jaga flash news

Thursday 9 May 2013

கௌதம புத்தரின் வாழ்வும், போதனைகளும்

கௌதம புத்தரின் வாழ்வும்போதனைகளும் 

"ஆசையேதுன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தைஉலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர்உலக மகா ஞானிகளில் தனக்கெனதனி இடம் பிடித்தவர்பௌத்த மதம் என்னும் சமயத்தை தோற்றுவித்துமக்கள் யாவரும் முக்தி அடைய ஒரு எளிதான வழியைக் காட்டியவர்.புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவோர் பௌத்தர்கள் என்றுஅழைக்கப்படுகின்றனர்அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாதுஅனைவருமே கௌதம புத்தர் அவதரித்த நாளைக் புத்த பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது.

புத்தரின் பிறப்பு :

கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினிக் கிராமத்தில் கி.மு. 566-ல் சாக்கியகுலத்தில் பிறந்தார் கௌதம புத்தர்பெற்றோர் அவருக்கு சித்தார்த்தர் என்றுபெயரிட்டு அழைத்தனர்அவருடைய தந்தை சுத்தோதனர்தாயார்மாயாதேவிசாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர்கபிலவஸ்துவைத்தலைநகரமாகக் கொண்ட சாக்கிய நாட்டின் மன்னராவார்கபிலவஸ்துநேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளதுபுத்தர் பிறப்பிடம் அசோகமௌரியர் எழுப்பிய ரும்மிந்தைத் தூண் சின்னத்தால் பிரசித்திப் பெற்றுவிளங்குகிறது

புத்தர் பிறந்த ஏழாவது நாளில் சுத்தோதனர் இயற்கை எய்தினார்பின்னர்புத்தர் தன் அத்தையான பிரஜூபதி கௌதமியால் வளர்க்கப்பட்டார்.இளமைப் பருவத்தில் யசோதரா என்னும் மங்கையை மணந்து இல்லறவாழ்க்கையை நடத்தினார்இவருக்கு ராகுல் என்ற மகன் பிறந்தான்.

சில காலங்களுக்கு பிறகு புத்தருக்கு அரண்மனை வாழ்க்கைபிடிக்கவில்லைஅமைதியை இழந்தார்இவ்வுலக வாழ்க்கையில்கண்ணுற்ற துன்பங்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார்ஒரு நாள் இவர்வெளியே சென்றுக் கொண்டிருந்தபோது கண்ட காட்சிகள் இவர் மனதைவெகுவாக புண்படுத்தினவயது முதிர்ந்த ஒரு மனிதரையும்நோயாளிஒருவரையும்பிணம் ஒன்றையும்துறவி ஒருவரையும் கண்டார்இதனால்மனம் கலங்கினார்இதற்கு முன்னால் இது போன்ற காட்சிகளையும் இவர்நேரில் கண்டதில்லைஆகையால் இத்தகைய காட்சிகள் இவரதுசிந்தனைகளை வெகுவாகத் தாக்கியது

துறவறம் :

உலக வாழ்க்கையில் காணப்படும் துன்பங்களைப் பற்றியும்அதற்குப்பின்னர் என்ன நடைபெறும் என்பது பற்றியும் தீவிரமாக ஆராயத்தொடங்கினார்இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் காண வேண்டும்என்பதே தனது லட்சியமாகக் கொண்டார்எனவே இல்லற வாழ்க்கையைதுறக்க தீர்மானித்தார்தனது 29-வது வயதில் கடும் துறவறத்தை புத்தர்மேற்கொண்டார்உண்மையைக் காண்பதே தனது முதன்மையான பணிஎனக் கருதிஎல்லாவற்றையும் களைந்துவிட்டு அலைந்து திரியும்துறவியின் வாழ்க்கையை மனம் உவந்து மேற்கொண்டார்.

துறவிக்கோலம் பூண்ட புத்தர்வாழ்க்கையைப் பற்றியும் மரணத்திற்குப்பின்னர் நடைபெறுவது பற்றியும் அறிய விரும்பினார்இதற்காக இவர்முதலில் வைசாலியில் தங்கியிருந்த அலாரர் என்பவரிடம் பாடங்களைக்கேட்டறிந்தார்பின்னர் இராஜகிரகத்தில தங்கியிருந்த ஆசிரியரானஉருத்திரிகா என்பவரிடம் சீடராக அமர்ந்தார்அவருடைய போதனைபுத்தரை வெகுவாக கவரவில்லைஎனவே அவரை விட்டு விலகிச்சென்றார்.

பின்னர் கௌதமர் உருவேலா என்னும் இடத்தில் உணவு இன்றி கடும் தவம்மேற்கொண்டார்சுமார் 6 ஆண்டுகள் இவ்வாறு கழிந்ததுஎனினும் தமதுலட்சியத்தை அடைவதற்கு இது பயனற்றது என அறிந்தார்.

ஞானோதயம் :

பிறகு நைரஞ்சனா ஆற்று கால்வாயொன்றில் புனித நீராடி இக்காலபோத்-கயா என்னுமிடத்திலுள்ள பிப்பல் அல்லது அரச மரத்தடியில்அமர்ந்தார்இறுதியில் அங்கு அவருக்கு உயர்வான ஞானம் புத்தொளிதோன்றியதுதனது 36-வது வயதில் ஞானோதயம் பெற்று நிர்வாணத்தைஅடைந்தார்

அன்று முதல் இவர் "புத்தர்அல்லது ஒளிபெற்றவர் என்றும் "ததாகதர்" (உண்மையை அறிந்தவர்என்றும்சாக்கியமுனி அல்லது சாக்கிய வம்சத்துமுனிவர் என்றும் பல பெயர்கள் சொல்லி அழைக்கப்பட்டார்.

"புத்தன்என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்"என்று பொருள்தன் ஆசையையும்அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனதுஎன்ற நிலையிலிருந்து விலகினார்இதையே "நிர்வாணம்"அல்லது "நிர்வாண நிலைஎன்று சொல்லுவார்கள்

கொள்கைகள் :

ஒளி பெற்ற புத்தர்வாரனாசியின் அருகாமையிலுள்ள சாரநாத்என்னுமிடத்திலுள்ள "மான் பூங்காஎன்னுமிடத்தில் தன் கொள்கையைபோதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் அயோத்திபீகார்அதையடுத்தபகுதிகளின் மக்களுக்கும்மன்னருக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர்ஊராகச் சென்று பரப்பினார்இராஜகிரகத்தில் இரண்டாவதுமூன்றாவது,நான்காவது போதனைகளை நடத்தி வெற்றிகண்டார்.

கபிலவஸ்துவில் ராகுல்மகா பிரஜாபதி ஆகியோரை தன் சமயத்தில்சேர்த்துக் கொண்டார்மகத மன்னர்களான பிம்பிசாரர்அஜாதசத்துருஆகியோர்களை பௌத்த சமயத்தை தழுவும்படி செய்தார்கோசலநாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தை தழுவிட வழிகோலினார்.

இந்த இடங்களிலெல்லாம் அவரது நான்கு உண்மைகளையும், "நான்குஅதிசய சத்தியங்களையும்", "எண் வகை வழிகளையும்கூறினார்பிறகுதனது 80-வது வயதில்குசி நகரத்தில் கி.மு. 486-ல் உயிர் நீத்தார்.

கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியாகிழக்கிந்தியாஸ்ரீலங்கா ஆகியஇடங்களில் புத்த மதம் பரவி இருந்ததுகி.பிமுதலாம் நூற்றாண்டில்புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியதுகி.பி. 7-ம் நூற்றாண்டில்திபெத்திற்குச் சென்றது

புத்தரின் போதனைகள் :

புத்த சமயக் கொள்கைகளைச் சுத்த பிதகம் கூறுகின்றதுமனத்துயரிலிருந்தும்துன்பங்களிலிருந்தும் விடுபடுவதே பௌத்த சமயத்தின்முக்கிய நோக்கமாகும்தன்னலம் துன்பங்களுக்கெல்லாம் காரணமாகஇருக்கிறதுஆசையை ஒழித்தால் தான் மன அமைதியும்ஆனந்தமும்அடைய முடியும்தீமைகளை தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால்ஆசை அகன்றுவிடும்.

"நான்கு உயரிய உண்மைகளும்", "எண் வகை வழிகளும்பிறவி என்பதுஒருவரது செயலினால் ஏற்படும் பயன் என்ற கோட்பாடும் தத்துவ இயலுக்குபுத்தர் ஆற்றிய அரிய தொண்டாகும்

நான்கு உண்மைகள் :

1. துன்பம் : இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானதுஏழ்மைநோய்மூப்பு,இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கைஎளிதில் விலக்கிக் கொள்ளமுடியாத துன்பம் நிறைந்ததுஇவை நம்மை தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

2. அதன் தோற்றம் : சிற்றின்ப ஆசையே துன்பத்தின் காரணம்தான்இன்பமாக வாழ வேண்டும் என்ற தன்னலம் கலந்த ஆசையேதுன்பங்களுக்கு காரணமாகும்

3. அதை ஒழித்தல் : ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்கமுடியாது.

4. அட்டசீலம் : (எண்வகை வழிதுன்பத்தை ஒழிக்கும் வழி இதுவேயாகும்.எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம்.

நடுவு நிலை வழிஇடை வழி : புத்தர் கூறிய சமய முறையில் ஆசையைஅறவே ஒழித்துபல்வகையான வாழ்க்கையின் மீது நாட்டம் கொள்ளாமல்,வாழ்க்கையில் ஆசையால் விளையும் துன்பங்களை ஒழிப்பதேநிர்வாணமாகும்

இடைவழி : ஆழ்ந்த அறிவுவிவேகம்புலமைஅமைதிநிர்வாணம்ஆகியவற்றை அடையச் செய்கின்றனஇடைவழியில் எட்டு கொள்கைகள்உள்ளனஇதற்கு "அட்ட சீலமஅல்லது "எண் வகை வழிகள்என்று பெயர்.

அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் :

1. நல்ல நம்பிக்கை : நான்கு உண்மைகளில் நம்பிக்கைக் கொள்ளுதல்.

2. நல்லெண்ணம் : இல்லற வாழ்க்கையை விட்டொழிக்கவும்சினத்தைஅகற்றவும்ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல்.

3. நல்வாய்மை அல்லது நல்லமொழி : பயனற்றதும்கடுமையானதும்பொய்யானதுமான சொற்களை கூறாதிருத்தல்.

4. நற்செய்கை : பிறரை துன்புறுத்தாமலும் (அகிம்சைகளவாடாமலும்நன்னெறி தவறாமல் இருத்தல்.

5. நல்வாழ்க்கை : பிச்சை எடுத்து வாழ்தல்.

6. நன் முயற்சி : தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல்.

7. நற்சாட்சி : சிற்றின்ப ஆசையையும்துன்பத்தையும் அடையாவண்ணம்விழிப்புடனிருத்தல்.

8. நல்ல தியானம் : லட்சியத்தை (குறிக்கோளைஅடைய மனம்ஒருவழிபட்டு சிந்தித்தல்.

சுருக்கமாகக் கூறினால்புத்தருடைய அறிவுரைகளில் நம்பிக்கையுடன்அவற்றை அறியவும்அதன்படி நடக்கவும் முயன்று ஒழுக்கம் தவறாதநடத்தையுடன் மனதை ஒருவழிபடுத்தி இறுதியான இன்பத்தை (வீடு,மோட்சம்அடைய வேண்டுமென்பதாகும்

அவரது காலக் கட்டத்தில் இந்திய தத்துவ இயலில் ஆதிக்கம் செலுத்தி வந்தகடவுள்ஆன்மாமாறாத நிலையான உண்மை அல்லது வஸ்து போன்றகருத்துகளை அறிவார்த்த முறையில் களைந்து உலகம்வாழ்க்கை,சிந்தனை குறித்த முற்றிலும் மாற்றான கருத்துகளை முதன் முதலில் பறைசாற்றியவர் புத்தர் என்றால் அது மிகையாகாது.
  
பின் தன் இறுதி காலம்வரை பல இடங்களுக்கும் பயணம் சென்று தான்கண்டுகொண்ட உண்மையை பற்றி நீண்ட பிரசங்கங்கள் செய்தார்இறுதியில்கி.மு. 483 ல் தனது 80 - வது வயதில் தனது பிறந்த நாளும்தான் ஞானத்தைஅடைந்த நாளுமான அதே வைசாகா அன்று புத்தர் இவ்வுலக வாழ்வைத்துறந்தார்புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான இந்த மூன்றுசம்பவங்களையும் நினைவு கூறுவதே புத்தபூர்ணிமா எனப்படுகிறது
 புத்தபூர்ணிமா அன்று புத்தமதத்தினர் வெள்ளைநிற உடைகளை மட்டுமேஅணிவர்அன்று மடாலயங்களிலும்வழிபாட்டிடங்களிலும்வீடுகளிலும்வழிபாடுகளையும் விழாக்களையும் நடத்தி மகிழ்வர்கீர் எனப்படும் பானம்அன்றைய தினம் அவர்களது உணவில் முக்கிய அங்கமாக இருக்கும்.இந்தியாவின் பீகாரில் உள்ள புத்த கயாவிலும்உத்திரபிரதேசமாநிலத்திலுள்ள சாரநாத்திலும் இவ்விழா மிகச் சிறப்பாகக்கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment