jaga flash news

Tuesday 22 September 2020

ஸ்ரீ எல்லம்மாள் ரேணுகா தேவியின் வரலாறு

ஸ்ரீ எல்லம்மாள் ரேணுகா தேவியின் வரலாறு

ஸ்ரீ ரேணுகா தேவி ரேணுகா ராஜாவிற்கு கடவுளால் வழங்கப்பட்ட தெய்வக்குழந்தை . ஒரு சமயம் ரேணுகா ராஜா யாகம் நடத்தினார் அந்த யாகத்தை ஏற்று இறைவன் யாகத்தீயிலிருந்து ஒரு குழந்தையை வரமாக வழங்கினார் . அக்குழந்தைதான் ஸ்ரீ ரேணுகா தேவி . சிறு வயதில் அனைவரையும் கவர்ந்த செல்லக்குழந்தையாக வழர்ந்தார் .திரு அகஸ்திய முனிவர் ரேணுகா ராஜாவின் குரு ஆவார் . மேலும் ரேணுகா தேவிக்கு குருவாக திகழ்ந்தார் அகஸ்திய முனி. இவர் ரேணுகா தேவியை எதிர்காலத்தில் ஜமதக்னி என்ற முனிவருக்கு மணமுடித்து அளிக்கும் படி ரேணுகா ராஜாவுக்கு ஆலோசனை வழங்கினார் . ஜமதக்னி முனிவர் சத்தியவதி , ருச்சிக் முனியின் புதல்வன் ஆவார். இவர் நீண்ட கால யாகத்தாலும் பூஜைகளாலும் இறைவனின் அருள் பெற்றவர். இருவரும் திருமணத்திற்கு பிறகு ராம்ஷ்ராங் என்னும் மலையில் இறைப்பணியில் ஈடுபட்டு வந்தனர் . ரேணுகா தேவி ஜமதக்னியின் அனைத்து பூஜைகளிலும் , யாகங்களிலும் உடன் இருந்தார் . ரேணுகா தேவி தினமும் அதிகாலை மலப்ப்ரப்ஹா என்னும் நதியில் நீராடிவிட்டு பக்தியுடனும் கவனத்துடனும் நதிக்கரையில் உள்ள மண்ணில் பானை ஒன்றை செய்து அங்குள்ள பாம்பு ஒன்றை பிடித்து சும்மாடாகா ( தலைப்பாகை போல் ஓன்று ) வைத்து பானையை எடுத்து வருவார் . அந்த புனித நீரால் ஜமதக்னி இறை வழிபாடு செய்வார். இவர்களுக்கு ஐந்து மகன்கள் வாசு , விஷ்வ வாசு , ப்ரிஹத்யானு , ப்ருத்வாகன்வா மற்றும் ராம் பத்ரா. ராம் பத்ரா இறைவன் சிவன் பார்வதியாள் " அம்பிகாஸ்த்ரா " வாக ஆசிர்வதிக்கப்பட்டார் அதன் பின்னர் அவர் பரசுராம் என்று அழைக்கப்பட்டார். பரசுராம் ரிஷி முனிவர்களுக்கு பல இன்னல்களை அளித்து வந்த சத்த்ருயாச்களை அளித்தார் . அவ்வாறு ஒரு நாள் ரேணுகா தேவி மலப்ப்ரப்ஹா நதிக்கு சென்று தண்ணீர் எடுக்கும் பொது அந்த நீரில் தெரியும் " கந்தர்வ அன்கேல்ஸ் " என்னும் கருட பறவை ஒன்றை பார்த்தி தன கவனத்தையும் பக்தியையும் சற்று சிதற விட்டார். தவறை உணர்ந்து நீராடிவிட்டு பானை செய்ய முற்படும்போது அதை செய்ய முடியவில்லை பின்னர் பாம்பும் மறைந்து விட்டது
பின்னர் ஆசிரமம் திரும்பினார் தேவி . அவர் வெறும் கையுடன் திரும்பியதை கண்ட ஜமதக்னி முனிவர் என் கண்முன் நிற்காதே என்றும் இங்கிருந்து செல்லும் படியும் அறிவுரித்தினார் . பின்னர் ஸ்ரீ ரேணுகா தேவி காட்டிற்குள் கிழக்கு நோக்கி சென்றார் . அடர்ந்த காற்றிர்க்குள் தியானம் மேற்கொண்டார் . அவர் தியானத்தில் ரிஷி ஏக் நாத் , ஜோகி நாத் இருவரும் தோன்றினர் அவர்களை வணங்கிய ரேணுகா தேவி தன கணவரிடம் மன்னிப்பு பெறுவது எவ்வாறு என்று கேட்டார் . ரிஷிகள் ரேணுகா தேவியிடம் இதற்க்கு பரிகாரமாக நாளை முதல் மூன்று நாட்கள் அருகில் உள்ள குளத்தில் நீராடி ரிஷிகள் அளித்த சிவா லிங்கத்தை வழிபடக்கூரினர் அத்துடன் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று மக்களிடம் அரிசியை வாங்கி அதில் பாதியை ஜாக்ர்யாக சமைத்து பக்தியுடன் உட்க்கொள்ள வேண்டும் , நான்காம் நாள் சென்றால் முழு மனதுடன் ஆசிர்வதித்து ஏற்றுக்கொள்வார் மேலும் இதன் மூலமாக நீ அனைவராலும் தெய்வமாக வணங்க படுவாய் கூறி மறைந்து விட்டனர் ரிஷிகள் . ரேணுகா தேவி மூன்று நாட்களும் அதை கடைப்பிடித்து நான்காம் நாள் கணவரிடம் சென்றார் .ரேணுகா தேவியை கண்ட ஜமதக்னி கோபம் அடைந்து தன மகன்களிடம் ரேணுகா தேவியின் தலையை வெட்டுமாறு கூறினார். முதல் நான்கு மகன்களும் மறுத்து விட்டனர். ஐந்தாம் மகனான பரசுராம் தந்தையின் ஆணைப்படி அன்னையின் தலையை வெட்டினார். தன் தந்தையிடம் நீங்கள் கூறியவாறே செய்துவிட்டேன் நீங்கள் என்ன அன்னையை திரும்பத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் . அதற்க்கு ஜம்தக்னி நீ உன் அன்னையை பெற பல யாகங்களை செய்து முடிக்க வேண்டும் என்றார் . அவ்வாறே தன அன்னையை பெறவேண்டி யாகங்களை தொடங்கினார் . அந்த யாகத்தின் இறுதியில் அசிரிரி ஒலித்து உன் அன்னையை பெற யாகத்திற்கு முன்பு கண்களை மூடி அமர்ந்தால் உன் அன்னை பூமியிலிருந்து வெளிப்படுவார் என்றும் அவ்வாறு வெளிப்படும்போது பார்க்கக்கூடாது என்றும் கூறியது ஓர் ஒலி. ஆனால் பரசுராம் தன் அன்னையை காணும் அன்பினால் திரும்பி பார்க்க அப்போது பூமியிலிருந்து வெளிப்பட்டுக்கொண்டிருந்தது ஸ்ரீ ரேணுகா தேவியின் தலை மட்டுமே . அதனால் இன்றளவிலும் ஸ்ரீ எல்லம்மல் ரேணுகா தேவி அன்னையின் தலை வடிவிலும் முழு உருவ வடிவிழும் வணங்கி வருகின்றனர் .

No comments:

Post a Comment