jaga flash news

Friday 2 August 2013

சங்க இலக்கியங்களில் ஜோதிடம்;

சங்க இலக்கியங்களில் ஜோதிடம்;

திங்கள் சகடம் மண்டிய என்ற அகநானூற்றின் பாடல் வரிகள் கூறும் கருத்து என்னவெனில், ரோகிணி நட்சத்திரம் நின்ற நாட்களில் திருமணம் செய்துள்ளனர்.

இருபெருங் குரவரும்
ஒரு பெரு நாளான்
மணவணி காண மகிழ்ந்தனர் - சிலப்பதிகாரம்

பொருள்: திருமணம் ஒரு நல்ல நாளில் நடந்ததால் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.

பிணி கிடந்தார்க்குப்

பிறந்தநாள் போல

அணியிழை அஞ்சவருமால் - முத்தொள்ளாயிரம்

பொருள்: ஒருவன் நோய்வாய்ப்படும்போது,அவன் பிறந்த நட்சத்திரம் வந்தால்,அந்த நாளன்று அவனது நோய்த்துன்பம் மிகும்.

ஆக,எழுதப்படாத வரலாற்றிற்கு முன்பிருந்தே நமது இந்துதர்மம்,நமது ஜோதிடக்கலை,நமது சாஸ்திரங்கள் மிகவும் வளமடைந்துவிட்டன.
அதே காலகட்டத்தில்,ஐரோப்பிய அமெரிக்க மக்கள் நாகரீகமடையாத காட்டுவாசிகளாக இருந்தார்கள் இன்று அவர்கள் ஆய்வு செய்து சொல்வதுதான் விஞ்ஞானம்...அதை ஏற்றுக்கொண்டு நடப்பதுதான் அறிவாளிக்கு அழகு என தமிழனே சொல்வது கேவலமாக இருக்கிறது..நம் முன்னோர்கள் சொன்ன பல விசயங்களை இன்றைய அறிவியல் கண்டுபிடித்து ஒப்புக்கொள்ள இன்னும் பல வருடங்கள் ஆகலாம்..அதுவரை இதை அறிவியல் ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லிக்கொண்டிருக்க போகிறோமா..?

No comments:

Post a Comment