jaga flash news

Saturday 3 August 2013

ராகுகேது தோஷம் பற்றி ஒரு விளக்கம்

ராகுகேது தோஷம் பற்றி ஒரு விளக்கம்



 ராகுகேது தோஷம் பற்றி ஒரு விளக்கம்

ஜாதகத்தில் நல்ல பலன் நடப்பதிற்கு, மிக முக்கிய பங்கு வகிப்பவர்கள் ராகு கேது ஆவார்கள். இவர்கள் அமரும் இடத்திற்கு ஏற்ப 100 சதவித நன்மையோ தீமையோ பாகுபாடு இல்லாமல் வாரி வழங்கிவிடுகின்றனர்,
இதில் சோதிடர்களிடையே பல்வேறு கருத்துகள் உலா வருகின்றது , ஜாதகத்தில் ராகு கேது 1 , 2 , 5 ,7 ,8 ,12 , ஆகிய வீடுகளில் இருந்தால் சர்பதோஷம், எனவே மணமக்களுக்கு  இதேபோல் உள்ள சர்பதோஷ ஜாதகத்துடன் தான் திருமணம் அமைக்க வேண்டும் இல்லை என்றால், திருமண வாழ்க்கை நிலைக்காது ,என்ற கருத்து நிலவுகிறது, இது முற்றிலும் முட்டாள் தனமான கருத்தாகும், 

இதனால் வது வரன் பார்ப்போர் அனைவரும் ஜாதகத்தை துக்கி கொண்டடு தலையை பிய்த்துக்கொண்டு அலைகின்றனர், இதில் உண்மை என்னவென்றால் சில  ஜோதிடர்கள் சொல்லுவது போல்  ராகு கேது இருவரும் மேற்காணும் வீடுகளில் இருந்தாலும், திருமணவாழ்வில் எவ்வித பாதிப்பையும் தருவதில்லை சுய ஜாதகத்தில் குடும்பம்,களத்திர ஸ்தானம் எனும் இரு வீடுகளும் பாதிப்படைந்திருந்தால் மட்டுமே திருமண வாழ்க்கை நிலைக்காது , என்பதை தெளிவாக மக்கள் தெரிந்து கொண்டு தமது மகன் மகள் வாழ்கையில் திருமணம் எனும் அகல் விளக்கினை ஏற்றிவைக்க பணிவுடன் வேண்டுகிறேன், 
இதில் ராகு கேது தோஷம் என்பதெல்லாம் சுத்தமான மூடநம்பிக்கை ஆகும் இதை பற்றி தெளிவு பெற எம்மை அணுகவும்.
மனித அறிவு மிகவும் சிறப்பாக செயல் பட வைப்பதில் ராகு கேதுவுக்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பதே உண்மையாகும் .

No comments:

Post a Comment