நமது நாட்டில் முக்கிய உணவாக அரிசியால் ஆன சோறு, அரிசி மாவில் செய்யப்படும் இட்லி, தோசை போன்றவையே இருக்கிறது. இப்படி அதிகம் பயன்படுத்தப்படும் அரிசியின் வகைகளையும், அதன் குணங்களையும் பார்ப்போம்.
கார் அரிசுயை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும்.
குண்டு சம்பா அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும்.
குன்றுமணிச் சம்பா அரிசியில் வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.
சீரகச் சம்பா சிறுவாத நோய்களைக் குணமாக்கும், பசியை அதிகரிக்கும்.
செஞ்சம்பா சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களை உண்டாக்கும். பசியை அதிகரிக்கச் செய்யும்.
கோடைச் சம்பா அரிசி வாதப்பித்த சிலேட்டும நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும்.
ஈர்க்கு சம்பா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும்.
பச்சரியைச் சாப்பிட்டால் வாதக் குறைபாடுகள் உண்டாகக்கூடும். பக்கவாதம், உடல் உறுப்புகளில் சுரணையற்ற தன்மை ஏற்படக்கூடும். பித்த எரிச்சலை விலக்கும், உடல் வன்மையைப் பெருக்கும்.
புழுங்கல் அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தருவது புழுங்கல் அரிசிதான். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங்கல் அரிசிதான்.
சாமை அரிசியும் புன்செய் தானியங்களில் ஒன்றுதான். இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும். உடலை நல்ல வலிமையாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
தினை அரிசியும் புன்செய் தானியம்தான். சளித்தொற்றை போக்கும். காய்ச்சல் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும். ஆனால் அதிகம் சேர்த்துக்கொண்டால் பித்தம் அதிகரிக்கும்.
திப்பிலி அரிசி விந்தினை வளர்க்கும், மேக நோயைக் குணமாக்கும், வாதக் கோளாறுகளைப் போக்கும்.
கார் அரிசுயை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும்.
குண்டு சம்பா அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும்.
குன்றுமணிச் சம்பா அரிசியில் வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.
சீரகச் சம்பா சிறுவாத நோய்களைக் குணமாக்கும், பசியை அதிகரிக்கும்.
செஞ்சம்பா சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களை உண்டாக்கும். பசியை அதிகரிக்கச் செய்யும்.
கோடைச் சம்பா அரிசி வாதப்பித்த சிலேட்டும நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும்.
ஈர்க்கு சம்பா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும்.
பச்சரியைச் சாப்பிட்டால் வாதக் குறைபாடுகள் உண்டாகக்கூடும். பக்கவாதம், உடல் உறுப்புகளில் சுரணையற்ற தன்மை ஏற்படக்கூடும். பித்த எரிச்சலை விலக்கும், உடல் வன்மையைப் பெருக்கும்.
புழுங்கல் அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தருவது புழுங்கல் அரிசிதான். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங்கல் அரிசிதான்.
சாமை அரிசியும் புன்செய் தானியங்களில் ஒன்றுதான். இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும். உடலை நல்ல வலிமையாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
தினை அரிசியும் புன்செய் தானியம்தான். சளித்தொற்றை போக்கும். காய்ச்சல் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும். ஆனால் அதிகம் சேர்த்துக்கொண்டால் பித்தம் அதிகரிக்கும்.
திப்பிலி அரிசி விந்தினை வளர்க்கும், மேக நோயைக் குணமாக்கும், வாதக் கோளாறுகளைப் போக்கும்.
அய்யா.. வெ. சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அரிசியைப் பற்றி எனக்கு தெரிந்ததை நானும் அளிக்கிறேனே...!
ReplyDeleteTue. 03, Jan. 2022 at 4.30 am.
ReplyDeleteமாந்தம்....!
1) வாத மாந்தம்
2) பித்த மாந்தம்
3) சிலேத்தும மாந்தம்
4) விஷ மாந்தம்
5) போர் மாந்தம்
6) வாலை மாந்தம்
7) நீர் மாந்தம்
8) சுர மாந்தம்
9) துலையா மாந்தம்
10) பால் மாந்தம்
11) கட்டுமாந்தம்
12) தலை மாந்தம்
13) கண மாந்தம்
14) வலிப்பு மாந்தம்
15) சன்னி மாந்தம்
16) முக்கு மாந்தம்
17) ஊது மாந்தம்.
18) வீ்க்க மாந்தம்
19) சுழி மாந்தம்
20) எரி மாந்தம்
21) செறியா மாந்தம்
என்பனவாம்.
Jansikannan60@gmail.com
Tue. 03, Jan. 2023 at 5.59 am.
ReplyDeleteசைவ சித்தாந்தம்....!
* அத்துவாக்கள் என்பது....
*வீடுபேறு அடைவதற்கான வழிகள்.*
* அத்துவாக்கள்...
*ஆறு ( 6 ) வகை.*
* அத்துவாக்கள் ஆறு என்பது....
*மந்திரம் , பதம் , வன்னம் , கலை , தத்துவம் , புவனம்.*
* அர்த்தப் பிரபஞ்சத்துள் அடங்கும் அத்துவாக்கள்....
*கலை , தத்துவம் , புவனம்.*
* அத்துவாவில் ஒன்றான கலையின் ஐந்து வகை.....
*நிவிர்த்தி கலை, பிரதிட்டை கலை, வித்தியா கலை, சாந்தி கலை, சாந்தி அதீத கலை.*
* பஞ்ச கலைகளுக்கும் , கலைத் தத்துவத்திற்குமுள்ள வேறுபாடு....
*பஞ்சகலை என்பது... அத்துவாக்களில் ஒரு வகை.*
*கலா (கலை) தத்துவம் என்பது....
*வித்யா தத்துவம் ஏழில் ஒரு தத்துவம்.
* சுத்த மாயையில் தோன்றும் நால்வகை வாக்குகள்....
*சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி.*
* சுத்த மாயையின் முதல் விருத்தம்.... *சூக்குமை வாக்கு.*
* சூக்குமை வாக்கின் விருத்தி....
*பைசந்தி வாக்கு.*
* பைசந்தி வாக்கின் விருத்தி மத்திமை வாக்கு.*
;* மத்திமை வாக்கின் விருத்தி....
*வைகரி வாக்கு.*
* வைகரி வாக்கு என்பது.....
*தன் செவிக்கும், பிறர் செவிக்கும் கேட்கப்படும ்வாக்கு.*
* வாக்குகளின் வளர்ச்சி... பரிமாணமா அல்லது விருத்தியா ? ......
*விருத்தி.*
* சுத்த தத்துவம்.....
*நாதம் முதலிய ஐந்து.*
* சுத்த தத்துவங்கள்....
*நாதம்., விந்து, சாதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தை.*
* சுத்த தத்துவததி்ன் வேறு பெயர்....
*சிவ தத்துவங்கள்.*
* சுத்த தத்துவங்கள் தோன்றியது....
*சுத்த மாயையில் இருந்து.*
* சத்த தத்துவத்தைத் தோற்றுவித்தவர்....*சிவன்.*
* சிவ தத்துவம் என்ற பெயருக்கான காரணம்...
*சிவனால் தோற்றுவிக்கப்பட்டதால்.*
மீண்டும் சந்திப்போம்.....
Jansikannan60@gmail.com.
Fri. 06, Jan. 2023 at 8.05 am.
ReplyDeleteஉயிரியல் துளிகள் − 23
* மனித உடலில் மிகப் பெரிய சுரப்பி....
*கல்லீரல்.*
* கல்லீரலில் சுரக்கும் நீர்....
*பித்த நீர்.*
* கல்லீரலின் எடை....
*ஏறக்குறைய 1500 கிராம்.*
* பித்த நீர் என்பது....
*பச்சை கலந்த மஞ்சள் நிறத்திரவம்.*
* பித்தநீர் தற்காலிகமாகச் சேகரமாகும் பை.... *பித்தப்பை.*
* பித்த நீர் பயன்படுவது.....
*கொழுப்பு செரித்தலுக்கு.*
* கொழுப்பு செரித்தலுக்கு உதவும் நொதிகள்.....
*பித்த உப்புகள் , பித்த நிறங்கள்.*
* சிறுகுடலின் மூன்று பகுதிகள்....
*டியோடினம், ஜீஜினம், இலியம்.*
* இரைப்பை எந்தத் துளையின் வழியே சிறுகுடலில் திறக்கிறது...
*பைலோரஸ்.*
* இரைப்பை நீரில் காணப்படும் நொதிகள்....
*பெப்சின், ரெனின் , ஹைடிரோ குளோரிக் அமிலம்.*
* இரைப்பை நீரைச் சுரப்பது.....
*இரப்பையின் சுவர்.*
* இரைப்பையின் பகுதிகள்.... *3.*
* உணவு செரிமானத்தின் முக்கிய பகுதி.... *இரைப்பை.*
* உணவுக் குழாயின் நீளம்......
*22 செ.மீ.*
* உணவுக் குழாயின் உட்புறச் சுவரில் காணப்படும் திசு....
*எப்தீலியம் திசு.*
* ஹைடிரோ குளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்யும் செல்....
*ஆக்ஸன்டிக்.*
Jansikannan60@gmail.com
Fri. 06, Jan. 2023 at 11 29 am.
ReplyDeleteநாடிப் பயிற்சி − 77
நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். (தி.கு. 948)
இதுவரை நாம் பார்த்து வந்த நாடிப் பயிற்சியின் வாயிலாக ஒரு பொதுவான கருத்து இங்கு கூற விரும்புகிறேன்.
நாம் பிறந்தது முதல் இன்றுவரை எந்த வகையான உணவு உட்கொண்டோமோ அந்த உணவின் இரசாயனத் தன்மைக்கும், ஆற்றலுக்கும் தக்கவாறே நம்முடைய உடல் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
உணவு தான் உடலாக மாறியிருக்
கிறது என்று அறிந்து கொண்டோம்.
இந்த உணவில் இருவகை உண்டு என்றும் அறிந்தோம். அதாவது... உணவில் பொருந்தும் உணவு, பொருந்தா உணவு என்ற இருவகை உண்டு என்பதாக அறிந்தோம். இவையே, சாத்வீகம், ரஜோ, தாமச உணவு என ஆரம்ப பாடத்தில் அறிந்தோம்.
எந்தவொரு உணவும் அளவோடு உண்ண வேண்டும். *உணவை அளவாக உண்டு வந்தால், உடல் உணவை செரிமானிக்கும். அளவுக்கு அதிகமானால், உணவு உடலை செரிமானிக்கும்.* என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக... புலால் போன்ற உணவு கள், செயல்களைத் தூண்டக் கூடியவை. நோயை உண்டு பண்ணும். ஒரு முரட்டுத் தனமான, மூர்க்கத் தனமான எண்ணத்தை உருவாக்கும். இவ்வாறு, ஒவ்வொருவரும் உண்ணும் உணவுக்குத் தக்கவாறு குணங்களும், நோய்களும் வேறுபடும்.
நாம் உண்ணும் உணவு.. (Balanced diet) கொழுப்பு சத்து, மாவுச் சத்து, நார்ச் சத்து, புரதம் , வைட்டமின், தாது இவை அனைத்தும் கலந்த சரிவிகித உணவாக இருத்தல் வேண்டும்.
அசைவ உணவிற்கு நிகரான சத்துகள், சைவ உணவிலும் உண்டு என்பதை முதலில் உணருங்கள். நல்ல சத்துள்ள உணவை இருவேளை உண்டாலே ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும்.
ஒருவன் எவ்வளவு ஏழ்மையான நிலையில் இருப்பினும்... மலிவு விலையில் கிடைக்கும் காய்கள், பழங்கள் மூலம் சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள முடியும்.
உணவைப் பாதி மெல்லாமலும், அவசர அவசரமாய் உள்ளே விழுங்கி உண்பதால், நூறு வயது வரை உழைக்க வேண்டிய நம் *சீரணப் பை* முப்பது, முப்பந்தைந்து வருடங்
களிலேயே... ஒன்றுக்கும் உதவாமல் போய்விடுகிறது. இதனால் மலச்சிக்கல் , செரியாமை உண்டாகி, வேறு நோய்களை உருவாக்க வித்திட்டாகிறது... என்பதை மலச்சிக்கலினால் வரும் நோய்களில் படித்து அறிந்து கொண்டீர்கள்.
சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் அவசரம் காட்டாது.... ஒவ்வொரு கவளமாக எடுத்து, மெதுவாக வாயில் அறைத்து, உமிழ் நிருடன் கரைத்து, உள்ளே தள்ளுங்கள். உங்கள் சீரணப்பை செய்யும் வேலையில் பாதியை உங்கள் பற்கள் செய்யட்டுமே. இப்படி உண்பவனுக்கு, செரியாமை ஏற்படாது. அதனால் ஏற்படும் மலச்சிக்
கலினால் வாத, பித்த, கபத்தினால் வரும் நோய் நம்மை நெருங்காது.
கடைசியாக...ஒரு விஷயத்தை பொதுவாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்... *பசியால் இறந்தவர்கள் சில பேர் தான். நிறைய உண்பதால் இறந்தவர்கள் அதிகம் பேர் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
*எவனொருவன் பசித்து உண்கிறானோ அவனுக்கு மருந்தே தேவைப்படாது அவசியமற்று போகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.*
அறு சுவையைப் பற்றி அறிந்தோம்... இதன் மூலம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது...
*உப்பு, புளி, காரம் இவை மூன்றும் சுவை அளிப்பது உண்மையானாலும், அது உங்கள் உடல் நலனைக் கெடுத்து விடுமாகையால், உங்கள் உணவில் கணிசமாக குறைத்து, அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். நமக்கு வரும் பல வியாதிகளுக்கு மூல காரணமே... இவை மூன்றும் தான்.
அடுத்து... வாரத்தில் ஒரு நாள் மட்டும் இருவேளை வயிற்றைக் காய போடுங்கள். நமக்காக உழைத்து, உழைத்து ஓய்ந்து போன அந்த சீரண உறுப்புகள் சற்றே ஓய்வெடுக்கட்டுமே..! என்னால் முடியவே முடியாது என்பவர்கள் . ஒரு பழத்தை மட்டும் சாப்பிட்டுப் படுங்கள்...மறுநாள் ஆரோக்கியமாகவும், மிகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதை உணர் வீர்கள்.
இன்னும் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி அநேக கருத்துக்கள் எழுதலாம்... இப்பதிவை முடிக்க இயலாது..அத்தனை நலன்கள் அடங்கியுள்ளது..இதுவரை அனுப்பிய பதிவில் என்பதை உணர்ந்திருப்பீர்கள். இல்லையேல் மீண்டும் ஒரு முறை பார்த்து... தெளிவு செய்து கொள்ளுங்கள்.
மீண்டும் சந்திக்கலாம்...!
வாழ்க வளமுடன்...!
Jansikannan60@gmail.com
Mon. 23, Jan. 2023 at 9.07 pm.
ReplyDeleteஉயிரியல் துளிகள் − 24
* மீன்கள் சுவாசிப்பது....
*செவுள்கள் மூலம்.*
* சூரிய ஒளியின் உதவீயால் வைட்டமின் டி−யைத் தயாரிப்பது....
*அகத்தோல்.*
* மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை....
*700 முதல் 800 தசைகள்.*
* மூச்சு விடுதலுக்கு உதவுவது....
*உதரவிதானம்.*
* மார்பறையையும், வயிற்றறையையும் பிரிப்பது....
*உதரவிதானம்.*
* மனித மண்டையோட்டில் உள்ள எலும்புகள்.....
*22.*
* மார்புக் கூட்டில்...
*3 − வகையான எலும்புகள் உள்ளன.*
* உடலுக்கு அழகைக் கொடுப்பது....
*தசைகள்.*
* உடல் இயக்கத்திற்கு உதவுபவை....
*தசைகள்.*
* மனித உடலிலுள்ள எலும்புகள்....
*206.*
* தசைகள் இணைவதற்கு இடமளிப்பவை...
*எலும்புகள்.*
* மனித உடலில் மிகக் கடினமான பகுதி..*எனாமல்.*
* மனிதனின் ஒவ்வொரு தாடையிலும் உள்ள பற்கள்....
*16.*
* பெரிய சுரப்பிகள் என்பது... *மேலண்ணச் சுரப்பிகள்.*
* மேலண்ணச் சுரப்பிகள் அமைந்திருக்கும் இடம்...
*காதுக்கு அருகில்.*
* இரைப்பை நீரைச் சுரப்பது...
*இரப்பைச் சுவர்.*
* சிறுகுடலின் மூன்று பகுதிகள்...
*டியோடினம், ஜீஜினம், இலியம்.*
மீண்டும் அடுத்த பதிவில்...
Jansikannan60@gmail.com.