jaga flash news

Sunday 27 January 2013

படிகட்டுகள்


படிகட்டுகள்


     சிறிய இடமாக இருந்தாலும் அதில் தனக்கென ஒரு சொந்த வீட்டை கட்டி வாழ்வதில் தான் மனிதனுக்கு தனி பெருமைதான். வீடு கட்டினால் மட்டும் போதாது அது தளம் போட்ட வீடாக இருந்தால் அதில் ஒரு மகிழ்ச்சிதான். தளம் போட்ட வீட்டிற்கு அதனுடையே படிகட்டுகளையும் கட்டி விட்டால் அது மாடி வீடாகி விடும். படிகட்டுகளுடன் மாடி வீட்டை கட்டி கொண்டால் காற்றுக்காக மாடியில் போய் அமர்ந்து கொள்ளலாம், படுத்துக் கொள்ளலாம். வானில் உள்ள நட்சத்திரங்களின் அழகையும் பௌர்ணமி நிலவையும் ரசிக்கலாம். மாடி வீடு என்பதே நிறைய சௌகர்யங்கள் நிறைந்தாக தான் இருக்கும். மன்னர்கள் காலத்திலேயே மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் அமைந்திருக்கிறார்கள். இவற்றில் ஏறி செல்ல படிக்கட்டுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த படிக்கட்டுகளுக்கென்று ஒரு புராண கதையும் உண்டு. அக்காலங்களில் கருங்கல்லில் தான் படிக்கட்டை அமைப்பார்கள். நாம் வழிபடும் இறைவனையும் கருங்கல்லில் தான் வடிப்பார்கள். தினமும் படிக்கட்டுகளில் பல்லாயிரம் பேர் ஏறி ஏறி இறைவனை வழிபட்டு அருள் பெற்று சென்றார்களாம். பலர் ஏறி சென்றதால் வலி தாங்க முடியாத படிகட்டுகள் ஒர் இரவில் இறைவனிடத்தில் புலம்பியதால், நீயும் கல் தான் நானும் கல் தான். என்னை மிதிக்கிறார்கள். உன்னை வணங்குகிறார்கள். இது என்ன வேற்றுமை என்று--?  அதற்கு கடவுள் நீ அவர்களின் பாவங்களை தாங்கி மன்னித்து மேலே ஏற உதவி செய்தால் மட்டுமே அவர்களுக்கு என் ஆசி கிடைக்கும். அதனால் நீதான் என்னை விட பெரியவன். பாவங்களை மன்னிப்பவன். நான் வெறும் ஆசி கூறுபவன் மட்டும் தான் என்றாராம்.
    
இப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த படி கட்டுகளை வீடுகளில் அமைக்கும் போது வாஸ்து படி எந்தந்த தசைகளில் அ¬ப்பது நல்லது என்று ஆராய்ந்தே கட்ட வேண்டும். பொதுவாக ஒரு கட்டிடத்தில் அதிக எடை வைக்க கூடாத திசையான வடகிழக்கு மூலையைத் தவிர மற்ற எந்த திசைகளில் வேண்டுமானாலும் படிகட்டுகளை அமைத்துக் கொள்ளலாம். இதிலும் ஒரு சில விதிகள் உள்ளன. படிக்கட்டுகள் அமைக்கும் போது அதன் எண்ணிக்கையானது ஒற்றை படையில் இருப்பது நல்லது. ஏனென்றால் நம் வீட்டில் பூஜையறையில் வைக்கும் மகாலஷ்மி விளக்கை (காமாட்சி விளக்கு) வாங்கும் போது பெரியவர்கள் அந்த விளக்கின் ஒரத்தில் உள்ள அறம் போன்ற அமைப்பை லாபம், நஷ்டம் லாபம், நஷ்டம் என எண்ணிக் கொண்டே வருவார்கள் அப்படி எண்ணும் போது அதன் முடிவானது லாபத்தில் இருக்க வேண்டும். அதைப் போலத் தான் நாம் ஏறி செல்லும் படிக்கட்டுகளும் லாபம், நஷ்டம் என்ற கணக்கில் வரும் போது லாபத்தில் நிற்க வேண்டும்.
    
படிக்கட்டானது எந்த திசையில் அமைக்க வேண்டும் என பார்க்கின்ற போது வடக்குலிருந்து தெற்கு  நோக்கி ஏறும்படியோ, அல்லது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஏறும்படியோ அமைப்பது சிறப்பு, படிக்கட்டில் ஏறி மாடிக்கு செல்லும் போது மாடியிலுள்ள வீட்டின் தலைவாசலானது எந்த திசையை நோக்கி உள்ளதோ அந்த திசையின் உச்ச ஸ்தானத்தில் அமைவது நல்லது.


ஒரு வீட்டில் ஒரே நேர் குத்தால படிக்கட்டுகள் அமைக்கும்படி நேர்ந்தால் மேலே காட்டப்பட்டுள்ள வரை படத்தை போல அதாவது தெற்கு பார்த்த வாசற்படியுள்ள வீட்டிற்கு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஏறும்படியும், மேற்கு பார்த்த வாசற்படியுள்ள வீட்டிற்கு வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கி ஏறும்படியும் படிக்கட்டுகளை அமைப்பது நல்லது. அதிலும் தெற்கு பார்த்து அமைந்துள்ள வீட்டிற்கு தென்கிழக்கு மூலையில் வாசற்படியும் மேற்கு பார்த்த வீட்டிற்கு மாடியின் வாசற்படியானது வடமேற்கு மூலையிலும் அமைத்தல் நல்லது.

பொதுவாக வடகிழக்கு மூலையில் படிக்கட்டுகளை அமைக்க கூடாது என்ற காரணத்தால் வடக்கு பார்த்து அமைந்த வீட்டிற்கு நேர்குத்தாக படிக்கட்டுகளை அமைக்கும் பொழுது வடக்கு மத்தியில் படிகட்டு தொடங்கி வடமேற்கு திசையை நோக்கி ஏறுவது போல அமைத்து விட்டு மாடியில் ஒரு (வராண்டா) நடைபாதை போல அமைத்து விட்டு வடகிழக்கு உச்ச ஸ்தானத்தில் வீட்டின் வாசற்படியை வைப்பது நல்லது.
    
கிழக்கு பார்த்த வீட்டிற்கு நேர் குத்தாக படிகட்டுகளை அமைக்கும் போது கிழக்கின் மத்திய பகுதியில் படிகட்டை தொடங்கி தெற்கு திசையை நோக்கி ஏறுவது போல அமைத்து விட்டு மாடியில் ஒரு நடைபாதை போல (வராண்டா) அமைத்து விட்டு வடகிழக்கு உச்ச ஸ்தானத்தில் வீட்டின் வாசற்படியை அமைப்பது நல்லது.

 

     படிகட்டுகளை இரு பாகங்களால் அமைக்கின்ற போது முதலில் ஏறுவது தெற்கு அல்லது மேற்கு நோக்கி ஏறுவதும் படிக்கட்டை ஒற்றை படையில் அமைத்து கொள்வதும் நல்லது. நான்கு திசைகளுக்கும் எப்படி அமைத்தால் நன்றாக இருக்கும் என்பதனை மேலே உள்ள வரைபடத்தில் காணலாம். முதல் மாடிக்கு சென்று வீட்டின் உள்ளே செல்லும் போது கதவானது உச்ச ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. வடக்கு மற்றும் கிழக்கு  மதில் சுவரை தொடாமல் படிகட்டுகளை அமைப்பு சிறப்பு.

1 comment: