jaga flash news

Monday 12 June 2017

ஏன்முதன்முதலில் அரிசியில் அல்லது நெல்லில் எழுத வேண்டும் பிள்ளைகள் !! தெரிந்து கொள்ளுங்கள்!

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமான படிப்பை குழந்தைகள் கற்கும்போது நமது இந்து சமயத்தில் இதனை சடங்காக பின்பற்றுவது வழக்கம். அதன் முக்கியத்துவத்தை பார்க்கலாம்.
ஞானத்தின் தேடல் என்பது பழைய காலத்திலிருந்தே குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கப்படுகிறது. இதை சடங்காகவே நமது இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. பள்ளியில் சேரும் முதல் நாள் நெல் அல்லது அரிசியில் குழந்தையை எழுத்துக்களை எழுதச் சொல்லி பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்து வைப்பார்கள்.
இந்த சடங்கு பல மாநிலங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது. வங்கத்தில், இந்த சடங்கு கூட ஹாடே கோரி என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல குடும்பங்களில், இந்த சடங்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. இந்த எழுத்தறிவித்தல் சடங்கு எதற்காக முறைப்படி பின்பற்றப்படுகிறது என்பதன் முக்கியத்துவதை அறிந்துகொள்ளுங்கள்.
1. கல்வி தீட்சை:
கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம். கல்வி கற்பதன் மூலம் ஒருவர் இந்த பரந்த உலகில் அறிவு மற்றும் ஞானத்தை தேடத்தொடங்குகின்றார். எனவே, நாம் நம்முடைய ஞானத்தேடலுக்கான முதல் அடியை அன்னை சரஸ்வதியை பூஜை செய்து கொண்டாடி தொடங்குகின்றோம்.
2. வெற்றியின் அடையாளம்:
பல மாநிலங்களில் இந்த அக்ஷரப்யாஷம் வெற்றியின் அடையாளமான விஜய தசமி அன்று நிகழ்த்தப்படுகிறது. அது கல்வியறிவின்மை மற்றும் அறிவின்மை என்னும் இருளை நாம் வெற்றி கொள்ளப்போவதை மறைமுகமாக உணர்த்துகின்றது. இந்த நாளில் மூன்று விதமான சக்திகளான இச்சா, கிரியா மற்றும் ஞான சக்திகள் ஒன்றிணைகின்றன. இந்த மூன்று விதமான சக்திகள் இருளை எதிர்த்துப் போராட நாம் அனைவருக்கும் உதவுகின்றன.
3. எழுதக் கற்றுக் கொள்வது:
குழந்தைகள் இந்த நாளில் தான் முதன் முதலில் எழுதத் தொடங்குகின்றனர். அவர்கள் தங்களுடைய பெயர் மற்றும் எழுத்துக்களை எவ்வாறு எழுதுவது என்பதை கற்றுக்கொள்கின்றனர். அவர்கள் மெதுவாக ஒரு வாக்கியத்தை எவ்வாறு உருவாக்குவது எனக் கற்று இறுதியாக தங்களுடைய எண்ணங்களை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதையும் கண்டுபிடிக்கின்றனர். எனவே இந்த நாள் உங்கள் குழந்தைகளின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
4. ஓங்காரத்தின் முக்கியத்துவம்:
ஓங்காரம் ஒரு செயல் மற்றும் எண்ணத்தின் தொடக்கம் மற்றும் இறுதியாக விளங்குகின்றது. மேழும் இது நித்தியத்தை குறிக்கின்றது. எனவே, ஒரு குழந்தை ஓம் என்கிற வார்த்தையை எழுதி தன்னுடைய ஞான வேட்கையை தொடங்குகின்றது. இது சம்ஸ்கிருதத்தில் பீசாட்ஞ்சரமாக கருதப்படுகின்றது. இதுவே அனைத்தினுடைய தொடக்கம். இதை முதன் முதலில் எழுதுவது ஒரு சிறந்த தொடக்கமாக கருதப்படுகின்றது.
5. குழந்தைகள் மணல் / அரிசி எழுதுகிறார்கள்:
ஆரம்பத்தில், குழந்தைகள் தங்களுடைய குருக்குலத்தில் ஓம் என்கிற சொல்லை மணலில் எழுதி தங்களுடைய எழுத்தறிவித்தலை தொடங்கினார்கள். இப்போதெல்லாம், குழந்தைகள் அரிசியை ஒரு தட்டில் பரப்பி ஓம் என்கிற சொல்லை எழுதுகின்றார்கள். வங்கத்தில், குழந்தைகள் ஒரு சுண்ணாம்பு கட்டி கொண்டு ஒரு ஸ்லேட்டில் எழுத ஆரம்பிக்கின்றார்கள்.
வயது :
வேதகாலத்தில் உபநயனத்தின் போதே அரிசியில் எழுத்தை ஆரம்பித்து விடுவார்கள். அப்பொழுது குழந்தைகளின் வயது சுமார் ஐந்தாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நவீன காலத்தில் சுமார் மூன்று வயதிலேயே குழந்தைக்கு ஆரம்பித்து விடுகின்றார்கள்.

No comments:

Post a Comment