jaga flash news

Wednesday 21 October 2020

கிட்னியில் கல்

 

கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று வீட்டின் பின்புறம் உட்கார்ந்திருந்தேன். 

பக்கத்து வீட்டுப்பாட்டி தூக்கம் வரவில்லை 
என்று வெளியே உலாவிக்கொண்டிருந்தார்... 

அருகில் வந்து ஏன் இங்க 
உட்கார்ந்திருக்க என்று விவரம் கேட்டார். 

என் வேதனையைக் குறிப்பிட்டேன். 

உடனே பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில் பூளைப்பூவை மட்டும் உருகி சுடுநீரில் காய்ச்சி வடித்துக் கொடுத்தார்.

"இந்தா இதக்குடி . அரை மணி நேரத்துல சரியாகிடும்" என்று கொடுத்தார். 

கால் மணி நேரத்திலேயே வலி குறைந்தது. காலையில் ஸ்கேன் செய்து பார்த்தேன்; 
8mm கல் இருந்தது. 

மருத்துவர் ஆபரேசன் பன்ன வேண்டுமென்று தற்போதைக்கு மாத்திரை சாப்பிடுமாறு கூறினார். நான் மாத்திரை வாங்கவே இல்லை. 

பூளைப்பூ வைத்தியத்தைத் தொடர்ந்தால் 
என்ன என்று மனதிற்குத் தோன்றியது. 

தினமும் குடிக்குமளவு தண்ணீரை எடுத்து 
அதில் கைப்பிடிப் பூளைப்பூவைப் போட்டு காய்ச்சிப் 6 அல்லது 7 நாள் குடித்திருப்பேன். 

வலி சுத்தமாகக் காணாமல் போயிருந்தது. மறுபடியும் ஸ்கேன் செய்து பார்த்தேன்;
3mm மட்டும் இருந்தது. 

மறுபடியும் 5 நாட்கள் தொடர்ந்தேன். 

சிறுநீரகக் கல் இல்லாமல் போனது. 

பாட்டியின் வழி காட்டுதலால் 
ஆபரேசனில் இருந்து தப்பித்தேன். 

அதிலிருந்து வாரம் ஒருமுறை பூளைப்பூவில் கருப்பட்டி போட்டு டீ போல வைத்துக் குடித்துக் கொள்வேன்.

பிறகு தான் தோன்றியது. 

காப்புக் கட்டுவதென்பது தற்காப்பிற்காகத்தானென்றும், பாட்டி வைத்தியத்திலும் பலன்களிருக்கு என்றும்.!!

No comments:

Post a Comment