jaga flash news

Monday 26 June 2017

வலம்புரிசங்கு வழிபடும் முறை:

வலம்புரிசங்கு வழிபடும் முறை:
--------------------------------------
ஆண், பெண் இருபாலாரும் வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு 27 செவ்வாய்க்கிழமை அம்மனை பூஜித்து வந்தால் அவர்களுக்கு
இருந்துவரும் திருமணதோஷம், செவ்வாய்தோஷம் உட்பட சிலதோஷங்கள் நீங்கி எந்த தடையும் இன்றி திருமணம் இனிதே நடைபெற்று பிள்ளைப்பேரும் பெறுவார்கள்.
இந்த வலம்புரி சங்கினை தரையில் வைக்கக்கூடாது.
சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்ல து வெள்ளித்தாம்பாளத்தில் வைக்க வேண்டும்.
அத்துடன், செல்வத்திற்கு அதிதெய்வமான மகாலட்சுமி பிறந்த ஆடி பூரம், இந்திரன் லட்சுமியை வணங்குகிற புரட்டாசி பௌர்ணமியிலும், ஆனி மாதம் சுக்லபட்சம் கூடிய அஷ்டமியிலும், சித்ரா பௌர்ணமியிலும் வலம்புரிச்சங்கில் பசும்பால் வைத்து மலர்களால் சங்கினையும், லட்சுமி யையும் அலங்கரித்து, சந்தனம் குங்குமம் இட்டு அதிரசம், லட்டு ஆகிய வைகளை பசு நெய்யில் செய்து பால் பாயாசம் செய்து பசுநெய் ஊற்றி விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்.
இப்படிச்செய்தால் எல்லா வித செல்வங்களும் வந்து சேரும். இது தவிர செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் சங்கிற்கு பூஜை செய்யலாம்.
ஒவ் வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டுஅதில் துளசி,வில்வக்கட்டை, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது தண்ணீரைக்குடித்துவிட்டு, சிறிது தண் ணீரை வாசற் படியில் தெளிக்கவும்.
இப்படி 90நாள் செய்தால் திருஷ்டி, போட்டி பொறாமை நீங்கும்.
வலம்புரி சங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது.
இச்சங்கில் தண்ணீர் விட்டு பூஜை செய்து அதை அருந்தினால் வியாதிகளும் குணமடையும்.
மாமிச உணவருந்திய தினங்களிலும், பெண்கள் மாத விலக்கான நாட்களிலும் வலம்புரிச் சங்கைத் தொடக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment: