jaga flash news

Saturday 27 September 2014

பெண்களின் பருவம்

பெண்களின் பருவம்

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்.

(i) பேதை (Pethai):
Girl between the ages of 5 to 8;
மகளிர்பருவம் ஏழனுள் 5 முதல் 8 வயதுவரையுள்ள பெண்.

(ii) பெதும்பை (Pethumpai):
Girl between the ages of 9 and 10;
9 முதல் 10 வயதுவரையுள்ள பெண்.

(iii) மங்கை (Mangai):
A girl between 11 and 14 years;
11 முதல் 14 வயது வரை உள்ள பெண்.

(iv) மடந்தை (Madanthai):
Woman between the ages of 15 and 18;
மகளிர்பருவம் ஏழனுள் 15 முதல் 18 வயதுவரை யுள்ள பருவத்துப் பெண்.

(v) அரிவை (Arivai):
Woman between the age of 19 and 24;
19 வயதுமுதல் 24 வயதிற்குட்பட்ட பெண்.

(vi) தெரிவை (Therivai):
Woman between 25 and 29 years of age;
25 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்.

(vii) பேரிளம்பெண் (Perilampenn):
Woman between the ages of 30 and 36;
எழுவகைப் பருவமகளிருள் 30 வயதுக்கு மேல் 36 வயதுவரையுள்ள பெண்.
> Tamil Literature Reference:
'அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காதல்
நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’
- பன். பாட். 220

‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’
’’ 221

‘பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும்.’
’’ 222

‘மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத்
திரண்ட பதினா லளவும் சாற்றும்.’
’’ 223

‘மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத்
திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்.’
’’ 224

‘அரிவைக்கு யாண்டே அறுநான்கு என்ப.’
’’ 225

‘தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது.’
’’ 226

‘ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது (36)
பேரிளம் பெண்டுக்கு இயல்புஎன மொழிப.’
’’ 227
 

No comments:

Post a Comment