jaga flash news

Monday 17 March 2014

அம்மான் பச்சரிசி செடி

நன்கு செழித்து வளர்ந்த அம்மான் பச்சரிசி செடியில் இருந்து இலைகளை சேகரித்து நிழலில் உலர்த்தி அதன் தன்மை மற்றும் நிறம் மாறாமல் பொடியாக அரைத்து 50 கிராம் மற்றும் 100 கிராம் அளவுகளில் சுகாதாரமான முறையில் பெட்டியில் அடைத்து விற்பனைக்கு அளித்து வருகிறோம்.



பயன்கள்:
முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உதவும். வயிற்றுப் பூச்சி அகற்றும். மலமிலக்கும். வெள்ளைப் படுதல் குணமாகும்.


மேலும் சில விபரங்கள்:


அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு... வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.


பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும்.
இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.


Tamil - Amman Pacharisi
English - Snake weed
Sanskrit - Dugdhika
Telugu - Reddine narolu
Malayalam - Nela paalai
Botanical name - Euphorbia hirta

இந்த மூலிகையின் தண்டை கிள்ளினால் ஒரு வித பால் வரும் அது முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு ஆகியவற்றை குறைக்கவும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் பயன்படுகிறது.

காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
சேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் - பேர்ந்தென்றாய்
ஓருமம்மான் பச்சரிசிக் குண்ம இனத்துடனே
கூருமம்மா ணொத்தகண்ணாய் கூறு
- அகத்தியர் குணபாடம்

அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்-றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படுமழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும்.  சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.

தாய்ப்பால் சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான அளவு சுரக்காமல் இருக்கும் போதுமான அளவு சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்..சில பெண்களுக்கு வெள்ளைபடுதல் ஒரு பிரச்சனையாக இருக்கும் ,அது நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நின்றுபோகும் .அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் தாது பலப்படும்.. ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். வடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது.விவசாய நிலங்களில் கழையாக வளரும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது.
இலை, தண்டு, பால், பூ, ஆக்கியவை. பயன்தரும்.

அம்மான் பச்சரிசிக்கு நெருப்புப் புண் ,, மலச்ச்க்கள் , , நமச்சல் , பரு ,மறு நீகள் ஆகிய குணம் உண்டு
இதன் பாலை நக சுற்றிக்குதடவ குணமாகும்.

The plant flowers and fruits all year long.
 There are the following phytochemicals in asthma weed: sterols, alkaloids, tannins, glycosides, triterpenoids, alkenes, phenolic acids, choline, shikimic acid.
Asthma weed has antiviral and - bacterial properties.
It is used against asthma, bronchitis, worm infestation, conjunctivitis and dysentery. The latex of the plant is used for warts and cuts. It also has lactogenic properties.

சிவப்பு அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதம், பிரமேகம்,ஆகியவை போகும். சுக்கில தாது விர்த்தியாகும். இதைவெள்ளிபஸ்பம் என்றும் கூறுவர்.  இதன் பாலை வைத்துக்கொண்டு ஒரு வித்தைக் கூட காட்டலாம் ஒரு காகித துண்டில் அம்மான் பச்சரிசி பாலால் ஏதாவது ஓர் உருவம் வரைந்து உலர்த்தி பின் நண்பர்களிடம் காட்டவும்  பின் அனைவரும் அது வெறும்  காகிதம்  தான்  எனக்  கூறியதும்  அதைத்  தீயில் கொளுத்திக் காட்ட வரைந்த உருவம் தோன்றும்.. இவ்வாறு  வித்தைக் காட்ட  இன்னும்  பல  மூலிகைகள்  இருக்கிறது 

562 comments:

  1. அம்மான் பச்சரிசி : வேறு பெயர்கள் : சித்திரப்பாலாடை, எம்மான் பச்சரிசி, பாலாட்டங்கொளை.

    தாவரவியல் பெயர் : Euphorbia Pilurifera.
    குடும்பப் பெயர் : Euphorbiaceae.
    ஆங்கிலப் பெயர் : AustraLian Sthima Weed
    சமஸ்கிருதம் : Kshirini
    தெலுங்கு : Nanabalu
    ஹிந்தி : Dudhi
    கன்னடம் : Akkigida
    மலையாளம் : Nilapala

    வளரியல்பு : பூண்டு

    புற அமைப்பு: 50 செ.மீ. உயரம் உள்ளது. இலைகள் எதிரெதிராக அமைந்தவை. சொரசொரப்பானவை. பச்சை, சிவப்பு நிறங்களில் இலைகள் காணப்படும். தாவரத்தின் எப்பகுதியை ஒடித்தாலும் பால் வரும்.

    பயன்படும் பகுதி : இலை, பூ.
    சுவை : துவர்ப்பு, இனிப்பு.
    தன்மை: தட்பம்
    பிரிவு : இனிப்பு.

    வேதிப் பொருட்கள் : இச்செடியில் "ஆல்கலாய்டும்", நறுமண எண்ணெயும், Latex-ம் உள்ளன.

    செய்கைகள் : குளிர்ச்சியுண்டாக்கி, எருவிளக்கி,துவர்ப்பி.

    மருத்துவ குணங்கள் : உடல் வறட்சி, வெட்டை, வாய்ப்புண், வயிற்றுப் புண், ஆண்மைக் குறைவு, மலச்சிக்கல், தாய்ப்பாலின்மை, உடற்சோர்வு, உடற்சூடு, நகச்சுற்று, வயிற்றுப் புழு முதலியன நீங்கும்.

    நோய் தீர்க்கும் முறைகள் :

    1) அம்மான் பச்சரிசி இலையை சிறிது நீர் விட்டு அரைத்து.. 5 கிராம், காலை வேளையில் பசும்பாலில் கலந்து கொடுத்துவர, மலச்சிக்கல், சிறுநீர்க் கடுப்பு, வயிற்றுப் புண், உடல் வறட்சி தீரும்.

    2) அம்மான் பச்சரிசி இலையை, நெய், பருப்பு சேர்த்து, உணவாக சேர்த்துவர, உடல் வறட்சி, உட்சூடு, வாய்ப்புண், வயிற்றுப் புண் மலச்சிக்கல் குணமாகும்.

    3) இதன் பாலினை, மருக்கள், நகச்சுற்று, காலாணி, முகப்பரு, இவைகளில் தடவிவர நீங்கும்.

    =============================================





    ReplyDelete
  2. Sat. 19, Feb. 2022 at 9.28 am.

    மூக்கு ஒழுகுதல் :

    சிறுவர் சிறுமியர் பலருக்கு மூக்கு ஒழுகிக் கொண்டே இருப்பதைப் பார்க்கலாம். அவர்களுக்கு துளசி இலையைக் கொண்டே 13− நாட்களில் குணப்படுத்தலாம்.

    முதல் நாள் ஒரு துளசி இலை + ஒரு மிளகு.

    2−ஆம் நாள் − 2 துளசி இலை + 2 மிளகு

    3−ஆம் நாள் − 3 துளசி இலை + 3 மிளகு

    இவ்வாறு...ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாகக் கூட்டி 7− ஆம் நாள் 7− துளசி இலை + 7 மிளகு கொடுத்து மென்று தின்னச் செய்ய வேண்டும்.

    பின்னர் .. 8−ஆம் நாள் − 6 துளசி இலை + 6 மிளகு;

    9−ஆம் நாள் − 5 துளசி இலை + 5 மிளகு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாகக் குறைத்துக் கொண்டே வந்து...
    13−ஆம் நாள் − 1 துளசி இலை + 1 மிளகு எனக் கொடுக்க.. 13−ஆம் நாளில் மூக்கில் சளி ஒழுகுவது.. நிற்கும்.

    எளிய மருத்துவம்..... செய்து பயனடையுங்கள்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  3. Fri. 06, Jan. 2022 at 8.40 pm.

    தோல் நோய் நீங்க..;!

    *நெல்லிக்காய்த் தூளுடன், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து உடம்பில் தடவி வந்தால்.. பற்று, படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  4. Sun. 14, Nov. 2021 at 3.56 pm.

    நிணநீர் மண்டலம் :

    நிணநீர் :

    திசுக்களில்... திசுத்திரவம் உள்ளது. அங்ஙனம்.. இத்திரவமானது இரத்த பிளாஸ்மாவில் இருந்து தந்துகிச் சுவர்களின் மூலம் கசிந்து வந்து செல்களை சுற்றியும் அவற்றின் இடையிலும் காணப்படுகிறது. இத்திரவத்திற்கு "நிணநீர்" என்று பெயர்.

    நிணநீரில் 3−4% வீதம் புரதமும், மற்றும் இரத்த வெள்ளையணுக்களும் உள்ளன.

    நிணநீர் மண்டலம் உருவாகும் விதம் :

    நிணநீர்த் தந்துகிகள், நிணநீர் நாளங்கள், நிணநீர் கணுக்கள், இரண்டு பெரிய நிணநீர் நாளங்கள்( வலது நிணநீர் நாளம், மார்பு நிணநீர் நாளம்) ஆகியவைகள் இணைந்து நிணநீர் மண்டலம் உருவாகுகிறது.

    இதில்... வலது நிணநீர் நாளம்... இறுதியில்... வலது சப்கிளேவியன் சிரையிலும்,.....

    மார்பு நிணநீர் நாளம்.... இடது சப்கிளேவியன் சிரையிலும் சென்று.... திறக்கிறது.

    இந்த நிணநீர்க் குழாய்கள்... தோல், அடித்தோலில உள்ள திசுக்கள், இணைப்புத் திசுக்கள் மற்றும் மார்பு பகுதியிலும் இருக்கின்றன.

    மட்டுமின்றி... சிறுகுடலில் உள்ள குடலுறிஞ்சிகளிலும் நிணநீர்க் குழாய்கள் இருக்கின்றன. இதற்கு "லேக்டியேல்கள்" என்று பெயர்.
    இந்த லேக்டியேல் கொழுப்பு பொருட்களை உறிஞ்ச உதவுகிறது.

    குறிப்பு :

    நரம்பு மண்டலத்திலும், எலும்பு மஜ்ஜையிலும்... நிணநீர் இருக்காது.

    நிணநீரின் பணிகள் :

    * சிறுகுடலில் செரிக்கப்பட்ட கொழுப்புப் பொருட்களை, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

    * நோய் எதிர்ப்புப் பொருட்களை உற்பத்தி செய்து உடலுக்கு நோய்வராமல்... நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குகிறது.

    * நிணநீர் கணுக்களில் உற்பத்தியாகும், இரத்த வெள்ளையணுக்களை இரத்த ஒட்டத்திற்குள் கலக்கச் செய்கிறது.

    * திசுக்களிலிருந்து திரவத்தையும்,புரதத்தையும், இரத்த ஓட்த்திற்குள் அனுப்புகின்றது.

    * நிணநீர்க் கணுக்கள் உடலில் புகும் நுண்ணுயிரிகளை வடிகட்டி அழித்து விடுகின்றன. அதனால் நுண்ணியிர்கள் உடலில் எல்லா பாங்களுக்கும் பரவாமல் தடுக்கப்படுகிறது.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  5. Wed.. 9, Feb. 2022 at 4.30.am

    கல்லீரல் :

    கல்லீரல் நமது உடலின் வலப்புறத்தில் வயிற்றுக்கு மேல், உதரவிதானத்துக் கீழ் அமைந்துள்ளது. கருஞ் சிவப்பு நிறமுடை
    யது. இரத்தக் குழாய்கள் நிறைந்த..உடலின் மிகப் பெரிய சுரப்பி.

    நமது உடலில், நுரையீரல், இதயம் எவ்வளவு முக்கியமானவையோ.. அதைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.. கல்லீரல்.

    காரணம் ...இதயத்தைச் சீராக துடிக்க வைப்பது கல்லீரல். நுரையீரலுக்கு வாயுப் பரிமாற்றம வேலை மட்டும்தான். கல்லீரல் செய்யும் பணிகள் ஏராளம், ஏராளம்.

    இரத்தக் குழாய்கள் சுருங்கி விரிந்து, இரத்த ஓட்டம் சீராகச் செயல்பட உதவுவது..இவ் கல்லீரலே..! மூளையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவது..இக் கல்லீரல்.

    உடலின் வெப்பத்தை.. 98.4f. டிகிரியில் நிலைநிறுத்துவது கல்லீரல் தான்.
    கல்லீரல்... எலும்பின் மஜ்ஜையில் இரத்த செல்களின் உற்பத்திக்குத் தேவையான வைட்டமின்களைச் சேமித்து வழங்கு கிறது.

    இரத்தம் உடலுக்குள்ளே உறைந்து போகாமல் இருக்க ஹைப்பாரின் என்ற நொதியை உற்பத்தி செய்கிறது.

    கல்லீரல் வேலை செய்யாவிடில்...ஈரத்தக் குழாய்கள் வெடித்து மரணம் ஏற்படும்.

    உடலின் உறுப்புகளுக்கு ஏற்படும் ஊறுகளைத் தடுக்கின்ற ஹிஸ்ட்டமின் என்ற மருந்துப் பொருளை உற்பத்தி செய்கிறது.

    முக்கியமாக ... தாவர உணவுகளில் உள்ள மஞ்சள் நிறச் சாறுகளிலிருந்து.. ஏ வைட்டமினை உற்பத்தி செய்கிறது.

    நாம் உண்ணும் மாவுச்சத்துள்ள உணவை.. குளுக்கோஸை..கிளைக்கோஜனாக மாற்றிச் சேமித்து வைக்கிறது. கொழுப்பு செரிமானமாக உதவும் பித்த நீரைச் சுரக்கிறது. கொழுப்பை எரிபொருளாக்கி உடலுக்கு வெப்பத்தை ஏற்படுத்துகிறது. புரதம் செரித்தவுடன்.. சயனைடு போன்ற விஷத்தன்மையுடையதாக மாறுகிறது. அணு அளவுகூட இரத்தத்தில் கலக்காத வாறு தடுத்து உடலுக்கு உகந்த அமினோ அமிலங்களாக மாற்றுகிறது. பின்னர் தேவைக்கேற்ப அமினோ அமிலங்களை உடலுக்கு வேண்டிய எரிபொருளாக மாற்றி... அவற்றின் கழிவுப் பொருட்களை யூரியாவாக நீக்குகிறது.

    இவ்வாறு.. இது நடைபெறவில்லை யென்றால்.. சிறுநீரகத்தில் கழிவுப் பொருள் அடைப்பு ஏற்படும். சர்க்கரையையும், புரதத்தையும், தேவையான சமயத்தில் இரத்தத்தில் சேர்க்கிறது.

    மேலும்... கல்லீரல் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகளை உருவாக்கும்... உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும்...வைரஸ்களையும், பாக்டீரீயாக்களையும் எதிர்த்து வெளியே தூக்கி எறியும். ஆகவே..நச்சுப் பொருட்களால் உடலுக்குத் தீங்கு நேராதவாறு..அதனின் பித்த நீர் பாதுகாக்கிறது. உடலிலுள்ள அனைத்து நச்சுப் பொருட்களையும் முறித்து விடும் ஆற்றல்.. கல்லீரலுக்கு உண்டு.

    அதிகமான நச்சு மருந்துகளின் உபயோகத்தாலும், மிதமிஞ்சிய மதுபானத்தாலும்.. கல்லீரல் பாதிக்கப்படுகிறது. அவ்வாறு கல்லீரல் பாதிக்கப்படின்.. செரியாமை, வயிற்று வலி, குடற்புண், ஈரல் அரிப்பு, காய்ச்சல், மஞ்சள் காமாலை, இரத்தக் கொதிப்பு, இதய நோய், இரத்த வாந்நி, வாயு போன்ற நோய்களால்..பாதிக்கப்படலாம்.

    கல்லீரலில் ஈரலரிப்பு ஏற்பட்டால் மரணம் நிச்சயம்.

    ஆகவே.. கல்லீரலை நாம் பாதுகாக்க வேண்டும். அவ்வாறு செய்யின்.. கல்லீரல் நம்மைப் பாதுகாக்கும்...என்பது உறுதி.

    கல்லீரல் இல்லையென்றால்... ஆண் பெண் உறவே இல்லை. இப்பாலுணர்வு சுரப்பிகளில் உற்பத்தியாகும் ஹார்மோன்களைச் சீர்படுத்துவது..இக்கல்லீரல் தான். இச்செயல்பாடு இல்லாவிடில்.. ..ஒன்று மனிதன் பாலுணர்வு உணர்ச்சியில் வெறிபிடித்த வனாக இருப்பான்.. இல்லையேல்...மலடாக இருப்பான்.

    ஆகவே... கல்லீரலைப் பாதுகாக்க சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

    வாழ்க வளமுடன்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  6. Sun. 6, Fri. 2022 at 11.15 am

    திரு உலா......!

    சிவபெருமான் திருமுன் அறங்கேறிய உலா...!

    சேரமான் பெருமாள் நாயனார் அருளிய .. திருக்கைலாய ஞான உலா ...(திரு உலா)

    சேரமான் பாடிய திருக்கைலாய ஞான உலாவே தமிழிற்கு ... முதல் திரு உலா.

    சிவபெருமான் திருக்கயிலையில் எழுந்தருளியுள்ளார். தேவர்கள் பெருமானைக் காண வேண்டுமென்ற பெருவேட்கையோடு, திருக்கோயிலின் முன்னர் சென்று, நின்று வேண்டுகின்ற னர்.

    அவர்கட்கு இரங்கிய பெருமான் ஒரு நாளில் தம்மை அழகு பெறச் செய்து கொண்டு வசுக்கள் போற்றிட, முனிவர் கள் வாழ்த்துக் கூற பன்னிரு கதிரவர் கள் பல்லாண்டிசைக்க, நாரதர் யாழ்மீட்ட பல்வேறு சிறப்புகளுடன் உலா புறப்பட்டார்.

    எழுவகைப் பெண்கள் இறைவனைக் கண்டு காதல் கொள்கின்றனர். அவர்கள் மயங்கிய நிலையில் பாடப் பெற்றதே ... இவ்வுலா.

    1) பேதை
    2) பெதும்பை
    3) மங்கை
    4) மடந்தை
    5) அரிவை
    6) தெரிவை
    7) பேரிளம் பெண்

    இவ்வெழுவகைப் பெண்கள் தன்னிக ரற்ற தலைவன் ஒருவன் உலா வருகின்ற போது அவனின் அழகிய தோற்றத்தைக் கண்டு, பேதலித்துத் தம் எண்ணங்
    களைக் கலிவெண்பாவால்.. பாடப் பெறுவதே இத் திருஉலா ஆகும்.

    *இது ஒருதலைக் காமமாகிய கைக்கிளைத் திணையைச் சாரும்.*

    சிவபெருமானின் முழு முதல் தன்மையை சேரமான் விளக்கும் திறம் அறிந்து நாம் மகிழ வேண்டிய ஒன்று.

    கயிலையில் அரங்கேற்றப்பட்ட இவ்வுலா ஆண்டுள்ள..மாசாத்தனார் வாயிலாகத் திருப்பிடவூர்க்கு வந்து தமிழ்நாட்டில் உலாவுவதாயிற்று.

    *உலா .... திரு எனத் தொடங்கப் பெற்று ... உலா என முடிகின்றது.* எனவே இது திரு உலாவாம்.

    ஆகவே..இது ஆதிஉலா எனவும் வழங்குகின்றது. உலாவின் தொடக்கம் இதுவே.

    சேரமான் திருக்கயிலைக்குச் செல்லும் வழியில் இவ்வுலாவை மிக விரைவாகப் பாடினார்.

    அருணகிரிப் பெருமானும் .. தம் திருப்புகழில் ...

    "ஆதியந்தவுலா ஆசு பாடிய சேரர்" எனச் சிறப்பித்தனர்.

    சிவபிரான் திருமுன் இவ்வுலா அரங்கேறியது என்பது எத்துணைச் சிறப்பு.

    திருச்சிற்றம்பலம்

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  7. Wed. 9, Feb. 2022 at 9.30 pm.

    தமிழ்க் கிழவி (ஒளவைக் கிழவி) பாடிய விநாயஹர் வணக்கம் + அதில் அடங்கியுள்ள மருத்துவம் :

    வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
    மாமலரால் நோக்கு உண்டாம் மேனிநுடுங்காது பூக்கொண்டு

    துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
    தப்பாமல் சார்வார் தமக்கு.

    இப்பாடலின் மேலெழுந்தவாரியான பொருள் ...

    யானை முகத்தவனைத் தப்பாமல் என்றும் வணங்கி வருபவர்களுக்கு... நல்ல வாக்கு, நல்ல மனம், இலட்சுமி தேவியின் நல்ல பார்வை ஆகிய இம் மூன்றும் கிட்டும்.

    இப்பாடலில் மறைந்துள்ள மற்றொரு பொருள் :

    நீண்ட நாள் வாழ்வதற்குரிய அருமருந் தான... காயகல்பம் செய்யும் முறையைப் ஒளவைப் பாட்டி கூறுகின்றாள்.

    1) துப்பார் திருமேனி − திரு ..என்பது அடைமொழி.
    துப்பு − குப்பை மேனி. (இச்செடி எங்கும் முளைத்திருக்கும்.)

    2) தும்பிக்கையான் பாதம் − ஆனை நெருஞ்சி.

    3) மாமலர் − தாமரை

    மருத்துவம் :

    குப்பைமேனி இலை, ஆனை நெருஞ்சி இலை, ஓரிதழ் தாமரை... இவற்றைச் சம அளவில் எடுத்து, பனங்கற்கண்டு, பசுநெய், தேன் ஆகிய மூன்றுடன் சேர்த்துச் செய்யக் கிடைப்பதே... காயகல்பம்.

    இம்மருந்தை உண்டால் .. நல்ல வாக்கு வன்மை பெறும். நல்ல மனம் உண்டு. அதாவது..உடலில் எந்த இடையூறும் வராது.

    நல்ல நோக்கு − நல்ல பார்வை கிட்டும்.
    மேனி நுடங்காது − உடல் தொய்வு ஏற்படாது.

    வாழ்த்துவோமே... ஒளவைப் பாட்டியை. ஒளவைக் கிழவி ... நம் கிழவி. அமிழ்தின் இனிய சொற் கிழவி.... இத்தமிழ்க் கிழவி கூறியதை...பின்பற்றி நடப்போம். வாழ்க வளமுடன்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  8. Sat. 30, Oct. 2021 at 8.20 pm.

    சித்த மருத்துவம் :

    நோய்கள் பற்றிய விளக்கம் :

    1) சூலை : குத்தல்

    2) சூதக சூலை :
    மலடிகளுக்கு சூதகத்தினால் ஏற்படும் குத்தல் நோய்.

    3) விரணம் : திறந்த புண்.

    4) ஈளை : ஓர் சுவாச நோய். (சுவாசக் குழல்கள் சுருக்கம் அடைந்து, அதனால் மூச்சுத் திணறலையும், நெஞ்சில் கபம் அடைத்துக் கொண்டும் துன்பப் படுவது).

    5) ஆம வாதம் :
    அஜீரணத்தால் வாயு குடலில் சேர்ந்து, மலபந்தமாகி வயிறு உப்பும் ஓர் வகை வாத நோய்.

    6) வெட்டைச் சூடு :
    பெண் பேகத்தினால் ஏற்பட்ட சூடு.

    7) விலாவளை :
    விலாப்பக்கத்தில் எழும்பும் ஒர் கட்டி.

    8) முதுகு வாளை :
    முதுகில் உண்டாகும் ராஜ பிளவை .

    9) கீழ் நோய் :
    ஒவ்வாமை பொருந்துகளில் வலியையும், வீக்கத்தையும் உண்டாக்கும் நோய்.

    10) வெண் குஷ்டம் :
    உடம்பில் வட்ட வட்டமாய் பல இடங்களில் வெள்ளை விழுந்து, விகாரமாக்கி அவைகளின் ஓரம் தடித்து விரிவாய் படர்ந்து காணப்படும்.

    11) வெள்ளை :
    பெண்களின் மாதாந்திர வெள்ளை ஒழுக்கு.

    12) கபால குட்டம் :
    சிறிய ரணக் கொப்புளங்கள் கண்டு சிவந்து, பிறகு கறுத்தும், குழி விழுந்தும், சீழும், தண்ணீரும் ஒழுகி, தலை மண்டை ஓட்டின் நிறம்போல்....உடம்பெல்லாம் வெளுத்துக் காணும் ஒரு வகை குட்ட நோய்(குஷ்டம்).

    13) இடிசூலை :
    மண்டையடி, மண்டை குத்தல்.

    14) அரையாப்பு :
    தொடை இடுக்குகளில் அல்லது கவட்டில் நெறிக்கட்டி பெருத்து கட்டையைப் போல் காணும் ஓர் வகை விரண நோய்.

    15) சிரகம்பம் :
    வாயு மிகுதியால் குருதி பொங்கி, நரம்புகளில் புகுந்து, தலை முதல், உடம்பு முழுவதையும் தாக்கி, காது கேளாமை, கை கால்கள் வசமிழத்தல், நினைவு கலங்கல், நெடுமூச்சு, கொட்டாவி, தலை நடுங்கல் ஆகிய குணங்களைக் (குறிகளை்) காட்டும்.

    16) அள்ளு நோய் :
    விலாப்புறங்களில் கபம்கூடி , அதனால் அடிக்கடி மூச்சு வாங்கி உடனே இழுப்பு வந்து துன்புறுத்தும்.

    17) வளி நோய் :
    வாதக் குற்றம் (வளி) தன்னளவில் மிகுந்தோ அல்லது குறைந்தோ இருந்து, உடம்பில் குத்தல், குடைதல், நோதல், நடுக்குதல் போன்ற குண பேதங்களை உண்டாக்கி.. பலவிதமான துன்பங்களை உண்டாக்கும்.

    18) கருங்குட்டம் :
    முழங்கால், மூக்கு இவ்விடங்களில் ஸ்பரிசமற்று கருப்பாய் படர்ந்து உடம்பு முழுவதும் தீப்போல் காந்தலும், நமைச்சலும் உண்டாகிச் சாம்பல் தூள் போல் உதிரச் செய்யும்.

    19) பெளத்திரம் :
    ஆசனவாயின் உள்ளேயும், வெளியே யும், பக்க வாட்டிலும், விரையிலும், ஆண் குறியிலும்... முளைகளாகவும், கட்டிகளாகவும் தோன்றி, வீங்கி மிக வேதனையுடன் காணப்படும்.

    20) மூலம் :
    மூலம் என்பது... முத்தோட மாறுபாட்டால்... சருமமும், மாமிச கொழுப்புத் தாதுக்களும் கோளாறடைந்து..ஆசன வாயினுள்ளும், வெளியிலும், மாமிச முளைகள் கண்டு, குதவாயிலை அடைத்துத் துன்புறுத்துவதாகும்.

    21) மேக சூலை :
    கை கால் கடுத்தல், குடைதல், கீழ்களில் சிவந்து வீங்கி, சூலத்தாற் குத்துவது போன்ற ஒலி உண்டாதல், நீட்டவும், மடக்கவும் முடியாமை..சில நேரங்களில் சுரம் காய்தல், மயக்கம், வியர்த்தல் போன்ற குறிகுணங்கள் உண்டாகும்.

    22) நரித்தலை வாதம் :
    இந்நோயில் முழங்கால் மூட்டில், செந்நீர் நிரம்பி, சிவந்து வீங்கி, மடக்கவும், நீட்டவும், நிற்கவும் முடியாமல் வலி மிகுதியால் வீங்கி காணும். நாடி படபடத்து ஓடும்.

    23) குன்மம் :
    மிகுந்த ஏப்பம், மலக்கட்டு, வயிறு நிறைந்த உணர்வு, உப்பிசம், குடலிரைச்சல், பலவீ்னம் வயிற்று வலி, அஜீரணம், வாந்தி, அசதி முதலியன தோன்றும்.

    24) அதிசாரம் :
    வயிற்றுப் போக்கு.

    25) பாண்டு :
    இரத்த சோகை.

    26) மதுமேகம் :
    விரையும், தண்டும், கழுத்தும்... மஞ்சளாகி அடிக்கடி நாழியளவில் நீரிறங்கும்.

    27) விருப்புதி :
    கட்டிகள்.

    28) பிரமேகம் :
    தேன்போல் குறுணியளவில் நீரிறங்கும்.

    29) கண்ட மாலை :
    தாய் தந்தையரின் உடம்பின் விகற்பத்தாலும், இரத்தக் கேட்டினாலும், கழுத்தைச் சுற்றி இருக்கும் கோளங்கள் வீங்கி, வலித்துச் சீழ் கொண்டு உடைந்து ரணமாகி, நெடுநாள் ஆறாமல் கிளைத்து துன்புறுத்தும் நோய்.

    குறிப்பு :

    நோய்களின் பெயர்களை அறிந்து கொண்டால்.. மருத்துவம் கொள்வது எளிது.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  9. Wed. 20, Oct. 2021 at 10.20 am.

    மனித உடலியல் ஓர் பார்வை ....!

    உடலியல் என்பது .....

    உயிரினங்களின் நடப்பு முறை, அவற்றின் மூலக்கருத்து, இயங்கும் முறை மற்றும் இயக்கும் முறை இவற்றை விவரிக்கும் ஓர் அறிவியல் ஆகும்.

    அதாவது... உலகிலுள்ள உயிர்களின் வாழ்க்கை முறை, உறுப்புகளின் அமைப்பு, வளர்ச்சி, அதன் இரசாயன மாற்றம் ஆகிய அனைத்தையும் விளக்குவது.. இந்த உடலியலாகும்.

    1552−ஆம் ஆண்டு... ஜீன்பெர்னல் என்னும் பெயர் கொண்ட பிரெஞ்சு மருத்துவரால் " உடலியல் " உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

    "Physiology" என்ற சொல் கிரேக்க மொழியான "Physiologokes" என்ற சொல்லிலிருந்து... பிறந்தது.

    இதன் பொருள்.... "இயற்கை அறிவு போதனை " என்பதாகும்.

    பெளதீகம், இரசாயனம், உயிரியல் (உடற் கூறியல்) ஆகிய இம் மூன்று துறைகளுமே ... உடலியலைத் தாங்கும், மூன்று தூண்கள் எனலாம்.

    இரத்த ஓட்டம், அணுக்களின் தன்மை,உயிரியல் பெளதீகம் (Biophysics) இவைகளைப் பற்றிய பல உண்மைக் கருத்துகளை மருத்துவப் புள்ளியல் (Medical Statisyics) மூலமாக நாம் நன்கு அறிந்து கொள்ளலாம்.

    ஓர் உடல் இயங்கும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்களைக் குறிக்கும் துறை "உடலியல் இரசாயனம்" (Biochemistry) எனப்படும்.

    உடற்கூறியல் (Anatomy) என்பது
    உடலமைப்பை விவரிக்கும் துறை.

    உடலமைப்பைப் புறக்கண்களால் படித்தறிவதைப் பேருயிரியல் (Macro anatomy என்றும்......

    அதே உடலமைப்பை நுண்நோக்கி (Microscope) கொண்டு பயில்வதை....
    Micro Anatomy) என்றும் நமக்கு அறிவியல் கற்றுத் தருகிறது.

    இவ்வாறாக....பல துறைகளின் மூலமாக, மனித உடலின் அமைப்பைப் பல கோணங்களிலிருந்தும் நாம் தெளிவாகக் கற்றுக் கொள்ள முடியும்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  10. Wed. 9, Feb. 2022 at 11. 20

    திருத்தொண்டர்கள் செய்த செயற்கரிய செயல் :

    1) இசைஞானியார் : சுந்தரரைப் பெற்று வளர்த்த தாயார். (திருநாவலூர்)

    2) சிறு தொண்டர் : அடியாராக வந்த சிவனார்க்குத் தன் ஒரே மகனை அறுத்துச் சமைத்து உணவு செய்தார். (திருச்செங்காட்டங்குடி)

    3) திருக்குறிப்புத் தொண்டர் : காலந்தவறியதால் துணி தோய்க்கும் கல்லில் தலையை மோதிக் கொள்ளச் சென்றது. ( காஞ்சி )

    4) திருநாவுக்கரசர் : தமிழ் மறை தந்தது. நஞ்சு தீண்டி இறந்த மகவினை உயிருடன் எழுப்பியது. (திருவாய்மூர்)

    5) மங்கையர்க்கரசியார் : திருஞானசம்பந்தரை அழைத்து வந்து பாண்டி நாட்டில் சைவத்தை நிலை நாட்டியது. ( மதுரை )

    6) விறன்மிண்டார் : திருத்தொண்டர் தொகை பாடக் காரணமாய் இருந்தது. (செங்குன்றூர்)

    7) கழற்சிங்கர் : சிவபூசைக்குரிய மலரை மோந்த தம் மனைவியின் கையை வெட்டியது. (செங்குன்றூர்)

    8) சோமாசிமாறன் : கழற்றிற்றறிவார் பார்க்க வேள்வி செய்தல் சுந்தரரின் திருவடிக்குப் பக்தி கொண்டது. (திருஅம்பர்)

    9) திருஞான சம்பந்தர் : தமிழ் மறை தந்தது. ஞானப்பால் குடித்தமை. எலும்பைப் பெண் ஆக்கியது. (சீகாழி)

    10) திருநீலகண்ட யாழ்ப்பாணர் : சம்பந்தருடன் சென்று யாழ் தொண்டு புரிந்தது. (திருஎருக்கத்தம் புலியூர்).

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  11. Wed. 17, Nov. 2021 at 8.10am.

    சித்த மருத்துவம் :

    விஷ்ணு கிரந்தி :

    வேறு பெயர்கள் :

    விஷ்ணு காந்தி, அபராசி, விஷ்ணு கரந்தை, பராசித, விட்டுணுக் கிரந்தி.

    தாவரவியல் பெயர் :
    Evolvulus Alsinoides

    குடும்பப் பெயர் :
    Convolvulaceae

    தெலுங்கு : Vishnukaranthi
    சமஸ்கிருதம் : Vishnu Kranta
    மலையாளம் : Vishnukanthi
    ஹிந்தி : Shyama Kranta
    கன்னடம் : Vishnu Kranthi

    வளரியல்பு : சிறு செடி.

    தாவரத்தின் புற அமைப்பு : நீள்வட்டமான, சொரசொரப்பான, பட்டுப்போன்ற வெண்மையான ரோமங்களால் சூழப்பட்ட நுனிகள் கொண்ட, ஈட்டி வடிவமான தனி இலைகள், மாற்றிலை அடுக்கத்தில் அமையப் பெற்றிருக்கும்.

    தனிமலர்கள் .நீலநிறத்தில், சக்கர வடிவத்தில் இலைக் கோணங்களில் பூத்திருக்கும். வெள்ளை, சிவப்பு நிறமான மலர்களைக் கொண்ட செடிகளும் உண்டு.

    பயன்படும் பகுதி : சமூலம்.
    சுவை : கைப்பு, சிறு காரம்.
    தன்மை : வெட்பம்
    பிரிவு : கார்ப்பு

    தாவர வேதிப் பொருள் :
    இதில் ஆல்கலாய்டு உள்ளது.

    செய்கைகள் :
    கோழையகற்றி, வியர்வை பெருக்கி, வெப்பமகற்றி.

    மருத்துவ குணங்கள் :
    இருமல், ஆண்மைக் குறைவு, எலும்புருக்கிக் காய்ச்சல், கண்ட மாலை, ஞாபக மறதி, நரம்புத் தளர்ச்சி காய்ச்சல், கோழை, இரைப்பு, வெட்டைச் சூடு.

    நோய் தீர்க்கும் முறை :

    * விஷ்ணு கிரந்தி சமூலத்தை குடிநீரிட்டுக் கொடுக்க... மேற்கூறிய நோய்கள் குணமாகும்.

    * விஷ்ணு கிரந்தி சமூலத்தை சீரகத்துடன் சேர்த்து அரைத்து பாலுடன் கலந்து கொடுக்க காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

    * விஷ்ணு கிரந்தி சமூலத்தை 3 கி வீதம் தயிருடன் கொடுக்க சீதபேதி, ரத்த பேதி குணமாகும். (உப்பு, புளி, காரம் தவிர்க்க வேண்டும்.)

    * விஷ்ணு கிரந்தி சமூலத்துடன் துளசி இலையையும் சேர்த்து குடிநீரிட்டு கொடுத்துவர அஜீரணம், வயிற்றுப் போக்குடன் கூடிய காய்ச்சல் நீங்கும்.

    * விஷ்ணு கிரந்தி சமூலத்துடன், தூதுவளை, கண்டங்கத்திரி, பற்படாகம் வகைக்கு 25 கி. சிதைத்து 1லி. நீரில் போட்டு 250 மி.லி ஆக காய்ச்சி தினமும் 3− வேளைகள் 50. மி.லி வீதம் குடித்துவர ... விடாத காய்ச்சலும் குணமாகும்.

    * விஷ்ணு கிரந்தி சமூலம் 5 கி. எடுத்து பால்விட்டு அரைத்து, பாலுடன் கலந்து வடிகட்டி தினமும், காலை, மதியம்,மாலை, என கொடுத்துவர .. காய்ச்சல்,இருமல், சீதபேதி, எலும்புருக்கி நோய்,இரைப்பு, வாத, பித்தத் தொடர்பான நோய்கள் நீங்கும்.

    * விஷ்ணு கிரந்தி, கீழா நெல்லி, ஓரிதழ் தாமரை சம அளவு எடுத்து அரைத்து 3 கி.வீதம் தினமும் 3−வேளைகள் உணவிற்கு முன் கொடுத்து பால் அருந்திவர ... வெட்டைச் சூடு, விந்து ஒழுகுதல், ஞாபக மறதி, நரம்புத் தளர்ச்சி முதலியன நீங்கி உடல் பலம் பெறும்.

    * விஷ்ணு கிரந்தி சமூலம் , கண்டங்கத்திரி, ஆடாதோடை, தூதுவளை வகைக்கு 30 கி. எடுத்து இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு 1 லி. நீரிட்டு 250 மி. சுண்டக் காய்ச்சி தினமும் 2− வேளைகள் 50 மி.லி. வீதம் கொடுத்துவர எலும்புருக்கிக் காய்ச்சல் நீங்கும்.

    * விஷ்ணு கிரந்தி இலையை உலர்த்தி சூரணமாக்கி 3 கி. வீதம் லேசான சுடுநீரில் கலந்து கொடுக்க ஆண்மைக் குறைவு தீரும்.

    * விஷ்ணு கிரந்தி சமூலத்தை சிறிது நீர் விட்டு அரைத்து விழுதாக்கி, 5 கி. வீதம் 40 − 80 நாட்கள் கொடுத்துவர கண்டமாலை நோய் குணமாகும்.

    *சமூலம் என்பது ஒரு செடியின் வேர் உட்பட அனைத்து பாகமும் அடங்கியது.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  12. Mon. 7, Feb. 2022, at 8.36 am.


    நந்தி பெற்ற நவ ஆகமங்கள்:

    1) காரணம்
    2) காமிகம்
    3) வீரம்
    4) சித்தம்
    5) வாதுளம்
    6) வியாமனம்
    7) கலோத்தரம்
    8) சுப்பிரம்
    9) மகுடம்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  13. Fri. 06, Jan. 2023 at 8.45 pm.

    இஞ்சி உலர்ந்தால் சுக்கு...

    *சுக்கின் வேறு பெயர்கள் ..எருக்கன்,வேர்க்கொம்பு, நவசுறு, கடுபத்திரம்,உபகுல்லம், ஆர்த்ரகம், வீரம், உபகுல்லம் செளவர்ணம், செளபாக்கியம்..என்பனவாம்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  14. Wed. 2, Nov. 2021 at 10.30 pm.

    "நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ".

    திருச்சிற்றம்பலம் ....

    திருமூல நாயனார் :

    திருமூலர் … அட்டமா (அணிமா) சித்திகள் பெற்ற ஒரு தவயோகி.

    இவரது இயற்பெயர் சுந்தரநாதன்.

    அறுபத்து மூன்று மெய்யடியார்களில் ஒருவர்.

    இவரது காலம்...கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு.

    ஆண்டுக்கு ஒரு பாடல் என மூவாயிரம் ஆண்டு காலம் வாழ்ந்து, மூவாயிரம் தமிழ் பாடல்களும், முந்நூறு மந்திரம் என உலகுக்கு பிரகடனப்படுத்திய ஒரு அருட்கவியாக, ஞானியாக கொள்வதை விட, அன்பே சிவமாக அறிவே தவமாகக் கொண்டு வாழ்ந்தவர்.

    அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
    அன்பே சிவமாவது யாரும் அறிந்த பின்
    அன்பே சிவமாய் அமர்ந்து இருப்பாரே !.

    சீவன் என்பது சிவயோகம். இத்தகு அன்பு மனம் கொள்வது தவயோகம் என்பது திருமூலர் வாக்கு.

    உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீணரை மூடர் என்றே யேசுகிறார்..

    அறிவு வடிவானவன் இறைவன் என்று அறியாதிருந்த தனக்கு இறைவனே தான், அறிவு வடிவானவன் என்று அறிவை அறியச் சொன்ன திருமூலர்...அன்பே கடவுள் என்கிறார்.

    மனத்தால் இறைவனை எண்ணித் துதிக்காமல் … பொய் பூசை புரிபவர்களை… "பாவிகள்" என்றே ஏசுகிறார்.

    பூசைக்குப் பூவும், நீரும் போதும்.. பொன்னாபரணமும், பொங்கல் படையலும் வேண்டாம் என்பது திருமூலர் கருத்து.

    பூசைக்கு இறைவனுக்குப் பாலும், தேனும், பலவண்ண மலர்களும் வேண்டாம்.. பச்சிலையே போதும். இதுவே பெரிய பூசை..
    பசுவுக்கு ஒரு வாய் உணவு….இல்லை என்று வருவோர்க்கு ஒரு உருண்டைச் சோறு.. இதுவே உயர்ந்த தானம்… இதுவே உன்னதமான வாழ்க்கை.. எல்லோரிடமும் அன்பாயிருத்தல்.. எனக் கூறும் திருமந்திர தமிழ் ஞானம், தமிழ் உலகுக்கு உதவிய மணிமகுடச் சிந்தனை..

    கடவுளிடம் கூட ஆசை வைக்காதீர்கள் என்கிறார். கடவுளிடம் பக்தி வைக்கலாம், அன்பு வைக்கலாம்.. ஆசை எதற்கு …?
    அன்பு என்பது உள்ளம் சம்பந்தப்பட்ட அக உணர்வு. ஆசை உடல் தொடர்புடைய புறப்பற்று. எனவே… ஈசனிடம் கூட ஆசை வேண்டாம் என்கிற மந்திர வாக்கு…நமக்கு மாபெரும் தத்துவ முத்திரை.

    திருமூலரின் திருமந்திரம், ஒன்பது தந்திரங்களாகத் தொகுக்கப்பட்டுள்ள பன்னிரு திருமுறைகளில்...பத்தாம் திருமுறை ஆகும்.

    முத்தாய்ப்பான ஈற்றுப் பாடலில் மூலன் உணரச் செய்த மூவாயிரம் தமிழ், முந்நூறு மந்திரம் என்று பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

    திருமூலர் எனப் பெயர் வரக்
    காரணம்.....!

    திருமூலர் (யோகி) ...திருக்கயிலாய மலையில் இருந்து புறப்பட்டு, அகத்தியமாமுனிவரிடத்து நட்பு கொண்டிருந்தமையால், அவரோடு சிலநாள் தங்கியிருத்தற்கு எண்ணி, வடகயிலையினின்றும் நற்றமிழ் கமழும் பொதிகை மலையினை நோக்கிப் புறப்பட்டு, திருவாவடு துறைக் காவிரிக் கரையில் உள்ள சாத்தனூர் வந்தார்.

    அங்கு ஓரிடத்தில் பசுக்கள் கூட்டமாக நின்று கதறிக் கொண்டிருப்பதைக் கண்டார். அருகே சென்று பார்த்த போது, பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த "மூலன்" என்னும் பெயர் கொண்ட இடையன் இறந்து கிடப்பதை யும், அதனால் பசுக்கள் துன்புற்றுத் துடிக்கின்றன என்பதையும் உணர்ந்து அவற்றின் துயர் துடைக்க நினைத்து …

    தன்னுடைய யோக சித்தியினாலே, தன் உடலை ஓரிடத்தில் மறைத்து வைத்து விட்டு தன் உயிரை மூலன் உடம்புக்குள் புகவிட்டார்.

    உடனே மூலன்.. உறங்கி எழும்பியது போல உயிர் பெற்றெழுந்தான். மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து துள்ளி.. மேய்ச்சல் நிலம் விட்டு வீடு நோக்கிப் போயின.

    யோகியும் அவற்றுடனே சென்றார். பசுக்கள் வீடு திரும்பியதும், ஒரு பசு மூலன் வீட்டு வாசலில் வந்து நின்றது..யோகியும் நின்றார். நின்ற பசுவின் குரல் கேட்டு, மூலன் மனைவி வீட்டினுள்ளிருந்து வந்து மூலனை வரவேற்றாள்.

    நிலமையை அறிந்த யோகி … நமக்கும், உனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை எனக் கூறி வந்த வழியே திரும்ப … மூலன் மனைவி தன் கணவனுக்கு சித்தம் கலங்கிப் பித்தம் பிடித்து விட்டதென எண்ணிச் சாத்தனூர் பெருமக்களைக் கூவி அழைத்துச், சேதியைக் கூறி, அவ்வூர் பெரியவர்கள் வந்து பார்த்தனர்.

    யோகியின் செயல்கள், பேச்சு எதுவும் மூலனுடையதாக இல்லை. உடல் உரு மட்டுமே மூலன், மற்றபடி இவர் மூலன் அல்ல வேறு என்று எண்ணி, மூலன் மனைவியிடம்.. இவர் இனி வந்தவழியே செல்லட்டும்.. இவர் உன் கணவரல்ல..எனக் கூறிவிட.. மூலன் மனைவி, வருந்தி அழுவதைத் தவிர வேறெதும் செய்ய இயலாது இருந்து விட்டாள்.

    யோகியும் வந்த வேலை முடிந்து விட்டது என்று முன்பு மறைத்து வைத்திருந்த உடலைத் தேடி அங்கு சென்றார்.

    மறைத்து வைத்திருந்த உடல் அங்கில்லாதது மறைந்து இருப்பதை உணர்ந்தார். இதுவும் ஈசன் செயல் என.. இடையிலே பெற்ற மூலன் உடலுடனேயே இருந்தார்.

    இதுவே … "திருமூலர்" எனப் பெயர் வரக் காரணமாயிருந்தது.

    திரு என்னும் அடை மொழியையும்….
    ஆர் என்னும் சிறப்பு விகுதியும் பெற்று,
    மூலன் உடம்பெடுத்த யோகி… திருமூலர் ஆயினார்.

    ReplyDelete
  15. எனவே திருமூலர் என்பது … திருமந்திரம் பாடிய திருமூலரின் சொந்தப் பெயர் அல்ல.
    பின் வந்த பெயர் ஆகும். இவரது இயற்பெயர் சுந்தரநாதன்.

    இவர் இயற்றிய மூவாயிரம் தமிழ், முந்நூறு திரு மந்திரம்.. தொட்ட இடமெலாம் தித்திக்கும் உள்ளில், உணர்வில், உயிரில்.

    மந்திரம் என்பது ..; சொல்லின் அதிர்வு. அதை மனனப்படுத்தும், உச்சாடனம் செய்யும் மனத்தின் ஆற்றல், சக்கரங்கள், அட்சர அமைப்புகள் இதனை விளக்குபவையே, திருமந்திரம் ஆகும்.

    தன் படைப்பின் நோக்கத்தையும், பிறப்பின் காரணத்தையும் பாரறியச் பிரகடனப் படுத்திய திருமூலர், மானிடச் சிறப்புக்கு மகத்துவம் சேர்த்த மாமனிதர்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  16. இம்பூறல் :

    வேறு பெயர்கள் : இன்புறா வேர், சாயவேர், இம்பூரா வேர், சிறு வேர், இராமேசுர வேர்.

    தாவரவியல் பெயர் :
    Oldenlandia Unbellata.
    குடும்பப் பெயர் : Rubiaceae.
    ஆங்கிலப் பெயர் : Indian Maddar.
    தெலுங்கு : Chiruveru.
    சமஸ்கிருதம் : Rajana.
    மலையாளம் : Chay Ver.
    ஹிந்தி : Chirvai
    கன்னடம் : Chaya Beru.

    வளரியல்பு : சிறு செடி
    புற அமைப்பு : வெண்மையான சிறிய மலர்கள் சைமோஸ் மஞ்சரியில் அமையப் பெற்றிருக்கும். ஈட்டி வடிவமான, அகலத்தில் குறுகிய, வட்ட இலை அடுக்கத்தில் அமைந்த இலைகள் கொண்ட தாவரம்.

    பயன்படும் பகுதி : சமூலம்.(முழு தாவரம்)
    சுவை : இனிப்பு.
    தன்மை : தட்பம்.
    பிரிவு : இனிப்பு.

    தாவர வேதிப் பொருள் :

    இதன் சமூலத்தில் Alizarine என்ற வேதிப்பொருள் உள்ளது.

    செய்கைகள் : கோழையகற்றி, குருதிப் பெருக்கி.

    மருத்துவ குணம் :

    பித்தத்தைப் போக்கும், கப நோய்களை யும், இரத்தப் போக்கையும் கட்டுப்படுத் தும். கோழை, விக்கல், வயிற்றுளைச்சல் ஆகியன தீரும்.

    <௦> நோய் தீர்க்கும் முறைகள் :

    <> இம்புறா வேரை நிழலில் காய வைத்து, பொடி செய்து, அரிசி மாவுடன் கலந்து, இரண்டு அடை வீதம்... காலை, மாலை உண்டுவர "கப நோய்கள்" நீங்கும்.

    <®> இதன் இலைச் சாற்றை, பாலுடன் கலந்து சர்க்கரை சேர்த்து 2− வேளைகள் அருந்திவர... மார்பு எரிச்சல் தணியும்.

    <=> இலையும், வேரும் சேர்ந்து குடிநீரை 30 மி.லி. வீதம் உட்கொண்டு வர ... இளைப்பு, இரைப்பு, இருமல் தீரும். இதன் நீரை புண்களுக்கு கழுவ புண்கள் விரைவில் ஆறும்.

    <¢> உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சலுக்கு.. இதன் இலைச் சாற்றை, தடவி வர விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

    <© இம்புறா, வல்லாரை சம அளவு எடுத்து 1 லி. நீரில் கொதிக்க வைத்து, 250 மி.லி சுண்டியதும் 40 மி.லி. வீதம் தினமும 2−வேளைகள் பருகிவர,... நுரையீரல் நோய்கள் நீங்கும்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  17. Thu. 2, Jan. 2022 at 2.19 pm.

    கரும்பு(Saccharum Officinarum)... !

    பொங்கல் வந்தாச்சு... கரும்புகள் வந்து குவிந்தாச்சு. அனைவர் வீடுகளிலும் கரும்புக்கட்டு வந்தாச்சு. தோரணமாக வீட்டு வாயிலில் இருபுறமும் கரும்பு வைத்து கட்டிடுவோம். பின்னர், அமர்ந்து கரும்பை சுவைக்க ஆரம்பித்திடுவோம். இது வழக்கமாக காலங்காலமாக நடக்கக்கூடிய ஒன்று.

    ஆனால்...இந்த கரும்பின் மருத்துவம் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

    ஆமாங்க..இக்கரும்பில் அநேக மருத்துவங்கள் பொதிந்திருக்கின்றன..

    என்னவென்று பார்க்கலாம்....!

    சர்க்கரைக்காகப் பெரும் அளவில் பயிரிடப் பெறும் தாவரம். இதன் வேர், சாறு, இச்சாற்றிலிருந்து செய்யப்படும் சர்க்கரை என்று தான் நாம் அறிந்திருப்போம்.

    ஆனால்.... கரும்பில் பல வகைகள் உண்டு.
    அவை.... செங்கரும்பு, புல்லக்கண்டங் கரும்பு, ரசதாளிக் கரும்பு... என மூவகை உண்டு.

    சிறுநீர்ப் பெருக்கல், புண்ணழுகல் நீக்கல், மலமிளக்குதல், உடலுரமாக்கல், பல்லுக்கு உறுதி, விக்கல், வாய் குமட்டல், வாத, பித்த தோஷத்தை நீக்குதல் போன்ற மருத்துவப் பண்புகள் இக்கரும்பில் அடங்கியுள்ளன.

    * 10 கிராம் கற்கண்டுப் பொடியுடன், 3 கிராம் பொரித்த வெங்காரப் பொடி கலந்து, காலை, மாலை என இருவேளை 7−நாட்கள் சாப்பிட நீர்த்துப் போன விந்து இறுகும்.

    * 5 கிராம் சர்க்கரையை 15 மி.லி. சுத்தமான நீரில் கரைத்து ஓரிரு துளி கண்ணில் விட, கண்வலி, கண் அழற்சி ஆகியவை தீரும்.

    * கரும்பைத் துண்டு துண்டாக நறுக்கி, அனலில் வைத்து சிறிது வெந்தபின் எடுத்து, அம்மியில் வைத்து நைய இடித்துப் பிழிந்து அதன் சாற்றை வடிகட்டிக் கொடுக்க.... வாய்குமட்டல், விக்கல் முதலிய பித்த ரோகங்கள் நீங்கும்.

    * கரும்புச் சாற்றுடன், தயீர் கலந்து குடித்துவர உடலெரிச்சல் நீங்கும்.

    * 30 கிராம் கரும்பு வேரை சிதைத்து,
    1 லிட்டர் நீரிலிட்டு சுண்டக் காய்ச்சி, காலை , மாலை பருகி வர, சிறுநீரைப் பெருக்கி, நீரெரிச்சலைத் தணிக்கும்.

    * மேலும்.... செங்கரும்பின் ரசம் பித்த தோஷத்தையும்...

    ரசத்தாளிக் கரும்பினது சாற்றில், தாக வேட்கை தணிப்பும்....

    புல்லகண்டம் கரும்பின் சாறு... வாத தோஷத்தையும் போக்கும்.

    இச்சர்க்கரையுடன் தேன்மெழுகு கலந்து, மேற்பூச்சாகத் தடவி வர பால்பருக்கள் உதிர்ந்து விடும்.

    சாற்றும் பெருங்கரும்பைச் சற்றே யனல்வெதுப்பித்
    தோற்றமுறுஞ் சாற்றைச் சுவைத்திடவே − சீற்றமுறும்
    பித்த மருசியுடன் பேசவொணா விக்கலறும்
    நித்த மறிவாய் நிசம்.

    என்பன போல் கரும்பில் இத்தனை மருத்துவப் பயன் அடங்கியுள்ளன.

    ஆகவே, கரும்பைச் சுவைப்போம்... 2023−ஆம் வருடத்திலிருந்து வளமான வாழ்வு வாழ்வோம்.

    வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.

    வாழ்க வளமுடன்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  18. We. 9, Feb. 2022 at 9.23. pm.

    7க்குள்−12.

    ஆடுசே வீணை அலவனரி பெண்துலைதேள்
    நீடுவிற்சு ருக்குடமீ னே.

    1) ஆடு−மேஷம்
    2) சே−ரிடபம்
    3) வீணை−மிதுனம்
    4) அலவன்−கடகம்
    5) அரி−சிம்மம்
    6) பெண்−கன்னி
    7) துலை − துலாம்
    8) தேள் − விருச்சிகம்
    9) வில் − தனுசு
    10) சுரு − மகரம்
    11) குடம் − கும்பம்
    12) மீன் − மீனம்.

    எழுத்துக்கள் ...7.
    அதாவது....

    1. ஆடுசே 2. வீணை 3 அலவனரி
    4. பெண்துலைதேள் 5. நீடுவிற்க
    6. ருக்குடமீ 7. னே

    இவையே.. 7−க்குள் 12..என்பதாம்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  19. Fri. 13, Jan. 2022 at 12.25 pm.

    திருமந்திரம்....!

    * முதல் தந்திரம்....!

    நில்லாமையையே நிலையாகவுடைய இவ்வுலக இயல்பு காட்டி, அதனை உணர்ந்த உயிர் கொளத்தகும் நல்லியல்புகள் சிலவற்றை விவரிக்கிறது.

    * 2−ஆம் தந்திரம் ....!

    அவ்வாறாய ஒழுக்க நெறி நின்றார்க்கு இறைவன் செய்து வரும் அருளிப் பாடுகளை விவரித்து , மேலும் அப்பரம் பொருள் மீது பற்றுக் கொள்ளுமாறு அருளுகின்றது.

    * 3−ஆம் தந்திரம்....!

    அவ்வாறு பற்றாகக் கொண்ட பரம் பொருளை உள்முகப் படுத்தி, அதனுடன் ஒன்றுபடுதற்குரிய வழி முறைகளைக் கூறுகிறது.

    * 4−ஆம் தந்திரம்.....!

    இறைவனை உள்முகப்படுத்தி உணரத் தக்க உயிர்கள் மேலும் ஒலி வடிவான மந்திரங்களை உணர்ந்தும்,தெளிந்த் எண்ணற்குரிய வாயில்களை விவரிக்கின்றது.

    * 5−ஆம் தந்திரம்.....!

    இவ்வாறு நல்லாறு தெரிந்துணர்ந நயத்தகு அடியவர்க்குச் சைவ சித்தாந்த மெய்ப் பொருள் நுவலும்படி முறைகளையும், நெறிமுறைகளையும் விவரிக்கின்றது.

    * 6−ஆம் தந்திரம்...!

    இவ்வகையில் உணர்ந்து தெளீந்த உயிர்கள் குருவருளால் மேலும் பற்றற முயலுதற்குரிய தவநெறிச் சார்பை விளக்குகின்றது.

    * 7−ஆம் தந்திரம்....!

    இவ்வாறு படிப்படியாக உயர்ந்து நிற்கும் அருட் பழக்கம் உடையார்க்கு அகத்தும், புறத்தும் வழிபடுதற்குரிய நெறி முறைளும் அவற்றோடு இயைபுடைய பிறவும் அறிவுறுத்தப் படுகின்றது.

    * 8−ஆம் தந்திரம் ......!

    இவ்வாறு உயர்நிலை பெற்ற உயிர்கள் இறையருளை அணுக அணுகக் கிடைக்கும்அருள் நலன்களை விவரிக்கின்றது.

    * &9−ஆம் தந்திரம்......!

    இறைவனின் இன்அருள் பெறுதற்கு இலக்காகி நிற்கும் இவ்வுயிர்கள் திருவைந்தெழுத்தையும்,இறைவனின் திருக்கூத்தியல்புகளையும் எண்ணியவாறு வீட்டின்பம் பெறும் மாட்சியை விவரித்துரைக்கின்றது.


    பொருள் திறன் இதுவாகச் சிறப்பாக மேலும் குறிக்கத்தக்க சில பொருளுண்மைகளும் உளது.

    செந்தமிழ் சேர்ந்த பதினெண் மொழிகளும் இறைவன் அருள் நலம் விரிப்பனவேயாம்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  20. அய்யா.. வெ.சாமி. அவர்களுக்கு நமஸ்காரம். தொடர்ந்து மேல்நிலை கணக்குப் பதிவியல் பதிவும் அனுப்புகிறேன். , அய்யா.

    ReplyDelete
  21. இறைவனுக்கு செய்யும் அபிஷேகமும் அதன் பலன்களும்!

    சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்ய ஆயுள் அதிகரிக்கும்.

    • குடும்ப ஒற்றுமைக்கும், குதூகலத்திற்கும் இறைவனை இளநீரினால் அபிஷேகம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

    • நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய பிரச்னை தலையெடுக்காது

    • அரிசி மாவினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை தீரும்.

    • சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய காரிய சித்தி உண்டாகும்.

    • கரும்புச்சாறு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும்.

    • நல்ல பசுந்தயிரினால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    • மனதில் தோன்றும் இனம் புரியா பயத்தை நீக்க எலும்பிச்சை சாற்றால் அபிஷேகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

    • இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்தால் வாழ்வும் இனிமையாகும். குரலும் தேன் குரலாகும்.

    • பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய உடல் நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும். அதேபோல சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டுவித செல்வங்களையும் அடையலாம்.

    • பஞ்சகவ்யத்தால் அதாவது பசுவின் ஐந்து உப உற்பத்தியான பால், நெய், தயிர், சாணம், கோமியம் சேர்த்து அபிஷேகம் செய்ய பாவங்கள் கரைய உதவும்.

    • நம்மை காக்கும் கடவுளுக்கு முதலில் தூய நீர், மஞ்சள் நீர், ஆகியவற்றில் நீராடிய பின் பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறுகிறது. இவைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தத்துவம் இருக்கிறது

    • தூய வாழ்கை வாழ வேண்டும் என்ற நமது எண்ணத்தை நீர் அபிஷேகத்தால் இறைவனிடம் வெளிப்படுத்துகிறோம்.

    • மங்களமும், ஆரோக்கியம் பெருக வளம் கொண்ட வாழ்வைப் பெற மஞ்சள் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    • களங்கமற்ற மனம் வேண்டி செய்யப்படும் அபிஷேகம் பாலாபிஷேகம்.

    • தேயத்தேய சந்தனம் மணப்பது போல் பிறருக்காக உழைத்து, வாழ்க்கையில் தியாகம் புரிவதைக் குறிக்கும்.

    • பன்னீரால் அபிஷேகம் செய்தால் பன்னீர் போன்ற தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கும்.

    • விபூதி அபிஷேகம் செய்வது எதற்காக தெரியுமா? அதன் மூலம் நல்லதொரு தத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகில் என்னதான் அனுபவித்தாலும் இறுதியில் எல்லாம் ஒரு பிடி சாம்பல்தான் என்பதை விபூதி அபிஷேகம் உணர்த்துகிறது.

    ஆகையால் நாம் என்ன செய்கிறோம்? எதற்காக செய்கிறோம் என்பதை புரிந்து கொண்டு செய்வது சாலச் சிறந்தது.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. Mon. 16, Jan. 2023 at 9.50 am.

    இன்றைய மருத்துவம்....

    மருதாணிச் செடி......!

    சொல்லுநகக் கண்களிலே சுற்றிவரும் புண்ணரிப்புக்
    கொல்லும் மதுமேகங் கொம்மைமுலை − மெல்லியர்க்குக்
    காணும் பெரும்பாடு கட்டழிக்கும் வெட்டையெலாம்
    நாணுமரு தோன்றிக்கு நாடு.

    பாடலை ஊன்றிக் கவனித்தால், மேற்கண்ட நோய்கள் தீரும்.. என்பதை அறியலாம்.

    மருதாணிச்் செடி :

    வேறு பெயர்கள் :

    மருதோன்றிச் செடி , அழவணம் , சரணம், ஐவணம்.

    தாவரவியல் பெயர் : Lowsnia Alba - Leaves.

    இவங்களுக்கும் நம்மை மாதிரி குடும்பம் உண்டு.

    ஆகவே.. இவர்களின் குடும்பப் பெயர் : Lythraceae.

    ஆங்கிலப் பெயர் : Henna plant.
    தெலுங்கு : Goranta
    சமஸ்கிருதம் : Kurantaka
    மலையாளம் : Marutoni
    ஹிந்தி : Mehendi
    கன்னடம் : Gorantte.

    இதில் பயன்படும் பகுதி.... இலை, பூ, விதை, பட்டை.

    சுவை : துவர்ப்பு.
    தன்மை : வெப்பம்
    பிரிவு : கார்ப்பு.

    இதன் இலையில்... Lawsone என்ற சாயப் பொருளும் , குளுகோசைடும் உள்ளன.

    செய்கை.... சங்கோசனகாரி , பித்தகாரி.

    சங்கோசனகாரி என்பது...தங்களுக்கு ஏற்கெனவே அளித்துள்ளேன். மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்...

    சங்கோசனகாரி − Astringent

    சதை , நரம்பு முதலியவைகளைச் சுருங்கச் செய்யும் மருந்து.

    பித்தகாரி என்பது ... Cholagogue.
    அதாவது... பித்த நீரை விருத்தி செய்யும் மருந்து.

    மேற்கண்ட பாடலின் விளக்கம்....

    மருதோன்றி இலையால் நகக் கண்களிலே சுற்றி அரிப்புடன் வருகிற ரணங்கள், மதுமேகம், பெரும்பாடு,வெட்டை முதலிய ரோகங்கள் நீங்கும் என்பதே இதன் பொருள்.

    இதனை உபயோகிக்கும் முறை....!

    * மருதாணி இலையை அரைத்து, மேக வாயு பிடிப்புகளுக்குப் பற்று போடக் குணமாகும்.

    * மருதாணி இலையை அரைத்து ்நெற்றியில் பற்றுப்போட தலைவலி தீரும்.

    * இதன் இலையை அரைத்து நீரில் கலந்து வாய் கொப்பளிக்க... வாய்ப்புண், சிறுகாயம் முதலின குணமாகும்.

    * இதன் இலையையும், விதையையும் சமபங்கு எடுத்து, வெண்ணெய் போல அரைத்து மிளகு அளவில் துணியில் முடிந்து கருவாயில் திணித்தாலோ, அல்லது இலையின் ஊறல் க௯ஷாயத்தை கருவாயில் இயற்கை எனிமா மூலம் செலுத்தி வந்தாலோ... வெள்ளை , பெரும்பாடு ஒரு வாரத்தில் குணமாகும்.

    * இதன் இலையைச் சுத்தமாக சலத்தில் போட்டு, வேக வைத்து வடித்து வாய் கொப்பளிக்க வாய் ரணம் ஆறும்.

    * இதன் இலையை, நைசாக அரைத்து, ஒரு நெல்லிக்காய்ப் பிரமாணம் பசுவின் பாலில் கரைத்து.. 2 அல்லது 3 தடவை வடிகட்டித் தினம் காலையில் 1−வேளை மட்டும் 3−நாள் சாப்பிட்டுப் பால் அன்னம் உண்ண, அதிக நீர்போதல், வெள்ளை,பெரும்பாடு முதலிய ரோகங்கள் போம். குழந்தை இல்லாதவர்கள் குழந்தைப் பேறு அடையலாம்.

    இதன் இலையை வெண்கரு விட்டு அரைத்துச் சொத்தை நகங்களுக்கு வைத்துக் கட்டி, 3− நாள் ஈரம்படாமல் வைத்து, இவ்வாறு 4 அல்லது 5 தினத்திற்கு ஒரு முறை செய்து கொண்டுவர... சில தினத்தில் சொத்தை நகங்கள் போய்ச் சுத்தமான நகங்கள் முளைக்கும்.

    * இந்த இலையை அரைத்து நல்லெண்ணெயில் கலக்கிக் கருகாமல் (பச்சை நிறம் மாறாமல்) காய்ச்சி வடித்துக் கூந்தலுக்குத் தடவி வர மயிர் செழிப்பாக வளரும்.

    இதுவரை... நாம் மருதோன்றி இலையை மட்டுமே மருத்துவம் சொல்லி வந்துள்ளோம்.

    இதன் விதை மற்றும் வேர் பகுதியின் பயன்பாடு அடுத்த பதிவில் காணலாம்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  24. Mon. 16, Jan. 2022 at 5.01 pm.

    சைவ சித்தாந்தம்....!

    * சிவதத்துவங்கள்....
    *சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம், சக்தி, சிவம் என்னும் ஐந்து தத்துவங்கள்.*

    * சுத்தவித்தை என்பது.... அறிவுமிக... செயல் குறைய நிகழும்.

    * ஈசுரம் என்பது......
    *பழமையதாகிய ஈசுரம்... தொழில் மிக அறிவு அடங்கி நிகழும்.*

    * சாதாக்கியம் என்பது....
    *அறிவும், செயலும் ஒப்ப நிகழும்.*

    * சக்தி என்பது....
    *தொழிலுக்கு நிலைக்களமாக விளங்கு வது.*

    * சிவம் என்பது....
    *அறிவுக்கு நிலைக்களமாக விளங்குவது.*

    * திருவருட்பயனில் காணப்பெறும் உவமைகளில் நான்கு....
    *தரையை உணராது தாமே திரிவார்
    புரையை உணரா புவி.*

    *பரப்பு அமைந்து கேண்மின்இது பாற்கலன்மேல் பூஞை
    கரப்பு அருந்த நாடும் கடன்.*

    *பார்வைஎன மாக்களை முன்பற்றிப் பிடித்தற்காம்
    போர்வைஎனக் காணா புவி.*

    *விடம்நகுலம் மேவினும்மெய்ப் பாவகனின் மீளும்
    கடனில், இருள் போவதுஇவன் கண்.*

    *தரையை உணராது தாமே திரிவார்...என்ற இவ்வுவமையின் கருத்து....

    *நிலமே நமக்கு ஆதாரம் என்று நினையாமல், அதன் மேல் நடந்து திரிவார்கள் போல..... திருவருளே தமக்கு ஆதாரம் என்பதை உணராது உயிர்கள் மற்றைப் பொருள்களிலே.... அழுந்தித் திரிவர் என்பதாகும்.*

    * பரப்பு அமைத்து கேண்மின்இது என்ற இவ்வுவமையின் கருத்து....

    *பால் நிறைந்த குடத்தின் மேலிருக்கும் பூனை... அதனை உண்ணாது, கரப்பான் பூச்சியை உண்பதற்குத் தாவுவது போன்று.... திருவருளை மறந்து உலகியல் இன்பங்களை நாடுவதாகும். .இதனை ஒழித்து அருளாசிரியரின் அறிவுரை வழி நிற்பீர்களாக என்பதே.

    * பார்வைஎன மாக்களை இவ்வுவமை யின் கருத்து.....

    *வேட்டுவர் விலங்கைக் காட்டி, விலங்கைப் பிடித்தல் போல... இறைவனும் மானிட வடிவம் கொண்டு, ஞானகுருவாகி வந்து தம்மை ஆட்கொள்ளுகிறான் என்பதை உலகோர் உணரார் என்பதாகும்.*

    * விடம்நகுலம் மேவினும்மெயப்.... இவ்வுவமையின் விளக்கம்....

    *பாம்பு கடித்த நஞ்சு.... கீரீ வந்து தொட்டாலும் தீர்வதில்லை; மாந்திரி கனாலே தீரும். அதுபோல ஞான ஆசிரியன் திருக்கண் நோக்காலே ஆணவ மலம் நீங்கும்.*

    * கரணங்கள் என்றால்....
    *கருவிகள் என்று பொருள்.*

    * அந்த கரணங்கள் என்றால்....
    *உட்கருவிகள் என்று பொருள்.*

    * அந்த கரணங்கள் என்பது.....
    *கண்ணுக்குப் புலப்படாத... மனம் , புத்தி, சித்தம் , அகங்காரம் என்னும் நான்கே அந்தகரணம் என்பது.

    * சித்து என்றால்....
    *அறிவு என்பதாகும்.*

    *அசித்து என்றால்....
    *அறிவற்றவை என்று பொருள்.

    * சிதசத்து என்பது....
    *அறிவும், அறியாமையும் உடையது என்று பொருள். (சித்து + அசித்து = சிதசித்து)

    * சிதசித்து என்றால்....
    *ஆன்மா.*

    * இந்திரியங்கள் என்றால்....
    *கருவிகள்.*

    * கன்மேந்திரியங்கள் என்றால்...
    *தொழிற்கருவி.*

    * தொழிற் கருவிகள்.....

    *வாக்கு(பேசுதல்), பாதம்(நடத்தல்) , பாணி(கொடுத்தல்) , பாயு (எருவாய்), உபக்தம் (கருவாய்) என்பன.

    * ஞானேந்திரியங்கள் என்பது....
    *மெய், வாய், கண், மூக்கு, செவி.*

    Jansiknnan60@gmail.com.

    ReplyDelete
  25. Tue. 17, Jan. 2023 at 7. 34 am.

    சைவ சித்தாந்தம்....!

    * உண்மை விளக்கம் நூலின் ஆசிரியர்...*திருவதிகை மனவாசகங் கடந்தார்.

    * திருவதிகை மனவாசகங் கடந்தார் என்பவர்.....
    *மெய்கண்டாரின் 49 மாணவர்களுள் இவரும் ஒருவர். (மெய்கண்டாரின் மாணாக்கர்.)*

    * உண்மை விளக்கத்தில் கேட்கப் படுகின்ற வினாக்கள்....
    *எட்டு.*

    * உண்மை விளக்கத்தில் கேட்கப்படும் எட்டு கேள்விகள்....

    *முப்பத்தாறு தத்துவங்கள் யாவை ?*
    *ஆணவம் என்பது யாது ?*
    *வினையெனப்படுவது யாது ?*
    *நான் என்னும் உயிர் என்பது யாது ?*
    *நீ என்னும் பதி யாது ?*
    *இறைவன் நிகழ்த்தும் நடனம் யாது ?*
    *அஞ்செழுத்தின் நிலைகள் யாவை ?*
    *முத்திப்பேற்றின் நிலை யாது ?*

    * சங்கரன் என்றால்...
    *எல்லா உயிர்களுக்கும் இன்பத்தே வழங்குபவன்.*

    * திருஞானசம்பந்தரின் பெற்றோர்....
    *தந்தை சிவபாதஹிருதயர் தாயார் பகவதி அம்மையார்.*

    *ஞானசம்பந்தர் எவ்வாறு போற்றப்படுகிறார் என்றால்.....
    *பரசமயக்கோளரி என்று போற்றப் படுகிறார்.*

    * பரசமயக்கோளரி என்பதன் பொருள்....
    *பர என்றால்.... பிற.*
    *சமயம் என்றால்.....சமணம்.*
    *கோள் என்றால்..... கொள்கை.*
    *அரி என்றால்...... சிங்கம்.*
    *பிற சமயக் கொள்கைகளைச் சிங்கம் போல நின்று வென்றார் என்பதே இதன் பொருளாகும்.*

    * திருமூலர் என்பவர்...
    *திருக்கயிலாயத்திலிருந்து இங்கு மண்ணுலகம் வந்தவர்.*

    * திருமூலர் உபதேசம் பெற்றது ......
    *கயிலை மலையில் நந்தியம்பெருமானி டம்.*

    * மந்திரம் என்பது ....
    *தன்னை நினைப்பவரைக் காப்பது.*

    * சைவ சமயத்திற்குரிய இரண்டு மந்திரங்கள்....
    *சிவாயநம மற்றொன்று நமகுமாராய என்பது.*

    * கூத்தப் பெருமான் திருமேனியில் திருவைந்தெழுத்து விளங்குவது குறித்து உண்மை விளக்கம் கூறுவது......

    *நகரத்தை முன்னாக வைத்துத் தொடங்கும் நமசிவாய....*

    *சிகரத்தை முன்னாக வைத்து தொடங்கும் சிவாயநம என்பதுமாம்.*

    * நமசிவாய என்பது.....
    *ஊன்றிய திருவடியில் நகரமும்....*
    *திரு உந்தியில் மகரமும்.....*
    *திருமுகத்தில் வகரமும்......*
    *திருமுடியில் யகரமும்.... *
    அமைந்திருப்பது "நமசிவாய" என்பது.*

    * சிவாயநம என்பது.....

    *ஒலிக்கின்ற உடுக்கையில் சிகரமும்....*
    *நன்றாக வீசிய திருக்கரத்தில் வகரமும்..*
    *மார்பில் அமைந்து விளங்கும் அபயகரத்தில்(அஞ்சேல் என்று அருள் புரியும் திருக்கை) யகரமும்....*
    *நெருப்பேந்திய திருக்கரத்தில் வகரமும்....*
    *முயலகனை மிதித்து நிற்கும் திருவடியில் மகரமும் அமைந்திருப்பதே "சிவாயநம" என்பது.

    * தந்திரம் என்பது.....
    *ஆகமம்.*

    *ஆகமங்களில் கூறப்பெறுவது....
    *நீறு.*

    நீறு என்பது....
    *போதம் தருவது . அதாவது...அறியாமையை நீக்கி ஞானத்தைத் தருவது.*

    * சத்தியம் என்பது....
    *நிலையாக இருப்பது (நீறு)

    * தக்கோர் என்பது.....
    *அடியார்கள்.*

    * மாணம் தகைவது என்பது....
    *இறப்பைத் தடுப்பது. (மாள் + அம் = மாணம். தகைவது என்பது... தடுப்பது.)*

    * சேணம் என்றால்....
    *உயர்வு.*

    * பண்டாரம் என்பது....
    பண்டம் + ஆரம் = பண்டாரம். பண்டம் − ஞானம். ஆரம் − ஆர்தல் அதாவது நிறைதலை உடையது.*

    * மணிவாசகர் இறைவனை அழைப்பது...*மூலபண்டாரம் என்றே வழங்குகிறார்.*

    * வைணவத்தில் தத்துவங்கள்....
    *மூன்று.*

    * தத்துவத்திரயம் என்பது...
    *சித்து, அசித்து, ஈஸ்வரன்.*

    மீண்டும் அடுத்தப் பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  26. Wed. 18, Jan. 2023 at 7.10 am.

    மருதோன்றி விதை (Lowsonia Alba - Seeds) ....!

    குணம்.... சங்கோசனகாரி.

    மருதோன்றி யின்வித்தால் வன்பில்லி யேவல்
    விருதாண்ட பேய்பூதம் வீயு − முருதோன்றா
    துள்ளுருக்கும் மேகவெட்டை ஓடும் பெரும்பாடு
    கள்ளவிழி மாதரசே காண்.

    பாடலிலேயே என்னென்ன நோயகளு்க்கான தீர்வு இதன் விதை என அறிந்து கொள்ளலாம்.

    • மருதோன்றி விதையைப் பொடித்து, கரி நெருப்பின் மீது போட்டுப் புகையுண்டாக்க.பில்லி, சூனியம், பேய், பூதம் முதலிய உபத்திரவங்கள் நீங்கும்.

    • இதன் விதை... சதை, நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்யும்.

    • மருதோன்றி விதையை நெருப்பில் போட உண்டாகும் புகையினால்... அதிகக் கொடூரமான பித்த உபரியை மூளை யினின்று தணிக்கை செய்யத்தக்கதாத லால் ...இதனை ஷெ ரோகங்களுக்காகப் பரிகாரம் செய்பவர்கள் இப்பொடியைக் கொண்டு துபமிடுவார்கள்.

    • இதன் விதையை அரைத்துச் சுண்டைக்காய் பிரமாணம் ஒரு சீலையில் முடிந்து, யோனியின் உட்புறத்தில் செலுத்தி 1, 2 ஜாமம் வைக்க ஸ்திரி களுக்குக் காணும் வெள்ளை, பெரும்பாடு இவைகள் நீங்கும். இதில் குணமில்லையென்றால்...மீண்டும் முன்போல், 2, 3 நாள் செய்ய அவசியம் குணமுண்டாகும்.

    அடுத்ததாக....

    மருதோன்றி வேர் (Lowsonia Alba - Root).*

    இதன் செய்கை....

    வியதாபேதகாரி & சமனகாரி.

    வியதாபேதகாரி என்பது... Alterative.
    அதாவது... வியாதியை நாளுக்கு நாள் குணமாக்கிச் சரீரத்தை ஆரோக்கிய நிலைக்குக் கொண்டு வரும் மருந்து.

    சமனகாரி என்பது..... Sedative.

    அதாவது... தாதுக்களின் கொதிப்பைத் தணிக்கும் மருந்து.

    • இப்போ... பயன்பாட்டைப் பார்க்கலாம்...!

    மருதாணி வேர்ப்பட்டையை ஊறல் குடிநீர் செய்து கொடுக்க, வீக்கம், கல்லடைப்பு, முதலியன நீங்கும். சுட்ட புண், மேகப்புண் களைக் கழுவ விரைவில் நிவாரணம் பெறலாம்.

    • இதன் வேர்ப்பட்டையை பாலில் அரைத்துப் பற்றுப்போட தோல் நோய்கள், வெண்மேகம், கால் ஆணிகள் முதலியன குணமாகும்.

    • இதன் வேர்... நோய் நீக்கி உடலைத் தேற்றும். தாது வெப்பு அகற்றும்.

    • இதன் வேரால்... மாதர்களின் ருதுகால சோணித தோஷங்கள் , அசிர்க்கர ரோகம், பித்த நோய் ஆகியவை நீங்கும்.

    • இதன் முற்றிய வேரைப் பஞ்சுபோல் நசுக்கி, சுத்தமான நீரில் இரவு ஊறவைத்து, மறுநாள் காலையில் சுண்டக் காய்ச்சி வடித்து ஆறிய பின்..சாப்பிட...இவ்வாறு ஒரு மண்டலம் சாப்பிட .... ஆரம்ப நிலை குஷ்டம் நீங்கும்.

    • இவ்வாறு பத்து நாட்கள் கொள்ளச் சொத்தை விழுந்த நகங்கள் விழுந்து புதிதான நகங்கள் முளைத்திடும்.


    • பின்னும்... காமாலை, நீரடைப்பு,கல்லடைப்பு, உதிரச் சிக்கல் ஆகியவைகளையும் குணப்படுத்தும்.

    அறிந்து பயனடையுங்கள்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  27. Mon. 23, Jan. 2023 at 8.05 am.

    நம்மை நாமே அறிவது எவ்வாறு ?

    கடந்த பாடத்தில்...அறுசுவையினால் மனதளவில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்தோம்.

    ஞாபகப்படுத்துதலுக்காக....!

    இனிப்பு சராசரி அளவு சேர்த்தால் ... திருப்தி. அதிக அளவு சேர்த்தால்... பேராசை தன்மை உண்டாகும்.

    புளிப்பு : சராசரி அளவில்...அதிகப் பொருட்களை தன் வசப்படுத்திக் கொள்ளத் தூண்டும். அதிக அளவு சேர்த்தால்... பொறாமை,பகையைத் தூண்டும்.

    உப்பு : சராசரி அளவில்.... அனைத்து ஆசைகளையும் தூண்டும். அதிக அளவில் பேராசை, ஏக்கம் உண்டாகும்.

    காரம் : சராசரி அளவில்.... கடுமையாக உணர்ச்சி வசப்படத் தூண்டும். அதிக அளவில்்... கோபம் , எரிச்சல், பொறுமையின்மை உண்டாகும்.

    துவர்ப்பு : சராசரி அளவில்... உணர்ச்சி அற்ற தன்மை ஏற்படும். அதிக அளவில்..பயம், கவலை, பாதுகாப்பற்ற தன்மையை உணர்தல்.

    சரி, இன்று நாம் பார்க்கப் போவது...

    ஒவ்வாத உணவுப் பொருள் கூட்டு. அதாவது எதனோடு எது சேரத்து உண்ணக் கூடாது என்பதனைப் பார்க்கலாம்....!

    * பீன்ஸ் இதனுடன்.... பழங்கள், முட்டை, மீன், பால், மாமிசம், வெண்ணெய், தயிர்.. இதனைச் சேர்க்கக் கூடாது.

    * முட்டை : பழங்கள், பீன்ஸ்,வெண்ணெய், மீன்,வெண் பொங்கல், மாமிசம், தயிர் சேர்க்கக் கூடாது.

    * தானியங்கள் : பழங்கள், மரவள்ளிக் கிழங்கு மற்றும் தேன்.

    * சூடான திரவங்கள் : மாம்பழம்,வெண்ணெய், மீன், மாமிசம், தயிர்.

    * எலுமிச்சை : பால், தக்காளி, வெள்ளரி, தயிர்.

    * தண்ணீர்ப் பழங்கள் : தனியாகவே உண்ண வேண்டும்.

    * பால் : வாழைப்பழம், மற்றும் புளிப்பான பழங்கள், மீன், வெண் பொங்கல், மாமிசம்.

    * உருளைக் கிழங்கு மற்றும் தக்காளி :
    தண்ணீர்ப் பழங்கள், வெள்ளரி மற்றும் பால் சேர்ந்த உணவுகள்.

    * முள்ளங்கி : பால், வாழைப் பழம், பிசின் வகைகள்.

    * மரவள்ளிக் கிழங்கு : மாம்பழம், வாழைப்பழம், பிசின், பீன்ஸ், வெல்லம்.

    * தயிர் : பழங்கள், வெண்ணெய், பீன்ஸ், முட்டை, மீன், மாமிசம், தக்காளி, எலுமிச்சை, உருளை போன்ற கிழங்கு வகைகள் ...

    இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று ஒவ்வாத உணவுகள்.

    குறிப்பு : ஆரோக்கியமாக வாழ... தவறான உணவுப் பழக்கங்கள் கூடாது.

    * அளவுக்கு அதிகமாக உண்பது.

    * ஒரு முழு சாப்பாடு உண்டு முடித்ததும்...மீண்டும் எதையாவது உண்பது கூடாது.

    * சாப்பிடும்போது அதிக நீர் அருந்துவது அல்லது நாள் முழுவதும் நீர் அருந்தாமல் இருப்பது கூடாது.

    * எந்நேரமும் குளிர்ந்த நீரை அருந்துவது, முக்கியமாக உணவு சாப்பிடும் போது...

    * மலச்சிக்கல் இருக்கும் போது உண்பது.

    * நேரம் தவறி உண்பது.

    * பசியில்லாத போது உண்பது.

    * உணர்ச்சி வசப்பட்டபோது சாப்பிடுவது..

    * ஒவ்வாத உணவுப் பொருளைக் கலந்து சாப்பிடுவது.. இவற்றையெல்லாம் முறையாக கடைபிடிப்போர் ஆரோக்கிய மாக வாழலாம்.

    மீண்டும் அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  28. Tue. 24, Jan. 2024 at 4.35 am.

    வேதியியல் துளிகள் − 31

    * பாரபின் எண்ணெயின் பொதுப் பெயர்....
    *கெரோசின்.*

    * இரப்பரை வல்கனைசேசன் செய்யும்போது பயன்படும் தனிமம்...
    *கந்தகம்.*

    * அதிக அளவு புகையை வெளியிடும் நிலக்கரி....
    *பிட்டுமினஸ்.*

    * சிரிப்பூட்டும் வாயுவின் வேதியியல் பெயர்...
    *நைட்ரஸ் ஆ்க்ஸைடு.*

    * நீல லிட்மசுடன் அமிலக் கரைசலளச் சேர்க்கும் போது கிடைப்பது...
    *சிவப்பு நிறம்.*

    * சிவப்பு லிட்மசுடன், ஆல்கலைன் கரைசலைச் சேர்க்கும் போது கிடைப்பது...
    *நீல நிறம்.*

    * வைட்டமின் "சி"−யின் வேதியியல் பெயர்...
    *அஸ்கார்பிக் அமிலம்.*

    * சிகரெட் லைட்டரில் பயன்படும் வாயு... *பியூட்டேன்.*

    * பிளீச்சிங் பவுடரின் வேதியியல் பெயர்....
    *கால்சியம் குளோரோ ஹைப்போ குளோரேட்.*

    * பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்கப் பயன்படும் வாயு....
    *அசிட்டிலீன்.*

    * ரேயான் தயாரிக்கப் பயன்படுபவை... *செல்லுலோஸ்.*

    * குடிக்கும் சோடாவில் இருக்கும் வாயு.... * கார்பன் − டை − ஆக்ஸைடு.*

    * உலர்பனி என்பது....
    *திட கார்பன்−டை− ஆக்ஸைடு.*

    * பால் புளிக்கும் போது உருவாகும் அமிலம்....
    *லாக்மிக் அமிலம்.*

    * தக்காளி கூட்டுத் தயாரிப்பில் பயன்படுவது ....
    *சோடியம் பென்சோட்.*

    * பென்சிலின் முனை தயாரிக்கப் பயன்படும் பொருள்....
    *கிராபைட்டு.*

    * கனிம எண்ணெய் என்பது....
    *பெட்ரோலியம்.*

    * சோடாப் பாட்டிலைத் திறந்தவுடன் வரும் சத்தம்....
    *கார்பன் − டை − ஆக்ஸைடு குமிழி.*

    மீண்டும் அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  29. Tue. 24, Jan. 2023 at 11..19 am.

    விமானம் + திருக்கோயில் அமைப்பு.

    விமானம் என்பது... கருவறை.

    வடநாட்டில்.... இறைவன் உறையும் இடம் என்பர்.

    இதிலுள்ள தத்துவம் ....!

    விமானம் என்ற சொல்... *மானம்* என்ற அடிப்படையில் எழுந்ததாகும்.

    *மானம் என்றால்.... அளவை.*

    விமானம் என்றால்.... அளப்பதற்கு அரிதாகிய ஒன்று எனப் பொருள்படும்.

    *கருவறையில் உள்ள லிங்கத் திருமேனி...
    "சூக்கும லிங்கம்."*

    *விமானம் ...... "தூல லிங்கம்."*

    அடிமுடி காணாத பிரானுக்கு எழுந்த கட்டிட அமைப்பும்...அளக்க இயலாத விமானமாக வும் உருவானது.


    *திருக்கோவில் அமைப்பு − தத்துவங் களுக்கு நிலைக்களன்.*


    இந்த அமைப்பினை தத்துவ அடிப்படை யில் காணும்போது....

    கோபுரம் − பிருதிவி தத்துவம்.
    நீர் − அப்பு தத்துவம்.
    மஹாமண்டபம் − தேயு தத்துவம்.

    முதல் சுற்று − வாயு தத்துவம்.

    கருவறையின் உள்ளிருக்கும் திருமேனி − ஆகாசத் தத்துவம்.

    *திருக்கோயில் ...நமது உடம்பு. அதாவது பஞ்ச கோசங்கள்....!*

    கோபுரம், திருமதில்கள் − அன்னமய கோசம்.

    நீர்நிலைச் சுற்று − பிராணமய கோசம்.

    மகா மண்டபம் − மனோமய கோசம்.

    இருண்ட முதல் சுற்று − விஞ்ஞானமய கோசம்.

    அதனைக் கடந்து காணும் கருவறை − ஆநந்தமய கோசம்.

    *ஆறு ஆதாரம் (யோகத்தில் குறிப்பிடப் பட்ட) கோயில் பகுதிகள்...!*

    • கோபுர நுழைவு − மூலாதாரம்.
    • கொடிக் கம்பம் − சுவாதிட்டானம்.
    • பலி பீடம் − மணிபூரகம்.
    • நடராஜர் சந்நிதி − அனாகதம்
    • கருவறை நுழைவாயில் − விசுத்தி.
    • கருவறையில் கடவுண் மங்கலம் செய்யப்பட்ட லிங்கத் திருமேனியின் இடம் − ஆக்ஞை.
    • சிகரமும் தூபியும் − சகஸ்ராரம்.

    *மதுரை போன்ற பெரிய கோயில்களில் ஆயிரங்கால், நூற்றுக்கால், பதினாறு கால் மண்டபங்கள் உள்ளன.*

    *இந்த மண்டபங்களில் நடராஜப் பெருமான் பிரபஞ்சத்தில் எங்கும் விளங்கியிருக்கும் அசைவினைக் குறிப்பிடுவதாகக் கருதுவர்.*

    மேலும், சைவ சித்தாந்தத்தில் குறிப் பிடப்படும்... ஆன்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் என்ற இம் மூன்றினையையே இந்த மூன்று மண்டபங்கள் குறிப்பிடுகின்றன.

    ஆயிரங்கால் மண்டபம் − ஆனம் தத்துவம்.
    நூற்றங்கால் மண்டபம் − வித்யா தத்துவம்.
    பதினாறுகால் மண்டபம் − சிவ தத்துவம்.

    ஆயிரங்கால் மண்டபத்தில் 5 நிலைகள் உள்ளன.

    இந்த 5−வது நிலையின் மேல் தான் நடராஜப் பெருமான் கொலு வீற்றுள்ளார். இந்த ஐந்து நிலைகளை *ஆன்ம தத்துவம்* குறிப்பிடுகிறது.

    நூற்றுக்கால் மண்டபத்தில் ...எதிரே திருஞானசம்பந்தர் ஆலயம் உள்ளது. திருஞானசம்பந்தர் சிவஞானம் அடைந்த பெருந்தகை... *வித்யா தத்துவத்திற்கு நிலைக்களன்.*

    தொன்று தொட்டு இன்று வரையில் பூஜையின் போது ஞானப்பால் அந்தச் சந்நிதியில் பக்தர்களுக்கு வழங்கப் படுகிறது.

    பதினாறு கால் மண்டபம்... கருவறையின் அருகேயுள்ளது. இது *சிவ தத்துவம்.*

    *இதற்கான திருவாசகப் பாடல் ...*

    இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத்
    தெழுகின்ற ஞாயிறே போன்று

    நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
    நீயல்லாற் பிறிதுமற் றின்மை

    சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந்
    தொன்றாந்
    திருப்பெருந் துறையுறை சிவனே

    ஒன்றுநீ யல்லை அன்றியொன் றில்லை
    யாருன்னை அறியகிற் பாரே ....

    *ஆகவே.... நூற்றங்கால் நடராஜப் பெருமான் இதனைச் சுட்டிக் காட்ட கால்மாறி ஆடுகிறார்.*

    இதன் சூக்குமத்தைத் திருவிளையாடல் புராணத்தில் காணலாம்.

    மேற்கண்ட அனைத்தையும் அறிந்து கொண்டு....கோயில் சென்று, சிவனை வழிபடுங்கள்.

    திருச்சிற்றம்பலம்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  30. Tue. 24, Jan. 2023 at 1.50 pm.

    இன்று நாம் பார்க்கப் போகும் மருத்துவம்.....

    மூக்குறட்டை .....!

    மூக்குறட்டை பல மருத்துவம் வாய்ந்த ஒரு படர் கொடி.

    மூக்குறட்டைக்கு பல பெயர்கள் உண்டு.

    மூக்கிரட்டை, இரத்த புட்பிகா ,புட்பகம், மூக்கரட்டை, சாட்டரணை, மூக்கரைச் சாரணை ஊன்னும் பல பெயர்கள் உண்டு.

    இதன் தாவரவியல் பெயர் : Boerhavia - Diffusa.

    குடும்பப் பெயர் : Nyetaginaceae.
    ஆங்கிலப் பெயர் : Pigweed.
    சமஸ்கிருதம் : Punarnava.
    மலையாளம் : Thazu Thama.
    தெலுங்கு : Punamaba.
    கன்னடம் : Kumme-Gida.
    ஹிந்தி : Ghadapurva.

    பயன்படும் பகுதி : இலை , வேர்.
    தன்மை − வெப்பம்.
    சுவை : கைப்பு.
    பிரிவு : கார்ப்பு.

    இதனுடைய வேர் மற்றும் இலைகளில்.... punarnacine என்னும் ஆல்கலாய்டு உள்ளது.

    இதன் குணம்... மூக்குறட்டை ஆமம், நமைச்சல், வாதநோய், சிறுநீர்க்கட்டு, மலச்சிக்கல், கப நோய்கள்,வயிற்றுப் புழு, வயிற்று வலி மற்றும் கப நோய்கள் குணமாகும். பித்தத் தன்மையை அதிகரிக்கும்.

    இதன் செய்கை வேருக்கு... மலகாரி, மூத்திரவர்த்தனகாரி.

    தங்களுக்கு ஏற்கெனவே அளித்துள்ளேன்... இருப்பினும்....

    மலகாரி என்பது.... பேதியை உண்டாக்கும் மருந்து. (Laxative).

    மூத்திரவர்த்தனகாரி என்பது...
    மூத்திரத்தை அதிகமாக்கும் மருந்து. (Diuretic)

    சரி... மருத்துவத்திற்கு வருவோம்..

    * மூக்குறட்டை இலையை, உணவு முறையாகவோ அல்லது மருந்தாகவோ உண்டுவர உடலிலுள்ள வாத நோய்கள் குணமாகும்.

    * மூக்குறட்டை வேரைக் குடிநீர் செய்து கொடுக்க கீல்வாதம், இரைப்பு, காமாலை, நீர்க்கட்டு, பெருவயிறு, சோகை தீரும்.

    சீத மகற்றுந் தினவடக்குங் காந்திதரும்
    வாத வினையை மடிக்குங்காண் − பேதி
    கொடுக்குமதை யுண்டற்காற் கோமளமே!− பித்த
    மடுக்குமே மூக்குறட்டை யாய்.

    * இதன் இலையை மற்ற கீரைகளாடு கூட்டித் துவட்டலோடு சமைத்து உண்பதால்... நீர் தாராளமாகப் போகும். மலம் தள்ளும். வாயு நீங்கும்.

    * மூக்குறட்டை வேர், அருகம்புல், கீழாநெல்லி... வகைக்கு 1−கைப்பிடி ஊடுத்து 10−மிளகுடன் நசித்து 1/2− லிட்டர் நீரில் போட்டு பாதியாக சுண்ட வைத்து எடுத்து, தினமும்... காலை மாலை கொடுத்துவர, சிறுநீர்க்கட்டு,பெறுவயிறு, இரத்த சோகை, ஆஸ்துமா, நீரேற்றம், வீக்கம் முதலியன நீங்கும்.

    * இதன் இலையை மற்ற கீரையோடு சேர்த்து... 40 முதல் 80 நாட்கள் சாப்பிட்டு வர... முகப்பொலிவும், வசீகரமும் உண்டாகும்.

    * அதிக அளவில் உட்கொள்ள வாந்தி வரும்.

    * குறைந்த அளவு சாப்பிட்டு வரக் கபத்தைக் கரைத்துச் சுவாச காச ரோகத்தைக் குணப்படுத்தும்.

    * இதன் வேரைச் நன்றாக உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு, ஒரு வராகனெடை வீதம் சிறிது கொதிக்கின்ற நீரில் போட்டு, 2−மணி நேரம் ஊறவிட்டு, வடிகட்டி சாப்பிட மலம் தள்ளும். நீர் இறங்கும்.
    ஈரல், இருதயம், குண்டிக்காய் முதலிய இடங்களில் சேர்ந்துள்ள துர்நீரை மல சல மூலமாக வெளிப்படுத்தி, நீர்க்கோவை, மகோதரம் முதலியவைகளைக் குணப்படுத்தும்.

    * மூக்குறட்டை வேரை உலர்த்தி பொடி செய்து, காலை, மாலை 1−கிராம் வீதம் தேனுடன் கலந்து கொடுக்க... பார்வைக் கோளாறு, மாலைக்கண், கண் எரிச்சல் போன்ற கண் நோய்கள் நீங்கும்.

    * 1−கைப்பிடி மூக்குறட்டை வேரை 4− மிளகுடன், 100 மி.லி. விளக்கெண்ணை யில் பதமாகக் காய்ச்சி ஆற வைத்து வடி கட்டி 6− மாதக் குழந்தைக்கு 20 மி.லி. வீதம் வாரம் ஒரிரு முறை கொடுத்து வர... வோந்தீ,அஜீரணம், மலச்சிக்கல்,நமைச்சல், மூலச்சூடு, சைறி, சிரங்கு குணமாகும். இரவு வசம்பு சுட்டக் கரியைப் பொடி செய்து ...தேனுடன் கலந்து கொடுக்க வேண்டும்.

    மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..!

    வாழ்க வளமுடன்...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  31. Wed. 25, Jan. 2023 at 4.30 am.

    31) மறைஞானசம்பந்தர் அவதரித்த ஊர்...
    *திருப்பெண்ணாகடம்.*

    32) மறைஞானசம்பந்தர் வாழ்ந்த ஊர்கள்...
    *மருதூர் , சிதம்பரம்.*

    33) மறைஞானசம்பந்தர் சித்தி பெற்ற இடம்....
    *சிதம்பரத்தின் மேல் எல்லையான திருக்களாஞ்சேரி.

    34) மறைஞானசம்பந்தர் சித்தாந்த சாத்திர நூல் செய்துள்ளாரா ?
    *இல்லை.*

    35) திருவுந்தியாரை அருளியவர்...
    *திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார்.*

    36) திருக்களிற்றுப்படியாரை அருளியவர்....
    *திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனார்.*

    37) ஞானாமிர்தத்தை அருளியவர்....
    *வாகீசமுனிவர்.*

    38) சிவஞான போதத்தை அருளியவர்.. *மெய்கண்டார்.*

    39) சிவஞானசித்தியாரை அருளியவர்...
    *அருணந்திசிவம்.*

    40) சிவப்பிரகாசத்தை அருளியவர்...
    *உமாபதிசிவம்.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  32. Wed.. 25. Jan. 2023 at 4.35 am.

    வேதியியல் துளிகள் − 32.

    * மனிதனால் மேற்கொள்ளப்பட்ட முதல் வேதிவினை....
    *எரிதல் வினை.*

    * எண்ம விதியை வெளியிட்ட அறிஞர்..
    *நியூலண்ட்.*

    * சல்பர் காற்றில் எரிவதால் உண்டா கும் வாயு...
    *சல்பர் டை ஆக்ஸைடு.*

    * சல்பரின் நிறம்....
    *மஞ்சள்.*

    * பளபளப்பு தன்மை கொண்ட அலோகம்....
    *கிராஃபைட்.*

    * ஈகோ போரனின் தற்காலப் பெயர்...
    *ஸ்கேண்டியம்.*

    * ஈகா அலுமினியத்தின் தற்காலப் பெயர்....
    *கேலியம்.*

    * கனிமங்களை முதன் முதலில் உலோகங்கள் மற்றும் அயோடின் என வகைப்படுத்தியவர்....
    *லாவாய்சியர்.*

    * மூளை நுண்ணாய்வுக்கு பயன்படும் ஐசோடோப்பு...
    *கார்பன் − 11.*

    * ஓசோனின் மூலக்கூறு வாய்ப்பாடு....
    *Oத்ரி. (O3).*

    மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  33. Wed. 25, Jan. 2023 at 4.45 am.

    உயிரியல் துளிகள் − 25.

    * நுரையீரல்களின் வடிவம்....
    *கூம்பு வடிவம்.*

    * தொண்டையின் கீழ்ப்பகுதியில் காணப்படும் குருத்தெலும்பு வளையத்தின் பெயர்....
    *கரினா.*

    * மனிதனின் முக்கியமான சுவாச உறுப்பு.....
    *ஓரிணை நுரையீரல்கள்.*

    * நுரையீரல்கள் வைக்கப்பட்டுள்ள இடம்....
    *மார்பகக் கூட்டினுள்.*

    * நுரையீரல்கள் சூழப்பட்டுள்ள உறை..
    *புளுரா. அதாவது இரட்டைச் சுவரால் ஆன உறை.*

    * நுரையீரல்கள் 1−நிமிடத்திற்கு சுருங்கி விரிவது...
    *12 முதல் 15 வரை.*

    * வலது நுரையீரல் கொண்ட மடிப்புகள்....
    *3.*

    * இடது நுரையீரல்கள் கொண்ட மடிப்புகள்.....
    *2.*

    * வெள்ளையணுக்களின் வாழ்நாள்....
    *4 வாரங்கள்.*

    * வெள்ளையணுக்கள் உற்பத்தியாகும் இடம்....
    *எலும்புகளின் மஞ்சள் மஜ்ஜையிலும், நிணநீர் முடிச்சிகளிலும்..*

    குறிப்பு : ஏற்கனவே நிணநீர் பற்றி பார்த்துள்ளோம்.. மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

    மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  34. Thu. 26, Jan. 2023 at 4.01 am.

    41) சிவஞான போதத்தின் சார்பு நூல்..*சிவப்பிரகாசம்.*

    42) சிவஞான சித்தியாரின் முதல் நூல்....
    *சிவஞானபோதம்.*

    43) உண்மை விளக்கத்தை அருளியவர்.....
    *திருவதிகை மனவாசகம் கடந்தார்.*

    44) இருபா இருபஃதை அருளியவர்....
    *அருணந்திசிவம்.*

    45) உமாபதிசிவம் அருளிய எட்டு நூல்களின் தொகுப்பு....
    *சித்தாந்த அட்டகம்.*

    46) உமாபதிசிவத்தின் எட்டு நூல்கள்...
    *சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப− நிராகரணம்.*

    47) மனவாசகம் கடந்தார் செய்த நூல்..
    *உண்மை விளக்கம்.

    48) அருணந்திசிவம் செய்த நூல்....
    *சிவஞான சித்தியார்,இருபா இருபஃது.*

    49) * மெய்கண்டார் செய்த நூல்....
    *சிவஞானபோதம்.*

    50) மெய்கண்டாரின் மாணாக்கர்....
    *அருணந்தி சிவம், மனவாசகம் கடந்தார் முதலிய 49− பேர்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  35. Thu. 26, Jan. 2023 at 4.10 am.

    உயிரியல் துளிகள் − 27

    * உயிரினங்களின் அடிப்படை அலகு...
    *செல்.*

    * தாவரங்களுக்கு எந்தத் திசுவின் மூலமாக தண்ணீர் கடத்தப்படுகிறது...
    *சைலம்.*

    * ஒளிச்சேர்க்கைக்கு உதவும் ஒளி....
    *சூரிய ஒளி (வெள்ளை).*

    * தாவர இலையின் பச்சை நிறத்திற்குக் காரணம்....
    *குளோரோஃபில்.*

    * தாவரத்தின் ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுவது....
    *இலை.*

    * தாவரங்கள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவது....
    *மண்ணில் இருந்து.*

    * உப்பு நீரில் வளரும் தாவரங்களை அழைப்பது....
    *ஹாலோபைட்ஸ்.*

    * தாவரங்கள் தங்களுக்குத் தேவையான பொருளை கடத்துவது...
    *ஃபுளோயம் வாயிலாக.*

    * வேர், தண்டு, இலை இல்லாத தாவரங்கள்....
    *அப்கோபைட்ஸ்.*

    * வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பழம் கொடுக்கும் மரம்....
    *வாழைமரம்.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  36. Thu. 26, Jan. 2023 at 4.55 am.

    வேதியியல் துளிகள் − 33.

    * மாணிக்கத்தில் கலந்திருக்கும் வேதிப் பொருள்....
    *அலுமினியம் ஆக்ஸைடு.*

    * புருசிக் அமிலம் என்பது...
    *நைட்ரஜன் சயனைடு.*

    * கிராபைட் மற்றும் வைரத்திற்கு இடையேயுள்ள தொடர்பு.....
    *அல்லோட்ரோப்ஸ்.*

    * பொட்டாசியத்தின் இலத்தீன் பெயர்..
    *காலியம்.*

    * சோடியத்தின் இலத்தீன் பெயர்....
    *நேட்ரியம்.*

    * நீர்ம நிலையில் உள்ள உலோகம்....
    *பாதரசம்.*

    * சால் அம்மோனியம் என்பது....
    *அம்மோனியம் குளோரைடு.

    * NPK − என்பதன் விரிவாக்கம்....
    *நைட்ரஜன் , பாஸ்பரஸ் , காலியம்.*

    * தொழிற்சாலையில் எத்திலின் கிளைகோனின் பயன்பாடு....
    *குளிர்ச்சியூட்டப் பயன்படுகிறது.*

    * பேக்கிங் பவுடர் என்பது....
    *சோடியம் பை கார்பனேட்.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  37. Thu. 26, Jan. 2023 at 5.13 am.

    இன்றைய மருத்துவம்.....

    *கொட்டைக்கரந்தை.* (Sphoeranthus Hirtus)
    *
    இதன் மகிமையைப் பற்றி அறியாதவர் பலர்....

    கொட்டைக்கரந்தை... ஒரு சிறிய செடி.

    இதை *நாறுங்கரந்தை* என்பர்.

    செடி முழுவதுமே மருத்துவப் பயன் உடையவை.

    இதன் குணம்.... வெள்ளை, ஒழுக்குப் பிரமேகம், கிராந்தி, கரப்பான், சினைப்பு முதலிய நோய்கள் குணமாகும். வெளிவராமல் தங்கிய மலத்தைப் போக்கும்.

    இதன் செய்கை....

    *இலகுமலகாரி , சமனகாரி.*

    இலகுமலகாரி என்பது... Aperient.. உபத்திரவமில்லாமல் மலத்தை இளகலாக ஒரு முறை வெளியாக்கும் மருந்து.

    சமனகாரி என்பது.... Sedative.
    அதாவது... தாதுக்களின் கொதிப்பைத் தணிக்கும் மருந்து.

    உபயோகிக்கும் முறை....!

    கொட்டைக் கரந்தைதனைக் கூசாம லுண்டவர்க்கு
    வெட்டை தணியுமதி மேகம்போந்−துட்டச்
    சொறிசிரங்கு வன்கரப்பான் றேன்றா மலப்பை
    மறிமலமுந் தானிறங்கு மால்.

    • பூக்காத செடிகளைப் பிடுங்கி நிழலில் உலர்த்திப் பொடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 1/4 தோலா எடை சீனி சேர்த்துக் கொடுத்து
    வர.... வெள்ளை, கரப்பான், கிராணி, உள்ரணம் இவைகள் குணமாகும். மேலும் தலை மூளை, இருதயம், நரம்பு இவைகளுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.

    • இப்பொடியுடன்... தகரயிலையையும் (தகரையிலை என்பது...ஊசித்தகரை, கரிசலாங்கண்ணி) சேர்த்துப் பொடித்துச் சூரணம் செய்து மேற்கண்டபடி கொடுத்தால்.. அல்லது தேன், நெய் இவைகளை விட்டு மத்தித்துச் சில நாட்கள் கொடுக்க.... வெளுப்பாயுள்ள மயிரும் அதாவது நரை மயிரும் கருத்துவிடும்.
    தேகமும் சகல ஆரோக்கியம் பெறும்.

    மேலும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  38. Thu. 26, Jan. 2023- at 6.59 am.

    இயற்பியல் துளிகள் − 12.

    * மின்காந்தத் தூண்டலில் பயன்படும் கருவிகள்....
    *தூண்டுச் சுருள், மின்னியக்கி, மின்னியற்றி.*

    * வெப்ப அயனி என்பது....
    *மின்னேற்றத் துகள், வெண்சுடர் பொருளினால் உமிழப்படுவது.*

    * மின் கடத்தும் பொருட்கள்...
    *செம்பு, அலுமினியம் முதலியவை மின்சாரத்தைக் கடத்தும்.

    * முதல் மின் விளக்கை அமைத்தவர்....*தாமஸ் ஆல்வா எடிசன் (1879).*

    * மின் விளக்கில் ஏற்படும் ஆற்றலின் மாற்றம்.....
    *வெப்ப ஆற்றல் ஒளி ஆற்றலாக மாறுகிறது.*

    * மின்மாற்றியின் இரு வகைகள்.....
    *ஏற்ற மின்மாற்றி, இறக்க மின்மாற்றி.*

    * மின்மாற்றியிலுள்ள இரு சுருள்கள்....*முதல் சுருள், துணைச் சுருள்.*

    * மின் விளக்குகளின் வகைகள்.....
    *இழை விளக்குகள் , இழையிலா விளக்குகள்.*

    * இழை விளக்கு என்பது....
    *குமிழ் விளக்குகள்.*

    * இழையிலா விளக்குகள் என்பது....
    *ஆவி விளக்குகள்.*

    மீண்டும் அடுத்த பதிவில்.....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  39. Thu. 26, Jan. 2023 at 6.30 am.

    நம்மை நாமே அறிவது எவ்வாறு பற்றி பார்த்து வருகிறோம்...!

    இன்று நாம் அறியப் போவது....

    ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் ஏற்படும் நல்ல சீரண சக்தியின் அறிகுறிகள் பற்றிக் காணலாம்...!

    * தேவையான அளவு உணவு உண்ட பிறகு சோம்பல் மற்றும் உறக்கம் ஏற்படாது.

    * உண்டு முடித்ததும் உண்ட உணவின் வாசனையில் ஏப்பம் வராது.

    * உணவு உண்ட பிறகு, நெடு நேரத்திற்கு வயிறு நிறைந்து இருப்பது போன்ற உணர்வு இருக்காது.

    * குடல்களில் உணவு சீரணித்துச் செல்லும்போது அதைப் பற்றிய எந்த ஒரு அறிகுறியும் தெரியாது.

    * சரியான நேரத்திற்கு மலங்கழியும். மேலும் மலத்தில் இரத்தம், சளி மற்றும் சீரணம் ஆகாத உணவுப் பொருள் இருக்காது. மலம் துர் நாற்றம் வீசாது.

    * உணவு சீரணித்தவுடன் சரியான நேரத்திற்கு மீண்டும் வயிற்றில் பசி எடுக்கும்.

    * இரவில் கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கம் தேவையானஅளவு இருக்கும்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  40. Fri. 27, Jan. 2023 at 8.24 am.

    51) திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனார் செய்த நூல் ....
    *திருக்களிற்றுப்படியார்.*

    52) திருவியலூர் உய்ய வந்த தேவ நாயனார் செய்த நூல்.....
    *திருவுந்தியார்.*

    53) அருணந்திசிவத்தின் மாணாக்கர்..
    *மறைஞானசம்பந்தர்.*

    54) மறைஞானசம்பந்தரின் மாணாக்கர்...
    *உமாபதிசிவம்.*

    55) உமாபதிசிவத்தின் மாணாக்கர்....
    *அருள்நமச்சிவாயர்.*

    56) அருள்நமச்சிவாயரின் சீடர்....
    *சித்தர் சிவப்பிரகாசர்.*

    57) சித்தர் சிவப்பிரகாசரின் சீடர்....
    *ஶ்ரீ நமசிவாய மூர்த்திகள்.

    58) திருவாவடுதுறை ஆதீனத்தின் ஸ்தாபகர்....
    *ஶ்ரீ நமசிவாய மூர்த்திகள்.*

    59) திருவாவடுதுறை ஆதீனத்தின் தோற்றக் காலம்....
    *14−ஆம் நூற்றாண்டு.*

    60) உமாபதிசிவம் பிறந்து வாழ்ந்த ஊர்...
    *சிதம்பரம்.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  41. Fri. 27, Jan. 2023 at 3.49 pm.

    *அடியேன்.... சைவ சித்தாந்தம் மாலை நேரக் கல்லூரியில் சேர்ந்து படித்து தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று அடியேனை சைவ சித்தாந்தத்தை அறியச் செய்தது...(100−மார்க்குக்கு 1 விழுக்காடு மட்டுமே குறைவு) .இச் சைவ சித்தாந்த பயிற்சியே.... என்பதில் பெருமை கொள்கிறேன்.*



    *திருப்பாசுரம் என்பது....*
    திருஞானசம்பந்தர் மதுரையில் புனல் வாதம் செய்யும் பொழுது பாடியருளியது. *"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்"* எனத் தொடங்கும் பதிகம்.

    *திருமுகப்பாசுரம் என்பது....*
    ஆலவாய் அண்ணல், பாணபத்திரன் பொருட்டுச் சேரமான்பெருமாள் நாயனாருக்கு வழங்கிய பரிந்துரை மடல்.

    * திருமுகம் என்பதன் பொருள்...
    *கடிதம்.*

    * ஆலவாய் அண்ணல் பாணபத்திரன் பொருட்டுச்் சேரமான்பெருமாள் நாயனாருக்கு வழங்கிய பரிந்துரைப் பாடல்.....!
    *மதிமலி புரிசை மாடக்கூடல் எனத் தொடங்கி, "மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே" என்று முடியும் மடல்.

    * மதிமிலி புரிசை மாடக்கூடல் எனத் தொடங்கும் பாடல் வரும் திருமுறை....
    *11−ஆம் திருமுறை.*

    * திருவிசைப்பா என்பது....
    *ஒன்பதாம் திருமுறையில் உள்ள ஒரு பகுதி.*

    * திருவிசைப்பா பெயர்க் காரணம்....
    *பாடல்கள் முழுமையும் இசைப்பாடல் களால் அமைந்தமையால்திருவிசைப்பா.*

    * திருவிசைப்பாவில் அமைந்த புதுப் பண்....
    *சாளரபாணி.*

    * ஒன்பதாம் திருமுறை என்பது....
    *திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்னும் இரண்டும் சேர்ந்தது.*

    * திருவிசைப்பா பாடல்கள்...
    *நூற்றிரண்டு (102).*

    * திருவிசைப்பா பாடல்கள் அமைந்துள்ள பண்கள்....
    *புறநீர்மை, பஞ்சமம், காந்தாரம்.*

    * திருப்பல்லாண்டு ஆசிரியர்....
    *சேந்தனார்.*

    *திருப்பல்லாண்டு என பெயர் வரக் காரணம்....
    *பல்லாண்டு கூறுதுமே, பல்லாண்டு கூறுதுமே என்பதை மகுடமாகக் கொண்டமையால்.... "திருப்பல்லாண்டு" எனப் பெயர் பெற்றது. (பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே என்பது போல)*

    * திருப்பல்லாண்டு பாடப்பெற்ற இடம்...
    *தில்லையம்பதியில்.*

    * ஓதுவார்கள் பாடும் பஞ்சபுராணப் பாடல்கள்.....
    *திருவிசைப்பா, திருப்பல்லாண்டு − விலிருந்து 2 பாடல்கள்.*

    * கருவூர்த்தேவர் என்பது....
    *கொங்கு நாட்டில் உள்ள கருவூரில் அவதரித்தவர். ஆகவே கருவூர்த்தேவர்.

    * கருவூர்த் தேவர் என்பவர்.....
    *யோக சித்தர்.*

    * கருவூர்த்தேவர் உபதேசம் பெற்றது....
    *போகர் முனிவரிடம்.*

    * ஐயடிகள் காடவர் கோன் என்பது....
    *ஐயன் அடிகளாகிய பல்லவ மன்னர்.*

    * காடவர் என்பது....
    *பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர்.*

    * ஐயடிகள் என்பது....
    *ஐயடிகள் காடவர் கோன் என்னும் பெயர்
    (ஐயன் அடிகள் என்பதன் மருஉ) ஐயன் அடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள்.*

    ஐயடிகள் காடவர் கோன் அருளிச் செய்தது.....
    *11−ஆம் திருமுறையில் 5−வது பிரபந்த மாகிய ஷேத்திரத் திருவெண்பா.*

    * ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் எனப் போற்றப் பெறுவது....
    *திருத்தொண்டத் தொகையில் சுந்தரரால்.*

    * நக்கீரர் அருளிச் செய்த திருமுறை...
    *பதினோராம ்(11) திருமுறை.*

    * நக்கீரர் அருளிய நூல்கள்....
    கயிலைபாதி காளத்தி பாதி அந்தாதி,
    திருஈங்கோய்மலை எழுபது,திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருஎழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம்.*

    * நக்கீரர் என்பவர்.......
    *நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்று வாதம் புரிந்து, பின்னர் தன் குற்றம் உணர்ந்தவர்.*

    * திருமுருகாற்றுப்படை வழங்கியவர்..... *நக்கீர தேவர். இவரது இயற்பெயர் "கீரன்". " ந " என்பது சிறப்புப் பொருள் தரும் அடைமொழி. எனவே.. இந்த நக்கீர தேவர் வேறு.*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  42. Fri 27, Jan. 2023 at 8.14 pm.


    11ஆம் திருமுறை ஒரு கண்ணோட்டம்...!


    . 11−ஆம் திருமுறை என்பது.. பன்னிரு சான்றோர்களால் இயற்றப்பெற்ற 40 −
    சிற்றிலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

    * இத்திருமுறையில் 12− அருளாளர்கள் பாடிய 40 நூல்கள் உள்ளன.


    * 1400 − பாடல்கள் கிடைக்கப் பெற்றுள் ளன.

    * 11−ஆம் திருமுறையில் அமைந்த நூல்கள் = 40 ஆகும்.

    * 11−ஆம் திருமுறையை பிரபந்தம் என அழைப்பர்.

    * பன்னிரு புலவர்கள் பாடிய நூலின் தொகுப்பே ...11−ஆம் திருமுறை.


    * 11−ஆம் திருமுறையைத் தொகுத்தவர்… திருநாறையூர் நம்பியாண்டார்
    நம்பிகள் ஆவர்.

    * ஏனையத் திருமுறைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு….ஆலவாய் இறைவர்
    இயற்றிய திருமுகப்பாசுரம்... இந்தத் தொகை நூலின் முதலில் திகழ்கிறது.


    * சிவபெருமானாலே இயற்றப்
    பெற்றதாகச் சொல்லப் பெறும் தமிழ் நூல்.....

    ஒன்று..."இறையனராகப் பொருள் " என்ற தமிழ் அகப்பொருள் இலக்கணம் அது... அப்பெருமானாலே .. திருவாய் மலர்ந்தருளப் பெற்றப் பாடல்கள்.

    இரண்டாவது...

    i) கொங்குதேர் வாழ்க்கை என்பது . அது குறுந்தொகை என்ற சங்க
    நூலில்... 2−வது பாட்டாக அமையும்.

    ii) மற்றொன்று, இந்தத் "திருமுகப் பாசுரம்" .

    இந்தத் திருமுறையிலே கடைச் சங்க (காலத்து) நூல் ஒன்று உள்ளது.
    அது, நக்கீரரால் இயற்றப் பெற்ற "திருமுருகாற்றுப்படை " இதன்கண் உள்ளது.

    *இப்பன்னிரு புலவர்கள், அவர்கள் தாம் பாடிய பாடல்களின் எண்ணிக்கை-40.*

    1) நக்கீர தேவ நாயனார் = 10 நூல்கள்
    2) நம்பியாண்டார் நம்பி = 10 நூல்கள்
    3) பட்டினத்துப் பிள்ளையார்= 5 நூல்கள்
    4) காரைக்கால் அம்மையார் =3 நூல்
    5) சேரமான் பெருமாள் = 3 நூல்
    6) கபில தேவர் = 3 நூல்
    7) திருவாலவாயுடையார்(இறைவன்) = 1
    8) ஐயடிகள் காடவர்கோன் − 1
    9) கல்லாட தேவ நாயனார் = 1
    10) பரண தேவ நாயனார் = 1
    11) இளம் பெருமான் அடிகள் = 1
    12) அதிராவடிகள் = 1

    *மொத்தம் − 40.*


    மதுரை ஆலவாய்ச் சொக்கேசனே திருவாலவாயுடையார் ஆவர்.

    * இத் திருமுறையில்.. சிவனைப் பற்றி நுவலும் நூல்கள் = 25


    * விநாயஹர் பெருமை பேசும் நூல்கள் = 3

    * முருகன் பெருமை பேசும் நூல் = 1

    * அடியார்களின் பெருமைகள் பேசும் நூல்கள் = 11

    மொ. நூல்கள் = 25 + 3 + 1 + 11 = 40

    *இத்திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பிகள்.*


    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  43. Sat. 28, Jan. 2023 at , 9.23 pm.

    61) திருவாவடுதுறை ஆதீனத்தில் தற்போது அருளாட்சி செய்து வரும் ஆதீன கர்த்தர்........
    *24−ஆம் பட்டம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்.*

    62) சைவ சித்தாந்தம் உள் பொருள்களாகக் கொள்ளும் மூன்று.....
    *பதி, பசு, பாசம்.*

    63) பதி, பசு, பாசம் என்பவற்றின் தமிழ்ப் பெயர்......
    *இறை, உயிர், தளை.*

    64) அநாதி என்பது......
    *தொடக்கமில்லாதது. அதாவது ஆதி இல்லாதது.*

    65) ஆதி என்பது....
    *தொடக்கமுள்ளது.*

    66) அநாதிப் பொருள்கள் ஆறு என்று கணக்கிட்டவர்........
    *உமாபதிசிவம்.*

    67) உமாபதிசிவம் குறிந்த ஆறு அநாதிப் பொருள்கள்....
    *இறை, உயிர், ஆணவம், மூலகன்மம், சுத்த மாயை அசுத்த மாயை.*

    68) பதி, பசு, பாசம் ழூன்றும் ஆதியா ? அநாதியா ?
    *அநாதி.*

    69) சைவ சித்தாந்தக் கொள்கைகள் எதன் அடிப்படையில் நிறுவப்பட்டுள்
    ளன........
    *சற்காரியவாத அடிப்படையில்.*

    70) இல்லது தோன்றாது, உள்ளது அழியாது என்னும் கொள்கைக்குப் பெயர்........
    *சற்காரியவாதம்.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  44. Sun. 29, Jan. 2023 at 7.54 am.

    பஞ்சபட்சி :

    பூர்வபட்சம் திதி = 15
    அமரபட்சம் திதி = 15
    திதி ஒன்றிற்கு பகற்சாமம் = 5
    இராச்சாமம் = 5
    சாமம் ஒன்றிற்கு நாழிகை = 6


    இவற்றுள் உதிக்கின்ற பட்சி முறையே....

    முதற்சாமம் ..... உண்டு
    இரண்டாம் சாமம் ..... நடந்து
    மூன்றாம் சாமம்...... அரசனாகி
    நான்காம் சாமம் ..... தூங்கி
    ஐந்தாஞ் சாமம் ...... சாகும்.

    இவற்றினுள் அந்தரபுத்தி பார்க்குமிடத்தில்......

    உண்கிற பட்சிக்கு நாழிகை = 1 1/4.
    நடக்கின்ற பட்சிக்கு நாழிகை = 1 1/2.
    அரச பட்சிக்கு நாழிகை = 2
    உறங்கும் பட்சிக்கு நாழிகை = 3/4.
    இறங்கும் பட்சிக்கு நாழிகை = 1/2

    ஆக நாழிகை ஆறுக்கு.சாமம்.


    அடுத்து... நந்தை முதலிய திதி பிரிவு.....

    நந்தை = பிரதமை−சஷ்டி−ஏகாதசி.

    பத்திரை = துவிதியை − சத்தமி − துவாதசி.

    சயை = திரிதிகை −அஷ்டமி − திரயோதசி.

    இருத்தை = சதுர்த்தி − நவமி − சதுர்த்தசி.

    பூரணை = பஞ்சமி − தசமி − உவா.

    ஸ்திரராசிகள் = மேடம் − கர்க்கடகம் − துலாம் − மகரம். ( 4 )

    உபய ராசிகள் = தனுசு − மிதுனம் − கன்னி − மீனம். ( 4)


    ReplyDelete
  45. * சந்திரன் கூறு : 1−ஆம் வட்டம்− 1ஆம் பக்கம்...
    நந்தைக்கு − பிரதமை.

    * சந். கூறு. 1−ம் வட்டம் −2−ம் பக்கம்...
    பத்திரைக்கு − துவிதியை

    * சந்.கூறு, 1−ம் வட்டம். 3−ம் பக்கம்
    சயைக்கு − திரிதியை.

    * சந்.கூறு 1−ம் வட்டம்,.4−ம் பக்கம்
    இருத்தைக்கு − சதுர்த்தி.

    * சந். கூறு, 1−ம் வட்டம், 5−ம்பக்கம்
    பூரணை − பஞ்சமி.


    இதுபோல்... 2−ம் வட்டம் நந்தைக்கு − சஷ்டி
    பத்திரைக்கு − சப்தமி
    சயைக்கு − அஷ்டமி
    இருத்தை − நவமி
    பூரணைக்கு − தசமி

    * 3−ம் வட்டம்...
    நந்தைக்கு − ஏகாதசி
    பத்திரைக்கு − துவாதசி
    சயைக்கு − திரயோதசி
    இருத்தைக்கு − சதுர்த்தி
    பூரணைக்கு − உவா.

    * திரவிதி இராசிப் புணர்ச்சிச் சக்கரம்...!

    சர ராசிகள் :
    மேடம், கற்கடகம், துலாம், மகரம்.

    நிலை ராசிகள் :
    இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம்.

    உபய ராசிகள் :
    மிதுனம் , கன்னி, தனுசு, மீனம்.

    Jansikannan60@gmail.com


    ReplyDelete
  46. Tue. 24, Jan 2023 at 9.44 pm.

    அஷ்டவர்க்கம் :

    சூரியன் முதல் சனி வரைருள்ள கிரகங்கள் − 7; லக்னம் − 1
    இந்த எட்டுமே அஷ்ட வர்க்கம்.

    இந்த எட்டையும் கொண்டு கோசரத்தின் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கின்ற ஒவ்வொரு கிரஹத்திற்கும் உள்ள சுபாசுப பலன்கள் அஷ்டவர்க்கத்தால் நிருபிக்கப் படுகின்றன.

    முதலில்... ஸூர்யாஷ்டவர்க்கம் : அதாவது சார்த்தூல விக்ரிடிதம் என்ற விருத்தத்திலிருந்து .....!

    சூரியன் ஜன்ம காலத்தில் தான் இருக்கும் ராசியில் இருந்து....

    • 1, 11, 4, 8, 2, 10, 9, 7... இவ்விடங்களை அடைந்தால்... சுபானாவான். ( 8 )

    • அங்காரகன் இருக்கும் இடத்தில் இருந்து தான் ஜன்ம காலத்திலிருந்த ஸ்தானத்தில் இருந்தது போலவே அதாவது...
    1, 11, 4, 8, 2, 10, 9, 7 இவ்விடங்களில் இருந்தால் சுபானாவான். ( 8 )

    • சனி இருக்கும் இடம் இருந்து முன் தனக்குச் சொன்னது போலவே...

    • 1, 11, 4, 8, 2, 10, 9, 7 − இவ்விடங்களில் இருந்தால் சுபானாவான். ( 8 )

    • சுக்கிரன் இருக்கும் இடத்தில் இருந்து...

    7 ,12 , 6 இவ்விடங்களில் இருந்தால் சுபானாவான். ( 3 )

    • குரு இருக்கும் இடத்தில் இருந்து....

    • 9 , 5 , 11 , 6− இவ்விடங்களில் இருந்தால் சுபானாவான். ( 4 )

    • சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து...
    • 10 , 3 ,11 , 6 − இவ்விடங்களில் சுபானாவான். ( 4 )

    • புதன் இருக்கும் இடத்தில் இருந்து, மேற்கூறிய ...

    10 , 3 , 11 , 6 −இவ்விடங்களிலும்...
    12 , 9 , 5 − இவ்விடங்களில் சுபானாவான்.


    ஜன்ம லக்கனத்தினின்றும்...

    4 , 12 − வது ஸ்தானங்களுடன் கூடிய...
    10 , 3 , 6 − இவ்விடங்களில்... அதாவது...
    4 , 12 , 10 , 3 , 11 , 6 − இவ்விடங்களில் சுபானாவான்.

    இதில் குறிப்பிடப்படாத ஸ்தானங்கள் அசுப ஸ்தானங்கள்.

    அப்போ... ஜாதகன் ஜனித்த காலத்தில் சூரியன் எந்த ராசியில் இருக்கின்றானோ அந்த ராசியே... சூரியனுடைய சொந்த ராசி..


    S T A T E M E N T .

    சூ ரி யா ஷ் ட க வ ர் க் க ம்.

    கிர | இ.மிடம் | ஸ்தானம் |சுப
    ---------|----------------|-------------------------|------|--
    சூரி | தான் | 1,11,4,8,2,10,9,7 | " | 8 |
    " | செவ் | " | " | 8 |
    " | சனி | " | " | 8 |
    " | சுக் | 7 , 12 , 6 | " | 3 |
    " | குரு | 9, 5, 11, 6 | " | 4 |
    " | சந்தி | 10, 3, 11, 6 | " | 4 |
    " | புதன் | 10,3,11,6,12,9, 5 | " | 7 |
    " | லக் | 10,3,11,6,4,12 | " | 6 |
    ---------------------------------------------------------|----- |
    மொத்தம் | 48 |
    -----------------------------------------------------------------|


    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  47. Sun. 29, Jan. 2023 at 12.58 pm.

    குழந்தைகள் முதல் பெரியவர் வரை .... "விபூதி பிடிப்பது"....!

    ------------------------------------------
    | ந | ம | சி | வ | ய |
    ------------------------------------------|
    | ய | ந | ம | சி | வ , |
    ------------------------------------------|
    | வ | ய | ந | ம | சி |
    ------------------------------------------|
    | சி | வ | ய | ந | ம |
    ------------------------------------------|
    | ம | சி | வ | ய | ந |
    -------------------------------------------

    இந்தச் சக்கரம் போல்....ஒரு தாம்பாளத்தில் விபூதி போட்டு எழுதி, கற்பூரம் கொழுத்தி வைத்து....

    " ஆக்குறசணி உச்சாடுபாலதேவதா ..
    சர்வ கிரஹங்களும் உன்னைக் கண்டவுடன், பேரைச் சொன்னவுடன், சர்வ பூத பிசாசுகளும் ஓ யம்மா !
    நேபொய்யே நேபொய்யே என்று கொக்கரித்து ஓட...

    ஓம் ஐயுங் கிலியும் சவ்வும் மாலாமணி சவ்வுங் கிலியும் ஐயும் மாலாமணி சவ்வும் மாலாமணி நான் நினைத்த காரியத்திற்கு முன் வந்து நிற்க, ஸ்வாஹா

    என 108− உரு ஜபித்த பிறகு, அந்த விபூதியில் கொஞ்சம் குழந்தை வாயிலும், சிரசிலும் போட்டு, நெற்றியிலிட்டு,
    உச்சியில் இருந்து பாதம் வரை வாயினால் மூன்று முறை ஊதிவிட்டு, மற்ற விபூதியை தாம்பாளத்துடன் தலைமாட்டில் வைத்து தூங்கச் சொல்லவும்.

    மாலையில் 1−பிடி சிகப்பு சாதம் சுற்றி, வீதியில் வைத்தால்.... சகல பயமும் நீங்கும்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  48. Mon. 30, Jan. 2023 at 4.30 am.

    71) எல்லாம் சிவமயம் என்பது....
    *உலகமும் உயிர்களும், அவரிடத்தே பொலிவுறுகின்றன. அனைத்தும் அவருடன் சேர்ந்து விளங்குவதால் எல்லாம் சிவமயம்.*

    72) கொடிமரம் விளக்குவது....
    *கொடிமரம சிவத்தைக் குறிக்கும்.
    அதிலுள்ள கொடி ஆன்மாவைக் குறிக்கும். கொடிக் கயிறு "பாசம்" ஆகும்.*

    73) சந்தனாச்சாரியர் அல்லது சந்தானக் குரவர்கள்.....
    *மெய்கண்டார், அருள்நந்தி, மறைஞான சம்பந்தர், உமாபதிசிவம்.

    74) சித்தாந்தச் சாத்திரங்கள் மொத்தம்... *14.*

    75) சித்தாந்தச் சாத்திரங்கள்....
    1) திருவுந்தியார்
    2) திருக்களிற்றுப் படியார்
    3) சிவஞானபோதம்
    4) சிவஞான சித்தியார்
    5) இருபா இருபஃது
    6) உண்மை விளக்கம்
    7) சிவப்பிரகாசம்
    8) திருவருட் பயன்
    9) வினா வெண்பா
    10) போற்றிப் பற்றொடை
    11) கொடிக்கவி
    12) நெஞ்சுவிடு தூது
    13) உண்மைநெறி விளக்கம்
    14) சங்கற்ப நிராகரணம்.

    76) விஞ்ஞான கலர் என்பவர்....
    *ஆணவம் ஒன்று மட்டும் உள்ளவர்கள்.*
    77) பிரளயாகலர் என்பவர்....
    *மாயை தவிர்த்து மற்ற ஆணவம், கன்மம் இரண்டும் உள்ளவர்கள்.*

    78) சகலர் என்பவர்.....
    *ஆணவம், மாயை, கன்மம் என்னும் மூன்றும் உள்ளவர்கள்.

    79) ஆன்மாக்கள் என்பது....
    *சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர்.(ஆன்மாக்கள் மலபந்த வேறுபாட்டால் மூவகைப்படும்.)

    80) தடத்த நிலை என்பது....
    *இறைவன் தன்னுடைய சொரூப நிலையிலிருந்து இறங்கி வந்து, படைத்தல், காத்தல், ஒடுக்கல் (அழித்தல்), மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் நிகழ்த்துகின்றார். இப்படி நிகழ்த்தும் நிலை தடத்த நிலை.*

    மீண்டும் அடுத்த பதிவில்.....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  49. Mon. 30, Jan. 2023 at 6.01 am.

    வேதியியல் துளிகள் − 34.

    * சாதாரண உப்பின் வேதியியல் பெயர்..
    *சோடியம் குளோரைடு.*

    * வாசனை உப்பு என்பது....
    *அம்மோனியம் குளோரைடு.*

    * பேக்லைட் பிளாஸ்டிக் என்பது....
    *தெர்மோஸ் செட்டிங்.*

    * பிரைன் என்பது....
    *சோடியம் குளோரைடு கரைசல்.*

    * பேக்கிங் சோடா என்பது....
    *சோடியம் பை கார்பனேட்.*

    *பேக்கிங் பவுடர் என்பது....
    சோடியம் பை கார்பனேட்.*

    * அலுமினியத்தின் முக்கியமான தாது....
    *பாக்ஸைட்.*

    *சாக்பீஸில் உள்ள வேதியியல் பொருள்..
    *கால்சியம் சல்பேட்.*

    *நீல கந்தகத் திராவகம் என்பது....
    *தாமிர சல்பேட்.*

    * பச்சை கந்தகத் திராவகம் என்பது....
    *இரும்பு சல்பேட்.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  50. Mon. 30, Jan. 2022 at 6.19 am.

    உயிரியல் துளிகள் − 38

    * ஒரு கொத்து மலர்களை அழைப்பது....
    *பொக்கே.*

    * நெல்லிக்காயில் உள்ள வைட்டமின்....
    *வைட்டமின் "சி".*

    * கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள தானியம்....
    *அரிசி.*

    * கோதுமையில் இருக்கும் புரதம்.....
    *குளுடெலின்.*

    * தக்காளியில் புற்றுநோயைக் குணப்படுத்தும் பொருள்....
    *லைகோபெனி.*

    * இரத்தம் உறையாமை நோய்.....
    *ஹீமோபீலியா.*

    * மரத்தின் மீது வளரும் தாவரம்.....
    *எபிபைட்.*

    * அகோர்ன் என அழைக்கப்படும் பழத்தின் மரம்......
    *ஓக்.*

    * செல்லின் ஆற்றல் மையம்....
    மைட்டோகாண்டிரியா.*

    * சூழ்நிலை மண்டலத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஆற்றல்.....
    *சூரிய ஒளி.*

    குறிப்பு : கடந்த பாடத்தில் தவறுதலாக 27 என கொடுத்திருந்தேன். அதை 37 என மாற்றிக் கொள்ளுங்கள்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  51. Mon. 30, Jan., 2023 at 8.16 am.

    நம்மை நாமே அறிவது எவ்வாறு.....?

    கடந்த பாடத்தில் நல்ல ஜீரணத்தின் அறிகுறிகள் பற்றி பார்த்தோம்.

    இன்று நாம் பார்க்கவிருப்பது.... கபம்,பித்தம், வாதம் நேரம் பற்றி..!

    நேரம் :

    ௧பம் நேரம் : 6 am to 10 am. & 6 pm to 10 pm.

    பித்த நேரம் : 10 am to 2 pm. & 10 pm to 2 am.

    வாத நேரம் : 2 am. to 6 am. & 2 pm to 6 pm..

    இந்நேரம் எதற்காக கொடுக்கப்பட்டது என்றால்...

    கப நேரமாக இருக்கும் சமயத்தில்... கபத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களைக் கண்டிப்பாகச் சேர்க்கக் கூடாது. அதிலும்... கபம் அதிகம் உள்ளவர்கள் சேர்க்கவே கூடாது. காரணம் நோய் அதிகமாவதை உணரலாம்.

    இதுபோன்று... மற்ற நேரங்களின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து செயல்படுங்கள்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  52. Mon. 30, Jan. 2023 at 10.11 am.


    சயன திக்கு :


    S T A T M E N T .



    கிழக்கு கிழக்கு தென்
    |-------------------------------------------------------|
    | |கி
    | ஈசானியன் இந்திரன் அக்கினி |ழ
    வட | \ | / |க்
    ட | \ | / |கு கு | -------- |
    க் | குபேரன் --------- [ ] ----இயமன் |தெ
    ட | ------- |ற்
    வ | / | \ |கு
    | / | \ |
    | / | \ |தெ
    கு | | ன்
    ற் | வாய்வு வருணன் நிருதி|
    மே|------------------------------------------------------|
    வட மேற்கு மேற்கு



    முக்கியக் குறிப்பு....!

    • இந்திரன் திக்கு என்னும் கிழக்கில் சிரசு வைத்து படுத்தால்..... ஐஸ்வரியம் சேரும்.

    • இயமன் திக்கு என்னும் தெற்கில் சிரசு வைத்து படுத்தால்..... ஆயுள் விருத்தி யாகும்.

    • வருணன் திக்கு என்னும் மேற்கில் சிரசு வைத்துப் படுத்தால்... பிரபலமும், கீர்த்தியும் உண்டாகும்.

    • குபேரன் திக்கு என்னும் வடக்கு .... வியாதி சம்பவிக்கும். ஆகவே... வடக்கு சிரம் வைத்துப் படுக்கலாகாது.

    • படுக்கும் போது அம்மணமாகவோ,கெளபீனமாகவோ படுக்கலாகாது.

    • இரவு போஜனம் செய்த பிறகு 100−அடி உலாவிய பின் நித்திரை செய்வதே ....
    • சயன சாஸ்திர விதி் ஆகும்.


    மீண்டும் அடுத்த பதிவில்.....

    Jansikannan6@gmail.com.

    ReplyDelete
  53. Sun. 29, Jan. 2023 at 7.54 am.

    பஞ்சபட்சி :

    பூர்வபட்சம் திதி = 15
    அமரபட்சம் திதி = 15
    திதி ஒன்றிற்கு பகற்சாமம் = 5
    இராச்சாமம் = 5
    சாமம் ஒன்றிற்கு நாழிகை = 6


    இவற்றுள் உதிக்கின்ற பட்சி முறையே....

    முதற்சாமம் ..... உண்டு
    இரண்டாம் சாமம் ..... நடந்து
    மூன்றாம் சாமம்...... அரசனாகி
    நான்காம் சாமம் ..... தூங்கி
    ஐந்தாஞ் சாமம் ...... சாகும்.

    இவற்றினுள் அந்தரபுத்தி பார்க்குமிடத்தில்......

    உண்கிற பட்சிக்கு நாழிகை = 1 1/4.
    நடக்கின்ற பட்சிக்கு நாழிகை = 1 1/2.
    அரச பட்சிக்கு நாழிகை = 2
    உறங்கும் பட்சிக்கு நாழிகை = 3/4.
    இறங்கும் பட்சிக்கு நாழிகை = 1/2

    ஆக நாழிகை ஆறுக்கு.சாமம்.


    அடுத்து... நந்தை முதலிய திதி பிரிவு.....

    நந்தை = பிரதமை−சஷ்டி−ஏகாதசி.
    பத்திரை = துவிதியை − சத்தமி − துவாதசி.
    சயை = திரிதிகை −அஷ்டமி − திரயோதசி.
    இருத்தை = சதுர்த்தி − நவமி − சதுர்த்தசி.
    பூரணை = பஞ்சமி − தசமி − உவா.
    ஸ்திரராசிகள் = மேடம் − கர்க்கடகம் − துலாம் − மகரம். ( 4 )
    உபய ராசிகள் = தனுசு − மிதுனம் − கன்னி − மீனம். ( 4)

    அப்போ...சந்திரநாட் கூறுபாட்டிற்கு திதிப் புணர்ச்சி.......!


    S T A T E M E N T .
    ---------------------------------

    --------------------------------------------------------------------
    சந் 1பக் 2பக் 3பக் 4பக் 5பக்
    கூறு நந்தை பத் சயை இருத் பூரணை
    --------------------------------------------------------------------

    1−ம் பிர துவி திரி சதுர் பஞ்சமி
    வட்டம்
    --------------------------------------------------------------------

    2−ம் சஷ்டி சப்தமி அஷ் நவமி தசமி
    வட்டம்
    --------------------------------------------------------------------

    3−ம் ஏகாதசி துவா திர சதுர் உவா
    வட்டம்
    --------------------------------------------------------------------


    ஸ்திர விதி இராசி சதுஷ்டியமாகிய இராசிப் புணர்ச்சி ....


    S T A T E M E N T .
    ---------------------------------


    |------------------------------------------------------------------|
    | |
    | சரராசி் | நிலை ராசி | உபய ராசி் | | | | |
    |-----------------|----------------------|-------------------------|
    | | | |
    | மேடம் | இடபம் | மிதுனம் |
    | | | |
    |------------------|----------------------|------------------------|
    | | | |
    | கற்கடகம் | சிங்கம் | கன்னி |
    | | | |
    |-------------------|---------------------|------------------------|
    | | | |
    | துலாம் | விருச்சிகம் | தனுசு |
    | | | |
    |-------------------|---------------------|------------------------|
    | | | |
    | மகரம் | கும்பம் | மீனம் |
    | | | |
    |------------------------------------------------------------------|




    Next .....


    S T A T E M E N T .
    ----------------------------------


    -

    ReplyDelete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete
  55. This comment has been removed by the author.

    ReplyDelete
  56. Next .....


    S T A T E M E N T .
    ----------------------------------


    --------------------------------------------------------------------
    பூர்வ பட்சம் அமர பட்சம்
    --------------------------------------------------------------------
    | பகல் | இரவு | பகல் | இரவு | | ----------------|-----------------|-----------------|-------------|
    | | | | |
    | அ−வல் | உ−காகம் | ஓ−மயில் |ல− கோ| | உ. 1−1/4 | உ.1−1/4 | உ.1−1/4 |உ.11/4 |
    |-----------------|------------------|-----------------|------------|
    | | | | |
    | இ−ஆந். | இ−ஆந் | உ−காகம் | உ−கா |
    | ந.11/2 | அரசு−2 |மரம் 1/2 |தூ.3/4 | |-----------------|------------------|----------------|-------------|
    | | | | |
    | உ−கா | அ−வல் | அ−வர் | இ.ஆ. |
    | அர−2 | ம. 1/2 | தூ.3/4 | ந.11/2 | |-----------------|------------------|----------------|-------------| | | | | |
    | எ−கோழி | ஓ−மயில் | எ−கோழி | அ−வல்| |தூ. 3/4 | ந.11/2 | அரசு 2 | மர. 1/2| |-----------------|------------------|----------------|-------------|
    | | | | |
    | ஓ−மயில் | எ−கோழி | இ−ஆ | ஓ−மயி |
    | மர.1/2 | தூ.3/4 | ந.1 1/2 | அரசு−2| --------------------------------------------------------------------


    S T A T E M E N T O V E R .
    ---------------------------------------------------


    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  57. Mon. 30, Jan. 2023 at 7.02 pm.

    நாடிப் பயிற்சி − 79.

    கடந்த பாடத்தில் வியர்வை பற்றி பார்த்தோம்...

    இன்று நாம்...நோயாளின் வாய் நீர் சோதிக்கும் விதம் பற்றி பார்க்கலாம்.

    வாய்நீர்.....

    * கள்ளைப் போல் இருந்தால் வாத சுரம்..

    * எண்ணெய் போல் இருந்தால் சேட்ப சுரம்.

    * நெய்யைப் போல் இருந்தால் பித்த சுரம்.

    * வாய் நீர் வித்தியாசமான ருசிகரமாக இருந்தால் ... காக்கை வலி .

    * வாய் நீர் தண்ணீர் போலானால் வாத சன்னி.

    * வாய் நீர் குழம்பு போலானால் பித்த சன்னி .

    * வாய் நீர் மெழுகு பதம் போலானால் சேத்தும சன்னி.

    அடுத்து....!

    * எச்சிலை உமிழ்ந்தால் ஆட்டு வாயிலி ருந்து ஒழுகும் உமிழ் நீர் போலானால்... வாத சக்தி.

    * முள்ளம் பன்றி பொலானால் சேத்தும சன்னி.

    * மானைப் போல் பாய்ந்தால் பித்த மாரக சன்னி சத்தி.

    * மயிலிறகு வர்ணமானால் வாத மூலம்.

    * கிளியிறகு வர்ணமானால் பித்த மூலம்.

    * எச்சிலை உமிழ்ந்தவுடனே கீழே குறுக்கிட்டு விழுந்தால் ௯ஷயரோகம்.

    * கொக்கிறகு நிறமானால்.... சிலேத்தும மூலம்.

    * நீண்டு கிடந்தார் போர் விழுந்தால் அரோசக ரோகம்.

    * உருண்டையாய் விழுந்தால் ருத்திர வாயு ரோகம்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  58. Tue. 31. Jan. 2023 at 8.24 am.

    81:) சற்காரிய வாத அடிப்படையில் நிறுவப்படாத கொள்கைக்கு பெயர்...
    *அசற்காரிய வாதம்.*

    82) காரியம் உண்டாவதற்கு ஏதுவாக இருப்பது....
    *காரணம்.*

    83) காரணத்தால் உண்டான ஆக்கம்.....
    *காரியம். (காரியம் என்பது செயற்படு பொருள்.)*

    84) காரியத்துக்கு உரிய மூவகைக் காரணங்கள்.....
    *முதற்காரணம், துணைக்காரணம், நிமித்த காரணம்.*

    85) முதற்காரணத்திற்கு காட்டும் உவமை....
    *மண்.*

    86) துணைக் காரணத்திற்கு காட்டும் உவமை....
    *தண்டு சக்கரம்.*

    87) நிமித்த காரணத்துக்குக் காட்டும் உவமை....
    *குயவன்.*

    88) காரியத்துக்குக் காட்டும் உவமை....
    *குடம்.*

    89) காரியத்தோடு ஒற்றுமை உடைய காரணம்....
    *முதற்காரணம்.*

    90) காரியம் தோன்றும் வரை தொடர்புடையதாய் இருந்து பின் நீங்கும் காரணம்....
    *துணைக்காரணம்.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  59. Wed. 01. Feb. 2023 at 8.34 am

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி...!

    91) காரியத்தை உண்டாக்கும் கர்த்தா....
    *நிமித்த காரணம்.*

    92) நிமித்த காரணத்தின் வேறு பெயர்...
    *காரண கர்த்தா.*

    93) பிரபஞ்சத்தின் முதற்காரணம்....
    *மாயை.*

    94) பிரபஞ்சத்தின் துணைக் காரணம்....
    *சிற்சத்தி. அதாவது திருஅருட்சக்தி.*

    95) பிரபஞ்சத்தின் நிமித்த காரணம்....
    *இறைவன்.*

    96) காரணத்தில் இருந்து தோன்றிய காரிய வளர்ச்சியின் 2− வகைகள்....
    *பரிணாமம், விருத்தி.*

    97) பரிணாம வளர்ச்சி என்பது....
    *ஒன்றிலிருந்து மற்றொன்று திரிந்து தோன்றுவது.*

    98) பரிணாம வளர்ச்சிக்குக் காட்டும் உவமை.....
    *பால் தயிர் ஆவது.*

    99) விருத்தி வளர்ச்சி என்பது....
    *ஒன்றில் இருந்து மற்றொன்று திரியாமல் விரிவது.*

    100) விருத்தி வளர்ச்சிக்கு காட்டும் உவமை....
    *மடித்து வைத்த துணி கூடாரமாக விரிவது.*

    மீண்டும் அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  60. Wed. 01, Feb. 2023 at 9.29 am.

    உயிரியல் துளிகள் − 39.

    * சிறுநீரகத்தின் நிறம்....
    *அடர்ந்த சிவப்பு நிறம்.*

    * சிறுநீரகங்கள் அமைந்திருப்பது....
    *முதுகெலும்பின் இரு பக்கத்திலும்.*

    * சிறுநீரகத்தின் பருமன்.....
    *3 செ.மீ.*

    * சிறுநீரகத்தின் நீளம்.....
    *12 செ.மீ நீளமும், 6 செ.மீ அகலமும் கொண்டது.*

    * சிறுநீரகத்தில் சற்றுத் தாழ்ந்து காணப்படுவது....
    *வலது சிறுநீரகம்.*

    * சிறுநீரகத்தை மூடியிருக்கும் சவ்வு....
    *கேப்சியூல்.*

    * சிறுநீரகங்களை சிறுநீரகப் பையோடு இணைப்பது...
    *சிறுநீரகக் குழல்கள்.*

    * அமில காரச் சமநிலையை ஒழுங்கு படுத்துவது.....
    *சிறுநீரகம்.*

    * சிறநீரகத்தில் காணப்படும் நெஃப்ரான்களின் எண்ணிக்கை.....
    *ஏறக்குறைய 1 மில்லியன்.*

    * சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அல்லது அலகு.....
    *நெஃப்ரான்.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  61. Thu. 02, Feb. 2023 at ....

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி...!

    101) பொருள்களின் இருவகை இயல்புகள்....
    *பொது இயல்பு, சிறப்பு இயல்பு.*

    102) பொது இயல்பின் வேறு பெயர்....
    *தடத்த இலக்கணம்.*

    103) சிறப்பு இயல்பின் வேறு பெயர்....
    *சொரூப இலக்கணம், உண்மை இலக்கணம்.*

    104) பொது இயல்பு என்பது....
    *பிற பொருள்களோடு சம்பந்தப்பட்
    டிருக்கும்.*

    105) சிறப்பு இயல்பு என்பது....
    *எந்தப் பொருளோடும் சம்பந்தப் படாமல் "தனித்து" இருக்கும்.*

    106) தடத்த இலக்கணம் (பொது இயல்பு) என்பது....
    *இறைவன் உயிரோடு ஒன்றாயும், வேறாயும், உடனாயும் கலந்திருத்தல்.*

    107) சொரூப இலக்கணம்(சிறப்பு இயல்பு) என்பது....
    *இறைவன் சச்சிதானந்தமாய் இருத்தல்.*

    108) சித்தாந்த நெறிப்படி ஒளி என்பதன் சிறப்பு.....
    *திருவருள்.*

    109) இருள் என்பது....
    *ஆணவம்.*

    110) உள்ளம் என்ற சொல்....
    *உயிர்.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  62. Thu. 02, Feb. 2023 at 4.30 am

    உயிரியல் துளிகள் − 40

    * சிறுநீரகம் பெறும் இரத்தத்தின் அளவு...
    *1250 லிட்டர்.*

    * சிறுநீரை வெளியேற்றுவது.....
    *சிறுநீரகப் புறவழி.*

    * பாலூட்டிகளில் கழிவு நீக்க உறுப்புகளாக இருப்பவை.....
    *சிறுநீரகங்கள்.*

    *முக்கியமான கழிவு நீக்க உறுப்பு.....
    *சிறுநீரகம்.*

    * சிறுநீரகத்தின் வடிவம்....
    *அவரை விதை வடிவத்தில் உள்ளது.*

    * கல்லீரல் காணப்படும் இடம்......
    *வலது சிறுநீரகத்தின் மேல்.*

    * கல்லீரலின் எடை....
    *ஏறக்குறைய 1500 கிராம்.

    * மனித உடலின் மிகப் பெரிய சுரப்பி...
    *கல்லீரல்.*

    * கல்லீரலில் சுரக்கும் நீர்.....
    *பித்த நீர்.*

    * பித்த நீரின் பயன்....
    *கொழுப்பு செரித்தலுக்காக.*

    மீண்டும் அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  63. Sat. 04, Feb. 2023 at 8.56 pm.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....!

    111) உலகைப் படைக்கிற நிமித்த காரணன்.......
    * சிவபெருமான்.*

    112) இறைவன் உலகைப் படைக்கிறானா ?
    *இல்லை. (காரணம் உயிர்கள் அநாதி.)*

    113) இறைவன் உயிரோடு ஒன்றாய்க் கலந்த நிலையைக் குறிக்கும் சொல்....
    *அபேதம்.*

    114) இறைவன் உயிர்க்கு வேறாய் நிற்கும் நிலையைக் குறிக்கும் சொல்.....
    *பேதம்.* (இது காட்டும் உபகாரம்.)*

    115) இறைவன் உயிரோடு உடனாய் நிற்கும் நிலையைக் குறிக்கும் சொல்...
    *பேதா பேதம். (இது காணும் உபகாரம்.)*

    116) அநாதி பெற்ற சித்துரு....
    *ஆன்மா.*

    117) நவம் தரும் பேதங்கள்....
    *சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவம்,
    மகேசுவரன், உருத்திரன், விஷ்ணு, பிரமன்.*

    118) உருவத் திருமேனி அதாவது சகளத் திருமேனி, வியத்த லிங்கம் என்பது....
    *மகேசுவரன், உருத்திரன், மால், அயன்.*

    119) அருவத் திருமேனி அதாவது நிட்களத் திருமேனி, அவ்வியத்த லிங்கம் என்பது.....
    *சிவம், சத்தி, நாதம், விந்து.*

    200) அருவுருவத் திருமேனி அதாவது சகள நிட்களத் திருமேனி, வியத்தா வியத்த லிங்கம் என்பது......
    *சதாசிவம்.*

    மீண்டும் அடுத்த பதிவில்.....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  64. Sun. 05, Feb. 2023 at 4.43 am.

    வேதியியல் துளிகள் − 35.

    * அறுவை சிகிச்சையில் மயக்க மருந்தாகப் பயன்படுவது.....
    *நைட்ரஸ் ஆக்ஸைடு.*

    * மதுபானங்களில் இருக்கும் வேதிப் பொருள்....
    *எத்தில் ஆல்கஹால்.*

    * எப்சம் உப்பு என்பது.....
    *மக்னீசியம் சல்பேட்.*

    * அமில மின்கலத்தில் பயன்படும் அமிலம்.....
    *கந்தக அமிலம்.*

    * கார்போரண்டம் என்பதன் வேதியியல் பெயர்.....
    *சிலிகான் கார்பைடு.*

    * காஸ்டிக் சோடா என்பது....
    *வணிக முறையில்.... சோடியம் ஹைட்ராக்ஸைடு.*

    * லி என்பது...
    *சோடியம் ஹைட்ராக்ஸைடு கரைசல்.*

    * கடுங்கார பொட்டாசின் வேதியியல் பெயர்.....
    *பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு.*

    * இலேசான தனிமம் என்பது....
    *நைட்ரஜன்.*

    * வைரத்தின் வேதியியல் இயற்கை...
    *தூய்மையான தனிமம்.*

    மீண்டும் அடுத்த பதிவில் .....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  65. Sun. 05, Feb. 2023 at 4.30 am.

    பிண்ட லிங்கம்.....!

    மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
    மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்.
    மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
    மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.

    மனிதர்கள் உடம்பு சிவலிங்க வடிவம். எனவே மனித உடம்பு கோயிலாகும்.

    மனித உடம்பு.... சத்தியும் சிவனும் சேர்ந்த சதாசிவம்.

    மனித உடம்பின் ஒவ்வொரு அசைவும் தில்லைச் சிற்றம்பலத் திருநடனமே ஆகும்.

    பிண்டம் என்பது... உடம்பு.

    பிண்ட லிங்கம் என்பது... மனித உடம்பே சிவலிங்க வடிவம் எனப்பட்டது.

    தலை.... ஆவுடையாருடன் அமைந்த பாணம்.

    உடம்பு ஆவுடையார். எனவே, உடம்பு சிவலிங்கவடிவம் ஆகும்.

    சிதம்பரம் என்றால்.... கோயில் என்று பொருள்.

    உடம்பு இறைவனுடைய கோயில்.எனவே சிவலிங்கவடிவம் ஆகும்.

    அது உருவான சதாசிவத்தால்...அறிவும் ஆற்றலும் பெறுகிற உடம்பு சத்தியும் சிவனும் சேர்ந்த சதாசிவம்.

    உடம்பு அசைவு ஒவ்வொன்றும் ஒரு நடனம் போலிருப்பதால்....உடம்பு திருநடனம் எனப்பட்டது.

    ஆக்கை என்றால் .... உடம்பு.

    சைவ உலகில் கோயில் என்றால் அது சிதம்பரத்தையே குறிக்கும்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  66. This comment has been removed by the author.

    ReplyDelete
  67. Mon. 06, Feb. 2023 at 7.10 am.

    Thiru Inira Neela Parup patham.....!

    History..... !

    This is not any peopled village or town. It is an area near mount Kailash in the Himalayan region. It is supposed Indiran came to this area and worshipped Lord Civan, who manifests Himself hear and walks around.

    Our divine saint Thiru- gnana-Sambandar saw in his imagination holy places in the north and west and sang these verses.

    So, it is described as Vaipputh-thalam; it refers to places not visited by our four saints but contains the description of these places.

    Thiru -gnana-Sambandar sings the verses about these places in the north and west as he saw them in his mind.

    This place Thiru-indra-neela-parup-patham is one among the five holy places in the north. They are Kailash, Badrinath,
    Kedarnath, Thiru-indra-neela-parup-patham and Amarnath.
    .......

    You the devotees to enable your evil karma to vanish from you and all benefactions to come to you, our Lord of nation - wide fame and uprightness, manifested in Thiru-Indira-neela-parup-patham, may be praised.

    Speak out your diminutiveness in your mind feeling ashamed of it, you need not expose it to others.

    Think of His fame and good qualities and exhibit them. Praise all His benevolent deeds and worship Him in your mind. You will have all benevolent good qualities as well as all that is needed in your lifetime.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  68. Mon.06, Feb.2023 at 12.42.pm.

    மாலைக் கண் தீர:இலுப்பைப்பூ or மகிழம் விதை or கா.ஆமணக்கு முத்து,orஅளிஞ்சி விதை, தா−பாலில் இழைத்துக் கண்ணில் தீட்டி வர குணமாகும்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  69. சிக்கல்பட்ட உதிரத்தை) வெளியேற்றும்.

    * முடக்கத்தான் இலைகளை எண்ணெயிலிட்டுக் காய்ச்சி வலியுள்ள இடத்தில் பூசினாலோ அல்லது இலைகளை அரிசி மாவுடன் கலந்து அடைபோல் செய்து சாப்பிட்டு வந்தாலோ உடலிலுள்ள வலிகள் தீரும்.

    * இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டி வரக் கீல்களில் உள்ள வாதப்பிடிப்பு, வீக்கம் ஆகியவை தீரும்.

    * இலையை அவித்துச் சாறெடுத்து, ரசமாக்கி,உணவோடு வாரம் 1−முறை கொள்ள மலச்சிக்கல், வாயு நீங்கும்.

    சூலைப் பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
    காலைத் தொடுவளியுங் கன்மலமுஞ்− சாலக்
    கடக்கத்தா னேடிவிடுங் காசினியை விட்டு
    முடக்கற்றான் றனனை மொழி.

    இதன் கருத்து.....

    1−பிடி முடக்கத்தானை இடித்து, 1/2 செம்பு நீரிலிட்டுச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி... வேளைக்கு 1−அவுன்ஸ் வீதம் தினம் 2−வேளை... 3−நாள் கொடுக்க...
    நரம்புகள் சம்பந்தமான மேகவாயுப் பிடிப்பு, மூலம், கப சம்பந்தமான இருமல், மலச்சிக்கல் முதலியவை குணம் ஆகும்.

    * 1 பிடி இலையை வதக்கிப் பூண்டுப்பல் 5, மிளகு 5 ஆகியவற்றைச் சிதைத்து
    1 செம்பு நீரிலிட்டுச் சுண்டக் காய்ச்சிக் குடிக்கச் சுக பேதி ஆகும்.
    பேதியை நிறுத்த மோர் சாதம் எடுத்துக் கொள்ளலாம். மோரில் சிறிது எலுமிச்சைச் சாறு பிழிந்து கொடுக்க பேதி முற்றிலும் நிற்கும். (குறிப்பு : வெந்நீர் அருந்தக் கூடாது. இது பேதியை மிகுதிப் படுத்தும்).

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  70. Tue. 07, Feb. 2023 at 7.43 am.

    சைவ சித்தாந்தச் தொடர்ச்சி...

    201) உருவத் திருமேனிகளில் மூன்று வகை.....
    *போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம்.*

    202) உயிர்க்கு உலக இன்பத்தை வழங்கும் திருமேனி.....
    *போக வடிவம். (கலியாண சுந்தரர் போல).*

    203) உயிர்க்கு ஞானத்தை வழங்கும் திருமேனி....
    *யோக வடிவம் (தட்சிணா மூர்த்தி போல).*

    204) கொடியவரைத் தண்டிக்கும் திருமேனி......
    *வேக வடிவம் (கால சம்மாரர் போல).*

    205) இறைவனுக்கு உரிய மூன்று அவத்தைகள் ( நிலைகள்)......
    *இலயம், போகம், அதிகாரம்.*

    206) இறைவன் உயிர்க்கு மானுடப் பிறப்பைத் தந்தது......
    *இறைவனை மனம், மொழி, மெய்களால் வழிபட.*

    207) இறைவன் செய்த பொது நூல்....
    *வேதம்.*

    208) இறைவன் செய்த சிறப்பு நூல்....
    *ஆகமம்.*

    209) இறைவன் திருமேனி மாயையால் ஆனதா ?
    *இல்லை.*

    210) அவ்வாறெனில் இறைவனின் திருமேனி......
    *திருவருட் சத்தியால் ஆனது.*

    மீண்டும் அடுத்த பதிவில்.....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  71. Wed. 08, Feb. 2023 at 3.49 am.

    சாவியினால் மந்திரிக்கும் சுளுக்கு மந்திரம்....!

    1) (கடுவுரள் − சுடுகாட்டுவுரள்− அங்கவுரள்−ஆகாயவுரள்−சங்குவுரள்−
    சங்குசக்கரம்வுரள்)

    எச்சுளுக்கு பாய்ந்தாலும், எதிர்சுளுக்கு பாய்ந்தாலும் பத்துசுளுக்கும் பறந்தோடிப் போம். பரமகுரு நாதாவே ஓம் காளி ஓம் பிடாரி, ஓம் நமசிவாய ஓம்...
    இந்த மந்திரத்தை ஓடுகிற ஜலத்தில் கணுக்கால் வரை தண்ணியில் நின்று 1008−உரு ஜெபித்த பிறகு யாருக்காகிலும் சுளுக்கு விழுந்தால், சாவியினால் தடவி, 48−விசை மந்திரிக்கவும். இவ்வாறு 3−வேளை செய்ய நீங்கும்.


    2) (அப்புநிற்க−தேயுநிற்க−வாயுநிற்க−
    உடல்நிற்க−உயிர்நிற்க−சத்திநிற்க−சிவம்நிற்க−சுவாஹா)

    இம்மந்திரத்தையும் மேற்கண்டபடி ஜலத்தில் நின்று உருவேத்தி வைத்துக் கொள்ளவும்.

    (குறிப்பு... எந்த மந்திரம் ஆனாலும், ஒருவருக்கு மந்திரித்த பிறகு, பூசை முகத் திலாவது அல்லது குளிக்கையிலாவது ஆறு முதலிய ஜலக்கரையிலாவது முன் செலவழிந்த குறைக்காக ஜெபித்து பூர்த்தி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
    ஏனெனில்... தேடாதழிக்கிற் பாடாய் முடியும் என்பது போல் பலியாது).

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  72. Wed. 08, Feb, 2023 at 4.15 am.

    உயிரியல் துளிகள் − 41

    * உயிரின் மரபுப் பொருள்....
    *டி.என்.ஏ (D.N.A).*

    * டி.என்.ஏ−யின் அமைப்பை விளக்கிய வர்......
    *வாட்சன் மற்றும் கிரீக்.*

    * கட்டுப்படுத்தப்படாத செல்பிரிவின் மூலம் தோன்றும் நோய்....
    *புற்றுநோய்.*

    * உயிருள்ளவை, உயிரற்றவைகளுக் கிடையேயுள்ள தொடர்புடையது....
    *வைரஸ்.*

    * போலோம் திசு காணப்படுவது....
    *தாவரங்களில்.*

    * பல செல் உயிரினங்கள் ஆல்கா மற்றும் மனித இனம்... இவையெல்
    லாம் தோன்றுவது....
    *முட்டையில் இருந்து.*

    * செல் பிரிதலுக்கும், மலர்தலுக்கும் காரணமான ஹார்மோன்.....
    *கிப்பரில்லின்ஸ்.*

    * தாவரங்களுக்கு மட்டுமே சிறப்பாகத் தேவைப்படும் கார்போஹைட்ரேட்டின் வகை...
    *செல்லுலோஸ்.*

    * எல்லா வயதினரும் எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரே வைட்டமின்.....
    *வைட்டமின் − ஈ.*

    * ஊர்வனவற்றில் மிகவும் மெதுவாக நடக்கக் கூடியது....
    *ஆமை (1 மணிக்கு 0.17 மைல்).*

    மீண்டும் அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  73. Wed. 08, Feb. 2023 at 4.03 am.

    வேதியியல் துளிகள் − 36

    *கிளாபர் உப்பு என்பது....
    *கிளிஸ்டாலின் சோடியம் சல்பேட்.*

    * இரும்புத் தகடுகளைத் துத்தநாக முலாம் பூசி பாதுகாப்பதற்கான பெயர்.... *கால்வானிகேசன்.*

    * வாயுக்கள் மற்றும் திரவங்களுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர்...
    *நீர்மங்கள்.*

    * ஹேமடைட் என்பது....
    *இரும்புத் தாது.*

    * கிராபைட் என்பது....
    *தனிம கார்பன்.*

    * வாயுக்களால் நிரப்பப்பட்ட கோள்கள்....
    *செவ்வாய், புதன், வெள்ளி, பூமி, நெப்டியூன், யுரேனஸ்.*

    * தங்கத்தின் இலத்தீன் பெயர்.....
    *ஆரம்.*

    * பாக்சைட் மிகுதியாக உற்பத்தி செய்யப்படும் மாநிலம்....
    *தமிழ்நாடு.*

    * வேதியியலின் தந்தை.....
    *லவாய்சியர்.*

    * 2002−ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற பயணி....
    *கிரிகிரி ஆல்சன்.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  74. Wed. 08, Feb. 2023 at 6.54 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....!

    211) சிவனுக்கு ஈசான மந்திர உறுப்பு...
    *சிரசு.*

    212) ஈசான மந்திரத்தால் செய்யும் தொழில்....
    *அருளல் அதாவது அநுக்கிரகம்.*

    213) சிவனுக்குத் தத்புருட மந்திர உறுப்பு.....
    *முகம்.*

    214) தத்புருட மந்திரத்தால் செய்யும் தொழில்....
    *திரோபவம் அதாவது மறைத்தல்.*

    215) சிவனுக்கு அகோர மந்திர உறுப்பு...;
    *இதயம்.*

    216) அகோர மந்திரத்தால் செய்யும் தொழில்......
    *சங்காரம் அதாவது அழித்தல்.*

    217) சிவனுக்கு வாமதேவ மந்திர உறுப்பு.....
    *உந்தி.*

    218) வாமதேவ மந்திரத்தால் செய்யும் தொழில்.....
    *திதி அதாவது காத்தல்.*

    219) சிவனுக்கு சத்தியோசாத மந்திர உறுப்பு.....
    *முழந்தாள்.*

    220) சத்தியோசாத மந்திரத்தால் செய்யும் தொழில்.....
    *சிருஷ்டி அதாவது படைத்தல்.*

    மீண்டும் அடுத்த பதிவில்.....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  75. Fri. 10, Feb. 2023 at 4.01 am.

    சைவ சித்தாந்தத் தொடர்ச்சி....!

    221) ஐவகை சத்திகள்.....
    *பராசத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி.*

    222) அப்போ சத்தி ஐவகை என்றால் சத்தி பலவோ ?
    *சத்தி ஒன்றே. அது காரிய வேறுபாட் டால் பல பெயர்களைப் பெறும்.*

    223) ஆதி சத்தி தொழிலாற்றும்போது பெறும் பெயர்.....
    *திரோதான சத்தி.*

    224) சதாசிவத்தின் சத்தி.....
    *மனோன்மணி.*

    225) மகேசனின் சத்தி.....
    *மகேசுவரி அதாவது மகேசை.*

    226) உருத்திரனின் சத்தி.....
    *உமாதேவி.*

    227) விஷ்ணுவின் சத்தி.....
    *திரு அதாவது இலக்குமி.*

    228) பிரமனின் சத்தி.....
    சரசுவதி அதாவது வாணி.*

    229) இறைவனின் வைப்பு சத்தி....
    *மாயை.*

    230) பரிக்கிரக சத்தியின் வேறு பெயர்......
    *வைப்பு சத்தி.*

    மீண்டும் அடுத்த பதிவில்.....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  76. Fri. 10, Feb. 2023 at 4.14 am.

    வேதியியல் துளிகள் − 37.

    * நீலக்கோள் என்பது....
    *பூமி.*

    * புவி.... ஒரு நீல முத்துப் போல் காட்சியளிக்கிறது என்று கூறியவர்....
    *ஆம்ஸ்ட்ராங்.*

    * ஹோமியோபதியின் தந்தை....
    *சார்லஸ் ஹனிமேன்.*

    * மருத்துவ ரீதியான கருக்கலைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு....
    1971-ஆம் ஆண்டு.

    * தமிழகத்தில் மருத்துவப் படிப்பு முதன் முறையாக தமிழில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு.....
    *2008-2009.*

    * புரோமின் நீர்க்கரைசலை, நிறம் இழக்கச் செய்வது....
    *அசிட்டிலின்.*

    * யூரியாவை முதன் முதலில் சோதனைச் சாலையில் தயாரித்தவர்...
    *வோலர்.*

    * போலி நிறப் பொன்.....
    *இரும்பு பைரைட்டுகள்.*

    * இரும்பின் இலத்தீன் பெயர்.....
    *ஃபெர்ரம்.*

    * இனர்ட் வாயுக்கள் என்பது...
    *ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான் போன்ற தொகுதி வாயுக்கள்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  77. This comment has been removed by the author.

    ReplyDelete
  78. Fri. 10, Feb. 2023 at 8.22 am.

    இன்றைய மருத்துவம்.....!

    செந்தூர மூலி :

    தாவரவியல் பெயர் : Glinus Laloides.

    செந்தூர மூலியின் வேறு பெயர் "செருப்படை".

    இந்த இனத்தில் இரு வகை உண்டு. சிறு செருப்படை, பெருஞ் செருப்படை .

    இதில்... சிறுசெருப்படை மிகவும் விசேஷ குணம் உடையது.

    இதன் குணம்.....

    செருப்படைக்கு வாதகோபம், மந்தாக்கினி, சூலை, குன்மம், ஆகிருஷ்ணதம்பன வாதம், வெள்ளை வீழ்தல் இவற்றைக் குணப்படுத்தும்.

    செய்கை : உற்சாககாரி.

    உற்சாககாரி என்பது.... Stimulant. அதாவது... நாடி நடையையும், சரீரத்தில் உஷ்ணத்தையும் அதிகரிக்கும் மருந்து.

    செருப்படைக்கு வாதமந்தஞ் சேர்வான மேக
    மிருப்படிகொள் பொல்லா இசிவும்− விருப்படிக்குஞ்
    சூலையொடு வாதகுன்மந் தோற்றா தொருநாளும்
    வேலையொத்த கண்ணாய் விளம்பு.

    இதன்படி... இம்மூலிகைச் சாற்றால், ரசகெந்தி, காந்தம், அயம், அப்பிரகம் இவை அனைத்தையும் சேர்த்து அரைத்து, இதனை வில்லை தட்டிப் பாகப்படி புடமோ அல்லது எரிப்போ கொடுத்தெடுக்கச் செந்தூரமாகும்.

    சூலை, குன்மம், மந்தாக்கினி, வாதம், வெள்ளை, ஆகிருஷ்தஸ்தம்பவாதம் முதலியவை குணமாகும்.

    இதனைக் சூரணமாகவோ, கியாழமாக வும் கொடுக்கலாம்.

    எவ்வாறெனில்... சிறு செருப்படையை யும், வெள்ளை வெங்காயத்தையும், சமஅளவு எடுத்து இடித்துச் சாறெடுத்து.. 5−6 தடவை வடிகட்டித் தினம் 1−வேளை காலையில் 1/2 ஆளாக்குக் கொடுக்கப் பேதியாகும். (8 ஆழாக்கு 1−படி) .

    மேகச் சொறி, சிரங்கு, வாதம், வெள்ளை முதலியவைகள் நீங்கும்.

    மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  79. Fri. 10, Feb. 2023 at 11.59 am.

    பஞ்சபட்சியில்...உறவு பட்சி....!

    • மயிலுக்கு = கோழியும், காகமும் உறவு.

    • காகத்துக்கு = மயிலும், கோழியும், வல்லூறும் உறவு.

    • வல்லூறுக்கு = காகம் உறவு.

    • கோழிக்கு = மயிலும், காகமும் உறவு.

    • ஆந்தைக்கு = கோழியும், மயிலும், வல்லூறும் உறவு.

    • மற்றவை எல்லாம் பகை. (இவை ஆத்தும சிநேகம்.).


    பகை பட்சி :


    • மயிலுக்கும், கோழிக்கும் = வல்லூறும், ஆந்தையும் பகை.

    • காகத்துக்கு = ஆந்தை பகை

    • ஆந்தைக்கு = காகம் பகை

    • வல்லூறுக்கு = காகம் தவிர மற்றவையெல்லாம் பகை.

    • சொல்லாதவைகள் எல்லாம் உறவு. (இவை உயிர்ப்பகை).

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  80. Sun. 12, Feb. 2023 at 10.52 am

    சைவ சித்தாந்த
    தொடர்ச்சி.....!

    231) இறைவனின் மூவகைச் சக்தி.....
    * இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி.*

    232) இறைவன் திருமேனியாக அமைவது....
    *திருவருட்சத்தி.*

    233) இந்த திருவருட்சத்தி சிவத்தோடு பிரிப்பின்றி நிற்குமா? பிரிந்து நிற்குமா ?
    *பிரிப்பின்றி நிற்கும்.*

    234) திருவருட்சத்தி ஆன்மாவுக்கு மறைப்பாற்றலாக நிற்பது.... *ஆன்மாவிடம் ஆணவக்கலப்பு உள்ளவரை.*

    235) மறைப்பாற்றல் என்பது.... *திரோதான சத்தி.*

    236) முத்தி நிலையில் ஆன்மாவுக்குச் சொரூபத் திருமேனியாக இருப்பது....
    *திருவருட்சத்தி.*

    237) திருவருள் குருவாக வருவது.....
    *உயிருக்கு அருளல் தொழிலைச் செய்ய வேண்டிய காலத்தில்.*

    238) உயிரை விட்டுப் பிரியாமல் எப்போதும் உயிருக்குத் துணையாக இருப்பது....

    *திருவருட்சத்தி.*

    239) தன்னை உயிர் அறிந்து கொள்ளாதபடி உள் நின்று படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் ஆகிய நான்கு தொழில்களைச் செய்து வருவது....
    *திரோதான சத்தி.*

    240) உயிர்களின் கன்மங்களை நுகர வைப்பது.....
    *திரோதான சத்தி.*

    மீண்டும் அடுத்தப் பதிவில்.....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  81. Sun.12, Feb, 2023 at 6.37 pm.

    வேதியியல் துளிகள்− 38.

    * சுண்ணாம்புக் கல் என்பது... *கால்சியம் கார்பனேட்.*

    * சலவைக் கல் என்பது....
    *உருமாற்றுப் பாறை.*

    * குயிக் சில்வர் என்பது....
    *பாதரசம்.*

    * வெளியழுத்தத்தை அறிய உதவும் கருவி....
    *பாரோமீட்டர்.*

    * ஸ்லாக்டு லைம் என்பது....
    *கால்சியம் ஹைட்ராக்ஸைடு.*

    * பாலில் இருக்கும் பொருள்.....
    *லாக்டோஸ்.*

    * பாலின் தூய்மையை அறிய உதவும் கருவி....
    *லேக்டோ மீட்டர்.*

    * பென்சீனைக் கண்டு பிடித்தவர்.....
    *மைக்கேல் ஃபாரடே.*

    * மைக்கேல் ஃபாரடே பென்சீனைக் கண்டு பிடித்த ஆண்டு.....
    *1825−ஆம் ஆண்டு.*

    * அலுமினியத்தின் முக்கியத் தாது....
    *பாக்ஸைட்.*

    மீண்டும் அடுத்த பதிவில்.....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  82. Mon. 13, Feb. 2023 at 9.51 pm.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி...!

    241) பக்குவம் மிகுந்த ஆன்மாக்களுக் குச் சிவத்தை காட்டும் சத்தி.....
    *திருவருட் சத்தி.*

    242) உயிரின் வேறு பெயர்கள்.....
    *அணு, பசு, சதசத்து, ஆன்மா.*

    243) உயிருக்கு அணு என்ற பெயரின் நிலையானது
    *ஆணவத்தால் அணுத்தன்மைப் பட்ட நிலை.*

    244) உயிருக்குப் பசு என்ற பெயரின் நிலையானது....
    *முப்பாசங்களால் கட்டுற்ற நிலைக்கு.*

    245) உயிருக்குச் சதசத்து என்ற பெயர்க் காரணம்.....
    *சத்தும் ஆகாமல், அசத்தும் ஆகாமல் அவற்றோடு சார்ந்ததன் வண்ணமாய் இருத்தலால்.*

    246) உயிருக்கு ஆன்மா என்ற பெயரின் நிலையானது....
    *வியாபக அறிவைப் பெற்ற நிலை.*

    247) சரி... ஆன்மா சத்தா ? அசத்தா ?
    *ஆன்மா சத்தும் அல்ல... அசத்தும் அல்ல... அது சதசத்து.*

    248) பசு என்ற சொல்லின் பொருள்.....
    *பாசத்தோடு சம்பந்தம் உடையது.*

    249) ஆமா.... உயிர்களை இறைவன் படைக்கிறானா ?
    *இல்லை. காரணம்... உயிரின் உடம்பு கடவுளால் படைக்கப்படுகிறது.*

    250) உயிரின் பொது இயல்பு....
    *கருவி கரணங்களோடு கூடி நிற்றல்.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  83. Wed. 15, Feb. 2023 at 7.41 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....!

    251) பதி என்ற சொல்லின் பொருள்....
    *பசுவுக்கும், பாசத்துக்கும் தலைவன்.*

    252) காணும் உபகாரத்தின் பயன்.....
    *உயிரின் அறிவிச்சை செயல்கள், பொருளுடன் கலத்தல்.*

    253) காட்டும் உபகாரத்தின் பயன்....
    *உயிரின் அறிவிச்சை செயல்கள்...விளக்கம் பெறுதல்.*

    254) இறைன் செய்யும் முத்தொழில்கள்...
    *படைத்தல், காத்தல், அழித்தல்.*

    255) இறைவன் செய்யும் ஐந்தொழில் கள்.....
    *படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.*

    256) படைத்தலின் நோக்கம்.....
    *உயிர்களிடம் மலபரிபாகம் உண்டாக்குதல்.*
    .
    257) காத்தலின் நோக்கம்....
    *உயிர்களை வினைபோகம் நுகர வைத்தல்.*

    258) அழித்தலின் நோக்கம்.....
    *உயிர்களின் இளைப்பு ஒழித்தல்.*

    259) மறைத்தலின் நோக்கம்....
    *உயிர்கள் தத்தம் வினைப்பயனை நுகர்தலில் ஆசை உண்டாக்குதல்.*

    260) அருளலின் நோக்கம் ....
    *உயிர்களுக்கு பேரின்பத்தை வழங்குதல்.*

    மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  84. Thu. 16, Feb. 2023 at 7.27 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி...!

    261) இறைவனின் குணமாக உபநிடதம் கூறுவது....
    *சத்து, சித்து, ஆனந்தம்.*

    262) இறைவனின் குணமாக ஆகமம் கூறுவது...
    *தன்வயம், தூய உடம்பு, இயற்கை உணர்வு, முற்றுணர்வு, இயல்பாகப் பாசமின்மை, பேரருள், முடிவிலாற்றல், வரம்பில் இன்பம்.*

    263) அநாதி முத்தன்....
    *சிவன்.*

    264) ஆதி முத்தன்.....
    *ஆன்மா.*

    265) தானே அறியும் சித்து....
    *சிவம்.*

    266) அறிவிக்க அறியும் சித்து.....
    *ஆன்மா.*

    267) உயிருக்குத் தனு, கரண, புவன போகங்களை உண்டாக்குதல் என்பது....
    *படைத்தல் தொழில்.*

    268) தனு முதலியவற்றை ஒரு கால எல்லை வரை நிலை பெறுவித்தல்....
    *காத்தல் தொழில்.*

    269) தனு முதலியவற்றை மாயையில் ஒடுக்குதல் என்பது....
    *அழித்தல் தொழில்.*

    270) உலகத்தையே உயிர்கள் நோக்கி இருக்கச் செய்து தன்னை மறைத்து நிற்றல் என்பது.....
    *மறைத்தல் தொழில்.*

    மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  85. Thu. 16, Feb. 2023 at 10.11 am.

    வேதியியல் துளிகள் − 39

    * சோடா சாம்பல் என்பது....
    *சோடியம் கார்பனேட்.*

    * பி.வி.சி. யின் வேதியியல் பெயர்....
    *பாலி வினைல் குளோரைடு.*

    * ஆன்டிமணி என்ற தனிமத்தின் இலத்தீன் பெயர்.....
    *ஸ்பிடியம்.*

    * இரும்பு துருப்பிடித்தல் என்பது...
    *ஹைட்ரேட்டட் இரும்பு ஆக்ஸைடு.*

    * மர ஆல்கஹால்....
    *மெத்தில்.*

    * அந்து உருண்டையின் வேதியியல் பெயர்...
    *நாப்தலின்.*

    * புகையிலையில் உள்ள ஆல்கலைட்டின் பெயர்....
    *நிகோடின்.*

    * ஆக்ஸிஜன் மற்றும் ஓசோனுக் கிடையேயான தொடர்பு.....
    *அல்லோட்ரோப்ஸ்.*

    * பாலிமரின் வியாபாரப் பெயர்....
    *பெர்ஸ்பெக்ஸ்.*

    * இரும்பு துருப்பிடித்தல் என்பது....
    *ஹேட்ரேட்டட் இரும்பு ஆக்ஸைடு.*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  86. Sat. 18, Feb. 2023 at 8.42 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....!

    271) உயிர்களின் மலப்பற்றைப் போக்கித் தனது பேரின்பத்தை நுகர வைத்தல் என்பது......
    *அருளல் தொழில்.*

    272) படைத்தல் முதலிய முத்தொழில்கள் செய்யப்படுவது....
    *மாயை ஆகிய சடப் பொருளிடத்தில் சடம் − அசத்து).*

    273) மறைத்தல், அருளல் இவ்விரு தொழில்கள் செய்யப்படுவது....
    *உயிர் ஆகிய சித்துப் பொருளிடத்தில்.*

    274) படைத்தல் முதலிய ஐந்தொழில்கள் செய்யப்படுவது....
    *உயிர்களுக்காக.*

    275) உயிர்களின் மூன்று வகை.....
    *ஒரு மலத்தார் (விஞ்ஞானகலர்)*
    *இரு மலத்தார் (பிரளயாகலர்)*
    *மும்மலத்தார் (சகலர்)*

    276) சகலரைப் பிணித்துள்ள மலங்கள்....*ஆணவம், கன்மம், மாயை.*

    277) பிரளயாகலரைப் பிணித்துள்ள மலங்கள்.....
    *ஆணவம், கன்மம்.*

    278) விஞ்ஞானகலரைப் பிணித்துள்ள மலங்கள்.....
    *ஆணவம்.*

    279) சகலர் என்பது....
    *கலாதி தத்துவங்களோடு கூடிய ஆன்மா.*

    280) பிரளயாகலர் என்பது.....
    *பிரளய கால முடிவில், கலை நீங்கப் பெறும் ஆன்மா.*

    மீண்டும் அடுத்த பதிவில் .....

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  87. Mon. 20, Feb. 2023 at 7.09 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....!

    * 281) விஞ்ஞானகலர் என்பது....
    *விசேட ஞானத்தால் கலை நீங்கப் பெறும் ஆன்மா.*

    * 282) சகலர்க்கு இறைவன் அருள் புரிவது....
    *குருநாதர் வழியாக.*

    283) பிரளயாகலருக்கு இறைவன் அருள் புரிவது....
    *முன்னுனின்று.*

    284) விஞ்ஞானகலர்க்கு இறைவன் அருள் புரிவது.....
    *உள்நின்று.*

    285) ஆன்மாவின் மூவகை அவத்தைகள்......
    *கேவலம், சகலம், சுத்தம்.*

    286) ஆன்மாலின் கேவலத்தின் வேறு பெயர்...
    *அநாதி கேவலம்.*

    287) காரண கேவலத்தின் வேறு பெயர்....*அநாதி கேவலம்.*

    288) உயிர்கள் பிறப்புக்கு உட்படாமல் ஆணவத்தோடு மட்டும் கூடிய நிலை.....
    *அநாதி கேவலம்.*்

    289) உயிர்கள் தனுவாதிகளைப் பெற்று போகம் நுகரும் நிலை....
    *சகல நிலை.*

    290) உயிர்கள் மலப்பிணிப்பு நீங்கிப் பேரின்பம் நுகரும் நிலை....
    *சுத்த நிலை.*

    மீண்டும் அடுத்தப் பதிவில்...!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  88. This comment has been removed by the author.

    ReplyDelete
  89. Mon. 20, Fb. 2023 at 7.44 am.

    உயிரியல் துளிகள் − 40.

    * ஜலதோஷத்தின் மருத்துவப் பெயர்......
    *கொரைஸா.*

    * தூக்க மாத்திரையில் அடங்கியுள்ள அமிலம்.....
    *டாபிட்யூரிக் அமிலம்.*

    * கருத்தடை மாத்திரையைக் கண்டு பிடித்தவர்......
    *டாக்டர் சுரிட்டா ஜேக்கப்.*

    * தங்க இழை எனப்படுவது....
    *சணல்.*

    * எலும்புச் சாம்பலில் இருந்து பிரித்தெடுக்கப்படுவது.....
    *பாஸ்பரஸ்.*

    * இந்தியாவில் முதன் முதலில் இருதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்....
    *டாக்டர் கே.எம் செரியன்.*

    * நோயாளிக்கு மனித இரத்தம் ஏற்றும் முறை அறிமுகமான மருத்துவமனை....
    *(இலண்டன்) கைஸ் மருத்துமனை.*

    * ஜீன்களின் சேர்க்கையால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற மருந்து....
    *இன்சுலின்.*

    * நாக்கை அசைக்க முடியாத விலங்கு.... *முதலை.*

    ;* நுரையீரலைத் தாக்கும் நோய்.....
    *நிமோனியா.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  90. Mon. 20, Feb. 2023 at 7.57 pm.

    வேதியியல் துளிகள் − 40

    * ஊற்றுப் பேனாவைக் கண்டு பிடித்தவர்....
    *வாட்டர்மேன்.*

    * குளோரோபாஃர்மைக் கண்டு பிடித்தவர்.....
    *காரிவான் டிரய்ஸ்.*

    * இன்சுலின் கண்டுபிடித்தவர்....
    *பாண்டிங் (1932).*

    * ரிவால்வரைக் கண்டுபிடித்தவர்...
    *சாமுவேல் கோல்ட்.*

    * பிராண வாயுவைக் கண்டுபிடித்தவர்....
    *ஜோசப் ப்ரீஸ்ட்லி.*

    * ஹெலிஹாப்டரைக் கண்டு பிடித்தவர்...
    *பிரிக்வுட்.*

    * இரும்பு துருப்பிடிப்பதன் முக்கிய காரணம்.....
    *ஆக்ஸிஜன்.*

    * ~ஹெராயின் என்னும் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு....
    *1890.*

    * மிக அதிக எடையுள்ள உலோகம்....
    *இரிடியம்.*

    * செயற்கை மழை பெய்விக்கப்படுவது..
    *மேகங்களில் சில்வர் அயோடைடு தூவப்படுகிறது.*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  91. Sun. 26, Feb. 2023 at 8.57 pm.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....!

    291) உயிர்களின் காரிய அவத்தைகள்....
    *சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம்,துரியாதீதம்.*

    292) இந்த உயிர்களின் காரிய அவத்தைகள் ஐந்தின் தமிழ்ப் பெயர்....
    *நனவு, கனவு, உறக்கம், பேருரக்கம்,உயிர்ப்படக்கம்.*

    293) இந்த ஐந்து அவத்தைகள் நிகழும் இடம்.....
    *(இ)லாடத்தானம், கண்டம், இதயம், நாபி, மூலாதாரம்.*

    294) லாடத்தானத்தின் வேறு பெயர்கள்....*புருவ மத்தி, கோதண்டம்.*

    295) உயிர்க்குரிய ஐந்து சரீரங்கள்.....
    *காரண சரீரம், கஞ்சுக சரீரம், குண சரீரம், சூக்கும சரீரம், தூல சரீரம்.*

    296) காரண சரீரத்தின் வேறு பெயர்....
    *ஆனந்தமய கோசம்.*

    297) தூல சரீரத்தின் வேறு பெயர்....
    *அன்னமய கோசம்.*

    298) சூக்கும சரீரத்தின் வேறு பெயர்.....
    *பிராணமய கோசம்.*

    299) குண சரீரத்தின் வேறு பெயர்....
    *மனோமய கோசம்.*

    300) கஞ்சுக சரீரத்தின் வேறு பெயர்.....
    *விஞ்ஞானமய கோசம்.*

    மீண்டும் அடுத்த பதிவில்.....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  92. Mon. 27, Feb. 2023 at 6.46 am.

    வேதியியல் துளிகள் − 41.

    * சாக்ரீனைக் கண்டு பிடித்தவர்.....
    *கான்ஸ்டாண்டின் ஃபால்பெர்க். (1879).*

    * வீர உப்புத் திராவகத்தின் அறிவியல் பெயர்....
    * ஹைட்ரோகுளோரிக் அமிலம்.*

    * நம் மூளையில் ஞாபக சக்திக்கு காரணமாக இருப்பது.....
    *பெருமூளையில் உள்ள லிம்பிக் பகுதி.*

    * குளிர் சாதனப் பெட்டிகளில்
    (Refrigerator) பயன்படும் வேதிப் பொருட்கள்.......
    *ஃபிரியான் வாயு, புளோரின் வாயு, குளோரின் வாயு.*

    * வைரத்திற்கு அடுத்த படியாக கனம் உள்ள மிகக் கடினமான கல்.....
    *சபையர்.*

    * ஒரு முட்டையின் வெள்ளைக் கருவின் அளவு.....
    *முட்டையின் அளவில் 58,%.*

    * கடிகார பெண்டுலத்தில் பயன்படும் உலோகக் கலவை....
    *இன்வார்.*

    * பூமியின் மேலோட்டில் அதிகமாகக் காணப்படும் வாயு.....
    *ஆக்ஸிஜன்.*

    * சூரிய ஒளி, பூமியை அடைய எடுத்துக் கொள்ளும் கால அளவு....
    *499 வினாடிகள்.*

    * வியாழன், பூமியை விட.....
    *1300 மடங்கு பெரியது.*

    மீண்டும் சந்திக்கலாம்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  93. Mon. 27, Feb. 2023 at 9.44 pm.

    உயிரியல் துளிகள் − 43.

    * ஜீவ அணுக்களைப் பிரிக்கும் முறையைக் கண்டுபிடித்தவர்.....
    *கொரானா.*

    * பச்சைத் தங்கம் என்பது....
    *யூகலிப்டஸ்.*

    * மூங்கில் எவ்வகையைச் சார்ந்த தாவரம்......
    *புல் வகை.*

    * குங்குமப்பூ கிடைக்கும் செடியின் பெயர்.....
    *குரோக்கஸ் ஸ்ட்டைவாஸ்.*

    * ஆப்பிள் பழத்தில் இருக்கும் கரிம அமிலம்.....
    *மாலிக் அமிலம்.*

    * 3− நிமிடங்கள் மட்டும் மலர்ந்திருக்கும் மலர்.....
    *பார்லி.*

    * நம் உடலில் உள்ள என்சைம்கள்......
    *சுமார் 1000 என்சைம்கள்.*

    * பூமிக்கு உள்ளேயே வளரும் மரம்......
    *பாரினோரியம் காபெனீஸ்.*

    * முதன் முதலில் கண்டறியப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்து.....
    *பென்சிலின்.*

    * இரத்தச் செல்களுக்குத் தேவையான அமிலம்....
    *ஃபோலிக் அமிலம்.*

    மீண்டும் அடுத்த பதிவில்......!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  94. Tue. 28, Feb, 2023 at 3. 26 pm.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி...!

    301) உயிர்கள் சுவர்க்கத்துக்குப் போகும் போது கொள்ளும் சரீரம்......
    *பூதசார சரீரம்.*

    302) உயிர்கள் நரகத்துக்குப் போகும் போது கொள்ளும் சரீரம்.....
    *யாதனா சரீரம்.*

    303) உயிர்கள் பெறும் தூல சரீரம், ஒன்றற்கு ஒன்று வேறுபடுவதன் காரணம்.....
    *உயிர்கள் செய்த வினைகள் வேறுபடுவதால்.*

    304) முத்தி நிலையில் ஆன்மா சிவத்துக்குச் சமமாகுமா ?
    *சமம் ஆகாது; அடிமையே ஆகும்.*

    305) சிவத்தோடு ஆன்மா கூடும் போது, பேரின்ப அனுபவம் சிவத்துக்கா ? ஆன்மாவுக்கா அல்லது இருவருக்குமா...?
    *ஆன்மாவுக்கு மட்டுமே.*

    306) சிவமும், ஆன்மாவும் கூடிப் பிரித்தறிய வாராத இன்பக் கூட்டுறவு நிலைக்குக் காட்டப்படும் உவமையான புணர் மொழி.....
    *தாடலை.*

    307) சூக்கும சரீரத்தின் வேறு பெயர்.....
    *புரியட்ட காயம்.*

    308) மூவகை மலங்கள்.....
    *ஆணவம், கன்மம், மாயை.*

    309) மலங்களை ஐந்தாகக் கணக்கிட்டவர்......
    *உமாபதிசிவம்.*

    310) ஐவகை மலங்கள் .....
    *ஆணவம், திரோதாயி, கன்மம், மாயை, மாயேயம்.*

    மீண்டும் சந்திக்கலாம்.....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  95. Thu. 02, Mar. 2023 at 7.10 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....!

    311) ஆன்மாவுக்கு அறியாமையைச் செய்யும் மலம்.....
    *ஆணவம்.*

    312) ஆணவ மலம் என்பது பொருளால்...*ஒன்று.*

    313) ஆணவ மலத்ததின் இருவகைச் சத்திகள்.....
    *ஆவாரக சத்தி , அதோநியாமிகா சத்தி.*

    314) "கேவல நிலையில்" ஆன்ம அறிவை முழுமையாக மறைக்கும் ஆணவ சத்தி....
    *ஆவாரக சத்தி.*

    315) சகல நிலையில் ஆன்ம அறிவைக் கீழ் நோக்கிச் செலுத்தி, விபரீத அறிவை உண்டு பண்ணும் ஆணவ சத்தி.....
    *அதோநியாமிகா சத்தி.*

    316) ஆணவத்தின் சொருப இலக்கணம் அதாவது சிறப்பு இயல்பு என்பது......
    *ஆன்ம அறிவை முழுமையாக மறைப்பது.*

    317) ஆணவத்தின் தடத்த இலக்கணம்...அதாவது பொது இயல்பு என்பது....
    *ஆன்ம அறிவை, விபரீத விஷயங்களில் செலுத்துதல்.*

    318) ஆணவம் ஆன்மாவின் குணமா ? அல்லது குற்றமா...?
    *குணமன்று; குற்றமே.*

    319) பிற பொருளைக் காட்டாமல் தன்னை மட்டும் காட்டுவது.....
    *இருள்.*

    320) தன்னையும், பிற பொருளையும் காட்டாதது.....
    *ஆணவம்.*

    மீண்டும் சந்திக்கலாம்....!

    Jansikannan60@gmal.com.

    ReplyDelete
  96. Thu. 02, Mar.2023 at 9. 15 am.

    வேதியியல் துளிகள் − 42

    * 1772−ஆம் ஆண்டு, ஆக்ஸிஜனைப் பிரித்தெடுத்தவர்....
    *ஷீலே.*

    * கலீனா என்பது.....
    *காரியத் தாது.*

    * தனிம வரிசை அட்டவணையை முதலில் வெளியிட்டவர்.....
    *மெண்டலீஃப்.*

    * லித்தோஸ்பியரில் ஏராளமாகக் கிடைக்கும் உலோகம்.....
    *அலுமினியம்.*

    * 1985−ஆம் ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்....
    *மைக்கேல் ரெளன்(அமெரிக்கா), ஜோசப் ஹோல்ட்ஸ்டீப் (அமெரிக்கா.)*

    * அனைத்துத் தனிமங்களின் அணுக்களும், ஹைட்ரஜன் அணுக்களால் ஆனவை... என்று கூறிய அறிஞர்.....
    *பிரவுட்.*

    * குளோரினை நீரில் கரைப்பதன் காரணம்......
    *நீரிலுள்ள கிருமிகளை அழிக்க.*

    * மனித உடலை அழிக்கும் வேதியியல் மூலக்கூறு....
    *டாக்ஸின்(நச்சு).*

    * கார்பன் மற்றும் ஹைட்ரஜனுக் கிடையே உருவாகும் இரட்டைச் சேர்மங்கள்.....
    *ஹைட்ரோகார்பன்கள்.*

    * சந்திரனில் கால் பதித்த முதல்
    மனிதர்...
    *நீல் ஆம்ஸ்ட்ராங்.*

    மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாமா.!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  97. Thu. 02, Mar. 2023 at 8.42 pm.

    உயிரியல் துளிகள் − 44.

    * நீரில் கரையும் வைட்டமின்கள்.....
    *வைட்டமின்−பி , சி.*

    * மனித உடற்கூறு பற்றிய அறிவியல்....
    *அனாடமி.*

    * மனித உடலில் ஏராளமாக இருக்கும் திசுக்கள்....
    *மஸ்குலார்.*

    * பற்றாக்குறை நோயான ஸ்கர்வி யிலிருந்து நீங்க உதவுவது....
    *வைட்டமின் − சி.*

    * மையோஃபியாவுடன் தொடர்புடைய உறுப்பு.....
    *கண்கள்.*

    * சைட்டோபிளாசம் 80% உருவாவதற்குக் காரணம்......
    *நீர்.*

    * ஆமா...ஒரு ரொட்டித் துண்டை வாயில் இட்டால் அது இனிக்கிறதே ஏன ?
    *உமிழ்நீர், ஸ்டார்ச்சை மால்டோஸாவாக மாற்றுவதால்.*

    * தயமின் என்சைமைத் தூண்டுவது....
    *உமிழ்நீர். சுரப்பி.*

    * லூக்கேமியா என்னும் நோய் உடலில் பாதிப்பது....
    *இரத்தத்தை.*

    *ரிக்கெட்ஸ் நோயினால் பாதிக்கப் படுவது.....
    *எலும்பு.*

    மீண்டும் அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  98. Fri. 03, Mar. 2023 at 5.38 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி.....!

    321) கன்மமாவது.....
    *உயிர்கள் செய்த நல்வினை,தீவினைகள்.*

    322) நல்வினையின் வேறு பெயர்.....
    *புண்ணியம்.*

    323) தீவினையின் வேறுபெயர்....
    *பாவம்.*

    324) புண்ணியத்தால் விளையும் பயன்...
    *இன்பம்.*

    325) பாவத்தால் விளையும் பயன்.....
    *துன்பம்.*

    326) கன்மத்தின் இரு வகை......
    *காரண கன்மம், காரிய கன்மம்.*

    327) காரண கன்மமாவது.....
    *கேவல நிலையில் முதன் முதலாக விளைந்த மூலகன்மம்.*

    328) காரண கன்மத்தின் வேறு பெயர்.....
    *மூலகன்மம்.*

    329) காரிய கன்மமாவது.....
    காரண கன்மத்தால் விளைந்த கன்மம்.

    330) காரிய கன்மத்தின் இருவகைகள்...
    நல்வினை, தீவினை.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  99. Fri. 03 Mar. 2023 at 5.19 pm


    தாம்பூலம் தரிப்பவர்கள் கவனத்திற்கு...!

    • காலையில் பாக்கை அதிகமாய் சேர்க்கில் அன்றாடம் சரியாய் மலங்கழியும்.

    • மத்தியானத்தில் சுண்ணத்தை அதிகமாய் சேர்க்கில்..... நல்ல பசியை உண்டாக்கும்.

    • மாலையில் வெற்றிலையை அதிகப் படுத்தி அருந்தினால்.... வாய் மணம் வீசும்;
    திரிதோஷமும் அணுகவொட்டாது சமப் படுத்தும்.


    ஆக.... தாம்பூல சார விதி......

    பாக்கு, வெற்றிலை, சுண்ணம் மூன்றும் ஒன்றுபட மெல்லும் போது..... அதில் நின்று ஊறிய .....

    முதல் நீர்..... நஞ்சு.
    2−வது நீர்.... மிக பயித்தியம்.
    3−வது நீர்.....அமிர்தம்.
    4−வது நீர்..... அதிக இனிப்பு.
    5−6 வது நீர்....பித்த தோஷம், அக்கினி
    மந்தம், பாண்டு ரோகம் .... இவைகளை உண்டாக்கும்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  100. Sat. 04, Mar. 2023 at. 6.53 am.

    சைவ சித்தாந்தத் தொடர்ச்சி ...!

    331) நல்வினை என்பது....
    *ஒரு உயிர் மற்ற உயிர்க்கு மனம், வாக்கு, காயங்களால் செய்த நன்மை.*

    332) தீவினை என்பது... ..
    *ஒரு உயிர் மற்ற உயிர்க்கு மனம், வாக்கு, காயங்களால் செய்த தீமை.*

    333) மூவகை வினைகள்.......
    *ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம்.*

    334) ஆகாமிய வினையின் தமிழ்ப் பெயர்......
    *வருவினை.*

    335) சஞ்சித வினையின் தமிழ்ப் பெயர்...*தொல்வினை.*

    336) பிராரத்த வினையின் தமிழ்ப் பெயர்.....
    *ஊழ்வினை.*

    337) ஆகாமிய வினை என்பது....
    *முன்வினைப் பயனை நுகரும் போது விளைந்து பின்பு வரவிருக்கும் வினை.*

    338) சஞ்சித வினை என்பது.....
    *நுகரப்படாத ஆகாமிய வினைகளின் குவியல்.*

    339) பிராரத்த வினை என்பது.....
    *சஞ்சித வினைக் குவியலில் இருந்து எடுத்து ஒரு பகுதியாய் நிகழ் பிறவியில் ஊட்டப்படும் வினை.

    340) சரி.... உயிருக்கு வினைப்பயனை ஊட்டுவது வினையா அல்லது இறைவனா ...?
    *இறைவனே.*

    மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  101. Sat. 04, Mar. 2023 at 8.50 pm.

    வேதியியல் துளிகள் − 43.

    * மருத்துவ இயலின் தந்தை....
    *ஹிப்போகிரேட்ஸ்.*

    * சில்லிசால்ட் பெட்ரி என்பது.....
    *சோடியம் நைட்ரேட்.*

    * கரிம வேதியியலின் தந்தை....
    *கிறிஸ்டியன் ஒர்ஸ்டட்.*

    * வேதிப் பொருட்களின் அரசன்.....
    *கந்தக அமிலம்.*

    * கனிமச் சேர்மத்திலிருந்து தயாரிக்கப்பட்ட முதல் கரிமச் சேர்மம்....
    *யூரியா.*

    * யூரியாவை முதலில் சோதனைச் சாலையில் தயாரித்தவர்.....
    *ஹேபர்.*

    * வினிகரில் உள்ள அமிலம்.....
    *அசிடிக் அமிலம்.*

    * சேர்ம மின்கலங்களில் பயன்படும் உலோகம்.....
    *காரீயம்.*

    * கோபர் வாயுவின் முக்கியமான கூறு...
    *மீத்தேன்.*

    * பாலை நாம் ஏன் பாஸ்டுரைசேசன் செய்கிறோம்....
    *அதிலுள்ள நுண் கிருமிகளை அழிப்பதற்கு.*

    மீண்டும் அடுத்த பதிவில்.....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  102. Sun. 05, Mar. 2023 at 6.38 pm.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி...!

    341) வினைப்பயன் ஊட்டப்படும் மூன்று வகைகள்.....
    *ஆதி தைவிகம், ஆதி பெளதிகம், ஆதி ஆன்மீகம்.*

    342) ஆதி தைவிகம் என்பது....
    *தெய்வத்தால் வரும் வினைப்பயன்.*

    343) ஆதி பெளதிகம் என்பது.....
    *பஞ்ச பூதங்களால் வரும் வினைப் பயன்.*

    344) ஆதி ஆன்மீகம் என்பது.....
    *உயிர்களால் வரும் வினைப்பயன்.*

    345) வினைப்பயன், வினைப் பயன் என்கிறோமே, ஒருவர் செய்த வினைப் பயனை மற்றவர் நுகர்வது உண்டா.....?
    *இல்லை என்பதே; அவரவர் வினைப்பயனை அவரவரே நுகர வேண்டும்.*

    346) வினைப்பயன் என்பது, வினை செய்யப்பட்ட முறைப்படியே வருமா..? அல்லது முன் பின்னாக மாறி வருமா ...?
    *முறையாக வருதலும் உண்டு; முன் பின்னாக மாறி வருதலும் உண்டு.

    347) வினைகள் விளைவதற்கு காரணமான மூவகைச் செய்கைகள்...!
    *நினைப்பு, பேச்சு, செய்கை. அதாவது மனம், வாக்கு, காயம்.*

    348) நல்வினையால் தீவினையும், தீவினையால் நல்வினையும் அழியுமா..?
    *அழியமாட்டா.*

    349) சரி... தீவினைப் பயனை பிராயச் சித்தத்தால் ஒழிக்க முடியுமா....
    *முற்றும் ஒழிக்க முடியாது. வினைப் பயனின் வலிமையைச் சிறிது தணிக்கலாம்.*

    350) கன்மத்தின் சொரூப நிலை....
    *விருப்பு, வெறுப்பு.*

    மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  103. Mon. 06, Mar. 2023 at 8. 20 am.

    வேதியியல் துளிகள் −44

    * பாதரசத்தில் உலோகம் கரைவது.....
    *அமால்கம்.*

    * உலோகப் போலிக்கு ஒர் எடுத்துக்காட்டு....
    *பிஸ்மத்.*

    * யூரியா தயாரிக்கப் பயன்படும் கரிமச் சேர்மம்......
    *அம்மோனியம் சயனேட்.*

    * சலவைச் சோடா என்பது.....
    *சோடியம் கார்பனேட்.*

    * எலுமிச்சை சாற்றில் உள்ள வேதியியல் பொருள்.....
    *கால்சியம் ஹைட்ராக்ஸைடு.*

    * சோடியம் உப்பும், கொழுப்பு அமிலங்களும் கலந்தது.....
    *கோப்பு.*

    * பொருள்கள் வேதியியல் வினைக்கு வேகமாக உட்படுவதற்கு பெயர்.....
    *கேடலிஸ்ட்.*

    * வெள்ளை உலோகம் என்பது.....
    *காப்பர் சல்பைடு.*

    * குளிர் பானங்களில் புளிப்புச் சுவையுட்டக் கூடிய அமிலம்....
    *ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலம்.*

    * உற்பத்தி வாயு என்பது....
    *கார்பன் மோனாக்ஸைடு மற்றும் நைட்ரஜன் சேர்ந்த கலவை.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  104. Mon. 06, Mar. 2023 at 8.42. am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி..!

    351) ஆன்மாவுக்கு வினைப்பயன் ஊட்டப்படுவது...
    *ஆணவப் பற்று நீங்கி ஆன்மா திருத்தம் பெற.*

    352) கன்மத்தின் தடத்த நிலை.....
    *புண்ணிய பாவம்.*

    353) கன்மம் எந்தத் தத்துவத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டிருக்கும்.....
    *புத்தித் தத்துவத்தை.*

    354) கன்மம் ஒடுக்க காலத்தில் ஒடுங்கி இருப்பது....
    *மாயையில்.*

    355) சைவ சித்தாந்தத்தின் வினைக் கொள்கை.....
    *வினையைச் செய்தவன், செய்யப்பட்ட வினை, வினையின் பயன்,பயனை ஊட்டுபவன் என்ற நான்கும் உண்டு.

    356) சரி... உலகத்துக்கு முதற் காரணம் மாயையா அல்லது இறைவனா ...?
    *மாயையே.*

    357) மாயைகளின் இருவகை.....
    *சுத்த மாயை , அசுத்த மாயை.*

    358) மாயை பயன்படும் வகையில் ....
    *சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என மூவகை.

    359) சுத்த மாயை என்பது....
    *மல கன்மங்களோடு கலவாத மாயை.*

    360) சுத்த மாயையின் இயல்பு....
    *மயக்கமின்றி அறிவிப்பது.*

    மீண்டும் சந்திக்கலாம்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  105. This comment has been removed by the author.

    ReplyDelete
  106. Tue. 07, Mar. 2023 at 6.10 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....!

    361) இறைவற் ஐந்தொழில் நடத்த இடமாக இருப்பது.....
    *சுத்த மாயை.*

    362) சுத்த மாயையின் வேறு பெயர்கள்...*ஊர்த்துவ மாயை, மாமாயை, குடிலை, விந்து.*

    363) சுத்த மாயையில் உள்ள இரு பிரபஞ்சங்கள்....
    *ஒலி உலகம், பொருள் உலகம்.*

    364) ஒலி உலகத்தின் வேறு பெயர்....
    சொல் உலகம். அதாவது... சப்தப் பிரபஞ் சம்.*

    365) பொருள் உலகத்தின் வேறு பெயர்...*அர்த்தப் பிரபஞ்சம்.*

    366) அத்துவாக்கள் என்பது....
    *வீடுபேறு அடைவதற்கான வழிகள்.*

    367) ஆறு வகை அத்துவாக்கள்....
    மந்திரம், பதம், வன்னம், கலை, தத்துவம், புவனம்.

    368) சப்தப் பிரபஞ்சத்துள்(சொல் உலகம்) அடங்கும் அத்துவாக்கள்....
    *மந்திரம், பதம், வன்னம்.*

    369) அர்த்தப் பிரபஞ்சத்துள்(பொருள் உலகம்) அடங்கும் அத்துவாக்கள்.....
    *கலை, தத்துவம், புவனம்.*

    370) அத்துவாவில் ஒன்றான கலையின் ஐந்து வகை.....
    *நிவிர்த்தி கலை, பிரதிட்டை கலை, வித்தியா கலை, சாந்தி கலை, சாந்தி அதீத கலை.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  107. Wed. 08, Mar, 2023 at 4.42 pm.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....!

    371) பஞ்சக் கலைக்கும், கலைத் தத்துவத்துக்கும் உள்ள வேறுபாடு....
    *பஞ்சக் கலைகள் என்பன... அத்துவாக்களில் ஒரு வகை. கலா தத்துவம் என்பது..... வித்யா தத்துவம் 7−ல் ஒரு தத்துவம்.*

    372) சரி... பஞ்சக் கலைகள் என்பது.....
    *அத்துவாக்களில் ஒரு வகை.

    373) கலை தத்துவம் (கலா) என்பது....
    *வித்யா தத்துவம் ஏழில் ஒரு வகை.*

    374) சுத்த மாயையில் தோன்றும் நால் வகையான வாக்குகள்....
    *சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி.*

    375) சுத்த மாயையின் முதல் விருத்தியான வாக்கு.....
    *சூக்குமை வாக்கு.*

    376) சூக்குமை வாக்கின் விருத்தி.....
    *பைசந்தி வாக்கு.*

    377) பைசந்தி வாக்கின் விருத்தி....
    *மத்திமை வாக்கு.*

    378) வைகரி வாக்கு என்பது....
    *தன் செவிக்கும், பிறர் செவிக்கும் கேட்கப்படும் வாக்கு.*

    379) சரி.... வாக்குகளின் வளர்ச்சி.. பரிணாமமா அல்லது விருத்தியா ?
    *பரிணாமம் அல்ல... விருத்தி.*

    380) சுத்த தத்துவங்கள் .....
    *நாதம், விந்து, சாதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தை முதலிய ஐந்து.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  108. Thu. 09, Mar., 2023 at 7.45 am

    உயிரியல் துளிகள் − 45

    * பச்சையம் உள்ள தாவரங்கள் எந்த வாயுவைப் பயன்படுத்தி உணவைத் தயாரிக்கும்.....
    *கார்பன்டை ஆக்ஸைடு.*

    * பூக்கும் தாவரங்களின் ஆண் உறுப்பிற்கு....
    *ஸ்டாமென்.*

    * இலைகளற்ற தாவர வகை....
    *காளான்.*

    * பசுமையால இலையை சிவப்பு ஒளியில் பார்த்தால் தெரியும் நிறம்.....
    *கருமை.*

    * காம்பில் மலர்கள் வரிசையாக அமைந்துள்ளவற்றிற்கு பெயர்....
    *இன்ஃபுளோரெசன்ஸ்.*

    * பூக்கும் தாவரங்களின் அறிவியல் பெயர்....
    *ஆன்ஜியோஸ்பெர்ம்.*

    * முட்டைகோஸின் தாவரவியல் பெயர்....
    *பிராசிகா ஒலிராசியா.*

    * மிகவும் மென்மையான கனிமம்....
    *மாக்கல்.*

    * நீரிழிவு நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து....
    *இன்சுலின்.*

    * கக்குவான் இருமலுக்குப் போடப்படும் தடுப்பூசி....
    *டி.பி.டி.*

    மீண்டும் அடுத்த பதிவில்.....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  109. Thu. 09, Mar. 2023 at 8.12 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....!

    381) சுத்தத் தத்துவங்களை தோற்றுவித்தவர்.....
    *சிவன்.*

    382) சுத்த தத்துவங்கள் தோன்றுவது...
    *சுத்த மாயை−யில் இருந்து.*

    383) சுத்த தத்துவம் என்பது....
    *சிவ தத்துவங்கள்.*

    384) சிவ தத்துவம் என பெயர் வரக் காரணம்.....
    *சிவனால் தோற்றுவிக்கப்பட்டது என்பதால்.*

    385) அசுத்த மாயை என்பது....
    *மல கன்மங்களோடு கலந்த மாயை.*

    386) அசுத்த மாயையின் வேறு பெயர்கள்.....
    *அதோமாயை, மோகினி.*

    387) அசுத்த மாயையின் இயல்பு.....
    *மயக்கி அறிவிப்பது.*

    388) அசுத்த மாயா தத்துவங்கள்......
    *ஏழு. (7).*

    389) ஏழு அசுத்த மாயா தத்துவங்கள் என்பது....
    *காலம், நியதி, கலை, வித்தை, அராகம்,புருடன், மாயை.

    390) ஆன்ம தத்துவங்கள்......
    *அந்தக் கரணம் −4* .....
    *ஞானேந்திரியம்−5* ......
    *கன்மேந்திரியம்−5* .......
    *தன்மாத்திரை−5* .......
    *பூதம் − 5* .........
    *ஆக − 24.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  110. Thu. 09, Mar. 2023 at 6.23 pm.

    வேதியியல் துளிகள் − 45.

    * அமோனியம் சயனைடு கண்டுபிடித்தவர்.....
    *பிரெடிரிக் வொகுலர்.*

    * கால்சியம் கார்பைடு கண்டு பிடித்தவர்.
    *பிரெடிரிக் வொகுலர்.*

    * உலோக அலுமினியம் கண்டு பிடித்தவர்.....
    *பிரெடிரிக் வொகுலர்.*

    * நடைமுறையில் இருக்கும் ஐசோடோப்புகளை வெளிப்படுத்தியவர்...*ஃப்ரடெரிக்சோடி.*

    * கரும்புச் சர்க்கரையின் வேதியில் பெயர்....
    *சுக்ரோஸ்.*

    * மைனஸ் 269 டிகிரி செல்சியல் வெப்ப நிலையில் திரவமாக மாற்றம் பெறும் வாயு....
    *ஹீலியம் வாயு.*

    * பென்சீன் அமைப்பு வெளிப்படுத்திய
    வர்....
    *ஆகஸ்டு கெகுளி.*

    * இரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப் படுத்தும் கனிமம்....
    *குரோமியம் உப்பு.*

    * மார்பு வலியைப் போக்கும் ஹோமியோபதி மருந்து......
    *அமைல் நைட்ரேட்..*

    * வைட்டமின் கே−யின் வேதிப் பெயர்....
    *நாப்தாகுயினான்.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  111. Fri. 10, Mar. 2023 at 8.32 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி...!

    391) அந்த கரணம் என்பது....
    *மனம், புத்தி, அகங்காரம், சித்தம்.*

    392) மூவகை அகங்கார தத்துவங்கள்....
    *தைசதம், வைகாரிகம், பூதாதி.*

    393) தைசத அகங்காரத்தில் தோன்றும் தத்துவம்...
    *ஞானேந்திரியம் − 5.*
    *மனம் − 1.*

    394) வைகாரிக அகங்காரத்தில் தோன்றும் தத்துவம்....
    *கன்மேந்திரியங்கள்− 5.*

    395) பூதாதி அகங்காரத்தில் தோன்றும் தத்துவம்....
    *தன்மாத்திரை − 5.*
    *பூதங்கள் − 5.*

    396) புறக்கருவிகளான தத்துவங்கள்....
    *மெய், வாய், கண், மூக்கு, செவி.*

    397) புறக் கருவியின் வேறு பெயர்....
    *ஞானேந்திரியங்கள்.*

    398) உட் கருவிகளான தத்துவங்கள்....
    *மனம், புத்தி, அகங்காரம், சித்தம்.*

    399) உட் கருவியின் வேறு பெயர்....
    *அந்தக் கரணம்.*

    400) உள் உட் கருவிகள் என்பது....
    *கலை, வித்தை, அராகம்.*

    மீண்டும் அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  112. Fri. 03, Mar. 2023 at 4.25 pm.

    எதிரியை அழிக்க...

    யந்திரம்...!

    6 / 13 / 2 / 7
    -----------------------------------------------
    6 / 3 / 10 / 9
    ------------------------------------------------
    12 / 7 / 8 / 1
    -----------------------------------------------
    3 / 5 / 8 / 11
    ------------------------------------------------


    யந்திரம்...சனி ஹோரையில், சனிக்கிழமையில்..செப்புத் தகட்டில் எழுதுக. பின்னர், கழுதை மயிரை எந்திரத்தில் சுற்றி. அடுத்த சனியில்... திருக்கள்ளி (அ) கள்ளியின் அடியில் புதைக்க...!..

    மந்திரம் : 108 − உரு. . (ஓம் பிராணம், ஓம் பிராணி, சகல யந்திரப் பிராணங்களும் எழும்பு எழும்பு).
    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  113. Wed. 01, Mar. 2023 at 2.20 pm.


    சாதி இராசிக் கிரகம் :



    சா தி இ ரா சி க் கி ர க ம் .
    --------- ------------------- ------------------

    பிராமணசாதி = மீனம், விருச்சிகம், கடகம், வியாழம், திங்கள்.

    ௯ஷத்திரிய சாதி = சிங்கம், மேஷம், தனுசு, செவ்வாய், ஞாயிறு .

    சூத்திர சாதி = இடபம், கன்னி, மகரம், வெள்ளி.

    புலைய சாதி = சனி, பஞ்சபன், இராகு, கேது .



    கி ர க தி க் கு அ ௯ஷ ர ம் .
    -------------------------- ----------------------


    கிழக்கு = ஞாயிறு
    தென் கிழக்கு = செவ்வாய்
    தெற்கு = வியாழம்
    தென்மேற்கு = புதன்
    மேற்கு = வெள்ளி
    வடமேற்கு = சனி
    வடக்கு = சந்திரன்
    வடகிழக்கு = இராகு , கேது .


    • அவங்க அவங்க வாரங்களில் 7 1/2 நாழிகை உதிச்சிருப்பாங்க.


    • யோனியும், பதாகையும் − 3 3/4 நாழிகை.

    • தெய்வம் − 1 3/4 நாழிகை.



    அ ட் ௯ஷ ர ங் க ள் .
    --------------------------------------



    கிழக்கு = அ , ஆ
    தென் கிழக்கு = இ , ஈ
    தெற்கு = உ , ஊ
    தென்மேற்கு = இ, அ, எ, ஏ
    மேற்கு = அ, இ, ஐ
    வடமேற்கு = உ, அ, ஒ, ஓ
    வடக்கு = அ, உ, ஒள
    ஃஃவடகிழக்கு.

    இவ்வாறு நின்று 2 1/2 நாழிகை பெறும்.



    கி ர க ங் க ளு க் கு அ ௯ஷ் ர ம் .
    ------------------------------------ -----------------------


    செவ்வாய் = க , ங.
    வெள்ளி = ச , ஞ
    புதன் = ட , ண
    வியாழம் = த , ந
    சனி = ப , ம
    சூரியன் = ய , ர
    சந்திரன் = ல , வ
    இராகு = ழ, ள
    கேது = ற , வ

    இவ்வட்சரங்கள்...... கோட்களுக்கென்றும்..இவர்கள் நின்ற திக்குகளுக்கென்றும் என அறிவது..

    இவ்வ௯ஷரங்களால் ... கேட்டவுருக்கள் பெறும். காரியம் கொள்ளப் போவர் மற்றுள்ளவையும் பெறுவார்.

    சு ப ம் .

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  114. Sun. 29, Jan. 2023 at 12.58 pm.

    குழந்தைகள் முதல் பெரியவர் வரை .... "விபூதி பிடிப்பது"....!

    ------------------------------------------
    | ந | ம | சி | வ | ய |
    ------------------------------------------|
    | ய | ந | ம | சி | வ , |
    ------------------------------------------|
    | வ | ய | ந | ம | சி |
    ------------------------------------------|
    | சி | வ | ய | ந | ம |
    ------------------------------------------|
    | ம | சி | வ | ய | ந |
    -------------------------------------------

    இந்தச் சக்கரம் போல்....ஒரு தாம்பாளத்தில் விபூதி போட்டு எழுதி, கற்பூரம் கொழுத்தி வைத்து....

    " ஆக்குறசணி உச்சாடுபாலதேவதா ..
    சர்வ கிரஹங்களும் உன்னைக் கண்டவுடன், பேரைச் சொன்னவுடன், சர்வ பூத பிசாசுகளும் ஓ யம்மா !
    நேபொய்யே நேபொய்யே என்று கொக்கரித்து ஓட...

    ஓம் ஐயுங் கிலியும் சவ்வும் மாலாமணி சவ்வுங் கிலியும் ஐயும் மாலாமணி சவ்வும் மாலாமணி நான் நினைத்த காரியத்திற்கு முன் வந்து நிற்க, ஸ்வாஹா

    என 108− உரு ஜபித்த பிறகு, அந்த விபூதியில் கொஞ்சம் குழந்தை வாயிலும், சிரசிலும் போட்டு, நெற்றியிலிட்டு,
    உச்சியில் இருந்து பாதம் வரை வாயினால் மூன்று முறை ஊதிவிட்டு, மற்ற விபூதியை தாம்பாளத்துடன் தலைமாட்டில் வைத்து தூங்கச் சொல்லவும்.

    மாலையில் 1−பிடி சிகப்பு சாதம் சுற்றி, வீதியில் வைத்தால்.... சகல பயமும் நீங்கும்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  115. Sun. 29, Jan. 2023 at 7.54 am.

    பஞ்சபட்சி :

    பூர்வபட்சம் திதி = 15
    அமரபட்சம் திதி = 15
    திதி ஒன்றிற்கு பகற்சாமம் = 5
    இராச்சாமம் = 5
    சாமம் ஒன்றிற்கு நாழிகை = 6


    இவற்றுள் உதிக்கின்ற பட்சி முறையே....

    முதற்சாமம் ..... உண்டு
    இரண்டாம் சாமம் ..... நடந்து
    மூன்றாம் சாமம்...... அரசனாகி
    நான்காம் சாமம் ..... தூங்கி
    ஐந்தாஞ் சாமம் ...... சாகும்.

    இவற்றினுள் அந்தரபுத்தி பார்க்குமிடத்தில்......

    உண்கிற பட்சிக்கு நாழிகை = 1 1/4.
    நடக்கின்ற பட்சிக்கு நாழிகை = 1 1/2.
    அரச பட்சிக்கு நாழிகை = 2
    உறங்கும் பட்சிக்கு நாழிகை = 3/4.
    இறங்கும் பட்சிக்கு நாழிகை = 1/2

    ஆக நாழிகை ஆறுக்கு.சாமம்.

    ReplyDelete
  116. அடுத்து... நந்தை முதலிய திதி பிரிவு.....

    நந்தை = பிரதமை−சஷ்டி−ஏகாதசி.
    பத்திரை = துவிதியை − சத்தமி − துவாதசி.
    சயை = திரிதிகை −அஷ்டமி − திரயோதசி.
    இருத்தை = சதுர்த்தி − நவமி − சதுர்த்தசி.
    பூரணை = பஞ்சமி − தசமி − உவா.
    ஸ்திரராசிகள் = மேடம் − கர்க்கடகம் − துலாம் − மகரம். ( 4 )
    உபய ராசிகள் = தனுசு − மிதுனம் − கன்னி − மீனம். ( 4)

    ReplyDelete
  117. அடுத்ததாக....

    சந்திரநாட் கூறுபாட்டிற்கு திதிப் புணர்ச்சி.......!

    S T A T E M E N T .


    -------------------------------------------------------------
    சந் 1பக் 2பக் 3பக் 4பக் 5பக்
    கூறு நந்தை பத் சயை இருத் பூரணை
    --------------------------------------------------------------

    1−ம் பிர துவி திரி சதுர் பஞ்சமி
    வட்டம்
    -------------------------------------------------------------

    2−ம் சஷ்டி சப்தமி அஷ் நவமி தசமி
    வட்டம்
    ------------------------------------------------------------

    3−ம் ஏகாதசி துவா திர சதுர் உவா
    வட்டம்

    ReplyDelete
  118. Fri. 10, Mar. 2023 at 3. 18 pm.

    வேதியியல் துளிகள் − 46.

    * நியான் விளக்கைக் கண்டு பிடித்தவர்...*ஜார்ஜஸ் கிளாட் (பிரான்ஸ்).*

    * கார்பன் − டை−ஆக்ஸைடு படலத்தைக் கண்டு பிடித்தவர்....
    *சி.கே.என்.படேல்.*

    *வல்கனைஸ்டு இரப்பரைக் கண்டு பிடித்தவர்....
    *சார்லஸ் குட்இயர்.*

    * சிரிப்பூட்டும் வாயுவைக் கண்டு பிடித்தவர்.....
    *ஜோசப் ப்ரீஸ்ட்லி.*

    * வைட்டமின் டி−யின் வேதிப் பெயர்...
    *கால்சிஃபெரால்.*

    * வைட்டமின் பி −3 யின் வேதிப் பெயர்....
    *பென்தனிட் அமிலம்.*

    * அழுகிய முட்டையின் மணமுடைய வாயு.....
    *ஹைட்ரஜன் சல்ஃபைடு.*

    * முதல் நவீன வேதியியலறிஞர் என்று புகழப்பட்டவர்....
    *இராபர்ட் பாயில்.*

    * முதல் ஹைட்ரஜன் பலூனை வடிவமைத்தவர்....
    *ஜாக்குயிஸ் சார்லஸ்.*

    * நிலக்கரி வாயுவிலிருந்து முதலில் விளக்கை ஏற்றியவர்.....
    *ஜார்ஜ் நிக்சன்.*

    மீண்டும் அடுத்த பதிவில்...;!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  119. Fri. 10, Mar. 2023 at 3.39 pm.

    உயிரியல் துளிகள் − 46.

    * பித்த நீரின் உதவியால் ஜீரணிக்கும் உணவு....
    *கொழுப்பு.*

    * எந்தத் தனிமத்தின் பற்றாக் குறையால் இரத்த சோகை ஏற்படுகிறது...
    *இரும்பு.*

    * மனித உடலில் தட்டையான எலும்புகள் உள்ள இடம்...
    *கபாலம்.*

    * இரத்தச் சிவப்பணுக்கள் குறைவினால் ஏற்படும் நோய்....
    *அனீமியா.*

    * அம்மைத் தடுப்பூசியைக் கண்டு பிடித்தவர்....
    *எட்வர்டு ஜென்னர்.*

    * தானமாகக் கொடுக்கும் மனிதருடைய கண்ணின் எப்பகுதி மற்றவருக்குப் பார்வை அளிக்கிறது.....
    *கார்னியா.*

    * நாக்கை வெளியே நீட்ட முடியாத விலங்கு....
    *முதலை.*

    * சிந்தித்தல், கேட்டல் ஆகிய உடல் செயல்களைக் கட்டுப்படுத்தும் உறுப்பு.....
    *மூளை.*

    * முதுகெலும்பற்ற விலங்குகளின் பெயர்....
    *இன்வெர்டிபிரேட்டா.*

    * சமைப்பதன் மூலமும் அதைப் பத்திரப் படுத்தி வைப்பதன் மூலம் எளிதாக அழியக்கூடியது....
    *வைட்டமின் − சி.*

    மீண்டும் அடுத்த பதிவில்.....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  120. Sat. 11, Mar. 2023 at 7.43 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி...!

    சைவ சித்தாந்தம் மிக முக்கியமான பகுதிகளைப் பார்த்து வருகிறோம்...

    மேலும் தொடர்ந்து.....

    401) கன்மேந்திரியங்கள் என்பது....
    *வாக்கு, பாதம்,,பாணி, பாயு, உபத்தம்.*

    402) கன்மேந்திரியத்தின் வேறு பெயர்....
    *செயற் கருவிகள்.*

    403) வாக்கு, பாதம் என்பது.....
    *வாய், கால், கை, எருவாய், கருவாய்.*

    404) தன் மாத்திரை ஐந்து....
    *சப்த, பரிச, ரூப, ரச, கந்தம்.*

    405) சப்தம், பரிசம் என்பது....
    *ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம்.*

    406) ஐம்பூதங்கள் என்பது....
    *பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம்.*

    407) பிருதிவி என்பவை....
    *மண், நீர், நெருப்பு, காற்று, வானம்.*

    408) ஞானேந்திரியம் என்பது.....
    *அறி கருவிகள்.*

    409) தத்துவங்கள் மொத்தம்.....
    *முப்பத்தாறு.*

    410) தத்துவங்கள் முப்பத்தாறு....
    *சிவ தத்துவம் −5*
    *வித்யா தத்துவம் − 7*
    *ஆன்ம தத்துவம் − 24.*
    *ஆக ... 36.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  121. Sat. 11, Mar. 2023, at 2.16 pm.

    நம்மை நாமே அறிவது எவ்வாறு...?

    நம்மை நாமே அறிவது எவ்வாறு..தொடர்ந்து அளிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

    நாம் இறுதியாக பார்த்தது... தவறான உணவுப் பழக்கங்கள் பற்றி பார்த்தோம் என நினைக்கிறேன்.

    மீண்டும் தங்கள் ஞாபகத்திற்காக....

    தவறான உணவுப் பழக்கங்கள்...!

    * ஒரு முழு சாப்பாடு உண்டு முடித்தவுடன்
    மீண்டும் எதையாவது உண்பது... ஒரு தவறான உணவு முறைப் பழக்கம்.

    * அளவுக்கு அதிகமாக உண்பது.

    * சாப்பிடும்போது இடை இடையே அதிகம் தண்ணீர் அருந்துவது அல்லது நாள்முழுவதும் பருகாமல் இருப்பது...

    * எந்த நேரமும் குளிர்ந்த நீரை அருந்துவது ..முக்கியமாக உணவு சாப்பிடும்போது..அருந்துதல் கூடாது.

    * மலச்சிக்கல் இருக்கும்போது உண்பது.

    * நேரம் தவறி உண்பது. பசியில்லாத போது உண்பது, உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சாப்பிடுவது, ஒவ்வாத உணவுப் பொருள்களைக் கலந்து சாப்பிடுவது..போன்ற உணவு முறைப் பழக்கம் கூடாது.

    * அதிக சீரணசக்தி தேவைப்படும் பொழுது கடினமானப் பொருட்களை அதிகமாக உண்பது, மேலும் லகுவான உணவுப் பொருட்களை குறைவாக உண்பது.... போன்ற முறையற்ற உணவுப் பழக்கத்தால்.. நமது உடம்பில் நாமே நோயை ஏற்படுத்திக் கொள்கிறோம்...என அறிந்தோம்.

    இன்று நாம் பார்க்க இருப்பது.....

    நமது உடலில் நல்ல ஜீரண சக்தியின் அறி குறிகள் பற்றி .....

    * தேவையான அளவு உணவு உண்ட பிறகு சோம்பல் மற்றும் உறக்கம் ஏற்படாது.

    * உண்டு முடித்தவுடன், உண்ட உணவின் வாசனையில் ஏப்பம் வராது.

    * உணவு உண்ட பிறகு, நெடு நேரத்திற்கு வயிறு இருப்பது போன்ற உணர்வு இருக்காது.

    * சரியான நேரத்திற்கு மலம் கழியும். மேலும்.... மலத்தில் இரத்தம், சளி, மற்றும் சீரணிக்காத உணவுப் பொருள் இருக்காது. மலம் துர்நாற்றம் வீசாது.

    * குடல்களில் உணவு சீரணித்துச் செல்லும் போது, அதைப் பற்றிய எந்த அறிகுறியும் தெரியாது.

    * உணவு சீரணித்தவுடன் சரியான நேரத்திற்கு மீண்டும் வயிற்றுப் பசி தோன்றும்.

    * மனதில் மந்தத் தன்மை இருக்காது.

    * இரவு கனவுகள் அற்ற ஆழ்ந்த உறக்கம் தேவையான அளவு இருக்கும்.

    கபம் நேரம் ஏற்கெனவே அளித்து விட்டேன். இருப்பினும் தங்கள் ஞாபகத்திற்காக....

    கபம் நேரமாக இருக்கும் சமயத்தில்... கபத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களைக் கண்டிப்பாகச் சேர்க்கக் கூடாது...இதுபோன்று, மற்ற நேரங்களையும், உணவுப் பழக்கத்தின் போது கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கபநோய் உள்ளவர்கள் குறிப்பிட்ட அந்த நேரத்தில், நோய் அதிகமாவதை உணரலாம்.

    எனவே நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுங்கள்.

    நேரம்......!

    *கபம் நேரம் : 6 am to 10 am. & 6 pm to 10 pm.*

    *பித்த நேரம் : 10 am to 2. pm. & 10 pm to 2 pm.*

    *வாத நேரம் : 2 am to 6 am. & 2 pm to 6 pm.

    இந்நேரத்தைக் கணக்கில் கொண்டு உணவு முறைப் பழக்கத்தை மாற்றி அமைத்துக் கொண்டு செயல்படுங்கள்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    *என்றும் வாழ்க நலமுடன்.*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  122. சிவ சிவ.

    *அடியேன் பிழை பொறுத்தருள்க.*

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி என்ற பதிவில்... நம்பர் 119−க்கு அடுத்து 200 என தவறுதலாக தட்டச்சு செய்துள்ளேன். அடியேன் பிழை பொறுத்தருள்க.

    ஆகவே.. 119க்கு அடுத்து 120 என்கிற முறையில்.. இதுவரை அனுப்பியுள்ள பதிவின் நம்பர் 330− எனத் திருத்தம் செய்து கொள்ளுங்கள்.

    *மீண்டுமாய் அடியேன் பிழை பொருத்தருள்க.*

    திருச்சிற்றம்பலம்.

    ReplyDelete
  123. Sun. 12, Mar. 2023 at 7.30 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி.....!

    331) சிவ தத்துவங்கள்....
    *ஐந்து.*

    332) ஐந்து சிவ தத்துவங்கள்....
    *நாதம், விந்து, சாதாக்கியம், ஈசுவரம், சுத்த வித்தை.*

    333) வித்யா தத்துவங்கள்...
    *ஏழு.*

    334) ஏழு வித்யா தத்துவங்கள்....
    *காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை.*

    335) ஆன்ம தத்துவங்கள்.....
    *இருபத்து நான்கு.*

    336) 24 −ஆன்ம தத்துவங்கள்.....
    *அந்தக் கரணம் − 4.*
    *ஞானேந்திரியம் − 5.*
    *கன்மேந்திரியம் − 5.*
    *தன்மாத்திரை − 5.*
    *பூதம் − 5.*

    337) தத்துவங்கள்.....
    *தொண்ணூற்றாறு.*

    338) 96−தத்துவங்களாவன.....
    *தத்துவம் − 36; தாத்துவிகம் − 60.*

    339) தாத்துவிகம் என்பது....
    *தத்துவங்களின் காரியங்கள்.*

    340) அகப் பூதங்கள் என்பவை...
    *ஓசை முதலிய தன்மாத்திரைகள்.*

    மீண்டும் அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  124. Sun. 12, Mar. 2023 at 4.01 pm

    நாடிப் பயிற்சி −80.

    தொடர்ந்து அளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.

    கடந்த பாடத்தில்... நோயாளியின் வாய் நீரைச் சோதிக்கும் விதம் பற்றி பார்த்தோம்...

    இன்று நாம் பார்க்க இருப்பது.... சுவையைக் கொண்டு சாதல்(இறப்பு) குறி அறிதல்....!

    * கசப்பான பொருள் கைக்காமல், ஏனைய சுவையுள்ள பொருள்கள் கைத்தால்.... 1 − வரத்திலும்,

    * இனிப்போன பொருட்கள் இனிக்காமல், மற்றச் சுவையுள்ள பொருட்கள் இனித்தால் ..1 திங்களிலும்,

    * புளிப்புச் சுவையுள்ள பொருட்கள் புளிக்காமல், மற்றைய சுவையுள்ள பொருட்கள் புளித்தால்.... 15 நாட்களிலும்,

    * காரமாகியப் பொருட்கள் காரமாய் இராமல், ஏனைய பொருட்கள் காரமாயிருந்தால்...அரை (1/2) நாளிலும்,

    * உப்புக் கரிக்கும் பொருட்கள் உப்புக் கரிக்காமல், ஏனைய பொருள்கள் உப்புக் கரித்தால்.... 1 நாளிலும்,

    * துவர்ப்பான பொருட்கள் துவர்க்காமல், ஏனைய பொருள்கள் துவர்த்தால்... 1 நாழிகையிலும்....இறப்பார்கள்.

    குறிப்பு : சுவை இவ்விதம் மாறுபடக் காணும் நோயினன் பெரும்பாலும்
    *சித்தப்பிரமை* யுடனிருப்பன் என்பதே... தாற்பரியம்.

    மேலும்... பாம்பு விடம் தீண்டியவிடத்தும்...
    சுவை மாறுபாடு இருக்கக் கூடும்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  125. Sun 12, Mar. 2023 at 7.56 pm.

    உயிரியல் துளிகள் − 47.

    * பாலுட்டிகள் சுவாசிக்கும் போது, வாயு பரிமாற்றம் நடைபெறுவது....
    *ஆல்வியோலை.*

    * பாலூட்டிகளில் கருவுருதல் நடைபெறுவது...
    *ஃஸ்பொல்லோபியல் குழல்கள்.*

    * பாலூட்டிகளில் முட்டைக்கரு வளர்ச்சி அடைவது....
    *கருப்பையில்.*

    * தேள் நடப்பது....
    *நான்கு இணைக் கால்களால்.*

    * தவளையில் சினைப்படுத்துதல் நடைபெறுவது....
    *வெளிப்புறக் கருவுருதல்.*

    * கைகளைக் கட்டிக் கொண்டு நடக்கும் விலங்கு....
    *உகாரி குரங்கு.*

    * குறைந்த அளவு நுகரும் திறன் கொண்ட விலங்கு....
    *குரங்கு.*

    * தலை துண்டிக்கப்பட்டாலும் ஒரு வார காலம் வரை உயிர் வாழும் பூச்சி...
    *கரப்பான் பூச்சி.*

    * உயிரினங்களின் தோற்றம் என்னும் நூலை எழுதியவர்.....
    *சார்லஸ் டார்வின்.*

    * பூச்சி இனங்களில் அறிவு மிக்கது....
    *எறும்பு.*

    மீண்டும் அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  126. Sun. 12, Mar. 2023 at 8. 16 pm.

    வேதியியல் துளிகள்− 47.

    * மக்னீசியப் பால் என்பது....
    *மக்னீசியம் ஆக்ஸைடை நீரில் கரைப்பதால் கிடைப்பது.*

    * பொட்டாசியத்தின் குறியீடு....
    *K.*

    * பேக்கலைட் உருவாக்கத்தில் பயன்படும் வேதிப் பொருள்கள்...
    *பெனால் மற்றும் பார்மால்டிஹைடு.*

    * அணுநிறை 2 கொண்ட ஹைட்ரஜன் ஐசோடோப்பின் பெயர்....
    *டியூட்டீரியம்.*

    * 2010−ஆம் ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசை வென்றவர்.*இராபர்ட் எட்வர்ட்ஸ்.*

    * 2006−ல் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட பயணி....
    *அனுஷ் அன்சாரி(முதல் பெண் விண் பயணி).*

    * ஹாலிவால் விண்மீன் அடுத்து தென்படும் ஆண்டு...
    *2062−ஆம் ஆண்டு.*

    * ஊடுருவும் திறன் கொண்ட கதிர்கள்....
    *காமா கதிர்கள்.*

    * 2010− ஆம் ஆண்டு, கரிம வேதியியல் கண்டு பிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்...
    *ரிச்சர்ட் ஹெக் (அமெரிக்கா).*
    *ஐயிஷா நெகிஷி, அகிரா சுஸிகி நெகிஸி (ஜப்பான்.)*

    * வாயுக்களால் நிரப்பப்பட்ட கோள்கள்...
    *செவ்வாய், புதன், வெள்ளி, பூமி, நெப்ஃடியூன், யுரேனஸ்.*

    மீண்டும் அடுத்த பதிவில்...

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  127. Mon. 13, Mar. 2023 at 5.32 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....!

    341) அகப்புறப் பூதங்கள்....
    *செவி முதலிய அறிகருவிகள்.*

    342) புறப்புறப் பூதங்கள்....
    *மண் முதலிய ஐம்பூதங்கள்.*

    343) ஏழு வகைப் பிறப்புகள் என்பது....
    *தாவரம், ஊர்வன, நீந்துவன, பறப்பன, விலங்கு, மனிதர், தேவர்.*

    344) நான்கு வகைப் பிறப்பிடங்கள் என்பது....
    *முட்டை, வியர்வை, வித்து, கருப்பை.*

    345) குருநாதர் என்பவர்....
    *ஞானத்தைக் கொடுத்துப் பாசத்தை அழிப்பவர்.*

    346) குருநாதரை எவ்வாறு கருத வேண்டும்....
    *சிவமாக.*

    347) குருநாதரை அதிட்டித்து நின்று ஞானம் வழங்குவது....
    *திருவருள்.*

    348) குருவே சிவம் என அறிய வல்லவர்...*பரிபக்குவம் எய்தியவர்.*

    349) திருவருள் போர்த்திக் கொண்ட போர்வையாகக் கூறப்படுபவர்....
    *குருநாதர்.*

    350) திருவருள் அதிட்டித்த குருநாதர் வடிவத்துக்கு உவமை.....
    *பார்வை விலங்கு.*

    மீண்டும் அடுத்த பதிவில்.....

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  128. Tue. 14, Mar. 2023 at. 4.31 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....!

    351) குருநாதர் ஆன்மாக்களின் பாசங்களைப் போக்குவது....
    *தீட்சையால்.*

    352) தீட்சை என்ற சொல்லின் பொருள்....
    *ஞானத்தைக் கொடுத்துப் பாசத்தைத் தணித்தல்.*

    353) தீட்சையின் வகை....
    *சமயம், விசேடம், நிர்வாணம். மேலும்.. சட்சு, பரிசம், மானசம்.

    354) ஒருவர் சைவ சமயி ஆவதற்குத் தரும் தீட்சை....
    *சமய தீட்சை.*

    355) சிவபூஜை செய்வதற்கு அதிகாரம் அளிக்கும் தீட்சை...
    *விசேட தீட்சை.*

    356) பாசங்களை அறவே நீக்கிச் சிவனடியை அடைவதற்கு அளிக்கும் தீட்சை....
    *நிர்வாண தீட்சை.*

    357) குருநாதர் தனது கண் பார்வை யால் அளிக்கும் தீட்சை...
    *சட்சு தீட்சை.* சட்சு என்றால் கண்.

    358) சட்சு தீட்சைக்குக் காட்டும் உவமை....
    *மீன் தன் முட்டையை நோக்குதல்.*

    359) குருநாதர் தனது கையின் தொடு கையால் அளிக்கும் தீட்சை...
    *பரிச (ஸ்பரிசம்) தீட்சை. பரிசம் என்றால் தொடுதல்.*

    360) பரிச தீட்சைக்குக் காட்டும் உவமை....
    *கோழி தன் முட்டையை அடைகாத்தல்.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  129. Tue. 14, Mar. 2023 at 4.01 am.

    இன்று நாம் பார்க்கவிருப்பது....

    நாம் உண்ணும்..காய், கனி, கீரைகள் முதலிய உணவு வகைகளில்....வாதம், பித்தம், கபம் தன்மைகளை அறிந்து...நம் உடலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்..என்பது பற்றி பார்க்கலாம்...!

    1) வாழைக்காய் − வாதத்தைக் கூட்டும். பித்தத்தைக் குறைக்கும். கபத்தைக் குறைக்கும்.

    2) முருங்கைக்காய் − வாதத்தைச் சமப்படுத்தும். பித்தத்தைச் சமப் படுத்தும். கபத்தைக் குறைக்கும்.

    3) வெண்டைக்காய் − வாதத்தைக் கூட்டும். பித்தத்தைச் சமப்படுத்தும்.
    கபத்தைக் கூட்டும்.

    4) மாங்காய் − வாதத்தைக் கூட்டும். பித்தத்தைக் கூட்டும். கபத்தைக் குறைக்கும்.

    5) பீர்க்கங்காய் − வாதத்தைக் கூட்டும். பித்தத்தைக் கூட்டும். கபத்தைக் கூட்டும்.

    6) வெண்பூசணி − வாதத்தைக் கூட்டும். பித்தத்தைக் குறைக்கும்.
    கபத்தைக் கூட்டும்.

    7) எலுமிச்சங்காய் − வாதம், பித்தம், கபத்தைச் சமப்படுத்தும்.

    8) சுரைக்காய் − வாதத்தைக் கூட்டும். பித்தத்தைக் குறைக்கும். கபத்தைக் கூட்டும்.

    9) புடலங்காய் − வாதத்தைக் குறைக்கும். பித்தம், கபத்தைக் கூட்டும்.

    10) பாகற்காய் − வாதம், பித்தம் கூட்டும். கபத்தைக் குறைக்கும்.

    தொடர்ச்சி அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  130. Tue. 14, Mar. 2023 at 11.33 am.

    நம்மை நாமே அறிந்து கொள்வது எவ்வாறு தொடர்ச்சி....!

    11) சுண்டைக்காய் − வாதத்தையும், கபத்தையும் குறைக்கும். பித்தத்தைக் கூட்டும்.

    12) நெல்லிக்காய் − வாதத்தையும், பித்தத்தையும் குறைக்கும். கபத்தைக் கூட்டும்.

    13) மாதுளை − வாதம், பித்தம் குறையும். கபம் அதிகரிக்கும்.

    14) வாழைப்பழம் − வாதம், கபம் அதிகரிக்கும். பித்தம் குறையும்.

    15) திராட்சை − வாதம், கபம் கூடும். பித்தம் குறையும்.

    16) அன்னாசிப்பழம் − வாதம், பித்தம் கூடும். கபம் குறையும்.

    17) மாம்பழம் − வாதம், கபம் கூடும். பித்தம் குறையும்.

    18) நாவற்பழம் − வாதம், பித்தம் குறையும். கபம் கூடும்.

    19) பேரிச்சை − வாதம், பித்தம் குறையும். கபத்தை சமப்படுத்தும்.

    20) பலாப்பழம் − வாதம், பித்தம், கபம் கூடும்.

    21) கொய்யாப்பழம் − வாதம், பித்தம், கபம் கூடும்.

    22) சீதாப்பழம் − வாதம், பித்தம், கபம் கூடும்.

    23) அரைக்கீரை − வாதம், பித்தம் கூடும். கபம் குறையும்.

    24) பொன்னாங்கண்ணி − வாதம், பித்தம் குறையும். கபம் கூடும்.

    25) முருங்கைக்கீரை − வாதம் குறையும். பித்தம் கபம் கூடும்.

    தொடர்ச்சி அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  131. Tue. 14, Mar. 2023 at 2.39 pm.

    நம்மை நாமே அறிவது எவ்வாறு தொடர்ச்சி...!

    26, அகத்திக்கீரை − வாதம், பித்தம் கூடும். கபம் குறையும்.

    27) கருவேப்பிலை − வாதம், பித்தம் குறையும். கபம் கூடும்.

    28) தூதுவளை − வாதம், கபம் குறையும். பித்தம் கூடும்.

    29) பசலைக் கீரை − வாதம், பித்தம் குறையும். கபம் கூடும்.

    30) கீரைத்தண்டு − வாதம், பித்தம், கபம் குறையும்.

    31) வாழைத்தண்டு − வாதம், கபம் கூடும். பித்தம் குறையும்.

    32) வாழைப்பூ − வாதம் கூடும். பித்தம், கபம் குறையும்.

    33) பிரண்டை − வாதம், பித்தம், கபம் குறையும்.

    34) உருளைக் கிழங்கு − வாதம், பித்தம் கூடும். கபம் சமப்படுத்தும்.

    35) கருணைக் கிழங்கு − வாதம், பித்தம் கூடும். கபம் குறையும்.

    36) சர்க்கரைவள்ளி கிழங்கு − வாதம், பித்தம் கூடும். கபம் குறையும்.

    37) பனங்கிழங்கு − வாதம், கபம் கூடூம். பித்தம் குறையும்.

    38) முள்ளங்கி − வாதம், பித்தம், கபம் குறையும்.

    39) வெங்காயம் − வாதம் சமப்படுத்தும். பித்தம் குறையும். கபம் கூடும்.

    40) இஞ்சி − வாதம், கபம் குறையும். பித்தம் கூடும்.

    41) முந்திரிப் பருப்பு − வாதம், கபம் கூடும். பித்தம் குறையும்.

    42) தேன் − வாதம், பித்தம், கபம் சமப்படுத்தும்.

    43) கருப்பட்டி − வாதம், பித்தம், கபம் சமப்படுத்தும்.

    44) வெல்லம் − வாதம் கூடும். பித்தம், கபம் குறையும்.

    45) சீனி − வாதம், பித்தம் குறையும். கபம் கூடும்.

    நம் உடலுக்கு ஏற்ற மாதிரி மேற்கண்ட உணவுகளை மாற்றி அமைத்து உண்டால்... *நோய் நம்மை அணுகாது.*

    *குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு, பயன்படுத்தலாம்.

    இதனை எழுத இயலாதவர்கள் கீழ்கண்ட குறியீட்டின்படி குறிப்பெடுத்துக் கொள்ளலாம்.....!

    குறியீட்டின் விளக்கம் :

    *வா − வாதம்* (வா என்ற குறியீட்டை பயன்படுத்தினால் போதுமானது.)

    *பி − பித்தம்*
    *க − கபம்.*

    அம்புகுறி மேல்நோக்கி இருந்தால் கூடும். ( ^ )
    |
    அம்புகுறி கீழ் நோக்கி இருந்தால் குறையும். ( | )
    V

    *<−>* − இக்குறியீடு....சமப்படுத்தும்.

    இவ்வாறு உணவுப் பெயர்களை எழுதி கூறியீட்டினை மட்டும் குறிப்பிட்டால்...எழுதுவதற்கோ எளிதாக இருக்கும்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  132. Tue. 14, Mar. 2023 at 4.01 am.

    நம்மை நாமே அறிவது எவ்வாறு ...!

    இன்று நாம் பார்க்கவிருப்பது....

    நாம் உண்ணும்..காய், கனி, கீரைகள் முதலிய உணவு வகைகளில்....வாதம், பித்தம், கபம் தன்மைகளை அறிந்து...நம் உடலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்..என்பது பற்றி பார்க்கலாம்...!

    1) வாழைக்காய் − வாதத்தைக் கூட்டும். பித்தத்தைக் குறைக்கும். கபத்தைக் குறைக்கும்.

    2) முருங்கைக்காய் − வாதத்தைச் சமப்படுத்தும். பித்தத்தைச் சமப் படுத்தும். கபத்தைக் குறைக்கும்.

    3) வெண்டைக்காய் − வாதத்தைக் கூட்டும். பித்தத்தைச் சமப்படுத்தும்.
    கபத்தைக் கூட்டும்.

    4) மாங்காய் − வாதத்தைக் கூட்டும். பித்தத்தைக் கூட்டும். கபத்தைக் குறைக்கும்.

    5) பீர்க்கங்காய் − வாதத்தைக் கூட்டும். பித்தத்தைக் கூட்டும். கபத்தைக் கூட்டும்.

    6) வெண்பூசணி − வாதத்தைக் கூட்டும். பித்தத்தைக் குறைக்கும்.
    கபத்தைக் கூட்டும்.

    7) எலுமிச்சங்காய் − வாதம், பித்தம், கபத்தைச் சமப்படுத்தும்.

    8) சுரைக்காய் − வாதத்தைக் கூட்டும். பித்தத்தைக் குறைக்கும். கபத்தைக் கூட்டும்.

    9) புடலங்காய் − வாதத்தைக் குறைக்கும். பித்தம், கபத்தைக் கூட்டும்.

    10) பாகற்காய் − வாதம், பித்தம் கூட்டும். கபத்தைக் குறைக்கும்.

    11) சுண்டைக்காய் − வாதத்தையும், கபத்தையும் குறைக்கும். பித்தத்தைக் கூட்டும்.

    12) நெல்லிக்காய் − வாதத்தையும், பித்தத்தையும் குறைக்கும். கபத்தைக் கூட்டும்.

    13) மாதுளை − வாதம், பித்தம் குறையும். கபம் அதிகரிக்கும்.

    14) வாழைப்பழம் − வாதம், கபம் அதிகரிக்கும். பித்தம் குறையும்.

    15) திராட்சை − வாதம், கபம் கூடும். பித்தம் குறையும்.

    16) அன்னாசிப்பழம் − வாதம், பித்தம் கூடும். கபம் குறையும்.

    17) மாம்பழம் − வாதம், கபம் கூடும். பித்தம் குறையும்.

    18) நாவற்பழம் − வாதம், பித்தம் குறையும். கபம் கூடும்.

    19) பேரிச்சை − வாதம், பித்தம் குறையும். கபத்தை சமப்படுத்தும்.

    20) பலாப்பழம் − வாதம், பித்தம், கபம் கூடும்.

    21) கொய்யாப்பழம் − வாதம், பித்தம், கபம் கூடும்.

    22) சீதாப்பழம் − வாதம், பித்தம், கபம் கூடும்.

    23) அரைக்கீரை − வாதம், பித்தம் கூடும். கபம் குறையும்.

    24) பொன்னாங்கண்ணி − வாதம், பித்தம் குறையும். கபம் கூடும்.

    25) முருங்கைக்கீரை − வாதம் குறையும். பித்தம் கபம் கூடும்.

    26, அகத்திக்கீரை − வாதம், பித்தம் கூடும். கபம் குறையும்.

    27) கருவேப்பிலை − வாதம், பித்தம் குறையும். கபம் கூடும்.

    28) தூதுவளை − வாதம், கபம் குறையும். பித்தம் கூடும்.

    29) பசலைக் கீரை − வாதம், பித்தம் குறையும். கபம் கூடும்.

    30) கீரைத்தண்டு − வாதம், பித்தம், கபம் குறையும்.

    31) வாழைத்தண்டு − வாதம், கபம் கூடும். பித்தம் குறையும்.

    32) வாழைப்பூ − வாதம் கூடும். பித்தம், கபம் குறையும்.

    33) பிரண்டை − வாதம், பித்தம், கபம் குறையும்.

    34) உருளைக் கிழங்கு − வாதம், பித்தம் கூடும். கபம் சமப்படுத்தும்.

    35) கருணைக் கிழங்கு − வாதம், பித்தம் கூடும். கபம் குறையும்.

    36) சர்க்கரைவள்ளி கிழங்கு − வாதம், பித்தம் கூடும். கபம் குறையும்.

    37) பனங்கிழங்கு − வாதம், கபம் கூடூம். பித்தம் குறையும்.

    38) முள்ளங்கி − வாதம், பித்தம், கபம் குறையும்.

    39) வெங்காயம் − வாதம் சமப்படுத்தும். பித்தம் குறையும். கபம் கூடும்.

    40) இஞ்சி − வாதம், கபம் குறையும். பித்தம் கூடும்.

    41) முந்திரிப் பருப்பு − வாதம், கபம் கூடும். பித்தம் குறையும்.

    42) தேன் − வாதம், பித்தம், கபம் சமப்படுத்தும்.

    43) கருப்பட்டி − வாதம், பித்தம், கபம் சமப்படுத்தும்.

    44) வெல்லம் − வாதம் கூடும். பித்தம், கபம் குறையும்.

    45) சீனி − வாதம், பித்தம் குறையும். கபம் கூடும்.

    இவ்வாறு நம் உடலுக்கு ஏற்ற மாதிரி மேற்கண்ட உணவுகளை மாற்றி அமைத்து உண்டால்.. *நோய் நம்மை அணுகாது.*

    கீழ்கண்ட குறியீட்டின்படி குறிப்பெடுத்துக் கொள்ளலாம்.....!

    குறியீட்டின் விளக்கம் :

    *வா − வாதம்* (வா என்ற குறியீட்டை பயன்படுத்தினால் போதுமானது.)

    *பி − பித்தம்*
    *க − கபம்.*

    அம்புகுறி மேல்நோக்கி எழுதினால் கூடும் என்கிற அடையாளம்.

    அம்புகுறி கீழ் நோக்கி எழுதினால் குறையும்.

    *<−>* − இக்குறியீடு சமப்படுத்தும்.

    இவ்வாறு உணவுப் பெயர்களை எழுதி கூறியீட்டினை மட்டும் குறிப்பிட்டால்...எழுதவோ, புரிந்து கொள்ளவோ சுலபமாக இருக்கும்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  133. Wed. 15, Mar. 2023 at 4.01 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி.....

    361) திருக்கயிலாய பரம்பரையின் முதல் குருநாதர்....
    *திருநந்தித் தேவர்.*

    362) குருநாதர் தனது மனத்தால் நினைத்து செய்யும் தீட்சை....
    *மானத தீட்சை.*

    363) மானத தீட்சைக்குக் காட்டும் உவமை.....
    *ஆமை மண்ணில் புதைத்த தன் முட்டையை நினைத்தல்.*

    364) சமய தீட்சை பெற்றவர்களுக்கு உரிய உரிமைகள்.....
    *மந்திரங்களை உச்சரித்தல், சரியைத் தொண்டு செய்தல்.*

    365) விசேட தீட்சை பெற்றவர்களுக்கு உரிய உரிமைகள்.....
    *மந்திரம் உச்சரித்தல், சிவபூஜை செய்தல், யோகம் செய்தல்.*

    366) இறைவனை வழிபடுவதற்கு உரிய இரண்டு இடங்கள்.....
    *தாபரம் , சங்கமம்.*

    367) தாபரம் என்பது....
    *இலிங்கத் திருமேனி.*

    368) சங்கமம் என்பது....
    *அடியார் கூட்டம்.*

    369) இலிங்க வழிபாடு என்பது....
    *ஆன்மார்த்த இலிங்கம், ஆலயத்தில் உள்ள பரார்த்த லிங்கம்*

    370) ஆலயத்தின் கோபுரம்....
    *தூல லிங்கம்.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  134. Sat. 5, Feb. 2022 at 9. 52 am

    திருத்தொண்டர் புராணம் :

    வயலில் தெளித்த விதைகளைப் பொறுக்கி வந்த இளையான்குடி மாற நாயனார்....!

    இளையான்குடி என்னும் ஊரிலே, வேளாளர் மரபில் ... மாறனார் என்னும் பெயர்கொண்ட ஒரு பெரியார் இருந்தார்.

    மாறன் என்பது ... பாண்டியர் மரபுக்குரிய பெயர்.

    அவர் பொன்னம் பலத்து நடிக்கும் கூத்தப் பெருமானின் திருவடிகளையே எக்காலமும் சிந்தித்துக் கொண்டிருப்பவர். அப்பெருமானுக்குத் தொண்டு புரிவதில் சிறந்தவர்.. நிலவுலகத்தில் பக்தி விளங்கும்படிச் செய்தவர். உழுதுண்டு வாழ்ந்து பொருள் ஈட்டியவர். அடியவர்பால் தளராத அன்பு கொண்ட வர்.

    இவர் எலும்பு மாலைகளைத் தரித்த சிவபெருமானுக்குத் தொண்டுபுரியும் அடியார்கள் யார் வந்தாலும் அவர்களை மகிழ்ச்சியோடு வணங்கி எதிர்கொண்டு வரவேற்பார்.

    தம் வீட்டுக்கு அழைத்து வருவார், அவர் திருவடிகளை நீரினால் தூய்மைப்படுத்துவார். ஆசனத்தில் அமரச்செய்து பூசித்து வணங்கி, அவர்கள் இச்சைப்படி "நான்கு விதத்துடன் கூடிய அறுசுவை அமைந்த"....நல்ல உணவுகளைப் படைப்பார்.

    இவ்வாறு எண்ணிறந்த அடியார்களுக்கு அவர் நாடோறும் தொண்டு புரிந்து வந்தார். அதனால் , அவருடைய செல்வம் பெருகி வளர்ந்தது. அவர் குபேரனைப்போல் வாழ்ந்து வந்தார்.

    நான்கு வித உணவு என்பது… உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன என்பன.

    அறுசுவை என்பது … கைப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு .

    ReplyDelete
  135. வறுமையால் வாடுதல் :

    செல்வம் உண்டான காலத்தில் மட்டுமல்லாமல் வறுமை அடைந்த காலத்தும் இளையான்குடி மாறனார் அவ்விதமே அடியார்களுக்குத் தொண்டு புரியும் பண்புடையவர் என்பதைச்....
    சிவபெருமான் உலகுக்குக் காட்டும் பொருட்டே அவருடைய செல்வம் குறைந்துபோகுமாறு திருவுளம் கொண்டார்.

    அன்றுமுதல் இளையான்குடி மாற நாயனாரின் செல்வம் நாளுக்கு நாள் குறைந்து போனது. நாயனார் வறுமையில் உழல ஆரம்பித்தார்; தம் வீட்டிலுள்ள நகைகளை விற்றார்; அதிக கடனுக்குள்ளானார்.

    சிவனடியார் வருகை :

    இளையான்குடி மாற நாயனார் வறுமை அடைந்தும் மனநிலை சிறிதும் மாறாமல் அடியார்களுக்குத் தொண்டு புரிந்து வருவதை எம்பெருமான் கண்டார்.

    ஒரு நல்ல சிவனடியாரின் திருவேடங் கொண்டார். நாயனாரின் வீட்டிற்கு எழுந்தருளினார். சிவபெருமான் எழுந்தருளிய காலம் மழை காலம்; இரவு வேளை.

    நாயனாருக்கு எவரும் அன்று உதவி செய்யாததால், அவர் உண்ண உணவின்றிப் பசியோடிருந்தார். இரவு வெகுநேரம் ஆகிவிட்டபடியால்.. நாயனார் கதவினைத் தாழிட்டுக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்.

    அச்சமயத்தில்... சிவனடியார் வேடங்கொண்ட சிவபெருமானாகிய விருந்தினர் வந்து கதவைத் தட்டினார். உடனே நாயனார் விரைந்து சென்று கதவைத் திறந்து வந்த விருந்தினரை வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்றார். வந்த சிவனடியார் மழையால் நனைந்திருக்கக் கண்டார். முதலில் அவரது உடலில் உள்ள ஈரத்தைப் போக்கித் தக்கதோர் இடத்தில் அமரச் செய்தார்.

    அவருக்கு ஏற்ற உணவைப் படைக்க எண்ணினார்; தன் மனைவியாரிடம் சென்று அவரை நோக்கி இவ்வடியார் மிகவும் பசித்துள்ளார்;
    நாம் என்ன செய்வது ? நமக்கு இங்கு உண்ண உணவில்லை ! ஆயினும் இவ்வடியாருக்கு நாம் அமுதூட்டல் வேண்டும்; அது செய்யும் வழி யாது ? என்று வினவினார்.

    வயலில் தெளித்த விதைகளைப் பொறுக்கி வருதல் :

    மனைவியார் நாயனாரைப் பார்த்து, அமுது செய்வதற்கு வேண்டிய பொருள் வீட்டில் ஒன்றுமில்லை. கடன் வாங்குவதற்கும் ஏற்ற அயலார் இல்லை. வாங்க வேண்டுமென்று நினைத்தாலும்..நெடுநேரமாகி விட்டதால்... போவதற்கு இடமுமில்லை.. என் செய்வது ? என்று கூறித் திகைத்தார்.

    பிறகு, "நம் வயலில் இன்று பகலில் செந்நெல் விதைத்தோம்; அவை இப்போது முளை கண்டிருக்கும். அவற்றை ஒரு கூடையில் வாரிக் கொண்டு வந்தால் நல்ல வகையில் அமுது படைக்கலாம்.. இதனைத் தவிர்த்து வேறு ஒரு வழியும் அறியேன்" என்று கூறினார்.

    நாயனார்... மனைவியாரின் சொற்களைக் கேட்டதும், தாம் முன்பு தேடி வைத்திருந்த செல்வத்தை மீண்டும் பெற்றவர்போலப் பெருமகிழ்ச்சிக் கொண்டார்.

    ReplyDelete
  136. நள்ளிரவில் நாயனார் வயலுக்குச் செல்லல் :

    மழை பொழியும் நள்ளிரவு; எங்கும் நிறைந்த ஒரே இருட்டு; எவரும் துணுக்குறும் தோற்றம்; இத்தகைய வேளையில் நாயனார் அன்பு மேலீட்டி னால் ஒரு பெரிய இறைக்கூடையைத் தலையிலே கவிழ்த்துக் கொண்டார்; முன் நடந்து பழகிய வழக்கமான வழியினைக் குறிப்பாக உணர்ந்து காலினாலே தடவிக் கொண்டு வயலை நோக்கிச் சென்றார்.

    வயலை அடைந்து, அதன்கண் அதிக மழையினால் நீர்மேல் மிதக்கின்ற நெல் முளைகளைக் கைகளாலேத் தடவி எடுத்து, இறைக்கூடை நிறைய இட்டுத் தலைமீது தூக்கிச் சுமந்து கொண்டு வீட்டிற்கு விரைந்து வந்தார்.

    திருவமுது சமைத்தல் :

    நாயனாரின் மனைவியார் வாயிலிலே நின்று நெல்முளை நிறைந்தக் கூடையை மகிழ்வுடன் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றார்; அந்நெல் முளையில் படிந்திருந்த சேறுபோகும்படி, நீரினாலே கழுவி ஊற்றினார். பிறகு நாயனாரிடம் திரும்பி வந்து அவரை அழைத்து, "அடுப்பிலே நெருப்பு மூட்டுவதற்கு விறகு இல்லையே" என்பதைத் தெரிவித்தார்.

    அதனைக் கேட்ட நாயனார், உடனே வீட்டிலே கூரையோடு கட்டப்பட்டிருந்த அலக்குகளை அறுத்துத் தள்ளினார். நாயனாரின் மனைவி அவற்றை முறித்து அடுப்பி்ல் வைத்துத் தீ உண்டாக்கினார்.

    முளைகண்ட நெல் விதைகளின் ஈரம் போகும்படி அடுப்பிலிட்டு வறுத்தார். அரிசியாகக் குற்றி உலையில் போட்டுச் சோறு சமைத்தார்.

    அதன்பிறகு, அவர் "கறி செய்ய என்ன செய்வது ?" என்று நாயனாரை நோக்கி னார். நாயனார்.....வீட்டின் கொல்லைப் புறத்திற்குச் சென்றார்.

    அங்கு முளைத்திருந்த சிறிய கீரைகளைப் பாசத்தின் பழிமுதலை அறவே பறிப்பவர்போலப் பறித்துக் கொண்டு வந்து கொடுத்தார். அம்மையார் அவற்றை வாஙகி ஆய்ந்து நீர் விட்டுக் கழுவிப் பலவகைக் கறிகளாகத் திறம்படச் சமைத்தார். கணவரை அழைத்து அமுதும், கறியும் சமைத்தமையைத் தெரிவித்து,"சிவனடியாரை நாம் இப்பொழுதே திருவமுது செய்விப்போம் என்று கூறினார்.

    சிவபெருமான் காட்சி தந்தருளல் :

    நாயனார்... நித்திரை செய்பவர்போலக் காட்டிக் கொண்டிருந்த விருந்தினர் இருப்பிடத்தை அடைந்தார்.

    "பிறவிக் கடலில் அழுந்திக் கிடக்கும் அடியேன் உய்யும் பொருட்டு எழுந்தருளிய பெரியாரே ! இங்கு விரைவிலே அமுது செய்ய எழுந்தருள்க" என்று வேண்டினார்.

    உடனே....சிவனடியார் வேடந்தாங்கி வந்த சிவபெருமான்.... சோதி வடிவமாக எழுந்து தோன்றினார். அதனைக் கண்ட இளையான்குடி மாற நாயனாரும், அவருடைய மனைவியாரும் திகைத்து நின்றனர்.

    சிவபெருமான், உமாதேவியாரோடு, இடபவவாகனத்தில் எழுந்து காட்சித் தந்தருளினார்.

    இளையான்குடி மாற நாயனாரைப் பார்த்து... அன்பனே ! அடியார்களை வணங்கி வழிபட்டுத் திருவமுது படைத்துச் சிறந்த நீயும், உன் மனைவியும் என்பால் வருக; அங்கு "குபேரன் சங்க நிதி" முதலிய செல்வங்களைக் கையிலேந்தியவாறு உங்களுக்கு ஏவல் புரிவான்; அங்கு நீவி்ர் இணையில்லாத பேரின்பம் அனுபவித்துக் கொண்டு என்றும் வாழ்ந்திருப்பீர்களாக" என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    ReplyDelete
  137. இவ்வாறு அருளிச் செய்த எல்லாம் வல்ல எம்பெருமான் மறைந்தருளினார். இளையான்குடி மாற நாயனாரும் அவர் மனைவியாரும் பேரின்ப வீடடைந்து இன்பம் அனுபவித்திருந்தனர்.

    சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய ஏழாம் திருமுறையில் அடிமை என்ற தலைப்பில்.. நான்காவது வரியாக.. அமைந்துள்ள... பாடல்.

    திருவாரூர் :

    இறைவர் : புற்றிடங்கொண்டார்
    இறைவியார் : அல்லியம்பூங்கோதை
    பண் : கொல்லிக்கெளவாணம்
    "
    "இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்.." என்ற பாடல் வரிகளுக்குரியவர் இந்த இளையான் தன் குடிமாறன் தான்.

    (குறிப்பு : இளையான்குடி.. சோழநாட்டுத் திருநள்ளாற்றுக்கு மேற்கே சுமார் 2−மைலில் உள்ளது என்பர் சிலர்.
    வேறுசிலர்..பாண்டியநாடு இராமநாத புரத்தையடுத்த பரமக்குடிக்குச் சுமார் 7−மைலில் உள்ளது என்பர்.)

    திருச்சிற்றம்பலம்

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  138. Thu. 16, Mar. 2023 at 4.05 am

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி...!

    371) கருவறையில் உள்ள லிங்கம்....
    *சூக்கும லிங்கம்.*

    372) ஆலயத்தை நாம் எவ்வாறு கருத வேண்டும்...
    *சிவன் என்றே.*

    373) சரி... ஆலயங்களில் கொடி ஏற்றுவது.....
    *உலக நன்மைக்காக.*

    374) அப்படியானால்... கொடி ஏற்றுவதன் பயன்....
    *ஆன்மாக்களுக்கு... இம்மையில் சுக போகமும், மறுமையில் பரபோகமும் பெறுவதற்காக.*

    375) கொடிமரம் நமக்கு நினைவூட்டு வது....
    *பாதாளத்தை ஊடுருவிய திருவடியை யும், வானத்தை ஊடுருவிய திருமுடி யையும் உடைய சிவனை.*

    376) கொடிமரத்தைச் சுற்றிச் சுற்றி மேலேறும் கொடிச்சீலை குறிப்பது...
    *சிவனை விட்டுப் பிரியாத திருவருளை.*

    377) கொடிச்சீலையின் மேல் பாகத்தில் வரைந்த இடபம் குறிப்பது..
    *ஆன்மாவை.*

    378) அடியார்களின் திருவேடம்....
    *திருநீறும், கண்மணியும்.*

    379) கண்மணி என்பது....
    *கண்டிகை. அதாவது உருத்திராக்கம்.

    380) அடியாரையும் அவர்களது வேடங்களையும் கருதுவது....
    *சிவனாகவே.*

    மீண்டும் அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  139. Thu. 16, Mar. 2023 at 12.41 pm.

    நம்மை நாமே அறிவது எவ்வாறு….!

    இன்று நாம் பார்க்க இருப்பது கொஞ்சம் வித்யாசமான தலைப்பு...

    ,அதாவது….மனிதன் சைவமா ? அசைவமா ?

    மனிதன் சைவமா அல்லது அசைவமா என்ற கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள… இரண்டு ஜீவராசிகளை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

    இயற்கையில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள் ளன.

    ஒன்று சைவம் சாப்பிடும் ஜீவராசிகள். மற்றொன்று அசைவம் சாப்பிடும் ஜீவராசிகள்.

    சைவ ஜீவராசிகளில்… மாடு, குதிரை, கழுதை, மான், யானை போன்ற ஜீவராசிகளை உதாரண மாக எடுத்துக் கொள்ளலாம்.

    அசைவ ஜீவராசிகளில், சிங்கம், புலி, நாய் போன்ற ஜீவராசிகளை உதாரணமாக எடுத்துக் கொள்ள லாம்.

    முதலாவதாக… இரு ஜீவராசி களின் பற்களை மட்டும் எடுத்துக் கொள்வோம்..

    சைவ ஜீவராசிகளின் பற்கள் மனிதனைப் போன்று தட்டையாக அமைந்துள்ளன. ஆனால். அசைவ ஜீவராசிகளுக்கு பற்கள் கூர்மையாக அமைந்துள்ளன.

    அடுத்ததாக… ஜீவராசிகள் தண்ணீர் அருந்தும் முறையைப் பார்ப்போம்..

    சைவ ஜீவராசிகள் அனைத்தும், மனிதனைப் போன்று தண்ணீரை உறிஞ்சி தான் குடிக் கிறது.

    ஆனால்.. அசைவ ஜீவராசிகள் தண்ணீரை நக்கிக் குடிக்கின் றன.

    அடுத்து, கால் விரல்களைப் பார்ப்போம்…

    சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் மனிதனைப் போன்று சிறியதாக வும், பாதம் தட்டையாகவும் இருக் கும்.

    ஆனால்… அசைவ ஜீவராசி களுக்கு விரல்கள் நீளமாகவும், கூர்மையான நகங்களுடனும் அமைந்திருக்கும்.

    ReplyDelete
  140. அடுத்து…குடல் அமைப்பைப் பார்ப்போம்…!

    சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்று, 15− அடி வரை நீளமானக் குடலாக உள்ளன.

    சைவ சாப்பாட்டில் நச்சுத் தன்மை குறைவாகவும், அதே நேரம் சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால்...உணவு குடலில் சற்று அதிக நேரம் இருப்பதற்கான ஏற்பாடு எனலாம்.

    ஆனால்… அசைவ ஜீவராசிகளுக்கு, அசைவ உணவில் நச்சு அதிகமாக உள்ளதால்.. மிகக் குறைவான நேரத்தில் குடலை விட்டு வெளியேறுவதற்கு ஏற்ப 5−அடிகள் மட்டுமே குடலின் நீளம் உள்ளது.

    அடுத்து…. உடலின் சீதோஷ்ண நிலையைப் பார்ப்போம்….

    சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே உடலில் வெப்பம் அதிகமானால்… தாகத்தை ஏற்படுத்தி அதிக தண்ணீர் பருக வைத்து, வியர்வை என்ற அமைப்பின் மூலமாக உடலைக் குளிர்விக்கின்றது. இல்லையேல் சம நிலையில் வைக்கிறது.

    ஆனால்… அசைவ ஜீவராசிகளுக்கு இந்த அமைப்பு இல்லை. எனவே, நாக்கினைத் தொங்கவிட்டுக் கொண்டு அது தன்னை குளிர்விக்கிறது.

    அடுத்ததாக…. மலத்தின் தன்மையைப் பார்ப்போம்…!

    சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே...அதாவது சைவம் சாப்பிடும் மனிதனைப் போன்றே மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது.மேலும், மலம் துர்நாற்றம் வீசாது.(ஆரோக்கியமான உடலுக்கு).

    ஆனால்…. அசைவ ஜீவராசிகளுக்கு… அதாவது, அசைவம் சாப்பிடும் மனிதன் உட்பட, மலம் கழிப்பதில் சிரமும், அதிக துர்நாற்றமும் இருக்கும்.

    அட.. இது தான் அனைவருக்கும் தெரியுமே… ! என்பதல்ல…

    மேலும் கவனியுங்கள்…. இதுவரை நாம் பார்த்தது… உடல்கூறு அளவில் மட்டுமே பார்த்தோம்.

    ReplyDelete
  141. இனி… மன நிலையைப் பற்றிப் பார்த்தோமானால்….

    முதன் முதலாக… வாழும் முறையைப் பற்றிப் பார்ப்போம்….!

    சைவ ஜீவராசிகள் ஒற்றுமையாக அதாவது, கூட்டம் கூட்டமாக, மந்தை மந்தையாக வாழும். மனிதனும் அவ்வாறுதான் வாழ ஆசைப்படுகிறான்.

    ஆனால்… அசைவ ஜீவராசிகள் தனித்தனியாக வாழும் இயல்புடையது.
    தனது எல்லைக்குள் தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு விலங்கினை அனுமதிக்காது.

    அடுத்து… சைவ ஜீவராசிகளின் இயல்பைப் பார்க்கப் போனால்….

    சைவ ஜீவராசிகளின் இயல்பு…… சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கும்.

    ஆனால்… அசைவ ஜீவராசிகளின் இயல்பு, வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் இருக்கும்.

    அடுத்து… ஆககப்பூர்வமான வேலைகளை எடுத்துக் கொண்டால்….

    சைவ ஜீவராசிகளை… உழுதல், வண்டி இழுத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்த முடியும்.

    ஆனால்…. அசைவ ஜீவராசிகளில், இவ்வாறான ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்த முடியாது.

    இத்தனையும் எதற்காக எடுத்துரைக்க வந்தேனென்றால்….

    மனிதன் தன் ஆறாவது அறிவை சிறிதும் பயன்படுத்தாது… தனக்கு அதிக சக்தியும், பலமும் வேண்டியேதான் அசைவம் சாப்பிடுகிறான்.

    ஆனால்..; ஆச்சரியம் என்னவென்றால்…
    சைவத்தில் தான் அதிக சக்தியும், பலமும் உள்ளது..என்பதே.

    உதாரணமாக… சோயா பீன்ஸில் 40% சுத்தமான புரோட்டீன் உள்ளது.

    இது மாமிசத்தில் உள்ளதைவிட இருமடங்கும்… முட்டையில் உள்ளதைவிட நான்கு மடங்கும் அதிகமாகும்.

    யானையை எடுத்துக் கொண்டால்...அது அசைவம் சாப்பிடுவதில்லையே…? அதற்கு பலம் எங்கிருந்து வந்தது. யானை பலத்துடன் இருக்கிறதுதானே…!

    இதன் மூலம்… நாம் அறிவது என்னவென்
    றால்….

    இயற்கை அமைப்பின்படி, மனிதன் உட்கொள்ள வேண்டியது சைவமே.

    ஏனென்றால் மனிதன் ஆக்கப்பூர்வமாக வும், நிம்மதியாகவும், மனம் இறுக்கம் இல்லாமலும், கோபம் அதன் விளைவாக ஏற்படும் மலச்சிக்கல் இல்லாமலும், நோயின்றி ஆரோக்கியத்துடனும், பொறுமையாக, பலசாலியாக, காரியமாற்று பவர்களாகவும், இயற்கைக்கு புறம்பாக செல்லாமல் வாழவும் ஆசைப்படுவதால்… சைவமே உட்கொள்ள வேண்டும். *சைவமே சிறந்தது.*

    அசைவ உணவு சாப்பிடுபவர்களின் நிலை…

    அவர்கள் மன இறுக்கத்திற்கு ஆட்படுகிறார் கள்.

    மனிதன் அபாயகரமான வேலைகளில், தப்பித்துக் கொள்வதற்காக ஒவ்வொரு வரின் உடலிலும்.. உடலிற்கு அதிக இயக்க சக்தி தர, சக்தி வாய்ந்த ஹார்மோன்கள்… அட்ரீனல் சுரப்பியில் இருந்து இரத்தத்தில் கலக்கிறது.

    இப்போ ...உதாரணமாக…

    ஒரு நாய் நம்மைத் துரத்தினால், சாதாரண வேகத்தை விட, பலமடங்கு வேகத்தில் நாம் ஓட உதவுவது இந்த அட்ரீனல் சுரப்பி நீர் தான்.

    இந்த நீரானது… ஒவ்வொரு விலங்கு வெட்டப்படும்போதும், அதிக அளவில், அதன் இரத்தத்திலும், சதையிலும் கலக்கிறது.

    இவற்றை உட்கொள்ளும் மனிதனின் நிலை...சாதாரண வேலையிலும்கூட எதோ அபாயத்தில் சிக்கிக் கொண்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதுவே மன இறுக்கமாக உருவெடுக்கிறது.

    இப்போ.. தங்களைத் தாங்களே அறிந்து கொள்ளுங்கள்.

    அதாவது நம்மை நாமே அறிந்து கொள்ளுவது எவ்வாறு ?

    மனிதன் சைவமா ? அசைவமா ?
    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  142. Fri. 17, Mar. 2023 at 4.00 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி...!

    381) இறைவன் ஆன்மாக்களுக்கு மானுட சரீரத்தைத் தந்தது....
    *மனம், வாக்கு, காயங்களால் சிவனை வழிபடுவதற்காக.*

    382) மனதால் செய்யும் வழிபாடுகள்...
    *மானத செபம், அகப் பூஜை ,
    தியானம்.*

    383) வாக்கால் செய்யும் வழிபாடுகள்...
    *திருமுறை ஓதல், நாமாவளி கூறல்,வாசக செபம்.

    384) காயத்தால் செய்யும் வழிபாடுகள்...
    *வலம் வருதல், திருப்பணியில் உடலுழைப்பு, மாலை தொடுத்தல்.*

    385) வீடுபேறு அடைவதற்கு உரிய நான்கு நெறிகள்....
    *சரியை, கிரியை, யோகம், ஞானம்.*

    386) சரியை நெறியின் வேறு பெயர்...
    *தாசமார்க்கம், அடிமை நெறி.*

    387) கிரியை நெறியின் வேறு பெயர்..
    *சற்புத்திர மார்க்கம், தந்தை மகன் நெறி.*

    388) யோக நெறியின் வேறு பெயர்...
    *சக மார்க்கம், தோழமை நெறி.*

    389) ஞான நெறியின் வேறு பெயர்...
    *சன்மார்க்கம்.*

    390) சரியை நெறி என்பது....
    *திருக்கோயிலைக் கூட்டுதல்,மெழுகுதல்.*

    மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  143. Fri. 17, Mar. 2023 at 6.12 am.

    திருவானைக்கா...!

    வெள்ளை யானை வழிபட்டதால் ...திருஆனைக்கா எனப் பெயர் பெற்றது.
    சிலந்தியும், யானையும் வழிபட்ட தலம்.

    இறைவன் வெள்ளை நாவல் மரத்தடியில் எழுந்தருளி இருப்பதால்... *ஜம்புகேஸ்வரம்* எனப் பெயர் பெற்றது.
    *ஜம்பு என்றால் நாவல்* என்று பொருள்.

    பஞ்சபூதத் தலங்களில் இஃது அப்புத்தலம். *அப்பு என்பது தண்ணீர்.*
    இறைவன் இருக்கும் கருவறையில் இன்றும் தண்ணீர் ஊற்றுப் பெருக்கெடுத்து வருவதைக் காணலாம்.

    இறைவரின் திருப்பெயர்... *நீர்த்திரள்நாதர்*. இத்திருப்பெயரை இவ்வூர் திருத்தாண்டகத்தில் அப்பர் பெருந்தகையார்.... *செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே* என எடுத்து ஆண்டுள்ளார். *ஜம்புகேசுவரர்* என்று வேறு திருப்பெயரும் உண்டு.

    முற்பிறப்பில் சிலந்தியாய் இருந்து ஆனைக்கா அண்ணலை வழிபட்ட காரணத்தால் ...பிற்காலத்தில் *கோச்செங்கட் சோழனாய்ப் பிறந்து ஆலயத்தைக் கட்டிய பெருமையுடையது.

    கோயில் ஐந்து பிரகாரம் கொண்ட பெரிய கோயில். ஆயிரங்கால் மண்டபம் உண்டு.

    முதல் மண்டபம் மிகச் சிறந்தது. சுவாமி சந்நிதி மேற்கு, அம்மன் சந்நிதி கிழக்கு.. சுவாமி பிரகார மண்டபத்தில் கிழக்கு நோக்கியபடி *நிஷ்டாதேவி உருவம்* இருக்கிறது. (சிலர் இதனை சனீஸ்வரர் எனத் தவறாக கருதிக் கொண்டிருக் கிறார்கள்)

    விபூதி பிரகாரத்திலுள்ள மதில் *திருநீற்றான் மதில் (திருநீற்று மதில்)* மிகப் பெரியது.

    திருநீற்றான் மதில் எனப் பெயர் வரக் காரணம்.... இம்மதிலைக் கட்டி முடித்தவுடன், வேலை செய்தார்க்கு
    சித்தராய் வந்த சிவபெருமான் திருநீற்றினைக் கொடுக்க, அவர்களும் அதனைப் பெற்றுக் கையைத் திறந்து பார்க்குங்கால்... *பொன்னாக* மாறியிருந்த அதிசயத்தைப் பெற்ற இடம்.

    திருக்கயிலையிலிருந்து எழூந்தருளி, இறைவி இங்குத் தவம் செய்து, ஞானோபதேசம் பெற்ற காரணத்தால்... *ஞானஸ்தலம்* எனவும் இது வழங்கப் படும்.

    இத்திருக்கோயிலில் நிகழும் *பஞ்சப் பிரகார விழா (பங்குனி மாத சித்திரை நட்சத்திரத்தில்)* மிகச் சிறப்புடையது.

    இறைவனை அம்மன் பூசித்த பண்டை வழக்குப்படி இன்றும், உச்சிக்கால பூஜையில், பண்டிதர் அம்மன் சந்நிதி யிலிருந்து பெண்வேடம் புனைந்து, ஐயன் சந்நிதி சென்று, பூசையை முடித்தபின், காராம் பசுவிற்குப் பூசை செய்வார். இந்நிகழ்ச்சி அவசியம் காண வேண்டும்.

    உறையூர்ச் சோழர், மணியாரம் தரித்துக் கொண்டு காவிரியில் நீராடினார். அது ஆற்றில் விழுந்து விட்டது. உடனே அவர் சிவபெருமானே கொண்டருளும் என வேண்டினார்.

    அந்த மணியாரம் திருமஞ்சனக் குடத்தில் புக அதனை இறைவருக்கு அபிஷேகிக் கும்போது,அவர் அதனை ஆரமாக ஏற்றுக் கொண்டு சோழனுக்கு அருள் புரிந்ததும் இப்பதியே.

    இச்செய்தியை சுந்தரமூர்த்தி நாயனார்...

    தாரமாகிய பொன்னித் தண்டுறையாடி விழுத்து
    நீரினின்றடி போற்றி நின்மலர்க் கொள்ளென் வாங்கே
    ஆரங்கொண்ட வெம்மானைக் காவுடையா தியைநாளும் எனவும்....

    திருஞானசம்பந்தப் பெருமான்....

    'ஆரம் நீரோ டேந்தினா னானைக்காவு சேர்மினே' எனவும்...

    சேக்கிழார் பெருமான்.... ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத்தில்....

    "வளவர் பெருமான் திருவாரஞ் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக்
    கிளருந் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதமுற
    அளவில் திருமஞ் சனக்குடத்தி லதுபுக்காட்ட வணிந்தருளி
    தளரு மவனுக் கருள்பூரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்... எனவும் போற்றுவாராயினர்.

    இத்தலத்தின் பெருமையை உணர்த்தும் புராணப் பாடல் ஒன்று....

    "மேதகைய பயன்விழையோர் ஞானதலத்
    துறைகுவது மேவாதாயின்
    ஓதுக அத்தலப்பெயரை யாங்கதுவு முற்றாதே
    காதலொடு கேட்டவரு மூவகைய பாதகமுங்
    காதலொடு கேட்டவரு மூவகைய பாதகமுங் கடந்துமேலாம்
    போதமுணர்ந் தெமதடியிற் புக்கிருப்ப ரிஃதுண்மை
    பொலங்கொம்பன்னாய்
    − இது திருவினைக்கா புராணம் − தல விசேடப் படலம்.

    இத்துடன் இதை முடிக்க விரும்பாததால் மேலும் பதிக வரலாறு...

    திருச்சிராப்பள்ளியினின்றும் புறப்பட்டு, திருவானைக்காவை அடைந்த பெருமானார்... அங்கு வெண்நாவல் மேவிய மெய்ப்பொருளை வணங்கி,யானை வழிபட்டதையும், கோச்செங்கட் சோழ நாயனார் செய்த அடிமையையும் அமைத்துப் பாடிய பண்ணூறு செந்தமிழ் மாலை இது.

    திருச்சிற்றம்பலம்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  144. Fri. 17, Mar. 2023 at 7.29 am.

    திருவானைக்கா பாடல் ஒன்று....

    வெணாவலமர்ந்துறைவேதியனைக்
    கண்ணார்கமழ்காழியர்தந்தலைவன்
    பண்ணோடிவைபாடியபத்தும்வல்லார்
    விண்ணோரவரேத்தவிரும்புவரே.

    இதன் பொருள்....!

    வெண்ணாவல் திருத்தலத்தில் கோயில் கொண்டு அமர்ந்துள்ள எம்பெருமானை, ஞானம் கைவரப் பெற்ற ஞானசம்பந்தப் பெருமான் பண்ணோடு பத்துப் பாடல்களைப் பாடியருளி உள்ளார்.

    அப்பத்துப் பாடல்களையும் உணர்ந்து அன்புடன் பாட வல்லவர்கள், தேவர்களாலும் விரும்பிப் புகழப்படுவார்கள்.....என்பதே.

    வேதியன் − வேதத்தைப் படைத்த பரசிவன்

    கண் − மூங்கில்.

    These ten hymns of melody have been sung by our divine saint Thiru-gnana - Sambandar hailing from Seerkaazhi, a holy place surrounded by bamboo forests on the Lord of Thiru -vaa-naikkaa.

    Those who recite these hymns with deep love of our Lord will be praised by the celestials.

    திருச்சிற்றம்பலம்
    THIRU-CH-CHTRAM-BALAM.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  145. Fri. 17, Mar. 2023 at 9.26 pm.

    கலாந்தம் ….!

    கலாந்தம் பற்றிச் சொல்லப்படுபவைகளைப் பற்றி விளக்க வேண்டும் என்றால்…
    நிவிர்த்தி மற்றும் மேதாதி முதலான கலைகள் விந்துவில் ஒடுங்கி இருப்பதும், அதனை ஆராய்ந்து அறிதலுமே ஆகும்.

    நிவிர்த்தி முதலான ஐந்து கலைகள் பஞ்ச கலைகள் எனப்படும்.

    பஞ்ச கலைகள் என்பது….
    *நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்திய தீதை. அதாவது… படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்.*

    மேதாதி கலைகள் என்பது…..
    *மேதை, அர்க்கீசம், விடம், விந்து, அர்த்த சந்திரன், நிரோதினி, நாதம், நாதாந்தம், சக்தி வியாபினி, வியோம ரூபினி, அநந்தை, அநாதை, அநாகிருதை, சமனை, உள்மனை

    வேறு வகையான ஐங்கலைகள்….
    இது திருவருள் ஒளியில் காணப்படும்.
    இதை அறிந்து தெளிந்துணரக் கூடியவர் களுக்கு, பரம் பொருள் அன்புடைய வனாகி…

    மந்திரம், தந்திரம், தெளிவு, உபதேசம், ஞானம் என்னும் ஐந்தையும் அருளிச் செய்வான்.

    அதாவது….

    மந்திரம் − சிவநாமம்
    தந்திரம் − பூசை
    தெளிவு − வைராக்கியம்
    உபதேசம் − அறிவுரை
    ஞானம் − இவை நான்காலும் அடையும் மெய்யறிவு.

    இவையே… வேறைந்தான கலைகள்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  146. Sat. 18, Mar. 2023 at 4.03 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....!

    391) இறைவன் திருமேனியைத் தொடாமல், புறத்தே செய்யும் தொண்டு....
    *புறம்படிமைத் தொண்டு.*

    392) இறைவன் திருமேனியைத் தொட்டு அருகில் இருந்து செய்யும் தொண்டு.....
    *அகம்படிமைத் தொண்டு.*

    393) சரியை நெறியின் பயன்....
    *சாலோக பதவி.*

    394) கிரியை நெறியின் பயன்....
    *சாமீப பதவி.*

    395) கிரியை நெறி என்பது....
    *சிவனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்தல்.*

    396) இறைவனை மனதால் தியானிப்பது....
    *யோக நெறி.*

    397) அட்டாங்க யோகம்.....
    *இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி.*

    398) அட்டமா சித்திகள்....
    *அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்.*

    399) யோகத்தின் ஆறு ஆதாரங்கள்....
    *மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா. (ஆஞ்ஞா)

    400) யோக நெறியின் பயன்.....
    *சாரூப பதவி.*

    மீண்டும் அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  147. Sat. 18, Mar. 2023 at 2.36 pm.

    வேதியில் துளிகள் − 48.

    * ஆஸ்பிரின் என்பது....
    *தலைவலியைக் குணமாக்கும் மருந்து.*

    * பதங்கமாகும் பொருளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.... *கற்பூரம்.*

    * மின்சுமை அற்ற துகள்களின் பெயர்....
    *நியூட்ரான்கள்.*

    * ஒரு நியூட்ரானின் நிறை....
    *ஏறக்குறைய ஒரு புரோட்டானின் நிறைக்குச் சமம்.*

    * அணுவின் பகுதிப் பொருட்கள்....
    *எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான்.*

    * இதில்.... நேர்மின் சுமை உடைய துகள்கள்.....
    *புரோட்டான்கள்.*

    * அதுபோல்.... ஓர் அணுவின் உட்கருவில் உள்ள துகள்கள்....
    *புரோட்டான்கள்.*

    * எதிர்மின் சுமை உடைய துகள்கள்....
    *எலக்ட்ரான்கள்.*

    *அதேபோல்... உட்கருவை வட்டப் பாதைகளில் சுற்றி வரும் துகள்கள்....
    *எலக்ட்ரான்கள்.*

    *அடுத்து.... புரோட்டான்களைப் போன்றே அணுவின் உட்கருவில் உள்ள துகள்கள்..
    *நியூட்ரான்கள்.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  148. Sat. 18, Mar. 2023 at 2.56 pm.

    உயிரியல் துளிகள் − 48.

    * உதரவிதானம் விபத்தின் போது முறிந்தால்....
    *உடனடி மரணம்.*

    * மலேரியாவால் பாதிக்கப்படும் உறுப்புகள்....
    *மண்ணீரல், கல்லீரல்.*

    * படை தோயால் பாதிக்கப்படும் மனித பகுதி.... *தோல்.*

    * கரப்பான் பூச்சிக்கு நடக்க உதவும் கால்கள் ....
    *மூன்று இணை ஜோடி்க் கால்கள்.*

    * எலி, சுண்டெலி எந்த இனத்தைச் சேர்ந்தவை....
    *கொறித்துத் தின்னும் வகையைச் சேர்ந்தவை.*

    * போலியோவிலிருந்து தடுத்துக் கொள்ளப் போடப்படும் மருந்து.....
    *போலியோ சொட்டு மருந்து.*

    * எலும்புருக்கி நோய் வராமல் இருக்க போடப்படும் தடுப்பூசி....
    *பி.சி.ஜி. தடுப்பூசி.*

    *டெட்டனஸ் நோயிலிருந்து தடுத்துக் கொள்ளப் போடப்படும் தடுப்பூசி....
    *டி.பி.டி. தடுப்பூசி.*

    * தன் வாயை விடப் பெரிய இரையை விழுங்கும் விலங்கு....
    *பாம்பு.*

    * மிகப் பெரிய ஒற்றைச் செல்.....
    *நெருப்புக் கோழியின் முட்டை.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  149. Sun. 19, Mar. 2023 at 8.51 pm.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி...!

    401) ஞான நெறி என்பது...
    *கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல்.*

    402) சாதன ஞானம் என்பது....
    *சரியை முதலிய நான்கில் ஒவ்வொன்றும்.*

    403) அனுபவ ஞானம் என்பது....
    *சாதன ஞானத்தால் பெறும் பேறு.*

    404) ஞானத்தில் சரியை என்பது....
    *ஞானநூற் பொருளைக் கேட்டல்.*

    405) ஞானத்தில் கிரியை என்பது....
    *குருவிடம் கேட்டதைச் சிந்தித்தல்.*

    406) ஞானத்தில் யோகம் என்பது....
    *சிந்தித்தவற்றை, யோக சாதனத்தால் தெளிதல்.*

    407) ஞானத்தில் ஞானமாவது....
    *சிவத்தோடு அபேதமாய்க் கலந்து நிட்டை கூடுதல்.*

    408) இறப்பில் தவம் என்பது....
    *அழிவில்லாத சரியை முதலிய சிவபுண்ணியம்.*

    409) அப்போ...இறக்கும் தவம் என்பது....
    *வேள்வி முதலியன.*

    410) இருவினை ஒப்பு என்பது....
    *புண்ணியப் பாவ பயனான, இன்ப துன்பம் வரும்போது, விருப்பு வெறுப்பின்றி சமபத்தி பண்ணி ஏற்றல்.*

    மீண்டும் அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  150. அய்யா... மிக மிக சந்தோஷம் என் பதிவுகளை தங்கள் முகநூலில் பதிவிடுங்கள் அய்யா. இவை அனைத்தும் நான் படித்து எழுதியவை. யாருடைய வெளியீட்டையும் பார்த்து அனுப்பவில்லை. தைரியமாக வெளியிடலாம் அய்யா.

    ReplyDelete
  151. Wed. 29, Mar. 2023 at 10.07 pm.

    திருப்பாதிரிப்புலியூர்....!

    கடலூரின் ஒரு பகுதி. இது...திருப்பாதிரிப்புலியூர் என்னும் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் உள்ளது. கடலூர் (புதுநகர்) என இவ்வூர் வழங்குகிறது.

    ரயில் பாதையைக் கடக்கப் *பாடலீசுவரர்* திருக்கோயிலைக் காணலாம்.

    தமிழகத்தின் அனைத்து நகரங்களிலி ருந்தும், கடலூர் வர பேருந்து வசதிகள் உள்ளன.

    *இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.*

    திருநாவுக்கரசரைச் சமணர் கல்லைக்கட்டி, கடலிலிட அவர்... *சொற்றுணை வேதியன்* எனும் நமச்சிவாயப் பதிகம் பாடி கரையேறிய தலம்.
    ;அந்த இடம் *கரையேறவிட்டக் குப்பம்* என்று அழைக்கப்படுகிறது.

    சுவாமிகள், கரையேறி இப்பதிக்கு முதலில் வந்தபோது....*ஈன்றாளுமாய்* எனத் தொடங்கும் பதிகம் பாடப்பெற்றது.

    பாதிரி மரத்தைத் தலத்துக்குரிய மரமாகக் கொண்டமையாலும், புலிக்கால் முனிவரால் (வியாக்கிரபாதர்) பூசிக்கப் பெற்றமையாலும் இப்பெயர் பெற்றது.

    இறைவர் − தோன்றாத்துணைநாதர்

    இறைவியார் − பெரிய நாயகி அம்மை

    தலவிருட்சம் − பாதிரி

    தீர்த்தம் − கெடிலநதி.

    இது *தென்திசைக் கங்கை* என்று பாராட்டப் பெற்றுள்ளது.

    *மங்கண முனிவர் என்பவர் முடங்கிய காலுடைய முயல் வடிவமாகச் சாபமிடப் பெற்றார். அவர் இத்தலத்து இறைவரைப் பூசித்துச் சாபநீக்கம் பெற்றார்.*

    இச்செய்தி.... *முன்ன நின்ற முடக்கான் முயற்கருள் செய்து* என்னும் இக்கோயிலுக்குரிய திருஞானசம்பந்தப் பெருந்தகையாரின் திருவாக்கால் புலப்படுகிறது.

    இக்கோயிலுக்குரிய பாடல்கள் இரண்டாக... தாருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றுமாக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.

    அடுத்து....

    *சிதம்பரநாத முனிவர் இயற்றிய தலபுராணமும்....*

    *தொல்காப்பியர் இயற்றிய கலம்பகமும் இருக்கின்றன.*

    *சிவாய நமவென்று நீறணிந்தேன்
    தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூரானே*

    என்னும் அப்பர் பெருமானுடைய திருவாக்கு *சிவோய நம* என்று சொல்லித் திருநீற்றை அணிந்து கொள்ள வேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றது.

    மேலும்....

    *திருந்தா வமணர்தந் தீநெறிப் பட்டுத் திகைத்து முத்திதரும் தாளிணைக்கே சரணம் புகுந்தேன்*

    என்பது...அவருடைய திருவாக்கு. அவர் சமண சமயத்திலிருந்ததற்கு இது அகச்சான்றாய் உள்ளது.

    முக்கியக் குறிப்பு....!

    இவ்வூரில்.... *திருக்கோவலூர்* ஆதீனத்தைச் சேர்ந்த ஒரு மடாலயம் இருக்கின்றது.*

    *அது வீரசைவ மடமாகும்.*

    இத்துடன்....

    முன்ன நின்ற முடக்கால் முயற்கருள் செய்துநீள்
    புன்னைநின்றுகமழ்பாதிரிப்புலியூரு
    ளான்
    தன்னைநின்று வணங்குந்தனைத்தவ மில்லிகள்
    பின்னைநின்றபிணியாக்கையைப் பெறுவார்களே.

    முன்ன நின்ற முடக்கால் முயற்கு அருள்செய்து நீள்

    புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியுர் உளான்

    தன்னை நின்று வணங்கும் தனைத்தவம் இல்லிகள்

    பின்னை நின்ற பிணி ஆக்கையைப் பெறுவார்களே.

    முன்னொரு காலத்தில், இங்கு வழிபட்ட முடங்கிய கால் முயலுக்கு அருள் செய்தவர்.

    நெடிய புன்னை மரங்கள் நின்று கமழ்கின்ற பாதிரிப்புலியூரில் உள்ளார்.

    அவரை வழிபட்டு நிற்கும் தவம் சிறிதேனும் இல்லாதவர்கள்

    பின்னர் வருந்தும் பிணியுள்ள உடலைப் பெறுவார்கள்.

    கருத்து....

    இத்தலத்தில், முற்காலத்தில் முடங்கிய காலொடு முயலாகும் சாபம் பெற்ற மங்கண முனிவர் , அச்சாபம் நீங்கப் பெற்ற வரலாற்றைக் குறிப்பது.

    சிவபெருமானை வழிபடும் தவம் வாய்க்கப் பெறாதவர்கள் பிணியுடைய உடம்போடு வருந்துவர்.

    ( Long ago in this city, there was a saint by name Mangala Munivar. He got a curse to become a rabbit with crippled legs.

    Our Lord Civa. manifest in Thiru -p-paathiri-p-puliyoor, rescued him from the curse, graced him and gave back his original life.

    In this city, very long mast wood trees grow in large numbers. Their flowers sprad smell all over the areas. Those who do not have the grace to pray yo this Lord, will get bad diseases in their birth.

    திருச்சிற்றம்பலம்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  152. Thu. 30, Mar. 2023 at 4.59 pm.

    ரெமிங்டன் தட்டச்சுப் பொறியின் வெளியுறுப்புகள் பற்றிப் பார்த்தோம்.

    இன்று.. தட்டச்சுப் பொறியை நீண்ட ஆண்டுகளுக்குப் பயன்படும் வகையில்...அதைச் சுத்தம் செய்வதும், எண்ணெய் இட வேண்டிய பாகங்களுக்கு எண்ணெய் இடுவதும் முக்கியம் என்பதைப் பற்றிப் பார்ப்போம்...!

    உபகரணங்கள்......!

    1) நீளமான தூரிகை (Long Handled Brush).

    2) எழுத்தச்சுத் தூரிகை (Type Brush).

    3) கம்பித் தூரிகை (Wire Brush).

    4) எண்ணெய் குப்பி ( Oil can).

    5) எண்ணெய்க் கம்பி ( Oil Wire ).

    6) பெட்ரோல் (Petrol ).

    7) திருப்புளி ( Screwdriver).

    8) துவாலை ( Duster ).

    9) மெருகுதோல் ( Chamois Leather).

    10) குண்டூசி ( Pin).


    1) நீளமான தூரிகை :

    நீளமான தூரிகையைப் பயன்படுத்தி, உருளைத்தாங்கிப் பாகங்களை சுத்தம் செய்யும்போது.... உருளைத் தாங்கியானது இடது அல்லது வலது கோடிக்கு நகர்த்தப்பட வேண்டும்.

    ஏனெனில்....தூசிகள் தட்டச்சுப் பொறியின் உள் பாகங்களுக்குச் செல்லாது.

    இவ்வாறு... உராயும் பாகங்களிலுள்ள
    (Frictional parts) தூசுகளை எல்லாம் இத் தூரிகையைப் பயன்படுத்தி நீக்க வேண்டும்.

    2) எழுத்தச்சுத் தூரிகை :

    எழுத்தச்சுகளைப் பெட்ரோலைக் கொண்டு எழுத்தச்சுத் தூரிகையினால் சுத்தம் செய்யும் பொழுது விசைப் பலகையானது துவாலையினால் மூடப்பட வேண்டும்.

    மேலும்.... எழுத்தச்சுகளைச் சுத்தம் செய்யும்பொழுது, எழுத்தச்சுத் தூரிகையை *முன்னோக்கிய நிலையில்* மட்டுமே பயன்படுத்த வேண்டும். பின்னோக்கிய நிலையிலோ, பக்கவாட்டு நிலையிலோ நகர்த்திப் பயன்படுத்தக் கூடாது.

    மட்டுமின்றி.... அரைவட்டத்தகடு வழிகளில் உள்ள தூசுகளை அகற்றுவதற்கும் , இந்தத் தூரிகையைத் தான் பயன்படுத்த வேண்டும்.

    மீண்டும் அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  153. Thu. 30, Mar. 2023 at 7.50.

    மருத்துவம்......!

    சர்க்கரை நோய்க்கு மட்டும்....!


    தேவையானவை....

    1) எள் = 30 கி.

    2) ஆவாரம்பட்டை = 30 கி

    3) வால்மிளகு = 40 கி

    4) இலவங்கம் = 6 கி

    5) மாசிக்காய் = 30 கி

    6) சிறுநாகப்பூ = 3.1 கி

    7) பரங்கிப்பட்டை = 6.2 கி

    8) பால் = 125 மி.

    9) பனை வெல்லம் = 250 கி

    10 நல்லெண்ணெய் = 150 மி.

    மேற்கண்ட சரக்குகளை பொடித்து சூரணித்து வைக்கவும்.

    பால் மற்றும் பனை வெல்லத்தினை கலந்து பாகுபதமாக காய்ச்சி.. மேற்படி சூரணத்தை அதில் கொட்டி, கிளறி, நல்லெண்ணெய் விட்டு கிளறி வைக்கவும்.

    குறிப்பு... மேற்கண்ட சரக்குகளை பொடித்த பின் மேற்கூறிய அளவுகள் இருக்க வேண்டும்.

    அளவு....

    2.5 கிராம் வீதம் இரு வேளைகள் உட்கொள்ள வேண்டும்.

    தீரும் நோய்கள் :

    சர்க்கரை வியாதி, அதிமூத்திரம்,வெள்ளை, வெட்டை, முதலியவற்றைப் போக்கி உடல் வலிமையை உண்டாக்குகிறது.

    அதிகமாக அளவுகள் எடுத்து தயார் செய்வதைவிட தேவைக்கேற்ப தயாரித்துக் கொள்ளலாம்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  154. Fri. 31, Mar. 2023 at 7.11 am.

    உயிரியல் துளிகள் − 50

    * மாலைக்கண் நோயக்குக் காரணமான வைட்டமின்.....
    *வைட்டமின் − A.*

    * இரத்தம் உரைதலில் பங்கேற்கும் வைட்டமின்....
    *வைட்டமின் − K.*

    * உயர் இரத்த அழுத்தம் அழைக்கப் படுவது......
    *சிஸ்டோலிக்.*

    * கண்ணீர் வரவழைப்பதற்குக் காரணமான சுரப்பி......
    *லாச்ரிமல்.*

    * மனித உடலில் வலிமையான தசைப்பகுதி....
    *புட்டம்.*

    * கிட்னி செயலிழந்துவிட்டால், இரத்தத்தில் இருக்கும் நைட்ரஜன் கழிவை தூய்மை செய்யும் முறை.......
    *டயாலிசிஸ்.*

    * மனித மூளையில் நினைவாற்றல் கொண்ட பகுதி.....
    *கார்டெக்ஸ்.*

    * குருதிக் கொடையாளரின் இரத்தப் பிரிவு.....
    *O - பிரிவு.*

    * பெரி பெரி நோயால் பாதிககப்பட்டவர் அதிகமாக எடுத்துக் கொள்ளும் உண்வு...*வைட்டமின் − C.*

    * ஹிஸ்டீரியா எனப்படும் மனவியல் நோய்க்கு உளவியல் முறையில் சிகிச்சை அளித்த அறிஞர்......
    *சிக்மண்ட்ஃப்ராய்டு.*

    மீண்டும் அடுத்த பதிவில்.....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  155. Fri. 31, Mar. 2023 at 8.35 pm.

    திருக்கடவூர்....!

    அட்ட வீரட்டானம்

    எமனை வென்ற இடம்.....!

    பாடல்...!

    மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
    மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
    காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
    ஞாலக் கடவூர் நலமாய் இருந்தே.


    இப்பாடலின் பொருள்....

    மூலத்துவாரத்து மூழும் ஒருவனை மேலைத் துவாரத்தில் மேலுற நோக்கி என்பது.....

    மூலாதாரத்தில் இருந்து சுழுமுனை வழியாக , மூலக்கனலை மேலேற்றிச் சோதி ஒளியாகத் தெரிவான் இறைவன் என்பதாகும்.

    இதன் கருத்து...

    இப்படி நோக்க வல்லார் இறைவன் அருளைப் பெறுவர்.

    *அவர்களை அணுக வரும் காலனைக் காலால் உதைத்து, இறைவன் சாகா நிலையளிப்பான் என்பதே இதன் கருத்தாகும்.*

    பிறவித் துயரைக் கடக்க நின்ற ஊர் திருக்கடவூர். இது எமனை வென்ற இடம்.


    திருக்கடவூர் என்பது.... மயிலாடுதுறை அருகில் உள்ளது.

    அடியேன் சைவ சித்தாந்தப் புலவர் பட்டம் வாங்கச் சென்றபோது, திருக்கடவூர் இறைவன் அமிர்தகடேசுவரர்..இறைவியார் அபிராமியம்மையை தரிசித்து வந்த தலம்.

    இத்தலத்தின் சிறப்பு....

    மார்க்கண்டேயருக்காகக் கூற்றுவனைக் காலால் உதைத்த தலம்.

    அகத்தியர் மகரிஷி, புலஸ்தியர் பூசித்த பாபவிமோசன லிங்கம், புண்யவர்த்தன லிங்கம் என்ற இரண்டு லிங்கச் சந்நிதிகள் சிறப்பானவை.

    இங்கு கால சம்ஹாரமூர்த்தி சந்நிதியும் விசேடம்.

    மற்றொரு விசேடம்... அறுபது ஆண்டு முடிவுற்ற தம்பதிகள் இச்சந்நிதியில்... தம் அறுபதாம் ஆண்டுத் திருமணத்தைச் செய்து கொள்வதை மிகப் பாக்கியமாகக் கருதுவர்.

    அடுத்து... குங்கிலியக் கலய நாயனார், காரி நாயனார் ஆகியோர் வசித்து முத்தி பெற்ற தலம்.

    மகாலிங்கத்தின் மீது கூற்றுவன் வீசிய, பாசக்கயிற்றின் தழும்பு உள்ளது. (இதற்கு ஒரு வரலாறும் உண்டு. தொடர்ந்து படித்து வாருங்கள்.)

    இத்தலத்திற்குக் கிழக்கே.. திருக்கடவூர் மயானம் உள்ளது. இதிலிருந்து தான்...
    திருக்கடவூர் வீரட்டானேசுவரருக்கு... நாடோறும் திருமஞ்சனம் கொண்டு வரப் படுகிறது.

    குங்குலியக் கலய நாயனார் என்பவர்... திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் காலத்து நாயன்மார்.
    (காலம் : கி.பி.600 −660. கி.பி என்றால்... கிறிஸ்துவுக்குப் பின்)

    ReplyDelete
  156. கதை.....!

    குங்குலியக் கலய நாயனார்....சோழநாட்டில் திருக்கடவூர் என்ற ஊரில் அந்தணர் குலத்தில், ஆவணி மாதம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தார்.

    இவர் லிங்க வழிபாடு செய்பவர்.

    காவிரி பாய்ந்து வளம் செய்யும் சோழ நாட்டில், காலால் உதைத்த கடவுள் எழுந்தருளியிருப்பது... *திருக்கடவூர் ஆகும்.

    இத்தகைய வளங்கள் நிறைந்த திருக்கடவூர் என்னும் சிவத்தலத்தில்...
    *குங்குலியக் கலயனார்*, மார்க்கண்டேய முனிவருக்காக இயமனை உதைத்தருளிய *அமிர்தகடேசராகிய சிவபெருமானுக்கு, மணமிக்க *குங்குலியத் தூபம்* இடுகின்ற திருத்தொண்டு புரிபவர்.

    ஆகவே, அவரை யாவரும் *குங்குலியக் கலயர்* என்றே அழைத்தனர்.
    இவ்வாறு, திருத்தொண்டாற்றி வரும்போது, கடவுளின் திருவருளால் *வறுமை அடைந்தார்.*

    ஆயினும், முன்போலவே எம்பெருமானுக்கு தம் திருப்பணியைத் தவறாது செய்து வந்தார். அவருடைய வறுமை, மேன்மேலும் அதிகரித்து, அதன் விளைவாக..அவர் தம்முடைய நிலங்கள், அடிமை புரிந்தவர்கள் என அனைத்தை யும் விற்று பொருள்கள் யாவையும் இழந்த குங்குலியக் கலயனாரின் உற்றாரும், மக்களும் இரண்டு நாள் பட்டினி கிடந்து, வறுமையால் மிகவும் வருந்தினார்கள்.

    அதனைக் கண்ட குங்குலியாரின் மனைவியார்... தம் கணவராகிய கலயனாரை அழைத்து, அவர் கையில் தம்முடைய *மங்கலம் பொருந்திய தாலியைக் கழற்றிக் கொடுத்து, அதனை விற்று நெல் வாங்கி வருமாறு கூறினார்.*

    ReplyDelete
  157. குங்குலியக் கலயனார், அதைப் பெற்றுக் கொண்டு நெல் வாங்குவதற்காக கடை வீதி வழியாக சென்று கொண்டிருந்த போது, எதிரே ஒரு வணிகன் குங்குலியப் பொதியினைச் சுமந்து சென்றான்.

    அதனைப் பார்த்த நாயனார்... இது என்ன பொதி என்று கேட்டார். வணிகன், குங்குலியப் பொதி என்று கூறவும்... உடனே நாயனார் முகமலர்ந்து, இறைவனுக்கேற்ற மணம் பொருந்திய குங்குலியம் இதுவானால்... நான் பெறும் பேறு இன்று பெற்றேன்... இதைவிட நல்ல பேறு வேறுண்டோ, என பெரும் பேறாக நினைத்து....

    துணிவு கொண்டு வணிகனை நோக்கி, *அய்யா... நான் உமக்குப் பொன்னைத் தருகிறேன். நீர் இக்குங்குலியத்தை கொடுப்பீராக என்றார்.*

    வணிகன்... நீர் எனக்கு எவ்வளவு பொன் கொடுக்க இசைந்துள்ளீர் என்று கேட்க... *கலயனார் தம் கையிலிருந்த தாலியை வணிகனிடம் கொடுத்தார்.*

    (வீட்டை மறந்தார், மனைவியை மறந்தார், உற்றார் உறவுகளை மறந்தார்.. அடியார் பெருமக்களை மறந்தார்.)

    கலயனார்... அங்குச் சிறிதும் நில்லாமல், மன மகிழ்ச்சியுடன் விரைந்து வீரட்டானத் திருக்கோயிலை அடைந்தார்.

    அங்கு எம்பெருமானுடைய வழிபாட்டுக் குரிய பொருள்கள் வைத்திருக்கும் பண்டாரத்திலே (சரக்கு அறை) எல்லாக் குங்குலியத்தையும் சேமித்து வைத்தார்.

    ReplyDelete
  158. மனத்தில் பேரன்பு பொங்க எம்பெருமானுடைய திருவடிகளைத் துதித்துக் கொண்டு, குங்குலியப் பணி புரிந்து, *சிவசிந்தையுடன்* அங்கே தங்கியிருந்தார்.

    அன்று இரவு.... மனைவியாரும், மக்களும் பசி மிகுதியால் வருந்தி, அயர்ந்து தூங்கினர்.

    அப்போது...இறைவன் திருவருளினாலே, குபேரன் தனது பெருச்செல்வத்தைப் பூமியில் கொண்டு வந்து நிறைத்துக் கலயனாரின் திருமனை முழுவதும்... பொற்குவியலும், நெற்குவியலும், பிற வளங்களுமாக ஆக்கி வைத்தனன்.

    சிவபெருமான் கலயனாரின் மனைவியார் கனவில் தோன்றி, வீட்டில் செல்வம் நிறைந்துள்ளதை உணர்த்தியருளினார்.

    அவ்வம்மையார் உடனே, துயில் நீங்கி எழுந்து, தாம் கனவில் கண்ட பல்வகைச் செல்வங்கள் நம் வீட்டில் நிறைந்திருப் பதைக் கண்டு மகிழ்ந்தார்.

    சிவபெருமானின் திருவருளை நினைந்து வணங்கித் துதித்துக் கொண்டு, தமது கணவருக்கு உணவு சமைக்க எண்ணிப் பாகசாலையை.... அடைந்தார்.

    *காலனைக் காய்ந்த கடவுள் திருக்கோயிலில், குங்குலியக் கலயனார் அறியும்படி அசரீரி வாக்கால், நீ மிகப் பசித்துள்ளாய்; உன்னுடைய வீட்டிற்குச் சென்று, பாலுடன் கலந்த இனிய உணவை உண்டு, பசித்துன்பத்தை ஒழிப்பாயாக.. என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    குங்குலியக் கலயனார், சிவபெருமான் கூறிய , அருளிப் பாட்டினைக் கேட்டு, வணங்கித் தொழுது, திருவருளை மறுத்து, வீட்டிற்கும் போகாமல், கோயிலில் தங்கியிருக்க அஞ்சி,அங்கிருந்து புறப்பட்டுத் தம் வீட்டிற்குச் சென்றார்.

    தம் வீட்டில்... பெரிய நிதிக் குவியல் களோடு ஏனைய செல்வங்கள் நிறைந்திருப்பதைக் கண்டு, , தம் மனைவியாரைப் பார்த்து, இச்செல்வங் கள் எவ்வாறு உண்டாயின என்று கேட்க..அவ்வம்மையார் நீலகண்டராகிய எம்பெருமான் திருவருள் புரிய இச்செல்வம் வந்தது என்று கூற... என்னையும் ஆட்கொள்ள எம்பெருமான்
    திருவருள் இருந்த வண்ணம் தான் என்னே என்று கைகூப்பித் தொழுது போற்றினார்.

    இவ்வாறு குங்குலியக் கலய நாயனார் வாழுங் காலத்தில்...

    *திருப்பனந்தாள்* என்னும் திருப்பதியில் வீற்றிருக்கும், *சிவலிங்கத் திருவுருவம் சிறிது சாய்ந்து இருந்தது.*

    சோழமன்னன் அச் சாய்வினைப் போக்கி நேர் நிற்கக் கண்டு வழிபட வேண்டு மென்று விருப்பம் கொண்டான்.

    எனவே... தமது யானைகளையும், சேனைகளையும் பூட்டி இழுப்பித்து எம்பெருமான் திருவுருவத்தை நிமிர்த்த முயற்சித்து, யானைச் சேனைகள் இளைத்து வீழ்ந்தனவே அன்றிச் சிவலிங்கத் திருவுருவம் நிமிராமல் முன்போன்றே சாய்ந்து நின்றது.

    அதனால் சோழமன்னன், இரவும், பகலும் நீங்காத கவலையுற்று மனம் வருந்தினான்.

    குங்குலியக் கலயனார், சோழ மன்னனின் கவலையைக் கேள்வியுற்று, எம்பெருமானை *நேர்காணும்* பணியில் நின்ற சோழவரசனை விரும்பிச் சடையப்பரைத் தரிசிக்கத் *திருக்கடவூர் பெருமானை வணங்கிக் கொண்டு...திருப்பனந்தாளை வந்தடைந்தார்.

    ReplyDelete
  159. சிவலிங்கத்தை நேரே நிறுத்த முடியாமை
    யால், இளைத்துக் கீழே வீழ்ந்து எழமாட்டாதிருக்கின்ற நிலையினையும் அறிந்து, தானும் இந்த இளைப்பினைப் பொருந்தி மெலியும் பேறு பெற வேண்டும் என்று எண்ணித் துணிவு கொண்டு....

    எம்பெருமானின் திருமேனியில், பூங்கச்சோடு பொருந்திய, வலிய கயிற்றைத் தம் கழுத்தில் கட்டிக் கொண்டு வருந்தி இழுத்தார்.

    குங்குலியக் கலயனாரது மனதில் எழுந்த அன்பின் ஒருமைப்பாட்டினைக் கண்ட அப்பொழுதே.... *திருப்பனந்தாள் அண்ணலார்... சாய்வு நீங்கி நேரே நின்றனன்.*

    சோழ மன்னன் குங்குலியக் கலயனாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, எழுந்து நின்று...

    எம்பெருமானாகிய சடையப்பரின் செந்நிலையை அடியேன் தரிசிக்கும்படி செய்தருளினீர்; திருமாலும் அறியப்படாத எம்பெருமானின் திருவடி மலர்களை, அன்புமிக்க அடியவர்கள் அல்லாது நேர்காண வல்லார் யாவர் ? என்று புகழ்ந்து துதித்தார்.


    சிலநாள் அங்குத் தங்கி இருந்து இறைவனை வணங்கி வழிபட்டுக் கலயனார் திருக்கடவூரை அடைந்து, முன்போல் குங்குலியத் தூபப்பணி புரிந்து வந்தார்.

    அச்சமயம், திருஞானசம்பந்த சுவாமிகளும், திருநாவுக்கரச சுவாமிகளும் திருக்கடவூருக்கு எழுந்தருளினார்கள். குங்குலியக் கலய நாயனார்... அவர்களை எதிர் கொண்டுச் சென்று, வணங்கித் தம் மனைக்கு அழைத்துச் சென்று...அன்பிற் சிறந்தவர்களாகிய அவர்களுக்குத் தம் மனையில், அறுசுவைச் சுவைகளும் பொருந்த இனிய அமுது படைத்து வழிபட்டார்.

    இவ்வாறு, குங்குலியக் கலய நாயனார்..
    சிவபெருமானுக்கும், சிவனடியார்களுக் கும் ஏற்றவாறு பற்பல திருப்பணி புரிந்து, இறைவனது திருவடி நிழலை அடைந்தார்.

    *கடவூரில் கலயன்தன் அடியார்க்கும் அடியேன்*

    என்ற பாடல் வரி குங்குலியக் கலய நாயனாரை நமக்கு நினைவூட்டுகிற தல்லவா....?


    பிழையிருப்பின் அடியேன் குற்றம் பொறுத்தருள்க...!

    திருச்சிற்றம்பலம்

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  160. குங்குலியக் கலயனார், அதைப் பெற்றுக் கொண்டு நெல் வாங்குவதற்காக கடை வீதி வழியாக சென்று கொண்டிருந்த போது, எதிரே ஒரு வணிகன் குங்குலியப் பொதியினைச் சுமந்து சென்றான்.

    அதனைப் பார்த்த நாயனார்... இது என்ன பொதி என்று கேட்டார். வணிகன், குங்குலியப் பொதி என்று கூறவும்... உடனே நாயனார் முகமலர்ந்து, இறைவனுக்கேற்ற மணம் பொருந்திய குங்குலியம் இதுவானால்... நான் பெறும் பேறு இன்று பெற்றேன்... இதைவிட நல்ல பேறு வேறுண்டோ, என பெரும் பேறாக நினைத்து....

    துணிவு கொண்டு வணிகனை நோக்கி, *அய்யா... நான் உமக்குப் பொன்னைத் தருகிறேன். நீர் இக்குங்குலியத்தை கொடுப்பீராக என்றார்.*

    வணிகன்... நீர் எனக்கு எவ்வளவு பொன் கொடுக்க இசைந்துள்ளீர் என்று கேட்க... *கலயனார் தம் கையிலிருந்த தாலியை வணிகனிடம் கொடுத்தார்.*

    (வீட்டை மறந்தார், மனைவியை மறந்தார், உற்றார் உறவுகளை மறந்தார்.. அடியார் பெருமக்களை மறந்தார்.)

    கலயனார்... அங்குச் சிறிதும் நில்லாமல், மன மகிழ்ச்சியுடன் விரைந்து வீரட்டானத் திருக்கோயிலை அடைந்தார்.

    அங்கு எம்பெருமானுடைய வழிபாட்டுக் குரிய பொருள்கள் வைத்திருக்கும் பண்டாரத்திலே (சரக்கு அறை) எல்லாக் குங்குலியத்தையும் சேமித்து வைத்தார்.

    மனத்தில் பேரன்பு பொங்க எம்பெருமானுடைய திருவடிகளைத் துதித்துக் கொண்டு, குங்குலியப் பணி புரிந்து, *சிவசிந்தையுடன்* அங்கே தங்கியிருந்தார்.

    அன்று இரவு.... மனைவியாரும், மக்களும் பசி மிகுதியால் வருந்தி, அயர்ந்து தூங்கினர்.

    அப்போது...இறைவன் திருவருளினாலே, குபேரன் தனது பெருச்செல்வத்தைப் பூமியில் கொண்டு வந்து நிறைத்துக் கலயனாரின் திருமனை முழுவதும்... பொற்குவியலும், நெற்குவியலும், பிற வளங்களுமாக ஆக்கி வைத்தனன்.

    ReplyDelete
  161. சிவபெருமான் கலயனாரின் மனைவியார் கனவில் தோன்றி, வீட்டில் செல்வம் நிறைந்துள்ளதை உணர்த்தியருளினார்.

    அவ்வம்மையார் உடனே, துயில் நீங்கி எழுந்து, தாம் கனவில் கண்ட பல்வகைச் செல்வங்கள் நம் வீட்டில் நிறைந்திருப் பதைக் கண்டு மகிழ்ந்தார்.

    சிவபெருமானின் திருவருளை நினைந்து வணங்கித் துதித்துக் கொண்டு, தமது கணவருக்கு உணவு சமைக்க எண்ணிப் பாகசாலையை.... அடைந்தார்.

    *காலனைக் காய்ந்த கடவுள் திருக்கோயிலில், குங்குலியக் கலயனார் அறியும்படி அசரீரி வாக்கால், நீ மிகப் பசித்துள்ளாய்; உன்னுடைய வீட்டிற்குச் சென்று, பாலுடன் கலந்த இனிய உணவை உண்டு, பசித்துன்பத்தை ஒழிப்பாயாக.. என்று திருவாய் மலர்ந்தருளினார்.*

    குங்குலியக் கலயனார், சிவபெருமான் கூறிய , அருளிப் பாட்டினைக் கேட்டு, வணங்கித் தொழுது, திருவருளை மறுத்து, வீட்டிற்கும் போகாமல், கோயிலில் தங்கியிருக்க அஞ்சி,அங்கிருந்து புறப்பட்டுத் தம் வீட்டிற்குச் சென்றார்.

    தம் வீட்டில்... பெரிய நிதிக் குவியல் களோடு ஏனைய செல்வங்கள் நிறைந்திருப்பதைக் கண்டு, , தம் மனைவியாரைப் பார்த்து, இச்செல்வங் கள் எவ்வாறு உண்டாயின என்று கேட்க..அவ்வம்மையார் நீலகண்டராகிய எம்பெருமான் திருவருள் புரிய இச்செல்வம் வந்தது என்று கூற... என்னையும் ஆட்கொள்ள எம்பெருமான் திருவருள் இருந்த வண்ணம் தான் என்னே என்று கைகூப்பித் தொழுது போற்றினார்.

    இவ்வாறு குங்குலியக் கலய நாயனார் வாழுங் காலத்தில்...

    *திருப்பனந்தாள்* என்னும் திருப்பதியில் வீற்றிருக்கும், *சிவலிங்கத் திருவுருவம் சிறிது சாய்ந்து இருந்தது.*

    சோழமன்னன் அச் சாய்வினைப் போக்கி நேர் நிற்கக் கண்டு வழிபட வேண்டு மென்று விருப்பம் கொண்டான்.

    எனவே... தமது யானைகளையும், சேனைகளையும் பூட்டி இழுப்பித்து எம்பெருமான் திருவுருவத்தை நிமிர்த்த முயற்சித்து, யானைச் சேனைகள் இளைத்து வீழ்ந்தனவே அன்றிச் சிவலிங்கத் திருவுருவம் நிமிராமல் முன்போன்றே சாய்ந்து நின்றது.

    அதனால் சோழமன்னன், இரவும், பகலும் நீங்காத கவலையுற்று மனம் வருந்தினான்.

    குங்குலியக் கலயனார், சோழ மன்னனின் கவலையைக் கேள்வியுற்று, எம்பெருமானை *நேர்காணும்* பணியில் நின்ற சோழவரசனை விரும்பிச் சடையப்பரைத் தரிசிக்கத் *திருக்கடவூர் பெருமானை வணங்கிக் கொண்டு...திருப்பனந்தாளை வந்தடைந்தார்.

    சிவலிங்கத்தை நேரே நிறுத்த முடியாமையால், இளைத்துக் கீழே வீழ்ந்து எழமாட்டாதிருக்கின்ற நிலையினையும் அறிந்து, தானும் இந்த இளைப்பினைப் பொருந்தி மெலியும் பேறு பெற வேண்டும் என்று எண்ணித் துணிவு கொண்டு....

    எம்பெருமானின் திருமேனியில், பூங்கச்சோடு பொருந்திய, வலிய கயிற்றைத் தம் கழுத்தில் கட்டிக் கொண்டு வருந்தி இழுத்தார்.

    குங்குலியக் கலயனாரது மனதில் எழுந்த அன்பின் ஒருமைப்பாட்டினைக் கண்ட அப்பொழுதே.... *திருப்பனந்தாள் அண்ணலார்... சாய்வு நீங்கி நேரே நின்றனன்.*

    சோழ மன்னன் குங்குலியக் கலயனாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, எழுந்து நின்று...

    எம்பெருமானாகிய சடையப்பரின் செந்நிலையை அடியேன் தரிசிக்கும்படி செய்தருளினீர்; திருமாலும் அறியப்படாத எம்பெருமானின் திருவடி மலர்களை, அன்புமிக்க அடியவர்கள் அல்லாது நேர்காண வல்லார் யாவர் ? என்று புகழ்ந்து துதித்தார்.


    சிலநாள் அங்குத் தங்கி இருந்து இறைவனை வணங்கி வழிபட்டுக் கலயனார் திருக்கடவூரை அடைந்து, முன்போல் குங்குலியத் தூபப்பணி புரிந்து வந்தார்.

    அச்சமயம், திருஞானசம்பந்த சுவாமிகளும், திருநாவுக்கரச சுவாமிகளும் திருக்கடவூருக்கு எழுந்தருளினார்கள். குங்குலியக் கலய நாயனார்... அவர்களை எதிர் கொண்டுச் சென்று, வணங்கித் தம் மனைக்கு அழைத்துச் சென்று...அன்பிற் சிறந்தவர்களாகிய அவர்களுக்குத் தம் மனையில், அறுசுவைச் சுவைகளும் பொருந்த இனிய அமுது படைத்து வழிபட்டார்.

    இவ்வாறு, குங்குலியக் கலய நாயனார்..சிவபெருமானுக்கும், சிவனடியார்களுக் கும் ஏற்றவாறு பற்பல திருப்பணி புரிந்து, இறைவனது திருவடி நிழலை அடைந்தார்.

    *கடவூரில் கலயன்தன் அடியார்க்கும் அடியேன்*

    என்ற பாடல் வரி குங்குலியக் கலய நாயனாரை நமக்கு நினைவூட்டுகிற தல்லவா....?


    பிழையிருப்பின் அடியேன் குற்றம் பொறுத்தருள்க...!

    திருச்சிற்றம்பலம்

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  162. Sun. 02, Apr. 2023 at 7.49 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....!

    511) மூவகை அளவைகள்....
    *காட்சி, கருதல், உரை.*

    512) காட்சி அளவையின் வேறு பெயர்கள்...
    *பிரத்தியட்சப் பிரமாணம், காண்டல் அளவை.*

    513) கருதல் அளவையின் வேறு பெயர்...
    *அனுமானப் பிரமாணம்.*

    514) உரை அளவையின் (நூல் அளவை) வேறு பெயர்கள்....
    *ஆகமப் பிரமாணம், சப்தப் பிரமாணம்.*

    515) ஐயம் திரிபின்றி ஒரு விஷயத்தை நேரே அறிவது....
    *காட்சி அளவை.*

    516) மறைந்து நின்ற பொருளை உடன் நிகழும் ஏதுவால் அறிவது....
    *கருதல் அளவை*

    517) இந்தக் காட்சியாலும்,அனுமானத் தாலும் அதாவது காண்டலாலும், அனுமானத்தினாலும் அறிய முடியாததை ஆப்த வாக்கியத்தால் அறிவது....
    *நூல் அளவை. அதாவது உரை அளவை. ஆப்த என்றால் சான்றோர்.*

    518) விட்டு நீங்காமல் நிகழும் இயல்பு...
    *அவிநாபாவம்.*

    519) ஒரு பொருளை இதுவா அல்லது அதுவா என்று ஒன்றிலும் துணிவு பெறாத நிலை....
    *ஐயம்.*

    520) ஒரு பொருளை மற்றொரு பொருளாக மயங்கி அறியும் நிலை....
    *திரிபு.*

    மீண்டும் அடுத்த பதிவில்.....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  163. Sun. 02, Apr. 2023 at 8.31 pm.

    அறிந்து கொள்வோமே...!

    63− நாயன்மார்கள் பற்றிய விளக்கம்....!

    1) *இசைஞானியார் :*
    *சுந்தரரைப் பெற்று வளர்த்த தாயார்.*

    2) *சிறுத்தொண்டர் :*
    அடியாராக வந்த சிவனார்க்குத் தன் ஒரே மகனை அறுத்துச் சமைத்து உணவு செய்தார்.*

    3) திருக்குறிப்புத் தொண்டர் :*
    காலந் தவறியதால், துணி தோய்க்கும் கல்லில் தலையை மோதிக் கொள்ளச் சென்றது.

    4) திருநாவுக்கரசர் :*
    நஞ்சு தீண்டி இறந்த மகவினை உயிருடன் எழுப்பியது. தமிழ் மறை தந்தது.

    5) *மங்கையர்க்கரசியார :*
    திருஞானசம்பந்தரை அழைத்து வந்து, பாண்டி நாட்டில் சைவத்தை நிலை நாட்டியது.

    6) *விறன்மிண்டார் :*
    திருத்தொண்டர் தொகை பாடக் காரணமாய் இருந்தது.

    7) *கழற்சிங்கர் :*
    சிவபூஜைக்குரிய மலரை எடுத்து மோந்த தம் மனைவியின் கையை வெட்டியது.

    8) *சோமாசிமாறன் :*
    கழற்றறிவார் பார்க்க வேள்வி செய்தல். சுந்தரரின் திருவடிக்குப் பக்தி கொண்டது.

    9) *திருஞானசம்பந்தர் :*
    எலும்பைப் பெண் ஆக்கியது. தமிழ்மறை தந்தது. ஞானப்பால் குடித்தமை.

    10) *திருநீலகண்ட யாழ்ப்பாணர் :*
    சம்பந்தருடன் சென்று யாழ் தொண்டு புரிந்தது.

    11) *திருநீலநக்கர் :*
    பாணர்க்கு வேதிகையில் இடம் தந்தது. திருமணத்தை நடத்தி முத்தி.

    12) *முருகநாயனார் :*
    மலர்த் தொண்டு.

    13) *நமிநந்தியடிகள் :*
    தண்ணீரால் விளக்கு எரித்தது.

    14) *அமர்நீதியார் :*
    கோவணத்திற்காகத் தம்மையும், தம் சொத்துக்களையும், குடும்பத்தையும் சிவனுக்கு அளித்தது.

    15) *ஏயர்கோன் கலிக்காமர் :*
    சுந்தரர்பால் சினங்கொண்டு, பின்னர் நண்பரானது.

    தொடர்ச்சி அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  164. நோய்கள் பற்றிய விளக்கம் :

    1) சூலை : குத்தல்

    2) சூதக சூலை :
    மலடிகளுக்கு சூதகத்தினால் ஏற்படும் குத்தல் நோய்.

    3) விரணம் : திறந்த புண்.

    4) ஈளை : ஓர் சுவாச நோய். (சுவாசக் குழல்கள் சுருக்கம் அடைந்து, அதனால் மூச்சுத் திணறலையும், நெஞ்சில் கபம் அடைத்துக் கொண்டும் துன்பப் படுவது).

    5) ஆம வாதம் :
    அஜீரணத்தால் வாயு குடலில் சேர்ந்து, மலபந்தமாகி வயிறு உப்பும் ஓர் வகை வாத நோய்.

    6) வெட்டைச் சூடு :
    பெண் பேகத்தினால் ஏற்பட்ட சூடு.

    7) விலாவளை :
    விலாப்பக்கத்தில் எழும்பும் ஒர் கட்டி.

    8) முதுகு வாளை :
    முதுகில் உண்டாகும் ராஜ பிளவை .

    9) கீழ் நோய் :
    ஒவ்வாமை பொருந்துகளில் வலியையும், வீக்கத்தையும் உண்டாக்கும் நோய்.

    10) வெண் குஷ்டம் :
    உடம்பில் வட்ட வட்டமாய் பல இடங்களில் வெள்ளை விழுந்து, விகாரமாக்கி அவைகளின் ஓரம் தடித்து விரிவாய் படர்ந்து காணப்படும்.

    11) வெள்ளை :
    பெண்களின் மாதாந்திர வெள்ளை ஒழுக்கு.

    12) கபால குட்டம் :
    சிறிய ரணக் கொப்புளங்கள் கண்டு சிவந்து, பிறகு கறுத்தும், குழி விழுந்தும், சீழும், தண்ணீரும் ஒழுகி, தலை மண்டை ஓட்டின் நிறம்போல்....உடம்பெல்லாம் வெளுத்துக் காணும் ஒரு வகை குட்ட நோய்(குஷ்டம்).

    13) இடிசூலை :
    மண்டையடி, மண்டை குத்தல்.

    14) அரையாப்பு :
    தொடை இடுக்குகளில் அல்லது கவட்டில் நெறிக்கட்டி பெருத்து கட்டையைப் போல் காணும் ஓர் வகை விரண நோய்.

    15) சிரகம்பம் :
    வாயு மிகுதியால் குருதி பொங்கி, நரம்புகளில் புகுந்து, தலை முதல், உடம்பு முழுவதையும் தாக்கி, காது கேளாமை, கை கால்கள் வசமிழத்தல், நினைவு கலங்கல், நெடுமூச்சு, கொட்டாவி, தலை நடுங்கல் ஆகிய குணங்களைக் (குறிகளை்) காட்டும்.

    16) அள்ளு நோய் :
    விலாப்புறங்களில் கபம்கூடி , அதனால் அடிக்கடி மூச்சு வாங்கி உடனே இழுப்பு வந்து துன்புறுத்தும்.

    17) வளி நோய் :
    வாதக் குற்றம் (வளி) தன்னளவில் மிகுந்தோ அல்லது குறைந்தோ இருந்து, உடம்பில் குத்தல், குடைதல், நோதல், நடுக்குதல் போன்ற குண பேதங்களை உண்டாக்கி.. பலவிதமான துன்பங்களை உண்டாக்கும்.

    18) கருங்குட்டம் :
    முழங்கால், மூக்கு இவ்விடங்களில் ஸ்பரிசமற்று கருப்பாய் படர்ந்து உடம்பு முழுவதும் தீப்போல் காந்தலும், நமைச்சலும் உண்டாகிச் சாம்பல் தூள் போல் உதிரச் செய்யும்.

    19) பெளத்திரம் :
    ஆசனவாயின் உள்ளேயும், வெளியே யும், பக்க வாட்டிலும், விரையிலும், ஆண் குறியிலும்... முளைகளாகவும், கட்டிகளாகவும் தோன்றி, வீங்கி மிக வேதனையுடன் காணப்படும்.

    20) மூலம் :
    மூலம் என்பது... முத்தோட மாறுபாட்டால்... சருமமும், மாமிச கொழுப்புத் தாதுக்களும் கோளாறடைந்து..ஆசன வாயினுள்ளும், வெளியிலும், மாமிச முளைகள் கண்டு, குதவாயிலை அடைத்துத் துன்புறுத்துவதாகும்.

    21) மேக சூலை :
    கை கால் கடுத்தல், குடைதல், கீழ்களில் சிவந்து வீங்கி, சூலத்தாற் குத்துவது போன்ற ஒலி உண்டாதல், நீட்டவும், மடக்கவும் முடியாமை..சில நேரங்களில் சுரம் காய்தல், மயக்கம், வியர்த்தல் போன்ற குறிகுணங்கள் உண்டாகும்.

    22) நரித்தலை வாதம் :
    இந்நோயில் முழங்கால் மூட்டில், செந்நீர் நிரம்பி, சிவந்து வீங்கி, மடக்கவும், நீட்டவும், நிற்கவும் முடியாமல் வலி மிகுதியால் வீங்கி காணும். நாடி படபடத்து ஓடும்.

    23) குன்மம் :
    மிகுந்த ஏப்பம், மலக்கட்டு, வயிறு நிறைந்த உணர்வு, உப்பிசம், குடலிரைச்சல், பலவீ்னம் வயிற்று வலி, அஜீரணம், வாந்தி, அசதி முதலியன தோன்றும்.

    24) அதிசாரம் :
    வயிற்றுப் போக்கு.

    25) பாண்டு :
    இரத்த சோகை.

    26) மதுமேகம் :
    விரையும், தண்டும், கழுத்தும்... மஞ்சளாகி அடிக்கடி நாழியளவில் நீரிறங்கும்.

    27) விருப்புதி :
    கட்டிகள்.

    28) பிரமேகம் :
    தேன்போல் குறுணியளவில் நீரிறங்கும்.

    29) கண்ட மாலை :
    தாய் தந்தையரின் உடம்பின் விகற்பத்தாலும், இரத்தக் கேட்டினாலும், கழுத்தைச் சுற்றி இருக்கும் கோளங்கள் வீங்கி, வலித்துச் சீழ் கொண்டு உடைந்து ரணமாகி, நெடுநாள் ஆறாமல் கிளைத்து துன்புறுத்தும் நோய்.

    குறிப்பு :

    நோய்களின் பெயர்களை அறிந்து கொண்டால்.. மருத்துவம் கொள்வது எளிது.



    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  165. Mon. 03, Apr. 2023 at 9.26 am.

    தட்டச்சுப் பொறி உபகரணங்கள்

    3) *கம்பித் தூரிகை. :*

    கம்பித் தூரிகை.... தட்டச்சுப் பொறியின் உள்பாகங்களிலுள்ள தூசுகளையும், அழுக்குகளையும், விசை நெம்புகோலின் இடைவெளி ஆகியவற்றிலுள்ள தூசு களையும், அழுக்குகளையும், அகற்று வதற்கு இக் கம்பித் தூரிகையைப் பயன்படுத்த வேண்டும்.

    4) *எண்ணெய்க் குப்பி. :*

    தட்டச்சுப் பொறியின் பல்வேறு உறுப்புகள் சரியாக இயங்கும் பொருட்டும், சீக்கிரம் தேயாமலும், பழுதடையாமல் நீடித்து உழைக்கும் பொருட்டும், எண்ணெய் போட வேண்டியது அவசியம்.

    தட்டச்சுப் பொறியின் குறிப்பிட்ட பாகங்களுக்கு எண்ணெய் போடுவதற்கு முன், முக்கியமாக செய்யப்பட வேண்டியவை.... *அப்பாகங்களிலுள்ள தூசுகள், அழுக்குகள் ஆகியவை அகற்றப்பட வேண்டும்.*

    எண்ணெய் போடுவதற்குத் தட்டச்சுப் பொறியின் எண்ணெயைத்தான் பயன்படுத்த வேண்டும்.

    தட்டச்சுப் பொறியின் வெளி உறுப்பு களுக்கு எண்ணெய்போட எண்ணெய்க் குப்பியையும்....

    உள் உறுப்புகளுக்கு எண்ணெய்போட எண்ணெய்க் கம்பியையும் பயன்படுத்த வேண்டும்.

    உருளைத் தாங்கியின் இணைப்புத் தண்டுகளில் படிந்திருக்கும் காய்ந்து கட்டியாகி உள்ள எண்ணெய்ப் பசையைத்.... துவாலையினால் துடைத்துச் சுத்தம் செய்துவிட்டு, பிறகு இணைப்புத் தண்டுகளில், எண்ணெய்க் குப்பியைக் கொண்டு, எண்ணெய்த் துளிகளை விட்டு, உருளைத் தாங்கியை விடுவிக்கும் நெம்புகோல்களை அழுத்திக் கொண்டு, உருளைத் தாங்கியை இடப்புறமாகவும், வலப்புற மாகவும் நகர்த்தி, இணைப்புத் தண்டுகளில், ஒரே சீராக எண்ணெய் பரவும்படிச் செய்ய வேண்டும்.

    இந்நிலையில்... இடது, வலது ஓர நிறுத்திகள் முறையே.... இடக்கோடி
    யிலும், வலக்கோடியிலுமாக இருக்க வேண்டும்.

    எண்ணெய் போடும் இடங்கள்.....

    உருளைத்தாங்கியின் இணைப்புத் தண்டுகள், உருளைத் தாங்கிச் சக்கரங்கள், தாவுசக்கரம், தாவு பல்சக்கரம், நாடா சாய்வுப் பல்சக்கரங் கள்..இவைகளுக்கு மட்டுமே எண்ணெய் இடல் வேண்டும்.

    எண்ணெய் போடக்கூடாத இடங்கள்....

    உருளை, இரப்பர் உறுப்புகள், விசைப்பலகை, எழுத்தச்சுகள், அரைவட்டத் தகடு, நாடா இவைகளுக்கு எண்ணெய் இடக் கூடாது.

    5) *எண்ணெய்க் கம்பி :*

    நாடா பல்சக்கரங்கள், தாவுச் சக்கரம், உருளைத் தாங்கிப் பல்சட்டம், உராயும் பாகங்கள்...இவைகளுக்கு எண்ணெய்க் கம்பியைத் தான் பயன்படுத்த வேண்டும்.

    6) *பெட்ரோல் :*

    கவனத்தில் கொள்க....

    எழுத்தச்சுகளைச் சுத்தம் செய்வதற்கு பெட்ரோலும்....

    உருளை, தாள் சுழற்றிகள், தாள் பிடிப்பான்கள், தள்ளுருளைகள் ஆகியவற்றைச் சுத்தம் செய்ய... உட்ஆல்கஹால் அல்லது பென்சீன் (Wood Alcohol or Benzene) பயன்படுத்த வேண்டும்.

    7) *திருப்புளி :*

    தட்டச்சுப் பொறியின் உள்பாகங்களைச் சுத்தம் செய்து எண்ணெய் போடும்போது முன்புற மூடி, பக்கத் தகடுகள் ஆகியவற்றைக் கழற்றுவதற்கும், பொருத்துவதற்கும் திருப்புளி பயன்படுகிறது.

    தொடர்ச்சி அடுத்த பதிவில்.....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  166. Mon. 03, Apr. 2023 at 2.24 pm.

    வேதியியல் துளிகள் − 51.

    * மர ஆல்கஹால் என்பது..
    *மெத்தில் ஆல்கஹால்.*

    * வியாபாரத்துக்கு... எத்தில் ஆல்கஹாலுடன் சேர்ப்பது....
    *மெத்தனால்.*

    * சோப்புடன் எளிதில் நுரை தராத நீர்....
    *கடின நீர்.*

    * சோப்புடன் எளிதில் நுரை தரும் நீர்...
    *மென்னீர்.*

    * இரும்பு பைரைட்டுகள் ஏன் போலி நிறப் பொன் என அழைக்கப்படுவது...
    *மஞ்சளாக இருப்பதால்.*

    * ஹைட்ரஜன் என்ற சொல்....
    *கிரேக்க மொழி.*

    * மார்ஷ் வாயுவில் இருக்கும் பொருள்...
    *மீத்தேன்.*

    * ஆக்ஸிஜன் மற்றும் ஓசோனுக்கிடையே யான தொடர்பு...
    *அல்லோட்ரோப்ஸ்.*

    * பாலிமரின் வியாபாரப் பெயர்....
    *பெர்ஸ்பெக்ஸ்.*

    * ஆண்டிமணி என்ற தனிமத்தின் இலத்தீன் பெயர்....
    *ஸ்பிடியம்.*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  167. This comment has been removed by the author.

    ReplyDelete
  168. Mon. 03, Apr. 2023, at 5.40 pm.

    சைவ சித்தாந்த தொடர்ச்சி....!

    521) காண்டல் அளவையின் நான்கு வகை.....
    *வாயிற்காட்சி, மானதக் காட்சி, தன் வேதனைக் காட்சி, யோக காட்சி.*

    522) கருதல் அளவையின் இரண்டு வகைகள்.....
    *தன்பொருட்டனுமானம், பிறர்பொருட் டருமானம்.*

    523) உரை அளவையின் மூன்று வகைகள்....
    *தந்திரச் சொல், மந்திரச் சொல், உபதேசச் சொல்.*

    524) முத்திகள் நான்கு என்பது....
    *சாலோகம் , சாமீபம், சாரூபம், சாயுச்சியம்.*

    525) ஞானசமயம் நான்கு என்பது...
    *ஆத்ம தரிசனம், சிவ தரிசனம், சிவபோகம், சிவயோகம்.*

    526) பூசை நான்கு என்பது...
    *ஞானபூசை, தவபூசை, புறப்பூசை, சிவபூசை.*

    527) புருடார்த்தங்கள் நான்கு என்பது..
    *அறம், பொருள், இன்பம், வீடு.* (யோகியார்க்கு)

    528) மெய்த் தவயோகிகள் ஏழு பேர்...
    காலாங்கர், அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர், போகர் நாதர், திருமூலர்.

    529) தவமுனிகள் எழுவர் ......
    *மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், காலாங்கி, கஞ்சமலையன்.* (இவர்கள் திருவாவடு துறைத் திருமூலருடன் இருந்த தவமுனிகள்.)

    530) நாதஓசை நான்கு என்பது....
    *நுண் ஓசை, நினைவோசை, மிடற்றோசை, செவி ஓசை.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  169. Mon. 03. Apr. 2023 at 6.13 pm.

    அறிந்து கொள்வோமே !

    63- நாயன்மார்கள் பற்றிய விளக்கம்...!

    16) *கூற்றுவ நாயனார் :*
    அம்பலவாணரின் திருவடியையே தம் முடியாகக் கொண்டு ஆடியது.

    17) *சுந்தரமூர்த்தி :*
    முதலையுண்ட பாலகனை வரவழைத் தது; தமிழ்மறை தந்தது.

    18) *சேரமான் பெருமாள்(கழற்றறிவார்) :*
    சுந்தரரின் தோழர். அவருடன் விண் சென்றது.

    19) *கலியர் :*
    விளக்கு எரிக்க எண்ணெய் இன்மையால் இரத்தம் எடுக்க முயன்றது.

    20) *கோட்புலியர் :*
    சிவபூசைக்குரிய நெல்லையுண்ட சுற்றத்தாரை கொல்ல முயன்றது.

    21) *பெருமிழலைக்குறும்பர் :*
    சுந்தரர் கயிலை செல்லுதலையறிந்து, யோகத்தால் தாமும் சென்றது.

    22) *மூர்த்திநாயனார் :*
    சந்தனக்கட்டை கிட்டாமையால் கையையே அரைத்தது.

    23) *புகழ்ச்சோழர் :*
    பகைவனின் அறுபட்ட தலையில் சடைகண்டு உயிர் நீத்தமை.

    .24) *செருத்துணையார் :*
    சிவபூசைக்குரிய மலரைக் கழற்சிங்கர் மனைவி மோந்து பார்க்க அவர் மூக்கை அறுத்தது.

    25) *இளையான்குடி மாறர் :*
    மழை பெய்த போதும், விதைத்த நெல்லை அரித்து வந்து அடியார்க்கு அமுது செய்தமை.

    26) *அதிபத்தர் :*
    பொன்மீனையும் இறைவனுக்கு அளித்தல்.

    27) *புகழ்த்துணையார் :*
    சிவபூசை செய்ய இறைவன் காசு கொடுத்தமை.

    28) *குலச்சிறையார் :*
    பாண்டி நாட்டில் சைவம் புத்துயிர் பெற்றமை.

    29) *உருத்திர பசுபதி :*
    அல்லும் பகலும் குளத்து நீரில் நின்று ஶ்ரீ ருத்தம் ஓதியமை.

    30) *குங்குலியக் கலையனார் :*
    மாங்கல்யம் விற்று குங்குலியம் வாங்கியது; சாய்ந்த லிங்கத்தை நிமிர்த்தியது.

    மீண்டும் அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  170. Tue. 04, Apr. 2023 at 8.29 am

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....!

    531) சிவ நெறி பரப்ப வந்த திருமடங்கள்....
    *7.*

    532) முதன் முதலாகத் தோன்றிய மடம்...
    *திருமூலர் திருமடம்.*

    533) ஆகமம் என்பதற்கு.....
    *இறைவன் அருளிய மறைநூல்.*

    534) சமயம் ஆறு என்பது....
    *சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், செளரம், கெளமாரம்.*

    535) மூன்று வகை கடன்(கடமைகள்)...
    *மனம், வாக்கு, காயம்.*

    536) மூன்று வகை மறைப்புகள்....
    *ஆணவம், கன்மம், மாயை.*

    537) முப்புரம் என்பது....
    *ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள்.*

    538) ஆணவத்தின் நிறம் ....
    *செம்மை.*

    539) கன்மத்தின் நிறம்....
    *வெண்மை.*

    540) மாயையின் நிறம்.....
    *கருமை.*

    மீண்டும் அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  171. 50) *அரிவாட்டயர் :*
    சிவ நிவேதனப் பொருளைச், சித்தியால் தம் கழுத்தை அறுத்துக் கொண்டது.

    தொடர்ச்சி அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  172. Wed. 05, Apr. 2023 at. 4.01 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....!

    541) உயிர்கள் அடையும் மூன்று வடிவங்கள்(சரீரங்கள்).....
    *தூல, சூக்கும, காரண சரீரம்.*

    542) முப்புரத்தின் வேறு பெயர்கள்...
    *தலைக்குணம் (ஆணவம்).* *இடைக்குணம் (கன்மம்).*
    *கடைக்குணம். ( மாயை.).*

    543) குணம் மூன்று....
    *தலைக்குணம், இடைக்குணம், கடைக்குணம்.*

    544) மும்முத்தி (மூன்று முத்தி) என்பது...
    சீவமுத்தி, பரமுத்தி, சிவ முத்தி.

    545) சீவ முத்தி என்பது....
    பேருறக்கம் தாண்டி அதீத (துரியாதிதம் ஒடுக்கமாகும். (சீவன்− ஆருயிர்; முத்தி − வீடுபேறு).

    546) பரமுத்தி என்பது....
    உயிர் தன்னிலை மறந்து, பரம்பொருள் நினைவில் பொருந்தி இருப்பது.

    547) சிவமுத்தி என்பது.....
    சிவானந்தத்தில் திளைத்துச் சிவத்துடன் இரண்டறக் கலந்திருத்தல்.

    548) சொரூபம் மூன்று என்பது....
    சீவ சொரூபம்,பர சொரூபம், சிவ சொரூபம்.

    549) நிலை பேதங்கள் ஒன்பது என்பது..
    *பிரமன், திருமால், உருத்திரன், ஈசன், சதாசிவன், விந்து, நாதம், சக்தி, சிவம்.*

    550) உபசாந்தம் என்பது....
    விருப்பு வெறுப்பு அற்று இருத்தல்.

    மீண்டும் அடுத்த பதிவில்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  173. Wed. 05, Apr. 2023 at 1.26 pm.

    தட்டச்சுப் பொறி உபகரணம்...!

    8) *துவாலை :*

    நாள்தோறும் தட்டச்சுப் பொறியின் பக்கத் தகடுகள், அடிப்பலகை, உலோக மூடி ஆகியவற்றில் படிந்துள்ள தூசியையும், அழுக்கையும் துவாலை யைப் பயன்படுத்தி நீக்க வேண்டும்.

    9) *மெருகுதோல் :*

    தட்டச்சுப் பொறியிலுள்ள பளபளப்பான நிக்கல் பாகங்களையும், மெட்டல் பாகங் களையும், மெருகுதோல் உபயோகித்துச் சுத்தம் செய்தல் வேண்டும்.

    10) *குண்டூசி :*
    எழுத்தச்சுகளின் இடுக்குகளில் அடைபட்டுள்ள"தூசியையும், அழுக்கை யும்"குண்டூசியைப் பயன்படுத்தி அகற்ற வேண்டும்.

    பயன்படுத்தும்போது, எழுத்தச்சுகளூக் குப் பழுது ஏற்படாதவாறு குண்டூசியைப் பயன்படுத்த வேண்டும்.

    முக்கியமாக தட்டச்சுப் பொறியை பயன்படுத்தாமல் இருக்கும் குறுகிய நேரங்களில்கூட தட்டச்சுப் பொறியைத் துணி உறையினாலும்(Dust Cover) , பணி முடிந்த பிறகு உலோக மூடியினா லும்(Metal Cover) மூட வேண்டும்.

    உலோக மூடியைக் கொண்டு தட்டச்பொறியை மூடும்பொழுது உருளைத் தாங்கிப் பாகமானது, *இடப்புற ஓரமாகவோ வலப்புற ஓரமாகவோ நீட்டிக் கொண்டிராமல் மைய நிலையில் வைக்கப்பட வேண்டும்.*

    தட்டச்சுப் பொறியை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்லுகேயில்.... உருளைத் தாங்கியைப் பொறியின் மையமான இடத்திற்குக் கொண்டு வந்து, இடது, வலது ஓர நிறுத்திகளை நடுப்பாகத்தில் ஒன்றாகச் சேர்த்து, உருளைத் தாங்கி நகராமல் செய்யப்பட வேண்டும்.

    அடுத்து செய்ய வேண்டியது... மாற்றுவிசைப் பூட்டுவிசையை அழுத்திவிட்டு, எழுத்தச்சுக் கூடையில், சுத்தமான காகிதத் துண்டுகளை வைத்து நிரப்பி, எழுத்தச்சாணிகள் எழும்பாதவாறு செய்ய வேண்டும்.

    மேலும்... கயிற்றினால் உருளை சுழற்றிகள், இடம்விடும் சட்டம் ஆகியவற்றை விசைப்பலகையின் பக்கத் தகடுகளில் இணைக்கப்பட்ட நிலையில் கட்டப்பட வேண்டும்.

    மட்டுமின்றி, துணி உறையினால் தட்டச்சுப்பொறியை மூடி, அதை அடிப் பலகையின்மேல் சரியாகப் பொருத்தித் திருகாணிகளைக் கொண்டு முடுக்க வேண்டும்.

    பின்னர்.... உலோக மூடியை அடிப்பலகை யுடன் பொருந்தும்படி, தட்டச்சுப் பொறியை மூடி பூட்டுப் போட வேண்டும்.

    *எப்போதுமே... உலோக மூடியின் கைப்பிடியைப் பிடித்து தட்டச்சுப் பொறியைத் தூக்கக் கூடாது.*

    *அடிப்பலகையின் கீழ்ப்புறம் கைகொடுத்துத் தான் தூக்க வேண்டும்.*

    *தட்டச்சுப் பொறியைத் தூக்கிச் செல்லுகையில்...தட்டச்சுப் பொறியின் பின்பாகம், மார்பின் மீது தாங்கிய நிலையில் இருக்க வேண்டும்.* அப்பொழுது தான் தட்டச்சுப் பொறியின் பளு அவ்வளவாகத் தெரியாது.

    அடுத்து... தட்டச்சுப் பொறியைத் தலைமீது வைத்து எடுத்துச் செல்லுகை யில், அடிப்பலகையானது தலைமீது இருக்க வேண்டும்.

    மீண்டும் அடுத்தப் பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  174. Fri. 07 , Apr. 2023 at 8.17 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....!

    551) ஆகாசங்கள் ஐந்து....
    பூதாகாசம், குணமய ஆகாசம், குணரசித ஆகாசம், சூரியாகாசம், சித்தாகாசம்.

    552) பரம்பொருள் பொருந்தியுள்ள ஒன்பது நிலைகள்....
    விசுவன் = உலக வடிவானவன்.
    தைசதன் = நிழல் வண்ணமானவன்.
    பிரஞ்ஞன் = பேரறிவுடையவன்.
    விராட்டன் = உலக முதல்வன்.
    பொன்கர்ப்பன் = பொன் வண்ணன்.
    அவ்யாகிர்தன் = பிரிப்பில்லாதவன்.
    இதயன் = கலப்புடையவன்.
    பிரசாபத்யன் = ஆருயிர்களுக்குத் தலைவன்.
    சாந்தன் = தண்ணருள் புரிவோன்.

    553) மலைகள் எட்டு என்பது...
    கயிலை, இமயம், மந்தரம், விந்தியம் (வித்தம்), நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம்.

    554) ஆதாரம் ஏழு என்பது....
    மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, சகஸ்ரதளம்.

    555) விரிகடல் ஏழு என்பது....
    உப்புக்கடல், கருப்பஞ்சாற்றுக்கடல், மதுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், சுத்தநீர்க் கடல்.

    556) நமது உடம்பிலுள்ள ஒன்பது வாசல்கள் என்பவை....
    வாய், கண்வழி இரண்டு, செவித்துளை இரண்டு, மூக்குத் துவாரங்கள் இரண்டு, எருவாய், கருவாய் ஆக ஒன்பது.

    557) இசை ஏழு என்பது....
    சட்ஜம் − குரல். ( ச )
    ரிஷபம் − துத்தம். ( ரி )
    காந்தாரம் − கைக்கிளை. ( க )
    மத்திமம் − விளரி ( ம )
    பஞ்சமம் − தாரம். ( ப )
    தைவதம் − உழை ,( த )
    நிஷாதம் − இனி ( நி )

    558) சுரம் ஏழு என்பது....
    ச, ரி, க, ம, ப, த, நி .

    559) கணங்கள் பதினெட்டு என்பது....
    கதிரவன், வாயு, தேவர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், கிம்புருடர், திருதர், காந்தருவர், இயக்கர், பூதர், விஞ்சையர், பேயர், முனிவர், உரகர், போகபூமியர்.

    560) உலகம் எல்லாம் அழிந்தாலும், அழியாமல் நிற்கும் மூன்று....
    *சீவன் , பரன், சிவன்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  175. Fri. 07, Apr. 2023 at 9.13 am.

    இன்று நாம்.... தட்டச்சுப் பொறியில் பயன்படுத்தப்படும் நாடாவைப் பற்றித் தெரிந்து கொள்வோம்....!

    தட்டச்சுப் பொறி நாடா இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகிறது.

    அவை.. *ரெக்கார்டு நாடா; காப்பிங் நாடா.*

    பொதுவாக தட்டச்சுப் பொறியில்... ரெக்கார்டு நாடா தான் பயன்படுத்தப் படுகிறது.

    *இந்த நாடாவின் பயன் யாதெனில், தாளில் பெறப்படும் எழுத்தச்சுகள் நீண்ட நாட்களுக்கு அழியாமல் இருக்கும்.*

    *காப்பிங் நாடாவினால் பெறப்படும் எழுத்தச்சுகள், சீக்கிரம் மறையும் தன்மையுடையன.*

    தட்டச்சுப் பொறி நாடா பலவித வண்ணங்களில் கிடைக்கிறது.

    கறுப்பு, ஊதா, நீலம், பச்சை என உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இவற்றில்.. கறுப்பு நிறம் ரெக்கார்டு நாடா வகையையும், ஊதா நிறம், காப்பிங் நாடா வகையையும் சேர்ந்ததாகும்.

    இவ்வித நாடாக்கள் இரண்டு விதத்தில் தயாரிக்கப்படுகின்றன.
    அவை ... ஒற்றை வண்ண நாடா; இரட்டை வண்ண நாடா.

    ஒற்றை வண்ண நாடாவானது... ஒரே ஒரு நிறத்தைத் தான் பெற்றிருக்கும். அதாவது... கறுப்பு, பச்சை, நீலம் போன்ற நிறம்.

    இரட்டை வண்ண நாடாவானது... இரண்டு வித நிறங்களைப் பெற்றிருக்கும். இதன் இரண்டாவது நிறம் சிவப்பு.

    உதாரணமாக.... கறுப்பு − சிவப்பு;
    ஊதா − சிவப்பு; நீலம் − சிவப்பு இவ்வாறு அமையப் பெற்றிருக்கும்.

    இவ்வித நாடாக்களில் உள்ள வண்ணங்களை, நாடா நிலைக்குறிகாட்டி யைப் பயன்படுத்தி, நமக்குத் தேவையான வண்ண எழுத்தச்சுகளைப் பெறலாம்.

    கறுப்பும், சிவப்பும் கொண்ட, இரட்டை வண்ண நாடாவில், கறுநிறப் பாகமானது, மேலே இருக்குமாறு, தட்டச்சுப் பொறி நாடாக் கிண்ணத்தில் பொருத்த வேண்டும்.

    பொதுவாக... நாடா அரை அங்குல (13mm) அகலமாகவும், 7 முதல் 11 மீட்டர் நீளமாகவும் இருக்க வேண்டும்.

    அப்பொழுது தான் நாடாவானது, நாடாச் சக்கரத்தில் சரிவர சுற்றும் நிலையில் இருக்கும்.

    அதற்கு மேற்பட்ட நீளமான நாடாவைப் பொருத்தினால்... நாடாவானது, நாடா சக்கரத்தினின்று வெளியே வந்து சரிவர இயங்க முடியாத நிலையைப் பெறும்.

    தொடர்ச்சி அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  176. Fri. 07, Apr. 2023 at 1.35 pm.

    ஆணவம் ஒளிந்த இடம் ....!

    *திருப்பறியலூர் :*

    இதற்கு மற்றொரு பெயர்.... *கீழப்பரசலூர்*

    *தக்கன் தலையைக் கொய்த தலம்.*

    வணங்குவோர்க்கு வீரமும் புகழும் கிட்டும்.

    உற்சவர் விக்கிரகத்தில் பெருமான் திருவடியில் தக்கன் உள்ள அற்புதக் காட்சியை அங்கு காணலாம்.

    கதை... !

    நாடாளும் மன்னனுக்குப் *பிரசாபதி* என்ற பெயரும் உண்டு.

    இங்கே மன்னன் தக்கன் (தட்சன்) தாட்சாயிணியாகப் பிறந்த பார்வதி தேவிக்கு தந்தையானவன்.

    இவன் ஒரு யாகம் செய்தான். அதற்கு முதல் பூசை பெற ஈசனை அழைக்காது அவமதித்தான். இது கொலைக் குற்றம் போன்றது(கொலையில் பிழைத்தவன்).

    எனவே, சிவபெருமான் சினங்கொண்டு, யாகம் நடக்கும் இடம் சென்று, *தட்சன் தலையை வெட்டி,* யாகத்தீயில் போட்டான்.

    பிறகு... பார்வதி தேவியும், மற்றவர்களும் வேண்ட, *அங்கிருந்த ஒரு ஆட்டின் தலையைத் தட்சன் உடலில் பொருத்தி* இவன்சில காலம், இப்படியே இருக்குட்டும் என்று அருளிச் செய்தான்.

    ஆகவே, *தான் எனும் ஆணவம் தக்கன் அழிந்த தலம்... திருப்பறியலூர்* ஆகும்.

    பாடல்...!

    கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
    தலையைத் தடிந்திட்டுத் தான்அங்கி இட்டு
    நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
    தலையைப் பரிந்திட்டுச் சந்திசெய் தானே.

    தடிந்து − துண்டித்து
    அங்கியிட்டு − நெருப்பில் இட்டு
    சந்தி செய்தான் − பொருத்தினான்.

    முக்கியக் குறிப்பு :

    திருக்கடவூர், திருக்குறுக்கை, திருப்பறியலூர் (பறியலூர்) இம்மூன்றும் தருமை ஆதீனக் கோயில்கள்...என்பது அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

    செம்பொனார் கோவிலிருந்து (நான்கு ரோடு பிரியுமிடம் அண்ணாசாவை அருகில்) நாகப்பட்டினம் செல்லும் சாலையில் 2.கி.மீ. சென்று பின்னர் கீழப்பரசலுர் கைகாட்டி பார்த்து, சிறிய சாலையில் 5−கி.மீ செல்ல வேண்டும்.

    சிவாச்சாரியார் இல்லம் அருகிலேயே உள்ளது. சென்று வணங்கி வாருங்கள்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  177. Fri. 07, Apr. 2023 at 1.11 pm.

    *AGE OF THE FOUR SAINTS :*

    Saint Appar (Thiru-Naavu-k-karasu Swaamigal) was blessed eighty one years of life while Saint Maanickavaachaka Swaamigal attained Para Mukthi at thirty two.

    Here, in this earth Saint Sundaramoorthy Swaamigal lved upto eighteen years, while Saint Thiru-Gnaana-Sambanda Swaamigal had a spell of life for sixteen years.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  178. Fri. 07, Apr. 2023 at 3.17 pm.

    அறிந்து கொள்வோமே...!

    63− நாயன்மார்கள் பற்றிய விளக்கம் தொடர்ச்சி....!

    51) *அப்பூதியடிகள் :*
    மகன் இறந்ததை மறைத்து, அப்பருக்கு அமுது படைக்க எண்ணியது.

    52) *கலிக்கம்பர் :*
    பழைய வேலையாள் அடியார் வேடத்தில் வர வணங்கியது.

    53) *சண்டேசுரர் :*
    அபிஷேகக் குடப்பாலைச் சிதைத்த தந்தையின் கால்களை வெட்டியது.

    54) *கண்ணப்பர் :*
    காளத்தியப்பனுக்குக் கண் அப்பியது.

    55) *திருநீலகண்டர் :*
    இளமையில் மனைவியைத் தீண்டாது இல்லறம் நடத்தியது.

    56) *எறிபத்தர் :*
    பூக்குடலையை இழுத்துச் சிதறச் செய்த பட்டத்து யானையைக் கொன்றது.

    57) *காரிநாயனார் :*
    கோவை பாடி பொருள் பெற்று, ஆலயப் பணி புரிந்தது.

    58) *கோச்செங்கண் :*
    சிலந்தியாக இருந்து மன்னனாக மாறி பல ஆலயங்கள் கட்டியது.

    59) *கணநாதர் :*
    சம்பந்தரை வழிபட்டு கயிலை அடைந்தது.

    60) *காரைக்கால் அம்மையார் :*
    மாம்பழம் பெற்றது. பேய் உருவம் கண்டது.

    61) *தண்டியடிகள் :*
    குளப்பணி செய்து கண் பெறல். சமணரை வென்றது. சைவத்தை நிலை நிறுத்தியது.

    62) *நேசநாயனார் :*
    அடியார்க்கு ஆடை வழங்கியது.

    63) *முனையடுவார் :*
    கூலிக்குப் போர் செய்து அடியார் வழிபாடு ஆற்றியது.

    மீண்டும் அடுத்த பதிவில்...

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  179. Sat. 08, Apr. 2023 at 6.01 am

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி...

    561) ஐவகைத் துன்பங்கள்....
    *சினம், செருக்கு, ஆசை, அவா, இருள்*

    562) தீய குணங்கள்(பகை குணங்கள்) ஆறு என்பது....
    *காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்.*

    563) நிலைபேதங்கள் ஒன்பது....
    *பிரமன், திருமால்,உருத்திரன், ஈசன், சதாசிவன், விந்து, நாதம், சக்தி, சிவம்.*

    564) உபசாந்தம் என்னும் நிலையை அடைய உள்ள பத்து படிகள்....
    1) *ஆணவம் விடுதல்*
    2) *தன்னை அறிதல்*
    3) *இதையும் விடுதல்*
    4) *நனவில் அதீதம்*
    5) *வியாத்தம்*
    6) *சிவமாதல்*
    7) *சிவானந்தத்துள் தோய்தல்*
    8) *தான் விடுபடல்*
    9) *ஆனந்த அனுபவம் அடைதல்*
    10) *அடைந்தபின் அதையும் விடுதல்.*

    565) உலகம் எல்லாம் அழிந்தாலும், அழியாமல் நிற்கும் மூன்று....
    *சீவன் , பரன், சிவன்.*

    566) மூவர் என்பது...
    *சகலர், ப்ரளயாகலர், விஞ்ஞானகலர்*

    567) இம் மூவர் இருக்கும் மாளிகை....
    *பிரகிருதி மாயை, அசுத்த மாயை, சுத்த மாயை .*

    568) அருட்சக்திகள் ஐந்து....
    *இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, ஆதிசக்தி, பராசக்தி.*

    569) காற்றுகள் பத்து என்பது.....
    *உயிர்க்காற்று, மலக்காற்று, ஒலிக்காற்று, நிரவு காற்று, தொழிற்காற்று, தும்மல் காற்று, விழிக் காற்று, கொட்டாவிக் காற்று, வீங்கற் காற்று, இமைக்காற்று.*

    570) முந்நீர் (கடல்) என்பது.....
    *ஆற்றுநீர், ஊற்று நீர், மழை நீர்.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansiannan60@gmail.com.

    ReplyDelete
  180. Sat. 08, Apr. 2023 at 6.34 am.

    கரி உண்ட விளாம்பழம் .....!

    விளாமரத்தைப் பற்றும் ஒரு நோய்க்கு யானை நோய் என்று பொருள்.

    கரி − யானை.
    கரி உண்ட − யானை நோய் பீடிக்கப் பட்ட விளாமரத்தின் பழம்.

    இந்த நோய் பற்றிய விளாமரத்தின் பழம், ஓடு முழுமையாக உடைபடாது இருக்கும் நிலையிலும்,உள்ளிருக்கும் பழம், சதைப் பகுதி சிறிதும் இல்லாது, வெறும் ஓடு மட்டுமே இருக்கும்.

    இதைப்போல சிவனருளில் பொருந்திய சீவன் தன்னை இழந்து நிற்கும்.

    இந்த நிலையே... கரிஉண்ட விளங்கனி.. ஆகும்.

    பாடல்...!

    கரிஉண்ட விளவின் கனிபோல் உயிரும்
    உரிய பரமும் முன்ஓதும் சிவமும்
    அரிய துரியமேல் அகிலமும் எல்லாம்
    திரிய விழுங்கும் சிவபெரு மானே.

    துரியம் − உறக்கம் .
    அகிலம் − உலகம்
    திரிய − கெட.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  181. Sat. 08, Apr. 2023 at 8.05 am.

    உயிரியல் துளிகள் − 51

    * மரபிற்கு காரணமான மூலக்கூறுகள்....
    *D.N.A. மூலக்கூறுகள்.*

    * உடலின் பல்வேறு உறுப்புகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் பகுதி....
    *மூளை.*

    * மனித உடலின் தலைமைச் சுரப்பி....
    *பிட்யூட்டரி.*

    * சாதாரண மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு துடிப்பது....
    *70 முறை.*

    * மனித இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவின் சதவிகிதம்.....
    *65%.*

    * கண்ணிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்பின் பெயர்......
    *பார்வை நரம்பு.*

    * பெரி பெரி நோயால் பாதிக்கப்பட்டவர் எடுத்துக் கொள்ள வேண்டிய கூடுதல் உணவு.....
    *வைட்டமின் − சி.*

    * மாலைக்கண் நோய்க்குக் காரணமான வைட்டமின்......
    *வைட்டமின் − ஏ.*

    * டிரகோமா என்னும் நோயால் பாதிக்கப் படும் பகுதி......
    *கண்கள்.*

    * சீழ்ப்பல் நோயால் (பயோரியா) பாதிக்கப்படும் பகுதி....
    *பல்லின் ஈறுகள்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  182. Sat. 08, Apr. 2023 at 6.44 pm.

    திருவருட்பயன்....!

    *திருவருட்பயன்... காப்புச் செய்யுள் ...!*

    நற்குஞ்சரக் கன்று நண்ணின் கலை ஞானம்

    கற்குஞ் சரக்கன்று காண்.

    *இதன் பொருள்....!*

    நல்(நற்) − அருள் வடிவான

    குஞ்சரக்கன்று − யானைக் கன்று ஆகிய விநாயக மூர்த்தியை

    நண்ணின் − புகலிடமாக அடைந்தால்

    கலைஞானம் − மெய்ந்நூல் அறிவு

    கற்கும்(கற்குஞ்) − வருந்திக் கற்றுப் பெறும்

    சரக்கு − பொருள்

    அன்று − ஆகாது (அஃது எளிதில் வரும்)

    காண் − மனமே இதனை நீ உணர்வாயாக.

    *இதன் விளக்கம்...!*

    குஞ்சரம் − யானை.

    யானை முகத்தினை உடைய பிள்ளையாரை *யானைக் கன்று* என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

    ஏனெனில்... இளமை மாறி முதுமையடை தலும், நலிவுறுதலும் நம்மவர்(மனிதனின்) நிலை. ஆயின் *பெருமானுக்கு அந்நிலை இல்லை.* அவர் மாறாதவர். அதாவது என்றும் ஒரு தன்மையராய் இருப்பவர்; என்றும் இளமையானவர். அதுபற்றியே அவர் *கன்று* எனப்பட்டார்.

    *நண்ணுதல் என்பதற்குச் சேர்தல் என்பது பொருள்.*

    அதாவது... நற்குஞ்சரக் கன்றைச் சேர்தவலா வது, அப்பெருமானை இடைவிடாது நினைத் தலே யாம்.

    பொதுவாக... நம் எண்ணத்தில் இப்பொழுது உலகியல் பொருள்கள் தான் இடம் பெற்றுள்ளன. *வீடு, நிலம், மனைவி, மக்கள், செல்வம், பதவி இதைப் பற்றின எண்ணங்களே நம் சிந்தனையில் (நெஞ்சில்) நிரம்பியுள் ளன.

    இது... நிலையற்ற உலகியல் பொருள் களுக்கு நாம் எவ்வளவு முதன்மைக் கொடுத்து வருகிறோம் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

    இந்நிலை மாறி... உலகியல் மீது வைத்துள்ள பற்று படிப்படியே ஒழிய வேண்டும்.

    இறைவன் ஒருவனே நம் வாழ்வுக்கு முதலாக இருப்பவன். அவனே எல்லா உயிர்களுக்கும் *புகலாக* உள்ளவன்.

    அவனையே இடைவிடாது எண்ண வேண்டும். ,அவனையே நாம் பற்றாகப் பற்ற வேண்டும்.

    *மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல இனமலர் கையிற் கொண்டு* அப்பெருமானை வழிபடல் வேண்டும்.

    இவ்வாறு... மனம், மொழி, மெய்களால் அவனை வழிபடுதலையே... *நண்ணுதல்* என ஆசிரியர் குறிப்பிடு கிறார்.

    இவ்வாறு , இறைவனை உண்மையாக வழிபட்டு வருவோர்க்கு *மனமாசுகள் அகலும். உள்ளத் தூய்மை உண்டாகும். அவரே பக்குவம் உடையவர்..அவரே மெய்ந்நூலறிவைப் பெறுதற்கு உரியவர்.*

    *கற்கும் சரக்கு அன்று...!*

    பொருளியல்பை உள்ளவாறு உணர்தலே ஞானம் ஆகும்.

    இந்த ஞானத்தைத் தரும் மெய்ந்நூல்களை, ஒருவர்...தாமே முயன்று, கற்று, ஞானத்தைப் பெறுதல் என்பது... இயலாது.

    ஆசிரியன்மார்களை அடைந்து, வருந்திக் கற்று ஞானத்தைப் பெறலாம் என்பதும் இயலாது.

    காரணம்... அவர்கள் உலகநூற் பொருளை உணர்த்த வல்லவரே யன்றி... ஞானநூற் பொருளை உணர்த்தும் தகுதி உடையவர் அல்லர்.

    அப்படியென்றால்... ஞானத்தை எவ்வாறு தான் பெறுவது.... என்றால்,

    *மூத்த பிள்ளையாரது திருவடிகளை, இடையறாது பற்றி நின்று வழிபட்டு, வரின்.. அவர் உள்நின்று உணர்த்த மெய்ந்நூலறிவு எளிதில் வந்தடையும் என்பதே.*

    அதாவது... *வழிபாட்டின் மூலம் பக்குவம் எய்திய உயிருக்கு இறைவன் தானே ஞானத்தை உணர்த்துவான்*

    என்பது கருத்து.

    அடுத்து... செய்யுளின் இறுதியில்.. *காண்* என்ற சொல் உள்ளது.*(முன்னிலைச் சொல்)* அதற்கு, *அறிவாயாக* என்று பொருள்.

    இச்செய்யுளில் ஆசிரியர்.. *தம் நெஞ்சை முன்னிலைப்படுத்துகிறார்.*

    அப்பெருமானை , உள்ளம் உருகி வழிபட்டு, இந்நூலைக் கேட்பாயாயின், அவனருளால் *மெய்யறிவாகிய ஞானம் உனக்கு எளிதில் கைகூடும்* என்று கூறியதாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா ?

    *இக் காப்புச் செய்யுளின் கருத்து இதுவே.*

    *திருச்சிற்றம்பலம்.*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  183. This comment has been removed by the author.

    ReplyDelete
  184. Sat. 08, Apr. 2023 at 7.43 pm.

    மீளா அடிமை....!

    *கண் ஒளி மங்கியோர் நல்லொளி பெற இத்திருப்பதிகத்தை உள் நிறைந்த மனத்தோடு பாராயணம் செய்துவர... கண்ணொளி பெறுவர்.

    பாடல்...!

    மீளா அடிமை எனஎடுத்து
    மிக்க தேவர் குலம் எல்லாம்
    மாளாமே நஞ்சு உண்டருளி
    மன்னி இருந்த பெருமானைத்
    தான் ஆதரிக்கும்மெய் அடியார்
    தமக்குஆம் இடர்நீர் தரியீர் என்று
    ஆன் ஆம் திருத்தோழைமைத் திறத்தால்
    அம்சொல் பதிகம் பாடினார்.

    *திருவாரூர் (திருமூலட்டானம்.)...!*

    பெரிய புராணத்தின் காப்பிய நாயகன் *சுந்தரர்* ஆவர். *தடுத்தாட்கொண்ட நாதர் என்ற பெயரும் இவருக்குண்டு.

    ஆலால சுந்தரர், திருக்கயிலையில் விதியின் பால் இரு மங்கையர்களை நோக்கிக் காதல் வயப்பட, அவர்களும் சுத்தரர்பால் காதல் கொண்டனர். இதனால் பூலோகத்தில் பிறந்து, இன்பத்தில் கலந்திருந்து பின்னர் இங்கு வருக என்று இறைவன் கட்டளையிட்டார்.

    சுந்தரர் மனம் வருந்தி, என்னைத் தடுத்தாட்கொண்டு அருள் புரிய வேண்டும் என்று பாடினார்...(இப்பாடல் துவக்கம்... கைகள் அஞ்சலி கூப்பிக் என தொடரும்..)

    இவ்வாறு ஆலால சுந்தரர், பூலோகத்தில் பிறந்து, இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, பின்பு ஞானம் பெற்றுப் பதிகங்களைப் பாடுகிறார்.

    திருவாரூர் சிறப்பு ....!

    திருவாரூர் மாவட்டத்தின் தலைநகர் திருவாரூர். பிறக்க முக்தி தரும் தலம். *சுந்தரரும் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்* என்றார்.

    பஞ்சபூதத் தலங்களில் திருவாரூர் *மண்* − ணிற்குரியது. (சிலர் காஞ்சி என்பார்கள் இரண்டுமே கொள்ளல் தவறில்லை)

    *சிவபெருமான் நடனமாடிய சப்தவிடத்தலங்கள் ஏழினுள் முதன்மையானது திருவாரூர்.(வீத விடங்கர்−அஜபா நடனம்)*

    *திருவாரூர் தேரழகு என்பது உலக வழக்கு. நாட்டிலேயே பெரிய தேர் ஆரூர் தேர் தான்.*

    *திருத்தொண்டத் தொகை தோன்றிய இடம். விறமிண்டர், நமிநந்தி, செருத்துணையார், தண்டியடிகள், கழற்சிங்கர் போன்ற நாயன்மார்கள் முத்தி பெற்ற தலம்.*

    *பின்னும் சிறப்பாக.... சுந்தரர் பரவையாரை மணந்த இடம்.* அவர்தம் வலக்கண் ஒளி பெற்ற இடமும் இத்திருவாரூரே. நம்பியாரூரரிடம் சேரமான் நட்புக் கொண்ட இடம்.*

    நால்வரும் போற்றிப் பணிந்த புனிதத் தலம்.

    *முதல் ஏழு திருமுறைகளிலும் இடம் பெற்ற நற்றவத்தலம்.*

    *பஞ்ச பாசுரம்... (தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.) பெற்ற தலங்கள் இரண்டு.*
    *ஒன்று திருவாரூர். பிறிதொன்று சிதம்பரம்.*

    *திருவாரூர் திருமூலட்டானம் எனக் கூறப்படுதல். கருதத்தக்கது.

    திருமுறைகளைத் தொகுத்தும், செப்பேடு செய்வித்தும், தியாகேசர் சந்நிதியில் ஏற்றுவித்தவர்களான *அபயகுலசேகர சோழர்* (11−ஆம் திருமுறை வரை) *அநபாய சோழர்* (பெரியபுராணத்தை 12−ஆம் திருமுறையாக வகுத்தவர் ) ஆகியோர் அரசோச்சிய இடம்.

    கிழக்குக் கோபுரத்திற்கு அருகில் பரவையார் கோயில் உள்ளது. கோயிலுக்கு எதிரே... *கமலாலயம்* எனும் குளம் மிகப் பெரியது. மூன்று நாட்கள் தெப்போற்சவம் நடைபெறுவது சிறப்பு.

    கிழக்குக் கோபுரத்திற்கு அப்பால், *மனுநீதிச் சோழன் தேர் கல்லினால் உள்ளது.*

    *அதிகமான தேவாரப் பதிகங்களைக் கொண்ட.. இரண்டாம் இடத்தினைத் திருவாரூர் பெறுகிறது.*

    திருச்சிற்றம்பலம்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  185. Sun. 09, Apr. 2023 at 4.31 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி...!

    571) சிவதத்துவங்கள் ஐந்து....
    *சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம், சக்தி, சிவம்.*

    572) ஆகமங்கள் இறைவனால் அருளப் பெற்றவை என்பார் கூற்றினை உண்மை விளக்கம் கொண்டு நிறுவும் பாடல்....
    *உண்மை விளக்கம் ...3−வது பாடல்.*

    573) ஏன்ற வினை என்பது...
    *கொண்டு வந்த கர்ம வினை.*

    574) இடையேறும் வினை என்பது...
    *இப்பிறப்பில் நாம் சேர்த்துக் கொள்ளும் ஆகாமியம்.

    575) இந்த ஏன்ற வினை, இடையேறு வினை என்ற இக்கருத்து அமைந்துள்ள பகுதி...
    *திருவருட்பயன்...10−ஆம் அதிகாரமாக விளங்கும் அணைந்தோர் தன்மையில் உள்ளது.*

    576) ஈண்டு இருவினைகள் என்பன....
    *நல்வினை, தீவினை.*

    577) நீடும் இருவினைகள் நேராக இத்தொடர் அமைந்துள்ள பகுதி...
    *திருவருட்பயன்... ஆறாம் அதிகார மாகிய அறியும் நெறியில் (இருவினை ஒப்பு) 51−வது செய்யுளாக அமைந்துள்ளன.*

    578) நேராக நேர்தல் என்பது....
    *வேற்றுமையின்றி சமமாகப் பாவிக்கும் உணர்வு.

    579) கூடும் இறைசக்தி என்பது...
    சத்திநிபாதம் ஆகிய அருட்பதிவு.

    580) நிபாதம் என்பதில் பாதம் என்னும் சொல்லின் பொருள்....
    *வீழ்ச்சி* (நி என்பது மிகுதியை உணர்த்துகிற ஒரு சொல்)

    மீண்டும் அடுத்த பதிவில்...

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  186. Sun. 09, Apr. 2023 at 7.09 am.

    தட்டச்சுப்பொறி நாடாவின் தொடர்ச்சி...

    தட்டச்சுப் பொறி நாடா பற்றிப் பார்த்து வருகிறோம்...!

    நல்ல தரமான நாடாவையே எப்பொழுதும் பயன்படுத்த வேண்டும்.

    தரமான நாடா என்பது... சீக்கிரமாக உலராத, ஈரப்பதமானதாக உடையதாக இருத்தல் வேண்டும்

    சீக்கிரத்தில் தேய்மானமோ, சேதமோ அடையாத நிலையில் இருக்க வேண்டும்.
    அதற்கு நாடாவின் துணி தரமுள்ளதாக இருக்க வேண்டும்.

    மட்டமான துணியாக இருந்தால்...நாடா சீக்கிரம் கிழிவதோடு, நூல்நூலாக வெளிவந்து, தட்டச்சு செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தும்.

    நாடாவிலுள்ள மையானது நாடா முழுமைக்கும் ஒரே சீரான நிலையில் பரவியிருக்க வேண்டும்..

    நாடாவின் மையுள்ள நிலையை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். அவை....
    நடுத்தரமான மையுள்ள நாடா; அதிக மையுள்ள நாடா.

    இவற்றில் நடுத்தரமான மையுள்ள நாடாவே சிறந்ததாகும். ஏனெனில், இவ்வித நாடாக்கள் நீண்ட நாட்களுக்கு வருவதோடு, ஒரேவிதமான எழுத்தச்சுப் பதிவுகளை உண்டாக்கக் கூடியவை.

    அதிக மையுள்ள நாடாவானது, நீண்ட நாட்களுக்குப் பயன்படுமென்றாலும் எழுத்தச்சுகள் நன்றாக விழாது.

    தட்டச்சுப் பொறியை இயக்காத நேரத்தில் எப்பொழுதும் அதை மூடியே வைக்க வேண்டும். இதனால் நாடாவானது காற்றுப்பட்டு உலராமல் பாதுகாக்கப்படுகிறது.

    நாடாவின் மேல், கீழ் ஆகிய எல்லாப் பகுதிகளையும் நாடா நிலைக் குறிகாட்டியின் உதவி கொண்டு பயன்படுத்த வேண்டும்.

    நாடா உலர்ந்து விட்டதாகத் தெரிந்தால், அதை நாடா சக்கர வளையத்துடன் கழற்றிக் குளிர்ந்த இடத்தில் வைத்துத் திரும்பவும் அதை நாடா கிண்ணத்தில் பொருத்திப் பயன்படுத்தலாம்.

    தட்டச்சு செய்யும்பொழுது சீரான குறைந்த நிலைத் திறனைப் பயன்படுத்துவதன் மூலம், நாடாவின் மையானது நீண்ட காலத்திற்குப் பயன்படும்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  187. Sun. 09, Apr. 2023 at 7.47 pm.

    சினத்தை அழித்த இடம்.

    வழுவூர்....!

    தாருகாவனத்து ரிஷிகள் பரமனுக்கு எதிராகச் செய்த யாகத்தில் ஒரு யானை தோன்றியது.

    அந்த யானையைச் சிவன் கொன்று, அதன் தோலை ஆடையாகக் கொண்டு, கரி உரி போர்த்த மூர்த்தியானார்.

    பாடல்....!

    முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்
    அத்தி யூரியர(ன்) ஆவ(து) அறிகிலர்
    சத்தி கருதிய தாம்பல தேவரும்
    அத்தீயீன் உள்ளெழுந்(து) அன்று கொலையே.

    பொருள்....!

    முத்தீ − ஓமத் தீ, வேள்வித் தீ, யாகத் தீ ஆகிய மூன்று தீக்களை வளர்த்து,மந்திரம் ஒலிக்க நெருப்பை வளர்த்துச் செய்கிற வேள்வியுள், யானை போன்ற காரிருளைக் கிழித்துக் கொண்டு,ஒளி உருவாய் வெளிப்படுவான் இறைவன் என்பதை, வேள்வியேச் செய்தவர்கள் அறியவில்லை.

    அத்தி − யானை
    உரி − உரித்துக் கொண்டு
    அரன் − சிவன்

    வேள்வி மூலம் புதிய சக்தியைப் பரமனுக்கு எதிராகப் பெற நினைத்த தேவர்கள் அத்தீயீல் விழுந்தே மடிந்தார்கள்.

    சிவன் சினத்தை அழித்த இடம் வழுவூர்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  188. Mon. 10, Apr. 2023 at 5..45 am.

    அறிந்து கொள்வோமே...!

    * கண்டராதித்தர் :

    முதற்பராந்தக சோழனுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்து சோழநாட்டை ஆண்டவர். சிறந்த *சிவபக்தர்.* தில்லைக்கு ஒரு *திருவிசைப்பா பதிகம் பாடியுள்ளார். காலம் 10−ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி. இவரின் மனைவி செம்பியன்மாதேவி.

    * கல்லாடர் :

    கல்லாடர் பற்றிச் சங்க காலத்தவர், பிற்காலத்தவர் என இருதிறப்படுத்து வர்.
    இவர் திருக்கண்ணப்பத்தேவர் திருமறம் என்ற ஒரேநூல் அருளியுள்ளார். இது 38− அடிகளைக் கொண்டுள்ளது. நக்கீர தேவரும் கண்ணப்பத்தேவர் திருமறம் அருளியுள்ளார். அவர் பாடல் நெடும்பாட்டு−158 −அடிகளை உடையது.
    "நில்லுகண் ணப்ப நில்லுகண் ணப்பஎன்
    அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப"
    என்ற தொடர்கள் நக்கீரர் திருமறத்திலேயே உள்ளன.

    * கபிலர் :

    கடைச்சங்கப் புலவராகிய கபிலரும் இவரும் ஒருவரே எனக் கருதுவோர் உளர். பதினொன்றாம் திருமுறையில் மூத்தநாயனார் திருஇரட்டை மணிமாலை, சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி ஆகிய மூன்று பிரபந்தங்களை அருளியவர் இவர்.

    இவரது காலம்... விநாயகர் வழிபாடு தமிழகத்தில் கி.பி.7−ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் பரவலாக இடம் பெற்றிருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுவதால்... *மூத்த நாயனாராகிய விநாயகர்மீது பிரபந்தம் அருளிய இவரது காலம் கி.பி.8−ஆம் நூற்றாண்டுக்குப் .பிற்பட்டவர் என்கிறது.

    இவர் அருளிய யாப்பு வகைகள் பிற்காலத்தன. ஆயினும் இவர்தம் நூல்களின் சொல்லாட்சிகள் பிற்காலத்தனவாய் இருத்தலானும் இவரும் கி.பி.9−ஆம் நுற்றாண்டினை அடுத்து வாழ்ந்தவர் ஆதல் கூடும் எனப் பேராசிரியர். திரு.க. வெள்ளைவாரண − னார் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.

    * அநபாய சோழன் :

    தில்லை நடராசப் பெருமானின் திருப்பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தவன் இரண்டாம் குலோத்துங்கன். இவனுக்கு *அநபாயன்* என்ற பெயரும் உண்டு. சேக்கிழார் காலத்துச் சோழமன்னன்.

    சண்டேசர் புராணம் எட்டாம் பாட்டில்.. "சென்னி அபயன் குலோத்துங்கச் சோழன் தில்லை திருஎல்லை பொன்னி மயமாக்கிய வளவர்... புவிகாக்கும் மன்னர் பெருமான் அநபாயன்" என்று சேக்கிழார் கூறுவதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

    * திருவாலிஅமுதனார் :

    திருமயிலையில் வைணவ அந்தணர் குலத்தில் தோன்றியவர். தில்லை நடராசப் பெருமானையே தம் குலதெய்வமாகக் கொண்டு சிவபக்தியில் சிறந்து விளங்கினார்.
    திருவாலியமுதனார் பாடிய திருவிசைப்பா பதிகங்கள் நான்கு ஆகும். இவையனைத்துமே கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியன வாகும்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  189. Mon. 10, Apr. 2023 at 4. 05 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....!

    581) இந்திரியங்கள் என்றால்....
    *கருவிகள்.*

    582) கன்மேந்திரியங்கள் என்றால்.....
    *தொழிற் கருவிகள்.*

    583) ஞானேந்திரியங்கள் என்றால்.....
    *அறிவுக் கருவிகள்.*

    584) கரணங்கள் என்றால்....
    *கருவிகள்.*

    585) அந்தகரணங்கள் என்றால்....
    *உட்கருவிகள்.* (கண்ணுக்குப் புலப்படாதது).

    586) அந்தகரணங்கள் ....
    *4.*

    587) அந்தகரணங்கள் நான்கு என்பவை.....
    மனம், புத்தி, சித்தம், அகங்காரம்

    588) மனம் என்பது....
    *ஒன்றை விரும்பும்.*

    589) புத்தி என்பது...
    *ஆராயும்.*

    590) சித்தம் என்பது...
    *ஒன்றைப் பதிவு செய்யும்.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  190. Mon. 10, April 2023 at 7.53 pm.

    *உண்மை விளக்கம்.*


    திருவதிகை மனவாசகம் கடந்தார் அருளிய ..... *உண்மை விளக்கம்.*

    இந்நூல் மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படும் சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்றாகும்.

    இது சிவஞானபோத ஆசிரியரான மெய்கண்ட தேவரின் 49 மாணவர்களில் ஒருவரான *திருவதிகை என்னும் ஊரைச் சேர்ந்த மனவாசகம் கடந்தார் (1225−1275) என்பவரால் இயற்றப்பட்டது.

    வினா விடை வடிவில் அமைந்த இந்நூல் *53−வெண்பாப் பாடல்* களால் ஆனது. *ஐந்து பொருளின் தன்மையை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது.*

    *திருவாசகத்தில்... மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் அருளிய 34−வது பதிகத்தில உயிருண்ணிப்பத்து்− சிவானந்தம் மேலிடுதல் (திருவருளில் கலந்து திளைப்பது) 3−வது பாடல்.....

    எனைநான் என்பது அறியேன் பகல்இரவு ஆவதும் அறியேன்

    மனவாசகம் கடந்தான் எனைமத்தோன் மத்தன் ஆக்கிச்

    சினமால் விடை உடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும்

    பனவன் எனைச்செய்த படிறு அறியேன் பரஞ்சுடரே.

    இதன் பொருள்....!

    மத்த உன் மத்தனாக்கி − களிப்பு மிகுந்த பத்தன் ஆக்கி.

    சினமால் − வலிமையுடைய மால்

    பனவன் − பிராமணன் (சிவமுனிவன்)

    படிறு − மாயம்

    கருத்து...!

    என்னைக் களிப்பு மிகுந்த பித்தனாக்கி எனக்குச் செய்த மாயத்தை நான் அறியேன். என்னை நான் யார் என்பது அறியேன்; பகலும் இரவும் கழிந்ததையும் உணர்ந்திலேன்... என சிவானந்தம் மேலிடுதலால் இவ்வாறு கூறுகிறார்.

    *நூலின் காரணம் மற்றும் அமைப்பு...!*

    மெய்கண்டாரிடம் கேட்ட, கண்ட அனுபவத்தை உண்மை விளக்கமாக எழுதுகிறார்.

    எவ்வாறெனில்.....

    குருவிடம் வினாவிடை கேட்பதுபோல் அமைந்த நூல் உண்மை விளக்கம் ஆகும்.

    விநாயகர் காப்பு....!

    வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா

    உண்மைவிளக்கம் உரைசெய்யத் − திண்மதம் சேர்

    அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற்று ஐங்கரனைப்

    பந்தம் அறப் புந்தியுள்வைப் பாம்.

    பொருள்....!

    வண்மை தரும் − வளப்பம் தரும்.

    ஆகமநூல் வைத்த பொருள் − பதி, பசு, பாசம்.

    வழுவா உண்மை விளக்கம் − அவற்றைப் பற்றிய உண்மை விளக்கமும்...

    உரைசெய்ய பந்தம் அற − பந்த பாசம் நீங்குதல் பொருட்டும்...

    திண்மதம் சேர் அந்திநிற − வலிமை மதநீர் பொலியப் பெற்ற மாலை வானம் போல் சிவந்த நிறத்தை உடைய..

    தந்திமுகத் தொந்திவயிறு ஐங்கரனை புந்தியுள் வைப்பாம் − தந்தமும்(யானைத் தந்தம்), வயிறும், ஐந்து கரமும் கொண்ட விநாயகரை புந்தியுள் வைத்து தியானிப்போம்.

    வைத்த பொருள் (ஆஸ்தி)

    வைத்த பொருள் நமக்கு ஆம்என்று சொல்லி மனத்து அடைத்துச்

    சித்தம் ஒருக்கிச் சிவாயநம என்று இருக்கின் அல்லால்

    மொய்த்த கதிர்மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்

    அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே − *அப்பர்.*


    *வைத்த பொருள் :*

    *சிவனே என்று இரு*
    *சிவாயநம என்று இரு*

    இல்லையெனில், *சந்திரனைப் போன்று பலகலை வல்ல சான்றோர் வாழும் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தலைவனுடைய அருளைப் பெற இயலுமோ ? இயலாது என்பதாம்.*

    ஆகவே... விநாகர் காப்பில் இந்நூல் வாயிலாக நாம் அறிவது.....

    1) *முப்பொருள் உண்மை :*

    (ஞானம் : பதி, பசு பாசங்களின் தன்மையை உண்மையில் உள்ளபடி உணர்தல். )

    2) *உயிருக்கு பந்த பாசம் நீங்குதல் பொருட்டும் விநாயகரை வணங்குவோம்* என்பதாம்.

    மீண்டும் அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  191. Tue. 11, Apr. 2023 at 6.07 am

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....

    591) அத்துவிதம் அல்லது அத்வைதம் என்பது......
    *இரண்டு பொருள்கள் இரண்டு என்னும் தன்மை தோன்றாது, ஒன்று என்று சொல்லும்படி ஒற்றுமைப்பட்டு நிற்பது.*

    592) அத்துவிதத் தொடர்பு மூன்று வகை என்பது....
    *ஒன்றாதல், வேறாதல் , உடனாதல்.*

    593) ஒன்றாதல் என்பது....
    *உடலில் நிற்கும் உயிர்போல்.* அதாவது.எப்பொருளும் நிலைபெறுவதற்கு அதனோடு இறைவன் ஒன்றாய்க் கலந்து நிற்பது.*

    594) வேறாதல் என்பது....
    *கண்ணொளியோடு கலந்து நிற்கும் சூரிய ஒளி போல்.*

    595) உடனாதல் என்பது...
    *கண்ணொளியோடு கலந்து நிற்கும் உயிரறிவு போல்.*

    596) அத்துவிதம் என்ற சொல்லின் பொருள்....
    *இரண்டு இல்லை.* அதாவது... இதற்கு வேறாய் மற்றொரு பொருள் இல்லை.

    597) அபேதம் என்பது...
    *வேற்றுமையின்மை.*

    598) அபேத வாதம் என்பது.....
    *பொன்னுக்கும், அணிகலனுக்கும் இடையேயான ஒற்றுமை.*
    அதாவது... பிரமமே உயிர். உயிரே பிரமம். கடவுளும், உயிர்களும் ஒன்று .

    599) அபேதவாதிகள்...தமக்கு மேற்கோளாகக் காட்டும் அத்துவிதம் என்ற சொல்லின் பொருள்....
    *கடவுளும் உயிரும் ஆகிய இரு பொருள்கள் தம்மிற் பரிவின்றி ஒன்று பட்டு நிற்றலை உணர்த்தும்.*

    600) முப்பாழ் என்பது....
    *சீவப்பாழ், சிவப்பாழ், வியோமப் பாழ்.*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  192. Tue. 11, Apr. 2023 at 9.27 am.

    *திருவருட்பயன் − பதி முது நிலை. :*

    பதி முதுநிலை.

    பதி − காப்பவன்.
    முதுநிலை − இறைவனது இயல்பு.(மேலான இயல்பு)

    பதி என்பதற்கு.... அனைத்து உயிர்களையும், அனைத்து உலகங்களையும் *காத்து ஆளும் தலைவன்* என்ற கருத்தில் இறைவன் *பதி* எனப்படுகிறான்.

    முப்பொருளான... இறை, உயிர், தளை இவற்றில் *பதியாகிய இறைவனே* ஏனை எல்லாவற்றிற்கும் மேலானவன்.

    உயிரும், தளையும் , இப்பதியின் விருப்பப்படிதான் செயல்படும்.

    இறைவனுக்கு இரண்டு நிலைகள் உண்டு.
    *ஒன்று, சிவமாய் நிற்கும் நிலை.* மற்றொன்று, *பதியாய் நிற்கும் நிலை.*
    * சிவமாய் நிற்கும் நிலையில் ...அவனுக்கு வடிவம், பெயர், தொழில் என எதுவுமின்றி வாளா இருப்பான். அதாவது, இறைவன் யாதொன்றையும் நோக்காது *தன்னிலையில் நிற்பான்.*

    * பதியாய் நிற்கும் நிலையில்...
    இறைவன் ஐந்தொழிலைச் செய்யும் நிலையில் நிற்பான். இந்நிலையில் இறைவன், அளவற்ற வடிவும், பெயரும் உடையவனாய் நின்று தொழிற் புரிவான்.

    இந்த உலகம் ஒரு சடப் பொருள். தானாக இயங்காது. ஆனால் உயிர்கள், அறியும் தன்மை உடையவை. இருப்பினும் யாதொன்றையும் தாமாக அறிந்து கொள்ளாது.

    உயிர்களுக்கு தோற்றமில்லை,அழிவில்லை, அவை என்றும் உள்ளவை. இருப்பினும், அவை தம்மிடமுள்ள குறைபாடு காரணமாக, இந்த உடம்போடு கூடி உலகிடை வருகின்றன. பின்னர் உடம்பினின்றும் நீங்கி நிலை பெயர்ந்து செல்கின்றன.

    இவ்வாறு, மாறிமாறிப் பிறந்தும், இறந்தும் உழல்கின்றன.

    உடம்பிலுள்ள இந்தக் குறைபாட்டினை நீக்கி, அவை தன்னை அடைந்து இன்புறும்படிச் செய்வதே..இறைவனின் வேலை.. இங்ஙனம் செய்யும் அவனது வல்லமையே... *சத்தி* எனப்படும். *சத்தி என்பது அவனுடைய குணம்.*

    எவ்வாறு சூரியனை விட்டு ஒளி பிரியாதோ, எவ்வாறு நெருப்பை விட்டு சூடு நீங்காதோ ...இதுபோன்றே இறைவனது குணமான சத்தியும் இறைவனை விட்டுப் பிரியாது நிற்கும்.அதாவது இறைவனோடு பிரிப்பின்றி நிற்கும்.

    இறைவனது உண்மை நிலை என்னவெனில், அவனுக்கு உருவமில்லை, பெயரில்லை,அசைவில்லை . இதுவே அவனது உண்மை நிலை.

    இறைவன் தானும், தன் சத்தியுமாக, இருதிறப்பட்டு நின்று இவ்வுலகை நடத்துகிறான்.

    ஆகவே.. இறைவனது பெருநிலையை ஞானிகள் மட்டுமே உணர்தல் கூடும்.

    இறைவன்.... உயிர்களிடத்தில் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவன். ஆக்குதல், காத்தல், அழித்தல் என முத்தொழில்களைச் செய்கிறான்.

    அழித்தல் என்றால் நம்மை அழித்து விடுவது அல்ல..

    உயிர்களின் மாசினை நீக்கித் தூய்மை செய்து, நம்மை ஆட்கொள்ளும் தொழில்களைச் செய்கிறான் என்பதே.

    இந்த உலகம்... சித்தும், சடமும் ஆனவை.

    சித்து என்பது, *அறிவுடைய உயிர்களின் தொகுதியைக் குறிக்கும்.*

    சடம் என்பது, *அறிவில்லாதப் பொருள்.*

    இவ்விரண்டும் சேர்ந்ததே *உலகம்.*

    எழுத்துக்களின் இயக்கத்திற்கு
    "அ "கர உயிர் எவ்வாறு இன்றியமையாததோ அதுபோல் சித்தும், சடமும் ஆகிய இவ்வுலகத்தின் இயக்கத்திற்கு இறைவன் இன்றியமையாதவன்.

    இவ்வாறு... உவமைக்கும், பொருளுக்கும் உள்ள பொருத்தங்களைச் சுட்டலாம்...

    *உவமை − பொருள். :*

    1) உயிரெழுத்துக்கள் − பொருள் சித்தாகிய உயிர்கள்.

    2) மெய் எழுத்துக்கள் − சடமாகிய பொருள்கள்

    3) உயிரும் மெய்யுமாகிய எழுத்துக்களை இயக்கும் அகரம் − சித்தும் சடமும் ஆகிய உலகை இயக்கும் இறைவன்.

    இவ்வாறு... சித்தும் சடமுமாகிய அனைத்துப் பொருள்களையும் இறைவன் இயக்குகிறானெனில் அவன் ஒரு காலத்தில் தானே அனைத்துப் பொருளையும் அறிந்து நிற்கிறான் என்பதும் பெறப்படும். அவ்வாறு முழுவதையும் ஒருங்கே அறிந்து நிற்கும் அவனது அறிவு *முற்றறிவு* எனப்படும்.

    *செய்யுள் − 1.* (எங்கும் நிறைந்து நின்று இயக்குபவன்).*

    அகர உயிர்போல் அறிவாகி எங்கும்
    நிகரில் இறை நிற்கும் நிறைந்து.

    *இதன் பொருள். :*

    *அகர உயிர் போல்* − அகரமாகிய உயிரெழுத்து பிற எல்லா எழுத்துக் களிலும் இயைந்து நின்று அவற்றை இயக்குவது போல...

    *நிகர்இல் இறை* − தன்னோடு ஒப்பதாக ஒரு பொருளும் இல்லாத பதியாகிய இறை.

    *அறிவாகி* − பேரறிவு உடையதாய்

    *எங்கும்* − பிற எல்லாப் பொருள்களிடத்தும்

    *நிறைந்து நிற்கும்* − வேற்றுமையின்றிக் கலந்து நின்று அவற்றை இயக்கும்.

    *இதன் விளக்கம், *நிகரில் இறை. :*

    பதியாகிய இறையே உலகிற்கு முதல்.
    இறைவன் ஒருவனே என்பதும், அவனே தன் நிகர் இல்லாதவன் என்பதும் விளங்குகிறது.

    அவ்வாறு, இறைவன் ஒருவனே என்றால்...பல கடவுளர் பேசப்படுகின்ற னரே..எனத் தாங்கள் ஐயுறலாம்...

    *அக்கடவுளர் பலரும், இறைவனது அருளால்...அந்நிலையை அடைந்தவர்கள்*. அவர்களெல்லாரும் உயிர்களாகிய *பசு* க்கள்.

    அவர்களுக்கு பிறப்பு, வாழ்வு, இறப்பு உண்டு. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு செயலில் மட்டுமே முதன்மையுண்டு. அம்முதன்மைகளும் அவர்கள் செய்த புண்ணியத்திற்கு ஏற்ப இறைவன் கொடுத்தனவையே.

    அவர்களைத்தான் *அதிகார மூர்த்திகள்* என்கிறோம்.

    அதாவது.. அரசனது செயல்களை, அவனது ஆணையைப் பெற்று நடத்தும் அதிகாரிகளைப் போன்றவர்கள்.

    ReplyDelete
  193. இவ்வாறு அவர்கள் ஒவ்வொன்றில் முதன்மையுடையவர்களாக இருக்க, *சிவபெருமானாகிய பதியே* எல்லா முதன்மைக்கும் உடையவனாயிருத்த லால் அவனே *முழுமுதற் கடவுள்* என்பதும், *நிகரில் இறை* என்பதும் ஐயமுற விளங்குகிற தல்லவா ?

    *1−வது செய்யுளில் உணர்த்தப்படும் கருத்து... :*

    *இறைவனே உலகிற்குத் தலைவன்; அவனே அனைத்து இயக்கத்திற்கும் முதலானவன் என்பது இச்செய்யுளில் உணர்த்தப்படுகிறது.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  194. Tue. 11, Apr. 2023 at 11. 17 am.

    தட்டச்சுப் பொறி...!

    தட்டச்சுப் பொறியில் நாடாவை எவ்வாறு பொருத்துவது என்று பார்க்கலாம்.!

    தட்டச்சுப் பொறியின் முன்புற மூடியை எடுத்துவிட்டு, தட்டச்சுப் பொறியிலுள்ள பழைய நாடாவைக் கழற்றுவதற்கு முன், நாடா எவ்வாறு பொருத்தப்பட்டிருக்கிறது என்றும்; நாடா எப்பக்கமாக நாடா சக்கர வளையத்தில் சுற்றப்பட்டுள்ளது என்றும் நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர், நாடா நிலைக்குறிகாட்டியைக் கீழ்ப்பக்கமாக அதாவது... சிவப்பு நிறப் பகுதிக்கு நகர்த்திக் கொள்ள வேண்டும்.

    அடுத்து, மாற்றுவிசைப் பூட்டை அழுத்தி அரைவட்டத்தகடு, கீழே செல்லும்படி செய்துவிட்டு , இரண்டு விசைகளை ஒரே சமயத்தில் அழுத்தி, இரண்டு எழுத்தச்சாணிகளும் ஒன்றோடொன்று ஒட்டிய நிலையில் இருக்கும்படியாகச் செய்ய வேண்டும்.

    இப்போது, நாடாத் தாங்கியானது மேல்நிலையிலேயே நிற்கும். இதனால், நாடாவை நாடாத் தாங்கியிலிருந்து சுலபமாக எடுத்துவிட முடியும்.

    நாடாவை, நாடாத் தாங்கியிலிருத்து எடுத்ததும், எழுத்தச்சாணிகளைப் பழைய நிலைக்குக் கொண்டுவர, விசைகளை விடுவிக்கும் விசையைப் பயன்படுத்த வேண்டும்.

    பின்பு, நாடா மேல்தட்டு, நாடா சக்கர வளையம் ஆகியவற்றை எடுத்துவிட்டுப் புது நாடா சுற்றப்பட்ட வளையத்தைப் பொருத்த, வளையத்தின் இடைவெளி யினுள் விசையில் செல்லுமாறு பொருத்த வேண்டும்.

    நாடா சக்கர வளையம் இல்லாமல் நாடாவைப் பொருத்த வேண்டுமானால்,நாடாத் துணியில் முடிச்சிப் போட்டு, அம் முடிச்சை நாடா சக்கர வயைளத்திலுள்ள இடைவெளியில் செருகி, நாடா மேல் தட்டைப் பொருத்த வேண்டும்.

    பிறகு இரண்டு எழுத்து விசைகளை ஓரே சமயத்தில் அழுத்தி எழுத்தச்சாணிகளை ஒற்றோடொன்று ஒட்டிய நிலையில் இருக்கும்படிச் செய்து நாடாத்தாங்கியில் நாடாவைப் பொருத்த வேண்டும்.

    அறிக....!

    * வலது நாடா சக்கர மேல்தட்டு − Right Ribbon Spool Top Plate.

    * வலது நாடா சக்கர வளையம் − Right Ribbon Spool Ring.

    * விசை வில் − Trigger.

    * வலது நாடா வழிகாட்டி − Right Ribbon Guide.

    * இடது நாடா வழிகாட்டி − Left Ribbon Guide.

    * இடது நாடா சக்கர மேல் தட்டு − Left Ribbon Spool Top Plate.

    * இடது நாடா சக்கர வளையம் − Left Ribbon Spool Ring.

    * நாடா − Ribbon.

    * நாடா தாங்கி − Ribbon Carrier.

    மீண்டும் அடுத்த பதிவில்.....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  195. Tue. 11, Apr. 2023 at 3.55 pm.

    திருக்கண்டியூர்...!
    அட்ட வீரட்டானங்களில் ஒன்று.

    *அகந்தை மறைந்த இடம்...!*

    எல்லா உலகங்களும், உயிர்களும் ஒடுங்குவதற்கு இடமாக உள்ள சிவன் திருவடிகளை நினைந்து வணங்கும் தேவர்கள், கல்விச் செருக்கில் இருக்கும் பிரமனைக் கண்டு சி்னம் கொண்டனர்.

    எனவே, தேவர்கள் சினம் தணியச் சிவன், பிரமனின் ஐந்தாவது தலையை அறச் செய்தான். அவ்வாறு அறச் செய்து விட்டு, அத்தலையின் குருதியை திருமாலை ஏற்கச் செய்தான்.

    பாடல் ....!

    எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியுந்
    தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
    பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
    அங்(கு) அச்சுதனை உதிரம் கொண் டானே.

    இதன் பொருள்.....!

    எங்கும் பரந்தும் − எல்லா இடங்களிலும் பரவி.

    இந்நிலம் தாங்கி − அகன்று பரந்த இந்தப் பெரிய உலகைத் தாங்குவதற் கும்.

    அயன் தலை முன்னற − பிரமனின் ஐந்தாவது தலை அறச் செய்தான்.

    அயன் − பிரமன்
    முன்னற − அறுபட
    அச்சுதன் − திருமால்
    உதிரம் − இரத்தம் (குருதி, ).

    இவ்வாறு, பிரமன் அகந்தை அழிந்த இடம் − திருக்கண்டியூர்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
    Replies
    1. Tue. 11, Apr. 2023 at 5.01 pm.

      உண்மை விளக்கம் :*

      திருநடம் :*

      பாடல் − 30

      நற்றவத்தோர் தாம்காண நாதாந்தத்து அஞ்செழுத்தால்
      உற்று உருவாய் நின்று ஆடல் உள்ளபடி − பெற்றிடநான்
      விண்ணார் பொழில்வெண்ணெய் மெய்கண்ட நாதனே
      தண்ணார் அருளாலே சாற்று.

      பொருள் :*

      விண்ணார் பொழில்வெண்ணூய் மெய்கண்ட நாதனே − வானளாவிய சோலைகள் நிறைந்த வெண்ணெய் நல்லூரில் எழுந்தருளியுள்ள மெய்கண்ட நாதனே !

      நல் தவத்தோர் காண் (நற்றவத்தோர் தாம் காண) − சரியை, கிரியை, யோகம் ஆகிய தவம் செய்தவர் அறியும்படி ...

      நாதாந்தம் = நாதம் + அந்தம் (நிலம்).
      நிலம் மூதல் நாதம் வரை உள்ள 36−தத்துவங்களைக் கடந்த நிலையிலே.. அதாவது சொரூப நிலையிலும்..

      பரம்பொருளின் பரவெளி என்பது...
      *பரலோகம், சிவலோகம்.*
      (அநாதியே நடனம் உள்ளது.)

      அஞ்செழுத்தால் உற்ற உருவாய் நின்று − திரு அஞ்செழுத்தால் திரு உடையவராய் நின்று..

      ஆடல் உள்ளபடி நான் பெற்றிட − நீ ஆற்றும் திரு நடனத்தின் இயல்பை அடியேன் உள்ளவாறு கண்டு உய்யும் பொருட்டு....

      தண் ஆர் அருளால் சாற்று − குளிர்ச்சியான தன் திருவருளால் எனக்கு உணர்த்தி அருளுக.

      இதன் சாராம்சமும் (கருத்து) இவையே.

      விளக்கம்....

      தான், ஏ என்பன அசைநிலைகள்.
      நாதாந்தம் நிலம் முதல் நாதம் ஈறாகிய தத்துவம் கடந்த எல்லை. அதுதான் பரவெளி.

      *~*

      பாடல் − 31 :*

      *நடம் செய்யும் இடமும் நோக்கமும் (திருக்கூத்தின் இடமும் நோக்கமும்)*

      எட்டும், இரண்டும் உருவான லிங்கத்தே
      நட்டம் புதல்வா நவிலக்கேன் − சிட்டன்
      சிவாயநம என்னும் திருஎழுத்து அஞ்சாலே
      அவாயம்அற நின்று ஆடுவான்.

      ஒரு லிங்கத்தின் மேல்பாகம் −பாணம்
      (எட்டு − சிவம்)

      அதன் மத்திப்பாகம் −ஆவுடை (இரண்டு − சக்தி )

      லிங்கத்தின் அடிப்பாகம் − உயிர் (பத்து − உயிர் )

      என் அருமை மாணவனே கேள் :*

      8 + 2 = 10. சிவம் + சக்தி −> உயிர்(அதாவது உய்யும் பொருட்டு)

      அ + உ −> ய அதாவது உயிர் உய்யும் பொருட்டு) சிவசக்தி கூடல்.

      *சிவயநம :*

      ஆக நடுவே நிற்கும் " ய " (உயிர்) இறைவன் நடனத்திற்கு ஆதாரம்.
      அதாவது... அரங்கம் அல்லது அம்பலம்.

      நட்டம் நவிலக் கேள் − உயிரை ஆதாரமாகக் கொண்டு, இறைவன் ஆற்றும் திருநடனம் குறித்து கூறக் கேட்பாயாக.

      சிட்டன் சிவாயநம என்னும் திருஎழுத்து அஞ்சாலே அவாயம் அற நின்று ஆடுவான் − இறைவன் *சிவாய* நம எனும் பஞ்சாக்கர திருமேனி கொண்டருளி, உயிருக்குத் துன்பத்திற்குக் காரணமான பிறப்பு அறும்படி உயிரிடத்து நின்று திருநடனம் புரிகின்றான்.

      விளக்கம்.... ஏகாரம் இரண்டும் அசைநிலைகள். எட்டும் இரண்டும் சேர பத்தாகும். *இந்த எண்ணினைத் தமிழில் *ய* எனக் குறிப்பர். திருவைந்தெழுத்தில் உள்ள " ய " உயிரைக் குறிக்கும்.

      எனவே... எட்டும் இரண்டும் உருவான *இலிங்கம் என்பது உயிர்.*

      இவ்வுயிரே இறைவன் கூத்து நிகழ்த்துதற்குரிய அரங்கு ஆகும்.

      திருவாசகப் பாடல் இங்கு நினைவு கூறுகிறேன்..!

      *எட்டினோடு இரண்டும் அறியேனையே*
      (திருவாசகம்− திருச்சதகம் என்னும் பதிகத்தில் *கைம்மாறு கொடுத்தல்* என்னும் தலைப்பில் 49−ஆவது பாடலில் கடைசி வரி.
      (எட்டினோடு = எட்டு + இரண்டு + ம் = இரண்டும் = அ + உ + ம்− ஓம் − காரம் பிரணவம் − தசகாரியம்)

      அவாயம் − துன்பம்

      திருச்சிற்றம்பலம்

      Jansikannan60@gmail.com

      Delete
  196. Wed. 12, Apr. 2023 at 4.30 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி.......!

    601) திருமுகம் என்பது......
    *கடிதம்.*

    602) திருப்பாசுரம் என்பது......
    *திருஞானசம்பந்தர் மதுரையில் புனல்வாதம் செய்யும்போது பாடியருளியது. (வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் என்று தொடங்கும் பதிகம்)

    603) திருமுகப்பாசுரம் என்பது.....
    ஆலவாய் அண்ணல் பாணபத்திரன் பொருட்டுச் சேரமான்பெருமாள் நாயனாருக்கு வழங்கிய பரிந்துரை மடல். (பதினோராம் திருமுறையில் முதல் பாடலான மதிமலி புரிசை மாடக்கூடல் எனத் தொடங்கும் பாடல் அது).

    604) திருவிசைப்பா என்பது....
    பாடல்கள் முழுமையும் இசைப்பாடல் களால் அமைந்தமையால்... திருவிசைப்பா என்று போற்றப் பெற்றது. (ஒன்பதாம் திருமுறையில் உள்ள ஒரு பகுதி. தேவாரத்துள் அமைந்த பண்கள் தவிர , சாளரபாணி என்னும் புதுப்பண்ணான...புறநீர்மை, பஞ்சமம், காந்தாரம் ஆகிய மூன்று பண்களில் இவ்விசைப்பாடல்கள் *நூற்றிரண்டு* அமைந்துள்ளன.)

    605) ஒன்பதாம் திருமுறை என்பது.....
    திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்னும் இரண்டும் சேர்ந்தது. (பஞ்சபுராணம் பாடுபவர்கள் இவ்விரண்டிலிருந்தும் இரண்டு பாடல்கள் ஓதுவார்கள்).

    606) மெய்நெறிக்குறள் என்று குறிக்கப் பெறும் சித்தாந்த நூல்....
    *திருவருட்பயன்.*

    607) மாயேயம் என்பது....
    *மாயையினால் ஆன உலகத்தைக் குறிக்கும்.

    608) திரோதாயி என்றால்....
    *ஆன்மாவின் அறிவை மறைக்கும் சக்தியைக் குறிக்கும்

    609) சிதசித்து விளக்கம்.....
    சித்தும் அசித்துமாக அதாவது, அறிவும், அறிவற்றதுமாக விளங்குகிறது.
    (சித்து + அசித்து = சிதசித்து).

    610) உண்மை விளக்கத்தில் கேட்கப் படுகின்ற வினாக்கள்....
    *8.* அவை....
    1, முப்பத்தாறு தத்துவங்கள் யாவை?
    2. ஆணவம் என்பது யாது ?
    3. வினையெனப்படுவது யாது ?
    4. நான் என்னும் உயிர் என்பது யாது ? 5. நீ என்னும் பதி யாது ?
    6. இறைவன் நிகழ்த்தும் நடனம் யாது? 7. அஞ்செழுத்தின் நிலைகள் யாவை ?
    8. முத்திப்பேற்றின் நிலை யாது ?

    மீண்டும் அடுத்த பதிவில்.....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  197. Wed. 12, Apr. 2023 at 5.39 pm.

    திருவருட்பயன்....!

    *குறள் − 2.*
    *சத்தியோடு கூடியவன் :*

    *சத்தி − ஆற்றல்.*

    இறைவனது சத்தியாய் அதாவது ஆற்றலாய் நிற்பது அவனது *பேரறிவு.*
    உயிர்கள் மலங்களில் வசப்பட்டு, நிலையில்லாத உலகச் சார்பை எய்தி,மாறிவரும் பிறவிச் சுழற்சியில், பட்டு அழுந்துகின்றன.

    இச்சுழற்சியிலிருந்து விடுபட்டு, உயிரானது ஒருநிலைப்பட்ட தன்மையை எய்தல் வேண்டும்.

    இத்தன்மையை அடைய வேண்டுமாயின், என்றும் ஒரு தன்மையனாய் உள்ள இறைவனைச் சார்தல் வேண்டும்.

    மலச்சார்பைவிட்டு , இறைவனைச் சார்ந்தால் அவ்விறைவனது தன்மையை உயிர்களும் பெறலாம்.

    இவ்வாறு, தன்னிலைமையை மன்னுயிர்கள் அடையும்படி செய்வது...*இறைவனது சத்தி* ஆகும்.

    இவ்வுயிர்கள், *அறியாமையைச் செய்யும் ஆணவ மலமும், பிறவித் துன்பத்தைத் தரும் கன்ம மலமும், அசுத்தமாகிய மாயா மலமும்* ஆகிய இம்மூன்று மும்மலங்களின் தொடர்பை உடையன.

    இந்த மலத் தொடர்பினாலேயே உயிர்கள் பிறப்புக்கு ஆட்படுகின்றன.

    ஆனால், இறைவன் மலத்தோடு சிறிதும் தொடர்பில்லாதவன். எனவே *நின்மலன்* எனப்படுகிறான். இறைவனுக்கு பிறப்பில்லை.

    இறைவனின் நிலையானது, பிறப்பிற் படாது, என்றும் யாதொரு மாற்றமும் இன்றி நிற்பது, இறைவனின் நிலை.

    ReplyDelete
  198. முதல் செய்யுளில்... உதாரணம்.. சூரியன், நெருப்பு என்று கூறினேன்.

    அதே சூரியனைச் இச்செய்யுளுக்கும் உதாரணப்படுத்துகிறேன்.

    அதாவது, சூரியன் தானும் தன் ஒளிக் கதிரும் என இயைந்து நிற்கும். அதன் ஒளிக்கதிர் உலகப் பொருளோடு தொடர்பு கொண்ட நிலையில்.. அது ஒளி எனப்படும்.

    அதுபோல இறைவன் எல்லாவற்றிற் கும் மேலான நிலையில் தன்னளவில் நிற்கையில் *சிவம்* எனப்படுவான்.

    அவனது நுண்ணிய பேரறிவாகிய சத்தி எல்லாம் பொருள்களிலும், அவற்றின் உள்ளும் புறம்புமாய் நீக்கமற நிறைந்து, அவன் உலக உயிர்களோடு, தொடர்பு கொண்ட நிலையில் *சத்தி* எனப்படுவான்.

    அடுத்து, நெருப்பை உதாரணப்படுத்து கிறேன்.

    பாகம் செய்தல் − பக்குவப்படுத்துதல்.

    உணவுப் பொருளை சுவையாக உண்பதற்கேற்றவாறு... வறுத்தல், பொரித்தல், அவித்தல் என பலவகைகள் உண்டு.

    இச்செயல்களை எல்லாம்.... *நெருப்பினது சூடு ஒன்றே செய்கிறது.*

    அதபோல, *இறைவனது சத்தி ஒன்றே,* படைத்தல், காத்தல், அழித்தல் முதலிய பல செயல்களைச் செய்கிறது.

    *இவ்வாறு, இறைவனது சத்தி ஒன்றேயாயினும், அதனால் நிகழ்த்தப்படும் செயல்கள் பலவாதல்.*

    *திரோதானம் − மறைத்தல்.*

    உயிர்களின் அறிவை, மும்மலங்களின் வழியே செலுத்தி, அவ்வுயிர்கள் இறைவனை நோக்காது,
    உலகத்தையே நோக்கி நிற்கும்படி செய்வது, இந்த திரோதான சத்தி.

    அதே நேரத்தில், இத்தொழிலால் பக்குவம் பெற்ற உயிர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து, இறைவனைக் காட்டி, செய்யும் சத்தி, *அருட்சத்தி* ஆகும்.

    நங்கையினால் நாம் அனைத்தையும் செய்கிறாம் ! அதுபோல நங்கையினால் இறைவன் அனைத்தையும் செய்கிறான்.

    *முதலில் உள்ள நங்கை − நம் கை எனப் பிரிந்து பொருள் தரும்.*

    *அடுத்து வரும் நங்கை − பெண் எனப் பொருள்பட்டு இறைவனது சத்தியைக் குறிக்கும்.*

    நாம் இதில் அறிந்து கொள்ள வேண்டியது...
    சிவனே செயலைச் செய்பவனாக, சக்தி அவனுக்குத் துணைவியாக வைத்துப் போற்றும் நிலை உண்டானது.

    அதாவது, *சிவனே தலைமைப் பொருள் என்பதும், சக்தி அவன் வழிப்பட்டு நிற்பது என்றும் அறிந்து கொள்ளலாம்.*

    *"எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்."*

    ReplyDelete
  199. *2−வது குறள் :*

    தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தரும் சத்தி
    பின்னமிலான் எங்கள் பிரான்.

    *விளக்கம் :*

    ஒருவனாகிய எம் இறைவன், பிறப்பு, இறப்பிறல் படாமல், என்றும் ஒரு தன்மையுடையனாய் உள்ளவன். அந்த நிலைமையைப் பலவாகிய உயிர்களும் பெறும் படியாகச் செய்யும் தனது *சத்தியோடு* அவன் வேறின்றி நிற்கிறான்.. என்பதே.

    *பொருள் :*

    எங்கள் பிரான் − எம் இறைவன்.
    தன் நிலைமை − பிறப்பு இறப்புகள் இன்றி, என்றும் ஒரு தன்மையனாய் இருக்கின்ற தனக்குள்ள அந்த நிலைமை.

    மன் உயிர்கள் − தன்னைப் போல நிலை பெற்றவனாகிய எல்லாவுயிர்களும்.

    சார − அடையும்படியாக.
    தரும் − உதவி செய்கின்ற.
    சத்தி − தனது சத்தியோடு.
    பின்னம் இலான் − வேற்றுமையின்றி நிற்கிறான்.

    இக் குறள் மூலம் நாம் அறியும் கருத்து..

    இறைவனது சத்தி, கட்டு நிலையில் உயிர்க்குயிராய் உடன் நின்று, *உயிர்கள் பக்குவம் பெறும்படி உதவும்.*
    *முத்தி நிலையில் அவ்வாறு உடன் நின்று, தன்னிலைமையை , மன்னுயிர்கள் பெறும்படி உதவும்.*

    *அச்சத்தியோடு பிரிப்பின்றி நிற்கிறான் எம்பெருமான்*

    என்று இச்செய்யுளில் உணர்த்தப்படு கிறது.
    l
    திருச்சிற்றம்பலம்

    Jansikannan60@gmail.com
    *~*~*~*

    ReplyDelete