jaga flash news

Saturday 15 March 2014

தம்பதியர் ஒற்றுமைக்கு திருதியை விரதம்

சித்திரை திருதியை அன்று கவுரி சிவனை மணந்த நாள். அன்று மங்கல ஸ்நானம் செய்து கவுரி, சிவன் இருவரையும் வழிபட வேண்டும். இருவரையும் அர்ச்சித்தல், தானங்கள் செய்தல் வேண்டும். 

வைகாசி, புரட்டாசி, மார்கழியின் வளர்பிறை துவிதியையில் தொடங்கி தேவியை வழிபட்டு அந்தணத் தம்பதிகளுக்கு உணவளித்து, தானங்கள் அளித்தல்; மற்றும் இருபத்து நான்கு அந்தணர்களுக்கு உணவளித்தல் உகந்தது. இதனைச் சவுபாக்கிய சயன விரதம் என்பர்.

பங்குனி வளர்பிறை திருதியையில் தொடங்கிச் செய்தல். உப்பில்லா உணவு உட்கொள்ளுதல், அந்தணத் தம்பதியருக்கு உணவு அளித்துத் தர்மங்கள் செய்தல் வேண்டும். வைகாசி, புரட்டாசி, மாசியிலும் செய்யலாம்

No comments:

Post a Comment