அழிக்க நினைக்கும் அனைத்து எதிரிகளையும் முதலில் குறி வைக்கும் முதல் அம்பு.

மூன்றாம் அம்பை பயன்படுத்தும் போது, குறியிட்ட அனைவரையும் அது அழித்து விட்டு, மீண்டும் அவரின் அம்புக்கூட்டிற்குள் வந்து விடும்.

கிருஷ்ணர் ராதை தினமும் ராத்திரி இந்த வனத்தில் வந்து காதலிக்கிறார்களாம்... ஒளிந்திருந்து பார்த்தால் கண் குருடாகும்...
மூன்று அம்பு
தான் காப்பாற்ற நினைத்த அனைத்து பொருட்களையும் மக்களையும் காப்பதற்கு இரண்டாம் அம்பு பயன்படும். அதன் பின் அவர் மூன்றாம் அம்பை பயன்படுத்தினால், குறியிடாத அனைத்தையும் அழிக்கும்.

புரியும் படியாக சொல்ல வேண்டுமானால், அழிக்க வேண்டிய அனைத்தும் முதல் அம்பை வைத்து குறிக்கலாம்; மூன்றாம் அம்பை வைத்து அவைகள் அனைத்தையும் ஒரே அம்பில் அழித்து விடலாம்.

இதனால் பார்பரிக்காவை 'தீன் பாந்தரி' அல்லது மூன்று அம்புகளை கொண்டவன் என்றும் அழைத்தனர்.

கொரோனாவுக்கு தீர்வு சொல்வது போல் மகாபாரதத்தில் உள்ள முக்கிய நிகழ்வு... அது என்ன தெரியுமா?
பார்பரிகாவின் சக்தி
பார்பரிகாவின் இந்த சக்தியை அறிந்த கிருஷ்ணர் தனது தந்திரத்தை காட்ட முடிவு செய்தார். ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு துறவியாக மாறுவேடமிட்டு காட்டில் உள்ள அனைத்து இலைகளையும் குறிப்பதன் மூலம் பார்பரிகாவிடம் தனது சக்தியைக் காட்டும்படி கேட்டுக்கொள்கிறார்.

கிருஷ்ணருடன் காட்டிற்கு சென்ற பார்பரிகா ஒரு மரத்தில் உள்ள இலைகளை எடுக்க முடிவெடுத்தார். பார்பரிகா கண்களை மூடிக்கொண்டிருந்த போது, மரத்தில் இருந்து ஒரு இலையை எடுத்த கிருஷ்ணர் தன் பாதத்திற்கு அடியில் அதை மறைத்து வைத்துக் கொண்டார்.

அனுமன் கண்ட இன்னொரு சீதை! - ராமனின் மிக உயர்ந்த குணம் என்ன தெரியுமா?
கிருஷ்ணரை நோக்கி வந்த அம்பு
இலைகளை குறி வைக்க முதல் அம்பை பார்பரிகா எய்திய போது, அந்த மரத்தின் கடைசி இலையை குறிக்க வைக்க, அது இருந்த இடமான கிருஷ்ணரின் பாதத்தை நோக்கி சென்றது. இதை பார்த்து வியந்த கிருஷ்ணர் தன் பாதத்தை தூக்கினார்.

உடனே அந்த இலையின் மீதும் குறி வைக்கப்பட்டது. அதன் பின் மூன்றாம் அம்பை எய்தியவுடன் அனைத்து இலைகளும் ஒன்று சேர்ந்து ஒரு இடத்தில் போடப்பட்டது.

பார்பரிகா ஒரு நிமிடத்திற்குள் போரை முடிக்க முடியும் என்று கூறியதை இப்போது கிருஷ்ணர் ஒத்துக்கொண்டார்.

கிருஷ்ணரின் 8 மனைவிகளும், 80 குழந்தைகள் குறித்த கதை தெரியுமா? - படித்தால் பிரமிப்பு ஏற்படும்!
உயிரை தியாகம் செய்த பார்பரிகா
குருஷேத்ர போரில் யாருக்கு ஆதரவாக சண்டை போடப்போவதாக கிருஷ்ணர் பார்பரிகாவிடம் கேட்டார். அதற்கு கண்டிப்பாக பாண்டவர்கள் அணியில் இருந்து தான் போரிட போவதாக தெரிவித்தார். அதற்கு காரணம், அவர்களே கௌரவர்களை விட பலவீனமானவர்கள்.

ஆனால்,பாண்டவர்களுடன் பார்பரிக்கா சேர்ந்து கொண்டால், தானாகவே அவர்கள் அணி வலுவடையும் என கிருஷ்ணர் கூறினார். அதனால் பார்பரிகா குழப்பமடைந்தார். இந்த வரத்தின் நிபந்தனையை நிறைவேற்ற அவர் அணியை மாற்றிக்கொண்டே இருக்க நேரிடும். அதனால் மனித இன பொது நலுனுக்காக தன் உயிரை தியாகம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார் . அதற்கு காரணம் தான் இருக்கும் அணி மிகவும் சக்தி வாய்ந்த அணியாக மாறிவிடும். அதனால் அவரால் தன் சக்தியை பயன்படுத்தவே முடியாது.

