jaga flash news

Monday 12 June 2017

செவ்வாய், வெள்ளி கிழமைகளில் மறந்தும் செய்யக்கூடாத காரியங்கள்…

சிலர் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கடன் கொடுக்கக் கூடாது என்று கூறுவார்கள். அது ஏன்? அந்த நாளில் என்ன செய்தால் வீட்டில் செல்வத்தை அதிகரிக்கலாம் என்று பார்ப்போம்.
செவ்வாய், வெள்ளியில் பணம் கொடுக்க கூடாது ஏன்?
செவ்வாய்கிழமை முருகனுக்கும், வெள்ளிக்கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.
நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள் புரிகிறார்கள்.
இந்த காரணத்தினால் தான் அன்றைய தினம் பணப் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதையும், மற்றவர்களுக்கு கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
இல்லையெனில், நம்மிடம் இருக்கு அனைத்து செல்வ வளங்களும் நம்மை விட்டு சென்று விடும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது.
செவ்வாய் வெள்ளி கிழமையில் செய்ய வேண்டியவை என்ன?
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4- 5 மணி நேரத்தில் படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.
நமது வீட்டில் செல்வம் எப்போதும் நிலைத்து இருக்க, வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
வீட்டில் செல்வத்தை அதிகரிக்க சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம் மற்றும் ஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் ஆகியவற்றை வீட்டில் வைத்திருக்க வேண்டும்.
செய்யக் கூடாதவை என்ன?
ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்காமல், இருவரும் வாசல் படிக்கு உள்ளே அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.
குத்து விளக்கை தானாக அணைய விடக் கூடாது, ஊதியும் அணைக்கக் கூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.
நம் வீட்டில் உள்ள வாசற்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் ஆகியவைகளில் உட்காரக் கூடாது.
வீட்டை இரவில் பெருகும் போது, அந்த குப்பைகளை வெளியே கொட்டக் கூடாது.
வீட்டில் விளக்கு ஏற்றிய பின் பால், தயிர், உப்பு, ஊசி ஆகிய பொருட்களை மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது.
வீட்டில் சாமிக்கு பூஜை செய்யும் போது, ஈரத் துணியை உடுத்திக் கொண்டு பூஜை செய்யக் கூடாது.

1 comment: