jaga flash news

Wednesday 29 July 2020

துரியோதனாதிகள் யார்?

துரியோதனாதிகள் யார்?


கெளரவர்கள்- துரியோதனின் உடன் பிறந்தவர்கள் பெயர்கள்!!!

ஜனமேஜயன், "திருதராஷ்டிரரின் மகன்கள் பெயர்களை அவர்களின் பிறப்பு வரிசையில் சொல்லுங்கள்." என்றான்.


வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ மன்னா, பிறப்பின் வரிசையில் அவர்களது பெயர்கள்,

{1} துரியோதனன், {2} யுயுத்சு, {3} துட்சாசனன், {4}துட்சகன், {5} துட்சலன், {6} ஜலசந்தன், {7} சமன், {8} சகன், {9} விந்தன், {10} அனுவிந்தன், {11} துர்த்தர்ஷன், {12} சுபாகு, {13} துஷ்பிரதர்ஷனன், {14} துர்மர்ஷனன், {15} துர்முகன், {16} துஷ்கர்ணன், {17} கர்ணன் {குந்தியின் மகனல்ல}, {18} விவின்சதி, {19} விகர்ணன், {20} சலன், {21} சத்வன், {22} சுலோச்சனன், {23} சித்ரன், {24} உபசித்ரன், {25} சித்ராக்ஷன், {26} சாருசித்திரன், {27} சரசனன், {28} துர்மதன், {29} துர்விகஹன், {30} விவித்சு, {31} விகாடனானன், {32} ஊர்ணனாபன், {33} சுநாபன், {34} நந்தகன், {35} உபநந்தகன், {36} சித்ரபாணன், {37} சித்திரவர்மன், {38} சுவர்மன், {39} துர்விமோசனன், {40} அயோவாகு, {41} மஹாபாகு, {42} சித்திராங்கன், {43} சித்திரகுண்டாலன், {44} பீமவேகன், {45} பீமவளன், {46} பாலகி, {47} பாலவர்தனன், {48} உக்கிராயுதன், {49} பீமன் {குந்தியின் பீமன் அல்ல}, {50} கர்ணன் (2), {51} கனகயன், {52} திரிதாயுதன், {53} திரிதவர்மன், {54} திரிதாக்ஷத்ரன், {55} சோமகீத்ரி, {56} அனுதரன், {57} திரிதசந்தன், {58} ஜராசந்தன், {59} சத்யசந்தன், {60} சதன், {61} சுவகன், {62} உக்ரசிரவஸ், {63} உக்ரசேனன், {64} சேனானி, {65} துஷ்பாராஜெயா, {66} அபராஜிதன், {67} குண்டசாயின், {68} விசாலாக்ஷன், {69} துரதரன், {70} திரிதஹஸ்தன், {71} சுஹஸ்தன், {72} வாதவேகன், {73} சுவரசன், {74} அதியகேது, {75} வாவஷின், {76} நாகதத்தன், {77} அக்ரயாயின், {78} கவாசின், {79} கிராதனன், {80} குந்தன், {81} குந்தாதரன், {82} தனுர்தரன், வீரர்களான {83} உக்கிரன், {84} பீமரதன், {85} வீரபாகு, {86} அலோலூபன், {87} அபயன், {88} ரௌத்திரகர்மன், {89} திரிதரதன், {90} அனதிரிஷ்யா, {91} குந்தபேதின், {92} விரவி, {93} திரிகலோசன பிரமாதா, {94} பிரமாதி, {95} பலம் வாய்ந்த தீர்க்கரோமன், {96} தீர்க்கவாகு, {97} மஹாவாகு, {98} வியுதோரு, {99} கனகத்வஜன், {100} குந்தாசி, {101} விரஜசன் ஆவர்.


கவனிக்கவும், இவை பிறப்பின் வரிசையின் அடிப்படையில் உள்ள பெயர்களாகும் என வைசம்பாயனர் சொல்கிறார். வைசியப் பெண்மணிக்குப் பிறந்த யுயுத்சு இரண்டாவது பிள்ளையாக சேர்க்கப்பட்டிருப்பதால் கௌரவர்கள் 101 எண்ணிக்கை வருகிறது என நினைக்கிறேன்.


இந்த நூறு மகன்கள் போக, துச்சலை என்ற பெயரில் ஒரு மகளும் இருந்தாள். அனைவரும் வீரர்களும் அதிரதர்களாகவும், போர்க்கலை நிபுணர்களாகவும் இருந்தார்கள். அனைவரும் வேத கல்வியும், அனைத்து ஆயுதங்களில் பயிற்சியும் பெற்றனர். ஓ ஏகாதிபதியே, மன்னன் திருதராஷ்டிரன், சரியான நேரத்தில், சரியான சடங்குகளுடன் துச்சலையை ஜெயத்ரதனுக்கு (சிந்து மன்னனுக்கு) அளித்தான்.

No comments:

Post a Comment