உலகம் அழிவை நோக்கி செல்கிறதா? - கல்கி அவதாரம் குறித்து கூறப்பட்டுள்ள குறிப்புகள்
கிருஷ்ணரின் ஆசை
அதனால் போர் நடக்கையில், இரண்டு அணிக்கும் மாறி மாறி போய் கொண்டிருக்க வேண்டி வரும். இதனால் இரண்டு அணியின் படைகளும் அழிந்து விடும். கடைசியில் அவர் ஒருவர் மட்டுமே மிஞ்சியிருப்பார். தான் ஒருவர் மட்டுமே போரில் உயிருடன் இருப்பதால், எந்த ஒரு அணிக்கும் வெற்றி கிடைக்க போவதில்லை. அதனால் போரில் அவர் பங்கு பெற வேண்டாம் என கிருஷணர் கேட்டுக் கொண்டார்.

கிருஷ்ணரின் ஆசையை ஏற்றுக் கொண்ட பார்பரிக்க தன் தலையை துண்டித்துக் கொண்டார். இறப்பதற்கு முன்பு, கிருஷ்ணரிடம் இருந்து ஒரு வரத்தை பெற்றார். அதாவது மகாபராத போரை தன் கண்களால் பார்க்க வேண்டும். அந்த வரத்தை கிருஷ்ணரும் அவருக்கு அளித்தார் . அவரின் தலையை மலையின் உச்சிக்கு எடுத்துக் சென்று போட்டார் பீமன். அதனால் மகாபராத போர் முழுவதையும் பார்பரிகாவால் காண முடிந்தது.

அர்ஜுனன், அனுமனுக்கு இடையே நடந்த விபரீத போட்டி ... யார் வெற்றி பெற்றார் தெரியுமா?
மகாபாரத போர் வெற்றிக்கு காரணமானவர்
யுத்தம் முடிவடைந்த பின்னர், வெற்றி பெற்ற பாண்டவர்கள் மகாபாரதப் போரின் வெற்றிக்கு முக்கிய காரணம் யார் என்று வாதிட்டனர். அதற்கு அமைதியான சாட்சியாக இருந்த பார்பரிகாவிடம் கேட்கும்படி கிருஷ்ணர் அவர்களுக்கு அறிவுறுத்துகிறார். அதற்கு பார்பரிகா கிருஷ்ணரின் சாதுரியம் மற்றும் ஆலோசனையும் தான் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று பதிலளித்தார், ஏனெனில் கிருஷ்ணர் விளையாடுவதை அவரால் மட்டுமே காண முடிந்தது.

பார்பரிகாவின் தலை கிருஷ்ணரால் ரூபாவதி என்ற ஆற்றில் மூழ்கி ஏராளமான ஆசீர்வாதங்களை பெற்றது. கலியுகம் தொடங்கி பல ஆண்டுகளுக்குப் பிறகு, பார்பரிகாவின் தலை இன்றைய ராஜஸ்தானில், சிகார் மாவட்டம், காட்டு கிராமத்தில் புதைக்கப்பட்டு உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தர்மம் தலை காக்கும், ஆனால் அது தலைக்கனம் ஆகக்கூடாது... பாடமெடுத்த கிருஷ்ணர்!
பார்பரிகாவின் கோயில்
காட்டுவின் மன்னரான ரூப்ஸிங் சவுகான், பார்பரிகாவின் தலைக்கு ஒரு கோவிலைக் கட்ட வேண்டும் என்று கனவு கண்டார், எனவே அவர் ஒரு கோவிலைக் கட்டி, பார்பரிகாவின் தலையை அங்கே வைத்தார்.

ராஜஸ்தானில் பார்பரிக்காவை காட்டு ஷ்யாம் ஜி-யாக வணங்குகின்றனர்.

விஷ்ணுவின் பத்து அவதாரத்துக்குள் அடங்கும் மனிதன் பிறப்பு, இறப்புக்கான தத்துவங்கள்
கடவுளின் மீது வைத்த நம்பிக்கையினாலும், தன் உயிரையே தியாகம் செய்ததாலும், கிருஷ்ணரின் பெயரை (ஷ்யாம்) அவருக்கு வைத்துள்ளனர். தூய்மையான உள்ளத்தோடு பார்பரிகாவின் பெயரை உச்சரித்தால் வேண்டிய வரம் கிடைக்கும் என கிருஷ்ணர் கூறியுள்ளார்.

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்?... இதோட உண்மை அர்த்தம் தெரியுமா?
நேபாளத்தில், கிங் யலாம்பர் பார்பரிகாவாக சித்தரிக்கப்படுகிறார். யாலம்பர் நேபாளத்தின் கிராத் வம்சத்தின் முதல் மன்னராக கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment