jaga flash news

Saturday 26 January 2013

அனபா யோகம்

அனபா யோகம்
அனபா யோகம் சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து அதற்குப் 12ஆம் வீட்டில் (அதாவது சந்திரனுக்குப் பின்புறம் உள்ள ராசியில்) செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ஆகிய ஐவரில் ஒருவர் இருந்தால் அது இந்த யோகம் பொதுப்பலன்: ஜாதகன் நல்ல தோற்றத்தை உடையவனாக இருப்பான். பெருந்தன்மை உடையவனாக இருப்பான். மென்மையானவனாக இருப்பான் சுயமரியாதை உடையவனாக இருப்பான். வயதான காலத்தில் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொள்வான் Anapha yoga: If there are planets in the twelfth from the moon, Anapha yoga is caused. A planet other than the Sun occupying the 12th house from the Moon constitutes Anapha yoga. It indicates a person who is of good appearance, generous, polite, self -respecting and moves into spiritual life at a later stage. One born in Anapha Yoga will be eloquent in speech, magnanimous, virtuous, will enjoy food, drink, flowers, robes and females, will be famous, calm in disposition, happy, pleased and will possess a beautiful body. தனிப் பலன்கள் 1.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் வலிமையானவன். அதிகாரமுள்ளவன். சுயகட்டுப்பாடு உள்ளவன். 2.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் புதன் இருந்தால்: சிறந்த பேச்சாளனாக இருப்பான். கலைகளின் நுட்பம் தெரிந்தவனாக இருப்பான். 3.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் குரு இருந்தால்: ஜாதகன் தீவிர சிந்தனை, செயல்களை உடையவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவனாக இருப்பான். தன்னுடைய செல்வத்தை அறவழிகளில் பயன்படுத்துவான். அதாவது பல தர்மங்களைச் செய்வான். 4.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சுக்கிரன் இருந்தால்: ஜாதகன் பெண்பித்தனாக இருப்பான். அதிகாரத்தில் இருப்பவர்களின் தொடர்பு உள்ளவனாக இருப்பான் 5. சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சனி இருந்தால்: ஜாதகன் எதிலும் பிடிப்பு இல்லாதவனாக இருப்பான். பற்று இல்லாதவனாக இருப்பான். (ராகு அல்லது கேது இருந்தால்: ஜாதகன் இயற்கையான விஷயங்களுக்கு எதிராக நடப்பவனாக இருப்பான். அவற்றில் பற்று உள்ளவனாக இருப்பான்) ****************************** அனபா யோகம் என்றால் என்ன? சந்திரன் இருக்கும் இடத்தில் அதற்குப் பன்னிரெண்டாம் வீட்டில், அதாவது உங்கள் சந்திர ராசிக்குப் பன்னிரெண்டில், சூரியனைத் தவிர, மற்ற கிரகங்களில் ஒன்று இருந்தால் அதற்கு அனபா யோகம் என்று பெயர். ராகு & கேதுவிற்கு முழு கிரக அந்தஸ்து இல்லை. இருந்தாலும் இந்த யோகத்திற்கு அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பலன் என்ன? 1 அந்த இடத்தில் செவ்வாய் இருந்தால்: ஆசாமி வலிமையானவன். சுய கட்டுப்பாடு உள்ளவன். விரும்பத்தகாத வேலைகளைச் செய்பவனாகவும், அதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தலைமை ஏற்பவனாகவும் இருப்பான் 2 அந்த இடத்தில் புதன் இருந்தால்: ஆசாமி எல்லா வித்தைகளும் தெரிந்தவனாகவும், மிகச் சிறந்த பேச்சாளனாகவும் இருப்பான். யாரையும் கவரக்கூடிய வகையில் பேசும் திறமையைப் பெற்றிருப்பான் 3. அந்த இடத்தில் குரு இருந்தால்: ஜாதகன் எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்பவன் அல்ல! சீரியசான ஆசாமி. அறவழியில் செல்லக்கூடியவன். தன் செல்வத்தை அல்லது வருமானத்தில் ஒரு பகுதியை தர்ம காரியங்களுக்காகச் செலவிடக்கூடியவன். 4. அந்த இடத்தில் சுக்கிரன் இருந்தால்: ஆசாமி பெண்களிடத்தில் வழியக்கூடியவன். அல்லது பெண்களிடம் கரையக்கூடியவன். அல்லது உருகக்கூடியவன் எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள். மொத்தத்தில் பெண்பித்தன் (womanizer) ஆனால் அதிகாரமுடையவர்களின் நன் மதிப்பைப் பெற்றவன் 5. அந்த இடத்தில் சனி இருந்தால்: ஜாதகன் தவறான நம்பிக்கைகளுக்கு எதிரானவன். மாயை’களில் இருந்து விடுபடக்கூடியவன். மொத்தத்தில் முற்போக்குவாதி! 6 ராகு அல்லது கேது இருந்தால்: ஆசாமி அதிரடியானவன். யாருக்கும் கட்டுப்படாதவன் எந்த விதிகளுக்கும், ஒழுங்கு முறைகளுக்கும் கட்டுப்படமாட்டான். மொத்ததில் அடங்காதவன்! மொத்ததில் இந்த யோகம் ஜாதகனுக்கு நல்ல உடல் அமைப்பையும், நல்ல பண்புகளையும், சுய மரியாதையையும் கொடுக்கும்

No comments:

Post a Comment